செவ்வாய், நவம்பர் 28, 2006

சனி, நவம்பர் 25, 2006

பெரியார் என்ன? சொன்னார்? சாதி ஒழிப்பு பற்றி.

நான் சொல்வதால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதே உனது அறிவை கொண்டு சிந்தி,பகுத்து ஆய்ந்து உன்னை தெளிந்துகொள்-பெரியார்.


சாதி ஒழிப்பு


சாதி, மதம், பழக்கவழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்யச் சம்மதிக்கவில்லையானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்?


(கு.2.6.35;11)


ஒரு பெருங்கூட்ட மக்கள் இன்று சமூக வாழ்வில் தீண்டப்படாதவர்களாகவும் மற்றொரு பெருங்கூட்ட மக்கள் சமூக வாழ்வில் சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள், தாசிமக்கள், இழி மக்கள் என்கின்ற பெயருடனும் இருந்து வருகிறார்கள் என்றால், இது மாறுவதற்கு அருகதை இல்லாத சுயராச்சியம் யாருக்கு வேண்டும்? இது மாறுவதற்கு இல்லாத மதமும், சாத்திரமும், கடவுளும் யாருக்கு வேண்டும்?


(கு.23.6.35;12)


கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் சாதி இனத்தைப்பற்றியவைகளாக இருப்பதால், பொதுமக்கள் நலத்தைவிட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடக்கிறது.


(கு.18.12.43;3)


சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மகன் சூத்திரனாக முடியுமா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டு மக்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுவார்களா? சுதந்திர நாட்டிலே அந்நாட்டவர்களை அடிமைகள் என்றும், நீசர்கள் என்றும் இழிமக்களென்றும் கருதும் மதங்களும் , புராணங்களும் சட்டங்களும் இருக்கமுடியுமா? சிந்தித்துப் பார்த்துச் செயலாற்றுங்கள்.


(வி.22.2.61;1)


எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்லன். அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும் அல்லன். ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் இருக்கவேண்டும் என்பதே அதன் பொருள். இந்த நிலை ஏற்படச் சாதி ஒழிய வேண்டும்.


(வி.13.11.61;1:பெ,செ.)


நோய் வந்தபின் நோய்க்கு மருந்து கொடுத்து வைத்தியர்கள் குணமாக்குகிறார்கள், ஆனால் அந்த நோய் அடுத்தடுத்து வராமலிருக்க அதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து அவற்றை ஒழிக்கவேண்டாமா? நோய் வந்துகொண்டேயிருப்பதும் அவ்வப்போது மருந்து கொடுத்துக் கொண்டேயிருப்பதும் பயனுள்ள செயலாகுமா? அதுபோலத்தான் சமுதாயத்தை நாசப்படுத்திவரும் சாதிநோய்க்கான மூலகாரணங்களைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும்.


(வி.25.7.62;1:பெ.செ.)


பிறவியால் கீழ்-மேல், உயர்வு-தாழ்வு கற்பிக்கும் சாதிமுறை என்பதை அடியோடு போக்கடிக்க வேண்டும்.


(பெ,ஒ,வா.நெ;29)


மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை. சாதியைவிட்டுத் தள்ளுவதில்லை. ஆனால் சாதியைவிட்டுச் சாதி சாப்பிட்டால் கல்யாணம் செய்தால் சாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது பாருங்கள்.


(கு.20.12.36;14:4)


ஓரிடத்தில் உப்பு நீர்க் கிணறும், நல்ல தண்ணீர்க்கிணறும் உள்ளது என்றால் நல்ல தண்ணீரை ஒரு பகுதி அனுபவிக்கவேண்டும். உப்புத் தண்ணீரை மற்ற பகுதி மக்கள் அனுபவிக்க வேண்டும். இவர்கள் நல்ல தண்ணீரை உபயோகிக்க லாயக்கற்றவர்கள் என்றிருக்குமானால் அக்கொடுமை எவ்வளவு வேதனை தரக்கூடியது என்பதைச் சிந்திக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட வேதனைதரும் அளவுக்குச் சாதிமுறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சிலர் மட்டும் சுகம் அனுபவிப்பதற்கென்றும் மற்ற பலர் வேதனைப்டுவதற்கென்றுமே அமைக்கப்பட்ட சாதிமுறைகள் இந்நாட்டை விட்டு அகலும்வரை நமக்குள்ள கொடுமைகள் நீங்காதென்பது திண்ணம்.


(வி.30.3.56;3:6)


நமக்கு ஓர் அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன? மிருகங்களுக்கு ஓர் அறிவு குறைவு என்றாலும் சாதி இல்லையே! மிருகங்களுக்கு அறிவில்லாததின் பயன் சாதி இல்லை. நமக்குள்ள இழிவு, சாதியால் தானே, இதை சிந்திக்க வேண்டாமா?


(வி.8.7.61;3-4:6-5)


சாதி ஒழிப்புக்கு இன்றைய அரசியல் சட்டம் இடம் தரவில்லை. அதை, அடிப்படை உரிமைக்கு விரோதம் என்கிறது. அதேபோல்தான் வகுப்புவாரி விகிதப் பேச்சும் பேசாதே, அது வகுப்புத் துவேஷம் என்கிறது. சாதி இருப்பது தவறல்லவாம். சாதிப்படி உரிமை கேட்டால் மட்டும் தவறு என்றால் இதைவிடப் பித்தலாட்டம் வேறு இருக்க முடியுமா?


(வி.24.5.61;1:பெ.செ.)


சாதி எனும் வார்த்தையே வடமொழி. தமிழில் சாதி என்பதற்கு வார்த்தையே இல்லை. என்ன இனம்? என்ன வகுப்பு? என்று மட்டுமே கேட்பார்கள், பிறக்கும்போது சாதி வித்தியாசத்தை, அடையாளத்தைக் கொண்டு யாரும் பிறப்பதில்லை. மனிதரில் சாதி இல்லை. ஒரு நாட்டிலே பிறந்த நமக்குள் சாதி சொல்லுதல் குறும்புத் தனம்.


(வி.15.9.57;3:1-2)

நன்றி:-யாழ்களம்(நாரதர்)
மேலும் சூடான விவாதத்திர்க்கும், உங்கள்கருத்துக்களை தெரிவிக்கவும்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=15965

பெரியார் என்ன? சொன்னார்? பெண் உரிமை பற்றி.

நான் சொல்வதால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதே உனது அறிவை கொண்டு சிந்தி,பகுத்து ஆய்ந்து உன்னை தெளிந்துகொள்-பெரியார்.

பெண் உரிமை

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.


(கு3.11.79;8)


பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?
அவர்களுக்கு அறிவு இல்லை. ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகத்தான்.


(கு.16.11.30;7)


பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.
அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள், ஆனால் ஆண்களோ, பெண்களைப் பிறவிமுதல் சாவுவரை அடிமையாகவும் கொடுமையாகவுமே நடத்துகிறார்கள்.


(கு.8.2.31;12:2-1)


இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட மிக அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.


(கு.28.4.35;5:1)


பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சிபெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது.


(கு.16.6.35;7:3)


ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.


(வி.24.6.40;3:4)


ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் பிள்ளை விளைவிக்கும் ஒரு பண்ணை - ஓர் ஆணின் கண் அழகிற்கு ஓர் அழகிய - அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள்? பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.


(கு.21.7.46;2:2)


பெண்மக்கள் அடிமையானது ஆண்மக்களால்தான். ஆண்மையும் பெண் அடிமையும்கடவுளாலேயே ஏற்பட்டதாக எல்லா ஆண்களும் கருதுவதும், பெண்கள் அதை உண்மையென்று பரம்பரையாக நினைத்துக் கொண்டிருப்பதும்தான் பெண் அடிமைத்தனம் வளர்வதற்குக் காரணமாகும்.


(வி.14.2.61;1:பெ,செ.)


திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே, அதில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்குமா என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக, நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில், மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையே தான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள்.


(வி.5.4.61;1:பெ.செ.)


தாலி கட்டுவதென்பது அன்று முதல் அப்பெண்ணைத் தனக்கு அடிமைப் பொருளாக ஏற்கிறான் என்பதும், அப்பெண் அன்று முதல் ஆணுக்கு அடிமையாகி விட்டாள் என்பது மான கருத்தைக் குறிப்பதற்குத்தான். இதன் காரணமாக் கணவன் மனைவியை என்ன செய்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை, கணவன் தவறான முறையில் நடந்தால் அவனுக்குத்தண்டனையும் கிடையாது.


(வி.15.4.61;1:பெ.செ)


இன்றையப் பெண் எவ்வளவோ கல்வியும் செல்வமும் நாகரிக அறிவும் கவுரவம் உள்ள சுற்றத்தாருக்குள்ளும் சகவாசத்துக்குள்ளும் இருந்துவந்தும், மிகப் பழங்காலப் பட்டிக்காட்டுக் கிராமவாசிப் பெண்களைவிட இளப்பமாய் நடந்து கொள்வதைப் பார்த்தால், நமக்கு எவ்வளவு சங்கடமாய் இருக்கிறது? இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால், அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும்?


(பெ.சி.மி.187)


நமக்கு பெண்கள் தங்களைப் பிறவி அடிமை என்று நினைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும்.


(வி.22.3.43;3:4)


பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது மிகமிக எளிது. ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள், எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவன் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்பட வேண்டும்.


(கு.5.6.48;14:2-3)


கணவனின் அளவுக்கு மீறிய அன்பையும், ஏராளமான நகையிலும் புடவையிலும் ஆசையையும், அழகில் பிரக்கியாதி பெறவேண்டுமென்ற விளம்பர ஆசையையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்துவிடுவார்களே ஒழிய, சீர்திருத்தத்திற்குப் பயன்படமாட்டார்கள்.


(கு.29.9.40;15:3)


பெண்கள் மதிப்பிழந்து போவதற்கும், அவர்கள் வெறும் போகப்பொருள்தான் என்று ஆண்கள் கருதி நடப்பதற்கும் முக்கியக் காரணமே பெண்கள் ஆபாசமாய்த் தங்களை அலங்கரித்துக் கொள்வதேயாகும்.


(வி.15.6.43;1:3)


தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்துகொள்வதையும், நைசான நகைகள் போட்டுக்கொள்வதையும் சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும் தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர-ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக வாழ்வதுதான் நாகரிகம் என்பதை உணர்ந்திருக்கவில்லை.


(வி.11.10.48;3:2)


சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரை யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால் முதலில் நமது பெண்மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களே. அக் குழந்தைகளுக்கு 6,7 வயது வரையில் தாய்மார்களேதான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.


(கு.1.5.27;5:3)


இந்து மதத்தின் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும் பெண் தெய்வங்களாயிருந்தும் இந்துமதக் கொள்கையின்படி பெண்களுக்கு கல்வியும் சொத்துக்களும் இருக்க இடமில்லையே ஏன்?


(கு.3.11.29;8)


பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும், தாராளமாகக் கொடுத்து, மூட நம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கியங்களையோ காணவும் கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்ய வேண்டும்.


(வி.22.3.43;4:2)


பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும் சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும்.


(பெ.சி.மி:170)


ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது மொழிகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.


(கு.8.1.28;6:3)


கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும்.


(கு.8.1.28;15:1)


பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது?


(பெ.க.மு.தொ;134)


பெண்களுக்குத்தான் கற்பு: ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால்,பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை.


(கு.1.3.36;11:3)


நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா?


(வி.1.6.68;3:5)


சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ''ஆண்மை''க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ''ஆண்மை''க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகத்தில் இந்த “ஆண்மை” மேலோங்கி நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலன்றி பெண்களுக்கு விடுதலையில்லை என்பது உறுதி.


(கு.12.8.28;10:2)


ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம்: எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம் என்கின்ற முறையே, விபச்சாரம் என்னும் பிள்ளையைப் பெற்றெடுக்கின்றது.


(கு.16.6.35;8:2)


மற்றவர்கள், பெண்களின் உடல் நலத்தை உத்தேசித்தும் குடும்பச் சொத்து குறையாமல் இருக்கவேண்டுமென்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியம் என்று கூறுகின்றார்கள். பெண்கள் விடுதலையடையவும் சுயேச்சைபெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம்.


(கு.6.4.30;10:9)


பெண்ணைக் கொல்ல ஆணுக்கு உரிமை இருந்தால் ஆணைக் கொல்லப் பெண்ணுக்கும் உரிமை வேண்டும். ஆணைத் தொழுதெழ பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், பெண்ணைத் தொழுதெழ ஆணுக்கும் நிபந்தனை இருக்க வேண்டும்.


(கு.12.2.28.13.3)


ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன், என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள், பலப்பட்டுக் கொண்டு வருகின்றன, பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சிகளே ஒழிய வேறல்ல. எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா?


(கு.12.8.28;10:1-2)


பெண்களை வீட்டுவேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்ட மடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள்.


(கு.8.3.36;14:3)


இன்று நம்முடைய சமுதாயத்திற்கு இருக்கும் குறைகளுக்கும் அவமானத்திற்கும் நம் மூடநம்பிக்கைகளே காரணமாகும். அதுவும் நம் தாய்மார்களிடம் இவ்வளவு இருக்குமானால் பிறகு அவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகளின் நிலை என்னாவாகும்?எந்தச் சீர்திருத்தமும் பெண் மக்களிடம் இருந்து வந்தால் அதற்கு வலிவு அதிகம்.


(கு.27.10.40;3:3)


இன்றையப் பெண்கள், வெறும் அலங்காரத்தோடு திருப்தியடைந்து விடுகிறார்கள், அல்லது திருப்தி செய்யப்பட்டு விடுகிறார்கள். எனவே இவர்களுக்கு விடுதலை வேட்கை பிறப்பது அரிதாயிருக்கிறது.


(வி.26.5.58;1:பெ,செ.)


குழந்தை மணம் ஒழிந்து, திருமண ரத்து, விதவைமணம்,கலப்புமணம், திருமண உரிமை ஆகியவைகள் இருக்குமேயானால் இன்றுள்ள விபசாரத்தில் 100-க்கு 90 பகுதி மறைந்து போகும்.


(வி.21.3.50;பெ.செ.)


பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம், ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கின்றாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போமேயானால் பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதனால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருசுபடுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கிறார்க
். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றார
கள். அன்றியும், அப்பிள்ளை பெறும் தொல்லையால் அவர்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம்ஏற்பட இடமுண்டாகி விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.


(கு.12.8.23;10:3)

நன்றி:-யாழ்களம்(நாரதர்)
மேலும் சூடான விவாதத்திர்க்கும், உங்கள்கருத்துக்களை தெரிவிக்கவும்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=15965

பெரியார் என்ன? சொன்னார்? அறிவியல் பற்றி.

நண்பர் குழலிம்,மற்றும் வீதபியூப்பிள் கேட்டுகொண்டதற்கிணங்க, பெரியார் என்ன சொன்னார் பதிவு, பகுதி பகுதி பகுதியாக போடப்படுகிறது.

அறிவியல்


இயந்திரம் கூடாதென்றால் மனிதனுக்கு அறிவு விருத்தி கூடாது என்பதுதான் பொருளாகும்.


(கு.13.8.33;10:4)


இன்று நாம் எவ்வளவு மாறுபாடு அடைந்துவிட்டோம். நம் வசதிகளும் வாழ்வும் ஏராளமாகப் பெருகிவிட்டன. அதற்குமுன் கட்டைவண்டிதான். இன்று ரயில், மோட்டார், ஆகாய விமானம் முதலிய நவீன வசதிகள். தீ உண்டாக்கச் சிக்கிமுக்கிக் கல்லை உராய்ந்தோம்;இன்று ஒரு பொத்தானை அழுத்தினால், ஆயிரக்கணக்கான மின்சார விளக்குகள் எரிகின்றன. வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமடைந்துள்ள நம் மக்களின் புத்தி மட்டும் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இருக்கிறதே!


(வி.2.3.61:பெ.செ.)

கண்காட்சிச் சாலைகளில், புதிய கற்பனைகள் பல மலர்ந்திருக்கும்; வாழ்க்கை வசதி மேம்பாட்டிற்கான பல புதிய கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.பல நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட நுண்ணிய கருவிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கும். கண்காட்சிச் சாலையின் ஒரு பக்கத்தில் நுழைந்து மறுபக்கத்தில் நுழைந்து மறுபக்கத்தில் வெளிவருவதற்குள் ஒருவன் சகல துறைகளிலும் தன் அறிவை வளர்த்துக் கொண்டுவிடுவான். அவன் உலகத்தின் முன்னேற்ற வளர்ச்சியைத் தன் கண்முன் கண்டுகளித்துத் தெளிவு பெறுகிறான். பல ஆராய்ச்சி நுணுக்கங்களை அறியும் வாய்ப்புப் பெறுகிறான். பல அதிசயக் கருவிகளைக் கண்டு அக மகிழ்கிறான். சுருங்கக் கூறின் கலாசாலை சென்று பல ஆண்டுகள் படித்துப் பெற வேண்டிய அறிவு வளர்ச்சியை அவன் அந்தக் கண்காட்சி மூலம் ஒரு சில மணி நேரத்திலேயே பெற்றுவிடுகிறான்.


(வி.13.1.63:2:4)


கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப்பற்றிய கதைகளை அப்படியே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக்கொண்டு இருந்தவர்கள் கூட, இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன்மையை மறைத்துக்கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக்கொண்டு சிரமப்படுகிறார்கள்.


(கு.11.8.29:10:2)


சக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து ‘‘எடிசன்’’. அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம். எனவே மாற்றம் இயற்கையானது. அதைத் தடுக்க யாராலும் முடியாது.


(பெ.சி.மிமி: 1220)


உணவுத்துறையில் நம் நாட்டில் பெரிய மாறுதல் ஏற்படவேண்டும். அரிசிக்குப் பதிலாக வேறு ஏதாவது இரசாயனப் பொருளைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும். நாம் எந்திரம் ஓட்டுவதற்கு முதலில் நெருப்பைக் கொளுத்தி நீராவியில் இயக்க வைத்தோம், பிறகு மண்ணெண்ணெய், குரூட் ஆயில், பெட்ரோல், மின்சாரம் என்று காலத்திற் கேற்றாற்போல் மாற்றி ஓடச்செய்கிறோம். அதுபோல மனித எந்திரத்தையும் பெருந்தீனி மூலம் ஓடச்செய்யாமல் மின்சாரம் போன்ற சக்திப் பொருள் ஓன்றைக் கண்டுபிடித்து (சிறிய உணவு) அதைக் கொண்டே மனிதனை இயங்கும்படியும், உயிர் வாழும்படியும் செய்யவேண்டும்.


(பெ.ந.வா.நே.;8)


மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனிக் குறைந்துவிடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டுகள் வாழ முடியும். யாரும் சராசரி ஒன்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறமாட்டார்கள். ஆண் பெண் உறவிக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.


(கு.30.1.36:15)




கல்வி


கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு அவனைத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும்.


(கு.29.7.31;8:1)


எல்லா மக்களுக்கும் கல்வி பரப்புவது, நம் நாட்டில் பொது உடமையைக் கொள்கையைப் பரப்புவது போன்று அவ்வளவு கடினமாக காரியமாய் இருக்கிறது.


(கு.22.11.36;19)


ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடையவேண்டுமானாலும் அவர்கள் நாகரிகம் பெற்று உயர்ந்த நல்வாழ்க்கை நடத்தவேண்டுமானாலும் அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் தகுந்த ஞானம் பெறவேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி கற்பிக்கப்படவேண்டும்.


(கு.26.12.37;10:3)


கல்வியறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.


(வி.7.11.55;3:3)


ஆசிரியர்கள் முதலில் மாணவர்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். மக்களிடத்தில் அன்பு செலுத்தக் கற்றுக்கொடுக்க வேண்டும்.


(கு.1.5.27;6:1)


எப்படியிருந்தாலும் புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்துத் தலையைச் சொரிந்துகொள்வது போலாகும். ஏனென்றால் அவர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை. எனவே, பண்டிதர்களைக் கிட்டச் சேர்க்கும் காரியத்தில் மிக விழிப்போடு இருக்கவேண்டும்.


(கு.18.5.30;14)


ஆசிரியர்கள் பயன்படக்கூடியவர்களாயிருக்க வேண்டுமானால், அவர்கள் ஓரளவுக்காவது சுதந்திர புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதளவாவது மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.


(கு.12.2.44;9)


ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள் எல்லோரும் மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, நாணயம் இவைகளை வளர்க்க முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.


(வி.5.10.60;பெ.செ.)


பெருமைமிக்க ஆசிரியர்கள் நமது பிள்ளைகளை மதவாதிகளாக்க வேண்டுமென்று கருதுவதைவிட, அறிவாளிகளாக்க வேண்டுமென்று பாடுபடவேண்டும்


(வி.16.12.69;3:6)


நாட்டில் சாதியின் பேரால் ஒருவன் எதற்காக இழிமகனாகவும், இழிதொழில் செய்பவனாகவும் இருக்க வேண்டும்? நாட்டில் எல்லா மக்களுக்கும் கல்வி அளித்துவிட்டால் இழித்தொழிலுக்கென்று ஒரு சாதி இருக்க முடியுமா? படிப்பின்மையால்தானே இவர்கள் இழிதொழிலைச் செய்ய வேண்டியிருக்கிறது? அதனால்தானே இழிமக்களாகவும் கருதப்படுகின்றனர்?


(வி.12.6.61;பெ.செ.)


சோறு இல்லாதவனுக்குச் சோறும், உடை இல்லாதவனுக்கு உடையும், வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ, அதுபோல கல்வி இல்லாதவனுக்குக் கல்வி கொடுக்கவும் வேண்டும்.


(வி.21.7.61;3:4)


இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் கோயிலல்ல: பள்ளிக்கூடம்தான். அறிவால் பல அதிசய அற்புதங்களைச் செய்யலாம். அதனால் அறிவை வளர்ப்பதற்கு அடிப்படையான கல்விக்கூடங்கள்தான் இன்று நமக்கு மிக மிகத் தேவை.


(வி.6.7.68;3:5)


நமது கல்விமுறை மாறவேண்டும். படிக்கும்போதே அத்துடன் தொழிலும் பயில வேண்டும். எந்த வகுப்பில் ஒருவன் படிப்பை நிறுத்தினாலும், அவன் தொழில் செய்து பிழைக்கக் கூடியவனாக இருக்கவேண்டும். மக்கள் அத்தனை பேரும் தொழில் பழகியவர்களாக இருக்க வேண்டும்.


(வி.26.7.68;3:1)


பள்ளிக்கூடங்கள் எழுத்து வாசனையையும் ஏதாவது ஒரு துறையில் விளக்கத்தையும்தான் உண்டாக்க உதவும். வாசகசாலை என்பது பொது அறிவு விளக்கத்தையும் சகல துறைகளிலும் ஞானத்தையும் உண்டாக்கும்.


(கு.6.3.38:8:1)


நாட்டில் பள்ளிக்கூடங்கள், உயர்தரக் கலாசாலைகள் எவ்வளவு இருந்தாலும் ஓரளவுக்குத்தான் அவைகள் மூலம் அறிவு வளரும். யார் அவைகளை நடத்தினாலும் ஒரு கட்டுப்பாட்டுக்கு, ஒரு வரம்புக்கு அவை அடங்கியனவே.
இத்தகைய நிறுவனங்களால் படிப்பின் பயன் முழுமையாகக் கிடைத்துவிடாது, இந்தக் குறைபாட்டை நிறைவுபடுத்துவதற்குப் பயன்படுவன படிப்பகங்களேயாகும்.


(வி.8.1.61;2:5)


சுருங்கச் சொன்னால் படிப்பகங்களை ஒரு சர்வகலாசாலை என்றே கூறலாம்.


(கு.19.7.31:3)


நம் நாட்டில் கல்வி இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டுவது அவசியம். ஒன்று, கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்சிச்யும் ஏற்பட வேண்டும். மற்றொன்று, மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.


(கு.22.8.37;10:3)


படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத்தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் - நாணயமாய் வாழ்வதற்கு.


(வி.25.1.47;3:3)


பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு முதன்முதலில் ஒழுங்குமுறையைப் புகட்டுவதில்தான் கவலை வேண்டும். அதுதான் முக்கியம். அடுத்தபடியாக உள்ளதுதான் கல்வி. முதலில் எப்படிப் பழக வேண்டும் என்ற நல்லொழுக்கத்தைப் புகட்ட வேண்டும். நல்லொழுக்கம்தான் ஒரு மனிதனைப் பிற்காலத்தில் சிறந்த பண்புடையவனாக ஆக்குகிறது.


(வி.1.3.56;3:3)


நாட்டை நல்லமுறையில் வளப்படுத்த நான் நாட்டின் அதிகாரியாக இருந்தால், அதிக வரி போடுவேன். ஏழைகளிடத்தில் எவ்வளவுதான் கையில் கொடுத்தாலும் அதை உடனே செலவு செய்து விடுகிறார்கள். ஆகவே அவர்கள் கையில் பணம் கொடுக்காமல் வரியாகப் பிடித்து அவர்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம்.


(வி.23.7.56;3:5-6)


மூடநம்பிக்கை, ஒழுக்கக்கேடு, சமுதாய இழிவு உள்ள நூல்கள் எவையானாலும் அவை பள்ளியில் மாத்திரமல்லாமல் அரசியலிலேயும் புகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


(வி.17.3.68;2:3)


பாரதிதாசன் அவர்களது பாடல்களை வகுப்புக்குத் தகுந்தபடி தொகுத்துப் பாடமாக வையுங்கள்: ஐந்தாண்டு அறிவு ஓர் ஆண்டில் தோன்றிடும்.


(வி.23.5.68;2)


பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்பதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான்.
மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அருங்குணங்கள் ஒழுக்கம், நாணயம், நேர்மை, மற்றவர்களுக்கு நன்மை பயத்தல், பிறருக்கு ஊறு செய்யாமல் இருந்ததல். இவைகள் நமக்குக் கடவுளைவிட மேலானவை.


(வி.27.9.55;3:3)


பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் நல்ல நகைகள், ஆடம்பர உடைகள் உடுத்துவதுதான் பெருமையென்று கருதாமல் எளிய உடைகளே உடுத்த வேண்டும். படிக்கக்கூடிய இடத்தில், எல்லாப் பிள்ளைகளும் கலந்து பழகும்படியான இடங்களில், பேதங்கள் இல்லாமலிருப்பதுதான் நல்லது.


(வி.5.10.61;பெ.செ.)


மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பள்ளியில் படிக்கும் காலத்தை வீணடித்துக் கொள்ளக்கூடாது. பள்ளியில் படிக்கும் காலம் மிகமிக அருமையானது. எனவே, வெளியில் நடக்கும் எவ்வித நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் தங்கள் மனத்தை அலையவிடக்கூடாது. குறிப்பாக கூறவேண்டுமானால் கிளர்ச்சிகளில் பங்கு கொள்ளக்கூடாது.


(வி.9.4.62;பெ.செ.)


மாணவர்கள்-மாணவியர் ஆபாசப் படங்கள், கருத்துகள் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படித்து வாழ்க்கையில் கெட்டுப் போகிறார்கள். அறிவுப் பெருக்கம் நிறைந்த-நல்ல கருத்துகளைக் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படித்துச் சிந்தித்து அறிவு ஆராய்ச்சி பெற வேண்டும்.


(வி.17.5.62;பெ.செ.)


முதலாவதாக, மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அடுத்து, ஒழுங்குமுறை பழக வேண்டும். அதற்கு அடுத்தாற்போல்தான் பாடம்.


(வி.15.7.62;பெ.செ.)
நன்றி:-யாழ்களம்(நாரதர்)
மேலும் சூடான விவாதத்திர்க்கும், உங்கள்கருத்துக்களை தெரிவிக்கவும்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=15965

பெரியார் என்ன? சொன்னார்? பகுத்தறிவு பற்றி.

இந்தத் தலைப்பில் உண்மையில் பெரியார் என்ன சொன்னார் என்று ஒவ்வொரு விடயம் பற்றியும் எழுத/படி எடுத்துப் போட இருக்கிறேன்,அப்போதாவது பெரியார் எப்படிப்பட்டவர் என்பது விளங்கலாம் என்பதால்.

ஏனெனில் பெரியார் என்றால் எதோ பிராமணரை எதிர்க்கப் பிறந்த மனிதர் என்பதாக சிலர் இன்று தமிழ் இணயத்தில் அவர் மேல் வசைமாரிப் பொழியும் பிராமணர்களின் எழுத்துக்களை இங்கே வந்து போட்டுள்ளார்கள் அவர்களுக்கு பெரியார் மேல் இருக்கும் ஒரே கோவம் அவர் தாம் பிறந்த இந்து மதம் பற்றி அவர் வைத்த விமர்சனம் தான்.
அதற்கு மேல் இவர்களுக்கு அவர் என்ன சொன்னார் என்பதுவோ ஏன் சொன்னார் என்பபதுவோ புரிந்ததாகத் தெரியவில்லை.


பகுத்தறிவு

கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமயமலையின¢உயரத்தை ஏன் வெளிநாட்டான் கூறவேண்டியிருக்கிறது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நடராசர் நாட்டியத்திற்குத் தத்துவார்த்தம் கூறக்கூடிய அளவுக்கு அறிவு படைத்த நமக்கு, இந்த ஓலிப்பெருக்கியை எப்படிச் செய்திருக்க வேண்டும் என்பதை மட்டும் ஏன் தெரிந்துகொள்ள முடியவில்லை என்று கவனிக்க வேண்டும். பொது அறிவு வளர உங்கள் பகுத்தறிவை உபயோகிக்க முற்படவேண்டும்.


(வ¤.6.12.47;1:3)


உலகில் மனிதன் மற்ற உயிரினங்களைவிடச் சிறந்தவனாகக் கருதப்படுவதற்குக் காரணம், அவன் எல்லையற்ற அறிவுச் சக்தி பெற்றிருப்பதுதான். மற்ற நாட்டு மனிதன் அந்த அறிவைப் பயன்படுத்தி மிகமிக முன்னேறிக் கொண்டு வருகிறான். ஆனால் இந்த நாட்டு மனிதனோ, அந்த அறிவினைப் பயன்படுத்தாத காரணத்தால¢மிகமிகப் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறான். இங்கு நாம், ஞான பூமியென்று சொல்லிக் கொண்டு கோயில் குளம் கட்டிக்கொண்டு இருக்கிறோம். அங்கோ அண்டவெளியில் பறந்து உலகையே பிரமிக்கச் செய்கிறார்கள்.


(வ¤.22.5.61.1:பெ.செ.)


மற்ற நாட்டில் எல்லாம் அறிவுக்குத்தான் மதிப்பு, அறிவைத்தான் நம்புவான். அறிவைத்தான் ஆதாரமாகக் கொள்வான். இந்த குப்பைக் கூளங்கள், சாத்திர சம்பிரதாயங்கள், கடவுள், மதம், இவைகளைத்தான் நம்புகிறான்.


(வ¤.10.7.61;3:2)


சிந்தனை அறிவு ஒன்றுதானே உண்மையறிவாகக் கருதப்படக்கூடியது? வெறும் புத்தக அறிவு அறிவாகிவிடுமா? அதைக் குருட்டுப் பாடம் பண்ணி ஒப்புவித்தவனே மேதாவி ஆகிவிடுவானா? அப்படியானால், படித்த மேதாவிகள், பட்டதாரிகள், விஞ்ஞானப் பாடத்தில் பட்டதாரிகள், கல்லைக் கடவுள் என்று நம்பி அதன் காலில் விழுந்து வணங்குவார்களா? மகா விஞ்ஞானம் படித்த மகோன்னதப் பண்டித நிபுணர் என்பவர்களெல்லாம் பாபவிமோசனத்திற்காகத்தான் தீர்த்தமென்று சேற்று நீரை வாரித் தெளித்துக்கொள்வார்களா? அவர்கள் படித்த அறிவியலுக்கும் இந்தச் சாணி மூத்திரக் கலவைக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா?


(பெ.சி.மி.102)


இராமாயணத்திலும், பாரதத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால், அது மந்திர சக்தியால் ஓடியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் ஆகாய விமானம் பற்றிய விளக்கம் இருக்கிறது. இது இயந்திர சக்தியால் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?


(பெ.ச¤.மிமி;651 - 2)


ஒரே தகப்பனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும் ஒன்றை இங்கிலாந்திலும் வளர்ந்துப் பாருங்கள். அவன், (இங்கிலாந்தில் வளர்ந்தவன்) எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான். இவன் எதையும் மதக் கண்கொண்டு பார்ப்பான்,


(பெ.சி.மிமி;971)


எதற்கும் பகுத்தறிவை உபயோகிக்க விடாமலும் ஆராய்ச்சி செய்யவோ ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்காமலும் அடக்கி வைத்த பலனே, நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும் குழப்பத்திற்கும் காரணமாய் இருக்கிறது.


(கு.4.5.30;10:4)


நீங்கள் எந்த முறையில் கடவுளை நிர்ணயித்தாலும் எந்த முறையில் எவ்வளவு நல்ல கருத்தில் மதத்தை நிர்மாணித்தாலும் பலன்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர, மூட நம்பிக்கைக் கடவுளை விட, குருட்டுப்பழக்க மதத்தைவிட சீர்திருத்தக் கடவுளும், பகுத்தறிவு மதமும் ஒன்றும் அதிகமாய்ச் சாதித்துவிடப் போவதில்லை.


(கு.26.2.33;8:4)


மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும், அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும், பாட்டாளியும், பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும் திருப்தியையும் கலவையற்ற தன்மையையும் உண்டாக்கித் தரவேண்டிய பகுத்தறிவானது, சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமையாகி, மக்களுக்குத் துக்கத்தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகிறது.


(கு.25.5.35;15:2-3)


அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தில் பேராலோ மதத்தின் பேராலோ, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலோ நடத்தப்படக் கூடாது.


(கு.29.9.40;1:4)


மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டதே தவிர, கண்மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல, பகுத்தறிவை மனிதன் தப்பாய்ப் பயன்படுத்தி, அதிகமான தொல்லையில் மாட்டிக் கொண்டிருக்கிறான். இந்தத் தொல்லைக்குப் பரிகாரமாகக் கடவுளை உருவாக்கிக் கொண்டான்.


(கு.23.11.46;7:2)


வாழ்க்கையில் பேத நிலையும், போதவில்லையே என்கின்ற மனக்குறையும், தனிப்பட்ட சுயநலப்போட்டித் தொல்லை எந்த நாட்டிலாவது இருக்குமானால், அந்த நாட்டு மக்களுக்கு முழுப் பகுத்தறிவு இல்லை என்றும் எந்த நாட்டிலாவது அவை இல்லாமல் வாழ்வில் மக்கள் மனத் திருப்தியுடன் இருப்பார்களானால் அந்த நாட்டில் பகுத்தறிவு ஆட்சி புரிகிறது என்றும்தான் அர்த்தம்.


(வ¤.5.2.51;3:1)


மன¤தன¢தனது சமூகததை வஞச¤த்துப¢பொருள் சேர்த்துப் பகுத்தற¤வுள்ள தன் பெண்டு பிள்ளைகளுக்குப் பணம் சேர்த்து வைக்க வேண்டுமென்றுசொல்லுக¤றான். ஆனால் மிருகம, பட்ச¤ ஆகியவைகள் பகுத்தற¤வு இல்லாத தனது பெண்டு பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்த்து வைக்கக் கருதுவதில்லை. தனது குட்டிகளையும் குஞ்சுகளையும் அவை தானாக ஓடியாடும் பருவம் வந்தவுடன் தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும் கொத்தியும் துரத்திவிடுகின்றன. அவற்றைப் பற்றி கவலையோ ஞாபகமோ கூட அவைகளுக்குக் கிடையாது.


(வி.19.2.58.மி;பெ.செ.)


இரண்டாயிரம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் மக்கள் தங்கள் சொந்தப் புத்தியை உபயோகிக்கும் உரிமையை முற்றிலும் இழந்திருந்தார்கள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளைக் கேட்கவே உரிமையில்லாதவராய் எழுதியதைப் படிப்பவர் சொல்லியபடி கேட்டனர். சிந்தித்தால், தர்க்கித்தால், சந்தேகித்தால் பாவம் என்று கூறி அழுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள். எனவேதான் அறிவு வளரவில்லை. சமுதாயம் மேலோங்கவில்லை.


(வ¤.12.1.61;பெ.செ.)


கடவுள் சொன்னது, மகான் சொன்னது, ரிஷி சொன்னது, அவதார புருஷர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன் புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.


(வ¤.3.4.61;3:5)


பகுத்தறிவிற்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.


(வ¤.14.6.61;1.பெ.செ.)


குருட்டு நம்பிக்கையை அறவே விட்டுப் பகுத்தறிவைக் கொண்டு பார்ப்பதானால் ஒரு மதமும் நிலைக்காது.


(வ¤.15.10.62;2:பெ.செ.)


பேராசையில்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும் அனுபவத்துக்கும் ஒவ்வாததை ஒரு காலமும் நம்பமாட்டான். பின்பற்றமாட்டான்.


(வ¤.17.10.62.2.பெ.செ)


நம் மக்கள் பக்குவமடைய மனித அறிவு பெற இன்னும் எத்தனை நூற்றாண்டு காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. தமிழ்நாடு புயலால், வெள்ளத்தால், பூகம்பத்தால் அடிப்படை உட்பட அழிந்து புதுப்பிக்கப்பட்டாலொழிய விமோனமில்லையென்றுதான் கருத வேண்டியிருக்கிறது.


(வி.30.1.68;2:3)


பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது, எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக்கூடாது. கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக்கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திர சக்தி என்றோ நம்பிவிடக்கூடாது. எப்படிப்பட்டதானாலும் நடுநிலைமையிலிருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் மனம்விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்கவேண்டும்.


(கு.9.12.28;11:2)


பகுத்தறிவு மூலம் மனிதனின் ஆயுசு வளர்ந்ததோடு மனிதனின் சாவு எண்ணிக்கையும் மிகவும் குறைந்து விட்டது.


(வி.4.10.67;2:6)


அறிவாளிக்கு, இயற்கையை உணர்ந்தவனுக்குத் துன்பமே வராது. உடல் நலத்துக்கு ஊசி போட்டுக் கொள்வதில் வலி இருக்கிறது. அதற்காக மனிதன் துன்பப்படுவதில்லை. வலி இருந்தாலும் அதைப் பொருத்துக் கொண்டால்தான் சுகம் ஏற்படும் என்று கருதிப் பொறுத்துக் கொள்ளுகிறானே, அதுதான் அறிவின்தன்மை.


(வி.13.9.68;2:3)


சிந்தனாசக்திதான் மனிதனை மிருகங்களிடமிருந்தும் பட்சிகளிடமிருந்தும் பிரித்துக் காட்டுவதாகும். மிருகங்கள் மனிதனைவிட எவ்வளவோ பலம் பெற்றிருந்தும் அவை அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதற்கு இதுதான் காரணம்.

மனிதனிடமுள்ள வேறு எந்த சக்தியைக்காட்டிலும் பகுத்தறியும் சக்திதான் அவனை மற்ற எல்லா உயிர்களினின்றும் மேம்பட்டவனாக்கி வைக்கிறது. ஆகவே, அதை உபயோகிக்கும் அளவுக்குத்தான் அவன் மனித்தன்மை பெற்றியங்குவதாக நாம் கூறமுடியும். பகுத்தறிவை உபயோகிக்காதவன் மிருகமாகவே கருதப்படுவான்.


(கு.1.5.48;5:3)


இதைச் சிந்தித்தால் பாவம், இந்தக் காரியத்தை ஆராய்ந்தால் பாவம் என்று சொல்லிச் சொல்லி நம்மைப் பயமுறுத்திவிட்ட காரணத்தினால், இப்போது எந்தச் சங்கதியையும் நம்மால் ஆராய முடியாமல்போய்விட்டது. கொஞ்சம் துணிச்சலாக இந்தப்பக்கம் திரும்பிவிட்டோமானால் அப்புறம் வேகமாக வளர்ச்சி காணமுடியும்.

காட்டுமிராண்டி என்றால் யார்? அறிவில்லாதவன், பகுத்தறிவில்லாதவன், இரண்டும் இருந்தும் சிந்திக்காதவன், சிந்திக்காமலே குறை கூறுபவன் ஆகியவர்கள் காட்டுமிராண்டி என்பதுதான் எனது கருத்து.


(வி.3.11.67;2:2)


மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.


(5.11.67;பெ.செ.)


நிர்வாண நாட்டில் கோவணம் கட்டிக்கொண்டு நடப்பவன் பைத்தியம் பிடித்தவன் என்று சொல்லப்படுவது போல், காட்டுமிராண்டி நாட்டில் பகுத்தறிவுவாதி பைத்தியக்காரன்போல் காணப்படுவது எப்படித் தவறாகும்?


(வி.5.11.67;2:2)


எந்தக் காரியமானாலும், எந்த நிகழ்ச்சியானாலும் எதைச் செய்தாலும் அதற்குமுன், ‘‘இது ஏன்? எதற்காக? அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு, அறிவிற்கு ஒத்துவருகிறதா?’’ என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் அறிவு வளர்ச்சி ஏற்படும்.
அப்படி இல்லாமல் பழக்கம், பழைமை, முன்னோர்கள் என்று போனால் அறிவு வளர்வதற்குப்பதில் முட்டாள்தனம்தான் வளர்ச்சியடையும்.


(வி.27.11.69;3:4)


அவர் சொல்லிவிட்டார், இவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள். இன்னோருவனுக்கு அடிமையாய் உங்கள் மனச்சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப் பாருங்கள். ஆராயுங்கள்!


(கு.30.10.32;9)


பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்திரத்தையும் சமுத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்கத் தயாரா யிருக்கிறீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிதளவுகூடப் பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். இதில் மாத்திரம் ஏன் வெகுசிக்கனம் காட்டுகிறீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது?


(கு.1.11.36;5:1)


மந்திரியாவதைவிட, முதல் மந்திரியாவதைவிட, கவர்னராவதைவிட, கவர்னர் ஜெனரலாவதைவிட, அதற்கும் மேலான மகாத்மா ஆவதைவிட முதலில் நாமெல்லாம் மனிதர்களாக வேண்டும். மனிதர்களாக வேண்டுமானால் முதலாவது பகுத்தறிவு விளக்கமாக ஆகவேண்டும். இயற்கைச் சிந்தனாசக்தி வளர்க்கப்பட வேண்டும்.


(வி.6.12.47;1:3)


ஒரு சேலை வாங்கினால்கூட சாயம் நிற்குமா? அதன் விலை சரியா? இதற்கு முன் இவர் கடையில் வாங்கிய சேலை சரியாக உழைத்திருக்கிறதா? இக்கடைக்காரர் ஒழுங்கானவர்தானா? என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்துத்தான் வாங்குகிறோம். இப்படிப்பட்ட சில்லறைக் காரியங்களுக்கெல்லாம் பகுத்தறிவை உபயோகிக்கும் நாம் சில முக்கியமான விசயங்களில் மட்டும் பகுத்தறிவை உபயோகிக்கத் தவறிவிடுகிறோம். இதனால் ரொம்பவும் ஏமாந்தும் போகிறோம். இதை உணர்த்துவதுதான் பகுத்தறிவின் அவசியத்தை வற்புறுத்துவதுதான் எனது முதலாவது கடமை.


(கு.1.5.48;12:2)


இன்று நமக்கு வேண்டியது அறிவு வளர்ச்சி. அறிவு வளர்ச்சி பெற்று, ஒவ்வொரு துறையிலும் முன்னேற வேண்டும். அறிவு ஆட்சி செய்தல் வேண்டும்.


(வி.7.3.61;3:2)


மனிதனுக்கு இன்று வேண்டியது பணமோ, வீடு, வாகனமோ அல்ல. புத்தி வளர்ச்சிதான், பணம் சம்பாதிப்பதில் போட்டி போடுவதைவிட, புத்தி சம்பாதிப்பதில் போட்டி போடவேண்டும்.


(வி.14.3.61;3:1)


உங்களை ஆள்வது கடவுளோ, மதவாதிகளோ அல்ல, உங்கள் அறிவுதான். நீங்கள், நான் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் உங்கள் பகுத்தறிவுக்குச் சரியென்று பட்டதை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்றதைத் தள்ளி விடுங்கள்.
பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி ஆகும். உயிரினங்களில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள். மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள்.


(வி.16.8.69;2:1)


சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு.


(பெ.பொ:8)


மனிதன் நம்பிக்கைவழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை பெறமுடியும்.


(வி.13.8.61;3:5)


உன் சொந்தப் புத்திதான் உனக்கு வழிகாட்டி. அதை நல்ல முறையில் பயன்படுத்தி, பிறரிடமுள்ள அவநம்பிக்கையைக் கைவிடு. உன் பகுத்தறிவுக்கே வேலி போட்டதால்தான் அறிவு வெள்ளாமை கருகிப்போயிற்று. முன்னோர் சொல்லித் போனது அற்புதமல்ல; அதிசயமுமல்ல. அதை அவர்களிடமே விட்டுவிடு. அதில் நீ சம்பந்தப்படாமல் நீயே செய்ய - கண்டுபிடிக்க முயற்சி செய். அறிவுக்கே முதலிடம் கொடு.


(வி.13.1.63.2:பெ.செ)


உலக உயிர்களில் அறிவு நிரம்பப் பெற்ற உயிர் பகுத்தறிவுள்ள உயிர் மனிதன்தான். அவன் தன் அறிவைப் பயன்படுத்தினால் மிகச் சிறந்த காரியங்களை எல்லாம் சாதிக்க முடியும்.


(வி.16.12.69;3:6)


மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும், ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராய்ச்சிசெய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.


(கு.20.1.35;10:4)

விடுதலை மற்றும் உண்மை இதழ்களிலிருந்து.





நன்றி:-யாழ்களம்(நாரதர்)
மேலும் சூடான விவாதத்திர்க்கும், உங்கள்கருத்துக்களை தெரிவிக்கவும்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=15965

புதன், நவம்பர் 15, 2006

சிம்சன், அப்படிபோடு அப்படிபோடு.

சிம்சன், அப்படிபோடு அப்படிபோடு.

திங்கள், அக்டோபர் 30, 2006

தமிழருக்கு ஒரு வேண்டுகோள்.

அன்புடையீர்,

நெதர்லாந்துப்பத்திரிகைகள் பலவற்றில், இந்தியாவிலிருந்து தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக 19ம் நூற்றாண்டில் கூலிகளாக கொண்டுவரப்பட்டவர்கள்தான் இலங்கையில் இன்று வாழும் அனைத்துத்தமிழர்களும் என்று பல கட்டுரைகள் வந்துள்ளன. இது வரலாறு தெரியாமலோ அல்லது வேண்டுமென்றோ எழுதி அனைத்துதமிழர்களும் அவமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் டென்காக் நகரிலுள்ள நெதர்லாந்தின் தேசிய ஆவணக்காப்பகத்தில், 4000 ஆண்டுகளிற்கு மேலாக இலங்கையில் வாழும் பழங்குடிமக்கள் ஈழத்தமிழர்கள் என்ற ஆதாரங்கள் பல உள்ளன. இவ் ஆதாரத்தை யாரும் அங்கு சென்று அதைப்பார்வையிடலாம். எனவே இவ் ஆதாரங்களைக் குறிப்பி;ட்டு கீழே எழுதப்பட்ட முன்மாதிரியான கடிதத்தை அப்பத்திரிகைகளிற்கு அனுப்புபவர்களின் முகவரி, கையெழுத்துடன் அனுப்பிவைக்குமாறு நெதர்லாந்துவாழ் தமிழர்கள், நண்பர்களை கேட்டுக்கொள்கின்றோம்.
அனுப்பவேண்டிய முகவரி:
(இரு பத்திரிகைகளின் விபரம்)


1. Director, NRC. nextweek, Postbus 8987, 3009 TH Rotterdam
Tel 010 - 406 6111, Fax 010 - 406 6967, E-mail: nrc@nrc.nl


2. Director, Eindhovens dagblad, , Postbus 534, 5600 AM Eindhoven
Telefoon: 040- 2336336 Emai: redactie@eindhovensdagblad.nl


நன்றி
மேலதிக தொடர்புகட்கு,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-நெதர்லாந்து 0031 703893652

====================================================
Voorbeeld brief:

30 oktober 2006, Nijmegen

Geachte heer/mevrouw,

Ik heb met belangstelling uw artikel over Sri Lanka Gelezen (18 oktober 2006). Het is fijn dat u aandacht besteedt aan ons land, maar ik wil u wijzen op een fout die in de tekst staat. Het gaat om het volgende:

U schrijft: " In het midden van de negentiende eeuw brachten de Britten vanuit India Tamils als arbeiders naar de plantages op Sri Lanka (toen nog Ceylon geheten).”

In het zuiden werden Tamils het land binnen gebracht in de 19e eeuw, maar in het noorden en oosten van Sri Lanka (het gebied dat de Tamils als hun thuisland/moederland beschouwen) wonen al sinds 4000 jaar Tamils. Over de geschiedenis van de Tamils in Sri Lanka kunt u alles terugvinden in de koninklijke bibliotheek in de Den Haag.

Voor ons, als Tamils is een dergelijke fout pijnlijk! Wij wonen al sinds mensen heugenis in het oosten en noorden van Sri Lanka, en onze claim op een eigen staat in dat gebied is terecht! Zoals u de zaak voor stelt, lijkt die claim uit de lucht gegrepen. Ik verzoek u vriendelijk om deze fout te rectificeren!


met vriendelijke groet,

ஞாயிறு, செப்டம்பர் 17, 2006

தமிழீழ திரைக்காவியம் ஆணிவேர்.


ஈழத் தமிழர்களின் அவல வாழ்வை பதிவு செய்வதற்காக
வன்னியை சென்றடையும் தமிழகத்தின் பெண்
செய்தியாளர் ஒருவரின் திகில் மிக்க அனுபவப் பதிவாக,
கதை விரிகின்றது.
பல மாதங்களுக்கு தமிழீழத்தில் தங்கியிருந்து
நேரடியாகவும், வாய் வழியாகவும்
மக்களின் அவல வாழ்வை பதிவு செய்யும்
இவர், யுத்தத்தால் சிதைவடைந்து காணப்படும்
நிலப்பரப்பில் சமூக பணிகளுக்காக தன்னை
அர்ப்பணித்து நிற்கும் மருத்துவர் ஒருவர் மீது
காதல் கொள்கின்றார்.
எனினும் கனத்த நினைவுகளுடன் தமிழகம் செல்லும் இவர்,
மீண்டும் தமிழீழம் திரும்பி வன்னியில் மருத்துவரை தேடிக்
கண்டுபிடிப்பதற்கான பகீரத பிரயத்தனங்களில் ஈடுபடுகின்றார்.
இவரது தேடலின் போது பழைய நினைவுகள் இரைமீட்டப்படுகின்றன.
கிருசாந்தி குமாரசுவாமியின் படுகொலை, வலிகாம மக்களின்
பாரிய இடப்பெயர்வு, கிளிநொச்சியிலும் வன்னியின் ஏனைய
இடங்களிலும் இடப்பெயர்வையே வாழ்வாகக் கொண்ட மக்களின்
அவல நிலை என வரலாற்றுக் காலத்திற்கும் இவரது
நினைவுகள் சென்று திரும்புகின்றன.
தமிழீழ மக்களின் அவல வாழ்வையும், சிறீலங்கா
அரசாங்கத்தின் கொடூர யுத்த முன்னெடுப்புக்களின்
கோர வடுக்களையும் மட்டும் இந்தத் திரைக்காவியம்
சுமந்து நிற்கவில்லை. வரலாற்று ரீதியாக தமிழினத்தை சிங்கள தேசம்
அணுகும் முறையையும், சிங்கள தேசத்தில் புரையோடிக்
கிடக்கும் கர்ணவழி மகாவம்ச கருத்தியல்களையும், ஆணி வேர்
தெளிவாக புட்டுக் காட்டியுள்ளது.
தமிழீழ தாயகத்திற்கும், தமிழகத்திற்கும் இடையில்
நிலவும் தொப்புள் கொடி உறவின் வெளிப்பாடாக, தாய் - சேய்
பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, கடல் பிரித்தாலும்
உள்ளத்தால் பிரியாத உறவின் ஆதர்ச ஒளியாக, இந்த
திரைக்காவியம் திகழ்கின்றது.
மட்டுப்படுத்தப்பட்ட தொழில்நுட்பட வசதிகளுடன், முதற்
தடவையாக தமிழீழ தாயகத்தில் பதிவு செய்யப்பட்ட தரம் வாய்ந்த
இந்த முழு நீள வெண்திரைக் காவியம் போற்றுதற்குரியது.
திரைக்காவியங்களின் மூலம் காத்திரமான செய்திகளை
வெளிக்கொணர முடியும் என்பதற்கு இந்த திரைக்காவியம்
உவமை கூறுகின்றது.
இது பார்வையிடும் சகலரின் சிந்தனையையும் தூண்டக்
கூடியதெனக் கூறின் அது மிகையாகாது.

http://www.aanivaer.com/aanivaer_flash/index2.html

வெள்ளி, செப்டம்பர் 15, 2006

ஆனந்த சங்கரிக்கு யுனஸ்கோ விருது ஏற்புடையதா?


ஆனந்த சங்கரிக்கு யுனஸ்கோ விருது கொடுப்பது சரியா? தவறா? காரணங்களை ஆய்து பார்த்து உங்கள் எதிர்ப்பினை இங்கு தெரிவியுங்கள்.
தமிழரால் ஒதுக்கப்பட்ட ஒருவருக்கு, தமிழினவிரோதிக்கு இது கொடுக்கப்படுவது ஏற்புடையதா?

உங்கள் எதிர்ப்பினை தெரிவிக்க இங்கே சுட்டவும்.
http://www.youtounesco.underskrifter.dk/

எம்.ஜி.ஆர் பற்றிய தேசித்தலைவர் பிரபாகரனின் சாட்சியம்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பற்றிய தேசித்தலவர் பிரபாகரனின், சாட்சியத்தை பார்க்க இங்கே சுட்டவும். எம்.ஜி.ஆரின் இழப்பு ஈழத்தமிழருக்கு ஓர் பேரிழப்புதான்.

சனி, செப்டம்பர் 09, 2006

இரவினில் கண்விழிக்காதீர்கள்-பிலிம் காட்டுறோம்.

இரவினில் கண்விழிக்காதீர்கள்-பிலிம் காட்டுறோம்.

பிலிம்பார்க்க>
http://www.youtube.com/watch?v=Si0op3772wM

வியாழன், செப்டம்பர் 07, 2006

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டன்.-படம் காட்டுறம்.


இது எப்படி இருக்கு? இது நிஜத்துக்கும் நிழலுக்கும் உள்ள வித்தியாசம்.

இது எப்படி இருக்கு? அவர் அவர் எடுத்த முடிவினால் மக்கள் மனதில் முன்பும், இப்போதும் அவர்களது கெளரவத்தோற்றம்.

எப்படி கும்பிடுதல்-படம் காட்டுறோம் வாங்க.

இங்கே பல அரசியல்வாதிகளின் கூழைக்கும்பிடும் முறை காட்டப்படுகிறது, இதில் எது சூப்பர் கும்பிடுகை? ஏன்? கருத்துக்கூற வாருங்கள்:-)








ஞாயிறு, செப்டம்பர் 03, 2006

பா.ம.க. மிரட்டலுக்கு பணியமாட்டேன்-குஷ்பு ஆவேசப் பேட்டி.

பா.ம.க. மிரட்டலுக்கு பணியமாட்டேன்; மணியம்மை வேடத்தில் நடித்தே தீருவேன்: குஷ்பு ஆவேசப் பேட்டி
நடிகர் சத்யராஜ் நடிக்கும் "பெரியார்'' படத்தை டைரக்டர் ஞானராஜசேகரன் எடுத்து வருகிறார். இந்த படத்தயாரிப்புக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி உதவி கொடுத்துள்ளது. பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துக்களை மக்களிடம் மீண்டும் எடுத்துச் சொல்லும் வகையில் படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் பெரியார் வேடத்தில் நடிக்கும் சத்யராஜ×க்கு ஜோடியாக நாகம்மை வேடத்தில் ஜோதிர்மயி நடித்துள்ளார். சத்யராஜ்-ஜோதிர்மயி சம்பந் தப்பட்ட காட்சிகள் பெரும்பாலும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன.

அடுத்து பெரியார் 2-வது திருமணம் செய்த மணியம்மை வாழ்க்கை தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. மணியம்மை வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று டைரக்டர் ஞானராஜசேகரன் தீவிரமாக ஆய்வு செய்தார். ஒவ்வொரு நடிகையின் முகத்தையும் கம்ப்ïட்டர் மூலம் தொகுத்து மணியம்மை முகத் துடன் ஒப்பிட்டுப் பார்த் தார்.

அப்போது மணியம்மை வேடத்துக்கு நடிகை குஷ்பு முகம் ஏற்றதாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வாரம் மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதையடுத்து மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்பு சில ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிப்பதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்ட சபையில் பேசிய பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் இது பற்றி கூறுகையில், "தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கேவலப்படுத்தி பேசிய ஒரு நடிகை எப்படி மணியம்மை வேடத்தில் நடிக்கலாம்? இதை நாம் அனுமதிக்கலாமா?'' என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக கூறுகையில், "மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பெரியார் படத்தில் சிக்கலுக்குரிய ஒரு நடிகையை திணிப்பது ஏதோ உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. குஷ்பு நடிக்க மக்களிடம் எதிர்ப்பு கிளம்பினால் அது ஒரு களங்கமாக மாறிவிடும். எனவே இதை தவிர்ப்பது நல்லது'' என்றார்.

பா.ம.க.,விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு காரணமாக மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இதுபற்றி அறிந்ததும் குஷ்பு ஆவேசமானார். அவர் கூறியதாவது:-

கற்பு பற்றி முன்பு நான் சொன்ன விதத்தை -அர்த் தத்தை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள இயலாத அவசர புத்தி அவர்களுக்கு. எனவே தான் புரியாமல் என்னை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

இப்போதும் அப்படித் தான் தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினை எவ்வளவோ உள்ளது. அதை எல்லாம் விட்டு, விட்டு குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பது மட்டும் தான் பிரச்சினை என்பது போல பா.ம.க. எம்.எல்.ஏ. சட்டசபையில் பேசி இருக்கிறார்.

பா.ம.க. எம்.எல்.ஏ.க்கு வேறு வேலை எதுவும் இல்லையா? அதனால்தான் என்னைப்பற்றி பிரச்சினையை கிளப்புகிறார். அவருக்கு வேறு பிரச்சினைகள் பற்றி கவலை இல்லை என்றுதானே அர்த்தம்.

பெரியார் படத்தைப் பொறுத்தவரை நான் மணியம்மை வேடத்தில் நடிக்கத்தான் போகிறேன். அதற்கு தயாராகி வருகிறேன். எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் சரி, நான் நடித்தே தீருவேன். ஒரு போது பின்வாங்க மாட்டேன்.

நான் தமிழ்நாட்டின் மருமகள். எனவே மணியம்மை வேடத்தில் நடிக்க எனக்கு முழு உரிமை இருக்கிறது. இந்த வேடத்தில் நடிப்பதன் மூலம் எனக்குத் தமிழ்நாட்டில் ஒரு அங்கீகாரம் கிடைத்து இருப்பதாக நான் நினைக்கி றேன்.

நடிப்புக்காக நான் பல பரிசுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் மணியம்மை வேடத்தில் நடிப்பதை பெரிய பரிசாக கருதி மகிழ்கிறேன்.

எந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். யார் எதிர்த்தாலும் சரி மணி யம்மையாக நிச்சயம் நான் நடித்தே தீருவேன். இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.

சர்ச்சைகளை கிளப்பி விடு வதன் மூலம் படைப்பாளி களை கட்டிப் போட முடியாது. என் தேர்வை பிரச்சினை ஆக்குவது தேவையற்றது. எந்த ஒரு கேரக்டரிலும் நடிப்பையும் திறமையையும் தான் பார்க்க வேண்டும்.

ஒரு பெரிய தலைவர் வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பது இதுதான் முதல் தடவை. இதற்காக நான் நிறைய "ஹோம்-ஒர்க்'' செய்துள்ளேன். அக்டோபர் மாதம் தொடங்கும் சூட்டிங்கை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு எதிர்ப்பு வருவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களுக்கு பதில் சொல்லி இனி என் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.

அவர்கள் என்ன பேச ஆசைப்படுகிறார்களோ பேசி விட்டுப்போகட்டும் நான் மணியம்மை கேரக்டரில் என் முழு கவனத்தையும் செலுத்தப் போகிறேன்.

மணியம்மை வேடத்துக்கு நான் 100 சதவீதம் பொருத்த மாக இருப்பதாக சத்ய ராஜ×ம், டைரக்டர் ஞான ராஜசேகரனும் தெளிவுபட கூறி விட்டனர். எனவே எதிர்ப்பு வருகிறது என்பதற் காக நான் பயந்து ஓடி விட மாட்டேன். மேலும் நான் கோழை அல்ல. மூலையில் முடங்கி அழ மாட்டேன்.

ஒவ்வொரு சமயமும் என்னை பிரச்சினைக்குள் சிக்க வைக்கிறார்கள். அவை ஒவ்வொன்றையும் நான் துணிச்சலுடன் எதிர் கொள்கிறேன். இது என்னை முன்பை விட வலுவாக்கு கிறது.

கடந்த ஆண்டு (2005) செப்டம்பர் 24-ந் தேதி நான் சொன்ன கருத்துக்காக பிரச்சினை உருவானது. இப்போது ஓராண்டு ஆகி விட்டது. இந்த ஓராண்டு நிறைவை கொண்டாட திட்டமிட்டுள்ளேன்.

எனக்கு இப்போது ஏற்பட்டி ருக்கும் பிரச்சினையை நானே எதிர்கொள்வேன். டைரக்டர் அனுமதித்தால் மணி யம்மை கதாபாத்திரத்தில் சொந்த குரலில்பேசவும் விரும்புகிறேன்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

சென்னையில் இன்று நடந்த ஒரு மருத்துவமனை தொடக்க விழாவில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரியார் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அதில் நடிப்பேன். பின் வாங்க மாட்டேன். நடித்தே தீருவேன். யார் என்ன பேசினாலும் எனக்கு கவலை இல்லை. எந்த மிரட்டலுக்கும் பயப் பட மாட்டேன். தற்போது வெளி நாடு செல்கிறேன். 10 நாட்கள் கழித்து திரும்புவேன்.

இவ்வாறு குஷ்பு கூறினார்.
விடுப்பு : Viduppu.com
31 Aug 2006

சனி, செப்டம்பர் 02, 2006

இது புலிகளின் ஹெலி, இதனால் சிங்களத்துக்கு கலி.

"இந்தப்படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?"

ஹீ....ஹீ.......அது ஒன்னுமில்லீங்க... "அனிமேற்" படங்களைப்பார்த்து, பயந்து எதிர்பதிவுகள் போட்ட நண்பர்களை சும்மாங்காட்டியும் பயமுறுத்த.

"உட்டாலக்காடி கிரிகிரி, சைதாப்பேட்டை வடகறி"

"பனமரத்தில வவ்வாலு, ஒளிஞ்சு நிங்கிறான் கோவாலு"

"இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?"

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2006

இது விடுதலைப்புலிகளின் விமானமா?


விடுதலைப்புலிகளின் விமானம் என மெயிலில் வந்த படமாம். கொஞ்சம் பாத்துச்சொல்லுங்கப்பா?
நன்றி:-யாழ்.கொம்

ஞாயிறு, ஆகஸ்ட் 20, 2006

சிங்களத்தின் பயனம் எதை நோக்கியது?


சிங்கள ஆட்சியாளரால் சிங்களம் எதை நோக்கி செல்கிறது?
நன்றி:-யாழ்.கொம்

வெள்ளி, ஆகஸ்ட் 18, 2006

செஞ்சோலை பிஞ்சுகளிற்காக ஒரு புதிய பாடல்.

முல்லைத்தீவில் விமாண குண்டுவீச்சில் சிதறிய, மாணவர்களுக்காக இயற்றப்பட்ட புதிய பாடலை கேட்க இங்கேசெல்லவும்.
http://www.pathivu.com/files/song/solai_malarhal.smil

வெள்ளி, ஆகஸ்ட் 04, 2006

புத்தரின் உடலில் இருந்து ஒளி தெரிகிறது.

புத்தரின் உண்மையான `ஒளி'

பிள்ளையார் விக்கிரகங்கள் பால் குடித்ததாக ஒரு தசாப்தகாலத்துக்கு முன்னர் வெளியான செய்திகளை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். உலகம் பூராவும் அடிபட்ட அச்செய்திகளைக் கேள்விப்பட்டு பின்னர் தங்கள் வீடுகளில் உள்ள பிள்ளையார் விக்கிரகங்களுக்கு பால் வைத்துப் பார்த்தவர்கள் ஏராளம். அன்று பிள்ளையார் பால் குடித்தாரோ இல்லையோ இந்துக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது உண்மைதான்.
அதைப்போன்றே இப்போது இலங்கையில் புத்தர் சிலைகளில் இருந்து ஒளிக்கதிர்கள் வெளிவந்து கொண்டிருப்பதாகச் செய்தி பரவியிருக்கிறது. தலைநகர் கொழும்பிலும் புறநகர்ப்பகுதிகளிலும் தென்மாகாணத்தின் சில பகுதிகளிலும் புத்தர் சிலைகளை நோக்கி மக்கள் படையெடுத்திருப்பதை மாலை வேளைகளில் காணக்கூடியதாக இருக்கிறது. சிலைகளின் மார்புப் பகுதியில் இருந்து ஒளிக்கதிர்கள் வந்துகொண்டிருப்பதைக் கண்டதாகக் கூறியபலர் குறித்து பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஆர்ப்பரிக்கும் மக்கள் மத்தியில் காணப்படும் பௌத்த பிக்குமார்களில் பலரும் ஒளிக்கதிர்கள் வெளிவருவதாகக் கூறப்படுவதை உறுதிசெய்யவோ அல்லது நிராகரிக்கவோ முடியாதவர்களாக தாங்கள் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்கள். பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரம் தொடர்பில் சர்ச்சை ஏதாவது மூளுவதாக இருந்தால் அது ஒளிக்கதிர்கள் மாயத்தோற்றமா அல்லது தெய்வீக அருநிகழ்வா என்பது பற்றியதாகவே இருக்கும்.

விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள் ஒளிக்கதிர் விவகாரத்தில் எந்தவிதமான தெய்வீக நிகழ்வுமே கிடையாது என்றும் அது வெறுமனே ஒரு மாயத் தோற்றமே என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். விஞ்ஞானப் பட்டதாரியான வண. பிட்டதுவ ஷ்ரீதம்ம தேரரும் இதைவெறும் ஏமாற்று என்றே வர்ணித்திருக்கிறார். மக்கள் இதனால் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்று அவர் எச்சரிக்கையும் செய்திருக்கிறார்.

ஒரு பொருளை குறிப்பிட்டளவு நேரத்துக்கு ஒருவர் உற்று நோக்கிக் கொண்டிருக்கும்போது அவர் அப்பொருளை உள்ளவாறாக காணமாட்டார். வேறுபட்ட ஒன்றாகவே அப்பொருள் அவருக்குத் தோன்றும். அதேபொருளை அவர் இன்னொருவருக்கு காண்பிக்கும்போது அந்நபரும் அதேமனநிலையில் நோக்குவாரேயானால், விளைவு ஒன்றாகவேயிருக்கும் என்பதே பௌதீகத்துறை பேராசிரியர்கள் சிலர் அளித்திருக்கும் விளக்கமாகும். குறிப்பிட்ட நிறங்களை ஒருவர் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போது கண்ணின் கலங்களின் தூண்டுதல் காரணமாக நீல நிற மாயத்தோற்றத் (ஓப்டிcஅல் இல்லுசிஒன்)தை அவர் காண்பதற்கான சாத்தியம் உண்டு என்றும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஒளிக்கதிர் விவகாரம் குறித்து சர்ச்சை எதையும் கிளப்புவதற்கு நாம் விரும்பவில்லை. ஆனால், நாடு மீண்டும் முற்று முழுதான போருக்குள் தள்ளப்பட்டு இருண்ட யுகத்திற்குள் பிரவேசிக்கக்கூடிய அபாயகரமான நிலைமை தோன்றியிருக்கும் இவ்வேளையில், புத்தர் சிலைகளில் இருந்து வெளிவருவதாகக் கூறப்படும் ஒளிக்கதிர்கள், புத்தர் உலகிற்குத் தந்த உண்மையான `ஒளி' குறித்து கருத்துப் பரிமாறுவதற்கு ஒரு வாய்ப்பை எமக்குத் தந்திருக்கிறது.

கௌதம புத்தர் அட்டணங்காலிட்டு அமர்ந்து சாந்தமே உருவாக தியானஞ் செய்வது போன்றமைந்த உருவச்சிலைகளின் தோற்றம் உள்மன அமைதியினதும் வெளி அமைதியினதும் குறியீடாகவே கருதப்படுகிறது. அமைதியின் இக்குறியீடு இலங்கையில் சர்வசாதாரணமாக எங்கும் காணப்படக் கூடியதாயிருக்கின்ற அதேவேளை, குறியீட்டுக்கு முற்றிலும் விரோதமான வகையிலேயே நாட்டு நிலைவரம் காணப்படுகின்றது.

பௌத்த மதம் எப்போதுமே சமாதானம் மற்றும் அகிம்சையுடன் சம்பந்தப்பட்டதாகவே இருந்துவந்திருக்கிறது. எந்த உயிரையும் கொல்லவோ அல்லது அதற்கு ஊறுவிளைவிக்கவோ கூடாது- சகல உயிர்களையும் காக்க வேண்டும் என்பதே பௌத்த மதத்தின் முதன்மைப் போதனையாகும். சமாதான வழிமுறைகளுக்குப் புறம்பாக தங்களின் இலக்குகளை அடைவதற்கு அவ்வப்போது பௌத்தர்கள் நாட்டம் காட்டியிருக்கிறார்கள் என்றபோதிலும், பௌத்தத்தின் பெயரில் உலகில் எந்தவொரு பெரிய யுத்தமும் நடத்தப்பட்டதாக வரலாறில்லை.

கௌதம புத்தர் அரசியல் குறித்தும் போர் மற்றும் சமாதானம் குறித்தும் தெளிவாகவே விளக்கமளித்திருக்கிறார். பௌத்த மதம் எந்தவிதமான வன்முறையையும் உயிரழிவையும் நியாயப்படுத்தியதில்லை. பௌத்த மதத்தின்படி நீதியான போர் என்று எதையுமே அழைக்க முடியாது. இன்று இலங்கையிலே புத்தபெருமானின் போதனைகளைப் பரப்புவதற்கென்றே வாழ்நாளை அர்ப்பணித்திருப்பதாகக் கூறித்திரியும் பௌத்த பிக்குமார்களில் பெரும்பான்மையானவர்கள் மீண்டும் போரைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டை இருளுக்குள் வழிநடத்திச் செல்வதற்கு கங்கணம் கட்டிநிற்கும் இத்துறவிகள், புத்தர் சிலைகளில் இருந்து ஒளிக்கதிர்கள் வெளிவந்துகொண்டிருப்பதாகக் கூறப்படும் இச்சந்தர்ப்பத்திலாவது புத்தரின் போதனையின் உண்மையான `ஒளியை' நாடுவது குறித்துச் சிந்திக்கமாட்டார்களா?


-தினக்குரல்

திங்கள், ஜூலை 24, 2006

இன்று ஆடி அமாவாசை அப்பா இல்லாதவர்கள் பிடிப்பதாம்.

ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வர்.

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்க முறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. யாழ்ப்பாணத்து மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்தில் தீர்த்தமாடுவார்கள். மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு மாமாங்கப் பிள்ளையார் கோவில் அமிர்தகழியில் தீர்த்தமாடுவர். திருகோணமலை வாழ் மக்களுக்கு கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர். ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது.

நன்றி>ஆடி அமாவாசை பற்றி வீக்பீடியா.

வெள்ளி, ஜூலை 21, 2006

சண்டையில் மண்டையை(பாவித்ததால்/பாவிக்காததால்)

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இத்தாலி வீரருடன் மோதல்: 3 போட்டிகளில் விளையாட ஜிடேனுக்கு தடை அத்துடன் அவருக்கு ரூ. 2.7 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

விசாரணைக்காக கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்துக்கு வியாழக்கிழமை வருகிறார் ஜிடேன்.

இத்தாலி வீரர் மார்கோ மெட்டராஸியை மார்பில் முட்டித் தள்ளியதற்காக பிரான்ஸ் அணியின் காப்டன் ஜினெடின் ஜிடேனுக்கு 3 ஆட்டங்களில் விளையாடத் தடை விதித்துள்ளது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு.

அத்துடன் அவருக்கு ரூ. 2.7 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜிடேன் அறிவித்துவிட்டதால், சம்மேளனத்தின் மனிதாபிமான மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுடன் சேர்ந்து 3 நாள்கள் பணியாற்றுமாறு ஜிடேனிடம் உறுதி வாங்கியுள்ளது ஒழுங்கு நடவடிக்கை குழு.

மெட்டராஸிக்கு தடை: ஜிடேன் ஆத்திரப்படும் வகையில் நடந்து கொண்டதற்காக, இத்தாலி வீரர் மெட்டராஸிக்கு 2 ஆட்டங்களில் விளையாடத் தடை விதித்துள்ளது ஒழுங்கு நடவடிக்கை குழு.

ரூ. 1.8 லட்சம் அபராதம் செலுத்தவும் மெட்டராஸிக்கு உத்தரவிட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் வியாழக்கிழமை தனது விளக்கத்தை ஜிடேன் அளித்தார். அடுத்த சிறிது நேரத்தில் கால்பந்து சம்மேளனம் தனது இணைய தளத்தில் இந்த முடிவை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் 90 நிமிஷம் விளக்கம் அளித்தார் 34 வயதாகும் ஜிடேன். சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 5 நபர் குழு அவரிடம் விசாரணை நடத்தியது.

பெர்லினில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் மெட்டராஸியை தலையால் முட்டி களத்தில் வீழ்த்தினார் ஜிடேன். இதையடுத்து, உடனடியாக சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இருந்தாலும் அவரே போட்டியின் சிறந்த வீரர் விருதைப் பெற்றார். அதுவும் பறிக்கப்படலாம் என்ற பேச்சு வலுத்திருந்தது. ஆனால் அவர் இனிமேல் விளையாடப்போவதில்லை என்பதால், கருணை காட்டி அபராதத்துடன் தண்டனையை முடித்துக் கொண்டது கால்பந்து சம்மேளனம்.

Lankasri Sports : Viduppu.com

திங்கள், ஜூலை 17, 2006

சிடானின் மண்டை பலமானதா?

சிடானின் மண்டை பலமானதா? பரீட்ட்சித்துப்பார்க்க நூறு வழிகள். பரீட்சித்துப்பார்க விருப்புவர்கள் தலைப்பை சொடுக்கவும்.
உரல்:- http://www.youtube.com/watch?v=yUjFRKWk6gQ&feature=Views&page=1&t=t&f=b

வியாழன், ஜூலை 13, 2006

ஸிடேனை ஆத்திரமூட்டியதாக ஒப்புக்கொண்டார் மேட்டராசி.




உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணித் தலைவர் ஸினடின் ஸிடேனை அவமானப்படுத்தும் வகையில் திட்டியது உண்மைதான் என்று இத்தாலி வீரர் மேட்டராசி ஒப்புக்கொண்டுள்ளார்.

இறுதி ஆட்டத்தின் போது மேட்டராசியின் மார்பின் மீது ஸிடேன் தலையால் முட்டிய சம்பவம் கால்பந்து உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த செயலுக்காக ஸிடேனுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ஸிடேனை ஆத்திரப்படுத்தும் வகையில் தீவிரவாதி என்று திட்டியதாகவும் அவரது தாய் குறித்து இழிவாக பேசியதாகவும் செய்தி வெளியானது. இதை மேட்டராசி மறுத்துள்ளார்.

இது குறித்து இத்தாலி பத்திரிகைக்கு அவர் தெரிவித்ததாவது:

ஸிடேனை நான் அவமானப்படுத்தும் வகையில் திட்டியது உண்மைதான். தீவிரவாதி என்றோ அவரது தாயை இழிவுபடுத்தும் வகையிலோ எதுவும் கூறவில்லை.

எனக்குத் தெரிந்த ஒரே தீவிரவாதி எனது 10 மாத செல்ல மகள்தான். ஸிடேனின் தாய் பற்றியும் எதுவும் கூறவில்லை. என்னைப் பொறுத்தவரை தாய் என்பவர் தெய்வத்தை போன்றவராவார்.

நான் அவரது சட்டையை சிறிது நேரம் பிடித்திருந்தேன். படுகோபமாக திரும்பிய அவர், உனக்கு உண்மையிலேயே இந்த சட்டை வேண்டுமென்றால் பிறகு தருகிறேன் என்றார். நானும் பதிலுக்கு அவமானப்படுத்தும் வகையில் வார்த்தைகளைக் கூறினேன் என்றார்.

ஸிடேன் மேட்டராசி மோதல் சம்பவத்தின் போது பதிவாகியுள்ள காட்சியில் இருவரின் வாயசைப்பை வைத்து என்ன பேசினார்கள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் செய்தி நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஒருவரின் வாயசைப்பை வைத்தே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கணிக்கும் பிரபல "லிப் ரீடர்' ஜெவ் சிகா என்பவரை இதற்காக பி.பி.சி. செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்தது. இதன்மூலம் அவர் அப்படியே உச்சரிக்க, இத்தாலி மொழி பெயர்ப்பாளர் அதன் அர்த்தம் என்னவென்பதை தெரிவித்துள்ளார்.



"நீ ஒரு தீவிரவாதி மகன்' என்று மேட்டராசி திட்டியதாக இந்த முயற்சியில் தெரியவந்து. மற்றொரு குழுவினர் நடத்திய ஆய்வில் "நீ ஒரு பொய்யன். உனக்கும் உனது குடும்பத்துக்கு அசிங்கமான இரவுதான்' என்பது உட்பட தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸிடேன் விரைவில் உண்மையை வெளிப்படுத்துவார் என்று அவரது இணைப்பாளர் அலயன் கூறியுள்ள நிலையில் இந்தப் பிரச்சினை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளை, இந்த பிரச்சினை தொடர்பாக மார்கோ மேட்டராசியின் தந்தை கிஸிபி மேட்டராசி பி.பி.சி. க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: என்னுடைய மகன் அப்பாவி. இந்த விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவனே அவன்தான். இறுதி ஆட்டம் முடிந்ததும் எனது மகனுடன் பேசினேன். சில நிமிடங்கள் மட்டுமே பேசினான். அவனை சீண்டியதாக கூறினான். அவனுக்கு எதிராக அவர்களுக்கு ஏதோ பகைமை இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. கால்பந்து விளையாட்டிற்குள் நுழைந்த அவனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சோதனைகள்தான். ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் அவன் காயங்களுடன் திரும்பி வருவதே இதற்கு சாட்சி. சர்ச்சைகளில் சிக்க நான் விரும்பவில்லை. அதேசமயம் யாரையும் பலிகடா ஆக்குவதை விரும்பாமல் இதை கூறுகிறேன் என்று அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) ஒழுங்கு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

சர்வதேச போட்டிகளில் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஒருவர் வெளியேற்றப்படும் போது அந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கமாக விசாரணை நடத்தப்படும். தவறு செய்த வீரரை கண்டறிந்து தண்டனை வழங்கப்படும். இதேபோன்று ஸிடேனின் நடத்தை குறித்தும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த உள்ளது. இவர் மேட்டராசி நெஞ்சில் முட்டிய போது நிகழ்ந்த சம்பவங்களின் பின்னணி பற்றியும் விரிவாக ஆய்வு செய்யப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் மேட்டராசி மீது விசாரணை நடத்தப்படுமா என்பது பற்றி கருத்து தெரிவிக்க பிஃபா மறுத்துவிட்டது.
Lankasri Sports : jega

இத்தாலி வீரரை தாக்கியதற்கு ஷிடேன் மன்னிப்பு கேட்டார் அவரது தங்கையை விபச்சாரி என்று மெட்டராசி திட்டினார்.என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கூடுதல் நேரத்தின் போது பிரான்சு கேப்டன் ஷிடேன், இத்தாலின் மெட்ராசியை தலையால் முட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு நடுவர் ரெட்கார்டு கொடுத்து வெளி யேற்றினார்.

இதனால் பெனால்டி ஷூட்டின் போது ஷிடேன் இல்லாதது பிரான்சு அணிக்கு பெரும் இழப்பாக அமைந்தது. இதுவே பிரான்சு தோல்வி அடைய ஒரு காரணமாகவும் அமைந்து விட்டது.

இந்த சம்பவத்தால் தலைசிறந்த வீரர் என்ற பேசப்பட்ட ஷிடேன் மிகவும் அவனமாத்திற்கு ஆளாகி உள்ளார். எந்த ஒரு வீரரும் வேண்டுமென்றே எதிர் அணி வீரரை தாக்குவது கிடையாது. ஷீடேன் கோபப்படும் அளவுக்கு மெட்டராசி ஏதோ கடுமையான வார்த்தைகளால் திட்டி இருக்க வேண்டும் என பலரும் கருதுகின்றனர்.

மெட்டராசி, ஷிடேனை மோசமான தீவிரவாதி என்று திட்டியதால் தான் ஷிடேன் கோபம் அடைந்து இந்த தகாத செயலில் ஈடுபட்டார் என்ற தகவல்கள் வெளி வந்துள்ளன. எனினும் இது தொடர்பாக ஷிடேன் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் பிரேசிலில் உள்ள டி.வி. நிறுவனம் ஒன்று ஷிடேனின் தங்கையை மெட்டராசி தரக்குறைவாக பேசினார். ஆதாவது அவரது தங்கையை விபச்சாரி என்று மெட்டராசி திட்டினார்.

இதன் காரணமாகவே ஷிடேன் கோபத்தின் உச்சிக்கே சென்று மெட்டராசியை தாக்கி உள்ளார். என செய்திகள் வெளியிட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் மேலும் சுறுசுறுப்பை அடைந்துள்ளது. ஷிடேன் ஏன்ப அவ்வாறு நடந்து கொண்டார் என்று தெரியாத நிலையில் தனது அணியின் சக வீரர்களிடம் ஷிடேன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கோபத்தில் என்ன செய்வது என்பதை அறியாமல் செய்து விட்டேன். அணியின் வெற்றி வாய்ப்பை கெடுத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என சக வீரர்களிடமும் அவர் உடை மாற்றும் அறையில் கூறியுள்ளார்.
Lankasri Sports : Viduppu.com

ஞாயிறு, ஜூலை 09, 2006

சபரிமலை அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார்!

ஏன் அப்படி? கடவுளுக்கும் சாதாரண மனிதனைப் போல் கோபதாபம் இருக்கிறதா? அது கடவுள் இலக்கணத்துக்கு முரண் இல்லையா?

இந்துக் கடவுளர்க்கு கோபமும் வரும் தாபமும் வரும் மோகமும் வரும்! எல்லாம் வரும்!

அது சரி. அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்று யார் சொன்னது?

அட இது கூடத் தெரியாதா? சோதிடர் உன்னிக்கிருஷ்ண பணிக்கர் சொல்லுகிறார்!

யார் இந்த உன்னிக்கிருஷ்ண பணிக்கர்?

அவரைத் தெரியாதா? சோதிடர் உன்னிக்கிருஷ்ண பணிக்கர் என்ன சாதாரண ஆளா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடர்! அவர் சபரிமலை அய்யப்பன் சன்னிதியில் பிரஸ்னம் (சோழிகளை உருட்டி விட்டு கடவுளிடம் அருள் வாக்குக் கேட்பது) செய்து பார்த்து 19 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் அய்யப்பன் சிலையைத் தீண்டிவிட்டதாகவும் அதனால் அய்யப்பனுக்குத் தீட்டுப்பட்டு விட்டது என்கிறார்.

யார் அந்தப் பெண்? பெண் தொட்டு அய்யப்ப சாமிக்குத் தீட்டுப்பட்டுவிட்டதென்றால் அய்யப்பiனைவிட அந்தப் பெண்ணுக்கு அதிக சக்தி இருக்கிறது என்றல்லவா பொருள்?

சூனாமானக்காரன் போல் பேசாதே! நாத்தீகம் பேசினால் நாக்கு அழுகிச் சாவாய்! கடவுள் உன்னைச் சும்மா விடமாட்டார். அந்தப் பெண் ஜெயமாலா என்ற கன்னட நடிகை, அவர் 19 ஆண்டுகளுக்கு முன் அய்யப்பன் ஆலயத்துக்குச் சென்ற போது கூட்ட நெரிசல் நெட்டித் தள்ளியதால், கோயில் கருவறைக்குள் போய் விழுந்தாராம். அப்போதுதான் அந்த நடிகை அய்யப்பன் திருவுருவத்தைத் தொட்டுக் கும்பிட்டிருக்கிறார்!

கோயில் புூசாரியும் தொட்டுத்தானே கும்பிடுகிறார்? அவரும் மனிதர்தானே? ஜெயமாலா என்ற நடிகை மட்டும் ஏன் தொட்டுக் கும்பிடக்கூடாது? பெண் கும்பிடக்கூடாது என்று சொல்வது பெண் அடிமைத்தனத்துக்கு சாமரம் வீசுவது போல் இல்லையா?

விபரம் தெரியாமல் பேசாதே! ஜெயமாலா பெண். அய்யப்பன் சாமிக்குப் பெண் என்றால் பிடிக்காது! பெண்கள் கோயில் பக்கம் போகக் கூடாது!

ஏன் அப்படி? சிவபெருமான் தனது உடலில் பாதியைப் பெண்ணாக வைத்திருப்பதாக புராணிகர்கள் சொல்கிறார்களே? அதாவது அர்த்தநாரீசுவரர் வடிவில் இருக்கிறாராமே? அது புளுகா?

ஓய்! சிவன் வேறு அய்யப்பன் வேறு! அய்யப்பன் அரிக்கும் அரனுக்கும் பிறந்தவர். எனவே அவருக்குப் பெண்களைப் பிடிக்காது! பாலாழியைக் கடைந்ததும் அமுதம் எடுத்ததும் பாகவதத்தில் விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளது. மோகினி வடிவமெடுத்த விஷ்ணுவைக் கண்டதும், தன்னுடைய மனைவியான பார்வதி அருகில் இருப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் சிவன் காமத்துடன் நெருங்கினார். கடைசியில் அவருக்குச் சுக்கில வெளிப்பாடு உண்டானது.
அது விழுந்த இடங்கள் பொன்னும் வெள்ளியும் விளையும் பிரதேசங்களாக மாறின எனப் பாகவத புராணம் கூறுகின்றது.

அய்யப்பன் சாமிக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் தோசம் ஏற்பட்டுவிட்டது என்றால் இவ்வளவு நாளும் செய்த வழிபாடு, புூசை எல்லாம் சுத்த றயளவந இல்லையா?

ஆமாம்! தீட்டு நீங்க கோயிலை இனிப் புனிதப்படுத்த வேண்டும்.

ஆகம விதிகளுக்கு மாறாக தலித்துக்களைக் கோயிலுக்குள் அனுமதித்த போதும் சுவாமிக்குத் தீட்டுப்பட்டுவிட்டதென்றுதானே பக்தர்கள் புலம்பினார்கள்? கடவுளர் கோயிலை விட்டே ஓடிவிட்டதாகத்தானே பக்தர்கள் அலம்பினார்கள்?

ஓய்! தெரியாமல் பேசாதேயும். தீட்டுப் போகத்தானே பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்கிறோம்! கும்பாபிஷேகம் செய்வதால் நாய், கோழி, பஞ்சமர் நுழைவதால் தீட்டுப்பட்டுப் போன கோயில் புனிதம் அடைகிறது!

கன்னட நடிகை ஜெயமாலா போல இன்னொரு கிறித்தவ மத நடிகை இராஜ இராஜேஸ்வரி கோயிலுக்குள் நுழைந்து கும்பிட்டதால் புனிதம் கெட்டு விட்டதாமே?

ஆமாம்! கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நடிகை மீரா ஜாஸ்மின் கடந்த யுூன் 29 ஆம் நாள், கேரள மாநிலம் கண்ணு}ரை அடுத்த தளிபரம்பாவில், இந்துக்கள் மட்டுமே வழிபட அனுமதிக்கப்படும் இராஜ இராஜேஸ்வரி கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்டு காணிக்கை செலுத்தினார். இதையடுத்து தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்ட அவர் புனிதப்படுத்தும் சடங்குகளுக்காக கோயில் நிருவாகத்துக்கு ரூ. 10 ஆயிரம் அனுப்பி வைத்தார். கோயிலைப் புனிதப்படுத்துவதற்காக 10 தந்திரிகளைக் கொண்டு இரண்டு நாள்கள் 'சுத்தி திரவிய கலச" புூஜை நடத்தக் கோயில் நிருவாகம் முடிவு செய்தது. இதற்கு ரூ.25 ஆயிரம் ஆகும் எனக் கோயில் நிருவாகம் சொன்னதால் மேலும் ரூ.15 ஆயிரம் தர மீரா ஜாஸ்மின் ஒப்புக் கொண்டுள்ளார்.

சபரிமலையில் ஊழல் செய்வதற்காகவே தேவசம் சபையும், தந்திரியும் (புூசாரியும்) உன்னிகிருஷ்ண பணிக்கரும் சேர்ந்து தேவப்பிரஸ்னம் நடத்தியுள்ளனர் என்று பந்தளம் அரண்மனை வட்டாரம் குற்றம் சாட்டியுள்ளதே?

அதில் உண்மை இல்லை. வெறும் கட்டுக் கதை!

பந்தளம் அரசரின் வளர்ப்பு மகன்தான் அய்யப்பன் என்பது அய்தீகம். அய்யப்பன் வேண்டுகோள்படி சபரிமலையில் அய்யப்பன் கோயில் கட்டப்பட்டது என்பது வரலாறு.

கோயில் கருவறைக்குள் யாரும் நுழைய முடியாது. அதுவும் ஒரு பெண் நுழைந்து சுவாமி சிலையைத் தொட்டு வணங்குவது என்பது கற்பனையில் கூட நடக்க முடியாதது. எனவே உன்னிக்கிருஷ்ண பணிக்கரும் நடிகை ஜெயமாலாவும் கூட்டுச் சேர்ந்து எதற்காகவோ நாடகமாடுகிறார்கள் என்று கோயில் தந்திரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

உன்னிக்கிருஷ்ண பணிக்கரோ தந்திரிகள் ஆகம விதிப்படி நாளும் குளித்துவிட்டுத்தான் புூசை செய்ய வேண்டும். ஆனால் இப்போது சபரிமலை கோயிலில் உள்ள தந்திரியும் மேல் சாந்தியும் குளிப்பதில்லை. குளிக்காமலேயே புூசை செய்கிறார்கள். மீறிக் குளித்தாலும் குழாய்த் தண்ணீரில் குளிக்கிறார்கள், ஆசார நியமனம் ஒன்றும் பார்ப்பதில்லை, மகாருத்ர யாகம், சகஸ்ரகலசம் ஆகியவையும் முறையாக நடப்பதில்லை இதனால் சபரிமலையின் புனிதம் இவர்களால் கெட்டுவிட்டது. அய்யப்பன் பயங்கரக் கோபத்தில் இருக்கிறார் எனப் பதிலுக்கு உன்னிக்கிருஷ்ண பணிக்கர் குற்றம் சாட்டுகிறார்.

தந்திரியும் மேல் சாந்தியும் நம்புூதிரிப் பிராமணர்கள். உன்னிக்கிருஷ்ண பணிக்கர் அவரது பெயரில் காணப்படும் சாதியைச் சேர்ந்தவர். எனவே இந்தச் சண்டை பிராமணர் - பிராமணர் அல்லாதார் என்ற மட்டத்திலும் நடைபெறுகின்றது.

இதற்கிடையில் நடிகை ஜெயமாலா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக குருவாயுூர் சூரியன் நம்புூதிரி என்ற புூசாரி தெரிவித்துள்ளார்.

தான் பிரஸ்னம் நடத்திப் பார்த்த போது கோயிலுக்குள் பெண் வந்து போனதும் கூடவே கள் வாசனை இருப்பதும் தெரிந்ததாக உன்னிகிருஷ்ண பணிக்கர் கூறுகிறார்.

சபரிமலைக்கு யாத்திரை போகும் அய்யப்ப பக்தர்கள் 48 நாள் மச்சம், மாமிசம், கள், சாப்பிடக் கூடாது. காலில் செருப்பணியக் கூடாது, உறவினர் யாராவது இறந்தால் கூட பிணத்தைப் பார்த்து இறுதி மரியாதை செய்யப் போகக் கூடாது. ஆனால் பல பக்தர்கள் தலையில் இருமுடியும் இடுப்பில் மதுப் போத்தலோடுதான் மலை ஏறுகிறார்களாம்!

அய்யப்ப பக்தர்களில் பிரசித்தி பெற்றவர் நடிகர் நம்பியார். கடந்த 56 ஆண்டுகளாகச் சபரிமலைக்குப் போய் வருகிறார். ஆனால் அவர் ஒரு முடாக்குடிகார் என்பது பலருக்குத் தெரியாது. பெரும்பாலோர் ஆண்டில் 360 நாளும் பாபம் செய்து விட்டு 5 நாள் மட்டும் அதனைக் கழுவ நோன்பு இருக்கிறார்கள்.

அய்யப்பன் வழிபாடு தமிழனுக்குப் புதியது. தமிழ்நாட்டுக்குப் புதியது. அய்யப்பன் ஆகமத்தில் சொல்லப்படாத கடவுள். கடந்த 50 ஆண்டுகளாகத்தான் 'சாமியே சரணம் அய்யப்பா" கூச்சல் கேட்கிறது. அதற்கு முன் தமிழன் பழனி முருகனுக்குத்தான் காவடி எடுத்தான். தில்லை நடராசருக்குத்தான் நோன்பு இருந்தான். இந்த கேரள இறக்குமதியால் பக்தி போதையில் இருக்கும் தமிழர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது.

பணம் படைத்தவர்கள் பொழுதைப் போக்க, பழைய சேர நாட்டின் இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்க சபரிமலைச் செலவை ஒரு சாக்காக வைத்துள்ளார்கள். அதைப் பார்த்துவிட்டு ஏழையும் கடன்பட்டாவது மலை ஏறுகிறான். கார்த்திகை மார்கழியில் சபரிமலைக்குப் போக வாங்கும் கடன், வட்டியோடு குட்டி போட்டு அடுத்த கார்த்திகை மார்கழி வரையிலும் நீள்வதும் உண்டு.

மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் தான் கேட்டார் குன்றக்குடி முருகனுக்கும், பழனி தண்டாயுதபாணிக்கும் 'பவர் குறைந்துவிட்டதா? என்று.

எதிலும் புதியதைத் தேடும் தமிழன் மனம் புதிய புதிய கடவுளையும் தேடுகிறது. அவ்வாறு புதிய கடவுளைத் தேடியதன் விளைவே கேரள அய்யப்பன் புகழ் ஏறுவதற்கும் தமிழ்நாட்டுக் கடவுள்கள் மதிப்பு இறங்குவதற்கும் காரணமாயின. இன்று மலையாள ஆந்திரக் கடவுளர்க்குக் கொண்டாட்டம் தமிழ்நாட்டுக் கடவுளர்க்குத் திண்டாட்டம் என்றாகிவிட்டது.

மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருமுறை கேட்டார் 'குன்றக்குடி முருகனுக்கும், பழனி தண்டாயுதபாணிக்கும் 'பவர்" குறைந்துவிட்டதா?" என்று.

இன்று இந்தியாவில் உள்ள பணக்காரக் கடவுளான திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. ஏழுமலையானை வழிபட நாள் தோறும் 50,000 அடியார்கள் மலை ஏறுகிறார்கள். ஏழுமலையானுக்கு நாளும் 100 கோடி பெறுமதியான தங்கம், வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், நவரத்தினம், கோமேதகம் போன்ற விலை உயர்ந்த வைர ஆபரணங்களை அணிவித்துப் புதிய பட்டு ஆடையால் அலங்காரம் செய்கிறார்கள். ஒவ்வொன்றும் 60 கிலோ எடையுள்ள இலட்டுகள் ஏழுமலையானுக்கு ஒவ்வொரு நாளும் படைக்கப்பட்டு பின் அடியார்களுக்கு வழங்கப்படுகிறது.

ஏழுமலையானின் நிரந்தர வைப்பு நிதி 2,835 கோடியை எட்டியுள்ளதாம். கடந்த 2 ஆண்டுகளில் ரூ 500 கோடி அதிகரித்துள்ளது.

ஏழுமலையானின் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் ரூ. 600 கோடி. இதற்கான வருவாயில் ரூ. 230 கோடி நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி என்கிறது தேவஸ்தானம்.

தினந்தோறும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை வங்கியில் பணம் செலுத்தும் ஒரே நிறுவனம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மட்டும்தான் என்பது மனங்கொள்ளத்தக்கது.

திருப்பதி ஏழுமலையானோடு சபரிமலை அய்யப்பனை ஒப்பிட்டால் பின்னவர் 'ஏழை"தான். ஆண்டு வருமானம் 75 கோடி மட்டுமே. கேரள அரசு சபரிமலை அய்யப்பனை காசு காய்க்கும் மரமாகப் பார்க்கிறது.

சபரிமலையைச் சுற்றியுள்ள காடு அழிக்கப்பட்டு அதன் சூழல் மாசுபடுதப் பட்டுவிட்டது. அருகில் ஓடும் பம்பை நதி அசுத்தமாகிக் குளிப்பதற்குக் கூட உதவாமல் போய்விட்டது.

இந்த அய்யப்பசாமி வேடம் பூண்டால் 48 நாள் நல்ல உணவு கிடைக்கும் வீட்டில் யாரும் திட்ட மாட்டார்கள், நல்ல மரியாதை, அதுவும் சாமி.. சாமி.. என்று. இந்தச் சலுகைகளால் பொறுப்பற்ற குடும்பத் தலைவர்களும், ஊர் சுற்றும் இளைஞர்களும் அய்யப்பன் சாமி ஆனார்கள். கூடுதல் மரியாதையுடன் மூக்குப் பிடிக்க உணவும் கிடைக்கிறது.

அய்யப்பன் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து 40 கிமீ து}ரம் செங்குத்தான மலைப் பாதையில் நடக்க வேண்டும். வயதானோர், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாசக் கோளாறால் அவதிப்படுவோர் பெரிதும் சிரமப் படுகின்றனர்.

இவர்கள் நலன்கருதி திருவாங்கூர் தேவஸ்வம் சபை பம்பை - நீலிமலையேற்றம் அப்பாச்சி மேடு - சபரிமலை நடைபாதயில் 18 இடங்களில் உயிர்க்காற்று சுவாச மையங்களை அமைத்துள்ளது.

இது மட்டுமல்ல, உயிர் காக்கும் மருந்துகள், இதய நோய் மருத்துவர்கள் எல்லாம் தயாராக வைக்கப்பட்டிருக்கிறதாம். அய்யப்பனால் எதுவும் ஆகாது துளிகூடப் பயனில்லை என்பது இதிலிருந்து தெரியவில்லையா?

காடு, மலை தாண்டி தன்னைப் பார்க்க வரும் தனது பக்தர்களையாவது அய்யப்பன் காக்க வேண்டாமா?

அய்யப்பன் கதை அறிவுக்குப் பொருந்தாதது, அருவருப்பானது, எந்தப் பயனையும் தராதது என்பதால் இந்த அய்யப்பன் வழிபாடு தேவைதானா? கடவுள் பக்தி எப்படிக் குடும்பத்தைச் சீரழிக்கும் என்பதை சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் நன்றாய்க் காட்டி இருக்கிறார்கள். அதைப் பார்த்தாவது தமிழன் திருந்தக் கூடாதா?

நன்றி>தினமணி.

செவ்வாய், ஜூலை 04, 2006

பூமியை நெருங்கி வரும் ராட்சத விண்கல்.

விண்வெளியில் சுற்றும் ராட்சத விண்கல் இன்று பூமியை நெருங்கி வருகிறது. விண்வெளியில் ஏராள மான சிறு சிறு கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் ஒரு சில கோளில் இருந்து உடைந்து பிரிந்த விண்கல் அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்த விலகி பூமியை நெருங்கி வருகிறது.

கடந்த 2004-ம் ஆண்டு இந்த ராட்சத விண்கல்லை கண்டு பிடித்த விஞ்ஞானிகள் அதற்கு `எக்ஸ் பி.14' என்று பெயரிட்டுள்ளனர். 900 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கல் இன்று இது வரை இல்லாத அளவுக்கு பூமியை நெருங்கி வருகிறது. ஆனால் பூமிக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லை. பூமியை அது தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் இந்த ஆண்டு இறுதியில் பூமியில் விழுந்து தாக்கும் என்று முன்பு விஞ்ஞானிகள் கூறி இருந்தனர்.

இன்று இந்த விண்கல் வட அமெரிக்காவுக்கு மேலே பூமியில் இருந்து 2 லட்சத்து 68 ஆயிரம் மைல் உயரத்தில் இருக்கும்.

நன்றி>யாழ்.கொம்.

திங்கள், ஜூலை 03, 2006

ஓ சி எப்படி வந்தது? ஓசியாகப்பார்க்க.

சும்மா கிடைத்ததை ஓசியில் கிடைத்ததாகச் சொல்வது வழக்கம். இது எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் நம் நாடு இருந்த போது அவர்கள் அனுப்பும் தபால்களில் o.c.s என்ற முத்திரைக் குத்தப்பட்டிருக்கும். இதன் அர்த்தம் on company service என்பதாகும்.

o.c.s முத்திரை குத்திய தபால்கள் ஸ்டாம்பு ஒட்டாமலே எங்கும் சென்றதால் ஓசியில் போகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் எல்லாமே ஓசியாகிவிட்டது.

ம.ஞானபிரகாஷ்,

நன்றி/யாழ்.கொம்

பண்பில்லாத நகரம் பாம்பே.

அடிப்படை பண்பில்லா நகரம் என்றால் அது மும்பை தானாம். ஆம், உலக நாடுகளில் 35 நகரங்களின் வரிசையில் இதற்காக "முதல் பரிசை' பெற்றுள்ளது.

சாலையில் போகும் போது கண் தெரியாத ஒருவர் போகிறார், நமக்கென்ன என்று போகாமல், அவரை சாலையின் குறுக்கே கடக்க உதவுவது, ஒருவர் காயம் பட்டால், குறைந்த பட்சம் பைக்கை அப்புறப்படுத்துவது, இதெல்லாம் தான் பண்பு. மனிதாபிமானம், கருணை, இரக்கம் எல்லாம் சேர்ந்தது தானே பண்பு. அடிப்படை பண்புகள் என்று சில உண்டு. அந்த பண்புகள் இருந்தால் தான் மனிதன். அப்படிப்பட்ட பண்பு மிக்க மனிதர்கள் அதிகம் இல்லாத நகரங்கள் என்று 35 நகரங்களை தொகுத்துள்ளது ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ். மிக மோசமான விஷயங்களுக்காக தரப்படும் "ராஸ்ப்பெரி விருது' இப்போது, பண்பில்லா நகரங்களுக்கு தந்துள்ளது இந்த இதழ்.

இதற்காக பல நாடுகளில் உள்ள 35 நகரங்கள், சர்வேக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆபீஸ், ஓட்டல், மருத்துவமனை போன்ற இடங்களில் தன் பின்னால் ஒருவர் வருகிறார் என்றவுடன், கதவை பிடித்துக்கொண்டு வழிவிடுவது, பேப்பர் கட்டு, பைல்கள் விழுந்துவிட்டால், அவற்றை சேகரிக்க உதவுவது, எந்த பொருள் வாங்கினாலும், பில் பணம் செலுத்தியவுடன் நன்றி சொல்வது என்று மூன்று முக்கிய பண்புகளை வைத்து சர்வே செய்யப்பட்டது.

மும்பையில் அப்படிப்பட்ட மூன்று பண்புகளிலும் பல இடங்களிலும் பல தரப்பினரும் மிக குறைவாகவே மதிப்பெண் வாங்கியுள்ளனர். எங்கும் இப்படிப்பட்ட அடிப்படை பண்பு காணப்படவில்லை என்கிறார்கள் இந்த சர்வே எடுத்தவர்கள்.

ஆனாலும், ஐரோப்பிய கூட்டமைப்பில் சேர்ந்து ஏழு மாதங்களே ஆன ருமேனியா நாட்டின் தலைநகர் புகாரெஸ்ட் நகரை விட, மிக மோசமாக இல்லை என்பது தான் மும்பைக்கு கிடைத்த ஆறுதல்.

மும்பையை போலவே, லண்டன், பாரீஸ் மக்களுக்கும் பண் பில்லை என்பதையும் சர்வே எடுத்தவர்கள் கண்டுபிடித்து விமர்சித் துள்ளனர். பதினெட்டு ஐரோப்பிய நகரங்களில் எடுக்கப்பட்ட சர்வேயில், இரண்டு நகரங்களுமே பத்தாவது இடத்தை பகிர்ந்து கொண் டுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரம், மிகுந்த பெருமிதத்தை அடைந்துள்ள நகரம். ஆம், அங்கு பண்பு, கருணை என்பது 80 சதவீதம் மக்களிடம் நிறைந்துள்ளது என்று சர்வே கூறுகிறது. கடந்த 2001ம் ஆண்டு நடந்த பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னர், மக்களிடம் அக்கறை, பரிவு, கருணை எல்லாம் அதிகரித்து விட்டது என்கின்றனர் சர்வே நிபுணர்கள்.

இதையடுத்து, சுவிட்சர்லாந்தின் ஜூரிச், கனடாவின் டொரன்டோ, பிரேசிலின் சுவா பாலோ, ஜெர்மனியின் பெர்லின் ஆகிய நகரங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thanks:Dinamalar..

வியாழன், ஜூன் 08, 2006

சொந்தம் ஆகிவிட்ட காதல்.




உன் பார்வை எனக்கு கிடைத்துவிட
என் பாதையை நான் மறந்து விட்டேன்!
அவ்வழி நீபோவது கண்டால்
இவ்வழி நான் ஏங்குவது உண்டு!
சேர்ந்து நீ உன் அன்னனுடன் போகையில்
சோர்ந்து இருப்பேன் அன்று முழுதும்!
கடைக்கண் பார்வை கிடைத்திடவே
கடை வீதியில் காத்திருப்பேன்!
தூரத்தில் நீ வருதல் கண்டால்
ஓரத்தில் நான் பார்த்திருப்பேன்!
பார்வைதன்னும் கிடைத்து விட்டால்
பாரயே வெண்றவன் போலாவேன்!
இன்று கிடைத்தது உன் பார்வை
அன்று பெற்றேன் நான் ஜனித்த பலனை!
பார்த்திருந்தேன் நாளை விடியலுக்காக
போர்த்திருந்தேன் இரவுமுழுதும் போர்வைக்குள்ளே!
கடிதமொண்று தந்து விட்டாய்
படி எல்லாம் தடுமாறி நிலைமாறுதே!
படித்து விட்டேன் உன் கடிதத்தை
முடித்து விட்டாய் என் வாழ்கையை!
கொடுத்து விட்டேன் நீ அண்ணுக்கு எழுதியகடிதத்தை
கொழுந்து விட்டு எரியுதே என் நெஞ்சக்கணல்!
பொறுத்து விட்டேன் நீ
என் அண்ணி என்பதால்.

திங்கள், மார்ச் 27, 2006

அன்னியன் பாணியில் கலைஞர் கலக்கிறார்.

அன்னியனாக கலைஞர்.


ரெமோவாக கலைஞர்.


அட நம்ம அம்பியாக கலைஞர்.


நன்றி>யாழ்.கொம்

வியாழன், மார்ச் 23, 2006

கால நதி


காதலெனும் தீவினிலே
நான் ஓடமாய் காத்திருந்தேன்!
ஓடம் நான் ஓட்டிடவே
கடல் தன்னை கானவில்லை!
தண்ணீர் இல்லா ஓடமெதற்கு
காதல் இல்லா வாழ்வெதற்கு!
காத்திருந்தேன் தீவினிலே
உணை நான் பாத்திருந்தேன்!
காத்திருந்தும் நீ வரவில்லை
கடல் மட்டும் வந்து சேர்ந்தது!
வந்த கடல் கதை கூறி சென்றது
அது உன் கண்ணீரென்று சொன்னது!
கடல் அளவு கண்ணீர் வடித்திடவே
உனக்கு என்ன துன்பம் நேர்ந்துவிட்டது!
ஓடத்திலே ஓடிவந்தேன் உனைதேடி
ஓடி வந்த ஓடம் தன்னும் நிண்றுவிட்டது!
ஓடிய ஓடம் நின்றதேன்
உன் கண்ணீரும் உறைந்ததேன்!
உப்புப் பாறையில் நான்
துக்கப் பார்வையில் நீ!
தூள் தூளாகாதோ இப்பாறை
திறந்திடாதோ உன் சிறை.

வியாழன், மார்ச் 02, 2006

இந்திய இறைமைக்குள் புஷ் மூக்கை நுளைக்கிறாரா?

புஷ் மூக்கை நுளைப்பதை, தலைப்பை அழுத்திப்பார்க்கவும்.

திங்கள், பிப்ரவரி 20, 2006

கவிதைக் காதல்


காதல் என்பது இயற்கையானது
அது எல்லோருக்கும் சொந்தமானது!
எனது காதல் மாறுபட்டது
மனிதக்காதலில் இருந்து வேறுபட்டது!
என் காதலியின் இளமை மறைவதில்லை
எனக்கு அவளிடத்தில் அன்பு குறைவதில்லை!
எனது காதல் இலக்கணத்துக்கு அப்பாற்பட்டது
அவளோ இலக்கணத்துக்கு உட்பட்டவள்!
அன்று பலர் அவளுடன் காதல் புரிந்தனர்
இன்றும் பலர் அவளுடன் காதல் புரிகின்றனர்!
அவள் தேவர்குல தாசியுமல்ல
பூவுலக மாதவியுமல்ல!
அவளின் காதலில் முதன்மையானவன் கம்பன்
அவன் சரியான வம்பன்!
கண்ணதாசன் கூட காதலித்ததுண்டு
கம்பதாசன் கூட போட்டி போட்டதுண்டு!
பாரதி அவளுக்கொரு தாசன்
பாரதிதாசன் அவளுக்கொரு நேசன்!
வாலி போடுவார் அவளுக்கு வேலி
முத்துக்கள் பல கொடுத்தார், வைரமுத்து!
அவளே என்றும்
எனது பெரிய சொத்து!
அவளை வரையும்போது
சிலிர்க்குது எனது சித்து!
அவளே கவிதை நாயகி
எனது காதல் நாயகி.

ஞாயிறு, ஜனவரி 15, 2006

பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் என்றால் பொங்கவேண்டும் இன்பம்
முன்பு என்றால் எவ்வளவு பொங்கல் உண்பம்!
இன்று பொங்கல் வருவதும் போவது தெரியாது
புலம்பெயர் வாழ்வில் இது ஒரு துனபம்!
இருப்பினும் பொங்குகின்றோம மின்சார அடுப்பிலே
வாழ்த்துகிறோம் தொலைபேசி தொடுப்பிலே!
பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
நானும் கூறுகிறேன் கணணி திரையிலே!
விரைவில் மீழும் தாயகம்
தயங்காமல் பொங்குவோம் தைலைவாசலிலே.

ஞாயிறு, ஜனவரி 01, 2006

புத்தம் புதிய ஆண்டே! புத்தாண்டே!

புத்தம் புதிய ஆண்டே புத்தாண்டே
புதிதாய் இன்று பிறந்தாய்!
பூமியில் வாழும் மனிதர் நமக்கு
புதிதாய் என்ன கொண்டு வந்தாய்!
புழுதியில் வாழும் எமக்கு
புனிதம் கொண்டு வருவாயோ!
துன்பம் நித்தம் சுமந்த எமக்கு
இன்பம் கொண்டு வருவாயோ!
அடிமை வாழ்வை உடைத்து
விடுதலை கொண்டு வருவாயோ!
நித்தம் நித்தம் செத்து மடிந்தவர் வாழ்வில்
நிம்மதி கொண்டுவா! நிம்மதி கொண்டு வா.
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us