வெள்ளி, ஜூன் 29, 2007

இணையத்தில் சிவாஜி திரைப்படம் - பலகோடி நஸ்டம்!!!

இணையத்தில் சிவாஜி திரைப்படம் - பலகோடி நஸ்டம் திரைப்பட இணையத்தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

35 கோடி பெறுமதியில் 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமான சிவாஜி த போஸ். இப்படத்தை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது சிறப்பம்சமாகும். இப்படத்தில் சுமன், விவேக் முக்கிய பாத்திரங்களிலும் நயன்தாரா, மணிவண்ணன், மற்றும் இயக்குநர் ஷங்கரும் இத்திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்திரைப்படத்தின் தெலுங்கு மொழிப் பதிப்பும் தமிழ்ப் பதிப்பும் நாளில் திரையிடப்பட இருக்கிறது. பல்வேறுபட்ட காலதாமத்திற்குப் பின்னர் உலகளாவிய ரீதியாக 15 ஜூன் 2007 திரையரையங்குகளில் வெளிவிடப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை பல்வேறு பட்ட இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் இணையத்தில் உலா வர ஆரம்பித்து விட்டது. இதனால் திரைப்படம் வாங்கியோர் முதல் அனைவருக்கும் பல நஸ்டங்கள் ஏற்படவாய்ப்புகள் உள்ளன. இருந்தும் இன்றைய சூழ்ந்நிலையில் மக்கள் இணையத்திலே கூடிய நேரத்தை செலவுசெய்கின்றவர்களாக இருப்பதால் இணையத்திலே அவர்களுக்காக திரைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். அந்த திரைப்படம் வெளியிட்டுள்ள இணைப்புக்கள் வருமாறு.

http://www.freshtamil.net/

http://www.kathalworld/

http://www.tamildivx.net/

http://www.tubetamil.com/

http://www.tamiltorrents.net/

http://www.htn-news/

http://www.viduppu.net/index.php?subaction...amp;ucat=1&இல் இருந்து.........

செவ்வாய், ஜூன் 26, 2007

ஆபாச ஆடை - குற்றவாளி விடுதலை?

பிரித்தானியாவில்... 10 வயது சிறுமியை பூங்கா ஒன்றில் பாலியல் வல்லுறவு கொண்ட 24 வயது வாலிபர் இன்னும் சில மாதங்களில் விடுதலை ஆகவுள்ளார். (லண்டனில கூட பூங்காக்கள் தான் பாலியல் களியாட்ட இடங்கள். தமிழர் வாரிசுகளும் இதில் குறை வைக்கிறதில்ல). அவரின் விடுதலைக்கான காரணம்.. குறித்த சிறுமி ஆபாசமாக ஆடை அணிந்திருந்தது தவறான நடவடிக்கைக்கான தூண்டுதல் என்ற வகையில் அமைந்துள்ளது.!

பிரித்தானியா உட்பட மேற்குலகில் இருந்து உலகம் பூராவும் பெண்கள் ஆபாசமாக ஆடை அணிவது நாகரிகமாக வளர்க்கப்பட்டு வருவது இந்தத் தீர்ப்பின் மூலம் பெண்கள் மீதான ஆண்களின் வன்முறைகளை நியாயப்படுத்த வாய்ப்பை உண்டு பண்ணியுள்ளது..! இது ஒரு ஆபத்தான சூழலை பெண்களுக்கு உருவாக்கும். அவர்கள் எங்க சிந்திக்கப்ப் போகிறார்கள்...! அதுதானே பாலியல் சுதந்திரம் வேணும் என்று பிளிறிகிறார்கள்..! இப்படித் திரிஞ்சே தொலைஞ்சு போகட்டும்.

Law chief to probe 'lenient' rape sentence

The Attorney General is considering appealing against a sentence given to a window cleaner for raping a 10-year-old girl.
Keith Fenn, 24, was given concurrent two-year and 18-month jail sentences at Oxford Crown Court by Judge Julian Hall for two attacks on the girl in a park.
Because of the amount of time he has already spent in prison awaiting sentence, Fenn could be free in a few months time.

The sentence was condemned by one MP s "pathetically lenient".
The Attorney General Lord Goldsmith acted after Tory backbencher Mike Penning wrote to him protesting about Fenn's treatment.
A spokesman for Lord Goldsmith said: "He has asked for the papers from the CPS so he can consider whether or not to refer the sentence to the Court of Appeal as unduly lenient."

A man who raped a ten-year-old girl will be free in four months after the judge said the victim "dressed provocatively".
Keith Fenn, 25, admitted having sex with the girl, who claimed to be 16, twice in a park after meeting her in the street in Henley-on-Thames, Oxfordshire.
Judge Julian Hall – who a few months ago told a paedophile to buy his six-year- old victim a bicycle – said the girl dressed in a frilly bra and thong.

"Did she look ten? Certainly not," he added.
The victim, who had been in care since the age of four, regularly wore make-up, strappy tops and jeans, Oxford Crown Court heard.
There is no excuse for having sex with a ten-yearold, no matter how she dresses
Judge Hall said: "Here is a very young woman who is taken to the park. Within three-quarters of an hour of meeting a 24-year-old man, they have sex."
Fenn, of Oxford, said finding out her age was "a shock".
He was sentenced to two years but will be free soon, after spending eight months in custody.

He was placed on the sex offenders' register for ten years.
In law, a girl under 13 cannot consent to sex.
The NSPCC said: "There is no excuse for having sex with a ten-yearold, no matter how she dresses."

http://www.metro.co.uk/news/article.html?in_article_id=54415&in_page_id=3

தொடர்பு பட்ட செய்திகள்.

Children's charities have reacted with anger after a window cleaner who raped a girl of 10 was jailed for two years.

Keith Fenn, 24, will be free in four months after a judge said the girl, who was attacked in Henley-on-Thames, Oxfordshire, had appeared older.
The charity Kidscape accused Judge Julian Hall of "trying to find excuses" and said a child must never be blamed.

Attorney General Lord Goldsmith is to decide whether the sentence should be appealed against as "unduly lenient".

Moral dilemma
Oxford Crown Court heard that Fenn raped the girl in a park on 14 October, before an accomplice, Darren Wright, 34, took her home and sexually assaulted her.
Judge Hall said in sentencing he faced a moral dilemma as the fact they had sex within 45 minutes of meeting was an absolute crime.

But he said the girl had dressed provocatively and looked as though she was 16.
Lawyers for the defendants stressed that the sex had been consensual, and was only termed 'rape' because of the framework of law.

They said the judge stated that doctors who examined the girl believed she was in her mid-teens and she was treated by most people as older than her actual age.
The judge gave Fenn concurrent two-year and 18-month sentences, but he will be free in eight weeks after serving eight months in prison awaiting sentence.
Wright is already free as Judge Hall had already given him a nine-month sentence for inciting the girl to perform a sex act.

'Back to the 1950s'
Dr Michele Elliott, director of Kidscape said the decision had left her "lost for words".
She said: "It takes us back to the 1950s when the victim was blamed if they were dressed provocatively.
"No-one in my opinion could mistake a 10-year-old child, even dressed up, for a 16-year-old. They are just trying very hard to find excuses.
"You can never blame a child victim for sexual abuse when excusing the abuser of any kind of abuse."

The NSPCC added: "There is no excuse for having sex with a 10-year-old, no matter how she dresses."

A spokesman for Lord Goldsmith said he had asked the Crown Prosecution Service to send him the papers on the case, and would consider whether or not to refer the sentence to the Court of Appeal as "unduly lenient".
He has 28 days to make a decision.
http://news.bbc.co.uk/1/hi/uk/6237480.stm
யாழ்.காம்மில் இருந்து.......

'பிளஸ் ஒன் டாக்டர்' பார்த்த பிரசவம்!!!


திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 15 வயதே ஆகும், 10வது வகுப்பு படித்து வரும் சிறுவன், தனது தந்தையின் மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் எழுப்பியுள்ளது. இந்த செயலுக்கு இந்திய டாக்டர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் காந்திமதி முருகேசன் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு டாக்டர்களாக முருகேசனும், அவரது மனைவி காந்திமதியும் உள்ளனர்.

மணப்பாறை பிரிவு இந்திய மருத்துவர் சங்கத்தின் கூட்டம் கடந்த 6ம் தேதி மணப்பாறையில் நடந்தது. அப்போது டாக்டர் முருகேசன் ஒரு வீடியோ படத்தை அங்கு திரையிட்டார். ஒரு பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது போன்ற காட்சி அதில் இடம் பெற்றிருந்தது.

இதில் என்ன விசேஷம் இருக்கிறது என்று டாக்டர்கள் கேட்டனர். அதற்கு முருகேசன், இருக்கிறது, இந்த அறுவைச் சிகிச்சையை செய்தது எனது 15 வயது மகன் திலீப் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முருகேசனின் செயலுக்கு டாக்டர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது மிகவும் தவறு என்று கூறினர். அதை மறுத்த முருகேசன், கின்னஸ் சாதனைக்காக இந்த அறுவைச் சிகிச்சையை எனது மகன் செய்தான். வெற்றிகரமாக இந்த அறுவைச் சிகிச்சை முடிந்துள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று எதிர் கேள்வி கேட்டார் முருகேசன்.

ஆனால் அங்குள்ள டாக்டர்களால் முருகேசனின் செயலை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சர்ச்சையில் சிக்கியுள்ள திலீப், பத்தாவது வகுப்பை முடித்து விட்டு மணப்பாறையில் உள்ள மான்போர்ட் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறான்.

முருகேசனின் செயலைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மணப்பாறை பிரிவு அவசரமாக கூடி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது. திருச்சியில் உள்ள இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அகில் இந்திய தலைமை அலுவலகத்திற்கும் இந்த தீர்மான நகலை அனுப்பியுள்ளனர்.

டாக்டர் முருகேசனின் செயல், ஒரு உயிருடன் விளையாடியதற்கு ஒப்பாகும். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று டாக்டர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் மோகன்தாஸ், முருகேசனின் செயலை கடுமையாக கண்டித்துள்ளார். அவரது டாக்டர் படிப்பை ரத்து செய்யும் வகையில் பரிந்துரை செய்ய முடியும். திருச்சி மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தின் அறிக்கை கிடைத்தவுடன் இதுகுறித்து தீர்மானிப்போம் என்றார்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் வச்சானி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட கோட்டாட்சியர் இந்த விசாரணையை நடத்தி ஆட்சித் தலைவருக்கு அறிக்கை கொடுப்பார். அதன் அடிப்படையில் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
http://thatstamil.oneindia.in/news/2007/06/21/doctors.html

'சிசேரியன்' சர்ச்சை: டாக்டர் தம்பதி கைது மகன் தலைமறைவு

ஜூன் 25, 2007

திருச்சி: கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவன் பிரசவம் பார்த்த சர்ச்சையில் சிக்கிய மணப்பாறை டாக்டர் முருகேசன் மற்றும் அவரது மனைவி டாக்டர் காந்திமதி ஆகியோரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 15 வயதே ஆகும் 11வது வகுப்பு படிக்கும் திலீபன் ராஜ் என்பவர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்ததாக அவரது தந்தை டாக்டர் முருகேசன் சமீபத்தில் டாக்டர்கள் சங்க கூட்டத்தில் அறிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கின்னஸ் சாதனைக்காக இந்த பிரசவத்தை திலீபன் ராஜ் பார்த்ததாக அவரது தந்தை கூறியது மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது. சிறுவனை விட்டுப் பிரசவம் பார்க்க வைத்த டாக்டர் தம்பதியை கைது செய்ய வேண்டும், அவர்கள் டாக்டர் தொழில் பார்க்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் வச்சானி விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆர்.டி.ஓ ரமணீதரன் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு விசாரணையில் இறங்கியது.

கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் டாக்டர் தம்பதி, திலீபன் ராஜ், பிரசவத்திற்கு வந்த பெண் நீலா, மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

இதுதவிர முருகேசனின் மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த பிரசவங்கள், சிசேரியன் அறுவைச் சிகிச்சை குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் சேகரித்தனர்.

பிரசவம் செய்து கொண்ட பெண்களிடமும் நேரில் போய் விசாரணை நடத்தப்பட்டது. கிட்டதட்ட 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது.

விசாரணையின் முக்கிய திருப்பமாக, திலீபன்ராஜ் சிசேரியன் செய்து, குழந்தையை வெளியே எடுப்பது போன்ற விசிடியையும் அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். விசாரணை அறிக்கையையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.

அதன் அடிப்படையில், டாக்டர் தம்பதியைக் கைது செய்யுமாறு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை முருகேசனும், காந்திமதியும் கைது செய்யப்பட்டனர்.

உடனடியாக வளநாடு காவல் நிலையத்திற்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு வைத்து அவர்களிடம் மணப்பாறை போலீஸார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இன்று மாலைக்குள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையில் அதிகாரிகள் என்ன கூறியுள்ளனர் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் டாக்டர் தம்பதிகள் செய்த தவறு நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அதில் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

திலீபன் ராஜ் தலைமறைவு

இதற்கிடையே, டாக்டர் தம்பதியின் மகனும், சிசேரியன் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளவருமான திலீபன் ராஜ் தலைமறைவாகி விட்டார். உறவினர்கள் யாருடைய வீட்டிலாவது அவர் பதுங்கியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2007/06/25/doctors.html

மகன் சாதனைக்காக சட்டத்தை மீறினாரா மருத்துவர்?
‘‘உயிர் என்றால் இளப்பமா?

திருச்சி மாவட்டம்

மணப்பாறையில் ‘மதி சர்ஜிகல் மற்றும் மகப் பேறு மருத்துவமனை’யை டாக்டர் முருகேசன் என்பவரும் அவரது மனைவி டாக்டர் காந்திமதியும் நடத்திவருகிறார்கள். இவர்களுக்கு திலீபன்ராஜ் என்ற ஒரே மகன். பத்தாம் வகுப்பு முடித்து தற்போது பதினோராம் வகுப்புக்குப் போயிருக்கும் திலீபன்ராஜை சாதனைக்காக(!) சிசேரியன் ஆபரேஷன் செய்ய வைத்திருக்கிறார் முருகேசன். அதை வீடியோவாகவும் எடுத்து கடந்த மாதம் 6-ம் தேதி மணப்பாறையில் நடந்த இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) கிளைக் கூட்டத்தில் சக4 டாக்டர்களுக்குப் போட்டுக் காண்பித்திருக்கிறார் டாக்டர் முருகேசன். அதைப் பார்த்து திகைத்துப்போன சக டாக்டர்கள், முருகேசனைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். இதையடுத்து இந்த விவகாரம் மருத்துவ உலகில் கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஐ.எம்.ஏ-வின் மணப்பாறை செயலாளர் டாக்டர் பிரசாத்திடம் பேசியபோது, ‘‘அன்று முருகேசன் அந்த சி.டி-யை போட்டுக் காட்டியதும் அதிர்ந்து போனோம். ‘நீங்கள் செய்திருப்பது மருத்துவத் துறைக்கே எதிரான செயல். டாக்டர்கள் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமா இது..?’ என்று அவரைக் கண்டித்தோம். அவரோ, ‘உங்களால் என் மகனின் சாதனையை ஜீரணிக்க முடிய வில்லை. உங்கள் பிள்ளை இப்படி செய்திருந்தால் தலையில் வைத்து கொண்டாடுவீர்கள்...’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார். அதன் பிறகுதான் எங்கள் மாநிலத் தலைமைக்கு எழுத்துப்பூர்வமாக இது குறித்து புகார் அனுப்பினோம். இந்நிலையில், இந்த விவகாரம் மாவட்ட கலெக்டர் வரை போய் இப்போது ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது...’��
என்றார்.

டாக்டர் முருகேசன் தனது அக்கா பழனியம்மாளின் மகளான நீலாவுக்குதான் மகனை விட்டு சிசேரியன் ஆபரேஷன் செய்திருப்பதாக தெரிந்ததும் விராலிமலை சென்று நீலாவை சந்தித்துப்பேசினோம்.

‘‘அந்த ஆஸ்பத்திரியிலதான் என்னை பிரசவத்துக்கு சேர்த்தாங்க. ஆபரேஷன் பண்ணித்தான் குழந்தையை எடுத்தாங்க. யார் ஆபரேஷன் பண்ணினாங்கன்னு எனக்கு தெரியாது. நல்லபடியா குழந்தையை எடுத்து கொடுத்ததும் பணத்தை கட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டோம். ஆபரேஷனுக்கு பிறகு எனக்கு வேற எந்த தொல்லையும் இல்லை. எங்களுக்கு வேற எதுவும் தெரியாது’’ என்றார் அப்பாவியாக.

ஐ.எம்.ஏ-வின் மாநில செயலாள ரான டாக்டர் ரவிசங்கர் நம்மிடம், ‘‘விஷயம் எங்கள் கவனத்துக்கு வந்ததும் முருகேசனிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டோம். ‘தன் பையன் ஆபரேஷன் செய்ய வில்லையென்றும், தான் ஆபரேஷன் செய்தபோது அவன் உடனிருந்தான்’ என்றும் விளக்கமளித்தார். அதில் எங்களுக்கு திருப்தி இல்லை. அடுத்து அவரை நேரில் அழைத்து விசாரிக்க இருக்கிறோம். அவர் தவறு செய்திருப்பது உறுதியானாலும் எங்களால் அவரை சங்கத்திலிருந்து நீக்க மட்டுமே முடியும். மெடிக்கல் கவுன்சில்தான் அவருக்குத் தக்க தண்டனை வழங்க முடியும்’’ என்றார்.

வெகுசிரமத்துக்குப் பிறகு முருகேசனின் நெருங்கிய நண்பர் ஒருவர் மூலமாக அவரிடம் பேசினோம். ‘‘என் மகன் திலீபன்ராஜ் அறுவை சிகிச்சை செய்ததாக சொல்வது முற்றிலும் தவறானது. நான் அறுவை சிகிச்சையை செய்து கொண்டிருந்தபோது அவனும் ஆபரேஷன் தியேட்டரில்தான் இருந்தான். என் அருகில் நின்று ஆபரே ஷனை கவனித்துக் கொண்டிருந்தான். கிருமிகள் எதுவும் பரவி விடக்கூடாது என்பதால் அவன் கையிலும் உறை மாட்டியிருந்தான். நடந்தது இதுதான். இதைத் தவிர, என் பையன் ஆபரேஷன் செய்தான் என்பதும், அதை நான் வீடியோவாக போட்டு காட்டினேன் என்பதும் சுத்த பொய்’’ என தன் மீதான குற்றச்சாட்டை ஒரேடியாக மறுத்தார்.

சிறுவன் செய்த ஆபரேஷன் விஷயத்தால் கொதித்துப் போன மனித உரிமை ஆர்வலர்களான சில வக்கீல்கள், ‘முருகேசன் மீதும் அவர் மகன் மீதும் நடவ டிக்கை எடுக்கவேண்டும்’ என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஸ் வச்சானியிடம் புகார் கொடுத்தனர்.

அந்த வக்கீல்களில் ராஜசேகர், சுப்ரமணி ஆகிய இருவரிடம் பேசினோம். ‘‘இப்படி உயிரோட விளையாடறது பெரிய கொடுமை. மகன் சாதனை செய்யவேண்டுமென்பதற்காக இரண்டு உயிர்களோடு விளையாடிப் பார்த்திருக்கிறார் முருகேசன். கேட்டால் ‘என் அக்கா மகளுக்குத் தான் எனது பையன் ஆபரேஷன் செய்தான்’ என்கிறார். அவருடைய அக்கா மகள் உயிர் என்றால் இளப்பமா? ஆபரேஷன் ஃபெயிலியராகி அந்தப் பெண் இறந்து போயிருந்தால் என்ன செய்வார்? மருத்துவத் தொழிலையே இழிவுபடுத்தியிருக்கும் இவர், டாக்டராக நீடிக்கக்கூடாது. இவருடைய மருத்துவர் பட்டத்தை உடனடியாகப் பறிக்க வேண்டும். இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்...’’ என்று கோபப் பட்டனர்.

வழக்கறிஞர்களின் புகாரைத் தொடர்ந்து திருச்சி ஆர்.டி.ஓ&வான ரமணிதரன், மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் எழிலரசி, உதவி இயக்குநர் வீரபாண்டியன் ஆகியோர் கொண்ட ஒரு கமிட்டி அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் கலெக்டர் ஆஷிஸ் வச்சானி.
நன்றி - விகடன்

வியாழன், ஜூன் 21, 2007

சிந்தியுங்கள் செயற்படுங்கள்! ! ! ! !

அநேக துர்க்காதமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி துர்க்காமாநிலத்தில் உள்ள வெண்திரைகளில் நம் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்காக எச்சந்தர்ப்பத்திலும் எந்தவொரு துன்பத்திலும் குரல் கொடுக்காத தென் இந்திய தமிழ் திரைப்பட நடிகர்களின் திரைப்படங்களை துர்க்காமாநிலத்தில் உள்ள வெண்திரைகளில் காண்பதை தவிர்க்கின்றோம்.


அன்பான தென் இந்திய தமிழ் திரைப்படநடிகர்களே
எம் மக்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் கண்டு எச்சந்தர்ப்பத்திலும் குரல் கொடுக்காத உங்களின் திரைப்படங்களை எக்காரணம் கொண்டும் வெண்திரைகளில் சென்று பணம் கொடுத்து பார்வையிடுவதை தவிர்க்கின்றோம். நாங்கள் உங்களை எங்கள் வீட்டில் ஒருவராக நினைக்கின்றோம் நீங்களோ எம் மக்கள் துன்பப்படுத்தப்படும் போது அவர்களுக்காக உங்களின் குரல்கள் ஒலித்ததுண்டா ?
உங்கள் திரைப்படங்களை இலட்ச்சங்களையும் கோடிகளையும் கொடுத்து வேண்டிப்பார்க்கின்றோம் எங்களின் இலட்சியங்களுக்கு எதிராக மக்களை அழிக்கின்றபோதும் அடித்து துரத்துகின்றபோதும் நீங்கள்; குரல் கொடுத்ததுண்டா?; எம்மக்களை கொல்வதற்காக உங்கள் அரசாங்கம் கொடுக்கும் ஆயுத தளபாடங்களையாவது நிறுத்தசொன்னதுண்டா?
சிந்தியுங்கள் செயற்படுங்கள்! ! ! ! !

இதன் அடிப்படையில் இனிவரும் காலங்களில் எம்மக்களுக்காக குரல் கொடுக்காத எந்த ஒரு நடிகர்களின் திரைப்படங்களையும் வெண்திரைகளில் காண்பதை துர்க்காமாநிலத்தில் தவிர்க்கின்றோம். இதனை அனைத்து புலம்பெயர்வாழ் தமிழ் மக்களிடமும் எடுத்துச்செல்கின்றோம்.


இங்ஙனம்
துர்க்கா வாழ் தமிழ் மக்கள் (swiss)


hits

மீண்டும் கற்பு சர்ச்சையில் குஷ்பு! பாமக வக்கீல் நோட்டீஸ்!!

மீண்டும் கற்பு குறித்த விவாதத்திற்குள் நுழைந்து ஆறிப் போன புண்ணை நோண்டிப் பார்த்துள்ளார் குஷ்பு. அவரது புதிய பேச்சால் ஆத்திரமடைந்த பாமக வக்கீல் ஒருவர் குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சர்ச்சையைக் கிளப்பும் என்று தெரிந்தே, சென்சிட்டிவான விஷயங்களை பப்ளிக்காக பேசி பப்ளிசிட்டி தேடிக் கொள்வது சிலரின் வழக்கமாக உள்ளது. தாங்கள் பேசும் பிரச்சினைக்கு தீர்வு இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் யோசிக்காமல் பேசி விடுவார்கள்.

குண்டைப் போடுவதற்கு முன்பு அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து யோசிப்பதே இல்லை. அந்த வரிசையில் நடிகை குஷ்புவையும் சேர்க்கலாம். கொஞ்ச காலத்திற்கு முன்பு கற்பு குறித்துப் பேசி அவர் பட்ட பாட்டை நாடே அறிந்தது.

படு பட்டவர்த்தனமாக கல்யாணத்திற்கு முன்பு உடலுறவு, கற்பு குறித்து அவர் பேசி விட்டு பிறகு டிவியில் தோன்றி மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நிலைமை ரசாபாசமானது.

குஷ்பு மீது ஊர் ஊருக்கு வழக்குப் போட்டனர். அந்த வழக்குகளிலிருந்து ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகி ஒரு வழியாக பிரச்சினையிலிருந்து வெளி வந்தார் குஷ்பு.

இந்த நிலையில் அந்த விவகாரத்தை மீண்டும் தோண்டித் துருவி எடுத்து மறுபடியும் ஒரு சர்ச்சை அலையை எழுப்பியுள்ளார் குஷ்பு. எப்.ஐ.சி.சி. நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார் குஷ்பு.

அந்த நிகழ்ச்சியில் பேசுகையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே கற்பு குறித்த விவகாரத்தில் தன்னைக் கைவிட்டு விட்டன, அநீதி இழைத்து விட்டன என்று கூறியுள்ளார் குஷ்பு.

குஷ்பு பேசுகையில், நான் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் சொல்லி விடவில்லை. உண்மையில், பாதுகாப்பான செக்ஸ் என்ற விஷயத்தில் அரசின் கொள்கையைத்தான் நான் கூறினேன்.

ஒவ்வொரு பெண்ணும், பாதுகாப்பான செக்ஸை மேற்கொள்ள வேண்டும், ஆணுறைகளை, பெண்ணுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நான் சொன்னேன்.

கல்யாணத்திற்கு முன்பு ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டால் கர்ப்பமடையும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க ஆணுறைகளை பயன்படுத்துவது நல்லது என்றுதான் நான் சொன்னேன். அப்படிச் செய்யாமல் பாதுகாப்பாற்ற முறையில் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினருக்கும் கூட பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதைத்தான் நான் எடுத்துரைத்தேன்.

இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க பாதுகாப்பான செக்ஸே சிறந்த வழி என்றுதான் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் பல அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடத்தின.

குறிப்பாக பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எனக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து விட்டன.

நான் அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்கள் அனைத்துமே மத்திய அரசின் கருத்துக்கள்தான். அதைத்தான் நான் பிரதிபலித்தேன். இதற்காக மத்திய அரசு மீது இந்த கட்சிகளால் வழக்கு போட முடியுமா? நான் ஒரு பெண் என்பதால் இந்தக் கட்சிகள் என்னைக் குறி வைத்து நடந்து கொண்டன என்று பேசினார் குஷ்பு.

மேலும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தன் மீது 24 வழக்குகளை போட்டதாகவும் குஷ்பு குற்றம் சாட்டினார். குஷ்புவின் இந்தப் பேச்சு பாமக வட்டாரத்தில் கடுப்பைக் கிளப்பியுள்ளது.

பாமகவைச் சேர்ர்ந்த முருகன் என்கிற வழக்கறிஞர் நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், கற்பு குறித்தும், பாமக குறித்தும் பொது இடத்தில் அவதூறாகப் பேசியதாகவும் கூறி குஷ்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவர் கூறுகையில், வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை கற்பு குறித்தும், இதுதொடர்பான விவகாரம் குறித்தும் பொது இடத்தில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என்று மேட்டூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அதை மனதில் கொள்ளாமல், பொது இடங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதுகுறித்துப் பேசி வருகிறார் குஷ்பு. மேலும், அரசியல் கட்சிகள் தனக்கு எதிராக அநீதி இழைத்து விட்டதாகவும் பேசியுள்ளார் குஷ்பு.

சிலர் நீதியை விலைக்கு வாங்கி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். யார் நீதியை விலைக்கு வாங்கினார்கள் என்பதை குஷ்பு விளக்குவாரா. எவ்வளவு பணம் கொடுத்து அதை வாங்கினார்கள் என்பதையும் குஷ்பு விளக்குவாரா?

தனது கருத்துக்களுக்கு குஷ்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் என்று கூறினார் முருகன்.

குஷ்பு போட்ட குண்டு பாமக தரப்பில் போய் வெடித்துள்ளது. சிறுத்தைகளும் பாய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

யாழ்.காமில் இருந்து....

திங்கள், ஜூன் 18, 2007

சிவாஜி பற்றிய நடிகர்களது கருத்து.

சிவாஜி பற்றிய நடிகர்களது கருத்தை பார்க்க வானொலியை நிறுத்திவிட்டு பார்க்கவும்.

ஞாயிறு, ஜூன் 17, 2007

பாபாவுக்கு ஏற்பட்ட கதி சிவாஜிக்கும் ஏற்பட வேண்டும்!



தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!
தலை மீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்
இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!

திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்!
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!
உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம்போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன?

சிந்திக்க வைக்கும் இந்தப் பாடலைப கலைமாமணி குப்புசாமி தனது தேனான குரலில்; பாடும்போது மனதுக்கு தெம்பாக இருக்கும்.

ஆனால் தமிழர்கள் திருந்தவே மாட்டார்கள். ஆயிரம் பெரியார், பதினாயிரம் அண்ணா போன்றோர் வந்தாலும் தமிழர்களைத் திருத்தவே முடியாது.

'தமிழ் மக்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே உட்காருகின்றார்கள், ஈரத்திலேயே நடக்கின்றார்கள், ஈரத்திலேயே படுக்கின்றார்கள். ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு, உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்" என மகாகவி பாரதியார் மனம் நொந்து கூறிய வார்த்தைகள் நூறு ஆண்டுகள் கழித்தும் சரியாகவே இருக்கின்றன!

பிரபாவதி என்ற படத்தில் ஒரு காட்சி. கலைவாணர் என்.எஸ்.கிருஸ்ணன் கீழே படுத்திருந்த அசுரனின் தலையை மிதித்துவிடுவார். உடனே அசுரன் அவரோடு சண்டைக்குப் போவான்.

அதற்கு கலைவாணர் 'இப்படித்தான் வாமன அவதாரத்தில் கிருஷ்ண பரமாத்மா மாபலியின் தலையை தனது காலால் மிதித்தார்" என்பார்.

'அப்படியா? அப்ப இன்னும் மிதி" என்று அந்த அப்பாவி அசுரன் தலையைக் காட்டுவான். அந்த அசுரன் நிலையிலேயே பெரும்பான்மைத் தமிழர்கள் இருக்கிறார்கள்.

திரைப்படம் அறிவியல் உலகுக்கு வழங்கிய நன்கொடை. அதன் வாயிலாக மனித வாழ்வை நல்வழிப்படுத்திப் பகுத்தறிவுச் சிந்தனையைப் பெருக்கலாம். சமத்துவத்தை நிலைநாட்டலாம். குடிமக்கள் சொற்படி ஆட்சி என்ற கோட்பாட்டை நிறுவலாம். ஆனால் இன்று அது பெரும்பாலும் மூட நம்பிக்கைகளை வளர்ப்பதற்கும், தன்னம்பிக்கையைக் குலைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மனித சமுதாயத்;துக்கு இரண்டகம் இழைக்கும் செயலாகும்.

கதாநாயகன் தாத்தா ஆகிப் பேரப்பிள்ளையை எடுத்துக் கொஞ்சுகிறார். இன்னும் சில ஆண்டுகள் போனால் பூட்டப்பிள்ளையையும் கண்டுவிடுவார். அதலானென்ன? அவர் நடித்த படத்தைப் பார்க்கத் தமிழ்நாடு, குறிப்பாகச் சென்னைத் திரையரங்குகளில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறதாம்!

அறுபது அகவைக் கிழவனை 30 அகவை இளைஞனாகக் காட்டத்தான் இப்போது ஒப்பனை வந்து விட்டதே? ஒப்பனையாளர் ரஜினியின் உண்மையான தோற்றத்தை மறைத்து, ரஜினியை மீண்டும் கண்ணெடுத்துப் பார்க்கக் கூடிய 'கதாநாயகன்" ஆக மாற்றிக் காட்டுகிறார். ரஜினியின் நரைத்த தாடியையும் மொட்டந்தலையையும் மறைக்க இங்கிலாந்தில் இருந்து படத்தயாரிப்பாளர்கள் செயற்கை முடி (றுபை) வரவழைத்தார்களாம்!

வழக்கம் போல் ரஜினியின் இரசிகர் கூட்டம் சிவாஜி கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தார்களாம்! வடபழனி கமலா திரையரங்கில் ரஜினியின் பிரம்மாண்டமான கட் அவுட்டுக்கு 25 லீட்டர் பாலை கொண்டு அபிசேகம் நடைபெற்றது. ஆயிரம் வாலா பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

சில பெருங்குடியினர் பாலுக்குப் பதில் ரஜினியின் கட் அவுட்டுக்கு பீர் அபிசேகம் செய்தார்களாம். ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில்தான் பீர் அபிஷேகம் நடைபெற்றது. 'ரஜினியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இரசிகைகள் குடங்களில் பாலை எடுத்து வந்து அவற்றை அபிசேம் செய்த காட்சி அனைவரையும் புல்லரிக்க வைத்தது" இப்படி பார்ப்பன ஏடான 'தினமலர்" (யூன் 16, 2007) வருணிக்கிறது.

சரி. சென்னையில் படியாத பாமரர் கூட்டம் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறதென்றால் அமெரிக்காவிலும் அதே கதைதான். வழக்கமாக 10 திரையரங்குகளில் ஓடுவதற்குப் பதில் சிவாஜி படத்தை 50 திரையரங்குகளில் திரையிடத் திட்டமாம்!

கனடா பற்றி கதையில்லை. ஆனால் இங்கும் ரஜினியின் இரசிகர்கள் இருக்கிறார்கள். பால் அபிசேகம் செய்யாவிட்டாலும் இருபது அகவைக் குமரிப்பெண்ணோடு 60 அகவை தாத்தா நடித்த படத்தைப் பார்க்க திரையரங்கை நிரப்பப்போகிறார்கள்.

வழக்கமாக கன்னடத்தில் தமிழ்ப் படங்கள் தமிழ்நாட்டில் 7 கிழமை ஓடின பிற்பாடுதான் திரையிடப்படும். ஆனால் சிவாஜி படத்துக்கு விதிவிலக்கு. காரணம் சிவாஜி கன்னடக்காரர்.

ஆனால் அதே கன்னடத்தில் தமிழர்கள் இரண்டாந்தாரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். தமிழர்கள் பெங்களுர் தெருக்களில் தமிழில் பேசினால் கன்னட வெறியர்கள் கன்னத்தில் அறைகிறார்கள்!

திரைப்படத்தில் கூட தமிழ் உரையாடல் மருந்துக்கும் இடம்பெறக் கூடாது. இடம் பெற்றால் திரைச்சீலைகள் கிழிக்கப்பட்டு விடும்! நாற்காலிகள் அடித்து உடைக்;கப்படும்.

எந்த மொழியிலும் விளம்பரம் போடலாம். ஆனால் தமிழ்மொழியில் விளம்பரம் போட்டால் கன்னட வெறியர்கள் தார் பூசி அதனை அழித்து விடுவார்கள்.

தமிழ்நாடு போட்ட பிச்சையில் வயிறு வளர்ந்;த கன்னட நடிக, நடிகைகள் ஒன்று சேர்ந்து தமிழர்களையும் தமிழ்நாட்டின் நலன்களை எதிர்க்கிறார்கள். அங்கு வாழும் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையை நரகமாக்குகிறார்கள்.

1991 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கன்னடம் 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து பெங்களூர், மைசூர், மாண்டியா, சென்னப்பட்டனா உள்ளிட்ட தமிழர்கள் அதிக அளவில் வாழும் பகுதிகளைக் குறிவைத்து கன்னட வெறியர்கள் தாக்கினார்கள். தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பெண்கள் குழந்தைகள் உட்பட 200-க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். சுமார் 10,000 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

வீடுகளையும் சொத்துக்களையும் இழந்த 50,000 தமிழர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தமிழகத்துக்கு ஓடிப் போனார்கள். காவிரி நீரில் ஒரு பகுதியை தமிழ்நாட்டுக்குக் கொடு என்று காவிரி நடுவர் மன்றம் சொல்லிவிட்டதாம். அதற்காக அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள்.

கன்னட அரசே மக்களைத் தூண்டிவிட்டு இந்தக் கலவரத்தை தமிழர்களுக்கு எதிராக நடத்தியது. கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது இரசிகர்கள்தான் தமிழர்களுக்கு எதிராகப் பேரணி நடத்தினார்கள். முழக்கம் எழுப்பினார்கள். கலவரத்துக்கும் தலைமை தாங்கினார்கள். பெங்களுர் தமிழ்ச் சங்கம் விடுத்த அறிக்கை ஒன்றில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் குண்டு வெடித்தால் அய்ரோப்பாவில் அது எதிரொலிக்கிறது, ஈராக்கில் குண்டு விழுந்தால் இசுலாமியர்கள் கொதித்து எழுகிறார்கள். கஷ்;மீரத்துப் பண்டிதர்களுக்குக் கூடக் குரல்; கொடுக்க இந்துத்துவா சக்திகள் இருக்கின்றன. ஆனால் பெங்களூரில் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் வீடுகள் எரிக்கப்பட்டாலும் வணிக நிலையங்கள் எரியூட்டப்பட்டாலும் தமிழ்ப் படங்களை ஓடவிடாமல் திரையரங்குகளைக் கொளுத்தினாலும் தமிழ்நாட்டுப் பேருந்துகளைத் தடுத்தாலும் தமிழ்நாட்டுத் தமிழன் மூச்சே விடுவதில்லை!

மூச்சுவிடா விட்டாலும் பரவாயில்லை. தமிழ்நாட்டில் உழைத்த பணத்தைக் கர்நாடகத்தில் முதலீடு செய்யும் ரஜினிகாந்தின் கட் அவுட்டுக்குக் கற்பூரம் காட்டிப் பால் அபிசேகம் பீர் அபிசேகம் செய்கிறான்.

அவ்வப்போது வைகோ, மருத்துவர் இராமதாஸ், திருமாவளவன் போன்றோர் கன்னடத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். உண்ணா நோன்பு இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

காவிரி ஆற்று நீரைத் திறந்துவிடக் கோரி இயக்குநர் பாரதிராசாவும் தமிழ்நாட்டு நடிகர் சங்கத் தலைவருமான விஜயகாந்த் தஞ்சையில் பேரணி நடத்திய போது ரஜனி அதில் கலந்து கொள்ளவில்லை. சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்.

இளித்த வாய்த் தமிழர்கள் தமிழர் அல்லாத நடிகர் - நடிகைகளுக்கு கோயில் எழுப்பிக் கும்பிடுகிறான்! தமிழரல்லாத நடிக, நடிகைகளுக்கு தலையிடி என்றால் தீக்குளிக்கிறான். காவடி எடுக்கிறான். தனது கைவிரல்களை மட்டுமல்ல கைகளையும் வெட்டிக்கொண்டு தனது பக்தியைக் காட்டுகிறான்!

ரஜினி பெரிய நடிகர் இல்லை. நடிகர் கமல்காசனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உறைபோடக் கூடக் காணாது.

ஆனால் மருத்துவர் இராமதாஸ் சொன்னது போல பீடியை மேலே எறிந்து வாயில் கவ்வுவது, தலைமுடியை தடவி விடுவது போன்ற சேட்டைகளை படியாத - பகுத்தறிவற்ற இரசிகர் கூட்டம் இரசிக்கிறது. கைதட்டி மகிழ்கிறது.

ரஜினி தமிழ்நாட்டில் மூடத்தனத்தை வளர்ப்பதில் முன்னணியில் நிற்கிறார். இமயமலையில் அவர் அடிக்கடி போய் தரிசித்து ஆசி பெற்று வரும் பாபாவின் அகவை 2000 ஆண்டாம்! திருமூலர் காலந்தொட்டு உயிரோடு வாழ்ந்து வருகிறாராம்! படியாத பாமரன் கூட இப்படி விசர்த்தனமாகப் பேசமாட்டான்.

அந்த சகாவரம் பெற்ற பாபாவின் பெயரில் எடுத்த படம் பலத்த தோல்வியைச் சந்தித்தது. திரையரங்குகளை விட்டு ஓடிப் போய்விட்டது.

சிவாஜி படத்தில் நடித்த ரஜனி சரி, அதனைத் தயாரித்த ஏவிஎம் குழுமமும் சரி. இரண்டுக்கும் தமிழ் உணர்வு, தமிழ்ப்பற்று அறவே கிடையாது.

தமிழகத்தையும் தமிழீழத்தையும் ஆழிப்பேரலை (சுனாமி) தாக்கியபோது பேரழிவு ஏற்பட்டது. உயிர்களும் உடைமைகளும் அழிவுற்றன. ஆனால் ரஜினி சரி, ஏவிஎம் குழுமமும் சரி அந்த மக்களின் கண்ணீரைத்துடைக்க ஒரு துரும்பைத்தன்னும் தூக்கிப் போடவில்லை.

தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ நெடுமாறன் நடைப்பயணம் மேற்கொண்டு தமிழீழ மக்களுக்கு ஒரு கோடி பெறுமதியான உணவும் உடையும் மருந்தும் சேகரித்தார். ஆனால் அதனை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப எடுத்த முயற்சி வெற்றிபெறவில்லை. இந்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. அறப்போர் நடத்தியும் இந்திய அரசு இதுவரை அசைந்து கொடுக்கவில்லை.

தமிழக நீதிமன்றங்களில் தமிழ்மொழியில் வழக்குரைக்கச் சட்டம் இயற்றியும் அதனை செல்லாக்காசாக்கி விட்டது இந்திய மத்திய அரசு! அதே நேரம் இராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார் இங்கெல்லாம் இந்திதான் நீதிமன்ற மொழி!

கோடி கோடியாக பொருள் தேடிய ரஜினி ஒரு பள்ளிக்கூடம் கட்டவில்லை. ஒரு கல்லூரி கட்டவில்லை. ஏழைகளுக்கு ஒரு மருத்துவமனை கட்டிக்கொடுத்தது கிடையாது. சம்பாதித்த பணத்தை அய்ந்து நட்சத்திர கோட்டல்களில் கன்னடத்தில் முதலீடு செய்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தமிழீழ மக்கள் சிங்களப் படையினரின் தொடர் தாக்குதலால் கண்ணீரில் மிதக்கிறார்கள். மொத்தம் 300,000 மக்கள் வீடு, வாசல்களை விட்டோடி ஏதிலி முகாம்களில் தஞ்சம் அடைந்தார்கள். இந்த மனித அவலத்தை ரஜினியோ ஏவிஎம்மோ கண்டு கொள்ளவில்லை.

கன்னடன், தமிழன் என்று பிரித்துப் பேசலாமா என்று சிலர் கேட்கிறார்கள். பேசக்கூடாததுதான். ஆனால் அவர்கள் பேச வைக்கிறார்களே!

கன்னடருக்கு திராவிட தேசிய உணர்வோ நம்பிக்கையோ இல்லாது இருக்கும் போது தமிழன் மட்டும் எதற்காக திராவிட தேசியம் பேச வேண்டும்?

பெங்களுரில் திருவள்ளுவருக்குச் சிலை திறப்பதை கன்னடர் எதிர்க்கிறார்கள். வள்ளுவர் சிலை சாக்குகளால் கட்டி எங்கோ ஒரு மூலையில் வைத்திருக்கிறார்கள். பாவம் வள்ளுவர்.

தமிழ்நாட்டில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட மொழியின் முதல் பெண் கவிஞர் அக்கமகாதேவிக்கு சென்னையில் சிலை வைக்க கன்னடர்கள் முன்வந்தால் அதனைத் தமிழர்கள் ஒருபோதும் எதிர்க்கமாட்டார்கள்.

தமிழர்களே முன்னின்று தங்கள் செலவில் சிலை வைத்துவிடுவார்கள்! அது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனப் பேசும் தமிழர்களது பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று விளக்கம் வேறு கொடுத்து விடுவார்கள்.

காவிரி தண்ணீர் சிக்கல், வள்ளுவர் சிலை திறப்பு, காவிரிக் கலவரத்தில் கன்னடத்தில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட தமிழர்கள் எனப் பட்டியல் நீளுகிறது.

தமிழ் மக்களுக்கோ, தமிழினத்துக்கோ, தமிழ் மொழிக்கோ ஒரு எள்முனை ஆதரவையும் நல்காத ரஜினி மற்றும் ஏவிஎம் தயாரித்து வெளியிட்டுள்ள சிவாஜி படத்தை புலம்பெயர்ந்த தமிழ் உணர்வாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலமே அவர்களுக்குப் பாடம் படிப்பிக்க முடியும்.
நன்றி - தமிழ்நாதம்



முறியடிப்போம், காத்திரு!

எங்கு சென்று சொல்வதடா தமிழன் செய்யும் கூத்தினை?..
என்ன சொல்லி அழுவதடா யாம் அடைந்த வேதனை?..
எங்கிருந்து வந்ததடா இப்படியோர் சிந்தனை?..
இன்னொருவன் உருவம்மீது பால்சொரியும் நிந்தனை!..

கண்ணகிக்குச் சிலையெடுத்தான்: அது தமிழன் சாதனை!
கலிங்கம் வரை படையெடுத்தான்: அது தமிழன் போர்முனை!
மன்னுதமிழ்க் குறள்படைத்தான்: அது தமிழன் நூல்வினை!
மாயைகளில் மயங்குகின்றான்.. என்ன இது சோதனை?..


சித்திரத்தைத் தீட்டிவைத்து அதைத் தொழுகை புரிவதும்
சிந்தையிலா மந்தைகளாய்த் திரையினர்பால் சரிவதும்
எத்திறத்தில் செந்தமிழன் இங்கிதத்தில் சேர்ந்ததோ?
எப்படித்தான் இப்படியோர் இழிவுநிலை நேர்ந்ததோ!...


கடல்கடந்து கலம்செலுத்திக் களங்கள்கண்ட நாட்களும்
கயவர்கட்குக் கண்ணெதிரே விதிவகுத்த வாட்களும்
மடமைகண்ட தமிழனுக்கு மறதியாகி விட்டது!
மானமிக்க தமிழினம், இம் மந்திகளால் கெட்டது!..


காவிரியைத் தாஎன்றால் கைவிரிக்கும் கன்னடன் -
காழ்ப்புடனே தமிழர்தமைச் சதிபுரியும் வஞ்சகன் -
நாவிளங்க நாலுதமிழ்ச் சொல்வழங்காப் பாமரன் -
நாம் அவனைப் பூஜைசெய்தால், எவன் இங்கே திராவிடன்?


நடிகர்களின் படம்காண விடியும்வரை விழிக்கிறான்..
நல்லதமிழ் படியென்றால், நாணமின்றி முழிக்கிறான்...
கொடிய திரைப் போதைதனில் அடிமையெனக் கிடக்கிறான்..
குலப் பெருமைதனைத் தமிழன் குழிதோண்டிப் புதைக்கிறான்..


திரையுலகம் தமிழினத்தின் வழிபாட்டுத் திருத்தலம் -
சினிமாவின் கணிகையர்க்குக் கோவில்கட்டும் தமிழ்க்குலம் -
திரையுலக நாயகன்தான் தளபதியும் தலைவனும் -
செந்தமிழா! உனக்கெதற்கு, நாகரிகச் சீதனம்?...

விரசமிக்க திரைமடந்தை காலில் வீழும் தமிழனே!
விபரமற்ற விலங்குகூட உனைவிட மேல்: கயவனே!
அரசியலில் நடிகைதனை "அம்மா" வாய்ப் பார்த்தவன் -
ஆறறிவின் ஈறறிவை வயிற்றுக்காய் விற்றவன்!..


பகுத்தறிவுப் பெட்டகங்கள் பிறப்பெடுத்த மண்ணிலே...
பைத்தியங்கள் பாய்ச்சுதுபார் வேலை, வெந்த புண்ணிலே!
வெகுண்டெழுந்து வீணர்தம்மை விரட்டுதற்கு வருமினோ!
வெட்கம் கெட்ட "விசிறி"கட்கும் வெட்கமில்லை, அறிமினோ!


ஈழமண்ணின் சோதரனே! உன்னிதயம் நொந்திடும் -
எத்தரையும் பித்தரையும் எண்ணிமனம் வெந்திடும் -
மூளையற்ற பேதைகட்கும் முடிவுஒன்று வந்திடும்!
முறியடிப்போம், காத்திரு! நம் புனிதகுலம் வென்றிடும்!

- தொ. சூசைமிக்கேல்
tsmina2000@yahoo.com

சனி, ஜூன் 16, 2007

மகாத்மா காந்தியின் பேரன் மர்ம மரணம்!!!

தேசப் பிதா மகாத்மா காந்தி மற்றும் மூதறிஞர் ராஜாஜியின் பேரன் ராமச்சந்திர காந்தி(70) டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

மகாத்மாவின் பேரன் ராமச்சந்திரா காந்தி, தனது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வந்தார். தத்துவவியல் பேராசிரியரான காந்தி, சிறந்த எழுத்தாளரும் ஆவார்.

தனது இல்லத்தில் வசித்ததை விட டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில்தான் தனது நாட்களை அதிகம் கழித்துள்ளார் காந்தி. அந்த மையத்தின் வளர்ச்சிக்காக தீவிரமாக பாடுபட்டு வந்தார்.

மையத்தின் ஏதாவது ஒரு பகுதியில் காந்தியைத் தவறாமல் காண முடியும். ஏதாவது ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு எழுதுவதையோ அல்லது ஏதாவது ஒரு நூலை படித்துக் கொண்டிருப்பதையோ காண முடியும். அந்த அளவுக்கு இந்திய சர்வதேச மையத்தை நேசித்தவர் காந்தி.

கடந்த 10ம் தேதி இந்த மையத்தின் வளாகத்தில் உள்ள எலைட் விடுதியின் 15ம் எண் அறையில் வந்து தங்கினார் காந்தி. நேற்று காலை நெடுநேரமாகியும் அறை திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து விடுதியை சுத்தம் செய்யும் ஊழியர்கள் கதவைத் தட்டிப் பார்த்தனர்.

ஆனால் பதில் ஏதும் வராமல் போகவே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது காந்தி அறையின் தரையில் விழுந்து இறந்து கிடந்தார்.

இது இயற்கையான மரணமாகத்தான் இருக்க வேண்டும் என்று போலீஸார் கூறியுள்ளனர். இருப்பினும் பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மிகச் சிறந்த தத்துவவாதி காந்தி. மொழியியல், தத்துவம் ஆகிய இரு பாடங்களிலும் டாக்டர் பட்டம் பெற்றவர். இங்கிலாந்து, அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகளில் பாடம் நடத்தியவர். தாகூர் நிறுவிய சாந்திநிகேதன், பஞ்சாப் பல்கலைக்கழகம், பெங்களூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் தத்துவிவியல் பிரிவைத் தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- சூரியன்

வெள்ளி, ஜூன் 15, 2007

'சிவாஜி' - ஆறிப் போன பஜ்ஜி!!!



ஒரு ரூபாய் நாணயத்தை சுண்டிவிட்டால் என்ன நிகழும்.... கீழே விழும். ஆனால் ரஜினி சுண்டிவிட்டால் மட்டும் கோடி கோடியாய் பணம் கிடைக்கும். 'சிவாஜி'யில் ஷங்கர் காட்டியிருக்கும் மேஜிக் இதுதான்.

சாப்ட்வேர் துறையில் சம்பாதித்த 200 கோடி ரூபாயுடன் தாய்நாட்டுக்கு வந்திறங்கும் ரஜினி, இலவச கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் நிறுவி ஏழைகளுக்கு உதவ எண்ணுகிறார். இதற்காக இத்துறையில் அனுபவமுள்ள சுமனின் உதவியை கேட்கிறார்.
உதட்டில் சிரிப்பையும் உள்ளத்தில் விஷத்தையும் வைத்திருக்கும் சுமனோ ரஜினியின் திட்டம் தனது பிழைப்பில் மண்ணை போட்டுவிடும் என்பதால் அவரை கவிழ்க்க சகுணி வேலைகளில் ஈடுபடுகிறார். சுமனின் நயவஞ்சக புத்தியை புரிந்துகொள்ளும் ரஜினி, சுமனின் மிரட்டலுக்கு அடிபணியாமல் சொந்த முயற்சியால் தனது லட்சியத்தை நிறைவேற்ற முயல்கிறார்.

வில்லன் சுமன் சும்மா இருந்துவிடுவாரா? தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஆப்பு மேல் ஆப்பு வைக்க ஆடிப்போகிறார் ரஜினி. சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்து கையில் ஒற்றை ரூபாயுடன் தெருவில் நிற்கும் ரஜினி 'இதைவைத்தே சாதித்து காட்டுகிறேன்...' என்று நாணயத்தை சுண்டிவிட இடைவேளை.

அதன்பிறகு பிறகு ரஜினி போராடுவார், வில்லன் சுமனின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவார், கடைசியில் ஜெயிப்பார் என்ற வழக்கமான சினிமா பார்முலாவுக்கு உத்திரவாதம் தருகிறது படம்.

எடுத்தவுடனேயே முகத்தை காட்டிவிடக்கூடாது என்னும் ஹீரோயிச பில்டப்புடனேயே இதிலும் காட்டப்படுகிறார் ரஜினி. மேக்கப்மேனின் உபயத்தில் ரஜினியிடம் பத்துவருடத்திற்கு முந்திய இளமை. ரம்யாகிருஷ்ணன் பாணியில் சொல்லப்போனால் 'வயசானலும் ஸ்டைலும் அழகும் ரஜினியைவிட்டு இன்னும் போகல...'
சுமனின் சதியால் ஓட்டாண்டியாகி திரும்புவதிலிருந்து ரஜினியின் நடிப்பும் வேகமும் ரசிகர்களுக்கு தீனிபோடுகிறது. டீக்கடை பெஞ்சில் சுமனை உட்கார வைத்து பேசுவது, கறுப்புபணத்தை வெள்ளையாக்கி வெளிநாட்டிலிருந்து மொட்டை கெட்டப்பில் திரும்புவது, ஸ்ரேயா வீட்டில் மிளகாய் தின்றுவிட்டு காரம் தாங்காமல் கத்துவது என நிறைய இடங்களில் ரசிக்கவைக்கிறார். காதை பஞ்சராக்கும் பஞ்ச் டயலாக்குகள் இல்லாத ரஜினியை பார்ப்பது ஆறுதல்.

ரஜினியை தன்பின்னால் சுற்ற வைக்கும் அழகு மலராக ஸ்ரேயா. கணவனின் (சிவாஜி) உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்று துடிக்கும் காட்சியில் மட்டும் முகம் காட்டுகிறது நடிப்பு. மற்ற இடங்களில் காட்டுகிறார் இடுப்பு.

ரஜினியின் மாமனாக விவேக். காமெடி செய்வதாக நினைத்து கடுப்பேற்றுகிறார். குண்டு பெண்மணியை பார்த்து 'பங்களா வருது பார்...' என்பதும் அமைச்சரின் பி.ஏ. வாக வருபவரிடம் 'மனைவின் ரேட்' என்ன என்பதுமாக சுஜாதாவின் இரண்டாம் தர எழுத்துகளை டப்பிங் செய்திருக்கிறார்.

சுஜாதாவின் எழுத்தென்னும் போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. 'சாகிற நாள் தெரிந்சிடுச்சுன்னா வாழுற நாளெல்லாம் நரகமாயிடும்' இந்த வசனம் மட்டுமே சுஜாதாவின் ஆளுமையை காட்டுகிறது.

ரொம்ப நாளைக்கு பிறகு வில்லனாக தரிசனம் தரும் சுமனின் நடிப்பும் பிரமாதம் என்ற வகையறாவில் சேர்க்கமுடியாது. தமிழ்சினிமா வில்லன்களின் தலையெழுத்தே சுமனிடமும் எழுதப்பட்டுள்ளது. ரஜினி 200 கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருக்கும்போது அவரை ஆட்டிவைக்கும் சுமனின் பலம், ரஜினி சாதாரண ஆளாகி எதிர்க்கும்போது பவர் கட்டாவது ஏனோ?

கே.வி. ஆனந்தின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியிலும் தயாரிப்பாளர் செய்திருக்கும் செலவு பளிச்சிடுகிறதே தவிர பாராட்டும்படியான தனித்துவம் தென்படவில்லை. டிரைவின் தியேட்டரில் சண்டை காட்சி, பிரம்மாண்ட செட்டில் பாடல்களை படம்பிடித்த இடங்களில் உழைப்பு தெரிகிறது.

ரஜினி, நயன்தாரா ஆடும் பாடல்காட்சியின் பின்னணியில் தொழில்நுட்ப உதவியுடன் செயற்கை பசுமையை காட்டுவது ரசிக்கும்படி இல்லை.

'சஹாணா சாரலில்....'செவிகளை இனிக்க வைக்கும் ஏ.ஆர். ரஹ்மான் பின்னணி இசையில் தன் மீதான கவனத்தை திருப்பியதாக தெரியவில்லை.

'இலவச கல்வி, இலவச மருத்துவத்துடன், கறுப்பு பணமில்லாத தேசமே நாட்டின் வளத்தை மேம்படுத்தும்.' படத்தில் ஷங்கர் சொல்லவரும் கருத்து இதுதான். படம் பார்ப்பவர்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற இயக்குனரின் எண்ணம் வரவேற்கக் கூடியதே. ஆனால் அதனை சொல்ல வேண்டிய விதத்திலிருந்து விலகிப்போய் வேறொரு தடத்தில் பயணிப்பதால் சொல்லவரும் கருத்தின் உருவம் மங்கி ரஜினி என்ற நடிகர் என்ன செய்திருக்கிறார் என்ற மாய பிம்பமே மனதில் வேரூன்றுகிறது.

வில்லனால் ரஜினி பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தருவாயிலேயே ஸ்ரேயாவுடனான காதல் காட்சிகளும், காமெடிகளும் கதையின் சீரியஸை அனாதையாக்கி விடுகிறது.
"பகட்டு இல்லாத பாசாங்கு செய்யாத சினிமா எடுக்கவேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் சில சூழல்கள் என்னை பிரம்மாண்டத்திற்குள் தள்ளிவிட்டது," என்பது போன்ற கருத்துடன் பேட்டிகளில் தனது ஆசையை சொல்லியிருக்கும் ஷங்கர், தொடர்ந்து அந்த பள்ளத்துக்குள் பதுங்கியிருக்கவேண்டாம் என்பதுதான் நமது ஆசையும்.

'சிவாஜி' - ஆறிப் போன பஜ்ஜி சினி சவுத்தில் இருந்து.....

சவுதி அரேபியாவில் இரண்டு சிங்களவர்களுக்கு ஆயுள் தண்டனை!

சவுதி அரேபியா, ஜெத்தாவில் கடந்த ஏப்ரல் மாதம் அரேபியப் பெண்ணொருவரின் நகைகளைக் கொள்ளையிட முயன்ற இரண்டு சிங்களவர்களுக்கும், மற்றொரு இந்தியருக்கும் கொலை முயற்சிக் குற்றத்தின்கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேலும் ஐந்து சிங்களவர்களுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையும், 500 சாட்டை அடியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவிலுள்ள சிறீலங்கா தூதரகம், வெளிநாட்டு வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இந்தத் தகவலை அறிவித்துள்ளது.

பதிவில் இருந்து.....

புதன், ஜூன் 13, 2007

எதற்கு இனிமேலும் சண்டை, கிருஷ்ணா-கிறிஸ்து.


கிருஷ்ணா - கிறிஸ்து பெயர்களில் ஒற்றுமை மாத்திரமல்ல - கூறும் கதைகளை பாருங்கள்

1)இருவரும் இறைவனின் பிள்ளைகள் - தேவ சித்தத்தினால் தோன்றியவர்கள்
2)கிறிஸ்து நாசரேத்திலும், கிருஷ்ணர் துவாரகையிலும் அவதரிக்கப் போகிறார்கள் என்ற செய்தி முதலே தேவ வாக்காக சொல்லப்பட்டது.
3) இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்த நாட்டு அரசனுக்கு இந்த செய்தி விருப்பமில்லத ஒன்றாக இருக்கிறது
4) இருவரும் வித்தியாசமான சூழலில் கிறிஸ்து மாட்டுத்தொழுவத்திலும், கிருஷ்ணர் சிறையிலும் பிறந்தார்கள்
5) இருவரும் அவதரித்த காலத்தில் அவர்கள் நாட்டில் மிகுந்த பிரச்சினைக்காலமாக இருந்தது.
6) இருவரின் அவதார முடிவும் ஒரேமாதிரியானதாகவே இருந்தது. கிருஸ்துவை ஆணிகளால் அறைந்தார்கள். கிருஷ்ணரின் காலில் வேடனின் அம்பு பாய்வதோடு அவதாரம் முடிவு அடைகிறது.

Similarities in just the names of 'Christ' and 'Krishna' have enough fuel for the curious mind to prod into the proposition that they were indeed one and the same person. Although there is little historical evidence, it is hard to ignore a host of likenesses between Jesus Christ and Lord Krishna. Analyze this!

• Both are believed to be sons of God, since they were divinely conceived
• The birth of both Jesus of Nazareth and Krishna of Dwarka and their God-designed missions were foretold
• Both were born at unusual places — Christ in a lowly manger and Krishna in a prison cell
• Both were divinely saved from death pronouncements
• Evil forces pursued both Christ and Krishna in vain
• Christ is often depicted as a shepherd; Krishna was a cowherd
• Both appeared at a critical time when their respective countries were in a torpid state
• Both died of wounds caused by sharp weapons — Christ by nails and Krishna by an arrow
• The teachings of both are very similar — both emphasize love and peace
• Krishna was often shown as having a dark blue complexion — a color close to that of Christ Consciousness
யாழில் இருந்து........

ஞாயிறு, ஜூன் 10, 2007

அமெரிக்காவில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரிக்கும் பிரசுரங்கள!




நியூயோர்க்,
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரித்ததாக கட்டுரை வெளியாகி இருந்தது அந்த நாட்டில் வசிக்கும் இந்துக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஸ்டப் என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரைக்காக வரையப்பட்ட சித்திரத்தில் இந்து மத கடவுளான பிள்ளையார் ஒரு மதுபான போத்தலை ஒவ்வொரு கையிலும் வைத்து இருப்பதுபோல வரையப்பட்டு இருந்தது. இன்னொரு படத்தில் அனுமானை ஆபாசமாக வரைந்து இருந்தனர். இந்தப் படங்களை அந்த பத்திரிகைக்காக ஜோன்சன் ஜோன்சஸ்டன் என்ற ஓவியர் என்பவர் வரைந்திருந்தார்.

இதை பார்த்ததும் அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் விசனமடைந்துள்ளனர். அவர்களில் நானு மகேந்துரு என்பவர் தன் எதிர்ப்பை அந்த பத்திரிகையின் ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

இந்து மத தெய்வங்களை இழிவுபடுத்துவது எங்கள் மனதை புண்படுத்துவதாகவும், இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதற்கு பத்திரிகை ஆசிரியர் பத்திரிகை முழுவதும் அடித்து வெளியாகிவிட்டது என்று கூறியதோடு முடித்துக் கொண்டார். அவர் வருத்தம் தெரிவிப்பதற்கு கூட முன்வரவில்லை. இது எங்கள் படைப்பு. இதற்காக நீங்கள் ஏன் வருந்துகிறீர்கள் என்பது போல அவரது பேச்சின் தோரணை இருந்ததாக நானு மகேந்துரு கூறியுள்ளார்.

இதற்கிடையில் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் டொன் போவாவுக்கு ஸ்நேகல் அவிச்சல் எழுதி உள்ள கடிதத்தில் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்துக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள்.


தினக்குரல் இல் இருந்து....

வியாழன், ஜூன் 07, 2007

விமானம் லேட்: தட்டிக் கேட்ட நாகை பயணிக்கு அடி உதை!

திருச்சி: கொழும்புக்கு சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை கொழும்பு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

நாகை மாவட்டம் இருக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (41). இவர் உள்பட 130 பயணிகள் கொழும்பிலிருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பயணித்தனர்.

விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கிளம்புவது தாமதமானது. அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் கிளம்பியது.

ஆனால் கிளம்பிய சில விநாடிகளிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பயணிகளை தரை இறக்கிய ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமான நிலையத்திலேயே காத்திருக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் 11 மணிக்கு பயணிகளை விமானத்தில் ஏறுமாறு கூறினர். இன்னும் அரை மணி நேரத்தில் விமானம் கிளம்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்த பின்னர் மீண்டும் அனைவரையும் கீழே இறங்கி விமான நிலையத்தில் அமருமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பயணிகள் என்ன பிரச்சினை என்று ஆவேசமாக கேட்டனர்.

அப்போது ஜாகிர் உசேன், சற்று கோபமாக, வேறு ஏதாவது ஏற்பாடு செய்யக் கூடாதா என்று கேட்டுள்ளார்.ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள், பயணிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்கியுள்ளனர்.

ஆனால் ஜாகிர் உசேனை மட்டும் இறங்க விடாமல் தடுத்த பாதுகாவலர்கள் அவரை விமானத்திலேயே அமர வைத்தனர். பின்னர் கைவிலங்கிட்டு புகைப்படம் எடுத்தனர். பிறகு சரமாரியாக அடித்து உதைக்க ஆரம்பித்தனர்.

வலி தாங்க முடியாமல் ஜாகிர் உசேன் போட்ட கூச்சலால், கீழே இறங்கிக் கொண்டிருந்த பயணிகள் வேகமாக விமானத்திற்குள் வந்தனர். அனைவரும் பாதுகாவலர்களைத் தடுத்து நிறுத்தி ஜாகிர் உசேனைக் காப்பாற்றி கீழே அழைத்துச் சென்றனர்.

இப்படியாக அலைக்கழிக்கப்பட்ட பயணிகள் ஒரு வழியாக திருச்சி வந்து சேர்ந்தனர்.
http://thatstamil.oneindia.in/news/2007/06/07/passenger.html

இராமர் பாலமும் இந்துத்துவா சதித்திட்டமும்.

கி.பி. 1528ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த இராமர் கோயிலை முகலாய மன்னனான பாபரின் ஆணைப்படி இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக அப்பட்டமான பொய்யை திரும்பத் திரும்பக் கூறி மதவெறியை வளர்த்த கும்பல் இறுதியாக 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது.

அயோத்தியில் இராமர் கோயில் இருந்ததற்கும் அது இடிக்கப்பட்டதற்கும் அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதற்கும் வரலாற்று ரீதியான எத்தகைய ஆதாரமும் இல்லை. புகழ்பெற்ற இந்திய வரலாற்று ஆசிரியர்கள் பலரும் இத்தகைய கருத்தை ஆதாரப்பூர்வமாக உறுதிசெய்துள்ளனர். ஆனாலும் இல்லாத இராமர் கோயிலை இருந்ததாகக் கூறி இன்றுவரையிலும் மதவெறியை வளர்த்து வரும் இந்துத்துவா கும்பல் வடஇந்திய மாநிலங்களில் மதரீதியான கலவரங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இப்போது இந்துத்துவா கும்பலின் கவனம் தெற்கே திரும்பியுள்ளது. தென்னிந்தியாவிலும் இராமர் பெயரால் ஏதேனும் கலவரத்திற்கு வித்திடவேண்டும் என்பதற்காக திடீரென இராமர் பாலம் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.

சேதுக் கால்வாய்த் திட்டம் என்பது நூறாண்டு காலத்திற்கு மேலாக தமிழர்கள் வலியுறுத்திவரும் திட்டமாகும். பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றபோது பிரதமர் வாஜ்பாய் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை அளித்தார். ஆனாலும் திட்டப்பணிகள் தொடங்கப்படவில்லை. பா.ஜ.க. ஆட்சி மாறி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டவுடன் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது. இத்திட்டத்தின் தொடக்கவிழா மதுரையில் நடைபெற்றபோது பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி போன்றவர்கள் பங்கேற்றனர். அனைத்துக்கட்சித் தலைவர்களும் இவ்விழாவில் பேசினார்கள். பா.ஜ.க.வின் பிரதிநிதியும் இவ்விழாவில் பங்கேற்றார். அப்போது இராமர் பாலப் பிரச்சினையை அவரோ வேறு யாருமோ கிளப்பவில்லை. திட்டம் தொடங்கி 2 ஆண்டு காலம் கடந்த பிறகு திடீரென இராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்ற முழக்கத்தை இந்துத்துவாக் கும்பல் எழுப்பியுள்ளது.

இல்லாத இராமர் கோயில் பிரச்சினையை உருவாக்கி வட இந்திய மாநிலங்களில் மதக் கலவரங்களுக்குக் காரணமாகி அதையே அடிப்படையாகக் கொண்டு தேர்தல் வேளையில் வாக்குகளை அறுவடை செய்தவர்கள் இப்போது இல்லாத இராமர் பால பிரச்சினையை எழுப்பி தென்மாநிலங்களில் மதரீதியாக வாக்குகளை அறுவடை செய்ய முயலுகிறார்கள்.

இலங்கையில் இராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையை மீட்பதற்கு வானரப்படையுடன் கடலைக் கடக்கத் திட்டமிட்ட இராமன் இராமர் பாலத்தை கட்டியதாக இராமாயணம் கூறுகிறது. திருமா
லின் அவதாரமான இராமன் நினைத்திருந்தால் பாலம் கட்டாமலேயே தன் படையுடன் கடலைக் கடந்து சென்றிருக்க முடியும். இராமதூதனான அனுமான் மகேந்திர மலையில் ஏறி ஒரே தாவாகத் தாவிக் கடலைக் கடந்து இலங்கை சென்றதாக அதே இராமாயணம் கூறுகிறது.

இராமதூதனுக்கு இருந்த வலிமை இராமபிரானுக்கு இல்லாமல் போனதால் பாலம் கட்ட நேர்ந்ததோ என்னவோ?
அதுபோகட்டும். இராமபிரானால் கட்டப்பட்ட பாலம் ஆழ்கடலுக்குள் அமிழ்ந்துபோனது ஏன்?
இந்தியாவும் இலங்கையும் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரே நிலப்பரப்பாக இருந்தது எனவும் பின்னால் காலப்போக்கில் கடற்கோளின் விளைவாக கடல்நீர் உள்புகுந்து இருநாடுகளாகப் பிரிந்தன எனவும் நிலவியல் அறிஞர்கள் ஆதாரப்பூர்வமாக நிறுவியுள்ளனர். அவ்வாறு கடலுக்குள் மூழ்கிய மணல் திட்டுப் பகுதியைத்தான் இராமர் பாலம் என இந்துத்துவவாதிகள் கதை திரிக்கின்றனர். தங்கள் கதைக்கு உலகப் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான நாசா நிறுவனத்தை துணைக்கு அழைத்துள்ளனர். இராமர் பாலம் என்பது உண்மையில் இருப்பதாக நாசா நிறுவனம் கூறி அதற்கு ஆதாரமாக விண்வெளியில் இருந்து எடுத்த படத்தையும் வெளியிட்டிருப்பதாக பொய்யான செய்திகளை திட்டமிட்டுப் பரப்பிவருகின்றனர்.

நாசா வலைத்தளத்தில் பொய்யான கருத்துக்களை இவர்களே நுழைத்து அதை ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆனால் நாசா நிறுவனம் இவர்களின் கூற்றை அடியோடு மறுத்துவிட்டது.

ஊடகங்களின் மூலமாக இவர்கள் பரப்பி வரும் பொய்களுக்கு அளவே கிடையாது. எடுத்துக்காட்டாக சமஸ்கிருதம்தான் கணினித் துறைக்கு ஏற்றமொழி என நாசாவின் ஆராய்ச்சியாளரான ரிக்பிரிக்ஸ் என்பவர் கூறியிருப்பதாக ஒரு செய்தியை வலைத்தளத்தின் மூலம் இந்துத்துவா வாதிகள் பரப்பினார்கள். அத்தகைய பெயருடன் யாரும் நாசா ஆராய்ச்சி நிறுவனத்தில் இல்லை என்பது விரைவில் அம்பலமாயிற்று.

1999ஆம் ஆண்டு என்.எஸ். இராசாராம், டாக்டர் நட்வர்ஜா ஆகியோர் பின்வரும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்கள். "சிந்து சமவெளி முத்திரைகளை தாங்கள் கண்டறிந்துவிட்டதாக இவர்கள் தெரிவித்தார்கள். சிந்து சமவெளி நாகரிகத்துடன் ரிக்வேதத்தை இணைத்துக்காட்டுவது இவர்களின் நோக்கமாகும். பிற்காலத்தில் இந்தியாவிற்கு படையெடுத்து வந்தவர்கள் ஆரியர் என்பதை மறைத்து சிந்துசமவெளி நாகரிகத்துடன் ஆரியர்களை இணைத்துக்காட்டுவதற்காக இவர்கள் ஆதாரம் இல்லாத கற்பனைகளை வெளியிட்டனர்.

சிந்துசமவெளி நாகரிக காலத்தில் குதிரைகள் கிடையாது. ஆரியர் வருகைக்குப் பிறகே குதிரைகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. வரலாற்றுப்பூர்வமான இந்த உண்மையை மறைக்க சிந்து சமவெளி முத்திரைகளில் குதிரைகளைக் குறிக்கும் முத்திரை ஒன்று இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். அரப்பா மக்கள் பேசிய மொழி சமஸ்கிருதமே என்றும் இவர்கள் கூறினர். உண்மையில் சமஸ்கிருத மொழி தோன்றுவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது அரப்பா நாகரிகம் ஆகும்.

இவர்கள் எழுதிய நூலை முழுவதுமாகப் படித்த இந்தியவியலாளர்கள் மிகப்பெரிய மோசடியாக இதை வர்ணித்தனர். ஹார்வர்டு பல்கலைக் கழக சமஸ்கிருதப் பேராசிரியரான மைக்கேல் விட்சல் மற்றும் சில ஆய்வாளர்களும் இவர்களின் மோசடியை அம்பலப்படுத்தினார்கள்.

ஆனால் இந்துத்துவா வாதிகள் இராசாராம், ஜா ஆகியோரின் ஆய்வுளை ஊடகங்களின் வாயிலாக உலகெங்கும் பரப்ப இடைவிடாது முயற்சி செய்தனர். அதைப்போலவே இப்போதும் இராமர் பால பிரச்சினையில் பொய்யான செய்திகளைப் பரப்பி தங்கள் கருத்தை நிலைநாட்ட முயன்று வருகின்றனர்.
சேதுக் கால்வாய் திட்டம் என்ற தமிழன் கால்வாய் திட்டம் நீண்ட நெடுங்காலமாகத் தென் தமிழக மக்கள் கனவு கண்ட திட்டம் ஆகும். 100 ஆண்டுகாலத்திற்குப் பிறகு அது செயல்வடிவம் பெறத் தொடங்கியிருக்கிறது. இராமர் பாலத்தை இடிக்காதீர் என்ற பொய்யான கூக்குரலைக் கிளப்புவதன் மூலம் தமிழன் கால்வாய் திட்டத்திற்கு உலை வைக்க இந்துத்துவா வாதிகள் முயற்சி செய்கிறார்கள். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் பொருளாதார ரீதியில் பெரும் வளர்ச்சிபெறும். தூத்துக்குடி, குளச்சல் போன்ற துறைமுகங்கள் சர்வதேசத் துறைமுகங்களாக மாறும். இன்னும் பலவகையிலும் இந்த மாவட்டங்கள் வளம்பெறும். இதையெல்லாம் தடுக்கவே இந்துத்துவா வாதிகள் இல்லாத இராமர் பாலப் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.

-தென்செய்தி

புதன், ஜூன் 06, 2007

ஆதாம் ஒரு முஸ்லீமா?

இலங்கை முஸ்லிம்களுக்கு சொந்தமான நாடு உலமாக்களின் முஸ்லிம் கட்சி உரிமை கோருகிறது!

இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான மண் என்று சிங்களப் பேரினவாதிகள் கூறி வருவது அப்பட்டமான பொய். அது மிகவும் கண்டிக்கத்தக்க கூற்றாகும். முதல் மனிதன் தோன்றிய வரலாற்றை நோக்குகின்றபோது இந்த மண் முஸ்லிம்களுக்கே சொந்தமானதாகுமென உலமாக்களின் முஸ்லிம் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய `முஸ்லிம் பூர்வீகம்' நூலின் நான்காவது அறிமுக விழா அண்மையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்துரை வழங்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

`எழுவான்' வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் அதன் தவிசாளர் ஆசுகவி அன்புடீன் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அங்கு முபாறக் அப்துல் மஜீத் மேலும் பேசுகையில் கூறியதாவது;

"விண்ணுலகில் இறைவனால் படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்கள் முதலில் இலங்கைக்கே அனுப்பப்பட்டார்கள். அந்த முதல் மனிதன் இலங்கையில்தான் தோன்றினார் என்பதை வரலாறும் ஏற்றுக் கொள்கிறது.

ஆனால், அந்த முதல் மனிதன் முஸ்லிம் என்பதால் எமது பூர்வீகம் இலங்கையில்தான் ஆரம்பிக்கிறது. இந்த தேசத்தில் தோன்றிய முதல் மனிதன் ஆதம் - முஸ்லிம் என்பதால் இந்த மண் முஸ்லிம் சமூகத்திற்கே சொந்தமானதாகும். இதனை எவரும் மறுக்க முடியாது.

ஆனால் நாம் அப்படி உரிமை கொண்டாடவில்லை. சகல இனத்தவரையும் சகோதரர்களாகவே பார்க்கிறோம். எவரையும் குரோத மனப்பாங்குடன் நோக்கவில்லை. ஆனால் சிங்களப் பேரினவாதிகளின் விஷமப் பிரசாரத்தை முறியடிப்பது அவசியமாகும்.

அதற்கு எமது வரலாறு பற்றிய தெளிவு எம்மிடம் இருக்க வேண்டும். நாம் இந்த நாட்டின் வந்தேறு குடிகளா அல்லது எமது பாரம்பரிய பூர்வீகத் தாயகமா? இங்கு எமக்கிருக்கும் உரிமைகள் என்ன என்பது தொடர்பில் தர்க்கரீதியாக வாதிடும் ஆற்றல் எம்மிடையே உருவாக வேண்டும்.

முஸ்லிம் சமூகம் வாசிப்புத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால்தான் இவை பற்றிய போதிய அறிவு எமது மக்கள் மத்தியில் இல்லாமல் இருக்கிறது. இதனால் எம்மை மாற்று சமூகத்தினர் அடிமைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

அறிவுபூர்வமான எழுத்துகளை வாசிப்பதற்கு சமூகம் தயாரில்லை வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தமது வாசிப்பை மட்டுப்படுத்திக் கொள்கின்றனர். இது மிகவும் கவலை தரும் விடயமாகும், இவ்வாறான சமூகத்தினர் மத்தியில் தனி ஊடகம் ஒன்றை செயற்படுத்துவதற்கான ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே.

முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பில் ஒரு தெளிவான பார்வையை சகோதரர் நூநுல்ஹக் செலுத்தியிருக்கிறார். நுனிப்புல் மேய்வது போல அல்லாமல் ஆய்வு ரீதியாக எழுதும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது. அவருடைய எழுத்துகள் ஆழமான கருத்துகளைக் கொண்டவை என்பது மாத்திரமல்ல ஆதாரபூர்வமானவையாகவும் அமைந்துள்ளன.

முஸ்லிம் சமூகத்தின் வரலாறு பற்றிச் சொல்லக் கூடிய நூல்கள் மிகவும் குறைவாக உள்ள நிலையில் நூறுல்ஹக் `முஸ்லிம் பூர்வீகம்' நூலை வெளியிட்டிருப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டியதொரு விடயமாகும். முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கி வருகின்ற பல்வேறு பிரச்சினைகளை அவர் மிகத் தெளிவாக தைரியத்துடன் விவரித்துள்ளார்" என்றார்.

இவ்வைபவத்தில் தெ.கி.பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி கே.எம்.எச்.காவிதீன், மாவட்டநீதிபதி கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர், காதி நீதிவான் சம்சுதீன் மௌலானா, முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர் பீர்முஹம்மட் தம்பி, பிரதேச செயலாளர் யூ.எவ்.நியாஸ், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, அமைச்சர் அதாவுல்லாவின் பொதுஜனத் தொடர்பு அதிகாரி ஏ.பி.தாவூத், விரிவுரையாளர் எஸ்.எம்.அய்யூப், கலையன்பன் எஸ்.எம்.ஏ.அஸீஸ், தேசிய முஸ்லிம் கவுன்ஸில் உபதலைவர் எம்.ஐ.எம்.இஸ்திகார் உட்பட மற்றும் பல பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
தினக்குரல் இல் இருந்து.....

செவ்வாய், ஜூன் 05, 2007

கழிப்பறையில் பாரதி படம்:


திம்பூர் (கர்நாடகா): கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையில் மகாகவி பாரதியாரின் படத்தைப் போட்டு அவரை அவமரியாதை செய்துள்ளனர்.

சுதந்திர வேட்கையைத் தூண்டும் எண்ணற்றப் பாடல்களைப் புனைந்தவர் மகாகவி பாரதி. தமிழகத்தில் அவரது பாடல்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

வெள்ளையர் கண்களில் விரலை விட்டு ஆட்டியவை மகாகவியின் தேச பக்திப் பாடல்கள். தேச ஒற்றுமைக்காக அவர் எழுதிய பாடல்கள் இன்றளவும் நாட்டுக்கு உபயோகரமாக உள்ளன.

அவரை கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல்காரர்கள் அவமானப்படுத்தியுள்ளனர். திம்பூர் அருகே உள்ள கிப்னஹள்ளி கிராஸ் என்ற இடத்தில் மயூரா என்ற ஹோட்டல் உள்ளது.

இந்த ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையின் முகப்பில் மகாகவி பாரதியாரின் கம்பீரப் படத்தைப் போட்டு அவரைக் கேவலப்படுத்தியுள்ளனர். மகாகவியை அறிந்தவர்கள் இதைப் பார்த்து மனம் கொதித்துப் போயுள்ளனர்.

இதுகுறித்து ஹோட்டலின் கழிப்பறையை காண்டிராக்டுக்கு எடுத்திருப்பவர்களிடம் கேட்டால், இவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆண்கள் கழிப்பறை என்பதை குறிப்பிடும் வகையில் இந்தப் படத்தை இங்கே வைத்துள்ளோம் என்கின்றனர் படு கூலாக.

பாரதியாருக்கு நேர்ந்துள்ள இந்த அவமரியாதையை அந்த ஹோட்டலுக்கு வந்த அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தட்டிக் கேட்காதது ஏன், தடுத்து நிறுத்தாது ஏன் என்று புரியவில்லை.

தமிழர்களுக்கு மட்டும் இது அவமானமல்ல, ஒரு மாபெரும் கவியை கேவப்படுத்தியதன் மூலம் இந்தத் தேசத்தையும் அவமானப்படுத்தியுள்ளனர் அந்த ஹோட்டல்காரர்கள்.

உரியவர்கள் கவனித்து மகாகவிக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
http://thatstamil.oneindia.in/news/2007/06...harathiyar.html

சேது சமுத்திர திட்டத்தால் புலிகளுக்குதான் இலாபமாம், கைதி காஞ்சி காம கோடி!!!

``சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்குக் ரூ.2,427 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. திட்டம் முழுமையடைய குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் ஆகும். திட்டம் நிறைவேறும்போது, இன்றைய பண வீக்க நிலவரப்படியும் மற்றும் குறைந்தபட்ச வட்டிக் கணக்கின்படியும், இதன் மதிப்பை மிகவும் குறைத்துச் சொன்னால்கூட, ரூ.4000 கோடியைத் தாண்டி விடும்.

அதை ஈடு செய்ய மத்திய அரசு செயலில் இறங்கி, கட்டணம் வசூலித்து, கப்பல்களை கால்வாய் மூலம் செல்ல அனுமதித்தால், மேற்படி ரூ.4000 கோடியை வசூலிக்க சுமார் 30,300 முறை கப்பல்கள் கால்வாயைக் கடக்கவேண்டும். கப்பல் ஒன்றுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.13 லட்சம் என்றால் கூட இந்த இலக்கை எட்ட இன்னும் 20 வருடங்களுக்கு மேலாகும்.
இன்று இலங்கையைச் சுற்றி வருவதால் பெரிய கப்பல்களுக்கு ஒருமுறை ஆகும் செலவு (மாலுமிகள் சம்பளம், எரிபொருள், கப்பல் தேய்மானம் போன்றவை உள்பட) ரூ.3,50,000 தான்.

இன்று இந்தியத் துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிற்கும் மொத்தக் கப்பல்களின் எண்ணிக்கை, வருடம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட (அதிகபட்சம்) 20,000. இவற்றில் 16,000 கப்பல்கள் நமது நாட்டின் தென்பகுதியைக் கடப்பதில்லை.
சேது சமுத்திரம் கால்வாய் அகலப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட்ட பிறகும் 25,000 டன் எடைக்கு (னுறுகூ) மேலுள்ள கப்பல்களால் கால் வாயை கடக்க முடியாது. காரணம், அவற்றுக்கு தேவைப்படும் அளவுக்கு கால்வாயை ஆழப்படுத்த முடியாது. கால்வாய் முடிக்கப்படும் தருவாயில் உலகிலுள்ள பெரும்பாலான கப்பல்களின் எடை 30,000 டன்னைத் தாண்டிவிடும். இதற்கு எரிபொருளின் விலை உயர்வும் முக்கிய காரணமாகும்.

25,000 டன் எடையுள்ள கப்பல்கள் மட்டுமே பத்து வருடம் கழித்தும் புழக்கத்தில் இருந்தாலும், அவை சேது சமுத்திரம் கால்வாய் வழியாகவே செல்லவேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை. அதற்குப் பதிலாக இலங்கையைச் சுற்றிச் சென்றால் லாபம்தான். கொழும்பு துறைமுகத்தில் சலுகைகள் அதிகம். இந்தக் கால்வாய்த் திட்டத்தினால், மணலை அள்ளி எடுக்கும் காண்ட்ராக்டர்களைத் தவிர லாபம் அடையக் கூடிய ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள்தான். ஏற்கெனவே அந்த இயக்கம் ரகசியமாக இரண்டு விமானங்களை வாங்கியுள்ளது. இனி சிறிய கப்பல்களையும் வாங்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் உள்ளன என்று இந்தியக் கடற்படை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த ஒரு இயக்கத்தைத் தவிர வேறு யாருக்கும் எந்தப் பயனும் இத்திட்டத்தினால் இல்லை.’’

காஞ்சி காமகோடி மடத்தின் `காமகோடி இதழாகும் (ஜூன் 2007).

சனி, ஜூன் 02, 2007

இந்திய சினிமா வர்த்தகத்தில் முக்கியமான திருப்பம்.

டைட்டானிக்கை முந்திய ஸ்பைடர்மேன்-3. இந்திய சினிமா வர்த்தகத்தில் முக்கியமான திருப்பத்தை உருவாக்கியுள்ளது


ஹாலிவுட்டின் ஸ்பைடர்மேன்-3 திரைப்படம். இந்த திருப்பம் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியையும், இந்திய சினிமா தயாரிப்பாளர்களுக்கு அச்சத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பைடர்மேன்-3 படத்துக்கு எந்த வெளிநாட்டு படத்துக்கும் இல்லாத அளவுக்கு 588 பிரிண்டுகள் இந்தியாவில் போடப்பட்டன. இதில் ஆங்கிலம் 162, இந்தி 261, தெலுங்கு மற்றும் போஜ்புரி மொழிகளில் தலா 6 பிரிண்டுகள். பிராந்திய மொழியில் இந்திக்கு அடுத்தப்படியாக தமிழில் அதிக பிரிண்டுகள் (81) போடப்பட்டன. இது சராசரி தமிழ் படத்துக்கு போடப்படும் பிரிண்டுகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்பைடர்மேன்-3 இதுவரை இந்தியாவில் 57 கோடிகள் வசூலித்துள்ளது. இது டைட்டானிக் திரைப்படத்தின் இந்திய வசூலை (55.5 கோடிகள்) விட அதிகம். இன்னும் இப்படம் சில கோடிகளை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மெகா வசூல் காரணமாக ஹாலிவுட் சினிமாவின் டாப்-10 மார்க்கெட் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. ஹாலிவுட் சினிமாவின் ஆக்டபஸ் கரங்கள் இந்திய சினிமா வர்த்தகத்தை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டதற்கான அறிகுறியே ஸ்பைடர்மேன்-3யின் இந்த வெற்றி.

கோக், பெப்ஸியின் வருகை உள்ளூர் காளிமார்க், கடாமார்க்களை விழுங்கியதுபோல் சினிமாவிலும் நிகழுமா? அவசரமாக அலசப்பட வேண்டிய பிரச்சனை இது!
cinesouth.com
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us