சனி, டிசம்பர் 31, 2005

எனது புதுவருட உறுதிமொழி

நான் ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு உறுதிமொழிகளை எடுப்பேன். அது என்னவாகிலும் இருக்கலாம். அதன் படி நடக்கவேண்டும், அதனை நடத்திமுடிக்க வேண்டும் என்று, வருட ஆரம்பத்தில் நினைத்து உறுதிமொழி எடுப்பேன். ஆனால் வருட இறுதிக்குள் அது என்னை பாடாய்படுத்தி, முடிக்கவிடாமல் செய்து விடும். என்ன உறுதிமொழி எடுக்கிறேனோ அதை நடக்கவிடாமல் செய்வதுக்குரிய நிகழ்வுகள் அந்த ஆண்டுமுழுதும் நடக்கும்.

ஆதலால் இந்தமுறையும் ஒரு உறுதிமொழி எடுத்திருக்கிறேன். அது என்னவென்றால் ஹி.......ஹி...... "இனி உறுதிமொழி எடுப்பதில்லை" என்னும் உறுதிமொழியை எடுத்திருக்கிறேன்.

எங்கே வலைபதிபவர்களே உங்கள் உறுதிமொழிகளையும் கூறுங்கள் பார்ப்போம்.

அனவருக்கும் புதுவருடவாழ்த்துக்கள், உங்கள் உறுதிமொழிகளில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

சனி, டிசம்பர் 24, 2005

ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை

மீண்டும் பிறந்து வா

அண்ணா பரராஜ சிங்கமே
சிங்களப்படைகளின் கூலிகளால்
அனியாயமாக வீழ்ந்தாயே!
நியாயம் வாழவேண்டும் என
நீதியின் முன் எமக்காக
வாதாடிய எம் தங்கமே!
பாலன் பிறக்கும் நாளில்
பாதகர் காத்திருந்து
உம்மை சரித்தனரே!
அகிம்சை வழியில்
அழிவு வராதென
இறுமாந்து இருத்தாயா?
ஜயா இது ஜேசுவையே
காட்டிக் கொடுத்த
உலகம் ஜயா!
பாலனின் கோவிலில்
வைத்து உன் கதைமுடித்து
நாம் அவர்கள் எச்சமென காட்டியுள்ளனர்!
பாலன் பிறந்த நாளில்
இறந்தாயே மீண்டும் பிறந்துவா
ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்கவா.

வெள்ளி, டிசம்பர் 02, 2005

புலிவாழ் குகை


செருக்களம் சென்ற தன் வேங்கை
மார்பில் தைத்த கணைதாங்கி வீழ்ந்தான்
எனக்கேட்டு துடித்தாள் தாயொருத்தி,
மறு பிள்ளை இல்லையே
போர்க்கனுப்ப எனக்கென்று
தவித்தழுதாள் அன்று,
தன்பிள்ளை போர்க்களத்தில்
வீரமரணம் அடைந்தான்
என்ற செய்தி கேட்டு,
வீனே அழுது புலப்பாது
மறு பிள்ளை எனக்கில்லை இதோ
நான் இருக்கிறேன் என எழுந்த அன்னையே,
தருக்கர் பகை முடிக்க
செருக்களம் நோக்கி விரையும்
புலிவாழ் குகையே நிவிர் வாழி.
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us