ஞாயிறு, மார்ச் 09, 2008

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க முடியாது; நிபுணர் குழு அறிக்கையில் தகவல்!!!

சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராகவும் சேது சமுத்திர திட்ட பணியில் ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதை தொடர்ந்து ராமர் பாலம் அமைந்துள்ள பகுதிகளில் திட்டப் பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் ராமர் பாலம் பற்றி தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து மத்திய அரசு அந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு புதிய மனுவை தயாரித்தது.

சேது சமுத்திர கால்வாய் திட்ட பணி குறித்து ஆராய மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தது. இந்த நிபுணர் குழு ஆய்வு நடத்தி தனது அறிக்கையை மத்திய அரசுக்கு தாக்கல் செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த அறிக்கையின் நகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ராமர் பாலம் மனிதனால் உரு வாக்கப்பட்டது அல்ல, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் இந்தியாவின் பொருளா தாரம் வளர்ச்சி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறி விக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையும் இந்த நிபுணர் குழு அறிக்கையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ராமர் பாலம் பற்றி விஞ்ஞான பூர்வ ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதை பாது காக்கப்பட்ட புராதன சின்னங் கள் பட்டியலில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ராமச்சந்திரன் தலை மையிலான நிபுணர் குழு அறிவித்துள்ளது.

ராமர் பாலம் அமைந்துள்ள பகுதியில் பணிகளை மேற் கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை நடத்துகிறது.
நன்றி:-லங்கசிறீ
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us