வியாழன், ஆகஸ்ட் 23, 2007

நள்ளிரவில் கதவைத் தட்டி சோறு கேட்கும் குழந்தை - மதுரையில் புது பீதி!


மதுரை: மதுரையில் நள்ளிரவில் குழந்தை ஒன்று கதவை தட்டி சோறு கேட்பதாக தகவல் வெளியானதை அடுத்து மக்கள் பீதியில் உள்ளனர்.

மதுரை மதிச்சியம், செனாய் நகர், கரும்பாலை, ராமராயர் மண்டகப்படி, வைகை வடகரை ஆகிய வைகை ஆற்றையொட்டியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் குழந்தை ஒன்று ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி சோறு கேட்பதாக பரபரப்பான தகவல் பரவியுள்ளது.

'சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு வீட்டில் குழந்தைக்கு அம்மை வந்தபோது அந்தக் குழந்தையை அவர்கள் எரித்து விட்டார்களாம். அந்தக் குழந்தைதான் தற்போது நள்ளிரவில் வீடு வீடாக வருவதாக' குழந்தையை 'நேரில் பார்த்தவர்கள்' கூறி வருகின்றனர்.

இந்தப் புதிய வதந்தியால் இப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.

பெரும்பாலான வீடுகளில் விடிய விடிய மின்சார விளக்கு எரிந்த நிலையிலே காணப்படுகின்றது. இரவு சினிமாவுக்கு செல்வதை கூட மக்கள் தவிர்த்து வருகின்றனர். தங்கள் இஷ்ட தெய்வ கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூசை செய்து ஆறுதல் பெறுகின்றனர். வீடு, கடைகளில் வேப்பிலைகளும் கட்டியுள்ளனர்
-தற்ஸ் தமிழ் இல் இருந்து......

தண்ணீர் கேட்கும் 'பாட்டியும், பேத்தியும்': கொடுக்க மறுத்தால் ரத்தவாந்தி!!!




திருநெல்வேலி: ஒரு பாட்டி தனது பேத்தியுடன் தண்ணீர் கேட்டு வருவார். அவருக்கு தண்ணீர் கொடுக்க மறுத்தால் அந்த வீடு தீப்பிடித்து எறியும், வீட்டில் இருப்பவர்கள் ரத்த வாந்தி எடுத்துப் பலியாவார்கள் என்று கிளம்பியுள்ள பீதியால் நெல்லை மாவட்டம் கழுகுமலைப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

பீதியில் ஆழ்ந்துள்ள அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் முன்பகுதியில் வேப்பிலைகளை கட்டி வைத்துள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:

அனைத்து வீடுகளுக்கும் ஒரு பாட்டி தனது பேத்தியை அழைத்து வந்து தண்ணீர் கேட்பார். கொடுக்க மறுப்பவர்கள் வீடு தீப்பற்றி எரியும். கொடுப்பவர்களுக்கு ரத்தவாந்தி ஏற்படும் என்றும் புரளி கிளம்பியது.

சாத்தூர் பகுதியில் கிளம்பிய இந்த புரளி தீடீரென கழுகுமலை பகுதிக்கும் பரவியது. இதைத் தொடர்ந்து பீதியடைந்த மக்கள் எங்கே தங்கள் வீட்டுக்கு அந்த பாட்டி வந்து விடுவாரோ என்று அச்சம் அடைந்த நிலையில் ஒன்று கூடி ஆலோசித்தனர்.

பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள் ஆலோசனையின் படி ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளின் முன்பகுதியில் வேப்பிலையை கட்டி வைத்துள்ளனர். அவ்வாறு வேப்பிலை கட்டி வைத்திருக்கும் வீடுகளுக்கு அந்த பாட்டி வரமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது.

-தட்ஸ் தமிழ் இருந்து.......

புதன், ஆகஸ்ட் 22, 2007

ஜெர்மனியில் இனவெறி : ஓடஓட விரட்டி இந்தியர்கள் மீது தாக்குதல்- 8 பேர் காயம்!!!

ஜெர்மனியின் மிக்லன் நகரில் ஒரு கண்காட் சியையொட்டி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கலை நிகழ்ச்சியில் இந்தியர்களும் கலந்து கொண்டனர். ஏராளமான இந்தியர்கள் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்தனர்.


அப்போது ஜெர்மனி நாட்டவர்கள் திடீர் என்று இந்தியர்களுக்கு எதிராக கோஷம் போட்டனர். இந்தியர்கள் மீது 50க்கும் மேற்பட்டவர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். பாட்டில்களாலும் தாக்கினார்கள். நாற்காலிகளை தூக்கி இந்தியர்களை அடித்தனர்.

இந்தியர்கள் உயிர் பிழைக்க சிதறி ஓடினார்கள்.உயிர் தப்ப அருகில் உள்ள அறையில் புகுந்து தாளிட்டுக்கொண்டனர். அந்த கலவரக்கும்பல் விடவில்லை. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து இந்தியர் அடித்து உதைத்தனர்.

போலீசார் பெரும்பாடுபட்டு வன்முறை வெறியாட் டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினார்கள்.

இந்தியர்களுக்கு எதிரான இந்த இனவெறி தாக்குதலில் 8 இந்தியர்கள், 2போலீசார் காயம் அடைந்தனர்.

லங்காசிறியில் இருந்து............

திங்கள், ஆகஸ்ட் 20, 2007

10 வருடங்களுக்கும் மேலாக இலங்கை சிறைகளில் வாடும் 33 இந்தியர்கள்!

தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 33 இந்தியர்கள் செய்யாத குற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை சிறையில் வாடுவதாக பொன்னானியைச் சேர்ந்த அஷ்ரப் இலங்கையில் இருந்து தனது நண்பர்களுக்கு அனுப்பிய ஈ-மெயிலின் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

பொன்னானியை அடுத்து மரக்கடவையைச் சேர்ந்த பி.அஷ்ரப், ஆன்டனி சுதி (கேரளா), மரியா ஜான் (தூத்துக்குடி) உள்ளிட்ட பலர் இலங்கைச் சிறைகளில் விளக்கமறியல் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் என்று இலங்கை நீதிமன்றம் அறிவித்த எம்.சண்முக சுந்தரம் (கேரளா), எஸ்.எம்.புகாரி (திருச்சி) , என்.தங்கவேல் (மதுரை) உள்ளிட்ட பலருக்கு இலங்கை நீதிமன்றம் குற்றப்பத்திரிகை அளித்தும் இன்னும் விசாரணைக் கைதிகளாகவே சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நீர்கொழும்பு, வெலிக்கடை , அனுராதபுரம் ஆகிய சிறைகளில் பத்து ஆண்டுகளாக வெளி உலகத்தைப் பார்க்காமல் இவர்கள் வாழ்கின்றனர். வேலை தேடி 10 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் சென்றபோது இலங்கை விமான நிலையத்தில் 63 பேர் போதைமருந்து கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். கைதான 30 பாகிஸ்தானியர்களுக்கு குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தண்டனை வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் அரசு தலையிட்டு சார்க் உடன்படிக்கையின்படி அவர்களை விடுதலை செய்து பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்றது.

ஆனால், இந்திய கைதிகள் ஜனாதிபதி, பிரதமர் சோனியா , வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனையுடன் அந்த ஈ- மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி - தினக்குரல்

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007

தமிழ் நாட்டில் "ஆணிவேர்" ?


இலங்கை தமிழர்களின் அவல நிலையை சித்தரிக்கும் வகையில், "ஆணிவேர்" என்ற ஒரு தமிழ் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழ்நாட்டில் திரையிட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தணிக்கை குழுவின் அனுமதி கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

"ஆணிவேர்"

இலங்கை (Srilanka) அரசாங்கத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக யுத்தம் நடந்து வருகிறது. தமிழர்கள் வசிக்கும் பகுதியை தனி நாடாக அறிவிக்கக்கோரி, விடுதலைப்புலிகள் போராடி வருகிறார்கள்.

இதனால் இலங்கை அரசாங்கம், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் அ வலநிலையை சித்தரிக்கும் வகையில், ஒரு தமிழ் திரைப்படம் தயாராகி இருக்கிறது. முழுக்க முழுக்க இலங்கை தமிழ் பகுதி களில் உருவான இந்த படத்துக்கு, "ஆணிவேர்" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

கதையின் நாயகனாக நந்தாவும், நாயகியாக மதுவிதாவும் நடித்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இலங்கை தமிழ் டாக்டராக நந்தாவும், இந்தியாவை சேர்ந்த பத்திரிகை நிருபராக மதுமிதாவும் வருகிறார்கள்.

கதை

தமிழ்நாட்டை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மதுமிதா தனது பத்திரிகைக்கு செய்தி சேகரிக்க, யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். அங்கு கடமையே கண்ணாக தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் கோபக்கார டாக்டர் நந்தாவை சந்திக்கிறார். நட்பு கொள்கிறார். போரினால் மக்கள் படும் அவலங்கள், மதுமிதாவையும் பாதிக்கிறது. அந்த மக்களுடன் ஒன்றிப்போகிறார்.

வரலாற்று பதிவாகிவிட்ட யாழ்ப்பாண இடப்பெயர்வு, நந்தாவையும், மதுமிதாவையும் பிரித்து விடுகிறது. மதுமிதா, தமிழ்நாட்டு க்கு திரும்புகிறார். சில வருடங்களுக்குப்பின், அவர் மீண்டும் இலங்கைக்கு செல்கிறார். தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், நந்த ‘வை தேடி அலைகிறார். இருவரும் இணைந்தார்களா, இல்லையா? என்பதை படத்தின் முடிவு விளக்குகிறது.

ஜான் மகேந்திரன்

"உதிரிப்பூக்கள்", "நெஞ்சத்தை கிள்ளாதே" ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன், இந்த படத்தை டைரக்டு செய்து இருக்கிறார்.

"ஆணிவேர்" படம், சென்னையில் பத்திரிகை நிருபர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படம் முடிந்ததும், டைரக்டர் ஜான் மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

"இலங்கை தமிழர்களின் அவலங்களை விளக்கும் "ஆணிவேர்" படத்தின் படப்பிடிப்புக்கு, ஒரே ஒரு காமிரா மட்டுமே பயன்ப டுத்தப்பட்டது. வேறு எந்த உபகரணமும் பயன்படுத்தப்படவில்லை. முழுக்க முழுக்க தமிழர்களின் ஒத்துழைப்புடன் படப்பிடிப்பு நடந்தது. யுத்தத்தில் கை-கால்களை இழந்தவர்கள் கூட, படப்பிடிப்பில் கலந்துகொண்டு வேலை செய்தார்கள்.

வெளிநாடுகளில்...

இந்த படம் லண்டன் (London), கனடா (Canada), சுவிட்சர்லாந்து (Switzerland) போன்ற வெளிநாடுகளில் திரையிடப்பட்டு, வெ ற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, "ஆணிவேர்" படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்து இருக்கிறோம். தணிக்கை குழு அனுமதிக்குமா, அனுமதிக்காதா? என்று தெரியவில்லை. அப்படியே அனுமதித்தால், இந்த படம் எடுத்ததின் பலனை நாங்கள் அடைவோம்.'' இவ்வாறு டைரக்டர் ஜான் மகேந்திரன் கூறினார்.

-நன்றி தமிழ்ப்பிரியம்.

வியாழன், ஆகஸ்ட் 16, 2007

இராமர் பாலத்தை இடிப்பதற்கு, அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்.

சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலம் இடிக்கப்படுவது அமெரிக்க மற்றும் விடுதலைப் புலிகளின் கூட்டுச் சதி என்று விஸ்வ இந்துப் பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது.

ராமர் பாலம் இடிக்கப்படுவதைக் கண்டித்து எதிர்வரும் 12ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகவும் விஸ்வ இந்துப் பரிஷத் அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று விஸ்வ இந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
இதன்போது இக்கருத்தை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:

ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான ஆயம் இத்திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தபோதிலும் ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது குறித்தும், மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யுமாறு கூறியிருந்தது.

ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறிராமர் பாலம் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மேலும் ராமர் பாலம் இடிக்கப்படுவதால் திருகோணமலை அருகே உள்ள புல்மோட்டைப் பகுதியில் கனியவள இல்மனைட் அதிக அளவில் கிடைக்கும் என்பதால் அதனை இடிப்பதற்கு விடுதலைப் புலிகளும் சதி செய்திருக்கின்றனர்.

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக மத்திய அரசு அவசர அவசரமாக ராமர் பாலத்தை இடிக்க முயற்சி செய்து வருகின்றது. இதனால் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றார். (க9)

நன்றி - சுடர் ஒளி

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2007

தமிழ்பெண் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு வீட்டில், 10 வருடங்களாக அடிமை சிறை.

சிலாபத்தை சேர்ந்த அனிஸ்டா மேரி (Anista Marie) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 10 வருடங்களாக அடிமையாக சிறைவைக்கப்பட்டுள்ளார். அந்த வீட்டில் உள்ள ஒருவருடைய அனுதாபம் அவருக்கு கிடைக்காமல் போயிருந்தால் நேற்று கூட அந்த பெண்ணால் (அனிஸ்டா மேரி) arabnews.com ற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்க முடிந்திருக்காது. அப்பெண் தொலைபேசி மூலம் arabnews.com தெரிவித்த விபரத்தின் சுருக்கம்:

நான் இங்கு வரும் போது எனக்கு வயது 30. இப்போது எனக்கு வயது 40.
நான் ஒருபோதும் விடுமுறை லீவு எடுத்ததில்லை . எனக்கு கடந்த 8 வருடங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனக்கு இலங்கையில் 4 குழந்தைகள் உண்டு.எனது கணவர் இறந்துவிட்டார். அவரின் இறப்புசெய்தி கூட மூன்றாம் நபர் ஒருவரின் மூலம் அவர் இறந்து 2 வருடங்களின் பின்னர்தான் எனக்கு தெரிந்தது.

நான் இருக்கும் வீட்டில் 3 பெண்களும் 4 இளம்பெண்களும் உள்ளனர். வீட்டில் ஆண்கள் யாரும் கிடையாது. நான் போக விரும்புவதாக தெரிவிக்கும் போதெல்லாம் என்னை தாக்கினார்கள். சம்பளத்தைபற்றி கதைத்தால் நிலமை மோசம்.

முதல் இரண்டு வருடங்களும் நிலமை சாதாரணமாக இருந்தது. சம்பளம் தந்தார்கள். நான் அவர்களுடன் எல்லாம் வெளியில் சென்றுவந்தேன். நான் இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பொருட்களும் உடுப்புகளும் எனது குழந்தைகளுக்காக வாங்கி வைத்திருந்தேன். அவைகள் எதுவும் இன்று பிரயோஜனப்படப்போவதில்லை. காரணம் குழந்தைகள் யாவரும் வளர்ந்துவிட்டனர்.அந்த குடும்பத்தில் உள்ள ஒரு இளம்பெண் மட்டும் அனுதாபம் உள்ளவர்.

சாப்பாடு பற்றி எதுவித பிரச்சினையுமில்லை. பிழையான வாக்குறுதிகளை நம்பி இருந்துவிட்டேன்....

நான் அவர்களை நீண்டகாலமாக நம்பிவிட்டேன். இப்ப நான் எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்டேன். என்னை வீட்டிற்கு போகவிட்டு,எனது குழந்தைகளை பார்த்து எனது சொந்த மண்ணில் என்னை சாக விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Marie தன்னை அந்த வீட்டிலிருந்து மீட்கும்படி அதிகாரிகளிடம் கேட்கிறார். ஆனால் அவர் இருக்கும் வீடு எங்கே உள்ளது என்று அவருக்கு தெரியவில்லை. ஆனால் தான் தங்கியிருக்கும் வீடு Riyadh ல்தான் உள்ளது என்பதனை அந்த வீட்டிற்க்கு வருகை தந்திருந்த ஒரு பெண் விருந்தாளி மூலம் அறிந்து வைத்துள்ளார்.

அந்த பெண்ணுடன் கதைத்த பின்னர் arabnewsஉடனடியாக K.B.G. Premadasa வை (Sri Lankan Embassy’s secretary of labor affairs) தொடர்புகொண்டனர். Marie, அரப்நியூஸ்ஸிற்கு கொடுத்த தொலைபேசி எண்ணுக்கு Premadasa தொடர்புகொண்டு கதைத்தபோது ஒரு பெண்தான் கதைத்துள்ளார். அவரும் அவருடைய வீடு எங்கு உள்ளது என்ற விபரத்தை தெரிவிக்க மறுத்துள்ளார். இதுபற்றி தூதரகம் உள்ளூர் அதிகாரிகளிடம் தொடர்புகொள்ளும் பிரேமதாஸா தெரிவித்துள்ளார்.

மொழிபெயர்ப்பில் தவறுகள் இருந்தால் பொருத்துக்கொள்ளுங்கள் --- Shankarlaal

அரப்நியூஸில் வெளியான செய்தி:

Maid Claims Slave Status in Household
Mohammed Rasooldeen, Arab News

RIYADH, 14 August 2007 — The woman on the other end of the phone line had a disturbing story to tell. Speaking in Tamil, Anista Marie of Chilaw, a coastal town about 70 km from Colombo, says she has been imprisoned in a house in Riyadh for the past 10 years. Were it not for a sympathetic family member, she may not have been able to make the phone call to Arab News yesterday.

“When I came here I was 30 years of age,” she told this reporter. “Now I am 40 and I have never taken holiday leave, nor have I been paid in the past eight years.”

Marie is asking authorities to rescue her from the Saudi household, but she is unsure of her location. She said she only knows that she is in Riyadh because a maid from a visiting family told her.

After speaking to the woman, Arab News immediately contacted K.B.G. Premadasa, the Sri Lankan Embassy’s secretary of labor affairs, who called the number provided to Arab News by Marie, and spoke to whom he believes is the maid’s sponsor, a woman. “She refused to give her whereabouts,” he said, adding that the embassy was going to contact local authorities about the case.

Marie, whose voice was trembling, said she had four children back home. She says that her husband, a fisherman, has passed away. She said she learned of her husband’s fate from a third party two years after his death.

According to the woman, the household consists of three women with four teenage daughters. “There are no men in the house,” she said. “They assault me when I say that I want to go home. It’s worse when I talk about the salary.”

According to the maid, the first two years were relatively normal: She was paid her salary and went out with the family.

“Back then I bought things for my children,” she said. “They’re still packed in two suitcases and the clothes can’t be used now because they’ve grown out.”

Marie says that one of the teenage girls sympathizes with her, which is possibly why she was able to contact Arab News.

Food isn’t an issue, she pointed out, but she’s been living under false promises for so long that she says that at this point she’s only interested in escape.

“I believed them for so long. Now I have lost all hope,” she said. “Let me go home and see my children and die on my soil.”

Last year 64-year-old Filipino Leonora Somera was discovered to have worked 18 years without pay, partly as a shepherd in Al-Baha, about 275 km south of Jeddah. Her situation was exacerbated by the fact that the son of her sponsor, who had passed away, was also not providing her with sustenance. Somera is still in a women’s shelter in Jeddah, run by the Philippines Consulate, fighting to recoup nearly 20 years of back pay.

http://www.arabnews.com/?page=1§ion=0&...;m=8&y=2007
யாழ்.காமில் இருந்து.........

வியாழன், ஆகஸ்ட் 09, 2007

செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்!!!


ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார்.

நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும்.

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த செல்போன் தவறி விழுந்தது. செல்போனில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது. சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் செல்போனை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை.

அப்போது மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக செல்போனை அரச இலைகளால் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். செல்போன் முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது.

செல்போன் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது.

அரச இலை காம்பை பேட்டரிக்கும் செல்போனில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆனது. இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரவி தெரிவித்தார். அதை யாரும் நம்பவில்லை. அதன்பிறகு செல்போன் வைத்திருந்தவர்கள் சிலர் அரச இலையை வைத்து பரிசோதித்து பார்த்தனர். அவர்களது செல்போனிலும் சார்ஜ் ஆனதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

பசுமையாக உள்ள அரச இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே சார்ஜ் ஆகிறது. இலையின் காம்பை செல்போனின் பின்பக்க மூடியை திறந்து பேட்டரி பின்னுக்கு இடையில் வைத்து 10 நிமிடம் ஆனதும் செல்போன் முழுமையாக சார்ஜ் அடைந்து விடுகிறது. மின்சார சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் அதற்கான அடையாளம் தெரியும்.

அரச இலை மூலம் செய்தால் சார்ஜ் ஆவது நமக்கு தெரியாது. 10 நிமிடம் கழித்து பார்த்தால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அரச இலை செல்போனில் இருக்கும்வரைதான் சார்ஜ் இருக்கும். இலையை எடுத்துவிட்டால் சார்ஜ் முழுவதும் போய்விடும்.

வெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது சார்ஜர் எடுத்துச் செல்ல மறந்து விடுபவர்கள், அந்த பகுதியில் பசுமையாக உள்ள அரச இலையை பயன்படுத்தி செல்போனை சார்ஜ் செய்து பேசலாம் என்கிறார் ரவி.

நன்றி:தமிழ்முரசு

வியாழன், ஆகஸ்ட் 02, 2007

ஓகஸ்ட் புகைப்படபோட்டிக்கான எனது படைப்புக்கள்.

அட்டாக் பாண்டி!
(போட்டிக்கான படம் 1.)

இப்படி இருந்த நான்,

இப்படி ஆயிட்டன்.

எங்க வீட்டு காந்திமதி பாட்டி.

(போட்டிக்கான படம் 2.)

புதன், ஆகஸ்ட் 01, 2007

எங்கள் அவல நிலை கேளீர்!!!

எங்கள் அவல நிலை பாரீர் அட சா.....கேளீர்!!!
வானொலியை நிறுத்தி விட்டு கேட்கவும்.


http://vaseeharan.imeem.com/music/0Qe4njoa/agencykaran_emathidaan/இல் இருந்து........
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us