திங்கள், டிசம்பர் 08, 2008

தமிழக தலைவர்கள் அரசியல் கோமாளிகள்!!! -சரத்பொன்சேகா

சென்னை:தமிழக தலைவர்களை அரசியல் கோமாளிகள் என்று விமர்சனம் செய்துள்ள இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழம் கொந்தளிக்கும் என இலங்கைக்கு மத்திய அரசு உடனடியாக எச்சரிக்கை விடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

பொன்சேகா தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என கூறியிருப்பதற்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு காரணமான இலங்கைப் படையினரின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று இந்தியா எச்சரிக்கை விட வேண்டும் என அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முறையிட்டு இருக்கிறோம்.

பொன்சேகாவின் நாக்கொழுப்பு

இதனால், ஆத்திரமடைந்துள்ள சிங்களப் போர்ப்படை தளபதி சரத் பொன்சேகா, தமிழக அரசியல் தலைவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக, அரசியல் கோமாளிகள் எனத் தரம் தாழ்ந்து துடுக்குத்தனமாக விமர்சனம் செய்து தனது சிங்கள இனவெறியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது இந்த நாக்கொழுப்பு தமிழர்களின் தன்மானத்திற்கு விடப்பட்டுள்ள சவாலாகும்.

இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம். அதில் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்கள்தான் என்றும், சிங்களவர்களுக்கு அடிமைகளாக வாழ்வதற்கு தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கொக்கரித்தவர் இவர்.

இப்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரையும் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதன் மூலம் தனது சிங்கள இனவெறியை மீண்டும் ஒருமுறை அடையாளம் காட்டியிருக்கிறார் சிங்களப் போர்ப்படை தளபதி.

இலங்கையைப் பொறுத்த வரையில் மகிந்த ராஜபக்ச அரச தலைவராக இருந்தாலும், போர்ப்படை தளபதியான சரத் பொன்சேகா தான் அனைத்து அதிகாரமும் படைத்த சர்வாதிகாரி போன்று பேசியும், செயற்பட்டும் வருகின்றார்.

எனவே, அவர் பேசியிருப்பதைத் தனிப்பட்ட ஒருவரின் விமர்சனம் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. இலங்கையின் குரலாகவே, சிங்கள அரசின் குரலாகவே அவரது விமர்சனத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

எனவே, சரத் பொன்சேகா கோமாளித்தனமான தனது விமர்சனத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.

முப்படைகளின் தலைவர் என்ற முறையில் ராஜபக்சவும், பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். இதனை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

தமிழகம் கொந்தளிக்கும்

இன்னும் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கத் தவறினால், இங்குள்ள இலங்கைத் தூதரையும், இதர அதிகாரிகளையும் இந்தியாவில் இருந்து வெளியேற்றுவோம் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும்.

சிங்களப் படைத் தலைவரின் இந்த காட்டுமிராண்டித்தன விமர்சனத்தை முதலமைச்சர் கருணாநிதி உடனடியாக பிரதமரின் கவனத்திற்கும், வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

இலங்கை பகிரங்கமான மன்னிப்புக் கேட்காவிட்டால், தமிழகம் கொந்தளிக்கும் எனத் டெல்லிக்கு எடுத்துக் கூற வேண்டும்.

அத்துடன் வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை இன்னும் காலம் தாழ்த்தாமல் 48 மணி நேரத்திற்கு உள்ளாக கொழும்புக்கு அனுப்பி நேரிலும் எச்சரிக்கைவிடச் செய்வதுடன், அங்கு தமிழினப் படுகொலைக்குக் காரணமான சண்டை நிறுத்தப்படுவதன் மூலம் தமிழர்களின் தன்மானத்திற்கு இலங்கை போர்ப்படைத் தளபதியால் விடப்பட்டுள்ள அறைகூவலுக்குச் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.

அது ஒன்றுதான் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை அமைதிப்படுத்த முடியும் எனத் டெல்லிக்கு எடுத்து கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.


நன்றி தற்ஸ் தமிழ்

சனி, நவம்பர் 22, 2008

என்னை அடித்தவன்!!!


என்னை அடிதவனுக்கும் நான் ஆயுத உதவிகள் செய்வேன்.

"இன்னா செய்தாரே ஒருத்தர் அவர் நாண நன்நயம் செய்துவிடல் நன்று."
இவன் தேசியவியாதி.

புதன், நவம்பர் 05, 2008

ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் பலரும் உயிரை இழந்து வரும் வேளையில்,பிறந்தநாள் ரத்து: கமல்ஹாசன்



ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் பலரும் உயிரை இழந்து வரும் வேளையில், தன்னுடைய பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நவம்பர் 7-ஆம் தேதியை என் பிறந்தநாளாகக் கொண்டாடி மகிழ ஆவலாய் உள்ள என் இயக்கத் தோழர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

ஈழத்தில் நிகழ்ந்து வரும் போரினால் உயிரைப் பலரும் பிறந்த நாட்டையே பலரும் இழந்து வரும் இவ்வேளை யில், தனி ஒரு மனிதனின் பிறப்பு கொண்டாடப்படும் தகுதியை இழக்கிறது.

10 ஆயிரம் ஆண்டுகளே நிரம்பப் பெற்ற நமது மனித கலாச்சாரம் இன்னும் முழுமை பெறாத நிர்மாணப் பணி. அதற்குப் பேருதாரணமே உலகெங்கிலும் நிகழும் போர்கள்தாம்.
மத, ஜாதி, இன, மொழி, நிற வேறுபாடுகளைக் கூறி நம் இனத்தையே கூறுபோட்டு விற்கும் வியாபாரம் கலந்த அரசியலுடன் எனக்கு இருந்து வந்த கருத்து வேறுபாடு இப்போது வேரூன்றி நிலைத்து விட்டது.

அத்தகைய வியாபார அரசியல் நடத்தியதால் நிகழ்ந்த அவலம் தான் ஈழப்போரும் கூட. இலங்கை நமது அண்டை வீடு என்ற சமீபம் போக, ஈழப்போர் நம் தற்கால தமிழ் சரித்திரம் என்ற நெருக்கமும் என்னை எந்தக் கொண்டாட்டத்திலும் மனம் லயிக்க முடியாமல் தடுக்கிறது.

இதை ஒரு அரசியல் விமர்சனமாக நான் சொல்லவில்லை.மனிதனே மனிதனைக் கொல்லும் இந்தப் போர் இந்த நவீன யுகத்தின் ஊடகங்களால் நம் காது கேட்க, கண்ணுக்கெட்டும் தூரத்தில் நடக்கிறது.

இதன் முடிவு என்னவாக இருக்கும் என யூகிக்கும் அரசியல் சாதுர்யம் எனக்கில்லை. நான் நிஜமாகவே சாதாரணன். மனித சோகங்கள் என்னை வெகுவாக பாதிக்கின்றன.

இந்தச் சோகச் சூழலுக்கு முடிவு சொல்லும் ஞானமில்லாவிடினும், அடுத்த வீட்டில் அடுத்தடுத்து இழவுக் கூட்டங்கள் நடக்கும் இவ்வேளையில் நம் வீட்டில் குதூகலக் கொண்டாட்டங்கள் நடப்பது மனித நேயம் சார்ந்த செயலாக இராது.

வழக்கமாக நான் பிறந்ததைக் கொண்டாடும் இத்தினத்தை நான் போற்றும் மொழியை பேசிய ஒரே குற்றத்திற்காக மட்டுமே இறந்து கொண்டிருக்கும் சாமானியருக்கு அனுதாபம் தெரிவிக்கும் நாளாகச் செலவிடுங்கள். இறந்தவருக்கு இரங்கல் சொல்லும் நாளாகச் செலவிடுங்கள்.

நான் பிறந்ததற்கான பயன்களில் ஒன்று இதுவாகவும் இருப்பின் பெருமை கொள்வேன்.
இவ்வாறு கமல்ஹாசன் அந்த அறிக்கையில் கூறினார்.

நன்றி:-தமிழ்வின்

திங்கள், நவம்பர் 03, 2008

இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியாவின் நிவாரண உதவிகளை இலங்கை அரசாங்கத்திடம் கொடுப்பதை விட கடலில் கொட்டுவது சிறந்தது

இலங்கைத் தமிழர் பிரச்சி;னை தொடர்பாக இந்திய மத்திய அரசிடம் மேலும் அதிகமான ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்திக்க இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.



இலங்கையில் கடந்த சில மாதங்களாக தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. தமிழர்களின் குடும்பங்கள் காட்டுக்குள் மர நிழல்களில் தங்கியுள்ளனர். இது தொடர்பான குறுந்தகடுகள் தமிழகத்தில் பலருடைய பார்வைக்குக் காட்டப்பட்டுள்ளன.

அக்டோபர் 2-ம் திகதி இந்த பிரச்சினை தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகள் தமிழகத்தில் வேகமடைந்தன.

அக்டோபர் 14-ம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த, மத்திய அரசு அடுத்த 2 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தை சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ய நேரிடும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தக் கெடு கடந்த 28-ம் திகதியுடன் முடிந்துள்ள நிலையில் இந்திய, மத்திய அரசின் முயற்சிகள் திருப்தி தரும் வகையில் இருப்பதாகக் கூறிய தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட மாட்டாது என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என தமிழக பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்: தமிழக மக்கள், அரசியல் கட்சிகள், திரைத் துறையினர், வணிகர்கள் என எல்லோரும் தந்த அழுத்தம் காரணமாகத்தான் மத்திய அரசு இதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது என்பது ஆறுதலளிப்பதாக உள்ளது என கூறியுள்ளார்.

தமிழர்களைத் தாக்கினால் யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் இருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு, தற்போது தமிழக மக்களும், இந்திய அரசும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பார்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழ்நாட்டில் எழுந்த எண்ணங்களுக்கு இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ பயப்படுவாரா என சிவாஜிலிங்கத்திடம் கேட்டபோது, தற்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அந்த அச்சம் ஏற்பட்டுள்ளது எனவும் இந்த உணர்வு இந்தியா முழுவதும் பரவும்போது மகிந்தவின் தைரியம் குறையும் எனவும் கூறியுள்ளார். இதனால் இலங்கை ஜனாதிபதியின் மனதில் மாற்றங்கள் ஏற்படும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் திரட்டப்படும் உணவு, மருந்துப் பொருள்களும் நிவாரண நிதியும் இலங்கை அரசு மூலமாக அனுப்பப்பட்டால் தமிழர்களுக்கு முழுமையாகக் கிடைக்க வாய்ப்பு இருக்குமா என கேட்டதற்கு, அது சாத்தியமற்றது என சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் திரட்டப்படும் உதவிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள் மூலம் அனுப்பினால் அந்த உதவிகள் தமிழ் மக்களை முழுமையாகச் சென்றடையும் எனவும் இலங்கை அரசாங்கத்திடம் கொடுப்பதை விட கடலில் கொட்டுவதோ அல்லது தீ வைத்துக் கொளுத்திவிடுவதோ சிறந்தது எனக் கூறிய சிவாஜிலிங்கம், இது குறித்த உண்மை நிலைமையை தமிழக அரசுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் விளக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பில் 1,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பகுதியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இது விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல. அவர்களுடைய தந்திரத்தின் ஒரு பகுதியாகத்தான் இது இருக்கும். தற்போது, ராணுவத்தினரை விடுதலைப்புலிகள் தமது பகுதிக்குள் நுழையவிட்டுள்ளனர். பின்னாளில் என்ன நடக்கும் என்பது தெரியாது. போரில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாக இராணுவம் சார்பில் வெளியிடப்படும் தகவல்கள் பொய்யானவை எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணாதான், காட்டுக்குள் இருக்கும் விடுதலைப்புலிகளின் முகாம்கள் பற்றி இராணுவத்துக்குத் தகவல் சொல்கிறார் என்ற கேள்விக்கு விடையளித்துள்ள சிவாஜிலிங்கம், கிழக்குப் பகுதியில் உள்ள தகவல்கள் மாத்திரமே கருணாவுக்குத் தெரியும் எனவும் அதுவும் பழைய தகவல்களாகத்தான் இருக்கும் எனவும், புதிய மாற்றங்கள் பற்றி கருணாவுக்குத் தெரிய வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய மத்திய அரசு இன்னும் தீவிர அக்கறை காட்டுவதற்காக, அங்குள்ள நிலையை நேரில் விளக்குவதற்காக இந்திய பிரதமர், காங்கிஸ் தலைவி சோனியா ஆகியோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவுத் அதற்கான நேரத்தை ஒதுக்கித் தருமாறு கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilskynews.com/

வெள்ளி, அக்டோபர் 31, 2008

தமிழர்களை கொல்பவர்களிடமே மருந்து, உணவுப் பொருட்களை கொடுப்பதைவிட கொடுமையான செயல் உண்டா?: "ஜனசக்தி" நாளேடு கேள்வி

தமிழ்நாட்டின் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள இலங்கைத் தமிழர் நிவாரண நிதி திரட்டல் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வமான தமிழ் நாளிதழான "ஜனசக்தி" கேள்வி எழுப்பியுள்ளது.

"இக்கட்டான நேரத்தில் உதவிக்கரம நீட்டுவது நமது இன்றியமையாக கடமையாகும்"

"ஈழத்தில் வேதனையால் விழி நீர்பெருக்கி வாடிக் கொண்டிருக்கும் சகோர சகோதரிகளுக்கு தமிழக மக்கள் இயன்றதை வழங்கி உதவிடுவிர்"

"இலங்கைத் தமிழர் நிவாரணை நிதி முதல்வர் கலைஞர் பத்து இலட்சம் ரூபாய் வழங்கினார்"

29.10.08 முரசொலியின் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ள வரிச் செய்திகள்.
இது முதல்வரின் ஏடு. வேண்டுகோளும் முதல்வரால் வெளியிடப்பட்டள்ளது.
கருணை உள்ளம் கொண்டு, கண்ணீர் வடிப்போருக்கு உதவிட முற்படுவதைக் குறைகூறுவதே ஒரு பெருங்குற்றமாகும். ஆனால் இதற்குள் அரசியல் கேள்விகள் அடங்கியுள்ளன.

நாங்களும் - நீங்களும், சகோதர - சகோதரிகளுக்கு உதவி எனும்போது, புலிக்கு உதவி என்பதும் கேட்கிறதா?

தமிழ்நாட்டு மக்கள், இலங்கையில் பிறந்த ஒரே காரணத்தால், பல்லாண்டுகளாக வேட்டையாடப்பட்டு வரும், சகோரதர சகோதரிகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய எப்போதும் தயங்கியதே இல்லை.

விடுதலைப் புலிகள் மீது மட்டும் பாயும் குண்டும், சுடும் துப்பாக்கியும் உண்டா? மக்களைக் கவசமாக பயன்படுத்துவதாகக் கூறுவோர் வானூர்தி குண்டு வீச்சுக்கு கவசம் கண்டு பிடித்துள்ளனரா? அரசியல் நெறி என்ற பெயரால், கொலைகாரர்கட்குத் துணை போகலாமா? இலங்கைத் தமிழர்களான சகோதர - சகோதரிகளுக்கு ஏற்படும் இன்னல்களைத் தடுக்க இந்தியத் தமிழ் மக்கள் நேரில் சென்று உதவிட முடியாது. எனவேதான் தமிழ் மொழி பேசும் இந்தியக் குடிமக்கள் இந்திய அரசிடம் சில வேண்டுகோள்களை முன்வைத்தனர்.

1. சிறிலங்கா அரசிடம் பேசி வானூர்தி தரைப்படைத் தாக்குதலை நிறுத்தச் செய்யுங்கள்.

2. இந்திய அரசு, எங்கள் சகோதர - சகோதரிகளைச் சுட்டுக்கொல்ல, இந்திய அரசு ஆயுதங்களையும், இராணுவ வீரர்களையும் அனுப்புவதை நிறுத்த வேண்டும்.

3. அகதிகளாக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கட்கு இந்திய அரசு நிவாரணப் பொருட்கள் அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தரும் பொருளை அனுப்பி அனுமதி வேண்டும்.

மக்கள் இந்த வேண்டுகோள்களை வைப்பதற்கு முன்பே, மத்திய அரசுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள 'இக்கட்டான நேரம்' - அதற்குரிய காரணம் தெரியும்.
தெரிந்தும் எந்த முடிவையாவது நடிவடிக்கையாவது எடுத்ததா?

அனைத்து கட்சிக் கூட்டம், அதில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிவில நேரிடும் என்ற எச்சரிக்கைக்கு பின் வெளிவிவகார அமைச்சர், தமிழக முதல்வரைச் சந்தித்துள்ளார்.

போர் நிறுத்தப்படும் என்று கூறவில்லை. குண்டுகள் சுடுகிற வானோடிகளை அனுப்ப மாட்டோம் எனக் கூறவில்லை. மத்திய அரசுக்கு ஆபத்தில்லை என்றே கூறினார்.

எனவே, மத்திய அரசு தானாக மனிதாபிமானத்தால் உந்தப்பட்டு எதையும் செய்யவில்லை. எனவே தான் முதல்வரின் நம்பிக்கை மக்களுக்கு ஏற்படவில்லை.
இப்போது நன்கொடை வசூல், தானம் உதவி என்ற தமிழக முதல்வர் தொடங்கியிருக்கிறார். இவை எப்படி அங்கு போய்ச் சேரும்? யார் இதை அவதிப்பட்ட மக்களுக்கு வழங்குவது?

மத்திய அரசு, சிறிலங்காவுக்கு தொடர்ந்து இராணுவ உதவி செய்வதால், இலங்கைத் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கத துணை புரியும் டில்லியிடம் மன்றாட மக்கள் தயாராக இல்லை. அங்கிருந்து எந்த நற்காரியத்தையும் எதிர்பார்க்க இயலவில்லை.

ஆனால் தமிழக முதல்வரிடம் ஒரே ஒரு வேண்டுகோளுக்கு விடை கேட்கிறோம்.

1. குண்டுத்தாக்குதலை நிறுத்தாமல் இருக்கும்போது அங்கு உதவிப் பொருட்களை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்?

2. சில மாதங்கட்கு முன்னர் திரு.பழ. நெடுமாறன், மருத்துவப் பொருட்களை அனுப்பிட, வசூலித்து வைத்த பின்னர் கேட்டபோது மறுக்கப்ட்டதே. ஏன்? இப்போது எங்கிருந்து வழி பிறந்தது?

3. இலங்கைத் தமிழர்களை கொல்பவர்களிடமே மருந்து, உணவுப் பொருட்களை கொடுப்பதைவிட கொடுமையான செயல் உண்டா? அவர்கள் கையால் தமிழ் மக்கள் வாங்கிச் சாப்பிடுவார்களா?

சர்ச்சைக்கு உட்படாத சமூகத் தலைவர்கள் நேரில் சென்று உணவு உதவி வழங்கிட சிறிலங்கா அரசும் இந்திய அரசும் மறுப்பது ஏன்?

எல்லாவற்றிற்கும் மேலாக குண்டு போட்டுக் கொல்லப்படுவது நிறுத்தப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாக ராஐபக்ச பிரகடனம் செய்துவிட்ட பிறகு நீங்க்ள கருணையுடன் அனுப்பும் பாலும், பருப்பும், பாகும், சைவ - அசைவ விருந்தாக அமைந்தாலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே சாகத்தானே வேண்டும்.
பட்டினி கிடந்து குண்டடிப்பட்டுச் சாகாதே நன்கு சாப்பிட்டு விட்டு சா என்று கூறுவதாகத்தானே உங்களது அழைப்பு அமைந்துள்ளது.

முதலில் குண்டுப்போரை நிறுத்தச் சொல்லுங்கள். இல்லையேல் இதுவும் கொடை மடம் என்றே வருணிக்கப்ட நேரிடும். மத்திய அரசைக் காப்பதா? இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பதா? என்பதை முதல்வரின் முடிவுக்கே விட்டுவிடலாம்.
இது கட்சியின் கோரிக்கை அல்ல. மக்களின் புலம்பல் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

buthinam.com

சனி, அக்டோபர் 25, 2008

உலகத்தமிழரின் கொந்தழிப்பால் உண்ணாவிரதத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவித்துள்ளார் அஜித்!!!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜீன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.

நேற்று தமிழ்வின் இணையதளத்தில் ஈழத்தமிழருக்காக ஆதரவு வழங்க மறுத்த அஜித் கூறிய இச்செய்தி வெளியான சில மணிநேரங்களில் உலகத்தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த்திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளில் இந்நடிகர்களுக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. "ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு வழங்க மறுத்த நடிகர் அஜீத் நடித்து வெளியாகும் ஏகன் திரைப்படத்தை திரையிட விடமாட்டோம்" என்று கொந்தளித்த ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் சிலவற்றிலும் இறங்கினர். சில இடங்களில் கல்வீச்சு, போஸ்டர் கிழிப்பு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் திட்டமிட்டபடி அக்டோபர் 25 இல் பாரீஸ் நகரில் ஏகன் திரைப்படத்தை வெளியிடமுடியாத சூழல் உண்டாகியுள்ளது.

இவ்வாறு உலகத்தமிழர் ஏகன் திரைப்படத்தை புறக்கணித்ததும் ஏகனை வெற்றிகரமாக திரையிட விரும்பிய, ஈழத்தமிழருக்கு ஆதரவு கொடுக்கமாட்டேன் என முழங்கிய நடிகர் அஜித், ஏதும் செய்ய முடியாத நிலையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்து, “ நடிகர் சங்கம் எடுத்துள்ள உண்ணாவிரத போராட்ட முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனவே கட்டாயம் சென்னையில் நவம்பர் 1ம் தேதி நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் நானும் கலந்துகொள்வேன். ஈழத்தில் அப்பாவித்தமிழர்கள் தாக்கப்படுவதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிப்பேன்” என ஈழத்தமிழருக்கு எதிராக பேசிய நடிகர் அஜீத் நக்கீரனுக்கு உறுதி கூறினார்

தமது தல நடித்த ஏகன் வெற்றிகரமாக திரையிட விரும்பிய ரசிகர் மன்றத்தினர் "திரையுலகில் இருக்கும் ஒரு சில விஷமிகள்தான் இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பி உள்ளனர் " என்று கூறி வருகின்றனர்.

http://www.tamilwin.com/view.php?2eIWnp00b...d430QH3b02nLW3e

அர்ஜுனின் மறுப்பு அறிக்கை.
இலங்கைத்தமிழ் மக்களுக்கு என்றும் என்னுடைய ஆதரவு இருக்கும்: அர்ஜுன்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜுன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர் என செய்தி வெளிவந்திருந்தது.

எனினும் அந்த செய்தியடுத்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் கொந்தளிப்பையடுத்தே இன்று அஜித் உனடியாக சில செய்தியூடகங்களுக்கு தான் அந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொள்வேன் என்ற தகவலை வழங்கியிருந்தார்.

அதே நேரம் அர்ஜுன் தமிழ்வின் இணையத்தளத்தை நேரடியாக மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் கடந்த 23 வருடங்களாக வாழ்ந்து வருவதாகவும் தமிழை மிகவும் நேசிப்பதாகவும் இப்படிபட்ட கருத்தை தான் மனதில் கூட நினைந்தது கிடையாது என்றும் குறிப்பாக இலங்கை தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தன்னுடைய ஆதரவு என்றும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அத்தோடு உண்ணாவிரத போராட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ளுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் நேற்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியான செய்தில் வந்த கருத்தை முற்றாக மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி : தமிழ்வின்

புதன், அக்டோபர் 15, 2008

தி டேஞ்சர்ஸ் ஒஃப் தமிழ் சாவினிஸம்!!! தி ஹிண்டு கட்டுரை.

இந்து நாளிதழுக்கு கண்டனங்கள் !!! இன்றைய தி ஹிந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி எனும் ஊடகவிபசாரி, தமிழீழவிடுதலைப்போராட்டத்தையும் ,அதற்கு ஆதரவான தமிழக மக்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் எழுச்சியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார்...

தலைப்பு........ தி டேஞ்சர்ஸ் ஒஃப் தமிழ் சாவினிஸம் .

ஏழ்மை காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்ணே பல மடங்கு இத்தகைய ஊடக விபசாரிகளை விட மேலானவர்...
இந்து நாளிதழுக்கு கண்டங்கள் அனுப்புவோம் சகோதரர்களே
தமிழன் ஒற்றுமை ஓங்கட்டும் ...தமிழர்கள் ஓரணியில் திரள்வது கண்டு ஓனாய்க்கூட்டம் ஓடட்டும்!!!

மாதிரி வடிவம்
Copy of the latter sent ti Hindu

Dear Edito,
Even though I know your changing positions since 1984. Once you behind Prabaharan then Chandrika and now Mahinda. This is your freedom. Many Sinhalese including some of my friends consider you as anti Tamil. Thy said you support not only killing Sri Lankan Tamil but also Indian Tamil fishermen. Can you show me an article written against the continuous killing of Indian Tamil fishermen by your Sinhalese Friends? This also may be your freedom. But I never expect you to support possible and encourage genocide of my people. Please stop it.If you really respect press freedom please publish this latter.
with regards

youer name

கண்டங்கள் அனுப்ப .... theditor@thehindu.co.in

கட்டுரை இணைப்புhttp://www.hindu.com/2008/10/14/stories/2008101454490800.htm

தமிழீழ விடுதலைப்போராட்டத்தினையும் மாவீரர்களையும் தமிழ்நாட்டுத்தமிழர்களின் தமிழுணர்வையும் இழிவுபடுத்தி இன்று(அக்டோபர் 14) கட்டுரை வெளியிட்ட பாசிச "THE HINDU" பத்திரிக்கையினை கண்டித்து கோயம்பத்தூரில் ஆதித்தமிழர் பேரவையின் வழக்கறிஞர் தோழர் வெண்மணி தலைமையில் 15 க்கும் மேற்பட்ட தமிழின வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு இந்து நாளிதழின் அலுவகம் முன்பு இன்று மதியம் இந்து நாளிதழை தீக்கிரையாக்கி இந்து நாளிதழின் தமிழர் விரோதப்போக்கை கண்டித்து முழக்கமிட்டு கைதானார்கள்.

இணைப்பு - 2

இந்து நாளிதழிழை எரித்த தமிழக தோழர்கள் மாலை 6 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்து நாளிதழிழை எரித்த தோழர்கள் மாலை 6 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டார்கள். மேலும் மதியம் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த அரசு சட்டக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் பெரியார் திராவிடர்கழக மாணவரணி பொறுப்பாளரும் ஆகிய தோழர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் 2 மணியளவில் மறுபடியும் இந்து அலுவலகம் முன்பாக இந்து நாளிதழின் தமிழின எதிர்ப்பு போக்கை கண்டித்து முழக்கமிட்டு அலுவலகம் முன்பாக நாளிதழை எரித்துக்கைதானார்கள். மாலை 6 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

-- http://www.tamilseythi.com/tamilnaadu/the-...2008-10-14.html

திங்கள், அக்டோபர் 13, 2008

சிறீலங்கா உணவுப்பொருட்களில் கொடிய விஷம், மக்களே கவனம்!!!

சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதியாகும் மன்சி பிஸ்கட் எட்னா சொக்லட்டில் விசப் பொருட்கள்.

சிவிஸ் அரசின் சுகாதரத் துறையால் சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மன்ச்சி பவ் என்னும் பிஸ்கட்டைப் பரிசோதித்த போது அதில் மெலமையின் என்னும் நச்சுப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்படுள்ளது.இந்த நச்சுப்பொருள் உள்ள பாலை உண்டதால் அண்மையில் சீனாவில் பல குழந்தைகள் இறந்துள்ளார்கள்.ஆகவே புலத் தமிழர்கள் சிறிலங்காவில் இருந்து வரும் பிஸ்கட்டுக்கள் சொக்கிளட்டுக்களை தவிர்க்கவும்.

Swiss find melamine in Thai, Sri Lankan biscuits



Last updated: Monday, October 13, 2008 6:45 AM EDT

GENEVA - Swiss authorities say they have found high concentrations of melamine in biscuits from Thailand and Sri Lanka and have called on other European countries to withdraw the products.

Authorities in the canton (state) of Geneva say tests have shown high melamine levels in the Thai biscuits Milk Cookies S&P and the Sri Lankan candies LemonPuff Munchee.

Melamine in milk has been blamed for the deaths of four infants and for sickening more than 54,000 others in mainland China.

The authorities said in a statement Monday that the European distribution channels for the two biscuits have been identified.

They say tests on a dozen baby milk products have shown no melamine contamination.

A service of the Associated Press(AP)

சனி, செப்டம்பர் 13, 2008

சிறீலங்கா அரசின் மின் அஞ்சல் பிரசாரம்.

இன்று சிங்கள மக்களிடையே தினமும் வந்து சேரும் இராணுவத்தினரின் சடலங்களால் அரசும் இராணுவமும் கிலி பிடித்துப் போய் இருக்கிறது. காயப்பட்ட இராணுவத்தால் நிரம்பி வழியும் வைத்திய சாலைகள்.

இறந்த இராணுவத்தினரின் உடல்களால் நிரம்பி வழியும் பிரேத கூடங்களும் இறுதிச் சடங்கு மலர்ச் சாலைகளும் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்து விடுமோ என அஞ்ச வேண்டி உள்ளது.

இந்த நிலை மேலும் அதிகரிக்கும் நிலை அல்லாது குறையும் சாத்தியம் இல்லாத நிலையே தெரிகிறது. இதுவரை புலிகளுக்கு எதிரான போரைச் சொல்லிச் சொல்லியே தேர்தல்களை நடத்தி வயிற்றை வளர்த்து வந்த அரசுக்கு ஆப்பு வைத்து விடுவது போன்று போரின் போக்கு அமைவது தெரிகிறது.

இதனால் அரசின் பாதுகாப்பு அமைச்சின் ஊடகத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவின் புளுகு மூட்டைகள் கள உண்மைகளால் கிழிந்து பஞ்சாகிக் காற்றில் பறக்கின்றன. அதிபர் மகிந்த, பிரமதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம, பசில் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல, லெப். ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோரின் வெறித்தனமான பேச்சுகளால் சிங்கள மக்களின் ஆதரவைத் தக்க வைக்க ஆடிய விளையாட்டு ஆபத்தான கட்டத்தை அடைவது தெரிகிறது. எந்த நேரத்தில் ஆட்டம், ஆட்டங்கண்டு கலையுமோ என நினைக்கத் தோன்றுகிறது.

நடந்து முடிந்த இரண்டு மாகாண சபைத் தேர்தலையும் வெட்டிப் பிரசாரத்தாலும், பேச்சுக்களாலும், ஆயுதக் குழுக்களின் மிரட்டலாலும் வென்றாகி விட்டது. புலிகளும் அரசின் போக்குக்கு விட்டுக் கொடுத்துப் பப்பாசி மரத்திலை ஏத்தி விட்டது போன்று அரசின் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடம் கொடுத்து மல்லாவியில் இராணுவம் புகுந்து படம் பிடித்துத் தனது பரப்புரையால் மாகாண சபையைத் தனதாக்கிக் கொள்ள இடம் கொடுத்து விட்டனர். ஜே.வீ.பீ. யின் நிலை இன்று அணிலை ஏறவிட்டுப் பார்த்து ஏங்கும் நாயின் நிலைக்கு வந்து விட்டது. மொத்தத்தில் கட்சிகளின் கூட்டுகள் இறுக்க நிலை குலைந்து காணப்படுகிறன. எனவே அரசு சிங்கள மக்களின் மனங்களை இறுக்கப் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

சிங்கள மக்களின் போர் வெறிக்குத் தீனி போடுவதற்காக மின் அஞசல்கள் மழைபோல் கணிணிகளை நிரப்புவதில் அரசின் பரப்புரைச் சாதனங்கள் முனைப்புக் காட்டி வருகின்றன. இந்த மின் அஞ்சல்கள் உண்மைக்குப் புறம்பாகவும் நம்பமுடியாத அளவுக்குக் கற்பனை நிறைந்ததாகவும் காணப் படுகின்றன. இவற்றில் ஒன்று அமெரிக்க மாநிலப் புலனாய்வுப் பிரிவு 'FBI சொல்கிறது’ என்ற தலைப்பில் உள்ளது. இலங்கைப் பிரச்சனைக்கும் அமெரிக்க 'FBI க்கும் என்ன தொடர்பு என்று கேட்டு விடாதீர்கள். 'FBI என்றால் கூட ஏதோ அமெரிக்க மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் மாநில உளவுத் துறை என்றால் 52 மாநிலங்களில் எந்த மாநிலம் என்ற கேள்வி எழுமே. ஆனால், மண்டைக்குள் ஏதும் உள்ளவருக்குத்தான் அந்தக் கேள்வி எழும். இவை மூளை கழுவுப்பட்ட ஜன்மங்களுக்காக எழுதப் படுபவை. எனவே எமது மக்கள் இவை பற்றி அக்கறை கொள்ளாது இருப்பது அவசியம்.

எதற்கும் இந்த 'FBI இவர்களுக்கு என்ன சொல்லி விட்டார்கள் என்பதைச் மிக மிகச் சுருக்கமாக முதலில் தெரிந்து கொள்வோம். இலங்கை இந்து சமுத்திரத்திலே வாழத் துடிக்கும் ஒரு சொர்க்க பூமி. அங்கே அமைதியான, இரக்கம் மிகுந்த, நாகரீகம் மிகுந்த சிங்கள மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் விருந்தாளியாகவோ வெற்றி கொள்பவராகவோ எவர் வந்தாலும் மிக அன்பாய்ப் பழகும் குணம் உள்ளவர்கள். அங்கே எழுதப் பட்ட 2400 வருட வரலாறு கொண்ட 17 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இப்போது எப்படி மின்னஞ்சல் சொல்கிறது என்பதைச் சிறிது பார்ப்போமா?
"There is a tiny Little Island Paradise in the Indian Ocean called SRI LANKA that is trying to survive. They are the home for about 17 million people called the Sinhalese. On this entire planet on 6.6 billion people there are only 17 million Sinhalese and Sri Lanka is their home. Sri Lanka even though a tiny island country has over 2400 years of recorded and written history. There are remains of buildings, structures, paintings that go back to 400 BC. Today the identity of Sri Lanka and its poetic history is in the verge of extinction. Sri Lanka is also a country where the original forms of Buddhism still exist. “

இவர்களுடன் சுமார் 1.5 மில்லியன் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். உங்களுக்கு மேலதிக தகவலாக, உலகில் 112 மில்லியன் தமிழர் ஆதியில் இந்தியாவில் உள்ள தமிழ் நாடு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். தமிழ் நாடு என்றால் தமிழர்களின் தேசம். அதன் நிலப் பரப்பு இலங்கையை விடவும் இரண்டரை மடங்கு பெரியது. இலங்கையின் வரலாற்றுப் படி தென் இந்தியாவில் தமிழ்நாட்டில் வரண்ட ஆனால் மிகப் பெரிய தரித்திரப் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர் கள்ளக் குடியேற்றமாகவும், படை எடுத்தும் பின்னர் அண்மைக் காலத்தில் பிரித்தானியரால் மலிவுக் கூலிகளாய் தேயிலை, கோப்பி, இரப்பர் பெருந்தொட்டங்களில் வேலை செய்ய இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுக் குடியேறியவர்கள். தென்னிந்தியாவையும் அங்குள்ள வாழ்வையும் இப்படிக் கூறுகிறது-

“In addition to the Sinhalese in Sri Lanka, there are about 1.5 million Tamil in Sri Lanka. For your information, there are 112 million Tamil in this planet and they are originally from the Tamil Nadu State in India. Tamil Nadu means Land of the Tamils and the land area is about two and a half times the land area of Sri Lanka. The history of Sri Lanka shows that the Tamil who lived in almost desert-like conditions in Tamil Nadu, which is a dry miserable but very large piece of land in South India came to Sri Lanka as illegal immigrants, invaders and most recently were brought in large numbers as cheap labour by the British to plant tea, coffee and rubber in Sri Lanka.”

சிறி லங்காவும் தென்னிந்தியாவில் தமிழ் நாடும் இடையில் 35 மைல் அகலக் கடலால் பிரிக்கப் பட்டுள்ளது. இந்திய அரசும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் நாட்டைப் பிரிப்பதைக் கனவிலும் விரும்பாது. தமிழ் நாட்டோடு அது சோமாலியா போன்று மில்லியன் கணக்கில் பட்டினியாகவும், படிப்பின்றியும் வாழ்வதற்காக எங்கேயும் ஓடிப் போகும் மனம் படைத்தவர்களோடு ஒப்பிடும் போது இலங்கை ஒரு சிறிய சொர்க்கத் தீவு. பெரும்பாலானவர் சிங்களவர் பெரும் பகுதியினர் அகிம்சையிலும் விருந்தோம்பலிலும் நம்பிக்கை கொண்ட பௌத்தர்கள். வந்தவர்கள் விருந்தினரோ, வெற்றி கொண்டவரோ, கள்ளரோ கொள்ளையரோ அல்லது பிரித்தானியரால் கொண்டு வரப்பட்ட மலிவான கூலியோ அவர்களை வரவேற்றவர் நாம்.

ஆனால் இன்று சிலர் தம்மைப் புலிகள் எனக் கூறிக் கொண்டு முழு சிறி லங்காவையும் வசப்படுத்தத் தீர்மானித்து விட்டனர். அப்படி அவர்கள் தமிழீழம் என்ற பெயரில் உருவாக்கத் தீர்மானித்து விட்டார்கள். அவர்கள் போகும் வேகத்தில் அழிவுகளும் இன அழிப்பும் பார்த்து நாம் அமைதியாய் இருந்தால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். அவர்கள் சிங்களவர்கள் மீது 30 வருடங்களுக்கு முன்பே போர் தொடக்கி விட்டார்கள்.

“Compared to Tamil Nadu which is like Somalia where among the people, millions are starving, illiterate and would run away to anywhere to live - Sri Lanka is a little Island Paradise. Sri Lanka's majority population, the Sinhalese most of them Buddhist, believe in non-violence and hospitality welcomed the visitors when they came, whether they came as conquerors, bandits, pirates or as cheap labour for the British. But today some of these visitors calling themselves Tamil Tigers have decided to occupy the entire island of Sri Lanka and have decided to create a Tamil Homeland called TAMIL EELAM. At the rate they have been going and the carnage and genocide they have been carrying out, if all of us keep quiet they might succeed. They have declared war on the Sinhalese 30 years ago.“

இந்த 30 வருடத்தில் அவர்கள் 70,000 சிங்களவரைப் பலி எடுத்துவிட்டார்கள். தமிழ் நாட்டை எதிர்த்த ராஜீவ் காந்தி, பிரேமதாசா இன்னும் பல அரசியல் வாதிகளைக் கொன்று விட்டார்கள். இப்படிப் புலம்பித் தீர்க்கிறது இந்த மின் அஞ்சல். இதில் காணப்படும் எவையும் அமெரிக்கா சம்பந்தப் பட்ட விடயமே இல்லை. அப்படி இருக்க இது வெளிநாடுகளில் வாழும் சிங்களவரின் கொம்பு சீவும் வேலையாகத் தெரிகிறது. அதே நேரம் ஏனைய மக்களின் அனுதாபத்தைப் பெற்று எமது தமிழீழக் கோரிக்கைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதே இதன் நோக்கமாகத் தெரிகிறது.

இதே வேளையில் சிங்களத்தின் பார்வையில் தமிழ் நாடு சோமாலியா போலவும், தமிழ் மக்கள் பட்டினியால் வாடி வாழ வழிதேடி எங்கேயும் போகக் கூடியவர்கள் என்பதும் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பது உறுதியாகிறது.

இலங்கையில் உள்ள மக்கள் இனங்களில் சிங்களவர்களே மிகவும் சோம்பேறிக் குணம் கொண்டவர்களும் உழைப்பின்றக் கிடைக்கும் மரவள்ளிக் கிழங்கும், பலாக்காயும் உண்டு வாழும் குணம் படைத்தவர்கள் என்பதும் இலவச அரிசி வழங்கப்பட ஆரம்பித்த 1950 வரை மிக அரிதாகவே சோறு உண்டு வாழ்ந்தவர்கள் என்பதையும் இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க நியாயமில்லை. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் கடின உழைப்பாலும் உயர் கல்வியாலும் பணமும் பதவியும் பெற்று உயர்வடைந்த சமூகங்களான இந்திய மற்றும் இஸ்லாமிய வரத்தகர்களின் வளமான வாழ்வு கண்டு பொறாமைத் தீயால் நாட்டை அழித்த வரலாறு சிங்களவர்களுடையது.

தமிழ் மக்களின் கல்வி அறிவும் அரச பதவிகளும் கண்டு பொறாமை கொண்டு சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக்கி தமிழரின் தொழில் வாய்ப்பைப் பறித்ததும், தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவரின் உயர் கல்வியைப் பறித்து நாட்டைப் படு பாதாளத்துக்கு எடுத்துச் சென்றவரும் சிங்களவரே.

1956, 1958, 1967, 1961, 1970, 1977, 1983 எனத் தொடர்ச்சியாக காடையரைக் கொண்டும் அரச படைகளைக் கொண்டும் தமிழ் மக்களின் உயிர் உடமைகளைப் பறித்து உயிரோடு அப்பாவித் தமிழ்ப் பொது மக்களை குழந்தைகள் பெண்கள் முதல் வயதானவர் நோயாளிகள் எனப் பாகுபாடின்றி தர்க்கிய பெருமையும் இந்தப் பொறுமையும் பெருந்தன்மையும் கொண்டுள்ள சிங்கள இனத்தால் மேற்கொள்ளப் பட்டது என்பதையும் மறந்து விட்டவர்களாக இருக்கலாம். ஆனாலும் சிங்கள இனம் வன்முறைகளற்ற விருந்தோம்பல் குணம் கொண்டவர்கள் என்கிறார்கள். 1956 ஜூன் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தின் முன்னால் சத்தியாக்கிரகம் இருந்த தாமிழர்களை ஏன் அடித்துக் காயப்படுத்தி கடல் ஏரிக்குள் எறிந்தார்கள் என்ற கேள்விக்கு யார் பதில் தருவார்? 1961 இல் வடக்கு கிழக்கு அரச அதிபர்கள் அலுவலகம் முன்னால் சத்தியாக் கிரகமும் சட்ட மறுப்பும் செய்த ஆயுதம் தரிக்காத தமிழ் பொது மக்களை இராணுவம் ஏன் அடித்து விரட்டியது? நியாயமாகப் பார்க்கப் போனால் இவற்றை அரசு, காவல் துறை மற்றும் நீதி மன்றம் மூலமாக அல்லவோ அணுகி இருக்க வேண்டும்? இத்தகைய அராஜக ஆட்சிதான் இவர்களின் அரசியல் நாகரிகமா?

ஆய்வு: நிலவரம் பத்திரிகைக்காக எதிர்மறைசிங்கம்

இதோ அவர்களின் நாகரிக முகம் எப்படி இருக்கிறது எனப் பாருங்கள.; “உங்களிடையே தமிழர்கள் இருப்பீர்கள். பெரும் பாலானவர்கள் நல்லவர்கள். கெட்டவர்கள்தான் இலங்கையில் சிங்களவரைக் கொல்ல பணம் சேர்க்க முயல்வது அல்லது தர்ம ஒன்று கூடல்கள் மூலம் பணம் சேர்த்து உதவுவது. நீங்கள் ஒரு நாகரிக உலகில் வாழ விரும்புகிறீர்களா அல்லது கொலையாளிகளுக்குக் கொடுக்கப் போகிறீர்களா? சிறி லங்கா அரசு கடந்த 30 வருடங்களாக முக்கியமான ஆனால் அசிங்கமான போருக்கு இடம் கொடுத்து முடிவில் தமிழ்ப் புலிகளுடன் போராடுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் ஒரு முடிவைக் காணும் நிலையில் உள்ளனர். ஆனால் நாம் எல்லாரும் எதுவும் செய்யாது பார்த்துக் கொண்டிருந்தால் நாளைக்கு சிறி லங்கா எனப்படும் தீவே இருக்காது. சிங்கள இனம் முற்றாக அழிந்து விடும். இந்த அமைதியை விரும்பும் மக்களை நீடித்து இருக்க உதவுங்கள்.
“Among you there will be Tamil. Most of them are good. The bad ones are those who collect or try to collect money by organizing charities, rallies and such from you and these funds are to kill the Sinhalese in Sri Lanka. Do we want to live in a civilized world or do we want to give in to murderers? The Sri Lankan Government has tried after 30 years of giving in to the superior but dirty war of the Tamil Tigers to finally fight them. Over the past two years they have made some break through. But if all us sit and watch tomorrow there will not be a little Island called Sri Lanka. The Sinhalese will be extinct. Help these peace loving people to exist. “

இவற்றைப் படிக்கும் போது இந்தப் பூனையும் பால் குடிக்குமா எனக் கேட்கத் தோன்றுகிறதா? இதைத்தான் காரியத்தில் முந்துவது என்பது. களவு எடுத்தவனே களவு கொடுத்தவனோடு சேர்ந்து கள்ளனைத் தேடுவது என்பது. தமிழன் ஏமாளியாக இருந்தால் சிங்களவன் இதுவும் சொல்வான் செய்வான்! இன்னமும் சொல்வான் செய்வான்! அமைதிப் பேச்சுக் காலமோ அட்டகாசம். போர்க் காலமோ எங்கேயும் எப்போதும் கொல்பவன் சிங்களவனும் அவனுடைய நண்பர்களும். கொல்லப்படுவது தமிழனும் தமிழனின் நண்பர்களும்தான். இதிலும் ஒரு சிறு மாற்றமும் உள்ளது. தமிழனுக்கு உதவ வேண்டாம், மனித நேயம,; அரசியல் அமைதித் தீர்வு, அரசியல் நாகரிகம் பற்றி அமெரிக்கா கூடப் பேசமுடியாது. அப்படிப் பேசினால் அமெரிக்கனையும் தமிழ்ப் புலி எனச் சிங்களம் முத்திரை குத்திவிடும் நிலை எவரும் அறிந்ததே. அப்படியான கல்லிலா நார் உரிக்க முடியும்? போர் என்ற மொழி ஒன்றைத் தவிர வேறு எந்த மொழியும் சிங்களத்துக்குப் புரியாது. இப்படியான நிலையில் பூனையின் தோழனாக இருக்கிற இந்தியா தமிழன் என்ற பாலுக்குப் பாதுகாப்பான காவல் என சில புத்தி ஜீவிகள் பேசுவது வியப்பாய் உள்ளது.

இன்னொரு மின்னஞ்சல் தமிழ் மக்களை மிரட்டும் விதத்தில் இராணுவம் மன்னார், முகமாலை, ஜனகபுரத்தில் புலிகளை அழித்து விட்டதாகப் பல கோரமான படங்களைப் பிரசுரித்து ஸ்ரீலங்கா இராணுவத்துடன் மோதினால் இதுதான் முடிவு என எச்சரித்துப் பயமுறுத்தும் வகையில் உள்ளது. இப்படங்களில் பல அப்பாவி மக்கள் பலியாக்கப் பட்டள்ளது போன்று காணப் படுகிறது. இவற்றில் பல காணாமல் போனவர்கள் பயன் படுத்தப் பட்டிருக்கலாம் என நினைக்க வேண்டியும் உள்ளது. ஏனென்றால் இலங்கை அரசும் அதன் இராணுவமும் எத்தகைய கொடுமையையும் தமிழரை வைத்து நடத்தி முடிக்கும் பாரம்பரியம் கொண்டது. எனவேதான் ஆதாரம் இல்லாத போதும் இப்படி நினைக்கத் தோன்றுகிறது.

மேலும் பல சிறுவர்களைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிடித்தோம் எனக் காட்டப் பட்டடிருக்கிறது. ஆனால் சில படங்கள் அகதிகள் முகாம்களில் இருந்த சிறுவர்களை வைத்து எடுக்கப் பட்டவை போன்று படத்தின் பின்னணிகள் காட்டி விடுகின்றன. மேலும் ஏனைய கூலிக் குழுக்களின் சிறுவர் படையும் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.
அதிலிருந்து இரண்டு படங்களை இங்கே உங்கள் பார்வைக்காகத் தரப் படுகிறது.

இப்படி எல்லாம் மசாலா பண்ணி வந்துள்ளது அடுத்த மின்னஞ்சல்.

மற்றும் ஒன்று 04.09.08 திகதியிட்டு “ கடந்த இரு வாரங்கள் - மன்னார் ஜனகபுர நாகர் கோயில் முகமாலை’’, என்ற தலைப்பில் வந்துள்ளது. இந்த இடங்களில் நடந்த போர் முனைகளில் இடம்பெற்ற மரணங்களைக் காட்டுவதாகக் கோரமான படங்கள் கொண்டு வந்துள்ளது. புலிகளின் கட்டுப் பாட்டிலுள்ள பகுதிகளை கட்டம் கட்டமாக artikel_email.jpgமீட்டுவிட்டதாக இறுதியில் ஒரு மிகச் சிறிய பகுதியே புலிகள் வசம் உள்ளதாகப் படங்கள் போட்டுக் கூறுகிறது. இலங்கை இராணுவம் அதி சிறந்தது. அந்தச் சிறந்ததுடன் மோதி மற்றவர் போல இறந்துவிடு என்று மிரட்டுகிறது. இந்த மின்னஞ்சல்கள் போன்று மேலும் உங்களுக்கும் வந்திருக்கும் இனியும் வரும். இவை வழக்கம் போல் அரசின் பொய்ப் பிரச்சாரங்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுவது அவசியம். இப்போது சில நாட்களாக இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக வாங்கும் அடிகளையும் அழிவுகள் இழப்புகளையும் பார்க்கும் போது அரசின் அவல நிலை தெரிகிறது.
அண்மைக் காலங்களில் இடம்பெறும் கள நிலைமைகள் சிங்களத்துக்கு இவை போன்ற பிரச்சாரம் அவசியம் என்பதையே காட்டுகிறது. எனவே அவற்றை நாம் கவனத்தில் எடுத்து அவை தரும் விடையங்கள் பற்றிக் கவலைப் படாமல் வன்னியில் இடம் பெயர்ந்து அல்லல் படும் எமது உறவுகளுக்கு அவசியமான உதவிகள் செய்ய வேண்டியது கட்டாய தேவை. இதனைக் கவனத்தில் எடுத்து உடனடியாக எமது அதிக பட்ச பொருள் உதவியை தமிழர் புனர் வாழ்வுக் கழகம், வெண்புறா இயக்கம், செடொட் நிறுவனங்கள் மூலமாக எமது உறவுகளின் உயிர்காக்க உதவுவோமாக.

நன்றி:-swissmurasam

திங்கள், செப்டம்பர் 01, 2008

வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வர வேண்டும்.

காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும், மூப்பனாருக்கும், நெடுஞ்செழியனுக்கும் துரோகம் இழைத்தவர் முதல்வர் கருணாநிதி தான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியை விமர்சித்து நெடுமாறன் கட்டுரை எழுதியிருந்தார். இதற்குப் பதிலாக கவிதை மூலம் நெடுமாறனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் கருணாநிதி. அதற்கு விளக்கம் அளிப்பதாக குறிப்பிட்டு நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, முதல்வர் கருணாநிதி அடுத்தமுறை, தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற திராணியின்றி தனிப்பட்ட முறையில் மிகக் கீழ்த்தரமாக வசை புராணம் பாடியிருக்கிறார்.

அவர் தரத்திற்கு நானும் இறங்கி பதிலடி கொடுக்க விரும்பவில்லை. எனினும் அவர் கூறியுள்ள அப்பட்டமான பொய்களுக்குப் பதில் கூற வேண்டியது அவசியம் ஆகும்.

பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி.

1969ஆம் ஆண்டில் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும், இது பாராளுமன்றத் தொகுதியல்ல, இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.

அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவரும், அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவரும் கருணாநிதியே.

1996ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்தபோது அவருக்

குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவ கவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.

மேலும் 1983ஆம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி ஆனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்து கரைக்கு கொண்டு வந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி.

பொய்யும் புரட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வர வேண்டும்.
நன்றி:- வீரகேசரி நாளேடு 8/31/2008

வெள்ளி, ஆகஸ்ட் 29, 2008

தரித்து நின்ற ரயிலுக்கு குறுக்கே, தலைவைத்து படுப்பதுதான் வீரம்!!!

கஞ்சிக்கும் வழியில்லாது அல்லாடிய
மு மகனுக்கு
வயிற்று பிழைப்பிடமாய் போனதன்று
திராவிடர் கழகம்

ஓசியிலேயே தின்று
தகாத பெண்களிடம் உறவுகொண்டு
உடன் பிறப்பே என போலியாக உச்சரித்த
அடுக்கு மொழி அலம்பல்லெல்லாம்
மேடை பேச்சானது அங்கு

கொழுப்பெடுத்த கூட்டத்திற்கு
அரசபதவி ஆசைபிறந்தது
அந்நேரம் பார்த்து
காங்கிரசில் தமிழர் கடுப்பாயிருந்தனர்

திக திமுகவானது
அவலப்பட்ட மக்களிற்கு
ஆசைவார்த்தை கூறி
அரசணையில் அமர்ந்தனர் சுலுவாய்

அண்ணா அமரர்ராக
நாவலருக்கு நடுமுதுகில் குத்திவிட்டு
தலைமைபதவியை தனதாக்கிய
குள்ளநரியொன்று
மானதமிழனுக்கு சுக்கிரீவன் பட்டமிங்கு கொடுக்கிறது

தரித்து நின்ற ரயிலுக்கு குறுக்கே
தலைவைத்து படுப்பதுதான் வீரமென்றும்
இந்திக்கு தார்பூசிய இளவல் தானென்று
வெட்டி வீரம் பேசிய
அட்டைகத்தி வீரர் இவர்

இந்திரா கொடுத்த சிறையை மறந்து
நேருவின் மகளே வருக
நிலையான ஆட்சிதருக
என ஊளையிட்ட ஓநாய்
மறத்தமிழனை சந்தர்பவாதியென்று
சகுனியாய் பேசுதிங்கு

எம்ஜிஆர் இருக்கும் வரை எதுவும் கிடையாது
முடங்கிய முதலைக்கு
அவரின் மறைவு அதிஸ்ரமாக அமைந்தது
அது தமிழனுக்கு அட்டமத்து சனியாக போனாது

காட்டி கொடுப்பதே காங்கிரஸின் தகுதியென்பது
தமிழர் நன்கறிவர்
அந்த வழியில் வந்த மூப்னாரும் குமரி அனந்தனும்
குத்துவிளக்காய் தெரியுதிங்கே
ஐயகோ கேளுமய்யா இந்த அநியாயத்தை

பரம்பரைக்கு பணத்துடன் பதவி சேர்க்க
சோனியாவின் சேலையில் தொங்குமொரு துஸ்டன்
துணிந்து பாக்கு நீரிணை கடந்த
மறத்தமிழன் மாறன் ஐயாவை தூற்றுதிங்கே

தமிழக மீனவரை நடுக்கடலில் தவிக்கவிட்ட
காவிரியாற்றை காயவிட்ட
ஓகனேக்கல் தமிழனை தாகத்தில்தவிக்கவிட்ட
சகுனியினதும் கூனியினதும் கூட்டுக்கலவை யொன்று
இனமான தமிழனை
இழித்து கரிச்சு கொட்டுது
தன் காழ்புணர்வை காட்டுது

மூப்படைந்த போதும் முழுமைபெறாத
தன்ளாத வயதிலும் பதவி மோகம் தணியாத
காங்கிரசின் கைக்கூலியொன்று
நாரயணனுடன் சேர்ந்து
தமிழனை படுகுழியில் தள்ளுதிங்கு

காங்கிரசும் அதன் கைக்கூலியும்
தமிழினத்திலுள்ள கருப்பாடுகள்
துரோகத்தின் மறுபெயர் இவர்கள் நாமம்
தமிழரை பிடித்த தரித்திரங்கள்.

தமிழரின் சரித்திரத்தில்
எட்டபனின் வாரிசுகள் இவர்களென
தமிழினம் இகழும்
காறி உமிழும்
,,,,,,,,,,,,,,,
நன்றி:-பதிவு செய்தவர்: தமிழன் பதிவு செய்தது: 27 Aug 2008 08:34 pm

திங்கள், மே 26, 2008

யாரு சூப்பர் ஸ்டாரு?

இவருதான் சூப்பர் ஸ்டாரு

புதன், மே 07, 2008

குளிர்ந்த தேனீர் (ஜஸ் ரீ/ரே) தயாரிக்கும் முறை.




தேவையான பொருட்கள்

10 லீற்றர் தண்ணீர்
6 சித்திரோன்(மஞ்சள் எலுமிச்சை)
6 லெமன் ( பச்சை எலுமிச்சை)
6 ஒறேன்ஞ்( சாத்துக்குடி/ஒறேன்ஞ் தோடம்பழம்)
சிறிதளவு மின்ஸ் இலை
10 லீற்ற தண்ணீருக்கு தேள்வையான அளவு தேயிலை தூள்.
500 g சீனி/சர்கரை.

செய்முறை
முதலில் சித்திரோன்,லெமன்,ஒறேன்ஞ் மூண்றினது தோலையும் சீவி, துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் இட்டு, நன்று கசக்கவும். இத்தோடு மின்ஸ் இலையையும் துண்டாக நறுக்கி கசக்கவும்.

தண்ணீரை அடுப்பில் வைத்து நன்று கொதிக்கவைக்கவும், கொதித்தவுடன் தேயிலை தூளை போட்டு, சீனியுடன் கலக்கவும், சாயம் இறங்கியபின்னர் வடித்து, பழங்களை கசக்கிவைத்த பத்தித்திரத்துக்குள் கொதிக்க கொதிக்க ஊற்றவும், சிறிது நேரத்தின் பின் அதனை மீண்டும் வடித்து, ஜஸ்துண்டுகளைபோட்டு குளிர்சாதனபெட்டியில் வைக்கவும், குளிர்ந்த பின் குடிக்கவும்.

உற்சாக நடனத்தின் பின்னர் இதை குடிக்க நன்றாக இருக்கும், வெயிற்காலத்துக்கு ஏற்ற அருமையான பாணம்.

திங்கள், ஏப்ரல் 21, 2008

எனக்கு அம்பாசிடர் கார் வேண்டாம்....டாடா சபாரி அல்லது ஸ்கார்பியோ கார் வழங்கப்பட வேண்டும்.--ஜெயலலிதா.


சென்னை: எனக்கு குண்டு துளைக்காத பழைய அம்பாசிடர் கார் கொடுத்துள்ளனர். அந்த காருக்கு பதிலாக குண்டு துளைக்காத டாடா சபாரி அல்லது ஸ்கார்பியோ கார் வழங்கப்பட வேண்டும்.

சந்திரபாபு நாயுடுவுக்கு தரப்பட்டுள்ளது போல எனக்கும் கமாண்டோ படை பாதுகாப்பாக தர வேண்டும்.

வெடி குண்டுகளை கண்டுபிடிக்க மோப்ப நாய் வசதி செய்து தர வேண்டும். என் வீட்டுக்கு வரும் கடிதங்களில் குண்டு உள்ளதா என்பதை சோதிக்க கருவிகள் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா இன்று புதிதாக ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசியல் தலைவர்களில் என் உயிருக்குத் தான் விடுதலைப் புலிகளால் அதிக அச்சுறுத்தல் உள்ளது. எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகளால் எனக்கு ஆபத்து நேரிடலாம். இதை கருத்தில் கொண்டு 2001ல் எனக்கு `இசட்' பிரிவு பாதுகாப்பு தரப்பட்டது.

2006ம் ஆண்டுக்குப் பிறகு எனக்கு பாதுகாப்பை குறைத்து விட்டனர். எனக்கு மிரட்டல் அதிகமாக உள்ளது. சமீப காலமாக எனக்கு உரிய பாதுகாப்பு இல்லை.

என் வீட்டை சுற்றி மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என் வீடு அருகில் கைதாவதாக அடிக்கடி நடந்து வருகிறது. எனவே எனக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

எனக்கு குண்டு துளைக்காத பழைய அம்பாசிடர் கார் கொடுத்துள்ளனர். அந்த காருக்கு பதில் குண்டு துளைக்காத டாடா சபாரி அல்லது ஸ்கார்பியோ கார் வழங்கப்பட வேண்டும். அந்த காரில் வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் ஜாமர் கருவிகளைப் பொருத்த வேண்டும்.

என் பாதுகாப்புக்கு வரும் போலீசாருக்கு வாக்கி-டாக்கி உள்ளிட்ட நவீன கருவிகளை கொடுக்க வேண்டும். அதோடு போலீசார் தூரத்திலேயே கண்காணிக்க ஸ்பீடு காமிரா வழங்கப்பட வேண்டும்.

ஆந்திரா எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டை சுற்றி 150 போலீசாரும் கமாண்டோ படை வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளன். அத்தகைய பாதுகாப்பை எனக்கும் அளிக்க வேண்டும். மேலும் ஆயுதப்படையில் நன்கு பயிற்சி பெற்ற கமாண்டோ வீரர்களை என் பாதுகாப்புக்கு நியமிக்க வேண்டும்.

பொதுக் கூட்டங்களுக்கு நான் செல்லும் போது முன்னதாகவே பொதுக் கூட்ட மேடைக்கு சென்று ஆய்வு செய்யும் போலீசார் வேண்டும். மேலும் வெடி குண்டுகளை கண்டுபிடிக்க மோப்ப நாய் வசதி செய்து தரப்பட வேண்டும்.

எனக்கு வரும் கடிதங்களில் வெடிகுண்டு உள்ளதா என்பதை கண்டுபிடிக்க நவீன கருவி தர வேண்டும்.

நான் வெளி இடங்களுக்கு செல்லும்போது என் வாகனங்களுடன் வர ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று தர வேண்டும். அந்த ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சர், ஆக்ஜிசன் சிலிண்டர் மற்றும் மருந்து வசதிகள் இருக்க வேண்டும். மேலும் அந்த ஆம்புலன்சில் என் ரத்த வகையை சேர்ந்த ரத்தம் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

கொடநாடு எஸ்டேட்டில் நான் தங்கி உள்ளேன். அங்கு சரியான முறையில் மின் வசதி இல்லை. எனவே உடனே மின் இணைப்பு தர வேண்டும்.

நான் தங்கி இருக்கும் இடத்தை சுற்றி ஒளி வெள்ளம் தரக்கூடிய போக்கஸ் விளக்குகளை பொருத்த வேண்டும். அதற்கான மின் இணைப்பை மாநில அரசே கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா அந்த மனுவில் கூறியுள்ளார்.

சட்டம்-ஒழுங்கு கெட்டு போச்சு:

இதற்கிடையே ஜெயலிதா விடுத்துள்ள அறிக்கையில்,

கொடைக்கானலில் ஒரு நக்ஸலைட் போலீஸ் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதன் மூலமும் 10 நக்ஸல்கள் தப்பியோடிவிட்டதன் மூலமும் தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடம் ஆகிவிட்டது உறுதியாகிவிட்டது.

திமுக அரசின் அணுகுமுறையால் இங்கு சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.

நான் இந்தத் தவறை சுட்டிக் காட்டும்போதெல்லாம் முதல்வர் கருணாநிதி தேவையில்லாத புள்ளிவிவரங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி எல்லாம் சரியாக இருப்பதாக காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அண்டை மாநிலங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால் நக்ஸல்கள் தமிழகத்தக்குள் ஊடுருவிக் கொண்டுள்ளனர்.

இந்த போலீஸ் எண்கெளன்டர்களால் மக்களிடையே அச்சம் பரவியுள்ளது. இதனால் கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து சுற்றுலா பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

thatstamil.com

திங்கள், ஏப்ரல் 14, 2008

பலமுக ராஜபக்சா!

பலமுக ராஜபக்சா!

திங்கள், ஏப்ரல் 07, 2008

பறக்கும் மனிதன்!

கானொளியில் பறக்கும் மனிதன்.

வியாழன், மார்ச் 27, 2008

பிரபாகரன் படம்-சென்னையில் சிங்கள இயக்குநருக்கு சரமாரியாக அடி உதை!!!


சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து படம் எடுத்துள்ள சிங்கள இயக்குநரைக் கண்டித்து சென்னையில் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இயக்குநருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது.

இலங்கையைச் சேர்ந்த துஷாரா பெரீஸ் என்பவர் பிரபாகரன் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்துப் படம் எடுத்துள்ளார். இப்படத்தை சிங்களத்தில் எடுத்துள்ள அவர், படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் மற்றும் பிரிண்ட் போடுவதற்காக சென்னைக்கு வந்துள்ளார்.

கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் லேபில் பிரிண்ட் போடும் பணி நடந்து வருகிறது. இந்தத் தகவல் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிய வந்தது. இதையடுதது திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்டோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஜெமினி லேபுக்கு விரைந்தனர்.

லேபுக்கு முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரபாகரன் பட பிரிண்ட் போடும் பணியை நிறுத்த வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதையடுத்து இயக்குநர் பெரீஸ், தமிழர் அமைப்பினரை சமாதானப்படுத்துவதற்காக வெளியே வந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் பெரீஸ் மீது பாய்ந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் பெரீஸ் அதி்ர்ச்சி அடைந்தார். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். தமிழர் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வருகிற 27ம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்குப் படத்தைப் போட்டுக் காட்டுவது, அவர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் பிரிண்ட் போட்டுக் கொடுத்து இலங்கைக்கு அனுப்புவது என்ற முடிவுக்கு அனைவரும் வந்தனர்.

இதையடுத்து வருகிற 27ம் தேதி பிரபாகரன் படத்தை ராமதாஸும், திருமாவளவனும் பார்க்கவுள்ளனர். தமிழ் சப்-டைட்டிலுடன் படம் காட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பிரபாகரன், தமிழர்களின் போராட்டம் குறித்து தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கருத்து பரவியுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2008/03...-sinhalese.html


குமுதம்.காம் முச்சந்தி.:

சிங்கள சினிமா பட டைரக்டருக்கு தமிழ்நாட்டில் விழுந்த அடி-_உதை


''இலங்கையில இருக்குற சிங்களத்து சினிமா டைரக்டரு ஒருத்தர் 'பிரபாகரன்'னு படம் எடுத்திருக்காரு. முழுக்க முழுக்க தமிழ் போராளிகள் இயக்கத்த அதாவது புலிகளை சர்வதேச அளவில் கொச்சை படுத்துறவிதமான படமாம் அது. சிங்கள அரசே அந்த டைரக்டருக்கு பக்கபலமா இருந்து உதவிபன்னறாம். அப்படிப்பட்ட சினிமா படத்தை எடுத்துகிட்டு தமிழ்நாட்டுக்கு வந்தாரு அந்த டைரக்டர். கே.கே. நகர்ல இருக்குற ஜெமினி கலர் லேபில் வச்சு 'தமிழ் டப்பிங்' வேலைய செய்யுறதோட அறுபதுக்கும் மேற்பட்ட படக்காப்பி (ப்ரிண்ட்) போடுற திட்டத்திலேயும் இறங்கியிருந்தாரு.

ரகசியமா நடந்துகிட்டிருக்கிற இந்த படவேலை பத்தின தகவல் எப்படியோ, விடுதலை சிறுத்தைகள் அமைப்போட ஊடக பிரிவு பொருப்பாளரான வன்னி அரசுக்கு தெரிஞ்சிருக்கு. புலிகளுக்கு ஆயுதம் கடத்த உதவி பன்னாற்று கைதாகி ஜாமீன்ல வந்தாரே அதே 'வன்னி'தான் உடனே சுப. வீரபாண்டியன். சினிமா இயக்குனர் சீமான். உள்ளிட்ட பலருக்கும் தகவல் பரவிடுச்சு. அப்புறம் என்னது. திபுதிபுன்னு ஒரு ஆயிரம் தமிழ் பற்றாளர்களோட சுபவீ. சீமான், வன்னியரசு உட்பட பெரிய டீமே 'ஜெமினி' கலர் லேடிபுக்கு போயிருக்கு.

அந்த சிங்கள டைரக்டர்கிட்ட 'எங்க இனத்துக்கு எதிரா படம் எடுத்துட்டு, எங்க மண்ணுலேயே வந்து இந்த வேலைய செய்ய எப்படி துணிச்சல் வந்துச்சுன்னு ஓட ஓட விரட்டி தர்ம அடியா போட்டு தாக்கிட்டாங்க. சிங்கள டைரக்டரோட சட்டதுணி எல்லாம் கிழிஞ்சுடுச்சு. அவரு உயிர் பயத்துல 'அய்யோ, அய்யோ'ங்கிறத மட்டுமே தமிழ்ல கத்தினப் பாத்து, போனாப் போகுதுன்னு 'அடி'ய விட்டுட்டு அவரை தூக்கிட்டு வந்து ஒரு சேர்ல குந்தவச்சு முகத்துல தண்ணியடிச்சு கழுவிட்டு 'இந்த மாதிரி இனிமே செய்வியாடான்னு' திரும்பவும் ரெண்டு தட்டு தட்டியிருக்காங்க. அய்யோ சாமிங்கள சிலோன்லதான் 'புலிகள்' இருக்கான்னு நினைச்சேன் இங்கேயும் இருப்பீங்கன்னு தெரியாது நான் உங்க கேப்டன் பிரபாகரனுக்கு எதிராவோ, தமிழர்களுக்கு எதிராவோ படம் எடுக்கவே போராளி குழுவுல ஒரு சின்ன பையனா வர்றவருக்குதான் 'பிரபாகரன்'னு பேரு அதையே படத்துக்கு பேரா வச்சுட்டேன். மத்தபடி ஒரு தப்பும் செய்யலேன்னு கதறி அழுதிருக்காரு.

இதுக்குள்ள நிறைய போலீஸ் உள்ள வந்துருச்சு. அவரை மீட்டு பாதுகாப்பா ஒரு அறைக்கு கொண்டு போய் வச்சாங்க. நம்ப 'டீம்' விடவில்லை. பதில் சொல்லுடான்னு அங்கேயும் போய் வம்படிச்சாங்க. பிறவு போலீஸ் மத்தியில வச்சுகிட்டு சுப.வீ. அந்த சிங்கள டைரக்டர்கிட்ட பேச்சுவார்த்தை நடத்தினாரு.

இறுதியா தமிழ் தலைவர்களான பழ. நெடுமாறன், டாக்டர்.ராமதாஸ், திருமாவளவன், இயக்குனர் சீமான் உள்ளிட்ட பலரை கூட்டி வச்சு அந்த 'பிரபாகரன்' படத்தை 27_ந் தேதி காலையில பதினோரு மணிக்கு போட்டு காட்டணும். போராளிகளுக்கோ தமிழர்களுக்கு படம் எதிரா இருந்தா தமிழ் டப்பிங், பிரிண்ட் போடுற எந்த வேலையும் செய்யக் கூடாது (அப்படி செய்தா படச்சுருளையே கொலுத்திடுவோம்னு வேற சொன்னாங்க). அப்படியே அந்த பெட்டிய தூக்கிட்டு அடிபடாம சிங்களத்துக்கு ஓடிப்போயிடனும். அனுமதி கிடையாது. நல்லபடியா இருந்துச்சுன்னா நீ செய்யுற வேலைய தாராளமா செய்துக்கிடலாம்னு'' அந்த டைரக்டர் கைப்பட எழுதி வாங்கிட்டு, அந்த 'பிரபாகரன்' சிங்களபடத்தை ஒரு வெட்டுக்குள்ள போட்டு மூடி சில வச்சுட்டுத்தான் வெளிய வந்தாங்க.''

அடடே அப்புறம் என்னாச்சு _ அன்வர்பாய்.

''அதான் முதலிலேயே உதைச்சுட்டுங்களே. பிறவு ஏதும் நடக்கலை. சமாதானமா வெளியேறிட்டாங்க. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். அந்த சிங்கள டைரக்டர் சட்டை துணி எல்லாம் கிழிஞ்சி கிடந்தாரில்ல. அத பாத்துட்டு தமிழ் உணர்வாளர்கள் பாவப்பட்டு, உடனே பக்கத்துல இருந்த துணிக் கடைக்கு ஓடி டைரக்டரோட சைஸுக்கு ஒரு டி.சர்ட் வாங்கி வந்து போட்டுக்க வச்சிருக்காங்க. ஏன் தெரியுமா, போலீஸ், பத்திரிக்கைக்காரங்கன்னு வந்து பார்க்குறப்போ, சட்டைகிழிந்து பரிதாபமா இருந்தா நல்லாருக்காது இல்ல அதான்'' என்றார் சிரித்தபடியே.

சபை களைகட்டும்.
ஒட்டுக் கேட்டவர் :
பா. ஏகலைவன்

குமுதம்.காம்

வியாழன், மார்ச் 13, 2008

2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!

போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.

எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக
கிறது.

பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?

பிறந்து ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !

இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.

திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.

தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோர் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.

தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை என்பதே பல சுவாரஸ்யமான கற்பனனகளுக்கு வழி வகுத்திருக்கிறது.

இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில் இறங்கி பாவத்தைக் குறித்து எல்லோரையும் எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என அறிவிக்கவும் செய்யவும் துவங்கினானாம்.

செவ்வாயில் உள்ள தரைகீழ் வீடுகளில் இன்னும் மக்கள் வசிப்பதாகவும், ஒரு மாபெரும் அழிவை செவ்வாய் கிரகம் சந்தித்ததாகவும், இதனால் மக்கள் தரையின் கீழ் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும். அந்தப் போரில் தானும் தனது நண்பனும் கால வாகனத்தில் பயணித்ததாகவும் அவன் விளக்குகிறான்.

செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.

லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதை அறிவியல் புனை கதை கேட்பது போல எல்லோரும் ரசிக்கிறார்களாம்.

லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.

உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர்.

இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.

மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.

செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக இவன் விளக்கும் போது தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர் விஞ்ஞானிகள்.

விஞ்ஞானிகளிடம் பேசும்போது விஞ்ஞான மொழியில் வேறு பேசி அதிர்ச்சியளிக்கிறானாம்.

ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு “ மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான். யாரேனும் உன்னை காயப்படுத்தினால் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் மன்னிப்புக் கேட்கவேண்டும் “

என்கிறான் இவன். இவன் சொல்வது உண்மையா பொய்யா என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் விஞ்ஞானிகள் குழப்பத்தின் குழந்தையாய் திரிகின்றனர்.

Source: http://english.pravda.ru/science/mysteries/104375-0/

ஞாயிறு, மார்ச் 09, 2008

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க முடியாது; நிபுணர் குழு அறிக்கையில் தகவல்!!!

சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராகவும் சேது சமுத்திர திட்ட பணியில் ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதை தொடர்ந்து ராமர் பாலம் அமைந்துள்ள பகுதிகளில் திட்டப் பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் ராமர் பாலம் பற்றி தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து மத்திய அரசு அந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு புதிய மனுவை தயாரித்தது.

சேது சமுத்திர கால்வாய் திட்ட பணி குறித்து ஆராய மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தது. இந்த நிபுணர் குழு ஆய்வு நடத்தி தனது அறிக்கையை மத்திய அரசுக்கு தாக்கல் செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த அறிக்கையின் நகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ராமர் பாலம் மனிதனால் உரு வாக்கப்பட்டது அல்ல, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் இந்தியாவின் பொருளா தாரம் வளர்ச்சி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறி விக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையும் இந்த நிபுணர் குழு அறிக்கையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ராமர் பாலம் பற்றி விஞ்ஞான பூர்வ ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதை பாது காக்கப்பட்ட புராதன சின்னங் கள் பட்டியலில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ராமச்சந்திரன் தலை மையிலான நிபுணர் குழு அறிவித்துள்ளது.

ராமர் பாலம் அமைந்துள்ள பகுதியில் பணிகளை மேற் கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை நடத்துகிறது.
நன்றி:-லங்கசிறீ

ஞாயிறு, பிப்ரவரி 24, 2008

திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர்!!!


தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா நாகை மாவட்டத்தில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றில் தனது தோழி சசிகலாவுடன் மாலை மாற்றிக்கொண்டுள்ளார்.

இன்றுதான் ஜெயலலிதா அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். அதை முன்னிட்டே நேற்றைய வழிபாடுகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயத்தில்தான் அறுபதை வயதை அடையும் தம்பதியர் அத்தகைய ஆராதனைகளை நடத்துவர் என்பதாலும், பெண்கள் இருவர் மாலை மாற்றிக்கொண்டதாலும், இது குறித்து தமிழக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

புதன், பிப்ரவரி 20, 2008

வைரமுத்துவிடம் 52 கேள்விகள்.

தமிழில் உங்களுக்கு மிகவும் பிடித்த வார்த்தை?

தமிழ்

இப்போது 50kg. தாஜ்மகால் யார்?

சானியா மிர்சா

காதல் என்பது?

காமனின் அம்பு அல்லது ஹார்மோன்களின் வம்பு.

பிடித்த நிறம்?

வெள்ளை



பச்சையப்பன் கல்லூரி?

மாணவனாய்ச் சேர்த்துக் கொண்டு, மாப்பிள்ளையாய் அனுப்பியது.

கண்ணதாசன் _ வாலி ஒப்பிடுக?

பாடலை ஷனரஞ்சகமாக்கியவர் கண்ணதாசன்;

ஷனரஞ்சகத்தைப் பாடலாக்கியவர் வாலி
உங்கள் இளமையின் ரகசியம் என்ன?

மனசு நரைக்காமல் பார்த்துக்கொள்வது

இளையராஜா _ பாரதிராஜா?

மேற்குத் தொடர்ச்சி மலையை இமயமலைக்கு அறிமுகம் செய்தவர்கள்.

வேட்டி பிடிக்காதா?

காலைப் பிடிக்கும்.

தம்பி...?

உடையான் படைக்கு அஞ்சான்

ரஜினி?

நடிகர்களில் ஓர் அறிவாளி

கமல்?

அறிவாளிகளில் ஒரு நடிகர்

பொன்மணி?

மனைவியாய் வந்த கடவுள்

பெரியார்?

செயற்கரிய செய்தார்.

அண்ணா?

கவிஞர்களை உருவாக்கிய உரைநடையாளர்

சின்ன வயதில் கடவுள் பக்தி உண்டா?

கோயிலுக்குப் போனதுண்டு. பக்தி மட்டும் வந்ததில்லை.

ஜெயலலிதாவிடம் பிடித்தது?

துணிச்சல்

முதல் பாடல்?

பொன்மாலைப் பொழுது

நீங்கள் எழுதாததில் உங்களுக்குப் பிடித்த பாடல்?

காதல் சிறகைக் காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா!

தமிழர்களின் முக்கியக் குறைபாடு என்ன?

நேரம் குறித்த பிரக்ஞை இன்மை.

உங்கள் மனம் கவர்ந்த பெண்மணி யார்? (மனைவியைத் தவிர)

பி. சுசீலா

காதலில் தோல்வியடைந்தால் என்ன செய்வது?

கல்யாணம் செய்து காதலைத் தோற்கடிப்பது

தன்னம்பிக்கை வரிகள் ப்ளீஸ்?

சுடப்பட்டிருக்க மாட்டாய் நீ தங்கமாக இல்லாவிட்டால் சூடுதாங்கு; நகையாவாய்

நாகேஸ்வரராவ் பூங்கா என்றதும் நினைவுக்கு வருவது?

‘‘இலை’’ என்ற கவிதைக்குக் கருப்பொருள் தந்தது.

ஷங்கர் _ மணிரத்னத்துக்கு மட்டும் கலக்குகிறீர்களே?

இல்லை; அவர்களே கலக்குகிறார்கள்

தென்றல், மலர், நிலவு, பனித்துளி, பெண், ஆண் _ உடனே கவிதை எழுதத் தூண்டுவது?

பனித்துளியும் _ பெண்ணும்

சென்னையில் பிடித்த இடம்?

சென்ட்ரல் ரயில் நிலையம்

கலைஞரிடம் வியப்பது _ ரசிப்பது..?

வியப்பது உழைப்பை

ரசிப்பது நகைச்சுவையை

வைகோ?

அரசியலில் இலக்கியம் கலப்பவர்

இலக்கியத்தில் அரசியல் கலக்காதவர்

விஜயகாந்த் அரசியலில் ஜெயிப்பாரா?

நண்பர் யார் என்று தீர்மானித்துக் கொள்வது _ திரைப்பட வெற்றி

எதிரி யார் என்று தீர்மானித்துக்கொள்வது _ அரசியல் வெற்றி.

அவர் தீர்மானித்து வெற்றி பெற வேண்டும்.

கபிலன் இன்னொரு வைரமுத்து ஆவாரா?

ஒரு வைரமுத்துவையே சிலபேர் ஜீரணிக்க முடியாதபோது, கபிலன் கபிலனாகவே இருக்கட்டும்.

ராஜா _ ரகுமான் ஒப்பிடுங்கள்?

அவர் ஆர்மோனிய அரசர்;

இவர் ‘‘கீ போர்டு கிங்’’

திரைப்பாட்டு _ கவிதை எழுதுவதில் எது பிடிக்கும்?

திரைப்பாட்டில் கவிதை எழுதப்பிடிக்கும்

உங்கள் மனதில் பதிந்த கவிதை வரி?

தீதும் நன்றும் பிறர்தர வாரா

திருவள்ளுவரைப் பற்றி?

தமிழர்களின் ஞான அடையாளம்

கம்பர்?

தமிழ்ப்படைப்பிலக்கியத்தின் உச்சம்

இளங்கோவடிகளைப் பற்றி?

தமிழைத் துறக்காத துறவி

கண்ணதாசன் உயிரோடு வந்தால் என்ன கேட்பீர்கள்..?

வனவாசத்தில் விட்டுப்போன பகுதிகளை,

கவிஞர்களில் கூட ஆண் ஆதிக்கம் தானே அதிகம் இருக்கிறது?

பெண்ணாதிக்கம் உள்ளவர்களும் கவிஞர்களாக இருக்கிறார்களே!

அடிக்கடி வாசிக்கும் தமிழ் இலக்கியம்?

முத்தொள்ளாயிரம்

புதிய இயக்குநர்களில் நம்பிக்கை தருகிறவர்கள்..?

பாலா _ சரண் _ செல்வராகவன் _ தரணி _ அமீர்.

தமிழ் நாட்டில் பிடித்த ஊர்

கொடைக்கானல்

பா. விஜய்க்கு விருது கிடைத்தது பற்றி....

தமிழின் பெருமை தொடர்கிறது

பெண் குழந்தை இல்லை என்ற ஆதங்கம் உண்டா?

ஷெமினியின் கடைசிப் படுக்கையருகே என்னை அழைத்துச் சென்ற டாக்டர் கமலா செல்வராஜ், கண்கலங்கி அழுதபோது ஆதங்கப்பட்டிருக்கிறேன்.

இதிகாசங்களில் உங்களுக்குப் பிடித்த பாத்திரம் எது?

பேயத்தேவர்.

ரசிக்கும் சிற்பம்..?

கண்கள் மூடிய புத்தர் சிலை

வித்யாசாகர் விருது பெற்றது பற்றி...

தன் தாய்மொழியான தெலுங்குப் படத்திற்கு தேசிய விருது பெற்றவர்,

தந்தை மொழியான தமிழிலும் விருது பெறுவார்.

இந்த வாரம் எழுதியதில் பிடித்த பாடல்...

ஆண் : மீசை முத்தம் வேண்டுமா;

மீசை இல்லாத முத்தமா?

மீசை முத்தம் என்பது பெண்ணே

நான் உனக்குத் தருவது

மீசையில்லாத முத்தம் என்றால்

நீ எனக்குத் தருவது (கலைஞரின் பாசக்கிளிகள்)

நீங்கள் உட்பட இன்றைய கவிஞர்கள் ஏதாவது ஓர் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்களே ஏன்?

எனக்குத் தொடர்பு அரசியல் கட்சிகளோடல்ல _ தலைவர்களோடுதான்.

சரோஜாதேவி, தேவிகா, பத்மினி, குஷ்பு, சிநேகா, த்ரிஷா _ ஒவ்வொரு வார்த்தை ப்ளீஸ்...?

சரோஷா தேவி : கட்டழகு

தேவிகா : கண்ணழகு

பத்மினி : பெண்ணழகு

குஷ்பு : முகத்தழகு

சிநேகா : சிரிப்பழகு

த்ரிஜா : முழுஅழகு

இன்றைய தலைமுறைக்குத் தகுந்தாற்போல் எப்படி உங்களை மாற்றிக் கொள்ள முடிகிறது?

திறந்தவெளியில் அதிகம் இருக்கிறேன்.

உங்களை உற்சாகப்படுத்தும் பொன்மொழி?

தண்ணீரைக்கூடச் சல்லடையில் அள்ளலாம்

அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால்.

குமுதம்-

வெள்ளி, பிப்ரவரி 15, 2008

தசாவதாரம்!!!



நடிகர் கமல்ஹாசன் 10 வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் தசாவதாரம். தீபாவளிக்கு வரும், பொங்கலுக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்துள்ள நிலையில் படத்தில் இறுதிகட்ட சூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. தற்போது கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இதனால் உலகம் முழுவதிலும் தசாவதாரத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி முதல் தசாவதாரம் திரையில் மின்னும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. கமல்ஹாசன் அதிக அளவில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள இப்படத்தைப் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட் வருமாறு :

# தசாவதாரம் படத்தை இயக்குபவர் இஈயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
# தசாவதாரம் சமூகத்தின் மீது அக்கறைகொண்ட பொறுப்பான ஒரு மனிதனின் கதை.
# படத்தின் கதையை கிரேசிமோகன், சுஜாதா இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். கமலின் பங்கும் இதில் இருக்கிறது.
# புதுமையான இசையை புகுத்தியிருப்பவர் ஹிமேஷ் ரேஷ்மாச்சார்யா.
# கமல் 10 வேடங்களில் நடிப்பதால் அதிக அளவு கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
# பெரும்பாலான கிராபிக்ஸ் காட்சிகள் வெளிநாட்டு நிறுவனங்களால் செய்யப்படுகிறது.
# வெளிநாட்டு ரசிகர்களை கவர தசாவதாரத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியிட உள்ளனர்.
# படத்தில் பாரதி, வாசு, ஆ.சுந்தர்ராஜன், சவுந்தர், ரமேஷ்கண்ணா, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குனர்களும் நடித்துள்ளனர்.
# நடிகை அசின் தன் சொந்தக்குரலில் பேசி நடித்துள்ளார். இந்த படத்தில் அம்மணி அக்ரஹாரத்து பெண்ணாக வருகிறார்.
# தசாவதாரம் படத்தில் 2 கமல்கள் சண்டையிடும் காட்சி மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. இந்த காட்சிக்காக அமெரிக்காவில் இருந்து நவீன தொழில்நுட்ப கருவிகள் வரவழைக்கப்பட்டிருந்தன.
# சென்னை, மலேசியா, அமெரிக்கா, மற்றும் சிதம்பரத்தில் இப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன.
# படத்தில் 2 பாடல்கள் ரூ.3 கோடி செலவில் சென்னையில் படம்பிடிக்கப்பட்டது.
# கமலுக்கு ஜோடியாக அசின், மல்லிகா ஷெராவத், ஜெஈயப்பிரதா, கே.ஆர்.விஜயா, ரேகா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். நாகேஷ், நெப்போலியனும் முக்கிய கேரக்டர்களாக நடிக்கிறார்கள்.
# கமல்ஹாசனின் 10 வேட்களில் ஒன்று ஜார்ஜ் புஷ் வேடம்.
# ஜார்ர் புஷ் வேடம் பற்றி கமலிடம் கேட்டபோது, நான் நடித்த அந்த கேரக்டர் பற்றி இப்போதே சொல்வது நல்லதல்ல என்று கூறி மழுப்பி விட்டார்.
# புஷ் வேடம் தவிர ஆன்மீகவாதி, நீக்ரோ, வயதான தாத்தா, இளைஞர், பின்லேடன் உள்ளிட்ட வேடங்களிலும் கமல் கலக்கியிருக்கிறார்.
# ஆன்மீக கமலுடன் பத்தாயிரம் பக்தர்கள் பங்குபெறும் பிரம்மாண்டமான காட்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் படமாக்கப் பட்டுள்ளது
# வாலி மற்றும் வைரமுத்துவின் பாடல்கள் எழுதியுள்ளனர்.
# படம் திரைக்கு வரும்போது இந்தியாவில் மட்டுமல்லாது, அமெரிக்கா, கனடா ஆகிஈய நாடுகளிலும் விடுமுறை காலமாகும். எனவே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
# இந்த படம் நகைச்சுவை கலந்த கலகலப்பான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
# தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிப்பதாகும். (மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர், வாமணர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆகியவையே விஷ்ணுவின் 10 அவதாரங்கள்).

ஆதாரம் தினமலர்

செவ்வாய், பிப்ரவரி 05, 2008

கோவில் இடிப்பு: மன்னிப்பு கேட்கும் மலேசியா!

மலேசியாவின் கிளாங் நகரில் உள்ள இந்துக் கோவிலை இடித்தது தவறு. அதற்காக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்பதாக மலேசிய துணைப் பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக் கூறியுள்ளார்.

மலேசியாவில், ஆளுங்கூட்டணி மீது தமிழர்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். இந்த அதிருப்தியின் விளைவு, வருகிற பொதுத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என்ற பயத்தில் ஆளுங்கூட்டணி உள்ளது. இதனால் தமிழர்களை சமாதானப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இதில் ஒரு பகுதியாக கிளாங்கில் உள்ள பழம்பெரும் இந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு மலேசிய துணைப் பிரதமர் ரஸ்ஸாக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கிளாங்கில் உள்ள கோவில் இடிக்கப்பட்டது, அதிலும் தீபாவளிக்கு முன்பு இடிக்கப்பட்டது தவறு என்பதை உணர்ந்துள்ளோம். அதற்காக மன்னிப்பு கோருகிறோம். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்றார் அவர்.

மலேசியாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடங்களில் சுமார் 24 ஆயிரம் இந்து கோயில்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தக் கோவில்கள் கட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
paraparappu.com

திங்கள், ஜனவரி 14, 2008

உங்களது கருத்துக்களை இங்கு மறக்காமல் பதியுங்கள்...

உலக தொலைக்காட்ச்சிகளில் ஒண்றான அல்ஜசீரா உங்களின் கருத்துக்களை கேட்க்கிறது முடிந்தால் அங்கு போய் பதியுங்கள்...!

http://www.youtube.com/watch?v=ilu5OSkubqE&eurl=http://birund.blogspot.com/2008/01/blog-post.html
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us