ஞாயிறு, பிப்ரவரி 24, 2008

திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர்!!!


தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா நாகை மாவட்டத்தில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றில் தனது தோழி சசிகலாவுடன் மாலை மாற்றிக்கொண்டுள்ளார்.

இன்றுதான் ஜெயலலிதா அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். அதை முன்னிட்டே நேற்றைய வழிபாடுகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயத்தில்தான் அறுபதை வயதை அடையும் தம்பதியர் அத்தகைய ஆராதனைகளை நடத்துவர் என்பதாலும், பெண்கள் இருவர் மாலை மாற்றிக்கொண்டதாலும், இது குறித்து தமிழக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

புதன், பிப்ரவரி 20, 2008

வைரமுத்துவிடம் 52 கேள்விகள்.

தமிழில் உங்களுக்கு மிகவும் பிடித்த வார்த்தை?

தமிழ்

இப்போது 50kg. தாஜ்மகால் யார்?

சானியா மிர்சா

காதல் என்பது?

காமனின் அம்பு அல்லது ஹார்மோன்களின் வம்பு.

பிடித்த நிறம்?

வெள்ளை



பச்சையப்பன் கல்லூரி?

மாணவனாய்ச் சேர்த்துக் கொண்டு, மாப்பிள்ளையாய் அனுப்பியது.

கண்ணதாசன் _ வாலி ஒப்பிடுக?

பாடலை ஷனரஞ்சகமாக்கியவர் கண்ணதாசன்;

ஷனரஞ்சகத்தைப் பாடலாக்கியவர் வாலி
உங்கள் இளமையின் ரகசியம் என்ன?

மனசு நரைக்காமல் பார்த்துக்கொள்வது

இளையராஜா _ பாரதிராஜா?

மேற்குத் தொடர்ச்சி மலையை இமயமலைக்கு அறிமுகம் செய்தவர்கள்.

வேட்டி பிடிக்காதா?

காலைப் பிடிக்கும்.

தம்பி...?

உடையான் படைக்கு அஞ்சான்

ரஜினி?

நடிகர்களில் ஓர் அறிவாளி

கமல்?

அறிவாளிகளில் ஒரு நடிகர்

பொன்மணி?

மனைவியாய் வந்த கடவுள்

பெரியார்?

செயற்கரிய செய்தார்.

அண்ணா?

கவிஞர்களை உருவாக்கிய உரைநடையாளர்

சின்ன வயதில் கடவுள் பக்தி உண்டா?

கோயிலுக்குப் போனதுண்டு. பக்தி மட்டும் வந்ததில்லை.

ஜெயலலிதாவிடம் பிடித்தது?

துணிச்சல்

முதல் பாடல்?

பொன்மாலைப் பொழுது

நீங்கள் எழுதாததில் உங்களுக்குப் பிடித்த பாடல்?

காதல் சிறகைக் காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா!

தமிழர்களின் முக்கியக் குறைபாடு என்ன?

நேரம் குறித்த பிரக்ஞை இன்மை.

உங்கள் மனம் கவர்ந்த பெண்மணி யார்? (மனைவியைத் தவிர)

பி. சுசீலா

காதலில் தோல்வியடைந்தால் என்ன செய்வது?

கல்யாணம் செய்து காதலைத் தோற்கடிப்பது

தன்னம்பிக்கை வரிகள் ப்ளீஸ்?

சுடப்பட்டிருக்க மாட்டாய் நீ தங்கமாக இல்லாவிட்டால் சூடுதாங்கு; நகையாவாய்

நாகேஸ்வரராவ் பூங்கா என்றதும் நினைவுக்கு வருவது?

‘‘இலை’’ என்ற கவிதைக்குக் கருப்பொருள் தந்தது.

ஷங்கர் _ மணிரத்னத்துக்கு மட்டும் கலக்குகிறீர்களே?

இல்லை; அவர்களே கலக்குகிறார்கள்

தென்றல், மலர், நிலவு, பனித்துளி, பெண், ஆண் _ உடனே கவிதை எழுதத் தூண்டுவது?

பனித்துளியும் _ பெண்ணும்

சென்னையில் பிடித்த இடம்?

சென்ட்ரல் ரயில் நிலையம்

கலைஞரிடம் வியப்பது _ ரசிப்பது..?

வியப்பது உழைப்பை

ரசிப்பது நகைச்சுவையை

வைகோ?

அரசியலில் இலக்கியம் கலப்பவர்

இலக்கியத்தில் அரசியல் கலக்காதவர்

விஜயகாந்த் அரசியலில் ஜெயிப்பாரா?

நண்பர் யார் என்று தீர்மானித்துக் கொள்வது _ திரைப்பட வெற்றி

எதிரி யார் என்று தீர்மானித்துக்கொள்வது _ அரசியல் வெற்றி.

அவர் தீர்மானித்து வெற்றி பெற வேண்டும்.

கபிலன் இன்னொரு வைரமுத்து ஆவாரா?

ஒரு வைரமுத்துவையே சிலபேர் ஜீரணிக்க முடியாதபோது, கபிலன் கபிலனாகவே இருக்கட்டும்.

ராஜா _ ரகுமான் ஒப்பிடுங்கள்?

அவர் ஆர்மோனிய அரசர்;

இவர் ‘‘கீ போர்டு கிங்’’

திரைப்பாட்டு _ கவிதை எழுதுவதில் எது பிடிக்கும்?

திரைப்பாட்டில் கவிதை எழுதப்பிடிக்கும்

உங்கள் மனதில் பதிந்த கவிதை வரி?

தீதும் நன்றும் பிறர்தர வாரா

திருவள்ளுவரைப் பற்றி?

தமிழர்களின் ஞான அடையாளம்

கம்பர்?

தமிழ்ப்படைப்பிலக்கியத்தின் உச்சம்

இளங்கோவடிகளைப் பற்றி?

தமிழைத் துறக்காத துறவி

கண்ணதாசன் உயிரோடு வந்தால் என்ன கேட்பீர்கள்..?

வனவாசத்தில் விட்டுப்போன பகுதிகளை,

கவிஞர்களில் கூட ஆண் ஆதிக்கம் தானே அதிகம் இருக்கிறது?

பெண்ணாதிக்கம் உள்ளவர்களும் கவிஞர்களாக இருக்கிறார்களே!

அடிக்கடி வாசிக்கும் தமிழ் இலக்கியம்?

முத்தொள்ளாயிரம்

புதிய இயக்குநர்களில் நம்பிக்கை தருகிறவர்கள்..?

பாலா _ சரண் _ செல்வராகவன் _ தரணி _ அமீர்.

தமிழ் நாட்டில் பிடித்த ஊர்

கொடைக்கானல்

பா. விஜய்க்கு விருது கிடைத்தது பற்றி....

தமிழின் பெருமை தொடர்கிறது

பெண் குழந்தை இல்லை என்ற ஆதங்கம் உண்டா?

ஷெமினியின் கடைசிப் படுக்கையருகே என்னை அழைத்துச் சென்ற டாக்டர் கமலா செல்வராஜ், கண்கலங்கி அழுதபோது ஆதங்கப்பட்டிருக்கிறேன்.

இதிகாசங்களில் உங்களுக்குப் பிடித்த பாத்திரம் எது?

பேயத்தேவர்.

ரசிக்கும் சிற்பம்..?

கண்கள் மூடிய புத்தர் சிலை

வித்யாசாகர் விருது பெற்றது பற்றி...

தன் தாய்மொழியான தெலுங்குப் படத்திற்கு தேசிய விருது பெற்றவர்,

தந்தை மொழியான தமிழிலும் விருது பெறுவார்.

இந்த வாரம் எழுதியதில் பிடித்த பாடல்...

ஆண் : மீசை முத்தம் வேண்டுமா;

மீசை இல்லாத முத்தமா?

மீசை முத்தம் என்பது பெண்ணே

நான் உனக்குத் தருவது

மீசையில்லாத முத்தம் என்றால்

நீ எனக்குத் தருவது (கலைஞரின் பாசக்கிளிகள்)

நீங்கள் உட்பட இன்றைய கவிஞர்கள் ஏதாவது ஓர் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்களே ஏன்?

எனக்குத் தொடர்பு அரசியல் கட்சிகளோடல்ல _ தலைவர்களோடுதான்.

சரோஜாதேவி, தேவிகா, பத்மினி, குஷ்பு, சிநேகா, த்ரிஷா _ ஒவ்வொரு வார்த்தை ப்ளீஸ்...?

சரோஷா தேவி : கட்டழகு

தேவிகா : கண்ணழகு

பத்மினி : பெண்ணழகு

குஷ்பு : முகத்தழகு

சிநேகா : சிரிப்பழகு

த்ரிஜா : முழுஅழகு

இன்றைய தலைமுறைக்குத் தகுந்தாற்போல் எப்படி உங்களை மாற்றிக் கொள்ள முடிகிறது?

திறந்தவெளியில் அதிகம் இருக்கிறேன்.

உங்களை உற்சாகப்படுத்தும் பொன்மொழி?

தண்ணீரைக்கூடச் சல்லடையில் அள்ளலாம்

அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால்.

குமுதம்-

வெள்ளி, பிப்ரவரி 15, 2008

தசாவதாரம்!!!



நடிகர் கமல்ஹாசன் 10 வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் தசாவதாரம். தீபாவளிக்கு வரும், பொங்கலுக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்துள்ள நிலையில் படத்தில் இறுதிகட்ட சூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. தற்போது கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இதனால் உலகம் முழுவதிலும் தசாவதாரத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி முதல் தசாவதாரம் திரையில் மின்னும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. கமல்ஹாசன் அதிக அளவில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள இப்படத்தைப் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட் வருமாறு :

# தசாவதாரம் படத்தை இயக்குபவர் இஈயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
# தசாவதாரம் சமூகத்தின் மீது அக்கறைகொண்ட பொறுப்பான ஒரு மனிதனின் கதை.
# படத்தின் கதையை கிரேசிமோகன், சுஜாதா இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். கமலின் பங்கும் இதில் இருக்கிறது.
# புதுமையான இசையை புகுத்தியிருப்பவர் ஹிமேஷ் ரேஷ்மாச்சார்யா.
# கமல் 10 வேடங்களில் நடிப்பதால் அதிக அளவு கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
# பெரும்பாலான கிராபிக்ஸ் காட்சிகள் வெளிநாட்டு நிறுவனங்களால் செய்யப்படுகிறது.
# வெளிநாட்டு ரசிகர்களை கவர தசாவதாரத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியிட உள்ளனர்.
# படத்தில் பாரதி, வாசு, ஆ.சுந்தர்ராஜன், சவுந்தர், ரமேஷ்கண்ணா, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குனர்களும் நடித்துள்ளனர்.
# நடிகை அசின் தன் சொந்தக்குரலில் பேசி நடித்துள்ளார். இந்த படத்தில் அம்மணி அக்ரஹாரத்து பெண்ணாக வருகிறார்.
# தசாவதாரம் படத்தில் 2 கமல்கள் சண்டையிடும் காட்சி மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. இந்த காட்சிக்காக அமெரிக்காவில் இருந்து நவீன தொழில்நுட்ப கருவிகள் வரவழைக்கப்பட்டிருந்தன.
# சென்னை, மலேசியா, அமெரிக்கா, மற்றும் சிதம்பரத்தில் இப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன.
# படத்தில் 2 பாடல்கள் ரூ.3 கோடி செலவில் சென்னையில் படம்பிடிக்கப்பட்டது.
# கமலுக்கு ஜோடியாக அசின், மல்லிகா ஷெராவத், ஜெஈயப்பிரதா, கே.ஆர்.விஜயா, ரேகா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். நாகேஷ், நெப்போலியனும் முக்கிய கேரக்டர்களாக நடிக்கிறார்கள்.
# கமல்ஹாசனின் 10 வேட்களில் ஒன்று ஜார்ஜ் புஷ் வேடம்.
# ஜார்ர் புஷ் வேடம் பற்றி கமலிடம் கேட்டபோது, நான் நடித்த அந்த கேரக்டர் பற்றி இப்போதே சொல்வது நல்லதல்ல என்று கூறி மழுப்பி விட்டார்.
# புஷ் வேடம் தவிர ஆன்மீகவாதி, நீக்ரோ, வயதான தாத்தா, இளைஞர், பின்லேடன் உள்ளிட்ட வேடங்களிலும் கமல் கலக்கியிருக்கிறார்.
# ஆன்மீக கமலுடன் பத்தாயிரம் பக்தர்கள் பங்குபெறும் பிரம்மாண்டமான காட்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் படமாக்கப் பட்டுள்ளது
# வாலி மற்றும் வைரமுத்துவின் பாடல்கள் எழுதியுள்ளனர்.
# படம் திரைக்கு வரும்போது இந்தியாவில் மட்டுமல்லாது, அமெரிக்கா, கனடா ஆகிஈய நாடுகளிலும் விடுமுறை காலமாகும். எனவே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
# இந்த படம் நகைச்சுவை கலந்த கலகலப்பான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
# தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிப்பதாகும். (மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர், வாமணர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆகியவையே விஷ்ணுவின் 10 அவதாரங்கள்).

ஆதாரம் தினமலர்

செவ்வாய், பிப்ரவரி 05, 2008

கோவில் இடிப்பு: மன்னிப்பு கேட்கும் மலேசியா!

மலேசியாவின் கிளாங் நகரில் உள்ள இந்துக் கோவிலை இடித்தது தவறு. அதற்காக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்பதாக மலேசிய துணைப் பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக் கூறியுள்ளார்.

மலேசியாவில், ஆளுங்கூட்டணி மீது தமிழர்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். இந்த அதிருப்தியின் விளைவு, வருகிற பொதுத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என்ற பயத்தில் ஆளுங்கூட்டணி உள்ளது. இதனால் தமிழர்களை சமாதானப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இதில் ஒரு பகுதியாக கிளாங்கில் உள்ள பழம்பெரும் இந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு மலேசிய துணைப் பிரதமர் ரஸ்ஸாக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கிளாங்கில் உள்ள கோவில் இடிக்கப்பட்டது, அதிலும் தீபாவளிக்கு முன்பு இடிக்கப்பட்டது தவறு என்பதை உணர்ந்துள்ளோம். அதற்காக மன்னிப்பு கோருகிறோம். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்றார் அவர்.

மலேசியாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடங்களில் சுமார் 24 ஆயிரம் இந்து கோயில்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தக் கோவில்கள் கட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
paraparappu.com
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us