செவ்வாய், பிப்ரவரி 27, 2007

ஜெயலலிதா பழைய பல்லவி, திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய சரியான நேரம்-ஜெ.

சென்னை: விடுதலைப் புலிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக தமிழகம் மாறி விட்டது. திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய இது போதுமானது. ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய இதுவே சரியான தருணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இன்று இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத் தமிழர் பிரச்சினை என்பது கடந்த 40 ஆண்டு காலமாக இருந்து வரும் ஒரு பிரச்சினை. லால் பகதூர் சாஸ்திரி, பண்டார நாயகே ஒப்பந்தத்திற்கு முன்பிருந்தே நிலவி வரும் பிரச்சினை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள் என்பதும், தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இலங்கை பல காலம் இருந்தது என்பதும் வரலாற்று உண்மை.

தலைமுறை தலைமுறையாக இருக்கிற தமிழர்களுக்கு எல்லா வகையான சம உரிமைகளையும் இலங்கை அரசு தந்தேயாக வேண்டும். சிங்கள மொழி பேசுகிறவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, பௌத்த மதத்தைப் பின்பற்றுகிறவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை தமிழர்களுக்கும் உண்டு என்பதை இலங்கை அரசு மறந்து விடக் கூடாது.

சாஸ்திரிசிரிமாவோ பண்டார நாயகே ஒப்பந்தத்தின்போது, தமிழர்களுக்குப் பாதகமான பல விஷயங்கள் சேர்க்கப்பட்டு, ஆண்டாண்டு காலமாக இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட தமிழகம் நோக்கி அகதிகளாக வந்தனர்.

அப்போது ஆரம்பித்த இலங்கைப் பிரச்சினை சிங்கள இனிவெறியர்களால் தூபம் போடப்பட்டு இப்போது பெரிய அளவில் கடந்த 24 ஆண்டுகளாக நிலவி வருகிறது.

ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை, இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு அப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத இயக்கங்களை எதிர்ப்பதிலும் உறுதியாக உள்ளது.

நமது தமிழ் மொழி பேசும் மக்கள், நமது இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அளவில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தரப்பட வேண்டும் என்ற கருத்து தமிழகத்தில் சிலரிடம் இருந்தாலும், இறுதியில் அது தமிழகத்தில் தீவிரவாத பயங்கரவாத கலாச்சாரத்தை கொண்டு வந்து விடும் என்ற காரணத்தால் அதை அதிமுக ஏற்றுக் கொள்ளவில்லை.

கடந்த 14ம் தேதி இந்தியக் கடலோரக் காவல் படை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஏ.கே. 56 ரக துப்பாக்கிகள், தோட்டாகிகள், தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் மனித வெடிகுண்டு பெல்ட்டுகள், வெடிமருந்துப் பொருட்கள் ஆகியவற்றையும், மண்டபம் பகுதியில் இலங்கைக்கு ஆயுதங்களை கடத்திச் செல்வதற்காக வந்த படகு ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

15ம் தேதி 4000 கிலோ வெடிபொருட்கள் கொண்ட படகை தனுஷ்கோடி அருகே பிடித்துள்ளனர். தூத்துக்குடியில் வெடிபொருட்களை கொள்முதல் செய்து விட்டு இலங்கை திரும்பும்போது அந்தப் படகு பிடிபட்டதாக செய்தி வெளியானது.

16ம் தேதியன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தூத்துக்குடி, கடலூர் ஆகிய பகுதிகளை மையமாகப் பயன்படுத்தி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சேகரிக்கப்படும் வெடிபொருட்கள்,

ஆயுதங்கள் ஆகியவற்ரை மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவை சிறு சிறு மூட்டைகளா கட்டப்பட்டு தூத்துக்குடி, ராமேஸ்வரம், கோடியக்கரை, தங்கச்சி மடம் ஆகிய பகுதிகளுக்கு சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டு பிறகு இலங்கைக்கு படகுகள் மூலம் கடத்திச் செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தப் பணிகளுக்கு தமிழகத்தில் பல ஏஜென்டுகள் இருப்பதும் தெளிவாக தெரிய வந்துள்ளது. ராமேஸ்வரத்தை ஒட்டி இலங்கைக்கு நடுவே இந்தியாவைச் சேர்ந்த ஆளில்லாத பல தீவுகள் உள்ளன. இவை ஏற்கனவே தீவிரவாதிகள், பயங்கரவாதிகளின் தளங்களாக, ஆயுதங்களைப் பதுக்கி வைக்கும் கிடங்குகளாக மாறி விட்டன.

தமிழகத்தின் சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. மதுரைக்கும், கடலோரப் பகுதிகளுக்கும் பயங்கரமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் வந்து சேருகின்றன என்றால், தமிழகத்தின் சுமார் 600 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து எப்படி இந்தப் பொருட்கள் வந்து சேருகின்றன என்பதற்கு கருணாநிதி என்ன விளக்கம் தரப் போகிறார்?

திமுக ஆட்சிக்கு வந்தது முதலே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் விட்டது. தீவிரவாத இயக்கங்களும், பயங்கரவாத இயக்கங்களும் பெரிய அளவில் இங்கு இயங்கத் தொடங்கி விட்டன. தீவிரவாதம், பயங்கரவாதத்தை நோக்கி தமிழகம் தள்ளப்பட்டு விட்டது.

விடுதலைப் புலிகளை ஆதரித்த காரணத்தால்தான் 1991ம் ஆண்டு திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இப்போதும் அதே காரணம் மிக வலுவாக நிலவுகிறது. எனவே திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய இதுவே போதுமானதாகும், ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய இதுவே சரியான தருணம்.

மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழகத்தையும், நாட்டையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
http://thatstamil.oneindia.in/news/2007/02/26/jaya.html

ஞாயிறு, பிப்ரவரி 18, 2007

இந்தியாவிலிருந்து தமிழகம் பிரிவதற்கு தமிழீழம் காரணமாயிராது கர்நாடகமும் கேரளமுமே அதற்கு காரணமாயிருக்கப்போகிறது.

இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிவதற்கு தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு போதும் காரணமாயிருக்க மாட்டாதெனத் தெரிவித்துள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அண்டை மாநிலங்களான கர்நாடகமும் கேரளமுமே அதற்குக் காரணமாயிருக்குமென எச்சரித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லையெனக் கூறி நேற்று சனிக்கிழமை சென்னையில் ம.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தியது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே நெடுமாறன் இவ்வாறு எச்சரித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;

ஒருவேளை தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிய வேண்டுமென்ற எண்ணம் மக்களிடையே உருவாகுமானால், வளருமானால் அதற்கு தமிழீழப் போராட்டம் ஒரு போதும் காரணமாயிருக்காது.

அண்டை மாநிலமான கர்நாடகமும் கேரளமும் தமிழர்களுக்கெதிராக செயல்படுவதாலும் வஞ்சிப்பதாலுமே எமக்கு அவ்வாறானதொரு எண்ணம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதனால் பிரிவினையை நோக்கி எம்மைத் தள்ள வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார்.

இங்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றுகையில்;

நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் படி கர்நாடக மாநிலம் 11 இலட்சத்து 20,000 ஏக்கருக்கு மேலே பாசனம் பெறக்கூடாது என்று கூறியிருந்தும் இன்று இந்தத் தடையை அவர்கள் எடுத்துவிட்டார்கள்.

15 இலட்சத்து 85,000 ஏக்கருக்கு பாசனம் செய்யப்போகின்றோம் என்று இன்று கர்நாடகம் கூறுகிறது. அவர்களது அடுத்த குறி 25 இலட்சம் ஏக்கர் பாசனமாகும்.

இதன்மூலம் அவர்களுக்கு பெரும் அநியாயமான சாதகமும் எமக்கு வஞ்சகமான பாதகமும் நடந்துள்ளதை தமிழக மக்கள் உணரவேண்டும். இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு இழந்துகொண்டிருக்கும் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

கேரளத்தின் முல்லை பெரியாறு ஒரு பக்கம் பாலாறு ஒரு பக்கம், ஜீவநதியாம் காவிரி ஒரு பக்கம் என தமிழர்களின் உரிமைகள் பறிபோகும் நிலையில் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க தமிழகமே திரண்டெழ வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்ததுடன் தொடர்ந்தும் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுமானால் இந்தியாவின் ஒற்றுமைக்கே குந்தகம் ஏற்படுமென்றும் எச்சரித்தார்.
http://www.thinakkural.com/news/2007/2/18/default.htm

சனி, பிப்ரவரி 17, 2007

அ.தி.மு.க வினருக்கு தூக்கு!!! அதிர்சியில் ஜெயலலிதா!!!

சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கின் பரபரப்பான தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் வெளியாகாமல் ஆழ்ந்த அமைதி நிலவுகிறது.

அதேபோல இந்த சம்பவத்தை எல்லா மேடைகளிலும் ஹைபிட்சில் பேசி வந்த ஒரே அரசியல்வாதியான வைகோவும் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் படு சைலன்ட்டாக இருக்கிறார்.

இந்தியாவை உலுக்கிய பரபரப்புச் சம்பவங்களின் வரிசையில், இடம் பெற்ற கோர நிகழ்வு தர்மபுரி பேருந்து எரிப்பு. 3 அப்பாவி மாணவிகளை உயிரோடு கருக்கிய கொடூரச் செயலால் நாடே அதிர்ந்தது.

தங்களது தலைவி ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள் என்ற காரணத்துக்காக தமிழ்நாட்டையே வன்முறைக் களமாக்கி வெறியாட்டம் போட்ட அதிமுகவினர்.

மாணவர்களும், மாணவிகளும், ஆசிரியர்களும் கதறி, கெஞ்சி அழுது, காலில் விழுந்து மன்றாடியதையும் புறக்கணித்து விட்டு பெட்ரோல் ஊற்றி கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற மூன்று மொட்டுக்களை அலறக் கூட வழியில்லாமல் அனலில் கருக்கி தங்களது அகோரப் பசியைத் தீர்த்துக் கொண்டனர்.

இந்த சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது தீர்ப்பு வந்துள்ளது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே முக்கியக் குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 25 பேருக்கும் கூட 7 ஆண்டு தண்டனை கிடைத்துள்ளது.

இந்தத் தீர்ப்பை தமிழக மக்கள் அத்தனை பேருமே நிச்சயம் வரவேற்பார்கள்.

ஆனால், இந்த தீர்ப்பு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எந்தக் கருத்தையும் வெளியிடாமல் பெரும் அமைதி காத்து வருகிறார்.

இதை விட முக்கியமானது, வைகோவின் அமைதிதான். காரணம், அவர் அதிமுக கூட்டணியில் சேருவதற்கு முன், எந்த மேடையில் பேசினாலும் தர்மபுரி பஸ் எரிப்பு குறித்து சிறிது நேரமாவது நரம்பு புடைக்க, குலுங்கி குலுங்கி பேசுவது வழக்கம்.

மிகக் கடுமையாக அந்த சம்பவத்தை அவர் உணர்ச்சிகரமாகப் பேசுவார். ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிப்பார். ஆனால் இப்போது தீர்ப்பு வெளி வந்துள்ளது குறித்து அவரிடமிருந்து ஒரு சொல்லையும் காணவில்லை.

எது எப்படியோ, பிள்ளைகளை வைத்துள்ள ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்தத் தீர்ப்பு மிக மிகப் பெரிய நிம்மதியைக் கொடுத்திருக்கும். அரசியல் காரணத்துக்காக சம்பந்தாமில்லாதவர்களின் உயிரோடு வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கும், போடத் துடிக்கும் கயவர்களுக்கு இந்தத் தீர்ப்பு மிகப் பெரிய கசையடியாக அமையும்.

http://thatstamil.oneindia.in/

வியாழன், பிப்ரவரி 15, 2007

ரஜனியின் வீரம் சினிமாவில் மட்டும் தானா? - ஒரு உண்மைத் தகவல்.





-குமுதம்ரிப்போட்டர்-

லண்டன் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தி நடிகை ஷில்பாஷெட்டியை இனவெறி உணர்வோடு கொச்சைப்படுத்தியதற்கு எதிராக உலகம் முழுவதுமிருந்தும் மனித நேய உணர்வாளர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்கள்.

அப்படி ஒரு ‘அவமானப்படுத்தும்’ நிகழ்ச்சி தமிழ்ப் பெண்மணி ஒருவருக்கும் நடந்துள்ளது.

அந்த நேரத்தில் அங்கேயிருந்த நமது ‘சூப்பர் ஸ்டார்’ அதைக் கண்டிக்காதது மட்டுமல்ல, நமக்கெதற்குப் பிரச்னை’ என்று நழுவிக் கொண்டு விட்டார் என்பதுதான் வேதனை. சினிமாவில் மட்டுமே அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார், நிஜத்தில் இப்படி ஒதுங்கிக் கொண்ட அதிர்ச்சித் தகவல் நமக்குக் கிடைத்தது. அதையடுத்து விசாரிக்கத் தொடங்கினோம்.

சென்னை தி.நகரில் பிரபலமாக இயங்கி வருகிறது மில்லேனியம் சாப்ட்வேர் நிறுவனம். இதன் தலைமையகம் இருப்பது அமெரிக்காவில். தமிழகத்தைச் சேர்ந்த சிவா அய்யாத்துரை என்பவர்தான் சென்னைக் கிளையை வழி நடத்தி வருகிறார்.

இவரது சகோதரி டாக்டர். உமா தனபாலன். இவர் குளோபல் ஹெல்த் அண்ட் ஹைஜீனிக் சொல்யூஷன் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவர்களது ஒட்டுமொத்த குடும்பமும் அமெரிக்காவில்தான் வசித்து வருகிறது. பணத்திற்கும் செல்வாக்கிற்கும் குறைவில்லாத கௌரவமான குடும்பம். எப்போதெல்லாம் தாய்நாட்டின் நினைவு வருகிறதோ, அப்போதெல்லாம் சென்னைக்குப் பறந்து வருவார்கள். ஓரிரு வாரம் தங்கியிருந்து விட்டு அமெரிக்காவிற்குத் திரும்புவார்கள். அதேபோன்று அண்மையில் சென்னைக்கு வந்த சிவா அய்யாத்துரையும் டாக்டர் உமா தனபாலனும் கடந்த ஆறாம் தேதி அமெரிக்கா செல்ல இருந்தார்கள். அதற்காக லூப்தான்ஸா ஏர்வேஸ் விமானத்தில் டிக்கெட் வாங்கியிருந்தார்கள். 6_ம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றவர்களுக்குத்தான் அப்படியரு அவமானம் நடந்திருக்கிறது.

விமானமேறச் சென்ற டாக்டர் உமாவுக்கும் லூப்தான்ஸா ஏர்வேல் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் தொடங்கி, ஒரு கட்டத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவிற்குப் பிரச்னை நீண்டு விட்டிருக்கிறது.

இது பற்றி டாக்டர். உமாவிடம் பேசினோம். ‘‘சென்னையில் சில நாட்கள் இருந்து விட்டுப் போகலாம் என்பதற்காக தம்பி சிவாவுடன் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்தேன். கடந்த மூன்றாம் தேதி அமெரிக்கா செல்வதற்காக லூப்தான்ஸா ஏர்வேஸ் விமானத்தில் ‘டிக்கெட்’ ரிசர்வ் செய்தேன். ஆனால், கடும் முதுகுவலி காரணமாக அன்றைய தினம் புறப்பட்டுப் போக முடியாத சூழ்நிலை. ஆகவே பயணம் வேண்டாம் என முடிவெடுத்தேன்.

எனவே, மூன்றாம் தேதியன்று ரிசர்வ் செய்திருந்த டிக்கெட்டை ஆறாம் தேதிக்கு மாற்ற விரும்பினேன். அதற்காக லூப்தான்ஸா ஏர்வேஸ் நிறுவனத்துடன் பேசினேன். மூன்றாம் தேதிப் பயணத்தை ஆறாம் தேதிக்கு மாற்றித் தரும்படி கோரினேன். விமான நிறுவன அதிகாரிகள் காரணம் கேட்டார்கள். எனக்கு உடம்பு சுகமில்லை என்பதை எடுத்துக் கூறினேன். ‘அப்படியென்றால் தகுந்த மருத்துவச் சான்றுகளோடு வாருங்கள்’ என்று கூறினார்கள் ‘அதில் ஒன்றும் பிரச்னை இருக்காதே?’ என்று கேட்டேன். ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. வாருங்கள்!’ என்றார்கள்.

அதன்படி ஐந்தாம் தேதி இரவு பதினொரு மணிக்கு மேல், விமான நிலையம் சென்றேன். லூப்தான்ஸா ஏர்வேஸ் நிர்வாகிகள் போர்டிங் கிளியரன்ஸ் கொடுப்பதற்காக பயண ஆவணங்களைச் சரி பார்த்தார்கள். அதற்கான பொறுப்பு அதிகாரியாக அனுப்குமார் என்பவர் இருந்தார்.

என்னிடமிருந்த பயண ஆவணங்களைச் சரி பார்த்தவர், ‘மூன்றாம் தேதி டிக்கெட் எடுத்து விட்டு அதை ஆறாம் தேதிக்குத் தள்ளிப்போட்டது ஏன்?’ என்று கேட்டதுடன் அதற்காக இருநூறு டாலரை அபராதமாகக் கட்டச் சொன்னார். ‘பணத்தைக் கட்டினால்தான் பயணிக்க முடியும்’ என்றார்.

அந்தப் பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘முறைப்படி உங்கள் நிறுவனத்திற்குத் தகவல் கொடுத்து விட்டுத்தான் மாற்றினேன். எனக்கு உடம்பு சரியில்லை என்ற தகவலைச் சொன்னதால் மருத்துவச் சான்றோடு வரச் சொன்னார்கள். ஆக, முன்கூட்டியே உரிய முறையில் தகவல் கொடுத்து சரியாக நடந்து கொண்ட நான், எதற்காக அபராதம் கட்ட வேண்டும்?’ என்று கேட்டேன்.

அது மட்டுமல்ல, ‘உங்கள் லூப்தான்ஸா நிறுவனம் ‘இந்த அபராதம்’ பற்றி ஏதும் கூறவில்லை. மருத்துவச் சான்றிதழோடு வந்தால் பிரச்னை இருக்காது என்றுதான் கூறினார்கள்!’ என்பதையும் வலியுறுத்திப் பேசினேன்.

ஆனால், நிர்வாகி அனுப்குமார் நான் சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. அபராதம் கட்டினால்தான் போக முடியும் என்பதை கடினமான வார்த்தைப் பிரயோகத்தோடு பேசினார்!’’ என்று ஆதங்கப்பட்டவர்.

‘‘எனக்குப் பணம் முக்கியமல்ல. நியாயம்தான் முக்கியம். ‘பயணிகளுக்குச் சரியான தகவலைச் சொல்லாமல் உங்கள் விருப்பத்திற்கு அபராதம் என்பது என்ன நியாயம்? ‘என்றுதான் பேசினேன். ஆனால் அந்த அனுப்குமார் தொடர்ந்து என்னை பிளாக் லேடி, யூஸ்லஸ் ஃபெலோ. நான்சென்ஸ் என்று மோசமான வார்த்தைகளைச் சொல்லித் திட்டியபடியே இருந்தார்.

ஒரு கட்டத்தில் ‘அபராத பணத்தைக் கட்டு’ அல்லது திரும்பிப்போ. இப்படியே பேசிக்கொண்டிருந்தால் போலீஸ§க்குத் தகவல் கொடுத்து உன்னைத் தீவிரவாதி எனக்கூறி ஒப்படைத்துவிடுவேன். அதனால் ஏகப்பட்ட பிரச்னை வரும். அது தேவையா? என்பதை யோசித்துக்கொள்’ என்று மிரட்டலாகவும் பேசினார்.

இதற்குள் எனது சகோதரர் சிவா குறுக்கிட்டு, ‘நீங்கள் பேசுவதில் நியாயமில்லை’ என்று வாதிட்டார். உடனே அனுப்குமார் அவர் மீது பாய்ந்து நெட்டித்தள்ளி தரக்குறைவாகப் பேசியதோடு டிக்கெட், மருத்துவச் சான்றிதழ் உள்ளிட்டவைகளைத் தூக்கி, முகத்தின்மீது வீசுவதுபோல் விசிறியடித்தார்கள். நான் அப்படியே ஸ்தம்பித்துப் போனேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அங்கே வரிசையாக நின்றுக்கொண்டிருந்த அத்தனைபேர் மத்தியில் எனக்கு இந்த அவமானமா? என்று கண்கலங்கிப்போனேன். அப்படியே கீழே வீசப்பட்ட டிக்கெட், மற்ற ஆவணங்களைக் குனிந்து எடுத்தபடி நிமிர்ந்தபோது ஆச்சர்யம்! என் எதிரே சூப்பர் ஸ்டார் ரஜினி நின்று கொண்டிருந்தார். அவரும் அதே விமானத்தில் அமெரிக்கா செல்ல வந்திருந்தார் போலிருக்கிறது. (சிவாஜி ஷ¨ட்டிங்கிற்காக அன்று அவர் அமெரிக்கா சென்றார்!)

ரஜினியைப் பார்த்ததும் எனக்கு ஓர் ஆறுதல் ஏற்பட்டது. நியாயம் தெரிந்த மனிதர். அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கக்கூடியவர். இப்படிக் காரணமே இல்லாமல் ஓர் அவமானத்தை என் மீது திணித்ததை இவ்வளவு நேரமும் பார்த்துக் கொண்டிருப்பவர். நிச்சயம் இதைத் தவறு எனத் தட்டிக்கேட்பார் என்று நினைத்தேன். ஆதங்கத்தோடு அவரிடம் பேசினேன்.

நடந்ததையெல்லாம் மீண்டும் என் பங்கிற்கு அவரிடம் எடுத்துச் சொல்லி, இதில் என் தரப்பில் என்ன தவறு இருக்கிறது? பார்த்துக் கொண்டிருக்கும் நீங்களாவது இதைத் தட்டிக் கேட்கக்கூடாதா?’ என்றேன். அவரோ, பரவாயில்லம்மா. அபராதத் தொகையைக் கட்டிவிட்டு, விமானத்தினுள் செல்லுங்கள் மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளுங்கள்!’ என்ற பதிலையே ஆறுதல் போன்று கூறினார். கண்ணெதிரில் ஓர் அநீதி நடக்கிறது. யாரும் இதைத் தட்டிக்கேட்கமாட்டேன் என்கிறார்களே என்று எனக்கு ஆதங்கம் இருந்தது.

பிரச்னை இப்படியே நீடித்தால் போலீஸ¨க்குத் தகவல் கொடுத்து, எங்கள் மீது புகார் கொடுத்தார் நிர்வாகி. நாங்களும் வேண்டிய உயர் அதிகாரிகளுடன் பேசி நடந்ததை விளக்கி, காவல் நிலையத்தில் அவர்கள் மீது பதில் புகார் கொடுத்தோம். அதோடு லூப்தான்ஸா ஏர்வேஸில் இனிமேலும் பயணம் செய்யக்கூடாது என்று பயணத்தை ரத்து செய்துவிட்டேன். அடுத்த நாள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விமானத்தில் டிக்கெட் எடுத்துத்தான் அமெரிக்கா வந்தோம்.

எங்களை அவமானப்படுத்தி தவறான வார்த்தைகளால் பேசிய அந்த நிர்வாகிகள் மீது, அதன் அமெரிக்கத் தலைமையகத்தில் புகார் கொடுக்க உள்ளோம். அதுமட்டுமல்ல! நிறுவனத்தின்மீதும், நிர்வாகிகள் மீதும் கன்ஸ்யூமர் கோர்ட்டிலும் வழக்கு போட உள்ளோம்!’ என்று குமுறித் தீர்த்தார் உமா.

இது குறித்து மீனம்பாக்கம் விமான நிலைய காவல்நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டர் முகிலனிடம் பேசினோம். ‘‘ஆமாம்! பிரச்னை நடந்தது உண்மைதான். அனுப்குமார் தரக்குறைவாகப் பேசியதாக உமா புகார் கொடுத்துள்ளார்! அதேபோல லுப்தான்ஸா ஏர்வேஸ் நிர்வாகியும் புகார் தெரிவித்துள்ளார். இதுபற்றி இனிமேல்தான் விசாரிக்க வேண்டும்!’’ என்றார்.

தொடர்ந்து லுப்தான்ஸா ஏர்வேஸ் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு பேசினோம். ‘‘சம்பந்தப்பட்ட அதிகாரி இப்போது டூட்டியில் இல்லை’’ என்ற பதிலைத் தெரிவித்து நழுவிக் கொண்டார்கள்.

கண் எதிரே ஒரு பெண்ணுக்கு நடந்தேறிய சம்பவத்தை சூப்பர் ஸ்டார் எப்படி கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்த்தார்? ஜீரணிக்கவே கஷ்டமாகத்தான் இருக்கிறது!


நன்றி:-குமுதம் ரிப்போட்டர்

திங்கள், பிப்ரவரி 12, 2007

இலங்கை அகதிகளுக்கு உதவியளிக்க தமிழக திரைப்படத்துறை முன்வருகை.

-நிதி சேகரிக்க நட்சத்திர நிகழ்ச்சிக்கு திட்டம்

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடனும் அகதிகளின் புனர்வாழ்வுப் பணிகளுக்கு நிதி சேகரிக்கவும் சென்னையிலுள்ள திரைப்படத்துறையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிணைப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிவாஜிலிங்கம், எஸ். அரியநேத்திரன், எஸ். பத்மநாதன் ஆகியோர் தமிழ்நாட்டின் திரைப்படத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களுடன் சந்திப்புகளை நடத்தியிருக்கின்றனர். நடிகர் சங்கத்துடனான இந்தச் சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சிரேஷ்ட நடிகை மனோரமா, எஸ்.எஸ். சந்திரன், அப்பாஸ் ஆகியோருடனேயே இச்சந்திப்பு இடம்பெற்றது.

இவர்களில் சரத்குமாரும், எஸ்.எஸ். சந்திரனுடன் நடிப்புத் தொழிலுடன் அரசியலிலும் ஈடுபட்டிருப்பவர்களாகும்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் சிவாஜிலிங்கம், தமிழ்நாடு பூராகவும் நட்சத்திர நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதென முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்நிகழ்ச்சிகள் மூலம் கடந்த ஒரு வருடத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்திருக்கும் 2 இலட்சத்து 10 ஆயிரம் அகதிகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ் நட்சத்திரங்கள் வீதிக்கு இறங்கி இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் அட்டூழியங்களை கண்டித்து பேரணிகளை நடத்தும் போது 1983 இன் நிலைமைக்கு விரைவில் தமிழகம் வந்துவிடுமெனவும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

இதற்கு முன்பாகவே விடுதலைப் புலிகள் தமிழக திரைப்படத்துறையுடன் தொடர்புகளை உருவாக்கியுள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்றுத் தெரிவித்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வன்னியில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மகேந்திரன், பாரதிராஜா ஆகியோரை சந்தித்திருக்கிறார்.

http://www.thinakkural.com/news%5C2007%5C2...s_page21120.htm

ஞாயிறு, பிப்ரவரி 11, 2007

சனி, பிப்ரவரி 10, 2007

கன்னிமரியாள் இரத்தக் கண்ணீர் சிந்துவதாக, யாழ் குடாநாட்டில் பரபரப்பு!!!





கன்னி மரியாளின் திருச் சொரூபத்தின் இரு கண்களில் இருந்து இரத்தம் வடிவதாக வெளியான தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை யாழ் நகரில் பரபரப்பு காணப்பட்டது. .
யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இந்தச் சொரூபத்தின் கண்களில் இருந்து சிவப்பு நிறமான திரவம் வருவதை வீட்டில் இருந்தவர்கள் கண்டுள்ளனர்.

இது பின்னர் அயலவர்களுக்கு தெரிய வந்து யாழ் நகரம் எங்கும் பரவத் தொடங்கியது. இதனால் அதனைக் காண்பதற்காக மக்கள் அந்த வீட்டை நோக்கித் திரண்டனர்.

இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள புனித யுவானியார் ஆலயத்துக்கு அந்த சொரூபத்தை கொண்டு சென்று வைத்தனர்.

இதன் பின்னர் அந்த ஆலயத்துக்கும் மக்கள் திரண்டு வந்த வண்ணமிருந்தனர்.

மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆலய நிர்வாகத்தினர் திண்டாடினார்கள். பின்னர் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றன.

இந்த மாதா சொரூபத்தில் இரு கண்களிலிருந்தும் இரத்தம் போன்று சிவப்பு நிறத்திலான திரவம் ஒன்று வடிந்து உறைந்த நிலையில் இருப்பதைக் காணக் கூடியதாக இருந்தது.
நன்றி>தமிழ்வின்.

வியாழன், பிப்ரவரி 08, 2007

இது ஓசி....தொலைபேசி...உலகம்முழுதும் பேசு.

இது ஓசி....... தொலைபேசி.... உலகம்முழுதும் பத்து நிமிடம் ஓசியாக பேசு.

https://www.gizmocall.com

தினமும் 10 நிமிடங்கள் வரை இலவசமாக விரும்பிய
எந்த நாட்டுக்கும் கதைக்கலாம் இந்தியாவில் உள்ள எனது நண்பனுக்கு சற்று
முன்னர்தான் கதைத்தேன் அவன் கையடக்கதொலை பேசி வைத்திருக்கிறான் எனது
இணைப்பு டயலப் ஆன படியால் சற்று தெளிவற்று காணப்பட்டது.

கொசுறு:- இதற்கு எந்த மென்பொருளே பதிவறக்க தேவையில்லை நேரடியாக
தளத்திலுருந்தே டயல் செய்யலாம்.
நன்றி>யாழ்.காம்

செவ்வாய், பிப்ரவரி 06, 2007

கர்நாடகத்தில் தமிழர்கள் விரட்டப்படுகின்றனர்.


மேட்டூர்: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, நிலவும் பதட்டம் மற்றும் அச்சம் காரணமாக கர்நாடகா வாழ் தமிழர்கள் தற்போது தமிழகத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் கிடைக்கும் நீரில் ஆண்டுதோறும் 270 டி.எம்.சி., நீரை பயன்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., நீரை விடுவிக்க வேண்டும் என காவிரி நடுவர் நீதிமன்றம் நேற்று இறுதித்தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு சாதகமாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதால், கர்நாடகாவில் கடும் பதட்டம் நிலவுகிறது. கர்நாடகா மாநிலத்தின் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியில் பாதுகாப்புக்காக வெளிமாநில போலீஸார் குவிக்கப்பட்டும், கடும் பதட்டமும், அச்சமும் நீடிக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து 28 கி.மீ., துõரத்தில் தமிழக கர்நாடகா எல்லையில் உள்ள பாலாறு செக் போஸ்ட்டின் ஒரு பகுதியில் கர்நாடகா போலீஸாரும், மறு பகுதியில் தமிழக போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் நுழையும் தமிழக வாகனங்கள் மீது கன்னடர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், கர்நாடகாவுக்குள் பஸ்களை இயக்க வேண்டாம் என கர்நாடகா போலீஸார் தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால்,நேற்று மேட்டூரில் இருந்து பெங்களூரூ, மைசூரூ, கொள்ளேகால், மாதேஸ்வரன் மலை செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ன. மேலும், தமிழகத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூரூக்கு சென்ற தமிழக சுற்றுலா பயணிகளின் பஸ்களை கர்நாடகா போலீஸ் எல்லையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதுபோல், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல முயன்ற லாரி, வேன், ஜீப், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும், கர்நாடகா போலீஸாரால் திருப்பி அனுப்பபட்டன.

அதுபோல், கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலையில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவிந்தபாடி கிராமத்துக்கு இயக்கப்படும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பஸ்ஸை தமிழகத்தின் எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு குடும்பத்துடன் வந்த தமிழர்கள் அனைவரும், எல்லையில் இருந்து ஆறு கி.மீ., துõரத்தில் உள்ள கோவிந்தபாடிக்கு நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை தொடர்ந்து, பாலாறு முதல் மேட்டூர் அணை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேட்டூர் அணை மற்றும் பூங்காவுக்குள் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. சேலம் மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் மேட்டூரில் தங்கி இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். மேலும், கர்நாடகா எல்லைப்பகுதி மற்றும் மேட்டூர் அணை ஆகிய இடங்களுக்கு சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ""காவிரி தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள பதட்டம் தணியும் வரை பாதுகாப்பு நீடிக்கும்,'' என மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்தார். இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு காரணமாக, கர்நாடகாவில் பாதுகாப்பற்ற இடங்களில் வசிக்கும் தமிழர்கள், குடும்பத்துடன் தமிழத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். தமிழர்களை ஏற்றி வரும் கர்நாடகா பஸ்கள், தமிழக எல்லையிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால், தமிழக எல்லைக்குள் நுழையும் தமிழ் குடும்பங்கள் அங்கிருந்து ஆறு கி.மீ., துõரத்தில் உள்ள கோவிந்தபாடி கிராமத்துக்கு நடந்து வந்து பஸ் பிடித்து மேட்டூர் வழியாக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால், தமிழகத்தின் எல்லையான பாலாறு வரை தமிழக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என கர்நாடகா தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.dinamalar.com/

திங்கள், பிப்ரவரி 05, 2007

இதுதான் அப்பு புஷ்ஸின் நடனம்.

புஷ்ஸின் நடனத்தை பார்க இங்கே அழுத்தவும்.

ஞாயிறு, பிப்ரவரி 04, 2007

கின்னஸ் சாதனையில் இலங்கை அமைச்சரவை!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவினால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய அமைச்சவை உலக சாதனைகளை பதியும் கின்னஸ் புத்தகத்தில் இந்த வாரம் பதியப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மகிந்தவினால் கடந்தவாரம் 54 அமைச்சர்கள், 20 பிரதி அமைச்சர்கள், 34 அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டிருந்தது. உலக நாடுகளில் உள்ள அமைச்சரவையில் தற்போது சிறீலங்காவில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையே மிகப்பெரியதாகும்.

1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் 24 அமைச்சர்களும், ஒரு பில்லியனைவிட அதிகளவு சனத்தொகையை கொண்ட இந்தியாவில் 30 இற்கும் குறைவான அமைச்சர்களுமே உள்ளனர்.

இந்த வாரம் உலக கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு சிறீலங்காவில் உள்ள உலகில் மிகப்பெரிய அமைச்சரவை தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதப்போவதுடன் அது கின்னஸ் சாதனையில் இடம்பெற பரிந்துரை செய்யப்போவதாகவும் ஐ.தே.காவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார்.
நன்றி:-புதினம்.

சனி, பிப்ரவரி 03, 2007

தண்ணியில் மூழ்கும் உலகம்!!!



பாரிஸ் நகரில் நடக்கும், காலநிலை மாற்றங்கள் குறித்த அரசுகளுக்கு இடையிலான குழுவின் கூட்ட அறிக்கையும் இதனையே வலியுறுத்துகிறது.


புவி வெப்பமடைவதால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரலாம் என்றும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

புவி வெப்பமடைவதால், கடல் மட்டம் அதிகரித்தல், துருவப் பனி உருகுதல், அதிக வெப்பநிலையால் சூறாவளிகளின் தாக்கம் அதிகரித்தல் போன்ற விளைவுகள் ஏற்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இன்றுள்ள நிலையில், இந்த அறிக்கை வந்ததன் பின்னர் புவி வெப்பமடைவதற்கான காரணம் என்ன என்பதற்கான விவாதங்களில் கவனத்தைச் செலுத்தாமல், அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இது குறித்து தமிழோசையிடம் கருத்து தெரிவித்த சுற்றுப்புற சுழல் நிபுணரான மகேஷ் ரங்கராஜன், விஞ்ஞானிகளின் இந்தக் கருத்து அனைவருக்கும் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை மணியாக கருத வேண்டும் எனக் கூறினார். மேலும் புவியின் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு விதமான நடைமுறையை, திட்டமுறையை அமல்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

நன்றி:- bbc.com
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us