ஞாயிறு, செப்டம்பர் 30, 2007

பெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு! அமெரிக்காவில் பரபரப்பு!!!


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் புகுந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப் பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாட்ரிசியா ரோஜர் என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்.

அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடைகளை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினர். மேலும், பாட்ரிசியா தொடர்ந்து கடுமையாக வாந்தியும் எடுத்தபடி இருந்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை.

இதைப் பார்த்து குழம்பிய டாக்டர்கள், எக்ஸ் ரே எடுக்க முடிவு செய்தனர். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது டாக்டர்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாட்ரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான்.

உடனடியாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்தனர் டாக்டர்கள். இதையடுத்து பாட்ரிசியாவை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்கினர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடி வெளியே வந்தது.

இதைப் பார்த்த ஒரு நர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். டாக்டர்களும் கூட ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

அந்தப் பாம்பு சிறிதாக இருந்தபோதே பாட்ரிசியாவின் குடலுக்குள் புகுந்துள்ளது. பாட்ரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதுவும் வளர்ந்து வந்துள்ளது.

எப்படி இந்த பாம்பு பாட்ரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்குக் கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாட்ரிசியா, டூர் சென்றிருந்தபோது அங்கு ஆற்று நீரை அள்ளிக் குடித்துள்ளார்.

அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் போயிருக்கலாம். அந்த பாம்புதான் தற்போது வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகப்படுகின்றனர்.

பாட்ரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு 1.83 மீட்டர் நீளம் இருந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பின் உடலில் கருப்புப் பட்டைகள் காணப்பட்டன. வாய் அகலமாக இருந்தது.

ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது.

16ம் நூற்றாண்டில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதைப் பொறுக்க முடியாமல் அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்தார். பின்னர் அவரை சவப் பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டனர். ஆனால் சில நாட்கள் கழித்து அந்த சவப் பெட்டிக்குள்ளிருந்து ஒரு பாம்பு வந்தது.

அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என்பது பின்னர் தெரிய வந்தது.

இதேபோல, 1642ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த காத்தரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து பல்லிகளைக் கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்து பயங்கர சம்பவமாகும்.

இந்த நிலையில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/09/29/docs-found-snake-in-woman-intestine.html

சனி, செப்டம்பர் 29, 2007

தினமும் காப்பி குடித்தால்...

தினமும் காப்பி குடித்தால்... புற்றுநோயும் வராதாம்...! சர்க்கரை நோயும் வராதாம்!


புற்றுநோயைத் தவிர்க்க பழங்களும், காய்கறிகளுமே முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கு சமமாக காப்பியை இப்போது சிபாரிசு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது காப்பி குடிக்க வேண்டுமாம்.

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் “ஆண்டி ஆக்சிடென்ட்” காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது. குறிப்பாக ஆப்பிள், தக்காளி போன்றவற்றில் இந்த “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளதால் அதை சாப்பிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவந்தனர். ஆனால் இப்போது காப்பியிலும் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். காய்கறி, பழங்களில் இருப்பதற்கு ஈடாக காப்பியிலும் உள்ளது என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவில், பென்சில்வேனியா நகரில் உள்ள ஸ்க்ராண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோ வின்சன் இதுபற்றி ஆராய்ந்து சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர். “மற்ற உணவுகளில் உள்ள “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” அளவு போதுமானதாக இருந்தாலும், அவை உடலில் கழிவாக ஓரளவு போய்விடுகிறது. ஆனால் காப்பியில் உள்ள “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” அளவு, உடலில் எந்த சூழ்நிலையிலும் கரையாமல் அப்படி பலன் தருகிறது.” என்று கூறினார்.

“புற்றுநோய்க்கு மட்டுமல்ல, இரண்டாம் வகை சர்க்கரை நோய், பர்கின்சன் நோய் போன்றவை வராமல் தடுக்கவும் காப்பி பயன்படுகிறது. ஒரு நாளைக்கு நாலைந்து முறை முறை காப்பி குடிப்பது நல்லது தான். ஆனால் காப்பி பிடிக்காதவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது காபி குடிப்பது நல்லது. காப்பின் எடுத்த காபியாக இருந்தாலும் சரி, காப்பின் அகற்றாத காப்பியாக இருந்தாலும் சரி, அதில் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது.” என்றும் பேராசிரியர் வின்சன் கூறினார்.

பிரிட்டிஷ் காபி தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுகையில், “காபி குடிப்பது என்பது கெடுதல் இல்லை. அப்படி சிலர் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு நான்கு, ஜந்து முறை காப்பி குடித்தால் கூட நல்லது தான் என்று நிபுணர்களே கூறிவிட்டனர். பழம், காய்கறிகளை உணவில் சரிவர சேர்க்க விரும்பாதவர்கள், குறைந்த பட்சம் காப்பி குடித்தாவது நோய்களை தவிர்க்கலாம்” என்று கூறியுள்ளது.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

வெள்ளி, செப்டம்பர் 28, 2007

'சன்'னை முந்திய 'கலைஞர்'!

திமுகவின் கலைஞர் டிவி தொடங்கப்பட்ட நாளன்று (செப்டம்பர் 15), அந்த டிவியை அதிகம் பேர் பார்த்துள்ளனர். சன் டிவியையும் தாண்டி கலைஞர் டிவி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

திமுக சார்பில் கடந்த 15ம் தேதி கலைஞர் டிவி தொடங்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கலைஞர் டிவியின் சோதனை ஒளிபரப்பே மக்களிடம் பல்வேறு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் டிவியின் முழுமையான ஒளிபரப்பு தொடங்கியது.

முதல் நாளிலேயே முத்திரை பதித்து விட்டது கலைஞர் டிவி. அன்றைய தினம் சன் டிவியை விட கலைஞர் டிவியையே அதிகம் பேர் பார்த்துள்ளனர். மேலும் ரேட்டிங்கிலும் கலைஞர் டிவிக்கே முதலிடம் கிடைத்துள்ளது.

கலைஞர் டிவிக்கு 10க்கு 9.35 பாயிண்டுகள் கிடைத்துள்ளன. சன் டிவிக்கு 4.64 புள்ளிகளே கிடைத்ததாம். விஜய் டிவி 3வது இடத்தில் உள்ளது. அதற்குக் கிடைத்த ரேட்டிங் 0.75 ஆகும். ராஜ் டிவி (0.62), ஜெயா டிவி (0.54), கே டிவி (0.35) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சன் டிவியில் வரலாற்றில் முதல் முறையாக இன்னொரு தமிழ் சானலிடம் முதலிடத்தை இப்போதுதான் பறி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளிலேயே முத்திரை பதித்துள்ள கலைஞர் டிவி போகப் போக சன் டிவியை மேலும் அதிர வைக்கும் எனத் தெரிகிறது.

-தட்ஸ் தமிழ்

ஞாயிறு, செப்டம்பர் 23, 2007

என்னை எவனும் அழிக்க முடியாது - கருணாநிதி!!!



நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்கள் மூச்சில் இருப்பேன், உங்கள் ரத்தத்தில் கலந்திருப்பேன், உங்களது நெஞ்சத் துடிப்பில் கலந்திருப்பேன். எனவே எவனும், என்னை இல்லாதவானாக்கி விட முடியாது, அழித்து விட முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகையில், வி.எச்.பி.யின் சாமியார் பிரிவைச் சேர்ந்த வேதாந்தி விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து விரிவாகப் பேசினார்.

அவர் பேசுகையில், நான் பொறுப்பில் இருந்த காரணத்தால் உங்களுக்காக செய்த உதவிகளுக்காக நீங்கள் செலுத்துகின்ற நன்றிதான் இந்த மாநாட்டின் மூலம் அமைந்திருக்கிறது. உங்களில் பலர் என்னை, இந்த அரசை அறிந்தவர்கள். உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றி உங்கள் உள்ளங்களை மகிழ வைத்திருக்கிறேன்.

அந்த ஈரம் காயாத காரணத்தால் தான் இங்கு வந்து அமர்ந்து கரவொலி எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கண்களிலே காணும் அந்த ஒளி என்னுடைய கவலைகளையெல்லாம் மறக்கச் செய்கிறது. என்னுடைய துன்பங்களை பறக்க வைக்கிறது. என்னுடைய சோகங்களுக்கு முடிவு எழுதிக் கொண்டிருக்கிறது. உங்களை காணும்போது உற்சாகம் பெறுகிறேன். உங்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது.

இந்த மாநாட்டிற்கு கருணாநிதி ஒருவேளை தலையோடு வருவாரா இல்லை தலை இல்லாமல் வருவாரா என்று சந்தேகத்தோடு அமர்ந்திருப்பீர்கள். தலை என்பது தலைக்கு மேல் உள்ள பகுதி மாத்திரம் கிடையாது. தலை என்பது ஒருவருடைய முகவரி. தலையே போனாலும் கருணாநிதியின் முகவரி தமிழ்நாட்டை விட்டு என்றைக்கும் போகாது. தமிழ் இலக்கியத்தை விட்டுப் போகாது.

இலக்கியத்தில், கலைத்துறையில், அரசியல் துறையில் எனது முகவரி இடம் பெற்றிருக்கிறது. பெரியார், அண்ணா, புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் நாட்குறிப்புகளில் எனது முகவரி இருக்கிறது. ஏன் உங்கள் நாட்குறிப்பிலும் எனது முகவரி இருக்கிறது. ஆகவே என்னுடைய முகம் மறைந்து போய்விடும். தலை காணாமல் போய்விடும் என்றும் நம்ப வேண்டாம்.

தமிழ்நாட்டில் இந்த கருணாநிதி ஆற்றியிருக்கிற தொண்டுகளை, நல்கியிருக்கிற தியாகங்களை, எண்ணிப் பார்த்தால் தலையே போய்விட்டாலும் கூட இந்திய தபால் தலையில் இந்த தலை இடம் பெற்றே தீரும்.

ஆகவே தலையை கொய்து வா... என்று சொல்லுகிற நல்ல நண்பர்களை நான் பாராட்டுகிறேன். எனது நாக்கை அறுத்துக்கொண்டு வந்து விட்டால் அவர்களுக்கு தங்கத்தால் பரிசளிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த தலையும், நாக்கும் எவ்வளவு விலை மதிக்கத்தக்கது பாருங்கள்.

இது சாதாரண நாக்கா? அண்ணாவின் தமிழை பேசிய நாக்கு. புரட்சி கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளை உச்சரித்த நாக்கு. சிலப்பதிகாரத்தை, திருக்குறளை படித்த நாக்கு. எனவேதான், இந்த நாக்குக்கும், தலைக்கும் இவ்வளவு விலை.

அதற்கு தங்கமாகத்தான் கொட்டிக் கொடுப்போம் என்று சொல்லுகிற அளவுக்கு ஒருவர் வடக்கிலே பேசியிருக்கிறார் என்றால் அவரை நான் வாழ்த்துகிறேன். அவர் தரித்திர நாராயணராக இருக்க முடியாது. சீமானாகத்தான் இருக்க வேண்டும். அவரை வாழ்த்துகிறேன். முன்கூட்டியே நன்றியினை தெரிவிக்கின்றேன்.

லட்சியத்திற்காக எத்தனை பேர் தங்களுடைய இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். தியாகம் செய்திருக்கிறார்கள். லட்சியத்திற்காக எத்தனை பேர் தூக்குமேடையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ பேர் எரிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மண்ணிலே சாய்ந்த மாவீரர்களுடைய, கணக்கு நமக்கு தெரியாதா. அவர்களுடைய வரலாறு தெரியாதா.

அந்த வரலாற்றையெல்லாம் படித்துத்தான் ஒரு வரலாற்றை உருவாக்குகின்ற இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். எனவே, யாரும் பயப்படத் தேவையில்லை. அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை.

நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களுடன் இருப்பேன். அதை யாரும் மறந்துவிடாதீர்கள். உங்கள் ரத்தத்திலே தான் கலந்து இருப்பேன். உங்கள் நெஞ்ச துடிப்பிலே தான் கலந்திருப்பேன். உங்கள் மூச்சிலேதான் இருப்பேன். என்னை எவனும் இல்லாதவனாக ஆக்கிவிட முடியாது. நான் உங்களுடன் இருக்கிற காரணத்தால் என்னை யாரும் அழித்து விடமுடியாது என்றார் கருணாநிதி.

தற்ஸ் தமிழில் இருந்து..........

சனி, செப்டம்பர் 22, 2007

கருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு!!!

முதல்வர் கருணாநிதியின் தலையை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என பாஜக முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி கூறியுள்ளார்.

அயோத்தியில் அவர் பேசுகையில்,ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.இவர் வேதாந்தி விஎச்பியின் மார்க்தர்ஷக் மண்டல் தலைவராக உள்ளார். 2 முறை பாஜக எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்ஸ் தமிழ்

தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர் நடமாட முடியாத நிலை ஏற்படும்-திமுக கடும் எச்சரிக்கை!!!

முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என விஎச்பி தலைவர் அறிவித்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பாஜக, விஎச்பியைச் சேர்ந்த தமிழகத்தில் தெருக்களில் நடமாட முடியாத அளவுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என திமுக எச்சரித்துள்ளது.முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.இதற்கு பதிலளித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி என்பவர் தலைவர் கலைஞரைத் தாக்கி "பத்வா'' ஒன்றினை அயோத்தியிலிருந்து விடுத்திருப்பதாகவும், அதில் தமிழக முதலவரின் தலையையும், நாக்கையும் யார் துண்டாடினாலும் அவர்களுக்கு அயோத்தியில் உள்ள சாமியார்களால் எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்றும் பேசியிருப்பதாக செய்தி வந்துள்ளது.இதே அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் பெங்களூரில் முதல்வரின் மகளின் இல்லத்தில் இரவிலே வந்து தாக்கியிருக்கின்றனர். தமிழக பேருந்தை தீயிட்டுக் கொளுத்தி 2 உயிர்கள் கருகிட காரணமாகவும் இருந்திருக்கிறார்கள்.இத்தகை? செயல்களை செய்திடும் அமைப்புகள் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அறிக்கை விடுத்துள்ளார்கள்.முதல்வர் கருணாநிதியோ இது அவர் சம்பந் தப்பட்ட பிரச்சனை என்பதாலும், சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலே தான் இருக்கிறோம் என்பதாலும், கழகத்தின் மாவட்டச் செயலாளர்களையும், முன்னணியினரையும் கைகளைக் கட்டிப் போட்டு எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து வைத்திருக்கிறார்.தலைவரின் எச்சரிக்கை காரணமாக அமைதியாக இருக்கும் கழகத்தவர்களை கோழைகள் என்று எண்ணிக் கொண்டு பாஜகவினரும், விஸ்வ இந்து பரிஷசத்தை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் வாய் நீளம் காட்டினால், அதே பாணியில் திமுகழகத் தோழர்களும் தன்னிச்சையாக செயலில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டாடுவோம் என்று சொல்கின்ற அளவிற்கு ஒருவனுக்கு தைரியம் வருகின்றது என்றால், தமிழ்நாட்டுத் தெருக்களில் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நடமாட முடியாத நிலைமையை உருவாக்குவோம்.இது பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா வளர்த்த தம்பிகள் நாங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.பகுத்தறிவு என்றால் என்ன என்றே தெரியாமல், மதத்தைச் சொல்லி, கடவுளைச் சொல்லி, ராமர் பெயரால் கட்சியை நடத்தி மத உணர்வுகளை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் காட்டு மிராண்டிக் கும்பலைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினன் ஒருவன் உதிர்த்த வார்த்தைகளை உடனடியாகத் திரும்பப் பெறவில்லை என்றால்,தலைமையின் அனுமதியினைப் பெற்று இன்னும் ஒரு வார காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்கள் முன்பு கழகத் தோழர்களைத் திரட்டி கருப்புக் கொடி காட்டி, மறியல் செய்திட நானே தலைமை தாங்குவேன்.அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என்று யாராவது சொன்னால், அமைச்சர் பதவி எங்களுக்கு பெரிதல்ல. சுயமரியாதை ரத்தம் எங்கள் உடலில் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் தலைவரைப் பற்றி தவறாகக் கூறிய வேதாந்தி அல்ல. வேறு எவன் சொன்னாலும், அதை தமிழகம் கேட்டுக் கொண்டிருக்காது என்பதை இந்தியாவே புரிந்து கொள்ளச் செய்வோம்.இந்தியா மதச் சார்பற்ற நாடு. மதத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு இயக்கம் கட்சி நடத்துவதற்கும், கண்டபடி பேசுவதற்கும் தமிழகம் தக்கவாறு பதிலளிக்க தயாராக இருக்கிறது. இன்று பெரியார் இல்லை தான். ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம்.எங்களுக்கு உயிர் பெரிதல்ல. எங்கள் தலைவனைத் தாக்கிப் பேசிய பிறகும் அதைத் தாங்கிக் கொண்டு மனிதப் பிறவிகள் என்று எங்களைச் சொல்லிக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை.தமிழ்நாட்டு மக்களே, திமுகழகத்தினைச் சேர்ந்த நண்பர்களே, வேதாந்தி என்பவனுக்கும், அவனுடைய அமைப்பைச் சேர்ந்தவர் களுக்கும் சரியான வகையில் பதில் கூறத் தயாராவோம். நம் தலைவரின் உயிரைப் பற்றி விலை பேசும் வட நாட்டுத் தருக்கன் ஒருவனுக்கு சரியான புத்தி புகட்டிட வேண்டாமா, இன்றே புறப்படுங்கள்.இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

தற்ஸ் தமிழ் இல் இருந்து...................

திங்கள், செப்டம்பர் 03, 2007

ஈராக் பாஸ்ராவை விட்டு ஓடும் பிரித்தானிய இராணுவம்.



2003 இல் சதாம் குசைன் அணுகுண்டு உட்பட மனிதப் பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று கற்பனைக் கதை கட்டிக்கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்து எண்ணை வளத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க, பிரித்தானிய ஆக்கிரமிப்பு இராணுவங்களில் பஸ்ரா என்ற தென் ஈராக்கிய நகரில் நிலை கொண்டிருந்த பிரித்தானிய இராணுவம் அங்கிருந்து முற்றாக வெளியேறிக் கொண்டுள்ளது. பிற இடங்களில் இருந்தும் மெது மெதுவாக வெளியேறி வருகின்றது.


பிரித்தானிய இராணுவ வெளியேற்றத்தை ஈராக்கியப் போராளிகள் தங்கள் வெற்றியாகக் கொண்டாடி வரும் அதேவேளை தாங்கள் வெளியேறி வரும் பகுதிகளில் தங்களால் பயிற்றப்பட்ட ஈராக்கிய கூலிப்படைகளை பிரித்தானிய இராணுவம் நிறுத்தி வருகின்றது.

பிரித்தானிய இராணுவம் ஈராக் போரின் போது தானே தனித்து பஸ்ராவை விடுவித்தது என்பதும் அங்கு தீவிரவாதிகளின் தொடர்தாக்குதலுக்கு இலக்காகி 250 க்கும் மேற்பட்ட வீரர்களை பறிகொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்..!

இதற்கிடையில் அமெரிக்க வெடிவால் புஷ் இன்று ரகசிய ரகசியமாக ஈராக் போய் பத்திரமா மீண்டும் அமெரிக்கா போய் சேர்ந்துள்ளார். உலகின் வல்லாதிக்க அரசுத் தலைவர் ஒளிச்சு ஓடும் நிலைக்கு ஈராக்கில் அமெரிக்கப் படைகள் பலத்த சவாலைச் சந்தித்து நிற்கின்றன. ஈராக் இன்னொரு வியட்நாம் என்று தன் வாயாலேயே புஷ் உளறியிருந்தார் அண்மையில்..!

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/6975375.stm
யாழ்.காமில் இருந்து............
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us