வியாழன், மே 31, 2007

சிவாஜி பிட்டு!!!

சிவாஜி பிட்டு காட்சியை பார்க்க, இங்கே சொட்டவும்.
வானொலியை நிறுத்திவிட்டு பார்பது மேலும் சிறப்பு.

திங்கள், மே 28, 2007

பெண்கள் தண்ணி அடிக்கலாமா?


http://sayanthan.blogspot.com/2007/05/blog-post_27.html

தண்ணி அடிப்பதை பற்றி இங்கே ஒரு விவாதம நடக்கிறது, இது நகைச்சுவையாக இருந்தாலும், யோசிக்கவேண்டியவிடயம். என்னை பொறுத்தவரையும் விரும்பியவர்கள் அடிக்கலாம், விரும்பாதவர்கள் அடிக்காமல் விடலாம், ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. என்னவெனில் ஆண்கள் அடித்தால் இந்த சமுதாயம் பெரிதாக கண்டு கொள்வதில்லை, ஆனால் அதைபெண் செய்தால் பெரிதாக தூக்கிபிடிக்கிறது, அதன் பின்னர் அந்த பெண்ணுக்கு முன்னர்கிடைத்த மரியாதை கிடைக்குமா? அதற்கு முன்னர், அந்த கணவர் முதலில் அதற்கு அனுமதி கொடுப்பாரா?

பொதுவாக இந்த தண்ணி எனப்படும் அல்கஹோல் உடலுக்கு கேடானது. மனித உடலுக்கு தீங்கானது, அதை ஆண் செய்யும் போது ஒரு கண்ணோட்டத்திலும் பெண்செய்யும் போது வேறு கண்ணோட்டத்திலும் பார்ப்பது ஏன்? ஆணைவிட பெண் அச்செயலை செய்யும் போது, அது குடும்பத்துக்கும் ,சமுதாயத்துக்கும் அதிக கேட்டை தரக்கூடியாதா? அதனால்தான் இந்த ஆண் ஆதிக்கவாதிகள் பெண்களுக்கு கார் லைசன்ஸை கட்டாயமாக பழக்கிறார்களா?

"அளவாக அடித்தால் அதுவே மருந்து"

"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு"

சனி, மே 26, 2007

திமுக அரசின் செல்வாக்கு சரிவு: கருணாநிதியை விட ஜெ. பெட்டர் - கருத்துக் கணிப்பு!!!

சென்னை: திமுக அரசின் செல்வாக்கு கடும் சரிவைக் கண்டுள்ளாக லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியை விட ஜெயலலிதா பல வகையிலும் சிறந்தவராக விளங்குவதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை லயோலா கல்லூரி அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடும். பொதுவாக திமுகவுக்கு சாதமாகவே இக்கல்லூரியின் கருத்துக் கணிப்பு அமையும். இந்த நிலையில் கடந்த ஒரு வருட திமுக ஆட்சி குறித்து நடத்திய கருத்துக் கணிப்பில் திமுகவுக்கு பாதகமான முடிவுகளை இக்கல்லூரி வெளியிட்டுள்ளது.

இக்கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு இன்று வெளியிட்டது. இதில் திமுக அரசுக்கு மக்கள் செல்வாக்கு மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 3ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் விவரம் வருமாறு,

கடந்த ஒரு ஆண்டு திமுக அரசு மீது மக்களுக்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது. 39.9 சதவீதம் பேர் ஆட்சியின் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். நடு நிலை வாக்காளர்கள் மத்தியில் திமுக மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது. 25.7 சதவீத நடுநிலை வாக்காளர்கள் திமுக மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதேசமயம், திமுகவின் சொந்த செல்வாக்கு சரியவில்லை. அது 31.8 சதவீதமாக உள்ளது.

இப்போது யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு திமுகவுக்கு என 31.8 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு என்று 27.6 சதவீதம் பேரும், தேமுதிகவுக்கு என்று 15.2 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

இக்கல்லூரி கடந்த முறை நடத்திய கருத்துக் கணிப்பை விட இந்த முறை திமுக மற்றும் தேமுதிகவின் செல்வாக்கு சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த முறை திமுகவுக்கு 34 சதவீதம் பேரும், தேமுதிகவுக்கு 17 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

திமுக ஆட்சி சிறப்பாக இருப்பதாக 58.9 சதவீதம் பேரும், குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை என்று 26.4 சதவீதம் பேரும், மோசம் என 14.7 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

எதிர்க்கட்சியாக அதிமுகவின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக 46.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மோசம் என்று 17.7 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சி மற்றும் இப்போதைய திமுக ஆட்சியில் எது பெஸ்ட் என்ற கேள்விக்கு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக்கே மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

தாமதிக்காமல் முடிவு எடுப்பதில் சிறந்தவர் ஜெயலலிதா என 53.3 சதவீதம் பேரும், கருணாநிதி என 45.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவர், கட்சிக்குள் குடும்ப ஆதிக்கத்தை அனுமதிக்காதவர், உட்கட்சி ஜனநாயகத்தை காப்பவர் உள்ளிட்டவற்றில் சிறந்தவர் ஜெயலலிதா என்றும் கருத்துக் கணிப்பில் தெரிந்துள்ளது. இவற்றில் ஜெயலலிதாவை விட கருணாநிதிக்கு குறைந்த ஆதரவே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா கொண்டு கேபிள் டிவியை அரசுடமையாக்கும் திட்டத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு காணப்படுகிறது. 62.6 சதவீதம் பேர் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தேவையில்லை என 14.3 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சரத்குமார் கட்சி ஆரம்பிப்பார் என 35.6 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நாடார் சமுதாய அமைப்புகளுடன் சேர்ந்து ஆரம்பிப்பார் என 19.2 சதவீதம் பேரும், ரசிகர்களின் துணையுடன் ஆரம்பிப்பார் என 16.4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர் கட்சி தொடங்குவது சந்தேகம் என 30 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

ம.தி.மு.க.வினரை எதிர்முகாமுக்குப் போகும் அளவிற்கு செய்ததில் மாறன் சகோதரர்களது பங்கு முக்கியமானது!

தி.மு.க. பிரசார மேடைகளில் இரண்டு பாட்டுக்கள் நிச்சயமாக ஒலிக்கும் _ அது, குமரிமுனையாக இருந்தாலும், குடந்தையாக இருந்தாலும். ஒன்று, ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ மற்றொன்று...

‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்த தடா!

வஞ்சகரின் சூழ்ச்சியிலே வீழ்ந்ததடா, அழிந்ததடா..’

1970_களில் நாகூர் ஹனிபா தன் வெண்கலத் தொண்டையில் ஸ்ருதி சுத்தமாகப் பாடிய பாடல்தான்

பின்னர் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுப் போன சிலருக்கும் அது சரியான சவுக்கடியாக இருந்தது. வைகோ தன் பட்டாளத்துடன் விலகியபோதும், ‘வளர்த்த கடா’ ஊர் பூராவும் தி.மு.க. மேடைகளில் முழங்கி வெறுப்பேற்றியது. அண்மையில் தீவுத்திடலில் ஹனிபாவின் ‘வளர்த்த கடா’ கணீரென்று மீண்டும் ஒலித்தபோது, உடன்பிறப்புகளுக்கு தயாநிதி சகோதரர்களை நினைவுபடுத்தி ரத்தத்தை சூடேற்றியது நிஜம். யாருக்கோ எழுதப்பட்டது, கடைசியில் தன் குடும்பத்தில் சிலருக்கே பொருத்தமாகும் என்று, கழக மேலிடம் கனவில் கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை. கால கிரஹத்தின் இந்த சோகமான தமாஷை, கலைஞர் கருணாநிதியால் அவ்வளவு சுலபமாக ஜீரணித்துவிட முடியுமா? முடியவில்லை.

கடந்தவாரம் முரசொலியில் அவர் எழுதியுள்ள கவிதையில் தன் ஆழ்மனதை அப்படியே வேதனை கொப்புளிக்க கொட்டித் தீர்த்துள்ளார்.

‘‘துரோகத்தால் எனைத் துளைத்துச் சென்ற தோழர்கள் சிலரும்’’,

தோள்மீது கைபோட்டுத் துணைக்கு வந்துவிட்டோம் என்பதும் கனவுதானே;

பலிக்காத கனவுகளால் மனம் வலிக்காது;

ஜொலிக்காத கூழாங்கற்கள் குப்பைக்கே போகும்

பட்டை தீட்டிப் பார்த்தாலும் பலனில்லை..’’

என்று வருத்தப்பட்டுள்ள கலைஞர், ஓர் இடத்தில் மாறன், அமிர்தம், செல்வம் ஆகிய மருமகப்பிள்ளைகள் எல்லாம் தன் மான்குட்டிகளாய்

மார் மீதும், தோள் மீதும் விளையாடியதையெல்லாம் குறிப்பிட்டுக் ஓய்ந்துபோயினவே என் இளமையோடு அவை ஒழிந்தே போயினவே என்று கலங்கியுள்ளார்.

‘‘அந்தக் கவிதையைப் படிச்சிட்டு அப்படியே உட்கார்ந்துட்டேன். ராத்திரி ரொம்ப நேரம் தூக்கம் வரலை சார். உண்மையான பாசத்தை சட்டை செய்யாம எட்டி உதைச்சுட்டுப் போகும்போது, தலைவரால தாங்கிக்க முடியவில்லை. அதுவும் இந்த வயசுல. இந்த முடியாத உடம்புல, அவருக்கு சகோதரி புள்ளைங்க, தன் புள்ளைங்கன்னு வித்தியாசமே கிடையாது.

மாறனுக்கும் அவருக்கும் எப்பவாவது மனஸ்தாபம் வரும். சட்டுன்னு சொல்லிக்காமலேயே எந்திரிச்சு விருட்டுன்னு போய்டுவாரு மாறன். அம்மா (தயாளு அம்மாள்) சுடச்சுட டிபன் கொண்டு வருவாங்க. மேஜையிலேயே அது ஆறிகிட்டுக் கிடக்கும். தலைவர் பாட்டுல சுவரைப் பார்த்துட்டு உட்கார்ந்திருப்பார். அப்புறம் ஓசைப்படாமல் அம்மா மாறன் ஐயாவுக்கு போன் பண்ணி, தலைவர் அப்செட் ஆனதைச் சொல்வாங்க. அடுத்த ஐந்தாவது நிமிஷத்துல வீட்டுக்கு வேகமா வருவார். அப்போ அவருக்கும் ஒரு பிளேட் டிபன் வரும். இவர் சட்டுன்னு தன் பிளேட்டை தலைவர் பக்கம் திருப்பிட்டு, அந்த ஆறிப்போன டிபனை எடுத்துச் சாப்பிட்டுகிட்டே ஒண்ணுமே நடக்காத மாதிரி, வேற எதையோ பேசுவார். தலைவர் முகத்துல சிரிப்பைப் பார்க்கணுமே... மாறன் ஐயா முழங்கைய பிடிச்சுகிட்டே குழந்தை மாதிரி சாப்பிடுவார். பல தடவை இப்படி நடந்திருக்கு. செல்வத்திடமும் அப்படித்தான் பாசத்தை வச்சிருந்தார் தலைவர். அதெல்லாம் இந்த புத்திசாலிப் புள்ளைங்களுக்குப் புரியுமா சார்?’’ கலைஞர் குடும்பத்தில் பல வருடங்களாகப் பணியாற்றி விட்டு கொஞ்ச காலம் முன்பு ஓய்வுபெற்ற பெரியவர் நெஞ்சு நிறைய பாரத்துடன் நம்மை நிமிர்ந்து பார்த்தார்.

மாறன் சகோதரர்களின் அரசியல் வீழ்ச்சிக்குக் காரணம், பேராசைதான் என்பது நம்மிடம் பேசிய தென் சென்னை தி.மு.க. அனுதாபிகள் பலரது கருத்து.

‘‘பூமாலை கேஸட் வியாபாரம் செய்தவர்கள், முதலில் அங்குசத்தைத்தான் வாங்கினார்கள். இப்போது யானைகளை வாங்குகிறார்கள். அவர்கள் டி.வி. நாலு மாநிலங்களிலும் கிளைவிட்டு வியாபித்துள்ளது. விளம்பர வருமானம் பல கோடிகளைத் தாண்டுகிறது. வேகவேகமாக பத்திரிகை துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளார்கள். ஆக, தொட்டதெல்லாம் லாபம் என்ற நிலை வரும்போது, அவர்களுக்கு தலை கால் புரியவில்லை. அரசியலையும் தங்கள் சாம்ராஜ்யத்திற்குள் வளைக்க நினைத்தார்கள். அது பணத்தால் வருவதில்லை. அவர்கள் வளர்ச்சியின் அஸ்திவாரமே தி.மு.க.வும், கலைஞரும் என்பதை மறந்து ஆடிய ஆட்டம்தான் எல்லாம்’’ என்றார், ஓர் மூத்த மாநகராட்சி உறுப்பினர்.

தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை இன்னும் இன்னும் என்று நாளுக்குநாள் பெருக்கி, அதிலேயே குறியாக இருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ரத்த உறவுகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்று, இந்த விவகாரத்தை தத்துவார்த்தமாக அலசுகிறார் மூத்தபத்திரிகையாளர் சோலை.

‘‘அவ்வப்போது பரபரப்பான, உணர்ச்சிமயமான செய்திகளை வெளியிட வேண்டும் என்ற தனியாத தாகம், இந்த சாம்ராஜ்ய அதிபர்களுக்கு வந்துவிடும். சொத்தைத்தான் பிரித்தாகிவிட்டது. எனவே, சகோதரர்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்கிற மிதமிஞ்சிய நிலை. அப்போது நான்கு விஷயங்களையும் முன்யோசிக்கும் தாத்தாவின் எச்சரிக்கை ஒலி காதில் விழுமா?’’ என்று கேட்கிறார் சோலை.

அடுத்தது, கலைஞருடன் ஒற்றுமையாக இருந்த ம.தி.மு.க.வினரை, கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பேற்றி, அவர்கள் எதிர்முகாமுக்குப் போகும் அளவிற்கு செய்ததில் மாறன் சகோதரர்களது பங்கு முக்கியமானது என்பதை, கழகத்தின் சில சீனியர்கள் சங்கடத்துடன் ஒப்புக் கொள்கிறார்கள். ‘‘ம.தி.மு.க. செய்திகளை இருட்டடிப்பு செய்யாதீர்கள் என்று பலமுறை கலைஞர் சொல்லியது எங்களுக்குத் தெரியும். இவர்கள் கேட்கவில்லை. அப்போதே இவர்கள் ஓர் அரசியல் கணக்குப் போட்டிருக்கிறார்கள்’’ என்கிறார், ஓர் முன்னாள் அமைச்சர். ஒரு காலத்தில் துரைமுருகன், க. சுப்பு ஆகியோரோடு சட்டசபையில் அசாத்தியமாக முழங்கி, இப்போது காரணமின்றி ஓரங்கட்டப்பட்டவர்.

மாறன் சகோதரர்கள் விஷயத்தில் இன்னொரு திகைப்பான தகவல், அவர்கள் வரிசையாக நான்கு விமானங்கள் வாங்கியது, கலைஞருக்கே சற்றுத் தாமதமாகத்தான் தெரியும். அதாவது, ஜெயலலிதா இதுபற்றி அறிக்கை விட்டு, கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்த பிறகுதான், கலைஞரே என்ன நடக்கிறது என்று சுதாரித்துக் கொண்டாராம்.

‘‘நாற்பது பேர் பயணம் செய்யக் கூடிய ஜெட் விமானம்தான் முதலில் வாங்கப்பட்டது. தற்போது ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ இதன் பராமரிப்புப் பணிகளைக் கவனிக்கிறது. அப்புறம் ஆறு பேர் பயணம் செய்யக் கூடிய ஒன்றும், மூன்று பேர் பயணம் செய்யக் கூடிய ஒன்றையும் வாங்கினார்கள். இவற்றை ஏர்ஜெட் என்பார்கள். இது இரண்டையும் சவூதி ஏர்லைன்ஸ் பராமரிக்கிறது. நான்காவதாக ஒரு குட்டி விமானம், பிலிப்பைன்ஸ் நாட்டு பயிற்சி நிலையத்தில் (திறீஹ்வீஸீரீ சிறீஉதீ) உள்ளது. குட்டி விமானங்கள் இரண்டில் ஒன்றை சேலத்திற்கும், மற்றதை பாண்டிக்கும் விட அனுமதி கேட்டிருக்கிறார்கள். விரைவில் ஜாம் ஜாமென்று சகோதரர்களின் விமானப் போக்குவரத்தையும் எதிர்பார்க்கலாம்’’ என்று பீஹாரி ஆங்கிலத்தில் சொல்லும் மீனம்பாக்கத்தைச் சேர்ந்த ஓர் விமான நிலைய அதிகாரி, இறுதியாகச் சொன்ன கொசுறு தகவல்.

‘‘இரண்டு வாரங்களுக்கு முன்பு, மத்திய தொழில்நுட்பப் பாதுகாப்புப் படையின் அனுமதியோடு தயாநிதியும், கலாநிதியும் தங்கள் விமானங்களைப் பார்வையிட்டனர்.’’

திடீரென்று ஒரு காலையில் தயாநிதிமாறன் பொறுப்பிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ள நிலையில், தென்னிந்தியாவின் மற்ற சாட்டிலைட் அதிபர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாக ஓர் தகவல். அவர்கள் நிம்மதிப் பெருமூச்சோடு காய்களை இப்போது நகர்த்துகிறார்கள்.

‘‘அது கேரளாவாகட்டும், ஆந்திராவாகட்டும் இவர்கள் ஆதிக்கம்தானே. கேரளாவில் மார்க்சிஸ்ட்கள் நடத்தும் ஏஷியாநெட்டு

க்கு பல நெருக்கடிகள் தந்தார்கள். அதேபோல் ஏசியா நெட்டுக்கும். விளைவு முதலிடத்தில் இருந்த கைரளி பின்னுக்குப் போக, இவர்களது சூர்யா நம்பர் ஒன் ஆனது. ஆந்திராவில் ஈ.டி.வி.யின் செல்வாக்கை இவர்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் ஈ.டி.வி, ஜெமினி, தேஜா எல்லாமே சமமான இடத்தில் உள்ளது! கர்நாடகத்தில் இவர்கள் ராஜ்யம்தான். இப்போது தயாநிதி பதவி இறங்கிவிட்ட அடுத்த நிமிஷமே, கர்நாடக முதல்வர் குமாரசுவாமியின் மனைவி வேகமாக களத்தில் இறங்கிவிட்டார். விரைவில் அவர்கள் குடும்பத்து டி.வி. வரப்போகிறது. எங்கே சார், இவர்கள் ஆரோக்யமான போட்டிக்கு வழி வகுத்தார்கள்?’’ என்று கேட்கிறார் ‘வெற்றிகரமான’ டி.வியைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரி.

‘சன் டி.விக்கும் தனக்கும் சம்பந்தமில்லை’ என்று தயாநிதி கூறியதைக் கேட்டு, இவர்கள் ‘நல்ல ஜோக்’ என சிரிக்கிறார்கள்.

விளைவுகளைப் புரிந்துகொள்ளாமல் சிலம்பம் சுற்றி விட்டு, இப்போது மெதுவாக சுதாரித்துக் கொண்டு பச்சைக்கொடிக்கு மாறன் குடும்பத்தினர் தயாராவதாக ஓர் உறுதியான தகவல். ஏற்கெனவே மருமகன்கள் செல்வம் மற்றும் அமிர்தம் கலைஞரைச் சந்திக்க முயற்சி செய்தபோது எகிறி முகத்தில் அடித்த பந்து போல சீறி வந்தது, ‘அந்த’ ஜொலிக்காத கூழாங்கற்கள்’ கவிதை! தன் பத்திரிகை ஊழியர்களை உசுப்பிவிட்டுவிட்டு செய்வதறியாமல் ஜெனீவாவிற்குப் பறந்த கலாநிதி மீதுதான் கலைஞருக்கு அதிக கோபமாம். தற்போது பரபரப்பாகப் பேசப்படுவது, 28_ம் தேதி மாறனின் கடைசி மகள் அன்புக்கரசியின் வளைகாப்பு! தன் பேத்தி மீது மிகுந்த பாசம் கொண்ட கலைஞர், அங்கு வரலாம் என்றும், தயாநிதியும் கலாநிதியும் அங்கே வைத்து தாத்தாவிடம் சமரசம் ஆகலாம் என்றும் கூறப்பட்டாலும், அதற்கு சாத்தியமில்லை என்றே நம்பப்படுகிறது. எனவே, சென்னையிலிருந்து ஊட்டிக்கு விழாவை மாற்றி விட்டதாகவும் செய்திகள். ஊட்டியில் நடந்தால் தயாளு அம்மையாரை மட்டும் கலைஞர் அனுப்பலாம்!

‘‘வயதான தலைவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டிய இந்த நேரத்தில், இவர்கள் அவரை நோக அடித்தது மன்னிக்க முடியாத குற்றம். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். கடவுளின் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும்’’ என்றார் தீர்மானமாக கலைஞர் மீது மிகவும் பற்று கொண்ட ஓர் தமிழறிஞர்! இனியும் வளர்த்த கடா முதல்வரின் மார்பில் பாயக்கூடாது. காரணம், அதைத் தாங்கும் சக்தி அவர் முதுமைக்கில்லை
நன்றி>குமுதம்.

வியாழன், மே 24, 2007

கருணாநிதியின் தொகுதியிலேயே, இரட்டை இலைக்கு வாக்களித்தவர் ரஜனி!!!

சிவாஜி பட ரிலீஸை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு ஐந்து முக்கிய கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார்.

சிவாஜி பட ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜூன் 15ம் தேதி எப்போது வரும் என ரசிகர்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றனர். ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து கொண்டுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு ரஜினி ரசிகர்மன்றமே ரசிகர்களுக்காக நேரடியாக டிக்கெட்டுக்களை விநியோகித்துள்ளது. ரசிகர்கள் எந்தவித சிரமமும் இன்றி படத்தைப் பார்க்கவே இந்த ஏற்பாடு.

இந்த நிலையில், படம் திரையிடப்படும் அத்தனை தியேட்டர்களிலும் அமளி துமளியாக கொண்டாடி விட வேண்டும் என ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இதெல்லாம் தலைவர் காதுகளை எட்ட சட்டுப்புட்டென்று ஐந்து கட்டளைகளை ரசிக மக்களுக்குப் பிறப்பித்துள்ளாராம். தனது மன்ற செயலாளர் சத்யநாராயணா மூலமாக அனைத்து ரசிகர் மன்றங்களுக்கும் இந்த கட்டளைகள் பறந்துள்ளதாம்.

அந்த சர்க்குலரில், சிவாஜி பட ரிலீஸின்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளாராம் ரஜினி.

முதல் கட்டளை: படம் ரிலீஸாகும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. நாகரீகமான முறையில், அமைதியாக பட ரிலீஸின்போது நடந்து கொள்ள வேண்டும்.

2வது கட்டளை: போக்குவரத்து பாதிக்கும் வகையில், சாலைகளில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. பெரிய பெரிய வளைவுகளை சாலைகளில் அமைக்கக் கூடாது.

3வது கட்டளை: அரசியல் சம்பந்தப்பட்ட வாசகங்களுடன் கூடிய டிஜிட்டல் பேனர்களை கண்டிப்பாக வைக்கக் கூடாது.

4வது கட்டளை: பிறரைக் காயப்படுத்தும் வகையிலான வாசகங்களுடன் கூடிய பேனர்களை வைக்கக் கூடாது.

5வது கட்டளை: படம் பார்க்க வரும் பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் தரக் கூடாது. மக்கள் அனைவரும் செளகரியமாக படம் பார்க்க உதவ வேண்டும்.

இந்த ஐந்து கட்டளைகளையும் ரசிகர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என ரஜினி அன்புக் கட்டளை இட்டுள்ளாராம். இதன் அடிப்படையில் சிவாஜி படத்தைக் கொண்டாட ரசிகர்கள் மாநிலம் முழுவதும் தயாராகி வருகின்றனராம்.

படம் திரையிடப்படவுள்ள தியேட்டர்களுக்கு மாவட்ட ரசிகர் மன்றத் தலைவர்கள் விசிட் செய்து என்ன மாதிரியான ஏற்பாடுகளை செய்யலாம் என்று ஆலோசனைகளும் நடத்த ஆரம்பித்து விட்டனராம்.

ரஜினி சொன்னா ராகவேந்திரா சொன்ன மாதிரி, ரசிகர்கள் கண்டிப்பாக கடைப்பிடிப்பாங்கண்ணு நம்பலாம்!


பஞ் பரமவசிவம் என்பவர் இதற்கு தற்தமிழில் கருத்து தெரிவித்துள்ளார் அவரின் கருத்து.

வானத்தில் பெரிதாய் பறக்கும் பலூன் மாதிரி தான் அவரின் தோற்றம் மீடியா எனும் காற்றின் உதவியுடன் இருந்தது. அதில் போன தேர்தலில் விட்ட அவரின் சொந்த வாய்ஸ் குண்டூசியாக மாறிக் குத்தியதில் புஸ் என்று காற்றுப் போன பலூனான இன்று இருப்பது தான் அவரின் உண்மை நிலை. முதலில், குழம்பாமல் ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்கட்டும். இவர் யோசிசிசிசிக்கும் நேரத்தில் விஜயகாந்தும், கமலும் பல படங்கள் வெற்றிகரமாக எடுத்து விட்டார்கள். இது மாதிரி மக்கள் பிரச்சனையில் யோசித்தால், பி.எஸ்.வீரப்பா பாணியில் சொல்வதானால் ' நாடும் மக்களும் நாசமாகி விடுவார்கள் '. கல்மனத்தையும் கரைத்த கும்பகோணம் வராதவர். இவர் வந்தால் பிரளயம் நடக்கும் என்ற நினைப்பு மட்டும் இன்னும் பொழைப்பைக் கெடுக்கிறது. -- மக்களின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்காத ரஜினி, துறவுக்கும் போகாம, இல்லறத்துக்கும் போகாம குழப்பும் ரஜினி.

கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்....! அது போல் இந்த ரஜினி காந்த் கதை. அவர் தான் சார்ந்த சினிமாத் தொழிலில் செய்தவற்றைப் பார்ப்போம். ---- ரஜினி - விஜயகாந்த இருவரும் பிரபலமான பின் நடந்த முறைகளைப் பார்ப்போம். ரஜினி- ஏவிஎம், சத்யா மூவிஸ், கவிதாலயா, சுஜாதா பிலிம்ஸ் போன்ற தயாரிப்புகளில் தான் நடிப்பார். அவரால் எந்த ஒரு புதிய தயாரிப்பு நிறுவனமும் மேல் வந்ததில்லை. விஜயகாந்த்- அம்மா மூவிஸிலிருந்த நடித்ததில் 80% புதிய பேனர்களே. ரஜினி:: புதிய இயக்குனர்கள் யாரையுமே அறிமுகப்படுத்தியதில்லை. விஜயகாந்த்: ஆபாவாணன், செல்வமணி தொடங்கி பல இளம் இயக்குனர்களின் சினிமா வாழ்க்கைக்கு காரணமானவர். முண்ணணியில் இருந்த போது சரத்குமார், போன்றோரை தைரியமாக அறிமுகப்படுத்தினார் (வில்லனாக) விஜயகாந்த். ரஜினி எந்த ஒரு நடிகரையும் அறிமுகப்படுத்தியதில்லை. வளசரவாக்கத்தில் ஒரு மருத்துவமனையை ஆரம்பித்து, அதில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்தார் விஜயகாந்த். திரையுலகமே வேலை நிறுத்தத்தில் இருந்த போது உல்லாசபுரி அமெரிக்காவில் சுதந்திரமாய் இருந்தவர் ரஜினி. ஆனால், அந்தப் பிரச்சனையில் இறங்கி தீர்வு காண தோள் கொடுத்தவர் விஜயகாந்த். எம்ஜிஆருக்குப் பின், சினிமா அலுவலகம் வருபவர்களுக்கு வாய், வயிரார உணவு தந்தவர் விஜயகாந்த். வேறுபாடுடன் உணவு பரிமாறப்படும் சூழல் மாற்றி, படப்பிடிப்பில் கறி சோறு அனைவருக்கும் முதலில் போட்டவர் விஜயகாந்த். ரஜினிகாந்த் மற்றவருக்கு என்ன உணவு கிடைக்கிறது என்பது பற்றிய கவலை இல்லாதவர். காவிரிப் பிரச்சனையில் தமிழர்களை மிரட்டியவர் ரஜினிகாந்த். அய்யா அய்யா என்று காலில் விழுந்து விட்டு, கருணாநிதி முதுகில் குத்தியவர் ரஜினிகாந்த். கருணாநிதியின் தொகுதியிலேயே, இரட்டை இலைக்கு வாக்களித்ததாகச் சொன்னவர். கார்கிலுக்கு 5 லட்சம் தானம் கொடுத்து, வீரர்கள் உடல் வரும் போது நேரில் போய் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் எங்கே, கருணாநிதி முன்னிலையில் , பொதுகூட்டத்தில் அறிவிப்புடன் 2 லட்சம் தந்த ரஜினி எங்கே... ? யாருடனும் முகம் கொடுத்துப் பேசாத, திரையுலகப் பிரச்சனைக்கு வந்து உதவாத ஒரு மனிதர் ரஜினிகாந்த். அவரின் பயத்தின் மெளனத்தை மோனம் என்று தப்பர்த்தம் பண்ணிவிட வேண்டாம்.

thatstamil.com இல் இருந்து.

உதறலெடுக்கிறது சன் டிவிக்கு!!!




தனது அறுபதாண்டுகால பொது வாழ்க்கையில் துரோகிகளையும், எதிரிகளையும் உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, எதிர்கொண்டு, வீழ்த்தி வெற்றிவாகைசூடிய கலைஞர், கடந்த சில நாட்களாக சொந்த பந்தங்களிடமிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.’ _கலைஞருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை!

இதை உறுதிப்படுத்தும் விதமாக கலைஞர் எழுதிய, விரக்தியும், ஆதங்கமும் நிறைந்த கவிதைகள் முரசொலியில் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கிறது தி.மு.க.வுக்குள்ளும், கலைஞரைச் சுற்றியும்....?

‘தினகரன்’ நாளிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் நீக்கப்படும் நிலையில் இருக்கிறார். சர்ச்சைக்குரிய சர்வே வெளிவந்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், கலாநிதி மாறன் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், நேரடித் தொடர்பில்லாத தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை நியாயப்படுத்தும் வகையில், தமிழக அரசின் உள்துறைச் செயலாளரை தயாநிதி மாறன் மிரட்டியதாகக் காரணமும் சொல்லப்பட்டது.

‘உண்மையான காரணம் அதுவல்ல. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உள்ளூர நடந்து வந்த நிழல் யுத்தத்தின் முடிவுதான் இது’ என்ற முன்னுரையோடு சில பின்னணித் தகவல்களை விளக்குகிறார்கள், கலைஞர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் நெருக்கமான தி.மு.க. முன்னோடிகள் சிலர்.

தி.மு.க. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வேட்பாளர்களுக்குக் கணிசமான பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கட்சி நிதி தவிர, இதில் கணிசமான பணத்தை தயாநிதி மாறனே தன் சொந்த முயற்சியில் திரட்டி விநியோகித்தார் என்றொரு தகவலும் உண்டு. அத்தோடு நிற்காமல், யதார்த்தமான பேச்சு வழக்கோடும், சிரித்த முகத்தோடும் மேடைகளில் வலம் வந்த தயாநிதி, தி.மு.க.வின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார் என்பதை, எந்த தி.மு.க. தொண்டனும் மறுக்க மாட்டான்.

தயாநிதியின் இந்தச் செயல்பாடுகள் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற இலக்கோடு அமைந்ததால், கலைஞர் மட்டுமல்ல.. மாறன் சகோதரர்களை ஒருவித சந்தேகக் கண்ணோடு பார்த்து வந்த ஸ்டாலின், அழகிரி ஆகியோரும் கூட ரசித்து, ஏற்றுக்கொள்ளவே செய்தார்கள். இதுவரை எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்தன.

தேர்தல் முடிந்து, ஆட்சி அமைந்த சில மாதங்களில் சில மாவட்டச் செயலாளர்களைத் தொடர்பு கொண்ட தயாநிதி மாறன், மாவட்டம் தோறும், கட்சி அலுவலகங்களை நவீன வசதிகளுடன் அமைத்துத் தர தான் தயாராக இருப்பதாகச் சொன்னார். அத்துடன் மாவட்டச் செயலாளர்களுக்கு வாகன வசதியும், ஒன்றியம் தோறும் சிறிய அளவிலான கட்சி அலுவலகங்கள் அமைக்கவும் அவர் திட்டம் வைத்திருந்தார்.

சில மாவட்டச் செயலாளர்கள் மூலம் ஸ்டாலினுக்கு இந்த விஷயம் தெரியவர... ஒரு கட்டத்தில் கலைஞரின் காதுகளுக்கும் இந்த விஷயம் எட்டியதாகத் தெரிகிறது. ஓர் அவசர ஆலோசனைக்குப் பின் தயாநிதி மாறன் அளிக்க முன்வந்த உதவியையும் வசதியையும் புறக்கணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டார்கள் மாவட்டச் செயலாளர்கள். ‘இது கட்சிக்கு உதவி செய்வதற்கான யோசனை அல்ல.... கொஞ்சம் கொஞ்சமாக கட்சியையே கைப்பற்றுவதற்கான திட்டம்’ என்று ரத்த உறவுகளிடம் இருந்து வந்த கருத்துக்களைத் தொடர்ந்தே தயாநிதியின் உதவி ஏற்க மறுக்கப்பட்டது.

இதுதவிர, கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி அமைந்த பின்பு தங்களின் வருத்தத்தை வெளியிட அவர்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்த தயாநிதி, ‘உரிய’ உதவிகளை அவர்களுக்குச் செய்து தந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் தயாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடுகளைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தது அறிவாலய வட்டாரம். அதே நேரம் தயாநிதியின் செல்வாக்கு கட்சிக்குள் வேகமாகப் பரவி வருவதையும் அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.

‘இதன் தொடர்ச்சியான நடவடிக்கையாகத்தான் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தி, அதன் மூலம் பலனடையும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்’ என்ற வாதத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டதுதான் தயாநிதியின் தடாலடி நீக்கத்திற்குக் காரணம்!’ என்கிறார்கள் அந்தத் தலைவர்கள்.

தயாநிதியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட கணத்தில் இருந்தே... கலைஞருக்குப் பிறகு யார் என்ற கேள்வியும், அதற்கான பதிலும் உரக்க ஒலிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞரின் குடும்பத்திற்குள் ‘ஸ்டாலினை உங்கள் இடத்தில் அமர வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இனியும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக அதை நிறைவேற்றுங்கள்’ என்று கலைஞருக்கு குடும்பத்தின் விஸ்வரூப நெருக்கடிகள் அதிகமாக ஆரம்பித்ததும் இந்தக் காலகட்டத்தில்தான்.

அதற்குக் காரணமும் இருந்தது. சமீபத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசிய பொன்முடி, பழனிமாணிக்கம் போன்றவர்கள், கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் தலைமையேற்க வேண்டும். அவர்தான் தகுதியான தலைவர் என்கிற ரீதியில் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆனால், கடைசியாகப் பேசிய பேராசிரியர் அன்பழகன், ‘கலைஞரை வைத்துக் கொண்டு, அவருக்குப் பிறகு யார் என்று பேசக்கூடாது. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று, ஒருவித விரக்தியில் பேசினார்.

பேராசிரியரின் இந்தப் பேச்சுத்தான் கோபாலபுரத்தில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கி விட்டது என்கிறார்கள், அந்த வட்டாரத்தில். ‘நீங்கள் இருக்கும்போதே ஸ்டாலினை முழுமையாக ஏற்கமாட்டார்கள் போல் தெரிகிறது. உங்களுக்குப் பின்னால் பிரச்னையின்றி ஸ்டாலின் ஆட்சிப்பீடத்தில் அமர முடியுமா என்பது சந்தேகமே. எனவே, உங்கள் பிறந்தநாளான வரும் ஜூன் 3 அன்றே அதிகார மாற்றத்திற்கான ஏற்பாட்டைச் செய்யுங்கள்’ என்று தயாளு அம்மாள், அழகிரி உள்ளிட்ட கலைஞரின் ரத்த உறவுகள் நெருக்கடி தந்திருப்பதாகச் சொல்கிறார்கள், கோபாலபுரம் வட்டாரத்தில்.

‘ஒட்டுமொத்த கட்சியே தளபதியின் பின்னால் நிற்பது மாதிரிதான் தெரிகிறது. பிறகு ஏன் வீண் சந்தேகம் எழுகிறது?’ என்று நம்மிடம் இந்த விவரங்களைச் சொன்னவர்களிடம் கேட்டால், ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் பதில் சொல்கிறார்கள்.

‘‘தலைவரின் மகன் என்ற அடிப்படையில் இயல்பாகவே தளபதியின் பின்னால் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு நின்றார்கள், நிற்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதுவும் தயாநிதி மாதிரியான வசீகரமும், பணபலமும் உள்ள ஒருவர் பின்னாலேயே வந்து கொண்டிருக்கும்போது, எவ்வளவோ உஷாராக இருக்க வேண்டிய ஸ்டாலின், அதைப்பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறோம். தலைவருக்கு வயது 84 ஆகிறது. இந்த வயதிலும் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வணக்கம் வைத்தால், வலது கையைத் தூக்க முடியாவிட்டாலும், இடது கையையாவது பாதி தூக்கி பதில் வணக்கம் சொல்வார் தலைவர். ஆனால் ஸ்டாலினுக்கு வணக்கம் சொன்னால், மாவட்டச் செயலாளர்களுக்கே கூட பல நேரங்களில் பதில் வணக்கம் கிடைப்பதில்லை. இதனால் உள்ளுக்குள்ளேயே வெந்து, நொந்து போனவர்கள் அனேகம் பேர்!

ஆனால் தயாநிதியின் பார்வையும், பழகும் விதமும் இதற்கு நேர்மாறானது. ஓராண்டுக்கு முன்பு தேர்தல் பிரசாரம் செய்யப் போனபோது முதன் முறையாக ஓர் ஒன்றியச் செயலாளரின் அறிமுகம் கிடைத்து, அவருடைய வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார் தயாநிதி. கடந்த மாதம் தலைவர் வீட்டிற்கு வந்திருந்தார் அந்த ஒன்றியச் செயலாளர். தலைவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த தயாநிதி, இந்த ஒன்றியச் செயலாளரைப் பார்த்ததும் நினைவுபடுத்திக் கொண்டு அவரே வலியச் சென்று பெயரைச் சொல்லி அழைத்து நலம் விசாரித்தார். நெகிழ்ந்து போய் கண்ணீரே விட்டுவிட்டார் அந்த ஒன்றியச் செயலாளர். அதிகாரம், பதவி, பணம் இவற்றைவிட உண்மையான கட்சிக்காரன் விரும்புவது இதுபோன்ற பாச உணர்வைத்தான். இப்படித் தனது அன்பால் தமிழ்நாடு முழுக்கவுள்ள பலநூறு நிர்வாகிகளை இப்போதும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் தயாநிதி. தலைவருக்குப் பிறகு இவர்கள் என்ன நிலை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்.

சமீபத்தில் கூட பாருங்கள். நாகப்பட்டினம் நகர சபைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக கவுன்சிலர்கள் இருந்தார்கள். ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் அந்த கவுன்சிலர்கள் கவனிக்கப்பட்டு, ‘கட்சியின் பெயர் உங்களின் செயல்பாடுகளில்தான் உள்ளது. தி.மு.க. ஜெயிக்க வேண்டும்’ என்று ஸ்டாலினே கேட்டுக் கொண்டார். ஆனால், சில தி.மு.க. கவுன்சிலர்கள் மாற்றி ஓட்டைப் போட்டுவிட, அங்கே அ.தி.மு.க. ஜெயித்துவிட்டது. ஸ்டாலினின் கட்டுப்பாடு இந்த அளவில்தான் இருக்கிறது. இது கலைஞருக்கும் தெரியும்.

‘தலைவருக்குப் பிறகு கட்சியைக் காப்பாற்ற எங்கள் தளபதியைத் தவிர வேறு எந்த நாதிக்கும் தகுதி கிடையாது’ என்று மேடையில் முழங்கிவிட்டு, அன்று இரவே ‘தயாநிதி ஊட்டியில் இருக்கிறாரா, சென்னை திரும்பிவிட்டாரா?’ அவரை எந்தச் சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்? என்று விசாரிக்கும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இந்த நிஜங்களை உணர்ந்துதான் இப்போதே அதிகாரத்தை மாற்றித் தரும்படி தலைவரை நிர்ப்பந்திக்கிறார்கள்!’’ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

இந்த நெருக்கடிகளுக்கிடையேதான் கடந்த 14_ம் தேதியன்று காலை, மகாபலிபுரம் புறப்பட்டுப் போனார் கலைஞர். அன்று இரவுவரை அங்கிருந்த கலைஞருடன் ஆற்காட்டார், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரும் உடனிருந்திருக்கிறார்கள்.

அங்கேதான், தனது உணர்வை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார் கலைஞர். ‘நான் பதவி விலகும் எண்ணத்தில் இல்லை. ஏன்யா... நான் பதவியில் இல்லைன்னா என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வருவியா நீ?’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேட்டாராம் கலைஞர். ஆனாலும் ஸ்டாலினுக்கு ஓர் அங்கீகாரம் தரும் வகையில் அவரை துணை முதல்வர் பதவியில் அமர வைக்கும் முடிவுக்கும் வந்திருக்கிறார் கலைஞர்.

ஸ்டாலின் துணை முதல்வரானால், பேராசிரியர், வெறும் அமைச்சராக இருப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால்தான், ‘அன்பழகனை துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க ஆவன செய்ய வேண்டும். குறைந்தபட்சம் கவர்னர் பதவியிலாவது அவரை அமர்த்த வேண்டும்’ என்று கேட்டு பிரதமருக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதி அதை ஆற்காட்டார் மூலமாகக் கொடுத்தனுப்பினாராம் கலைஞர். தனது பிறந்த நாளன்று ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கும் வகையில் கலைஞர் அறிவிப்புகளை வெளியிடலாம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

ஆனால், துணை ஜனாதிபதி, கவர்னர் என்ற இரண்டு யோசனையையும் நிராகரித்துவிட்டாராம் அன்பழகன். வேண்டுமானால் தர்மசங்கடத்தைத் தவிர்க்க, அமைச்சரவையிலிருந்து விலகவும்கூட அவர் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் கலைஞர் தரப்பில் தொடர்ந்து பேராசிரியரை வற்புறுத்தி வருகிறார்கள்.

இதன் பிறகுதான் ‘கழகம் எனும் காதலியைத் தேடி ஓடுகிறேன். காலமெல்லாம் காத்திருந்து கைபிடித்துவிட்டு, நள்ளிரவில் அவளைக் (கட்சியை) கைவிட்டுச் செல்வதற்கு நான் என்ன நளனா? அவள்தான் என்னை நம்பி ஏமாந்த தமயந்தியா?’ என்று கேட்டு கவிதை எழுதியிருக்கிறார் கலைஞர். கவிதைக்காக ‘காதலி’ என்ற போர்வையில் கட்சியைக் குறிப்பிடும் கலைஞர், மறைமுகமாகச் சொல்ல வந்தது, ஆட்சியைத்தான். ‘எந்தச் சூழ்நிலையிலும் நான் ஆட்சியைவிட்டு இறங்கமாட்டேன்’ என்று இதன் மூலம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் கலைஞர்!’’ என்கிறார்கள்.

ஸ்டாலின் துணை முதல்வரானதும் பெங்களூர், கோவா போன்ற இடங்களில் அவ்வப்போது நீண்ட ஓய்வெடுக்கும் திட்டமும் கலைஞரிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.. இதன் மூலம் கட்சியும் ஆட்சியும் தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் இருப்பதுடன் ஸ்டாலினும் பொறுப்பு முதல்வர் பதவியில் இருந்து சில விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும் என்று நினைக்கிறாராம் கலைஞர். ‘இதுதான் தி.மு.க.வின் இன்றைய நிலையும், கலைஞரின் மனநிலையும்’ என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

குமுதத்திலிருந்து.

ஞாயிறு, மே 20, 2007

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா.

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா. குறுக்கே வந்த தெய்வம் எங்கள குந்த வைத்து பாத்ததம்மா.
படத்தை பெரிதாக பார்க படத்தின் மீது அழுத்தவும்.


புதன், மே 16, 2007

தினகரனின் தீர்க்கதரிசனங்கள்!!!




- தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் "உண்மை"(மே 1-15) இதழில் வெளிவந்த கட்டுரை -

மதத்தை மூலதனமாக வைத்து வணிகம் செய்யும் மதவாதிகள் இப்போதெல்லாம் காலத்திற்குத் தக்கவாறு மாறிக் கொள்கிறார்-கள். கருத்தால் மாற்றிக் கொள்ளவில்லை. கரன்சிக்காக மாறிக் கொள்கிறார்கள். இந்து மதத்தைத் தக்க வைத்துக்கொள்ள தியானம், யோகம், வாழும் கலை என்று புதிய பெயர்களுடன் கும்பலைத் திரட்டுகிறார்கள். கிறித்துவப் பிரச்சாரகர்களோ இன்னும் புதிய வழியைத் தேடுகிறார்கள்.



ஒரு மாதத்திற்கு முன் 10ஆம், 12ஆம் வகுப்பு தேர்வு சமயம் தேர்வில் வெற்றி பெற பிரார்த்தனை என்று ஒரு கூட்டத்தைத் திரட்டினார் திருவாளர் பால் தினகரன். இவர் நீண்ட நாட்களாக இயேசுவை அழைத்துக் கொண்டிருக்கும் தினகரனின் மகன். தொலைக்காட்சிகளில் பார்க்கலாம், தனது மனைவி, குழந்தைகளோடு ஆடல் பாடல் மூலம் பிரார்த்தனை செய்வார். எல்லா வயதினரையும் ஈர்க்க இப்படி பகுத்தறிவோடு (?) புறப்பட்டு விடுகிறார்கள். மக்களும் தங்களது மூளைக்கு வேலை கொடுக்காமல் முண்டியடித்துக் கொண்டு வரிசை கட்டுகிறார்கள்



இந்த பால் தினகரனும் இவரது தந்தை தினகரனும் பிரார்த்தனை செய்யும் படத்துடன் வெளியாகியுள்ள இயேசு அழைக்கிறார் என்ற நூலின் நகலை நமக்கு வாசகர் திருநெல்வேலி ப.குமார் அனுப்பி வைத்துள்ளார். அந்தப் படங்களைப் பாருங்கள். அட்டையில் சிங்கள அரசின் அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் இந்த சகோதரர்கள் கைகுலுக்குகிறார்கள். இலங்கைக்காகப் பிரார்த்தனை என தலைப்பு. இதழ் 2006 ஜூன் என நாளிடப்பட்டுள்ளது.


உள்பக்கத்தில் “ஏப்ரல் 2 மற்றும் 7, 8, 9 தேதிகளில் (அதாவது 2006 ஏப்ரல்) சிறப்புக் கூட்டங்கள் மூலம் ஆண்டவர் தமது அன்பை வெளிப்படுத்தினார்” எனவும் “அரசு விருந்தினராக டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன், டாக்டர் பால் தினகரன் குடும்பத்தினர் வரவேற்கப்பட்டனர்” எனவும் செய்தி தரப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இலங்கை தேசியக் கொடியை பற்றியபடியே இலங்கையின் சமாதானத்திற்காக பிரார்த்தனை செய்தார்களாம். சர்வ மத குருக்களும் வருகை தந்தார்களாம். அடுத்த பக்கத்தில் தான் காமெடியே ஆரம்பம் படியுங்கள்.

டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் அவர்களின் மூலம் வெளிப்பட்ட தீர்க்கதரிசனம்:


1. இலங்கை தேசத்தின் மீது ஆண்டவர் கிருபை உள்ளவராக மாறுவார். இனி இந்த தேசத்தின் மீது வரப்போவது கோபமல்ல, கிருபையும் ஆசீர்வாதமும்! (உபா 32:43)
2. இனி வரப்போவது அழிவு மழையல்ல, புயல் மழையல்ல, செழிக்கச் செய்யும் மழை (எசே 34:26)!
3. எல்லா தேயிலைத் தோட்டங்களும் செழிக்கும்.
4. இதனால் ஏற்றுமதி ஏராளமாக பெருகும், வருமானம் அதிகரிக்கும்.
5. இலங்கை அரசு பல தேசங்களுடன் தொழில் ஒப்பந்தம் செய்துகொள்ளும். இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து பணிபுரியும், வேலை வாய்ப்புகள் பெருகும், வேலையில்லாத் திண்டாட்டம் குறையும்.
6. நாட்டின் பெரும் பகுதி வருமானம் பாதுகாப்புக்காக செலவு செய்யப்படுகிறது. இந்த செலவை தேவன் குறைப்பார், அதை நாட்டு மக்களின் நலனுக்காக செலவு செய்வார்கள்.


இதையெல்லாம்ஆண்டவர் அருளியதாக அள்ளிவிட்டுள்ளார் தினகரன். இந்த திருவாய் மலர்ந்ததெல்லாம் ஓராண்டுக்கு முன்பு. அதாவது கடந்த 2006 ஏப்ரல் 2 மற்றும் 7, 8, 9-களில்.


இந்த ஓராண்டில் என்னென்ன நடந்து விட்டது ஈழ மண்ணில். எத்தனை தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளார்கள். செஞ்சோலையில் பிஞ்சுகள் மீது சிங்கள ராணுவம் குண்டு வீசிக் கொன்றதே. குடியிருப்பு-களில் குண்டு மழை பொழிந்தார்களே. சிங்கள ராணுவம் தமிழக மீனவர்கள் மீதே தாக்குதல் தொடுத்துக் கொன்றதே.


டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் மூலம் வெளியிடப்பட்ட தீர்க்கதரிசனத்தில் இந்த உண்மைகளெல்லாம் வெளிப்படவில்லையே! ஏன்?


தமிழர்களைக் கொன்று குவிக்கும் ரத்தக் கறை படிந்த சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சேயின் கையைக் குலுக்கும் தினகரனுக்கு தன் தமிழினத்தை விட தன் மதமே பெரிதாய்ப் போய்விட்டது என்பதுதானே மெய்.

இந்த 2007ஆம் ஆண்டில் இலங்கை நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புச் செலவுகளுக்கு அதிக நிதியை மகிந்த ராஜபக்சே அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் தினகரனின் தீர்க்க தரிசனத்தில் பாதுகாப்பு செலவு குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.


கொழும்பில் தனது கடையைத் திறக்க வேண்டும் என்பதற்காக டி.ஜி.எஸ். தினகரன் வார்த்தைகளை வாரி இறைத்து விட்டு வந்துள்ளார்.


சிங்களப் பேரினவாத அரசு மக்கள் மீது குறி வைத்து பல ஆண்டுகளாக தாக்கி வருகிறது. அதன் இலக்குகளுக்கு இந்துக் கோயில்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவ தேவாலயங்களும் தப்பியதில்லை. ஜோசப் பராஜசிங்கம், என்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தேவாலயத்திலேயே கொல்லப்பட்டார். இந்தச் செய்தியெல்லாம் அற்புதச் செய்தி சொல்லும் தினகரனுக்குத் தெரியாதா? இந்தக் கொடுமைகளையெல்லாம் கண்டுகொள்ள அந்த இயேசுவும் வரவில்லை.


கடவுள், மத மோசடிப் பித்தலாட்டங்களுக்கு இது ஒரு உதாரணம்தான். இந்த இயேசு அழைக்கிறார், புத்தகத்தைப் போலவே, பிற மத நூல்களையும் ஓராண்டு கழித்து எடுத்துப் பாருங்கள். இதேபோல நல்ல ஜோக்குகளாகத்தான் இருக்கும். அந்தந்த சீசனுக்கு சரக்கு விற்கும் தந்திரம்தான் இந்த ஆன்மிக ஆசீர்வாதங்கள்.

அன்பை போதித்த புத்தரின் உருவச் சிலைகளை ஆராதித்துக் கொண்டு உயிர்களைக் கொன்று குவிக்கிறது சிங்களப் பேரின வாதம். அந்த அரசோடு இயேசுவை அழைக்கும் தினகரனும் கைகுலுக்குகிறார். மதம் மதவாதிகளுக்குப் பயன்பட்டிருக்கிறதேயொழிய மக்களுக்குப் பயன்பட்டதுண்டா?
நன்றி>உண்மை

செவ்வாய், மே 15, 2007

கலைஞர் கருனாநிதி விடுத்த எச்சரிக்கை!!!

சென்னை: ""இந்திய ஒருமைப்பாட்டை கெடுக்கக் கூடாது என்பதற்காக அமைதியாக உள்ளோம்,'' என்று முதல்வர் கருணாநிதி கடுமையாக எச்சரித்தார்.

காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு விவகாரங்கள் தொடர்பாக சட்டசபையில் உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்னைக்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: "மூக்குள்ள வரை சளி இருந்து தான் தீரும்' என கிராமத்தில் சொல்வது போல தமிழகத்துக்கு தண்ணீர் பிரச்னை உள்ளது. நம்மைச் சுற்றி உள்ள மாநிலங்கள் உயரத்தில் இருப்பதால் தாழ்வான பகுதியில் உள்ள நம்மை எந்த அளவு கொடுமைப்படுத்த முடியுமோ அந்த அளவு கொடுமைப்படுத்தி வருகின்றன. எத்தனையோ முறை பேச்சுவார்த்தை நடத்தி அலுத்துவிட்டது. 1968ம் ஆண்டு காவிரி பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் துவங்கிய நான் இன்னும் நடத்திக் கொண்டிருக்கிறேன். இறுதித் தீர்ப்பு வெளியாகியும் அது இறுதியான தீர்ப்பா என்ற பிரச்னை தற்போது உள்ளது.

நாட்டுப் பிரிவினை கேட்ட நாங்கள் அதை துõக்கி எறிந்து விட்டு இந்திய ஒருமைப்பாட்டை நிலைநாட்ட பாடுபடுகிறோம். அந்த நம்பிக்கை வெற்றி பெற மற்ற மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும். இப்பிரச்னைகள் குறித்து டில்லியில் பேசிய போது, நதிகளை இணைப்பதன் மூலம் தான் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளை தீர்க்க முடியும் என்றேன். தற்போது கூட பொன்விழா கூட்டத்தில் நதிகள் இணைப்பு குறித்து கோரிக்கை வைத்தேன். அப்போது பிரதமர் டில்லி வரும் போது இதுபற்றி பேசலாம் என்றார். இம்மாதம் அதற்காக டில்லி செல்வேன். தேசிய நதிகளை கூட முதலில் இணைக்க வேண்டாம். ஆங்காங்கு உள்ள நதிகளை, குறிப்பாக நமது தீபகற்பத்தில் உள்ள நதிகளை இணைத்தாலே தாகம் தீர்ந்துவிடும், நமது தண்ணீர் தேவையும் தீரும். தேவகவுடா பிரதமராக இருந்த போதே காவிரி பிரச்னை தீர்ந்திருக்க வேண்டும். இதற்காக டில்லி சென்றிருந்த போது, தேவகவுடாவுடன் பேசினேன். அங்குள்ள கர்நாடகா பவனில் கர்நாடகா முதல்வர் பாட்டீலுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக தொடர்ந்தது. கடைசியில் கையெழுத்து போடும் கட்டத்தில் பிரதமர் தேவகவுடா அழைப்பதாக தகவல் வந்தது. தேவகவுடா கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் திடுக்கிட்டுப் போனோம்.

தேவகவுடாவை சென்று சந்தித்த போது, தனக்கு புது யோசனை வந்திருப்பதாகவும், அனைவரும் சுகம் பெற பிரமாண்டமான திட்டம் மேகதுõது திட்டம் என்றார். ஒகேனக்கல் பகுதியில் மேகதுõது திட்டம் அமைத்தால் அங்கு மழை நீரை தேக்கினாலே தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொன்னார். இதன்மூலம் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதை ஒத்திவைத்தார். பின்னர் பலமுறை பேசியாகி விட்டது. பாலாறு பிரச்னையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. முல்லை பெரியாறு பிரச்னை கேரளாவின் போக்கை பொறுத்து உள்ளது. இனி ஒவ்வொரு மாநிலத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி பயன் இருப்பதாக தெரியவில்லை. இதை உணர்ந்து மத்திய அரசு திரும்பி பார்க்கும் என்றும் தெரியவில்லை. எங்காவது தகராறு நடந்தால் தான் திரும்பிப் பார்ப்பார்கள். இந்திய ஒருமைப்பாட்டை கெடுக்கக் கூடாது என்பதற்காக அமைதியாக உள்ளோம். அப்படி திரும்பி பார்க்க வைக்க முடியும். ஆனால், நமது நல்லெண்ணத்தை அனைத்து மாநிலங்களும் உணர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக தியாகம் செய்ய முன்வர வேண்டும். நாம் தண்ணீர் தான் கேட்கிறோம். நம்மிடம் நிலவளம் இல்லை. நீர்வளம் இல்லை. மன வளம் தான் உள்ளது. நீர்வளம் இல்லாத மாநிலத்துக்கு மற்ற மாநிலங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்விஷயத்தில் மத்திய அரசு சிந்தித்து நல்ல முடிவை காண வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

எம்.எல்.ஏ.,க்களுக்கு ரூ.5 ஆயிரம் வாகனப்படி: எம்.எல்.ஏ.,க்களுக்கு வாகனப் படியாக மாதம் ரூ.ஐந்தாயிரம் வழங்கப்படுமென முதல்வர் அறிவித்தார். இது தொடர்பாக முதல்வர் கருணாநிதி கூறும்போது, ""நமது எம்.எல்.ஏ.,க்களுக்கு நிதியமைச்சர் அதிகமாகவே சலுகைகளை கொடுத்துவிட்டார். இருந்தாலும் இன்னும் ஆர்வமாக உள்ளனர். அன்புத் தொல்லை கொடுக்கின்றனர். எனவே, பொன்விழாவை முன்னிட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் வாகனப் படியாக மாதம் ரூ.ஐந்தாயிரம் வழங்கப்படும்,'' என்றார்.
நன்றி>தினமலர்

வியாழன், மே 10, 2007

புதன், மே 09, 2007

புவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்: ஐ.நா. எச்சரிக்கை!!!


புதுடில்லி: புவி வெப்பமயமாகுதலை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் தடுத்து நிறுத்த வேண்டும். எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை வெளிப்படுத்தும், பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள் பயன்பாட்டில் இருந்து அனைத்து நாடுகளும் மாறியாக வேண்டும் என்று ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது.

பூமி உறைந்து போகாமல் இருக்க, ஓரளவுக்கு வெப்பம் தேவை. இந்த வெப்பத்தை கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் ஏற்படுத்துகின்றன. இவை பூமியின் மேற்பரப்பில் இயற்கையாக உருவாகும் தன்மை கொண்டவை. இவை போதிய அளவு வெப்பத்தை உருவாக்கி, பாதுகாப்பு கவசம் போல, பூமி உறைந்து போகாமல் பாதுகாக்கின்றன. ஆனால், நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற, பூமியிலிருந்து எடுக்கப்படும் படிம எரிபொருள்களை பயன்படுத்துவதால், கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களின் அளவு அதிகரித்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பூமியை மிகவும் வெப்பமாக்கின்றன. இயற்கைக்கு எதிராக நடக்கும் இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெயில் இருந்து கிடைக்கும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் பயன்பாடு உலகளவில் மிகவும் உச்சத்தில் இருக்கிறது. இதனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புவி வெப்பமடைந்து வருகிறது; பனி மலைகள் வேகமாக உருகுகின்றன; கடல் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. வெப்பம் அதிகரிப்பதால் வறட்சியும் மிரட்டுகிறது.

இயற்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் பல நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும். இதை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 24 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் அமைவதற்கு முன்பு, பூமி வெப்பம் கட்டுக்குள் இருந்தது. பூமி தாங்கக் கூடிய அளவிலிருந்து 2 முதல் 2.4 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பம் அதிகரித்தால் ஆபத்து இல்லை. அதற்கு மேல் அதிகரித்தால் ஆபத்து தான்.அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் வாயுக்களைக் கட்டுப்படுத்த, பூமியிலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மாற்று எரிபொருளைப் பயன்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும்.

நீர் மின் நிலையங்கள், அணுசக்தி, சூரிய சக்தி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும். குறைந்த எரிபொருளில் ஓடும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனித்தனியாக வாகனங்களில் செல்வதை தவிர்த்து ரயில்கள் மற்றும் பஸ்கள் போன்ற வாகனங்களில் செல்ல வேண்டும். பயிர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். பசுமையை அதிகரித்து, காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும். நெல் விளைச்சலில் புதிய யுக்திகளை பயன்படுத்த வேண்டும். கால்நடைகள் வளர்ப்பு மற்றும் எருவை பயன்படுத்தும் முறையை மேம்படுத்த வேண்டும். இதனால் மீத்தேன் வாயு வெளிப்படுவது குறையும். சிறந்த மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை சரியான முறையில் பொருத்த வேண்டும். குளிர்படுத்தவும், வெப்பப்படுத்தவும் சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு பல விஷயங்களை ஐ.நா., வலியுறுத்தியுள்ளது. இவற்றை பின்பற்றுவதாக இந்தியா, சீனா உள்ளிட்ட நுõற்றுக்கணக்கான நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. தங்களின் வாழ்க்கை முறையையும், பொருட்கள் பயன்பாட்டில் மாறுதலையும் ஏற்படுத்தி கொள்வதாக வளர்ந்த நாடுகள் தெரிவித்துள்ளன. உலக மக்கள் தொகையில், 20 சதவீதம் பேரே வளர்ந்த நாடுகளில் உள்ளனர். ஆனால், உலகளவில் 50 சதவீத அளவுக்கு, சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் வாயுக்களை அந்த நாடுகள் தான் வெளிப்படுத்துகின்றன. அந்த நாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால் தான் புவி வெப்பமடைவதை தடுக்க முடியும். அதே போல் இந்தியாவிலும் இந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நன்றி>தினமலர்.

வியாழன், மே 03, 2007

பிரதமர் பதவிக்கு ஏங்கும் ஜெயலலிதா; மூன்றாவது அணிக்கனவு நனவாகுமா?

தமிழக முதல்வர் கதிரையில் அனாயாசமாக உட்கார்ந்த ஜெயலலிதா, அத்துடன் திருப்தி அடையத் தயாரில்லை. நெடுகாலமாகவே அவர் மனதிலுள்ள கனவு நாட்டின் பிரதமராவது என்பதாகும்.

அவரது முக்கிய குணாம்சங்களில் ஒன்றான பழி தீர்க்கும் பழக்கத்துடன் தொடர்புடையதே அவரது பிரதமர் கனவும். அதாவது மாநில மட்டத்தில் தன்னை சிறை அனுப்பிய கருணாநிதியை பழி தீர்க்க நள்ளிரவில் அவரை கைது செய்து நடுத்தெருவில் இழுத்துச் சென்றார். அவ்வாறே தேசிய அளவில் தன்னை எடுத்தெறியும் பி.ஜே.பி. யையும் காங்கிரஸையும் பழி தீர்க்க இந்த இரு தரப்பையும் சாராத மூன்றாவது அணியை உருவாக்கி அதன் மூலம் பிரதமராக நெடுநாட்களாக கனவு காண்கிறார்.

தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் நிரந்தர பகையாளிகள், அவர்களால் ஒரு காலத்திலும் இணைய முடியாது என நம்பினார் ஜெயலலிதா. குறிப்பாக ராஜீவ் கொலையில் தி.மு.க. குற்றவாளி என முன்பு கருதப்பட்டதால் சோனியா காந்தியின் காங்கிரஸுடன் தி.மு.க. கை கோர்ப்பது கடினமென கருதப்பட்டது. ஆனால், கடந்த லோக்சபா தேர்தலில் ஜெயலலிதாவின் இந்த எண்ணத்தில் மண் விழுந்தது.

காங்கிரஸுக்கு அ.தி.மு.க. வைவிட்டால் வேறுகதி கிடையாது என இறுமாந்திருந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு தி.மு.க.- காங்கிரஸ் நட்பு பெரும் இழப்பாயிற்று. லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தலில் அடுத்தடுத்து தி.மு.க.- காங்கிரஸ் அணி வெற்றிக் கொடி நாட்டியது. ராஜீவ் கொலையாளிகளுடன் சோனியா சேர்வதாக ஜெயலலிதா வசை பாடியதும் எடுபடவில்லை. தனிப்பட்ட விதமாக சோனியா மீது தாக்கிய ஜெயலலிதாவை சோனியா காந்தி மறந்துவிடவில்லை. காங்கிரஸை கவர ஜெயலலிதா விடுத்த சமிக்ஞைகள் காங்கிரஸ் தலைமையினால் உதாசீனப்படுத்தப்பட்டன.

சமீபத்தில் பாராளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தியை ஜெயலலிதா அழைத்தும் அவர் வரவில்லை. பழைய கோபதாபம் சோனியாவால் மறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்திருக்கும் ஜெயலலிதா என்ன விலை கொடுத்தாவது காங்கிரஸ் ஆட்சியை அகற்றியே தீருவேன் என சபதமிட்டுள்ளார். ஆனால், இதற்காக பி.ஜே.பி. யுடன் இணைய அவர் தயாரில்லை. காஞ்சி சங்கராச்சாரியாரை ஜெயலலிதா கைது செய்தபோது பி.ஜே.பி. காட்டிய எதிர்ப்புத்தான் அதற்கு காரணம். அது தவிர, பல்வேறு சந்தர்ப்பங்களில் வாஜ்பாய் கருணாநிதியை மதித்த அளவு ஜெயலலிதாவை மதிக்கவில்லை. பி.ஜே.பி. யுடன் சேராமல் தேசிய அரசியலில் ஒரு சக்தியாக பரிணமிக்க முடியும் என்பது ஜெயலலிதாவின் நம்பிக்கை. அதற்காக அவர் தீட்டும் திட்டமே மூன்றாவது அணி.

ஆந்திர முன்னாள் முதல்வர் நாயுடு, ஹரியானா முன்னாள் முதல்வர் சௌத்தாலா, அஸாமில் ஏ.ஜி.பி. என்ற பிராந்திய கட்சி, உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் முலாயம் சிங் ஆகிய சக்திகளை ஒன்றிணைக்க ஜெயலலிதா முயல்வதாகத் தெரிகிறது.

கலைஞர் கருணாநிதி திராவிட இயக்கத்தின் கால்கோள்களில் ஒருவராவார். எனவே, தமிழுக்கு முதன்மை ஸ்தானத்தை வெல்வதில் முனைப்பு காட்டுவது இயற்கை. இந்த ஆட்சியில் தான் தி.மு.க. வின் அழுத்தத்தால் மத்திய அரசு தமிழை செம்மொழியாக அறிவித்தது. திராவிட இயக்கமே இந்தி எதிர்ப்பில் வளர்ந்த ஒன்று. அப்படிப்பட்ட திராவிட பாரம்பரிய கட்சியான அ.தி.மு.க. தலைவர் சமீபத்தில் உத்தரப் பிரதேச தேர்தல் மேடைகளில் சாட்சாத் அதே ஹிந்தியில் உரையாற்றியது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. ஜெயலலிதா ஆங்கிலத்தில் அற்புதமாக உரையாற்றக் கூடிய `கொன்வென்ட்' படிப்பாளி என்பது தெரிந்த விடயம். ஆங்கிலத்தையும் தாண்டி ஹிந்தியில் பேச இறங்குகின்றார் என்பது புது விடயம்.

இங்கு ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டும். கலைஞர் திராவிட பாரம்பரியத்தை போற்றி தமிழுடனும் தமிழ்நாட்டுடனும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள ஜெயலலிதா இந்திய தேசியம் என்ற போர்வைக்குள் தன்னைப் புகுத்தும் முயற்சியில் விடாது தொடர்ந்து வருகிறார். கலைஞரும் தேசிய அரசியலில் ஈடுபடாதவர் அல்ல, வி.பி. சிங் பிரதமராகுவதற்கு பிள்ளையார் சுழியிட்ட தேசிய முன்னணியின் கலைஞர் வகித்த பாத்திரம் முக்கியமானது. ஆனால், வடநாட்டு தேர்தல் மேடைகளில் அதுவும் ஹிந்தியிலேயே முழங்கித் தீர்க்குமளவுக்கு கலைஞர் துணியவில்லை. காரணம் பிரதமர் பதவி மீது ஒருபோதும் கலைஞர் கண் வைத்தவரல்ல. பிரதமர் பதவி மோகம் மட்டுமன்றி, தன்னை எடுத்தெறிந்தவர்களை பழி தீர்ப்பதும் கூட ஜெயலலிதாவின் சமீப காய் நகர்த்தல்களின் நோக்கமாகும். நடிகையாக வாழ்வை தொடங்கியபோது பல வகையிலும் ஆண்களால் இம்சைப்பட்ட ஜெயலலிதா தான் முதல்வரான பிறகு தனது அமைச்சரவையின் ஆண் அமைச்சர்களை தனது காலில் சாஷ்டாங்கமாக விழ வைத்து திருப்திப்பட்டுக் கொண்டார். அத்தகைய உளவியல் அவருடையது. தேசிய அரசியலில் தன்னை அலட்சியப்படுத்திய வாஜ்பாய்க்கும் சோனியாவுக்கும் ஒரு பாடம் புகட்டுவதே அவர் நோக்கமாகும்.

பெருத்த ஆரவாரத்துடன் இவ்வாறு தொடங்கப்படும் 3 ஆவது அணி சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராத கதையாகவே முடிய வாய்ப்புண்டு. காரணம் எந்த இரு சக்திகளுக்கு மாற்றாக 3 ஆவது அணி அமைக்கப்படுகிறதோ அவ்விரு சக்திகளும் லோக்சபாவில் கணிசமான எம்.பி.க்களை கொண்டிருப்பதே. 542 எம்.பி.க்களில் காங்கிரஸுக்கு 147 பேரும் பி.ஜே.பி. க்கு 130 பேரும் உள்ளனர். ஆக, 3 ஆவது அணிக்கு உச்சபட்சம் 265 எம்.பி.க்களின் ஆதரவு தான் கிடைக்கும். ஆனால், இந்த 265 இல் காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய கட்சிகளான லல்லு பிரசாத் யாதவின் கட்சிக்கு 22 பேரும் தி.மு.க. வுக்கு 17 பேரும் உள்ளனர். இதுதவிர, மூன்றாவது அணியில் மூலைக்குத் தலைக்கல்லாக உள்ள முலாயமின் எதிரியான மாயாவதிக்கு 25 எம்.பி.க்கள் உள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் 63 இடங்களை கொண்டுள்ளன. ஆக, 3 ஆவது அணி மொத்தம் 100 எம்.பி.க்களின் ஆதரவை மட்டுமே திரட்ட முடியும். சமீபத்தில் ஜெயலலிதா உத்தரப் பிரதேசத்தில் உரையாற்றிய கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு விரல் விட்டு எண்ணக் கூடிய எம்.பி.க்களே உள்ளனர். ஆந்திராவில் நாயுடுவுக்கு 5 பேர், ஏ.ஜி.பி. கட்சிக்கு ஒருவர் என இருக்கையில், ஜெயலலிதாவுக்கு லோக்சபாவில் ஒரு எம்.பி. தானும் கிடையாது என்பது தான் வேடிக்கை. இத்தகைய ஜெயலலிதாவால் வெறும் விளம்பரத்தையும் வசீகரிப்பையும் தர முடியுமேயன்றி மாற்று அரசு அமைக்கத் தேவையான எண்ணிக்கை எம்.பி.க்களைத் தரவே முடியாது. முலாயம் சிங் யாதவுக்கு 36 எம்.பி.க்கள் உள்ளனர். அதனால் தான் அவரை சுற்றி கூட்டம் மொய்க்கிறது.

மூன்றாவது அணி தனித்து ஆள முடியாவிட்டாலும் பி.ஜே.பி. ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம். காங்கிரஸை அகற்றுவதற்காக பி.ஜே.பி. யும் 3 ஆவது அணிக்கு ஆதரவளிக்க முன்வரலாம். ஆனால், பி.ஜே.பி. யும் மூன்றாவது அணியும் சேர்ந்தாலும் 272 என்ற பெரும்பான்மையை எட்ட 30- 40 எம்.பி.க்கள் தேவைப்படும். கம்யூனிஸ்ட் கட்சிகளோ தி.மு.க.- லல்லு பிரசாத் கூட்டணியோ காங்கிரஸுக்கு ஆதரவளிக்க முன்வந்தால் தான் காரியம் ஈடேறும். கம்யூனிஸ்ட் கட்சிகள் மதச்சார்பற்ற நேர்மையாளர்கள். அவர்கள் பி.ஜே.பி. ஆதரவைப் பெற்ற ஒரு அரசை ஆதரிக்க முன்வரமாட்டார்கள். லல்லு பிரசாத் பி.ஜே.பி. யின் பரமவைரி. அவரும் பி.ஜே.பி. யுடன் சேர அரசில் இருக்க முடியாது. தி.மு.க. வோ கூட்டாளியான பா.ம.க. வுடனான மோதலால் தமிழகத்தில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் தயவில் தங்கியுள்ளது. எனவே மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசை விட்டு தானாக ஒருபோதும் வெளியேற முடியாதபடி பொறிக்குள் அகப்பட்ட நிலை இருக்கிறது. மொத்தத்தில் 3 ஆவது அணி உண்டாகலாம். ஆனால், அது மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது என்பதே யதார்த்தம். இங்கு 3 ஆவது அணியில் சேர்வதற்கு சரத்பவார் தயார் என்று கருதினாலும் கூட பெரும்பான்மை போதாது. சரத்பவாருக்கு 16 எம்.பி.க்கள் உள்ளனர். சரத்பவார் பிரதமராவதற்கு அவரது பரமவைரியான சிவசேனா தலைவர் பால்தக்கரே கூட ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் 3 ஆவது அணியின் பிரதமர் முலாயம் சிங்கோ அல்லது சரத்பவாராகவோ தான் இருக்க முடியும். ஜெயலலிதா கனவு காண்பது போல் 3 ஆவது அணியின் பிரதமராக வேண்டுமானால் அவர் கையில் கணிசமான எம்.பி.க்கள் இருக்க வேண்டும். இல்லாவிடின் பிரதமர் கதிரை பகற்கனவு தான்.

அரசியல் கணக்கு வழக்கில் காங்கிரஸின் அரசு விழ வாய்ப்பில்லை. என்றாலும், கொள்கையை உதறிவிட்டு கூட்டணி சேர்வது இந்திய தேசத்தில் சர்வசாதாரணம் .

நன்றி>தினக்குரல்

செவ்வாய், மே 01, 2007

கறுப்பான கையாலே என்னைப்புடிச்சா, காதல் அது பூக்குதய்யா.

கறுப்பான கையாலே என்னைப்புடிச்சா, காதல் அது பூக்குதய்யா. பாடலைப்பார்க்க வானொலியை நிறுத்திவிட்டு பார்க்கவும்.

போராட்டம்

பேறுகாலத்தில்
பிள்ளைகளை,பிரசவிக்க
தாய் நடத்துவாள்,
ஈழத்தில்
தாயைப் பிரசவிக்க
பிள்ளைகள் நடத்துகிறார்கள்.
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us