திங்கள், அக்டோபர் 03, 2005

காத்திருப்பு

உனக்காக நான் சந்தியில் காத்திருந்தேன்
நீ வரும் திசையை என்றும் பார்த்திருப்பேன்!
தூரத்தில் உனது உருவம் கண்டால்
என் உடல் குளிர்ந்திருக்கும்!
உன் தரிசனம் கிடைத்துவிட
தன்னந்தனியாக புலம்பி நிற்பேன்!
நீ அருகில் நெருங்க நெருங்க
எனது இதயம் நொருங்கும்படி அடித்திருக்கும்!
உன்னை அருகில் கண்டவுடன்
எனது இரத்தம் உறைந்துவிடும்!
உனது தலை எனது பக்கம் திரும்ப
எனது விழிகள் படபடத்து மூடும்!
உன் முகத்தை முழுவதும் கண்டுவிட்டால்
என் தொண்டைகுழி ஏறி இறங்கும்!
உன்னுடன் பேச நினைக்கையிலே
நா உலர்ந்து பேச மறுக்கும்!
உனது நடை வேகம் குறைய
எனது கைகள் பிசைந்திருக்கும்!
என்னை தாண்டி நீ செல்கையில்
மூக்கையே சுட்டெரிக்கும் பெருமூச்சு வெளிவரும்!
முன்னே சென்று நீ திரும்பிப் பார்த்தால்
எனது நெஞ்சு விம்மித் தவிக்கும்.

லிபரேஷன் ஒப்பிரேஷன்





வீதி எங்கும் சடலம்
எத்தனை போர் எடுப்பு படலம்!
உருண்டு செல்லும் தலைகள்
பிணங்களால் எத்தனை மலைகள்!
தனித்தனியாக எத்தனை கைகால்கள் தெரியும்
இது யார் யாருடையது என்று எங்குபுரியும்!
சிதறிய கண் துடிக்குது
அது யாரை எண்ணி ரத்தம் வடிக்குது!
எங்கும் ஈயக்குண்டின் ரீங்காரம்
எத்தனை உடல்களை துளையிட்டு செல்லும் சிங்காரம்!
திடீர் திடீரென பெரும் இடிகள்
இவைகள் நம்மை நோக்கிவரும் பீரங்கிவெடிகள்!
விமானங்கள் கூட போடுது குண்டு
எம் தலைகளை சரியாகக் கண்டு!
எதற்கு இந்த வெறி ஆட்டம்
பிணங்களின் மணமோ தாங்கவில்லை நாற்றம்!
எமது மண்ணை தனதாக்க
நடக்குது யுத்தம்!
இவர்களுக்கு மண்பறிப்புப் போராட்டம்
எமக்கு மரணப்போராட்டம்.
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us