புதன், ஜூலை 18, 2007

17 வருட பழைய புகைப்படங்கள் போட்டிக்காக.

இப்படி ஒரு புகைபடம் இனி எடுக்கமுடியாது, இதன் சிறப்பு என்னவெனில் ஹீ...ஹீ..இதை நான் எடுத்ததுதான். என்ன பயந்துட்டீங்களா? சும்மா தமாஸு இப்போது சவுக்கு மரங்கள் அகற்றப்பட்டு வேலிபோட்டு இருக்கிறார்கள், இது ஒரு முப்பரிமான உத்தி, பாறைகள் உங்களை நோக்கி வெளியே வருகிறதா, என்ன வரவில்லையா..படத்தை பெரிதாக்கி வாறமாதிரி நினையுங்கள் கட்டாயம் வரும். அப்பவும் வராட்டி உங்க கண்ணு ஞானக்கண் அல்ல பூனைக்கண், என்ன பயந்திட்டீங்களா? சும்மா தமாஸு, மறுபடியும்பார்றா தமாஸு

கடற்கோவில்

இது மைசூர் என நினைக்கிறேன் பழையகாலத்து வேம்பு, வேம்பம் இலைகளினூடாக சூரியனை இறக்கிப்பார்க்கும் முயற்சி.

சூரியக் காசுகள்

இது கோவாவில் சரிந்து நிற்கும் தென்னைகளை நிமிர்த்திப்பார்க்க நினைத்தன் விழைவு, உண்மையில் இவை 45 பாகை சரிந்தே காணப்படுகின்றன. தென்னையையே நிமிர்திப்பார்க்க நினைத்தவன், அது எல்லாம் பழைய கனவுகளய்யா.....

வளைந்தவர்களே எழுந்து நில்லுங்கள்


சத்தியமா இவை எல்லாம் நான் எடுத்துதான் நம்பினால் நம்புகள், நம்பாட்டாலும் நம்பித்தான் ஆகனும்.
ஓல்டு இஸ் கோல்டு எனநினைத்து இவற்றை அனுப்புகிறேன், நீங்களும் பரிசை அனுப்பி விடுங்கள், அதாப்பா கெளரவ பரிசை. என்ன வரட்டா................

சிவராசனை பிடிப்பதில் தாமதம் செய்தாரா கார்த்திகேயன்?

திருவனந்தபுரம்: பெங்களூரில் ஒற்றைக் கண் சிவராஜனும், சுபாவும் பதுங்கியிருந்த வீட்டுக்குள் அதிரடிப்படையினர் திட்டமிட்ட நேரத்தில் நுழைவதை சிறப்பு விசாரணைப் படைத் தலைவர் கார்த்திகேயன் தடுத்து விட்டதால்தான் அவர்களை உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டதாக அந்த அதிரடிப் படையில் இடம் பெற்றிருந்த முன்னாள் ராணுவ மேஜர் ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் விசாரித்தார். தற்போது கார்த்திகேயன் தனக்கு நல்ல பெயர் வாங்குவதற்காக எடுத்த ஒரு நடவடிக்கையால், சிவராசனையும், சுபாவையும் உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டதாக முன்னாள் ராணுவ மேஜர் ரவி என்கிற ரவீந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேஜர் ரவி தற்போது திரைப்பட இயக்குநராக உருவெடுத்துள்ளார். அரண் என்கிற படத்தை இயக்கியவர்தான் இந்த ரவி. தற்போது சிவராசன்-சுபாவை அதிரடிப்படையினர் முற்றுகையிட்ட நேரத்தில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு மிஷன் 90 டேஸ் என்ற படத்தை இவர் இயக்கி வருகிறார்.

கார்த்திகேயன் தலைமையிலான சிறப்பு விசாரணைப் படையில் இடம் பெற்றிருந்த அதிரடிப்படையில் மேஜர் ரவியும் இடம் பெற்றருந்தார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் ரவி கூறுகையில், சிவராசனும், சுபாவும் பதுங்கியிருந்த வீட்டை கமாண்டோ படையினர் முற்றுகையிட்டனர். உள்ளே புகுந்து அவர்களை உயிருடன் பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன.

ஆனால் அந்த சமயத்தில் கார்த்திகேயன் ஹைதராபாத்தில் இருந்தார். தான் வரும் வரை யாரும் உள்ளே நுழைய வேண்டாம் என அவர் உத்தரவிட்டார். இதனால் எங்களால் நடவடிக்கையில் இறங்க முடியவில்லை.

கிட்டத்தட்ட 36 மணி நேரம் நாங்கள் கார்த்திகேயனுக்காக காத்திருக்க நேரிட்டது.

திட்டமிட்டபடி நாங்கள் வீட்டுக்குள் புகுந்திருந்தால் இருவரையும் உயிருடன் பிடித்திருக்க முடியும். ஆனால் தான் நேரடியாக களத்தில் இறங்காமல், மற்றவர்கள் சிவராசன், சுபாவை பிடித்து விட்டால் தனக்கு பெயர் கிடைக்காமல் போய் விடுமே என்ற கார்த்திகேயனின் சுயநலம் காரணமாக இருவரையும் நாங்கள் உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டது.

நாங்கள் வீட்டை முற்றுகையிட்ட சமயம் அங்கு 10 காவல்துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் 3 பேர் டிஐஜி அந்தஸ்து படைத்தவர்கள். இவர்களில் யாரிடமாவது வீட்டுக்குள் நுழையுமாறு கூறி இருவரையும் உயிருடன் பிடிக்க கார்த்திகேயன் உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை.

முக்கிய வேலை காரணமாகவே தான் ஹைதராபாத் சென்றிருந்ததாக தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார் கார்த்திகேயன். சிவராசன், சுபாவை விட அந்த சமயத்தில் வேறு வேலை அவருக்கு முக்கியமாகப் போய் விட்டதா? என்று கேட்டுள்ளார் ரவி.

ரவியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-தற்ஸ் தமிழ்
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us