செவ்வாய், டிசம்பர் 25, 2007

கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்!!!

பாடலை பார்க்க வானொலியை நிறுத்திவிட்டு பார்க்கவும்.

ஒலிவடிவம்:

1. ஈ சினிப்ஸ்
2. ஐஜிக்

பாடல்வரிகள்: தமிழ் - Thusnavis ஆங்கிலம் - கலைஞன்
குரல்: கலைஞன் லாவண்யா அபிஷன்
இசை: டிசான்

புதிய வானமும் புதிய வையமும் புலரும் நேரமிது!
கன்னி மரியிடம் யேசு பாலகன் பிறந்த இரவும் இது!
புதிய வானமும் புதிய வையமும் புலரும் நேரமிது!
கன்னி மரியிடம் யேசு பாலகன் பிறந்த இரவும் இது!
எழுவோம்! நாங்கள் எழுவோம்! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!
மகிழ்வோம்! நாங்கள் மகிழ்வோம்!! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!

jESUS WE LOVE YOU! weLcome to the world!
ஆ... ஆ.... ஆ..... ஆ...

பா வங்கள் சூழ்ந்த உலகம் தூய்மை பெற
தா வீது மரபில் திருமகன் தோன்றினான்!
பா வங்கள் சூழ்ந்த உலகம் தூய்மை பெற
தா வீது மரபில் திருமகன் தோன்றினான்!
மண்ணில் கலந்திடும் மழைத்துளி போல்
எம் மன்னவன் யேசு வருகின்ற நேரம்..
மண்ணில் கலந்திடும் மழைத்துளி போல்
எம் மன்னவன் யேசு வருகின்ற நேரம்..

jESUS WE LOVE YOU! weLcome to the world!
ஆ... ஆ.... ஆ.....

கன்னிமரி பெற்று எடுத்த காவலனே!
கார் இருளை நீக்க வந்த கண்ணாளனே!
கன்னிமரி பெற்று எடுத்த காவலனே!
கார் இருளை நீக்க வந்த கண்ணாளனே!
கண்ணில் இமைகள் இணைந்திருப்பதுபோல்
எம்முடன் பாலகன் இணைகின்ற நேரம்..
கண்ணில் இமைகள் இணைந்திருப்பதுபோல்
எம்முடன் பாலகன் இணைகின்ற நேரம்..

jESUS WE LOVE YOU! weLcome to the world!
ஆ... ஆ.... ஆ.....

இறைவா இறைவா எம்மில் இணைந்திடவா!
இதயம் தன்னில் விரைவில் உறைந்திடவா!
இறைவா இறைவா எம்மில் இணைந்திடவா!
இதயம் தன்னில் விரைவில் உறைந்திடவா!
அன்பு அமைதி உலகில் பொங்கி
ஏற்றத்தாழ்வுகள் மறையும் நேரம்..
அன்பு அமைதி உலகில் பொங்கி
ஏற்றத்தாழ்வுகள் மறையும் நேரம்..

jESUS WE LOVE YOU! weLcome to the world!
ஆ... ஆ.... ஆ.....

எங்கள் சின்ன பாலகனே வா வா! சின்ன
சின்ன இதயங்களை நீ பார் பார்!
எங்கள் சின்ன பாலகனே வா வா! சின்ன
சின்ன இதயங்களை நீ பார் பார்!
உந்தன் வருகையில் துன்பங்கள் மறைந்து
உலகம் அருள் ஒளி பெற்றிடும் நேரம்..
உந்தன் வருகையில் துன்பங்கள் மறைந்து
உலகம் அருள் ஒளி பெற்றிடும் நேரம்..
எழுவோம்! நாங்கள் எழுவோம்! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!
மகிழ்வோம்! நாங்கள் மகிழ்வோம்!! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!
எழுவோம்! நாங்கள் எழுவோம்! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!
மகிழ்வோம்! நாங்கள் மகிழ்வோம்!! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!


jESUS WE LOVE YOU! weLcome to the world!
ஆ... ஆ.... ஆ.....

There is a country Called Sri Lanka
Everyday Tamil people are suffering..
Noway people live in harmony
no money even no food to eat
arresting abducting killing harassing
Discrimination by the Govenment..
Jesus we need your present at this Time
Thisis the only way we could stop crime
There is a country Called Sri Lanka
Everyday Tamil people are suffering..
Noway people live in harmony
no money even no food to eat
arresting abducting killing harassing
Discrimination by the Govenment..
Jesus we need your present at this Time
This is the only way we could stop crime
arresting abducting killing harassing
Discrimination by the Govenment..
Jesus we need your present at this Time
This is the only way we could stop crime
arresting abducting killing harassing
Discrimination by the Govenment..
Jesus we need your present at this Time
This is the only way we could stop crime



அனிதா
Thusnavis
கலைஞன்
லாவண்யா
அபிஷன்
டிசான்
மோகனா
நாகேஸ்வரன்
இமானுவேல் ஒலிப்பதிவு கலையகம்
யூரியூப் இணையம்
யாழ் இணையம்
நன்றி:-யாழ்.காம்.

டேய் இன்னுமாடா திருந்தல நீங்க?


இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன் கல்யாண போஸ்டர்லயும் போன் பேசறிங்க,
காதுகுத்து போஸ்டர்லயும் போன் பேசறிங்க கட்சி போஸ்டர்லயும் பேசறிங்க.
எதுக்குடா இந்த விளம்பரம்? போன் பேசறமாதிரி இல்லன்னா இந்த போட்டோ
ஒழுங்கா வராதா? இல்ல அம்புட்டு பிசியா இருக்கிங்களா? கருமத்த கண்டுபுடிச்சி
பத்து வருசத்துக்கு மேல ஆகுது. ஆரம்பத்துலதான் அழிச்சாட்டியம் பண்ணிங்க
ஓகே மன்னிச்சிடலாம். இன்னும் ஏன் இந்த மாதிரி படம் விட்டுகிட்டு இருக்கிங்க?

போனவாரம் ஊர்லருந்து ஒரு கல்யாண டிவிடி வந்திருந்தது அதுல வீடியோ
அவங்க பக்கம் திரும்பும்போதெல்லாம் மொபைல எடுத்து சும்மனாச்சுக்கும்
காதுல வச்சு பேசறானுங்க. அட பந்தில கூட ஒருத்தன் பாக்கெட்ட கஸ்டபட்டு
துழாவி எடுத்து காதுல வைக்கிறான்.

போட்டோ எடுக்கறாங்கன்னு தெரிஞ்சா போதும் மொகத்துல அரை கிலோ
கோலமாவ அப்பிகிட்டு வந்து போன்ல பேசற மாதிரி போஸ் கொடுப்பிங்களே!
திருங்கய்யா மக்கா திருந்துங்க!
நன்றி:-தமிழ்நண்பர்கள்

ஞாயிறு, டிசம்பர் 23, 2007

இசையை மட்டும் நிறுத்தாதே

எழுதியவர்: க.வாசுதேவன்

1.

அமெலியா, போர்த்துக்கல் அழகியே,
நீ சற்று அதிகமாகவே குடித்துவிட்டாய்
இன்று இது எம் இறுதி இரவு
சாளரத்தினூடே பார்
இருள் அடர்த்தியாக இருக்கிறது
வானெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக் கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?

நீ விமானம் ஏறிப்புறப்பட்டுவிடுவாய்
நான் அதிவிரைவுத் தொடரூந்தொன்றில்
பயணித்து விடுவேன்.

பயணங்கள் எனும் பகற்கனவுகளிலிருந்து
விழிக்கும் வரையும்
மீளவும் ஒருபோதும் சந்திக்கவே முடியாத
இன்மைக்குள் நாம் காத்திருக்கவேண்டும்

இந்த இறுதியிரவை நிறைப்பதற்குக்
கதையொன்று சொல்
காத்திருப்பை இதமாக்குவதற்கு அந்த இசையின்
சத்தத்தைச் சற்று அதிகமாக்கிவிடு



2.

கடலோடிகளாகவும் கொள்ளையர்களாகவும்
கணவர்களும் மகன்களும் காதலர்களும்
புறப்பட்டுச் சென்றபின்
கண்களிலிருந்து கப்பல்கள் மறையும் கணம் வரையும்
விழிவிளிம்பில் முட்டிநின்ற கண்ணீர்த்துளிகளுடன்
போர்த்துக்கீசப் பெண்கள் கடல் விளிம்பை
விட்டகன்றுவீடு திரும்பினார்கள்.


சமுத்திரங்கள் எங்கும்
போர்த்துகல்கள் மிதந்த காலத்தில்
கணவர்களும் மகன்களும் காதலர்களும்
கடலோடிகளாகவும் கொள்ளைக்காரர்களாகவும்
கொலைகாரர்களாகவும் அலைபாய்ந்த காலத்தில்
போர்த்துககீசப் பெண்கள்
'ஃபதோ' இசை பாடிக்கொண்டிருந்தார்கள்.

காதலும் பாசமும் காமமும்
கரைந்து போகும் சோகம் பிறக்கும்
இசையிலேயே அவர்கள் உயிர்வாழ்ந்தார்கள்.

இதுதான் அவ்விசை.
லிஸ்பொண் நகரத்துக் கோடைகால
நள்ளிரவுகளில் நூற்றாண்டுகளைத்தாண்டி
ஒலித்துக்கொண்டேயிக்கும் 'ஃபதோ'.

மீண்டு வராத கப்பல்களில் புறப்பட்டுச் சென்ற
மீண்டுவராத மனிதர்களை மென்று விழுங்கின சமுத்திரங்கள்.
மீண்டு வராத கணவர்களினதும் காதலர்களினதும்
மகன்களினதும் நினைவுகளை மென்று விழுங்கிது காலம்.

ஒரு ஓலம் மட்டும் எப்போதுமே
எஞ்சியிருந்தது.
ஒரு ஓலம் மட்டும் எப்போதுமே
எஞ்சியிருக்கிறது.
காற்றசையா நடுநிசிகளில்
பட்டமரங்களின் கிளைகளில்
படுத்துறங்கிக்கொண்டிருக்கி
?து
அந்த ஓலம்.

சாளரத்தினூடே பார்
இருள் அடர்த்தியாக இருக்கிறது
வானெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக் கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?


3.

உங்களை விட்டுப் புறப்பட்டுச் சென்றவர்கள்
எங்களிடமும் வந்தார்கள்.
தாயையும் காதலியையும் மனைவியையும்
கதறவிட்டு வந்தவர்கள்
கைகளில் வாளுடனும் கண்களில் வெறியுடனும்
எம்மிடமும் வந்தார்கள்.

கொள்ளையிட வந்தார்கள்.
கொள்ளையிடும் நோக்கில் கொலை செய்ய வந்தார்கள்.
கிறிஸ்துவின் பெயரால் மனிதர்களைக் கீறியெறிந்தார்கள்.
உங்களவர் எம்மிடத்தில் கடந்து சென்ற
பாதையெங்கும் ஓலமொலிக்கச் சென்றார்கள்.

நம்கரைகளை நோக்கி வந்த கப்பல்களில்
பின்னரும் யார் யாரோ வந்தார்கள்
இருந்தவர்கள் போக வந்தவர்கள் அமர்ந்தார்கள்.
வெள்ளை அறிவும் வேரறுக்கும் கொடுமைகளும்
அவர்களுடன் கூடவே வந்தன
அடிமைத்தளைக்குள் நாம் அகப்பட்டுச்
சீர் குலைந்தோம்.

அமர்ந்தவர்கள் போனார்கள்
அவரெமக்கிட்ட அடிமை விலங்கையும்
அகற்றாதே போனார்கள்
அதிகாரம் பெற்ற புதியவர்கள் எஜமானர் ஆனார்கள்

பின்னர் நாம் அலைக்கப்பட்டோம்
பின்னர் நாம் கலைக்கப்பட்டோம
அல்லது தப்பியோடினோம்
எதனிடமிருந்து தப்பியோடியபோதும்
எம்மிடமிருந்து எப்போதும் தப்பியோடமுடியாது
அகப்பட்டுக்கொண்டோம்.

தாயைத் தந்தையை
தன்னவர்களையெலாம் கைவிட்டு
எமைக் கொல்லவும் கொடூரத்துள் தள்ளவும்
எம்தீவின் மனிதர்கள் புத்தரைத் துதித்து
இன்னமும் எம் எல்லைகளுக்குள்
வந்து கொண்டேயுள்ளார்கள்.
அவர்தம் உறவுகளின் ஓலங்களும் ஓயவில்லை.

எம்மவரின் ஓலஒலியுள் தம்மவரின் ஓலங்கள்
அமிழ்வதையும் உணராது
உயிர் கொடுத்தும் உயிர் குடிக்க
அவர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.
ஓலமெங்கும் நிறைகிறது.

ஓலம் மட்டும் எப்போதுமே எஞ்சியிருந்தது.
ஓலம் மட்டும் எப்போதுமே எஞ்சியிருக்கிறது.

சாளரத்தினூடே பார்
இருள் அடர்ந்தியாக இருக்கிறது
வானெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக் கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?

கணவர்களும் மகன்களும் காதலன்களும்
கடலோடிகளாகவும் கொள்ளைக்காரர்களாகவும்
கொலைகாரர்களாகவும் அலைபாய்ந்த காலத்தில்
அழுதிருந்த போர்த்துக்கீசப்பெண்களின்
ஓலத்தை நாமும் கடன் பெற்றுக்கொண்டோம்.

அமெலியா, போர்த்துக்கல் அழகியே,
காலம் சுமந்து வந்த சோகம் வழியும்
ஓலம்கலந்த உன் இசையின் சத்தத்தை
மேலும் அதிகமாக்கு

திருமணமாகிய மறுதினமே
கணவன் கடலோடியபின் கரையில் நின்ற
போர்த்துக்கீசப் பெண்ணின் மனம்போல்
கனதியாய் கிடக்கிறது இந்த இரவு.

சாளரத்தினூடே பார்
இருள் அடர்ந்தியாக இருக்கிறது
வானெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக் கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?


விடியும் வரையும்
அந்த இசையை மட்டும் நிறுத்தாதே.


07.12.2007.

ஃபதோ - Fado : போர்த்துக்கல் நாட்டின் இசைவடிவம்.

அந்த இசையை கேட்பதற்கு..
http://www.portugal-luso.eu/fr/md00002_services/00004_ecouter-du-fado-et-des-varietes.html

நன்றி: அப்பால் தமிழ்

சனி, டிசம்பர் 22, 2007

முரன்பாடு


தமிழகத்தில் தமிழர் ஆட்சி என்றார்கள்
தமிழன் என்றவகையில்
மிடுக்குற்றேன்,

ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசினால்
கலைத்து விடுவோம் என்றனர்
திடுக்குற்றேன்,

ஆளுதல் அன்றோ ஆட்சி!!
ஆளப்படுதல் இங்கே ஆட்சி ஆனதே!!!

24 டிசம்பர், 1987 அதிகாலை.... எம்.ஜி.ஆர். வீட்டில் நடந்தது என்ன?


'எம்.ஜி.ஆர்..!' -இந்த மூன்றெழுத்தில் தமிழகம் தன் மூச்சையே வைத்திருந்த காலம் உண்டு! மறைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அந்தத் தங்க மகனின் நினைவும் புகழும் தமிழகத்தில் துளியும் மங்கவில்லை! அவர் பேரைச் சொன்னால், 'மவராசன்' என்று கையெடுத்து வான் நோக்கிக் கும்பிடும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள்.

பூவாக, பொன்னாக அவரை நெஞ்சில் சுமப்பவர்கள், டிசம்பர் 24-ம் தேதியன்று அவரது 20-வது வருட நினைவு நாளுக்கு அரசாங்கமும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் என்ன மரியாதை செய்யப் போகிறார்கள் என்று காத்திருக்க...

''இத்தனை நாளும் இதயத்தில் பூட்டியிருந்த குமுறல்களை இனியும் உள்ளே

வைத்திருக்க முடியாது!'' என்றபடி நம்முடன் பேச வந்தார் எம்.சி.சுகுமார்.

எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகனான சுகுமார், சிறுவயது தொட்டே எம்.ஜி.ஆருக்குச் செல்லம்.

''கடைசிக் காலத்தில் என் சித்தப்பா நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் அவரை சுதந்திரமாக இயங்கவிடாமல் செய்தார்கள். மாநிலத்துக்கே முதல்வராக, மக்களுக்குத் தெய்வமாக இருந்த அதேசமயம் ராமாவரம் தோட்ட இல்லத்தினுள் அவர் ஒரு அடிமை போல நடத்தப்பட்டார்!'' என்று சொல்லி அதிரவைக்கிறார் எம்.சி.சுகுமார்.

எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களின் தொகுப்பை குறிப்புகளாகச் சேகரித்துக் கொண்டிருக்கும் இவர், விரைவில் அதனை வைத்து ஒரு புத்தகம் எழுதவும் தீர்மானித்திருக்கிறார். அந்தப் புத்தகத்தில் எம்.ஜி.ஆரின் கடைசிக் காலத்தை 'அது அவரின் இருண்ட காலம்' என்றே வர்ணிக்கத் தயாராகிறார்!

சென்னை அண்ணாநகரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் சுகுமாரைச் சந்தித்தோம்-

''1984-ம் ஆண்டு மே மாதம்... 4-ம் தேதி... சித்தப்பா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 'அவர் உடம்புக்கு என்ன?' என்கிற விஷயம், அவருடைய ரத்த சொந்தமான எனக்கோ என் சகோதர - சகோதரிகளுக்கோ ராமாவரம் தோட்டத் திலிருந்து தெரிவிக்கப்படவில்லை. 'அவருக்கு நரம்புத் தளர்ச்சி' என்று மட்டும் மேம்போக்காகச் சொன்னார்கள். அதன்பிறகு, சித்தப்பா நல்லபடியாக இல்லம் திரும்பினார்.

மீண்டும் செப்டம்பர் மாதத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகச் சொன்னார்கள். அம்மாதம் 20-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரையில் அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். பிரபலமான அரசியல் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு மருத்துவ சிகிச்சையளித்த டாக்டர் மணி என்பவர்தான் சித்தப்பாவை பரிசோதித்து விட்டு, அவருக்கு 'சிறுநீரகக் கோளாறு இருப்பதாக' முதலில் சொன்னார்.

செப்டம்பர் முப்பதாம் தேதியன்று அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி... சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்தது. முதல்வர் என்ற முறையில் அந்த அரசு விழாவில் கலந்துகொள்ள சித்தப்பா கிளம்பிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது அடையாளமான அந்தத் துள்ளல் மறைந்து, உடல் சோர்ந்து போயிருந்தார். தன் உடல்நிலை குறித்து எப்போதுமே பலவீனமான இமேஜ் வராதபடி கவனமாக இருக்கும் அவரே, என்னிடம் கவலையோடு பேசினார்.

நான் டாக்டரிடம் பேசினேன். அப்போ 'சித்தப்பாவுக்கு (எம்.ஜி.ஆருக்கு) சிறுநீரகத்தைக் கட்டாயம் மாற்றியாக வேண்டும்' என்று டாக்டர் என்னிடம் சொன்னார். அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த எங்கள் குடும்பம், கடும் பிரார்த்தனையில் ஈடுபட்டது. அடிக்கடி சித்தப்பாவை நாங்கள் அவருடைய வீட்டுக்குப் போய்ப் பார்த்து, உடல்நலம் விசாரித்து வந்தோம். அப்போது எங்களுக்கு அங்கிருந்தவர் களால் ஏற்பட்ட கெடுபிடிகளும், அவமானங்களும் இன்றைக்கு நினைத்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது...'' என்று சொல்லி நிறுத்தியவர்... தன் சகோதரி லீலாவதி சித்தப்பாவுக்கு சிறுநீரகத் தானம் கொடுத்தபோது அனுபவித்த கஷ்டங்களை விவரித்தார்-

''சித்தப்பா உடல்நிலை ரொம்பவே பாதிக்கப்பட்டு, அமெரிக்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கட்டாயம் செய்தாக வேண்டும்' என்று சொன்னார்கள்.

இங்கிருக்கும் மருத்துவர்கள் சிலர் அமெரிக்காவில் இருந்த மருத்துவர்களோடு பேசியதில், 'ரத்த சொந்தம் உள்ள ஒருவரிடமிருந்துதான் சிறுநீரகம் பெற வேண்டும். அப்போதுதான் அவரது உடம்பில் இணைந்து அது செயல்பட ஆரம்பிக்கும்' என்று சொன் னார்கள். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே, நாடே போற்ற வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் சித்தப்பாவுக்கு சிறுநீரகத் தானம் கொடுக்கத் தயாராக நின்றோம். பல்வேறு டெஸ்ட்களின் அடிப் படையில், 'சகோதரி லீலாவதியின் சிறுநீரகம் தான் சித்தப்பாவுக்குப் பொருந்தும்' என முடி வானது.

அதற்காக என் சகோதரி லீலாவதி எந்த நிமிடமும் அமெரிக்காவுக்குக் கிளம்பத் தயா ராக இருந்தார். ஆனால், அவரைப் பலமுறை அலைக்கழித்தே அமெரிக்காவுக்குக் கூட்டிச் சென்றார்கள்.

அங்கு சித்தப்பா அவ்வளவாக நினைவு இல்லாத நிலையில் இருந்தார். அந்தச் சூழ்நிலையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வெற்றிகரமாக அது இயங்கத் தொடங்கியது. சித்தப்பா படிப்படியாக முழு நினைவுக்குத் திரும்பினார். அந்தச் சூழ்நிலையில்கூட 'என் சகோதரிதான் அவருக்கு சிறுநீரகத் தானம் வழங்கினார்' என்பதை சித்தப்பாவிடம் சொல் லாமலேயே மறைத்துவிட்டார்கள்.

என் சகோதரியும் அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பிவிட்டார்.

உடல்நிலை நன்கு தேறி, சித்தப்பாவும் சென்னைக்கு வந்தார். சென்னையில் அவருக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள்கூடி, உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போதுகூட லீலாவதியைக் கிட்டே அனுமதிக்கவில்லை அவர்கள்.

பிற்பாடு, சித்தப்பாவை வாழ்த்தி அண்ணா பத்திரிகையில் 'வார்த்தை சித்தர்' வலம்புரிஜான் ஒரு கவிதை எழுதி இருந்தார். அதில், சகோதரி லீலாவதியின் பெருந்தன்மையையும் புகழ்ந்து குறிப்பிட்டிருந்தார். அதைப் பார்த்துத் திகைத்துப்போன என் சித்தப்பா எம்.ஜி.ஆர், தன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சீனியரான பண்ருட்டி ராமச்சந்திரனை அழைத்து விசாரித்திருக்கிறார். அவரும், 'ஆமாம், லீலாவதிதான் உங்களுக்கு சிறுநீரகம் தந்தார்' என்று சொல்லி, சித்தப்பா அமெரிக்காவில் இருந்தபோது தமிழகத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் விளக்கியிருக்கிறார். உடனே என் சகோதரியை அழைத்து, நெகிழ்ச்சியோடு தன் நன்றியைப் பகிர்ந்துகொண்டார் சித்தப்பா.

''அதற்கு முன்பு சித்தப்பா சென்னை மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு ரத்தம் தேவை என்றார்கள். நான் பதறியடித்துக்கொண்டு ரத்தம் கொடுக்க ஓடினேன். அப்போது என்னை ரத்தம் கொடுக்கும் இடத்துக்கு அழைத்துப்போன சித்தப்பாவின் மருத்துவர், தேவையே இல்லாமல் என்னை அந்த ஐந்து மாடி கட்டடத்துக்கு மேலும் கீழுமாகக் அலைக்கழித்தார். இறுதியில் ரத்தம் கொடுப்பதற்கு முன்பாக ரத்த அழுத்த சோதனை நடத்தி, 'உங்களுக்கு பிரஷர் இருக்கிறது' என்று சொல்லி, என்னைத் திருப்பி அனுப்பினார்கள். அதன்பிறகும் 'எனக்கு ரத்த அழுத்தம் இல்லை' என்று நிரூபித்து, ரத்தம் கொடுத்தேன். ஆனால், 'அந்த ரத்தம் மேட்ச் ஆகவில்லை' என்று சொல்லி, மூன்று தடவைகளுக்கு மேல் திரும்பத் திரும்ப என்னிடம் ரத்தம் வாங்கினார்கள். இதேபோலவே என் குடும்பத்தினரிடமும் ரத்தம் வாங்கினார்கள். அதாவது, 'சித்தப்பாவுக்கு ஆபத்தான காலகட்டத்தில் ரத்தம் கொடுத்தவர்கள் நாங்கள்தான்' என்று தெரியவந்தால், அவர் எங்கள் மீதான பாசத்தை அதிகப்படுத்திவிடக் கூடாது என்ற எண்ணத்திலேயே எங்களை அலைக்கழித்தார்கள் என்பது பிற்பாடுதான் எங்களுக்குத் தெரியவந்தது'' என்று வேதனையோடு நிறுத்திய எம்.சி.சுகுமார்,

''கடைசிக் காலத்தில் தன் தம்பிக்கு நேர்ந்த சோதனைகளை அறிந்த என் அப்பா சக்கரபாணி துடித்த துடிப்பு, இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. 'நான் நெருப்பு வளையத்துக்குள் இருக்கிறேன்...' என்று சித்தப்பா, என் அப்பாவிடம் சொல்லி வருந்தியிருக்கிறார்...'' என்று சொல்லும்போதே கண் கலங்குகிறார்.

''சித்தப்பாவுக்கு என் அப்பாதான் கவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் சுமைதாங்கியாக இருந்திருக்கிறார். என் அப்பாவை ஆலோசித்தே முக்கிய முடிவுகளை எடுத்தார். 'சொத்து விஷயத்திலும் அப்படி நடந்துவிடக் கூடாது' என்று என் சித்தி ஜானகி அம்மாளை வழிநடத்திய சிலர் நினைத்திருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் குடும்பத்தை சித்தப்பாவிடம் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

அப்போலோ மருத்துவமனையில் சித்தப்பா இருந்தபோது, உடல்நலம் விசாரிப்பதற்காக என் அப்பா அங்கே சென்றார். அப்போது அவரைக் கட்டிக்கொண்ட சித்தப்பா, தான் எப்படி ஒரு இக்கட்டான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை வருத்தமான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். 'என்னை சுற்றி நானே ஒரு வளையம் போட்டு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்த வளையத்துக்குள் யார் வரவேண்டும், வரக்கூடாது என்பதையெல்லாம்கூட வரையறுத்து வைத்திருந்தேன். ஆனால், அந்த வளையமே இன்றைக்கு என்னை நெருக்கி இழுக்கிறது' என்று சொல்லி இருக்கிறார்!

அப்படியென்றால், அதற்கு அர்த்தம் என்ன? 'யாரை நம்பி நான் வளையத்துக்குள் வாழ்ந்து வந்தேனோ, அவர்களே என்னை நிம்மதியாக வாழவிடவில்லை' என்பதுதானே'' என்றவர்,

''என் சித்தப்பாவின் மறைவு தினத்தன்று ராமாவரம் தோட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி விதம்விதமான பேச்சுக்கள் இருக்கின்றன. அன்றைக்கு அங்கே நடந்த அந்தக் கொடுமையான விஷயங்களை நாடு இப்போதாவது தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்...'' என்று சொல்லி, பெருமூச்சோடு பேச ஆரம்பித்தார்-

''டிசம்பர் 24, 1987... அதிகாலை... 'சித்தப்பா இறந்துவிட்டார்' என்று எங்களுக்குத் தகவல் வந்தது. குடும்பத்தோடு நாங்களெல்லாம் உடனே புறப் பட்டு ராமாவரம் தோட்டத்துக்கு ஓடினோம். சித்தப்பாவின் படுக்கையறை இருந்த இரண்டாவது தளத்தில் அவருடைய உடல் இருப்பதாகத் தகவல் சொன்னார்கள். இரண்டாவது தளத்துக்குப் போக முயன்றோம். எங்களைத் தடுத்து, கீழ்த்தளத்திலேயே இருக்க வைத்துவிட்டார்கள். இறப்புச் செய்தி கேள்விப்பட்டு திமுதிமுவென கூட்டம் கூடிவிட்டது. கதறல் குரல்கள் ராமாவரம் தோட்டம் முழுவதும் நிரம்பியிருக்க, அதிகாலை மூன்று மணியளவில் அ.தி.மு.க-வின் தற்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா அங்கே வந்துவிட்டார். அடுத்த சிறிது நேரத்தில், தன் நாற்பதாண்டு கால உயிர்நண்பரின் முகத்தை கடைசியாக ஒருதடவை பார்க்கக் கலைஞரும் வந்து சேர்ந்தார். அவர்களையும் சித்தப்பாவின் உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. உடல் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக 'எம்பாம்' வேலைகள் நடப்பதாகச் சொல்லி, யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை!

நிலைமையை ரசாபாசம் ஆக்க வேண்டாம் என்று எண்ணி கலைஞர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால், ஜெயலலிதா விடாப்பிடியாகப் போராடிக் கொண்டிருந்தார். திரைமறைவு வேலை உள்ளே நடக்கிறது என்பதை மட்டும் எங்களாலும் ஜெயலலிதாவாலும் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால், தடுப்புகளையெல்லாம் மீறி இரண்டாவது தளத்துக்குச் செல்ல மாடிப்படி அருகே நின்றுகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அதிகாலை ஆரம்பித்த இந்தப் போராட்டம் பொழுது விடிந்த பிறகும் நடந்துகொண்டே இருக்க, தோட்டத்தின் பின்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வண்டியில் சித்தப்பாவின் உடலை ஏற்றி, அவசரஅவசரமாக ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுசென்று விட்டார்கள்.

தேசம் போற்ற வாழ்ந்த அந்த மாமனிதரின் உடலை ஏதோ 'கடத்தல் சரக்கு' போல அங்கிருந்தவர்கள் கையாண்டதற்கு இதோ இந்த போட் டோவே ஆதாரம் (அந்தப் படம்... அட்டையிலும்...).

ராமாவரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த லிஃப்ட் மூலம், இறந்துபோன சித்தப்பாவின் உடலை ஸ்ட்ரெச்சர் பலகையில் இறுக்க மாகக் கட்டி, நிற்கிற வாட்டில் வைத்து, அடித்துப் பிடித்துக் கீழே இறக்கி விட்டார்கள்! இதற்காக சித்தப்பாவின் உடலை மாடியில் வைத்து- அவரது கால், கைகளைக் கயிற்றால் கட்டி இருக்கிறார்கள். கோடிக்கணக்கான உள்ளங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து, என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் பொன்மனச் செம்மலின் உடலை சித்ரவதை செய்வதுபோல கட்டி, வெளியே அவசரஅவசரமாக எடுத்துச் செல்லவேண்டியதன் அவசியம் என்ன?

இத்தனைக்கும் சித்தப்பாவின் உடல் ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுசெல்லப்படும் வரையில், அவர் உடலைப் பொதுமக்கள் பார்வைக்காக அங்கே வைப்பதற்குரிய எந்த முன்னேற்பாடுகளையுமே செய்யவில்லை! காரணம், அங்கிருந்தவர்களின் கவனமெல்லாம் வேறு ஏதோ விஷயங்களில்தான் இருந்திருக்கிறது!

அதுமட்டுமல்ல, அவரது உடல் ராஜாஜி ஹாலுக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, 24-ம் தேதி முழுவதும் ஜானகியம்மாள், சித்தப்பாவின் உடல் அருகில் போகாமலேயே இருந்தார்.

25-ம் தேதி உடல் அடக்கம் செய்யப் பட்டபோதுதான் அவர், சித்தப்பாவின் உடல் அருகே வந்தார். அதுமட்டுமல்ல, அவசர மாக ராமாவரம் தோட்டத்தில் இருந்து சித்தப்பாவின் உடலை ராஜாஜி ஹாலுக்கு அனுப்பிவைத்த பிறகு, வீட்டில் இருந்த ஜானகி அம்மாள் 'வழக்கறிஞரும் அங்கே போய்விட்டாரா?' என்று திரும்பத்திரும்பக் கேட்டிருக்கிறார். இதை அருகில் இருந்த என் அம்மா மீனாட்சி கவனித்திருக்கிறார். அப்படியென்றால், சித்தப்பா இறந்ததும் வழக்கறிஞரை வைத்து ஜானகி அம்மாளின் ஆலோசகர்களாக இருந்த சிலர் அவசரமாக ஏதோ செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்று தோன்றுகிறதே..! அது என்ன?

சித்தி ஜானகி அம்மாளும் இன்று மறைந்து போய்விட்டார். அவருடைய புகழுக்குக் களங்கம் உண்டாவதுபோல் பேசுவது என் நோக்கமல்ல... அவரை இயக்கியவர்கள் மீதுதான் என் கோபமெல்லாம்!

'சித்தப்பா இறந்துபோவதற்கு முதல்நாள் அவரிடம், ஜானகி அம்மாள் மிகக் கடுமையாக வாக்குவாதம் செய்தார்' என்றும் என்னிடம் தகவல் இருக்கிறது.

சித்தப்பா இறந்தது மாரடைப்பால் என்று சொல்லப்பட்டது. அவருக்கு 69-வது வயது வரையில் இதயநோய் இல்லவே இல்லை. திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகச் சொல்வது எப்படி என்றுதான் எனக்குப் புரியவில்லை!'' என்று சொல்லிச் சற்று நிறுத்தியவர், சிறு யோசனைக்குப் பின், ''கடைசிக் காலகட்டங்களில் சித்தப்பா பல நேரங்கள் சிந்தனை தப்பி இருந்ததாகவும், சில ஏற்பாடுகளுக்கு அவர் ஒத்துழைக்க மறுத்த கோபத்தில் அப்போது அவரை எத்தகைய பாராமுகத்தோடு நடத்தினார்கள் என்பதையும் அவருக்குப் பாதுகாப்பாக இருந்த போலீஸார் சொல்லக் கேட்டுக் கண்ணீர் வடித்திருக்கிறேன்!'' என்று சோகமான

எம்.சி.சுகுமார், மேலும் பகிர்ந்து கொண்டவை...

- அடுத்த இதழில்...

http://www.vikatan.com/

சனி, அக்டோபர் 27, 2007

இசை வடிவில் திருக்குறள்!

அய்யன் வள்ளுவன் தந்த திருக்குறள் தேனாகப்பாய்கிறது, முதலாவதை கேட்கும்போது இரண்டாவதை நிறுத்தி விடவும்.
இசைவடிவில் திருக்குறளைகேட்க வானொலியை நிறுத்திவிட்டு கேட்கவும்.


FREE service provided by MusicWebTown.com


FREE service provided by MusicWebTown.com

புதன், அக்டோபர் 24, 2007

கமல்ஹாசனின் இறுதி எச்சரிக்கை!!!


எனது பெயரைப் பயன்படுத்தி இணையதளம் ஒன்றின் மூலம் நடந்து வரும் வியாபாரத்திற்கு, எனது ரசிகர்கள் ஒத்துழைப்பு தரக் கூடாது என்று கலைஞானி கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தனது பெயரில் இணையதளம் ஒன்றில் நடந்து வரும் வியாபாரத்தை அவர் கண்டித்துள்ளார். அதற்கும் தனக்கும், தனது நற்பணி மன்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் விளக்கியுள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த சில மாதங்களாக http://www.universalherokamal.com/ என்ற தலைப்புடன் இன்டர்நெட் மூலமாகவும், எஸ்.எம்.எஸ்கள் மூலமாகவும், எனது அனுமதி இல்லாமல், கமல்ஹாசன் ரசிகர்கள் என்ற போர்வையுடன் சில வியாபாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுடன், ஆர்குட் டாக்டர் கமல்ஹாசன் கம்யூனிட்டி என்ற அமைப்பும் சேர்ந்திருப்பது தெரியவருகிறது.

எனது ரசிகர்களை கட்டுப்பாட்டுடன் நற்பணிகளில் ஈடுபடுத்திவரும் முயற்சிகளுக்கு இவர்கள் செயல் ரீதியான விரோதிகளாகின்றனர்.

எனது வெளிவரவிருக்கும் படங்களையோ, எனது வெளிவராத, வந்த படங்களையோ விலை பட்டியலிட்டு விற்கும் (எனது படங்கள் அச்சிட்ட டி.சர்ட் உள்பட) உரிமையை நானோ அல்லது எனது தயாரிப்பாளரோ இவர்களுக்கு வழங்கவில்லை.

அரசியல் மற்றும் வியாபாரத்தை நற்பணி இயக்கத்தில் ஊடுருவ விடாமல், இதுவரை காத்து வருகிறேன். இனியும் இக்காவல் தொடரும்.

எனது அனுமதியின்றி செயல்படும் இவர்களுக்கு எந்த ஒத்துழைப்பையும், நமது நற்பணி இயக்கங்களும், எனது உண்மையான ரசிகர்களும் வழங்கத் தேவையில்லை.

இதுவரை இவர்கள் பெங்களூர், புதுச்சேரி போன்ற இடங்களில் என்னுடைய அனுமதியின்றி விற்பனையில் இறங்கிய செயலுக்கு நியாயமான, சட்டப்பூர்வமான நடவடிக்கைளுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தரப்பிடம் விசாரித்தபோது, இப்போதைக்கு இந்த அறிக்கையைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. நவம்பர் 7ம் தேதி தனது பிறந்த நாளின்போது செய்தியாளர்களை கமல் சந்திக்கவுள்ளார். அப்போது இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

- தட்ஸ்தமிழில் இருநு..........

திங்கள், அக்டோபர் 22, 2007

தமிழ் பேசும் ஜேர்மனியர்கள்.

தமிழ் பேசும் ஜேர்மனியர்களை பார்க்க வானொலியை நிறுத்திவிட்டு கேட்கவும்.


சனி, அக்டோபர் 20, 2007

நடிகை ராதிகாவுக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணி கண்டனம்!!!

தமிழ்நாட்டில் சிங்களத் திரைப்பட விழாவை தொடக்கி வைப்பதா?: நடிகை ராதிகாவுக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணி கண்டனம்!!!

தமிழ்நாட்டில் தமிழர்களை நம்பி வாழ்ந்து கொண்டு தமிழ்நாட்டிலேயே சிங்களத் திரைப்பட விழாவை தொடக்கி வைப்பதா? என்று நடிகை ராதிகாவுக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வாரமிருமுறை இதழான நக்கீரனுக்கு (20.10.07) அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:

சிங்களத் திரைப்பட விழாவை ராதிகா தொடக்கி வைத்ததும் அங்கு அவர் பேசிய பேச்சுக்களும் தமிழகத்திற்கும் தமிழ் இனத்துக்கும் செய்கிற துரோகம்.

நடிகை ராதிகாவை வாழ வைத்ததும் வாழ வைத்துக் கொண்டிருப்பதும் தமிழ்நாட்டு தமிழர்களும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும்தான். ஆனால் இப்போது தனது சிங்கள அடையாளத்தைக் காட்ட முயற்சிக்கிறார்.

ஏனெனில், நடிகை ராதிகா பாதி சிங்களப் பெண். கலைச்சேவை என்கிற பெயரில் ஊடுருவி நிற்கும் ராதிகா, உண்மையில் கலைச்சேவை செய்யவில்லை. கலையை வர்த்தகமாக்கிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தனது வர்த்தகத்துக்காக தமிழர்களைச் சுரண்டும் ராதிகா, யாருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்? தமிழர்களுக்கும் தமிழ் இனத்துக்கும் அல்லவா தனது விசுவாசத்தையும் நன்றியையும் அவர் காட்ட வேண்டும். அதைத் தவிர்த்துவிட்டு தன்னை "சிங்களத்தி" என்று அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார் என்றால் அதனை எப்படி நாம் அனுமதிக்க முடியும்

ஈழத்தில் உள்ள செஞ்சோலை சிறார் இல்லத்தின் மீது சிங்கள இராணுவம் கண்மூடித்தனமாக சிங்கள இராணுவம் குண்டு வீசி 61 தமிழ்ச் சிறார்களை படுகொலை செய்தது. அந்த சின்னஞ் சிறார்களின் உடல்கள் பிய்த்தெறியப்பட்டது. அதைக் கண்டு தமிழகம் மட்டுமல்ல உலகமே கண்ணீர் சிந்தியது.

இது ஏதோ 83-85 களில் நடந்த துயரம் அல்ல. சமீபத்தில் நடந்த துயரம். இந்தத் துயரமெல்லாம் உங்கள் நெஞ்சத்தில் உள்ளதா? இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சிங்களத் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதும் சிங்களவர்களுக்காக திரைப்படம் எடுப்பேன் என்பதும் ஜீரணிக்க முடியவில்லை.

கலை என்பது மக்களுக்கானது. அந்த வகையில் நாம் சார்ந்து வாழ்கிற மக்களுக்காகத்தான் அந்தக் கலை பயன்பட வேண்டும் என்ற உணர்வு முதலில் ராதிகாவுக்கு வரவேண்டும் என்றார் பேராசிரியர் சரசுவதி.

புதினத்தில் இருந்து...............

ஞாயிறு, அக்டோபர் 07, 2007

அமெரிக்காவின் வாரு பாருடா.

அமெரிக்காவின் வாரை பார்க்க, வானொலியை நிறுத்திவிட்டு பார்க்கவும்......

சனி, அக்டோபர் 06, 2007

நிலாவில் சாய்பாபா - புட்டபர்த்தியில் பரபரப்பு!!!

நிலாவில் சாய்பாபா தோன்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டதால், புட்டபர்த்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்யசாய்பாபா ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில், சாய்பாபா, நிலாவில் தோன்றி அருளாசி வழங்குவார் என ஆசிரமத்திலிருந்து அறிவிக்கப்பட்டது.

மாலை 6.30 மணிக்கு சாய்பாபா, விஸ்வரூப விராத் தரிசனம் தருவார் என்று அந்த அறிவிப்பு கூறியது. இதையடுத்து பெரும் திரளான பக்தர்கள் அங்கு கூடத் தொடங்கினர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கூடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

புட்டபர்த்தி விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் இவர்கள் கூடி தரிசனத்தைக் காண காத்திருந்தனர். அந்த சமயத்தில் சாய்பாபாவும் அங்கு வந்தார். சாய்பாபா உள்பட அனைவரும் நிலவைப் பார்த்தபடி இருந்தனர். ஆனால் அறிவித்தபடி எந்த தரிசனமும் காணப்படவில்லை. குறிப்பாக நிலவே வரவில்லை.

இதையடுத்து அனைவரும் ஏமாந்து போனார்கள். அவர்களை ஆறுதல்படுத்துவது போல, இன்னொரு நாள் தரிசனம் தருவதாக கூறி விட்டு சாய்பாபா அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
http://thatstamil.oneindia.in/news/2007/10...ar-in-moon.html

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அதிக சக்தியுடன் பூமியை நோக்கிவரும் இராட்சத விண்கல்!!!

*ரஷ்ய வானியல் நிபுணர் அறிவிப்பு
பூமியை தாக்குவதற்காக வந்து கொண்டிருக்கும் இராட்சத விண்கல் ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததென ரஷ்ய வானியல் நிபுணரொருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரஷ்யாவிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிலையம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த இராட்சத விண்கல் 2029 ஆம் ஆண்டளவில் பூமியின் சுற்றுப் பாதையைக் கடக்கும்போது அப்பாதையிலிருந்து விலகி பூமியைத் தாக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கோள் மண்டலத் தொகுதியில் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றிவரும் கிரகங்களைப் போல சிறுசிறு உலோகக் கற்களும் சுற்றிவருகின்றன. இதில் அஸ்டிராயிட்ஸ் எனப்படும் ஏராளமான விண்கற்களில் அபோபிஸ் என்ற இந்த விண்கல்லும் ஒன்று.

அதிகூடிய வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இக்கல் அதே வேகத்திலேயே பூமியைத் தாக்கும் போது இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஏற்படுத்திய தாக்கத்திலும் பார்க்க ஆயிரம் மடங்கு அதிக சக்தி வெளிப்படுத்தப்படும்.

இத்தாக்கம் பூமியில் ஏற்படும்போது பூகம்பம் ஏற்படுவது போன்ற அதிர்வு ஏற்படுவதுடன் பேரழிவினையும் பூமி சந்திக்க நேரிடும்.

இருந்தாலும் அசுர வேகத்தில் பெருவளர்ச்சியினையும் வெற்றிகளையும் கண்டுள்ள விஞ்ஞானத்தின் நவீன தொழில்நுட்பத்தின் புதிய உத்திகளையும் செயற்கைக் கோள்களையும் பயன்படுத்தி இந்த இராட்சத விண்கலம் பாதையைத் திருப்பி பூமியை தாக்கத்திலிருந்து காப்பாற்றலாமென அவ்வூடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/news/2007/10/6/...s_page37806.htm

புதன், அக்டோபர் 03, 2007

முடிந்தால் காப்பாற்றுங்கள்!!!

உங்களால் முடிந்தால் இரட்டை கோபிரங்களை விமானத்தாக்குதலில் இருந்து காப்பாற்றுங்கள்.

காப்பாற்ற இங்கே அழுத்தவும்.
http://www.wahgames.com/play/game/1289/New-York-Defender.html

ஞாயிறு, செப்டம்பர் 30, 2007

பெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு! அமெரிக்காவில் பரபரப்பு!!!


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் புகுந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப் பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாட்ரிசியா ரோஜர் என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்.

அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடைகளை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினர். மேலும், பாட்ரிசியா தொடர்ந்து கடுமையாக வாந்தியும் எடுத்தபடி இருந்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை.

இதைப் பார்த்து குழம்பிய டாக்டர்கள், எக்ஸ் ரே எடுக்க முடிவு செய்தனர். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது டாக்டர்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாட்ரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான்.

உடனடியாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்தனர் டாக்டர்கள். இதையடுத்து பாட்ரிசியாவை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்கினர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடி வெளியே வந்தது.

இதைப் பார்த்த ஒரு நர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். டாக்டர்களும் கூட ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

அந்தப் பாம்பு சிறிதாக இருந்தபோதே பாட்ரிசியாவின் குடலுக்குள் புகுந்துள்ளது. பாட்ரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதுவும் வளர்ந்து வந்துள்ளது.

எப்படி இந்த பாம்பு பாட்ரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்குக் கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாட்ரிசியா, டூர் சென்றிருந்தபோது அங்கு ஆற்று நீரை அள்ளிக் குடித்துள்ளார்.

அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் போயிருக்கலாம். அந்த பாம்புதான் தற்போது வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகப்படுகின்றனர்.

பாட்ரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு 1.83 மீட்டர் நீளம் இருந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பின் உடலில் கருப்புப் பட்டைகள் காணப்பட்டன. வாய் அகலமாக இருந்தது.

ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது.

16ம் நூற்றாண்டில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதைப் பொறுக்க முடியாமல் அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்தார். பின்னர் அவரை சவப் பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டனர். ஆனால் சில நாட்கள் கழித்து அந்த சவப் பெட்டிக்குள்ளிருந்து ஒரு பாம்பு வந்தது.

அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என்பது பின்னர் தெரிய வந்தது.

இதேபோல, 1642ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த காத்தரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து பல்லிகளைக் கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்து பயங்கர சம்பவமாகும்.

இந்த நிலையில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/09/29/docs-found-snake-in-woman-intestine.html

சனி, செப்டம்பர் 29, 2007

தினமும் காப்பி குடித்தால்...

தினமும் காப்பி குடித்தால்... புற்றுநோயும் வராதாம்...! சர்க்கரை நோயும் வராதாம்!


புற்றுநோயைத் தவிர்க்க பழங்களும், காய்கறிகளுமே முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தனர். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதற்கு சமமாக காப்பியை இப்போது சிபாரிசு செய்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது காப்பி குடிக்க வேண்டுமாம்.

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் “ஆண்டி ஆக்சிடென்ட்” காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது. குறிப்பாக ஆப்பிள், தக்காளி போன்றவற்றில் இந்த “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளதால் அதை சாப்பிட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறிவந்தனர். ஆனால் இப்போது காப்பியிலும் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். காய்கறி, பழங்களில் இருப்பதற்கு ஈடாக காப்பியிலும் உள்ளது என்று கூறுகின்றனர்.

அமெரிக்காவில், பென்சில்வேனியா நகரில் உள்ள ஸ்க்ராண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோ வின்சன் இதுபற்றி ஆராய்ந்து சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர். “மற்ற உணவுகளில் உள்ள “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” அளவு போதுமானதாக இருந்தாலும், அவை உடலில் கழிவாக ஓரளவு போய்விடுகிறது. ஆனால் காப்பியில் உள்ள “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” அளவு, உடலில் எந்த சூழ்நிலையிலும் கரையாமல் அப்படி பலன் தருகிறது.” என்று கூறினார்.

“புற்றுநோய்க்கு மட்டுமல்ல, இரண்டாம் வகை சர்க்கரை நோய், பர்கின்சன் நோய் போன்றவை வராமல் தடுக்கவும் காப்பி பயன்படுகிறது. ஒரு நாளைக்கு நாலைந்து முறை முறை காப்பி குடிப்பது நல்லது தான். ஆனால் காப்பி பிடிக்காதவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது காபி குடிப்பது நல்லது. காப்பின் எடுத்த காபியாக இருந்தாலும் சரி, காப்பின் அகற்றாத காப்பியாக இருந்தாலும் சரி, அதில் “ஆண்டி ஆக்சிடென்ட்ஸ்” உள்ளது.” என்றும் பேராசிரியர் வின்சன் கூறினார்.

பிரிட்டிஷ் காபி தயாரிப்பாளர்கள் சங்கம் கூறுகையில், “காபி குடிப்பது என்பது கெடுதல் இல்லை. அப்படி சிலர் தவறான அபிப்ராயம் வைத்துள்ளனர். ஒரு நாளைக்கு நான்கு, ஜந்து முறை காப்பி குடித்தால் கூட நல்லது தான் என்று நிபுணர்களே கூறிவிட்டனர். பழம், காய்கறிகளை உணவில் சரிவர சேர்க்க விரும்பாதவர்கள், குறைந்த பட்சம் காப்பி குடித்தாவது நோய்களை தவிர்க்கலாம்” என்று கூறியுள்ளது.

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

வெள்ளி, செப்டம்பர் 28, 2007

'சன்'னை முந்திய 'கலைஞர்'!

திமுகவின் கலைஞர் டிவி தொடங்கப்பட்ட நாளன்று (செப்டம்பர் 15), அந்த டிவியை அதிகம் பேர் பார்த்துள்ளனர். சன் டிவியையும் தாண்டி கலைஞர் டிவி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

திமுக சார்பில் கடந்த 15ம் தேதி கலைஞர் டிவி தொடங்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கலைஞர் டிவியின் சோதனை ஒளிபரப்பே மக்களிடம் பல்வேறு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் டிவியின் முழுமையான ஒளிபரப்பு தொடங்கியது.

முதல் நாளிலேயே முத்திரை பதித்து விட்டது கலைஞர் டிவி. அன்றைய தினம் சன் டிவியை விட கலைஞர் டிவியையே அதிகம் பேர் பார்த்துள்ளனர். மேலும் ரேட்டிங்கிலும் கலைஞர் டிவிக்கே முதலிடம் கிடைத்துள்ளது.

கலைஞர் டிவிக்கு 10க்கு 9.35 பாயிண்டுகள் கிடைத்துள்ளன. சன் டிவிக்கு 4.64 புள்ளிகளே கிடைத்ததாம். விஜய் டிவி 3வது இடத்தில் உள்ளது. அதற்குக் கிடைத்த ரேட்டிங் 0.75 ஆகும். ராஜ் டிவி (0.62), ஜெயா டிவி (0.54), கே டிவி (0.35) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சன் டிவியில் வரலாற்றில் முதல் முறையாக இன்னொரு தமிழ் சானலிடம் முதலிடத்தை இப்போதுதான் பறி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளிலேயே முத்திரை பதித்துள்ள கலைஞர் டிவி போகப் போக சன் டிவியை மேலும் அதிர வைக்கும் எனத் தெரிகிறது.

-தட்ஸ் தமிழ்

ஞாயிறு, செப்டம்பர் 23, 2007

என்னை எவனும் அழிக்க முடியாது - கருணாநிதி!!!



நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்கள் மூச்சில் இருப்பேன், உங்கள் ரத்தத்தில் கலந்திருப்பேன், உங்களது நெஞ்சத் துடிப்பில் கலந்திருப்பேன். எனவே எவனும், என்னை இல்லாதவானாக்கி விட முடியாது, அழித்து விட முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகையில், வி.எச்.பி.யின் சாமியார் பிரிவைச் சேர்ந்த வேதாந்தி விடுத்துள்ள எச்சரிக்கை குறித்து விரிவாகப் பேசினார்.

அவர் பேசுகையில், நான் பொறுப்பில் இருந்த காரணத்தால் உங்களுக்காக செய்த உதவிகளுக்காக நீங்கள் செலுத்துகின்ற நன்றிதான் இந்த மாநாட்டின் மூலம் அமைந்திருக்கிறது. உங்களில் பலர் என்னை, இந்த அரசை அறிந்தவர்கள். உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றி உங்கள் உள்ளங்களை மகிழ வைத்திருக்கிறேன்.

அந்த ஈரம் காயாத காரணத்தால் தான் இங்கு வந்து அமர்ந்து கரவொலி எழுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கண்களிலே காணும் அந்த ஒளி என்னுடைய கவலைகளையெல்லாம் மறக்கச் செய்கிறது. என்னுடைய துன்பங்களை பறக்க வைக்கிறது. என்னுடைய சோகங்களுக்கு முடிவு எழுதிக் கொண்டிருக்கிறது. உங்களை காணும்போது உற்சாகம் பெறுகிறேன். உங்களை எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது.

இந்த மாநாட்டிற்கு கருணாநிதி ஒருவேளை தலையோடு வருவாரா இல்லை தலை இல்லாமல் வருவாரா என்று சந்தேகத்தோடு அமர்ந்திருப்பீர்கள். தலை என்பது தலைக்கு மேல் உள்ள பகுதி மாத்திரம் கிடையாது. தலை என்பது ஒருவருடைய முகவரி. தலையே போனாலும் கருணாநிதியின் முகவரி தமிழ்நாட்டை விட்டு என்றைக்கும் போகாது. தமிழ் இலக்கியத்தை விட்டுப் போகாது.

இலக்கியத்தில், கலைத்துறையில், அரசியல் துறையில் எனது முகவரி இடம் பெற்றிருக்கிறது. பெரியார், அண்ணா, புரட்சி கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் நாட்குறிப்புகளில் எனது முகவரி இருக்கிறது. ஏன் உங்கள் நாட்குறிப்பிலும் எனது முகவரி இருக்கிறது. ஆகவே என்னுடைய முகம் மறைந்து போய்விடும். தலை காணாமல் போய்விடும் என்றும் நம்ப வேண்டாம்.

தமிழ்நாட்டில் இந்த கருணாநிதி ஆற்றியிருக்கிற தொண்டுகளை, நல்கியிருக்கிற தியாகங்களை, எண்ணிப் பார்த்தால் தலையே போய்விட்டாலும் கூட இந்திய தபால் தலையில் இந்த தலை இடம் பெற்றே தீரும்.

ஆகவே தலையை கொய்து வா... என்று சொல்லுகிற நல்ல நண்பர்களை நான் பாராட்டுகிறேன். எனது நாக்கை அறுத்துக்கொண்டு வந்து விட்டால் அவர்களுக்கு தங்கத்தால் பரிசளிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த தலையும், நாக்கும் எவ்வளவு விலை மதிக்கத்தக்கது பாருங்கள்.

இது சாதாரண நாக்கா? அண்ணாவின் தமிழை பேசிய நாக்கு. புரட்சி கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளை உச்சரித்த நாக்கு. சிலப்பதிகாரத்தை, திருக்குறளை படித்த நாக்கு. எனவேதான், இந்த நாக்குக்கும், தலைக்கும் இவ்வளவு விலை.

அதற்கு தங்கமாகத்தான் கொட்டிக் கொடுப்போம் என்று சொல்லுகிற அளவுக்கு ஒருவர் வடக்கிலே பேசியிருக்கிறார் என்றால் அவரை நான் வாழ்த்துகிறேன். அவர் தரித்திர நாராயணராக இருக்க முடியாது. சீமானாகத்தான் இருக்க வேண்டும். அவரை வாழ்த்துகிறேன். முன்கூட்டியே நன்றியினை தெரிவிக்கின்றேன்.

லட்சியத்திற்காக எத்தனை பேர் தங்களுடைய இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். தியாகம் செய்திருக்கிறார்கள். லட்சியத்திற்காக எத்தனை பேர் தூக்குமேடையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். எத்தனையோ பேர் எரிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மண்ணிலே சாய்ந்த மாவீரர்களுடைய, கணக்கு நமக்கு தெரியாதா. அவர்களுடைய வரலாறு தெரியாதா.

அந்த வரலாற்றையெல்லாம் படித்துத்தான் ஒரு வரலாற்றை உருவாக்குகின்ற இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். எனவே, யாரும் பயப்படத் தேவையில்லை. அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை.

நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களுடன் இருப்பேன். அதை யாரும் மறந்துவிடாதீர்கள். உங்கள் ரத்தத்திலே தான் கலந்து இருப்பேன். உங்கள் நெஞ்ச துடிப்பிலே தான் கலந்திருப்பேன். உங்கள் மூச்சிலேதான் இருப்பேன். என்னை எவனும் இல்லாதவனாக ஆக்கிவிட முடியாது. நான் உங்களுடன் இருக்கிற காரணத்தால் என்னை யாரும் அழித்து விடமுடியாது என்றார் கருணாநிதி.

தற்ஸ் தமிழில் இருந்து..........

சனி, செப்டம்பர் 22, 2007

கருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு!!!

முதல்வர் கருணாநிதியின் தலையை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என பாஜக முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி கூறியுள்ளார்.

அயோத்தியில் அவர் பேசுகையில்,ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.இவர் வேதாந்தி விஎச்பியின் மார்க்தர்ஷக் மண்டல் தலைவராக உள்ளார். 2 முறை பாஜக எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்ஸ் தமிழ்

தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர் நடமாட முடியாத நிலை ஏற்படும்-திமுக கடும் எச்சரிக்கை!!!

முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என விஎச்பி தலைவர் அறிவித்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பாஜக, விஎச்பியைச் சேர்ந்த தமிழகத்தில் தெருக்களில் நடமாட முடியாத அளவுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என திமுக எச்சரித்துள்ளது.முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.இதற்கு பதிலளித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி என்பவர் தலைவர் கலைஞரைத் தாக்கி "பத்வா'' ஒன்றினை அயோத்தியிலிருந்து விடுத்திருப்பதாகவும், அதில் தமிழக முதலவரின் தலையையும், நாக்கையும் யார் துண்டாடினாலும் அவர்களுக்கு அயோத்தியில் உள்ள சாமியார்களால் எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்றும் பேசியிருப்பதாக செய்தி வந்துள்ளது.இதே அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் பெங்களூரில் முதல்வரின் மகளின் இல்லத்தில் இரவிலே வந்து தாக்கியிருக்கின்றனர். தமிழக பேருந்தை தீயிட்டுக் கொளுத்தி 2 உயிர்கள் கருகிட காரணமாகவும் இருந்திருக்கிறார்கள்.இத்தகை? செயல்களை செய்திடும் அமைப்புகள் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அறிக்கை விடுத்துள்ளார்கள்.முதல்வர் கருணாநிதியோ இது அவர் சம்பந் தப்பட்ட பிரச்சனை என்பதாலும், சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலே தான் இருக்கிறோம் என்பதாலும், கழகத்தின் மாவட்டச் செயலாளர்களையும், முன்னணியினரையும் கைகளைக் கட்டிப் போட்டு எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து வைத்திருக்கிறார்.தலைவரின் எச்சரிக்கை காரணமாக அமைதியாக இருக்கும் கழகத்தவர்களை கோழைகள் என்று எண்ணிக் கொண்டு பாஜகவினரும், விஸ்வ இந்து பரிஷசத்தை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் வாய் நீளம் காட்டினால், அதே பாணியில் திமுகழகத் தோழர்களும் தன்னிச்சையாக செயலில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டாடுவோம் என்று சொல்கின்ற அளவிற்கு ஒருவனுக்கு தைரியம் வருகின்றது என்றால், தமிழ்நாட்டுத் தெருக்களில் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நடமாட முடியாத நிலைமையை உருவாக்குவோம்.இது பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா வளர்த்த தம்பிகள் நாங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.பகுத்தறிவு என்றால் என்ன என்றே தெரியாமல், மதத்தைச் சொல்லி, கடவுளைச் சொல்லி, ராமர் பெயரால் கட்சியை நடத்தி மத உணர்வுகளை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் காட்டு மிராண்டிக் கும்பலைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினன் ஒருவன் உதிர்த்த வார்த்தைகளை உடனடியாகத் திரும்பப் பெறவில்லை என்றால்,தலைமையின் அனுமதியினைப் பெற்று இன்னும் ஒரு வார காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்கள் முன்பு கழகத் தோழர்களைத் திரட்டி கருப்புக் கொடி காட்டி, மறியல் செய்திட நானே தலைமை தாங்குவேன்.அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என்று யாராவது சொன்னால், அமைச்சர் பதவி எங்களுக்கு பெரிதல்ல. சுயமரியாதை ரத்தம் எங்கள் உடலில் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் தலைவரைப் பற்றி தவறாகக் கூறிய வேதாந்தி அல்ல. வேறு எவன் சொன்னாலும், அதை தமிழகம் கேட்டுக் கொண்டிருக்காது என்பதை இந்தியாவே புரிந்து கொள்ளச் செய்வோம்.இந்தியா மதச் சார்பற்ற நாடு. மதத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு இயக்கம் கட்சி நடத்துவதற்கும், கண்டபடி பேசுவதற்கும் தமிழகம் தக்கவாறு பதிலளிக்க தயாராக இருக்கிறது. இன்று பெரியார் இல்லை தான். ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம்.எங்களுக்கு உயிர் பெரிதல்ல. எங்கள் தலைவனைத் தாக்கிப் பேசிய பிறகும் அதைத் தாங்கிக் கொண்டு மனிதப் பிறவிகள் என்று எங்களைச் சொல்லிக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை.தமிழ்நாட்டு மக்களே, திமுகழகத்தினைச் சேர்ந்த நண்பர்களே, வேதாந்தி என்பவனுக்கும், அவனுடைய அமைப்பைச் சேர்ந்தவர் களுக்கும் சரியான வகையில் பதில் கூறத் தயாராவோம். நம் தலைவரின் உயிரைப் பற்றி விலை பேசும் வட நாட்டுத் தருக்கன் ஒருவனுக்கு சரியான புத்தி புகட்டிட வேண்டாமா, இன்றே புறப்படுங்கள்.இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

தற்ஸ் தமிழ் இல் இருந்து...................

திங்கள், செப்டம்பர் 03, 2007

ஈராக் பாஸ்ராவை விட்டு ஓடும் பிரித்தானிய இராணுவம்.



2003 இல் சதாம் குசைன் அணுகுண்டு உட்பட மனிதப் பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று கற்பனைக் கதை கட்டிக்கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்து எண்ணை வளத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க, பிரித்தானிய ஆக்கிரமிப்பு இராணுவங்களில் பஸ்ரா என்ற தென் ஈராக்கிய நகரில் நிலை கொண்டிருந்த பிரித்தானிய இராணுவம் அங்கிருந்து முற்றாக வெளியேறிக் கொண்டுள்ளது. பிற இடங்களில் இருந்தும் மெது மெதுவாக வெளியேறி வருகின்றது.


பிரித்தானிய இராணுவ வெளியேற்றத்தை ஈராக்கியப் போராளிகள் தங்கள் வெற்றியாகக் கொண்டாடி வரும் அதேவேளை தாங்கள் வெளியேறி வரும் பகுதிகளில் தங்களால் பயிற்றப்பட்ட ஈராக்கிய கூலிப்படைகளை பிரித்தானிய இராணுவம் நிறுத்தி வருகின்றது.

பிரித்தானிய இராணுவம் ஈராக் போரின் போது தானே தனித்து பஸ்ராவை விடுவித்தது என்பதும் அங்கு தீவிரவாதிகளின் தொடர்தாக்குதலுக்கு இலக்காகி 250 க்கும் மேற்பட்ட வீரர்களை பறிகொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்..!

இதற்கிடையில் அமெரிக்க வெடிவால் புஷ் இன்று ரகசிய ரகசியமாக ஈராக் போய் பத்திரமா மீண்டும் அமெரிக்கா போய் சேர்ந்துள்ளார். உலகின் வல்லாதிக்க அரசுத் தலைவர் ஒளிச்சு ஓடும் நிலைக்கு ஈராக்கில் அமெரிக்கப் படைகள் பலத்த சவாலைச் சந்தித்து நிற்கின்றன. ஈராக் இன்னொரு வியட்நாம் என்று தன் வாயாலேயே புஷ் உளறியிருந்தார் அண்மையில்..!

http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/6975375.stm
யாழ்.காமில் இருந்து............

வியாழன், ஆகஸ்ட் 23, 2007

நள்ளிரவில் கதவைத் தட்டி சோறு கேட்கும் குழந்தை - மதுரையில் புது பீதி!


மதுரை: மதுரையில் நள்ளிரவில் குழந்தை ஒன்று கதவை தட்டி சோறு கேட்பதாக தகவல் வெளியானதை அடுத்து மக்கள் பீதியில் உள்ளனர்.

மதுரை மதிச்சியம், செனாய் நகர், கரும்பாலை, ராமராயர் மண்டகப்படி, வைகை வடகரை ஆகிய வைகை ஆற்றையொட்டியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் குழந்தை ஒன்று ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி சோறு கேட்பதாக பரபரப்பான தகவல் பரவியுள்ளது.

'சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு வீட்டில் குழந்தைக்கு அம்மை வந்தபோது அந்தக் குழந்தையை அவர்கள் எரித்து விட்டார்களாம். அந்தக் குழந்தைதான் தற்போது நள்ளிரவில் வீடு வீடாக வருவதாக' குழந்தையை 'நேரில் பார்த்தவர்கள்' கூறி வருகின்றனர்.

இந்தப் புதிய வதந்தியால் இப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.

பெரும்பாலான வீடுகளில் விடிய விடிய மின்சார விளக்கு எரிந்த நிலையிலே காணப்படுகின்றது. இரவு சினிமாவுக்கு செல்வதை கூட மக்கள் தவிர்த்து வருகின்றனர். தங்கள் இஷ்ட தெய்வ கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூசை செய்து ஆறுதல் பெறுகின்றனர். வீடு, கடைகளில் வேப்பிலைகளும் கட்டியுள்ளனர்
-தற்ஸ் தமிழ் இல் இருந்து......

தண்ணீர் கேட்கும் 'பாட்டியும், பேத்தியும்': கொடுக்க மறுத்தால் ரத்தவாந்தி!!!




திருநெல்வேலி: ஒரு பாட்டி தனது பேத்தியுடன் தண்ணீர் கேட்டு வருவார். அவருக்கு தண்ணீர் கொடுக்க மறுத்தால் அந்த வீடு தீப்பிடித்து எறியும், வீட்டில் இருப்பவர்கள் ரத்த வாந்தி எடுத்துப் பலியாவார்கள் என்று கிளம்பியுள்ள பீதியால் நெல்லை மாவட்டம் கழுகுமலைப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

பீதியில் ஆழ்ந்துள்ள அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் முன்பகுதியில் வேப்பிலைகளை கட்டி வைத்துள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:

அனைத்து வீடுகளுக்கும் ஒரு பாட்டி தனது பேத்தியை அழைத்து வந்து தண்ணீர் கேட்பார். கொடுக்க மறுப்பவர்கள் வீடு தீப்பற்றி எரியும். கொடுப்பவர்களுக்கு ரத்தவாந்தி ஏற்படும் என்றும் புரளி கிளம்பியது.

சாத்தூர் பகுதியில் கிளம்பிய இந்த புரளி தீடீரென கழுகுமலை பகுதிக்கும் பரவியது. இதைத் தொடர்ந்து பீதியடைந்த மக்கள் எங்கே தங்கள் வீட்டுக்கு அந்த பாட்டி வந்து விடுவாரோ என்று அச்சம் அடைந்த நிலையில் ஒன்று கூடி ஆலோசித்தனர்.

பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள் ஆலோசனையின் படி ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளின் முன்பகுதியில் வேப்பிலையை கட்டி வைத்துள்ளனர். அவ்வாறு வேப்பிலை கட்டி வைத்திருக்கும் வீடுகளுக்கு அந்த பாட்டி வரமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது.

-தட்ஸ் தமிழ் இருந்து.......

புதன், ஆகஸ்ட் 22, 2007

ஜெர்மனியில் இனவெறி : ஓடஓட விரட்டி இந்தியர்கள் மீது தாக்குதல்- 8 பேர் காயம்!!!

ஜெர்மனியின் மிக்லன் நகரில் ஒரு கண்காட் சியையொட்டி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கலை நிகழ்ச்சியில் இந்தியர்களும் கலந்து கொண்டனர். ஏராளமான இந்தியர்கள் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்தனர்.


அப்போது ஜெர்மனி நாட்டவர்கள் திடீர் என்று இந்தியர்களுக்கு எதிராக கோஷம் போட்டனர். இந்தியர்கள் மீது 50க்கும் மேற்பட்டவர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். பாட்டில்களாலும் தாக்கினார்கள். நாற்காலிகளை தூக்கி இந்தியர்களை அடித்தனர்.

இந்தியர்கள் உயிர் பிழைக்க சிதறி ஓடினார்கள்.உயிர் தப்ப அருகில் உள்ள அறையில் புகுந்து தாளிட்டுக்கொண்டனர். அந்த கலவரக்கும்பல் விடவில்லை. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து இந்தியர் அடித்து உதைத்தனர்.

போலீசார் பெரும்பாடுபட்டு வன்முறை வெறியாட் டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினார்கள்.

இந்தியர்களுக்கு எதிரான இந்த இனவெறி தாக்குதலில் 8 இந்தியர்கள், 2போலீசார் காயம் அடைந்தனர்.

லங்காசிறியில் இருந்து............

திங்கள், ஆகஸ்ட் 20, 2007

10 வருடங்களுக்கும் மேலாக இலங்கை சிறைகளில் வாடும் 33 இந்தியர்கள்!

தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 33 இந்தியர்கள் செய்யாத குற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை சிறையில் வாடுவதாக பொன்னானியைச் சேர்ந்த அஷ்ரப் இலங்கையில் இருந்து தனது நண்பர்களுக்கு அனுப்பிய ஈ-மெயிலின் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

பொன்னானியை அடுத்து மரக்கடவையைச் சேர்ந்த பி.அஷ்ரப், ஆன்டனி சுதி (கேரளா), மரியா ஜான் (தூத்துக்குடி) உள்ளிட்ட பலர் இலங்கைச் சிறைகளில் விளக்கமறியல் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் என்று இலங்கை நீதிமன்றம் அறிவித்த எம்.சண்முக சுந்தரம் (கேரளா), எஸ்.எம்.புகாரி (திருச்சி) , என்.தங்கவேல் (மதுரை) உள்ளிட்ட பலருக்கு இலங்கை நீதிமன்றம் குற்றப்பத்திரிகை அளித்தும் இன்னும் விசாரணைக் கைதிகளாகவே சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நீர்கொழும்பு, வெலிக்கடை , அனுராதபுரம் ஆகிய சிறைகளில் பத்து ஆண்டுகளாக வெளி உலகத்தைப் பார்க்காமல் இவர்கள் வாழ்கின்றனர். வேலை தேடி 10 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் சென்றபோது இலங்கை விமான நிலையத்தில் 63 பேர் போதைமருந்து கடத்தியதாக கைது செய்யப்பட்டனர். கைதான 30 பாகிஸ்தானியர்களுக்கு குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தண்டனை வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் அரசு தலையிட்டு சார்க் உடன்படிக்கையின்படி அவர்களை விடுதலை செய்து பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்றது.

ஆனால், இந்திய கைதிகள் ஜனாதிபதி, பிரதமர் சோனியா , வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனையுடன் அந்த ஈ- மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி - தினக்குரல்

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2007

தமிழ் நாட்டில் "ஆணிவேர்" ?


இலங்கை தமிழர்களின் அவல நிலையை சித்தரிக்கும் வகையில், "ஆணிவேர்" என்ற ஒரு தமிழ் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழ்நாட்டில் திரையிட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தணிக்கை குழுவின் அனுமதி கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

"ஆணிவேர்"

இலங்கை (Srilanka) அரசாங்கத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக யுத்தம் நடந்து வருகிறது. தமிழர்கள் வசிக்கும் பகுதியை தனி நாடாக அறிவிக்கக்கோரி, விடுதலைப்புலிகள் போராடி வருகிறார்கள்.

இதனால் இலங்கை அரசாங்கம், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் அ வலநிலையை சித்தரிக்கும் வகையில், ஒரு தமிழ் திரைப்படம் தயாராகி இருக்கிறது. முழுக்க முழுக்க இலங்கை தமிழ் பகுதி களில் உருவான இந்த படத்துக்கு, "ஆணிவேர்" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

கதையின் நாயகனாக நந்தாவும், நாயகியாக மதுவிதாவும் நடித்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இலங்கை தமிழ் டாக்டராக நந்தாவும், இந்தியாவை சேர்ந்த பத்திரிகை நிருபராக மதுமிதாவும் வருகிறார்கள்.

கதை

தமிழ்நாட்டை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மதுமிதா தனது பத்திரிகைக்கு செய்தி சேகரிக்க, யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். அங்கு கடமையே கண்ணாக தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் கோபக்கார டாக்டர் நந்தாவை சந்திக்கிறார். நட்பு கொள்கிறார். போரினால் மக்கள் படும் அவலங்கள், மதுமிதாவையும் பாதிக்கிறது. அந்த மக்களுடன் ஒன்றிப்போகிறார்.

வரலாற்று பதிவாகிவிட்ட யாழ்ப்பாண இடப்பெயர்வு, நந்தாவையும், மதுமிதாவையும் பிரித்து விடுகிறது. மதுமிதா, தமிழ்நாட்டு க்கு திரும்புகிறார். சில வருடங்களுக்குப்பின், அவர் மீண்டும் இலங்கைக்கு செல்கிறார். தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், நந்த ‘வை தேடி அலைகிறார். இருவரும் இணைந்தார்களா, இல்லையா? என்பதை படத்தின் முடிவு விளக்குகிறது.

ஜான் மகேந்திரன்

"உதிரிப்பூக்கள்", "நெஞ்சத்தை கிள்ளாதே" ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன், இந்த படத்தை டைரக்டு செய்து இருக்கிறார்.

"ஆணிவேர்" படம், சென்னையில் பத்திரிகை நிருபர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படம் முடிந்ததும், டைரக்டர் ஜான் மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

"இலங்கை தமிழர்களின் அவலங்களை விளக்கும் "ஆணிவேர்" படத்தின் படப்பிடிப்புக்கு, ஒரே ஒரு காமிரா மட்டுமே பயன்ப டுத்தப்பட்டது. வேறு எந்த உபகரணமும் பயன்படுத்தப்படவில்லை. முழுக்க முழுக்க தமிழர்களின் ஒத்துழைப்புடன் படப்பிடிப்பு நடந்தது. யுத்தத்தில் கை-கால்களை இழந்தவர்கள் கூட, படப்பிடிப்பில் கலந்துகொண்டு வேலை செய்தார்கள்.

வெளிநாடுகளில்...

இந்த படம் லண்டன் (London), கனடா (Canada), சுவிட்சர்லாந்து (Switzerland) போன்ற வெளிநாடுகளில் திரையிடப்பட்டு, வெ ற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் திரையிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, "ஆணிவேர்" படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்து இருக்கிறோம். தணிக்கை குழு அனுமதிக்குமா, அனுமதிக்காதா? என்று தெரியவில்லை. அப்படியே அனுமதித்தால், இந்த படம் எடுத்ததின் பலனை நாங்கள் அடைவோம்.'' இவ்வாறு டைரக்டர் ஜான் மகேந்திரன் கூறினார்.

-நன்றி தமிழ்ப்பிரியம்.

வியாழன், ஆகஸ்ட் 16, 2007

இராமர் பாலத்தை இடிப்பதற்கு, அமெ. புலிகள் கூட்டுச் சதியாம்.

சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலம் இடிக்கப்படுவது அமெரிக்க மற்றும் விடுதலைப் புலிகளின் கூட்டுச் சதி என்று விஸ்வ இந்துப் பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது.

ராமர் பாலம் இடிக்கப்படுவதைக் கண்டித்து எதிர்வரும் 12ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகவும் விஸ்வ இந்துப் பரிஷத் அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று விஸ்வ இந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
இதன்போது இக்கருத்தை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:

ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான ஆயம் இத்திட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தபோதிலும் ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது குறித்தும், மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்யுமாறு கூறியிருந்தது.

ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறிராமர் பாலம் இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

மேலும் ராமர் பாலம் இடிக்கப்படுவதால் திருகோணமலை அருகே உள்ள புல்மோட்டைப் பகுதியில் கனியவள இல்மனைட் அதிக அளவில் கிடைக்கும் என்பதால் அதனை இடிப்பதற்கு விடுதலைப் புலிகளும் சதி செய்திருக்கின்றனர்.

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக மத்திய அரசு அவசர அவசரமாக ராமர் பாலத்தை இடிக்க முயற்சி செய்து வருகின்றது. இதனால் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றார். (க9)

நன்றி - சுடர் ஒளி

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2007

தமிழ்பெண் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு வீட்டில், 10 வருடங்களாக அடிமை சிறை.

சிலாபத்தை சேர்ந்த அனிஸ்டா மேரி (Anista Marie) என்பவர் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 10 வருடங்களாக அடிமையாக சிறைவைக்கப்பட்டுள்ளார். அந்த வீட்டில் உள்ள ஒருவருடைய அனுதாபம் அவருக்கு கிடைக்காமல் போயிருந்தால் நேற்று கூட அந்த பெண்ணால் (அனிஸ்டா மேரி) arabnews.com ற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்க முடிந்திருக்காது. அப்பெண் தொலைபேசி மூலம் arabnews.com தெரிவித்த விபரத்தின் சுருக்கம்:

நான் இங்கு வரும் போது எனக்கு வயது 30. இப்போது எனக்கு வயது 40.
நான் ஒருபோதும் விடுமுறை லீவு எடுத்ததில்லை . எனக்கு கடந்த 8 வருடங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனக்கு இலங்கையில் 4 குழந்தைகள் உண்டு.எனது கணவர் இறந்துவிட்டார். அவரின் இறப்புசெய்தி கூட மூன்றாம் நபர் ஒருவரின் மூலம் அவர் இறந்து 2 வருடங்களின் பின்னர்தான் எனக்கு தெரிந்தது.

நான் இருக்கும் வீட்டில் 3 பெண்களும் 4 இளம்பெண்களும் உள்ளனர். வீட்டில் ஆண்கள் யாரும் கிடையாது. நான் போக விரும்புவதாக தெரிவிக்கும் போதெல்லாம் என்னை தாக்கினார்கள். சம்பளத்தைபற்றி கதைத்தால் நிலமை மோசம்.

முதல் இரண்டு வருடங்களும் நிலமை சாதாரணமாக இருந்தது. சம்பளம் தந்தார்கள். நான் அவர்களுடன் எல்லாம் வெளியில் சென்றுவந்தேன். நான் இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பொருட்களும் உடுப்புகளும் எனது குழந்தைகளுக்காக வாங்கி வைத்திருந்தேன். அவைகள் எதுவும் இன்று பிரயோஜனப்படப்போவதில்லை. காரணம் குழந்தைகள் யாவரும் வளர்ந்துவிட்டனர்.அந்த குடும்பத்தில் உள்ள ஒரு இளம்பெண் மட்டும் அனுதாபம் உள்ளவர்.

சாப்பாடு பற்றி எதுவித பிரச்சினையுமில்லை. பிழையான வாக்குறுதிகளை நம்பி இருந்துவிட்டேன்....

நான் அவர்களை நீண்டகாலமாக நம்பிவிட்டேன். இப்ப நான் எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்டேன். என்னை வீட்டிற்கு போகவிட்டு,எனது குழந்தைகளை பார்த்து எனது சொந்த மண்ணில் என்னை சாக விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Marie தன்னை அந்த வீட்டிலிருந்து மீட்கும்படி அதிகாரிகளிடம் கேட்கிறார். ஆனால் அவர் இருக்கும் வீடு எங்கே உள்ளது என்று அவருக்கு தெரியவில்லை. ஆனால் தான் தங்கியிருக்கும் வீடு Riyadh ல்தான் உள்ளது என்பதனை அந்த வீட்டிற்க்கு வருகை தந்திருந்த ஒரு பெண் விருந்தாளி மூலம் அறிந்து வைத்துள்ளார்.

அந்த பெண்ணுடன் கதைத்த பின்னர் arabnewsஉடனடியாக K.B.G. Premadasa வை (Sri Lankan Embassy’s secretary of labor affairs) தொடர்புகொண்டனர். Marie, அரப்நியூஸ்ஸிற்கு கொடுத்த தொலைபேசி எண்ணுக்கு Premadasa தொடர்புகொண்டு கதைத்தபோது ஒரு பெண்தான் கதைத்துள்ளார். அவரும் அவருடைய வீடு எங்கு உள்ளது என்ற விபரத்தை தெரிவிக்க மறுத்துள்ளார். இதுபற்றி தூதரகம் உள்ளூர் அதிகாரிகளிடம் தொடர்புகொள்ளும் பிரேமதாஸா தெரிவித்துள்ளார்.

மொழிபெயர்ப்பில் தவறுகள் இருந்தால் பொருத்துக்கொள்ளுங்கள் --- Shankarlaal

அரப்நியூஸில் வெளியான செய்தி:

Maid Claims Slave Status in Household
Mohammed Rasooldeen, Arab News

RIYADH, 14 August 2007 — The woman on the other end of the phone line had a disturbing story to tell. Speaking in Tamil, Anista Marie of Chilaw, a coastal town about 70 km from Colombo, says she has been imprisoned in a house in Riyadh for the past 10 years. Were it not for a sympathetic family member, she may not have been able to make the phone call to Arab News yesterday.

“When I came here I was 30 years of age,” she told this reporter. “Now I am 40 and I have never taken holiday leave, nor have I been paid in the past eight years.”

Marie is asking authorities to rescue her from the Saudi household, but she is unsure of her location. She said she only knows that she is in Riyadh because a maid from a visiting family told her.

After speaking to the woman, Arab News immediately contacted K.B.G. Premadasa, the Sri Lankan Embassy’s secretary of labor affairs, who called the number provided to Arab News by Marie, and spoke to whom he believes is the maid’s sponsor, a woman. “She refused to give her whereabouts,” he said, adding that the embassy was going to contact local authorities about the case.

Marie, whose voice was trembling, said she had four children back home. She says that her husband, a fisherman, has passed away. She said she learned of her husband’s fate from a third party two years after his death.

According to the woman, the household consists of three women with four teenage daughters. “There are no men in the house,” she said. “They assault me when I say that I want to go home. It’s worse when I talk about the salary.”

According to the maid, the first two years were relatively normal: She was paid her salary and went out with the family.

“Back then I bought things for my children,” she said. “They’re still packed in two suitcases and the clothes can’t be used now because they’ve grown out.”

Marie says that one of the teenage girls sympathizes with her, which is possibly why she was able to contact Arab News.

Food isn’t an issue, she pointed out, but she’s been living under false promises for so long that she says that at this point she’s only interested in escape.

“I believed them for so long. Now I have lost all hope,” she said. “Let me go home and see my children and die on my soil.”

Last year 64-year-old Filipino Leonora Somera was discovered to have worked 18 years without pay, partly as a shepherd in Al-Baha, about 275 km south of Jeddah. Her situation was exacerbated by the fact that the son of her sponsor, who had passed away, was also not providing her with sustenance. Somera is still in a women’s shelter in Jeddah, run by the Philippines Consulate, fighting to recoup nearly 20 years of back pay.

http://www.arabnews.com/?page=1§ion=0&...;m=8&y=2007
யாழ்.காமில் இருந்து.........

வியாழன், ஆகஸ்ட் 09, 2007

செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்!!!


ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்துள்ளார்.

நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள், மின் வசதி இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு. அந்தக் கவலையே இனி வேண்டாம். காட்டுப்பகுதியில்கூட செல்போனை ஈஸியாக சார்ஜ் செய்யலாம். அதற்கு ஒரு அரச இலை இருந்தால் போதும்.

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம், மானுகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவர், 2 நாட்களுக்கு முன்பு சவாரியை முடித்துக் கொண்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது ஒரு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியதில் இவரிடம் இருந்த செல்போன் தவறி விழுந்தது. செல்போனில் இருந்த பேட்டரி தனியாக பிரிந்து விழுந்தது. சார்ஜ் முழுவதும் தீர்ந்துவிட்டதால் அவரால் செல்போனை பரிசோதித்துக்கூட பார்க்க முடியவில்லை.

அப்போது மழை தூறியதால் நனையாமல் இருப்பதற்காக செல்போனை அரச இலைகளால் சுற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டில் வந்து பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். செல்போன் முழுவதுமாக சார்ஜ் ஆகி இருந்தது.

செல்போன் பேட்டரிக்கு இடையே ஒரு அரச இலை சிக்கியிருந்தது. அதை எடுத்ததும் சார்ஜ் போய்விட்டது. மீண்டும் அரச இலையின் காம்பை பேட்டரியின் இடையில் வைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தபோது முழுமையாக சார்ஜ் ஆகி இருந்தது.

அரச இலை காம்பை பேட்டரிக்கும் செல்போனில் உள்ள பின்னுக்கும் இடையில் சொருகி பல முறை ரவி சோதித்துப் பார்த்தார். காம்பு வைக்கப்பட்ட 10 நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆனது. இதுபற்றி தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் ரவி தெரிவித்தார். அதை யாரும் நம்பவில்லை. அதன்பிறகு செல்போன் வைத்திருந்தவர்கள் சிலர் அரச இலையை வைத்து பரிசோதித்து பார்த்தனர். அவர்களது செல்போனிலும் சார்ஜ் ஆனதை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

பசுமையாக உள்ள அரச இலைகளை பயன்படுத்தினால் மட்டுமே சார்ஜ் ஆகிறது. இலையின் காம்பை செல்போனின் பின்பக்க மூடியை திறந்து பேட்டரி பின்னுக்கு இடையில் வைத்து 10 நிமிடம் ஆனதும் செல்போன் முழுமையாக சார்ஜ் அடைந்து விடுகிறது. மின்சார சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால் அதற்கான அடையாளம் தெரியும்.

அரச இலை மூலம் செய்தால் சார்ஜ் ஆவது நமக்கு தெரியாது. 10 நிமிடம் கழித்து பார்த்தால் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அரச இலை செல்போனில் இருக்கும்வரைதான் சார்ஜ் இருக்கும். இலையை எடுத்துவிட்டால் சார்ஜ் முழுவதும் போய்விடும்.

வெளியிலோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது சார்ஜர் எடுத்துச் செல்ல மறந்து விடுபவர்கள், அந்த பகுதியில் பசுமையாக உள்ள அரச இலையை பயன்படுத்தி செல்போனை சார்ஜ் செய்து பேசலாம் என்கிறார் ரவி.

நன்றி:தமிழ்முரசு

வியாழன், ஆகஸ்ட் 02, 2007

ஓகஸ்ட் புகைப்படபோட்டிக்கான எனது படைப்புக்கள்.

அட்டாக் பாண்டி!
(போட்டிக்கான படம் 1.)

இப்படி இருந்த நான்,

இப்படி ஆயிட்டன்.

எங்க வீட்டு காந்திமதி பாட்டி.

(போட்டிக்கான படம் 2.)

புதன், ஆகஸ்ட் 01, 2007

எங்கள் அவல நிலை கேளீர்!!!

எங்கள் அவல நிலை பாரீர் அட சா.....கேளீர்!!!
வானொலியை நிறுத்தி விட்டு கேட்கவும்.


http://vaseeharan.imeem.com/music/0Qe4njoa/agencykaran_emathidaan/இல் இருந்து........

புதன், ஜூலை 18, 2007

17 வருட பழைய புகைப்படங்கள் போட்டிக்காக.

இப்படி ஒரு புகைபடம் இனி எடுக்கமுடியாது, இதன் சிறப்பு என்னவெனில் ஹீ...ஹீ..இதை நான் எடுத்ததுதான். என்ன பயந்துட்டீங்களா? சும்மா தமாஸு இப்போது சவுக்கு மரங்கள் அகற்றப்பட்டு வேலிபோட்டு இருக்கிறார்கள், இது ஒரு முப்பரிமான உத்தி, பாறைகள் உங்களை நோக்கி வெளியே வருகிறதா, என்ன வரவில்லையா..படத்தை பெரிதாக்கி வாறமாதிரி நினையுங்கள் கட்டாயம் வரும். அப்பவும் வராட்டி உங்க கண்ணு ஞானக்கண் அல்ல பூனைக்கண், என்ன பயந்திட்டீங்களா? சும்மா தமாஸு, மறுபடியும்பார்றா தமாஸு

கடற்கோவில்

இது மைசூர் என நினைக்கிறேன் பழையகாலத்து வேம்பு, வேம்பம் இலைகளினூடாக சூரியனை இறக்கிப்பார்க்கும் முயற்சி.

சூரியக் காசுகள்

இது கோவாவில் சரிந்து நிற்கும் தென்னைகளை நிமிர்த்திப்பார்க்க நினைத்தன் விழைவு, உண்மையில் இவை 45 பாகை சரிந்தே காணப்படுகின்றன. தென்னையையே நிமிர்திப்பார்க்க நினைத்தவன், அது எல்லாம் பழைய கனவுகளய்யா.....

வளைந்தவர்களே எழுந்து நில்லுங்கள்


சத்தியமா இவை எல்லாம் நான் எடுத்துதான் நம்பினால் நம்புகள், நம்பாட்டாலும் நம்பித்தான் ஆகனும்.
ஓல்டு இஸ் கோல்டு எனநினைத்து இவற்றை அனுப்புகிறேன், நீங்களும் பரிசை அனுப்பி விடுங்கள், அதாப்பா கெளரவ பரிசை. என்ன வரட்டா................

சிவராசனை பிடிப்பதில் தாமதம் செய்தாரா கார்த்திகேயன்?

திருவனந்தபுரம்: பெங்களூரில் ஒற்றைக் கண் சிவராஜனும், சுபாவும் பதுங்கியிருந்த வீட்டுக்குள் அதிரடிப்படையினர் திட்டமிட்ட நேரத்தில் நுழைவதை சிறப்பு விசாரணைப் படைத் தலைவர் கார்த்திகேயன் தடுத்து விட்டதால்தான் அவர்களை உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டதாக அந்த அதிரடிப் படையில் இடம் பெற்றிருந்த முன்னாள் ராணுவ மேஜர் ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் விசாரித்தார். தற்போது கார்த்திகேயன் தனக்கு நல்ல பெயர் வாங்குவதற்காக எடுத்த ஒரு நடவடிக்கையால், சிவராசனையும், சுபாவையும் உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டதாக முன்னாள் ராணுவ மேஜர் ரவி என்கிற ரவீந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேஜர் ரவி தற்போது திரைப்பட இயக்குநராக உருவெடுத்துள்ளார். அரண் என்கிற படத்தை இயக்கியவர்தான் இந்த ரவி. தற்போது சிவராசன்-சுபாவை அதிரடிப்படையினர் முற்றுகையிட்ட நேரத்தில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு மிஷன் 90 டேஸ் என்ற படத்தை இவர் இயக்கி வருகிறார்.

கார்த்திகேயன் தலைமையிலான சிறப்பு விசாரணைப் படையில் இடம் பெற்றிருந்த அதிரடிப்படையில் மேஜர் ரவியும் இடம் பெற்றருந்தார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் ரவி கூறுகையில், சிவராசனும், சுபாவும் பதுங்கியிருந்த வீட்டை கமாண்டோ படையினர் முற்றுகையிட்டனர். உள்ளே புகுந்து அவர்களை உயிருடன் பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன.

ஆனால் அந்த சமயத்தில் கார்த்திகேயன் ஹைதராபாத்தில் இருந்தார். தான் வரும் வரை யாரும் உள்ளே நுழைய வேண்டாம் என அவர் உத்தரவிட்டார். இதனால் எங்களால் நடவடிக்கையில் இறங்க முடியவில்லை.

கிட்டத்தட்ட 36 மணி நேரம் நாங்கள் கார்த்திகேயனுக்காக காத்திருக்க நேரிட்டது.

திட்டமிட்டபடி நாங்கள் வீட்டுக்குள் புகுந்திருந்தால் இருவரையும் உயிருடன் பிடித்திருக்க முடியும். ஆனால் தான் நேரடியாக களத்தில் இறங்காமல், மற்றவர்கள் சிவராசன், சுபாவை பிடித்து விட்டால் தனக்கு பெயர் கிடைக்காமல் போய் விடுமே என்ற கார்த்திகேயனின் சுயநலம் காரணமாக இருவரையும் நாங்கள் உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டது.

நாங்கள் வீட்டை முற்றுகையிட்ட சமயம் அங்கு 10 காவல்துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் 3 பேர் டிஐஜி அந்தஸ்து படைத்தவர்கள். இவர்களில் யாரிடமாவது வீட்டுக்குள் நுழையுமாறு கூறி இருவரையும் உயிருடன் பிடிக்க கார்த்திகேயன் உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை.

முக்கிய வேலை காரணமாகவே தான் ஹைதராபாத் சென்றிருந்ததாக தான் எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார் கார்த்திகேயன். சிவராசன், சுபாவை விட அந்த சமயத்தில் வேறு வேலை அவருக்கு முக்கியமாகப் போய் விட்டதா? என்று கேட்டுள்ளார் ரவி.

ரவியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-தற்ஸ் தமிழ்

சனி, ஜூலை 07, 2007

தேசிய அடையாளத்தைக் காப்பாற்ற, 'சிவாஜி" திரைப்படம் பார்க்க...?

-பரணி கிருஸ்ணரஜனி-

கடந்த யூன் மாதம் முதலாம் நாள் மாலை, இனிமையான பழைய நினைவுகளை அசை போட்டபடி ஒருவித ஆத்மார்த்த நிலைக்குள் எனது ஆழ்மனம் அமிழ்ந்திருந்த தருணத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு.

மறுமுனையில் அறிமுகமில்லாத ஒரு நபர், 'சிவாஜி" திரைப்படத்திற்கு ஒரு விமர்சனம் எழுதித்தரும்படியும், அதை ஒரு ஊடகத்தில் வெளியிட இருப்பதாகவும், தாங்கள்தான் அப்படத்தை சில ஐரோப்பிய நகரங்களில் திரையிட இருப்பதாகவும், முதல் காட்சிக்கு எனக்கு இலவச அனுமதி வழங்குவதாகவும், என்னைத் தொடர்ந்து பேசவிடாமல் ஏதேதோ உளறிக்கொண்டிருந்தார். யாரோ என்னை சினிமா விமர்சகர் என்று கிளப்பிவிட்ட வதந்தியின் அடிப்படை அவர் பேச்சில் அப்படியே எதிரொலித்தது.

'யாரோ என்னைப்பற்றி உங்களுக்குத் தவறான தகவலைத் தந்து விட்டார்கள். மன்னித்துக்கொள்ளுங்கள்" என்றபடியே அவரது இணைப்பைத் துண்டித்துக்கொண்டேன்.

இச்சம்பவம் நடந்து அடுத்த வாரத்தில் 'சிவாஜி" திரையிடப்பட்டு தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் 'வெற்றி நடை" போடும் செய்திகள் ஊடகங்கள் வழி தெரியவந்தது.

யதார்த்த நிலைமை இவ்வாறிருக்க, திடீரென்று 'சிவாஜி" திரைப்படத்தைப் புறக்கணியுங்கள் என்று சில குரல்கள் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலும் கேட்கத் தொடங்கின. என்னை ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒருங்கே ஆக்கிரமித்துக்கொண்டன என்பது மட்டுமல்ல இந்தப் பலவீனமான எதிர்ப்பு பெருங்கவலையையும் அளித்தது.

அப்போதே இத்தொடர் சம்பவங்கள் பற்றியும் 'சிவாஜி" திரைப்படம் குறித்தும், அதன் அரசியல் குறித்தும் எழுதத்தான் தீர்மானித்திருந்தேன். ஆனால் நிலைமையின் விபரீதத்தைப் புரிந்து மௌனம் காத்தேன். ஏனெனில் எனது எழுத்து எந்த வகையிலும் 'சிவாஜி"யை திரையிடுபவர்களுக்கும், அதன் திரையிடலை எதிர்க்கும் தமிழ்த் தேசிய குரல்களுக்கும் மாற்று விளைவுகளை கொடுத்துவிடக்கூடாது என்பதில் நான் தெளிவாகவே இருந்தேன்.

ஏனெனில் நான் முதலிலேயே ஒன்றைக்கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு பலவீனமான எதிர்ப்பைப் பதிவு செய்வதை விடப் பேசாமல் இருப்பதே சிறந்தது என்பது என் கருத்து. ஏனெனில் இந்தப் பலவீனம் இறுதியில் தமிழ்த் தேசியத்தின் பலவீனமாக வாசிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள்தான் அதிகம்.

தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குரல்களை அடையாளப்படுத்தும் ஒரு திரைப்படத்தை புறக்கணிப்பதாக் கூறிக்கொண்டு வெளிப்படும் ஒரு எதிர்ப்பு தன்னளவிலேயே பலவீனங்களைக் கொண்டிருப்பது வெளிப்படையாகத் தெரியும் ஒரு சூழலில் அதன் எதிர்ப்பு எம்மவராலேயே அபத்தமாகப்பார்க்கப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இங்கு நடந்திருப்பதும் அதுதான்.

வேறு ஒரு வகையில் எமது ஒற்றுமையின்மையையும் பலவீனமான தமிழ்த் தேசிய கருத்துருவாக்கத்தையும்தான் இவை அடையாளப்படுத்துகின்றன. இதையொட்டித்தான் சில கருத்துக்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்.

எனக்கு பல விடயங்கள் இன்னும் புதிராகவே இருக்கிறது.

01. 'சிவாஜி" திரைப்படம் பூசை போடப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது. அதை எதிர்ப்பது என்று முடிவு செய்திருந்தால் அப்போதே அதைத் தொடங்கியிருக்க வேண்டும். ஏன் யாரும் அதைச் செய்யவில்லை?

02. இந்தியாவிற்கு வெளியில் தமிழகத் திரைப்படங்களைத் திரையிடுபவர்கள் ஈழத்தமிழர்கள்தான். அவர்களுடன் தொடர்பு கொண்டு 'சிவாஜி" திரைப்படத்தை வாங்கித் திரையிட வேண்டாம் என்று கேட்கப்படவில்லை. அது ஏன்?

03. முக்கியமானது தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்று தம்மைத்தாமே அறிவித்துக்கொண்ட பெரும்பாலான ஊடகங்கள் பல 'திடீரென்று முளைத்த" புறக்கணிப்பை பதிவு செய்ததுடன் போட்டி போட்டுக்கொண்டு 'சிவாஜி" க்கான விளம்பரத்தையும் செய்து தொலைத்தன- இன்னும் செய்து கொண்டிருக்கின்றன.

இவையெல்லாவற்றையும் ஒருசேர உற்று நோக்கும்போது புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பமாகும் இடத்திலேயே செமத்தியாக அடிவாங்கத் தொடங்குவதை அவதானிக்கலாம்.

எனக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கின்றன.

01. 'சிவாஜி" திரைப்படத்தை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

02. புறக்கணிப்புக்காக சொல்லப்படும் காரணங்கள் வலுவானவைதானா? எந்த அளவு கோலின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படுகிறது?

03. இந்த அளவுகோல் மற்றைய திரைப்படங்களுக்கும் தமிழக சினிமா உலகத்திற்கும் பொருந்தாதா?

04. சரி, 'சிவாஜி" திரைப்படம் ஏதோ ஒரு வகையில் ஈழத்தமிழர்களின் புறக்கணிப்பிற்கான எல்லா அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்றே வைப்போம். பல தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்குத் தெரிந்த இந்த 'அம்சம்" ஏன் தமிழ்த் தேசியத்தை வளர்க்கிறோம்- விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்துகிறோம் என்று கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய ஊடகங்களின் கண்ணுக்குத் தெரியவில்லை? போதாதற்கு புறக்கணிப்பையும் பதிவு செய்து திரைப்படத்திற்கு 'ரிக்கற்"றும் விற்ற அவற்றின் அரசியலை எந்த வகமைக்குள் பொருத்திப் பார்ப்பது?

இவற்றையெல்லாம் ஒரு குடுவைக்குள் போட்டு ஒரு குலுக்குக் குலுக்கி கவிழ்த்துக் கொட்டினால் பல 'உண்மைகள்" தெரிய வரும். பிரச்சினை ரஜினிக்காந்திடமோ சங்கரிடமோ இல்லை. பிரச்சினைக்குரியவர்கள் நாம்தான். அவர்களில்லை.

இதை வேறு ஒரு வகையில் சொன்னால் தலையையும் வாலையும் விட்டுவிட்டு நடுவிலை எதையோ பிடித்து இழுத்ததற்கு ஒப்பானது இது.

தமிழ்ச் சினிமா குறித்து, அது 'கோடம்பாக்கம்" சினிமாவாவேயொழிய தமிழ்ச் சினிமா அல்ல என்பதில் தொடங்கி அதை ஈழத் தமிழர்களாகிய நாம் எப்படி எதிர்கொள்வதென்பது வரை எனக்கு ஏகப்பட்ட வாசிப்புக்கள் இருக்கிறது. இதில் அதைப் பதிவு செய்யப் போனால் இது தொடர் கட்டுரையாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. (ஏற்கனவே 'கோலங்கள்" தொலைக்காட்சி தொடர் மாதிரி எனது எல்லாக் கட்டுரைகளையும் நீட்டி முழக்குவதாக நேற்றுத்தான் ஒரு நண்பர் குற்றம் சுமத்தியிருந்தார்.) எனவே குறிப்பிட்ட சில விடயங்களை அவதானிக்க பின்வரும் முகவரியில் சென்று நான் ஏற்கனவே 'தமிழக சினிமா" குறித்து எழுதிய சில கருத்துக்களை பார்க்கவும். http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=556&Itemid=60

தயவு செய்து மேற்குறிப்பிட்ட கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு அமைதியாகக் கொஞ்சம் யோசித்தாலே பிரச்சினை எங்களிடம்தானேயொழிய அவர்களிடம் இல்லை என்ற உண்மை 'கொஞ்சூண்டாவது" தெரியவரும்.

ரஜினிகாந்த் என்ற நபரின் திரைப்படங்கள் மட்டுமல்ல அவரே தமிழ்ச்சூழலில் இருந்து அகற்றப்பட வேண்டியவர் என்பதில் எனக்கு இரு வேறு கருத்துக்கள் கிடையாது. சங்கர் என்ற மனிதருக்கும் இது பொருந்தும். அதற்கான காரணங்கள் 'சிவாஜி" படத்தைப் புறக்கணியுங்கள் என்று சில நண்பர்கள் முன்வைத்த காரணங்களையும் விட வலுவான பின்னணி கொண்டது. அதையும் இங்கு நான் அடுக்க விரும்பவில்லை. அது எனது இந்தப் பத்தியின் நோக்கத்தை திசைமாற்றி விடக்கூடியது.

ஈழத்தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் பொருத்தமற்ற, பல்வேறு காரணங்களால் புறக்கணிப்புக்கு முழுத்தகுதியும் கொண்ட ஒரு திரைப்படத்தை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எதிர்கொண்ட அவலத்தைப் பேச முற்படும் இப்பத்திக்கு அவை தேவையற்ற தரவுகள் என்றே கருதுகிறேன்.

தமிழ்ச் சினிமா, சினிமா ரசனை, தமிழ் அடையாளம், மாற்று சினிமா, எமக்கான சினிமா என்று பேசுவதற்கு ஏகப்பட்ட விடயங்கள் இருக்கின்றன. ஒரு போராடும் இனம் என்ற அடிப்படையில் இது குறித்த கருத்துருவாக்கங்கள் தமிழ்த் தேசிய ஊடகங்கள் வழி ஆக்கபூர்வமான முறையில் எங்கேனும் முன்வைக்கப்பட்டிருக்கிறதா?

மாறாக எமது ஊடகங்கள் புலம்பெயர் தமிழர்களுக்கும் கோடம்பாக்கத்துக்கும் இடைத்தரகர் வேலைதான் செய்து கொண்டிருக்கின்றன. எமது ஊடகங்களின் இந்தப் புண்ணியத்தில் புலம்பெயர் தமிழர்கள் கோடம்பாக்க சினிமா குறித்த அறிவியலில் 'புல்போர்ம்" இல் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் 'சிவாஜி"யைப் புறக்கணி. 'எம்ஜிஆரைப்" புறக்கணி என்றால் என்ன எதிர்வினை கிடைக்கும்....

படிப்படியாக கோடம்பாக்க சினிமா மோகத்திலிருந்து ஈழத் தமிழர்களை மீட்டு அவர்களை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கருத்தியலை பல தளங்களிலும் வளர்க்க வேண்டிய தமிழ் ஊடகங்களே தமிழர்களை அந்தச் சாக்கடைக்குள் அமிழ்த்தி வைத்துள்ளதும் அதையே தமது தேசியத் 'திருப்பணி"யாக செய்து வரும் சூழலிலும் இத்தகைய புறக்கணிப்புப் போராட்டங்கள் மலினப்பட்டுவிடும் அபாயம் தொடரத்தான் செய்யும்.

இது இறுதியில் தமிழ்த் தேசியம் என்பதே பலவீனம் நிறைந்ததுதான் என்ற ஒட்டுமொத்த வாசிப்புக்குத்தான் வழிசமைக்கும். எனவே புறக்கணிப்பு போராட்டம் நடத்த முன்வரும் சமூக ஆர்வலர்கள் 'புலம்பெயர் தமிழர்கள்" என்று விளித்து அறைகூவல் விடுவதைத் தவிர்த்து புலம்பெயர் தமிழ்த் தேசிய ஊடகங்களின் இந்த இரட்டைப்போக்குக்கு எதிராக ஒரு போராட்டத்தை முதலில் நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த மக்களை நெறிப்படுத்தும் ஊடகங்களே 'சிவாஜி" திரையரங்கை நோக்கி மக்களை கூவிக்கூவி அழைத்துச் செல்லும்போது நீங்கள் கொஞ்சப்பேர் மட்டும் கத்துவது அபத்தமாக இருக்கிறது. வேறு ஒரு வகையில் அநியாயமாகவும் தெரிகிறது.

தயவு செய்து மக்கள் மீது பழி போடாதீர்கள்.

எனவே முழுப்பழியையும் ஏற்றுக்கொள்ளவேண்டியவை தமிழ்த் தேசிய ஊடகங்கள்தானேயொழிய அதைத் திரையிடுபவர்களோ அன்றி மக்களோ அல்ல.

ஒரு இனத்தை எடை போடுவதற்கு அந்த இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஊடகத்துடன் குறிப்பிட்ட சில மணிநேரங்களை செலவு செய்தால் போதும் என்று சொல்வார்கள். தமிழினத்தை எடை போடுவதற்கு ஒரு சில நிமிடங்களே போதும். அதன் இரட்டைத்தன்மையை அறிந்து கொள்வதற்கு. ஒருபக்கம் விடுதலைத் தீயின் கங்குகளும் மறுபக்கம் கோடம்பாக்கத்து கழிவுகளை தினமும் புசிப்பதால் வரும் துர்நாற்றமும்....

தமது தவறுகளை மறைப்பதற்காக வியாபார நிர்ப்பந்தம், போட்டி, ஜனரஞ்சகம் போன்ற வார்த்தைப் பிரயோகங்களையும் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை தமிழ்த் தேசிய ஊடகங்கள். போராடும் இனத்தை பிரதிபலிக்கும் ஊடகங்களுக்கு எங்கிருந்து வந்தது போட்டி....

உயிரைக்கொடுத்துப் போரடுகிறவனுக்கு அது என்ன ஜனரஞ்சகம்....
யாராவது விளக்கமளித்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்.

இனி விடயத்திற்கு வருவோம்.
நாம் யார்? விடுதலைக்காகப் போராடும் ஒரு இனம். எமக்கென்று சில பொதுவான நிலைப்பாடுகள் இருக்கின்றன. அதன் வழியே சில கருத்துருவாக்கங்கள் தோற்றம் பெறுகின்றன. அது என்னவென்று சாதாரண ஒரு நபருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் அது என்னவென்பதை கண்டடைவதும் அதன் வழியே அக்கருத்தியலை வளர்ப்பதும் தான் ஊடகங்களின் பணி என்று சொல்லப்படுகிறது.

உலகில் மனித நாகரீகங்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டமாய் தொடர்பாடலும் அதன் நிமித்தமாய் செய்தி பரிமாற்றமும் அவசியமாகியது. ஊடகங்கள் தோற்றம் பெற்றன. வளர்ச்சிப் போக்கில் நாகரீகங்களின் பரிணாமத்தின் முதிர்ந்த கட்டமான இன்று ஊடகங்கள் செய்திகளை பரிமாறுவதில்லை. செய்தி என்ற வடிவத்தில் தமது அரசியலைத்தான் பேசுகின்றன. தமது தேவை சார்ந்து எழுந்த கருத்துருவாக்கங்களைத்தான் முன்வைக்கின்றன.

இன ரீதியாக, மொழி ரீதியாக, மத ரீதியாக என்று பல வழிகளிலும் பிளவுபட்டிருக்கும் உலகம் தாம் சார்ந்திருக்கும் குழுமம் சார்ந்து எழுந்ததும் தமக்குத் தேவையானதென்று கருதுவதுமான கருத்தியலைத் தமது ஊடகங்கள் வழி தொடர்ந்து கட்டமைக்கின்றன.

உதாரணத்திற்கு அமெரிக்க ஊடகங்கள் என்ன கருத்தியலைப் பேசுகின்றன என்று பார்த்தால் அவை அமெரிக்காவின் சண்டித்தனத்தையும் அதன் உலகப் பொலிஸ்காரன் பாத்திரத்தையும் தொடர்ந்து தக்க வைக்கும் கருத்துருவாக்கங்களைத்தான் பேசுகின்றன - கட்டமைக்கின்றன. வெளிப்பார்வைக்கு பல தோற்றங்கள் காட்டினாலும் அதன் அடித்தளமும் அடிப்படையும் மேற்குறித்த கருத்துருவாக்கங்கள்தான்.

இப்படித்தான் இந்திய ஊடகங்கள் இந்துத்துவத்தையும் பாகிஸ்தானிய ஊடகங்கள் இஸ்லாமிய சித்தாந்தத்தையும் சிங்கள ஊடகங்கள் பௌத்த பேரினவாதத்தையும் பிடித்துத் தொங்குகின்றன. இந்தக் கருத்துருவாக்கங்கள் சரியா தவறா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு இனக்குழுமத்தை அடையாளப்படுத்தும் ஊடகங்களுக்கு ஒரு கருத்தியல் இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்.

ஆகவே எமது தமிழ் ஊடகங்களும் ஒரு கருத்தியலை பேசவேண்டும் என்பது வெளிப்படை. அது என்ன? நாம் ஒரு தேசிய இனம் என்றும் எங்களுக்கென்று ஒரு பூர்வீக நிலம் இருக்கிறதுதென்றும் அதில் நாம் சுதந்திரமாக வாழ அனுமதியுங்கள் என்றும் கேட்டுப் போராடுகிறோம்.

ஆகவே எமது ஊடகங்கள் பேச வேண்டிய கருத்தியல் இதைச்சுற்றியதென்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சரி அது என்னவென்று விரிவாகப் பார்ப்போம்.

முதன்மைக் கருத்துருவாக்கம் 'தேசியம்". இதை மையப்படுத்தி பல கிளைகள் விரிகின்றன. போராட்டத்தையும் விடுதலையையும் ஊடறுத்து எமது மொழி, எமது பண்பாடு, எமது அடையாளம், எமது கலாச்சாரம், எமது வாழ்வு என்று கிளை விரிக்கிறது அது.

எனவே எமது ஊடகங்கள் வழி வெளிப்பட வேண்டியவை இவைதான் - இவை மட்டும்தான். ஆனால் எமது ஊடகங்களைத் திறந்தால் எமக்குத் தெரிவது என்ன? பம்பரம் விடுவதற்கும், ஓம்லெட் போடுவதற்கும் தேவையான புதுப்புது இடங்கள்தான்.

எனவே "சிவாஜி" திரைப்படத்தில் ரஜினிக்காந்த் பம்பரம் விடுவதற்கும், ஓம்லெட் போடுவதற்கும் தேவையான "னகைகநசநவெ டழஉயவழைn" எதையாவது சுட்டிக்காட்டலாம் என்று நினைத்து ஒரு தமிழன் ஓடுவதில் ஏதும் வியப்பதற்கில்லை. இது தமிழ்த் தேசிய ஊடகங்கள் தினம் தினம் வீட்டுக்குள் கொண்டுவந்த கருத்தியல் சிந்தனை. என்னைப் பொருத்தவரை 'சிவாஜி" யைப் பார்க்க ஒருவர் திரையரங்கு செல்லாமல் இருப்பதுதான் ஆச்சர்யமான விடயம்.

'சிவாஜி" மட்டுமல்ல 99 விழுக்காடு கோடம்பாக்க திரைப்படங்கள் எமது மொழி, எமது பண்பாடு, எமது அடையாளம், எமது கலாச்சாரம், எமது வாழ்வு மீது ஒரு வன்முiறாகக் கட்டவிழ்ந்து 'தேசியம்" என்ற முதன்மைக் கருத்துருவாக்கத்தினைச் சிதைத்து எமது பேராட்டத்தையும் விடுதலையையும் பின்னடையச்செய்கின்றன.

எனவே சில தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் 'சிவாஜி" திரைப்படத்தை புறக்கணிக்க முற்பட்ட செயலானது பிரச்சினையின் மூலத்தை - அதன் வேரை விட்டுவிட்டு அதன் ஒரு விளைவு மீது குற்றத்தைச் சுமத்தியதற்கு ஒப்பானது.

நான் ரஜினிக்காந்த் என்ற மனிதருக்கு வருகிறேன். அவர் யார் என்று படத்தை புறக்கணிக்கச் சொன்னவர்கள் தெளிவாகவே பட்டியலிட்டுள்ளார்கள். ஆனால் எமது தமிழ் ஊடகங்கள் அவர் குறித்து கட்டமைத்திருக்கும் பிம்பம் அவரை ஒரு நல்ல நடிகராக மட்டுமே.. இதை எழுதிக் கொண்டிருக்கும் தருணத்தில் கூட ஒரு தமிழ்த் தொலைக்காட்சியில் அவர் நடித்த 'நெற்றிக்கண்" படம் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் விரும்பாத போதும் என் வீட்டிற்குள் ஒரு தமிழ்த் தொலைக்காட்சியின் புண்ணியத்தில் ரஜினிக்காந்த் வந்துவிட்டார். அவர் நாளையும் வரலாம்.....

என் கேள்வி இதுதான். இதையே திரையரங்குக்கு போய்ப்பார்த்தால் மட்டும் ஏன் பிரச்சினை என்கிறீர்கள்? தமிழ்த் தேசிய ஊடகங்கள் ரஜினிக்காந்த் என்ற மனிதரை வீட்டுக்குள் கொண்டு வருவதை முதலில் தடை செய்யுங்கள்.

தழிழ்த் தேசிய ஊடகங்களில் 'கோடம்பாக்க சினிமா" ஒரு பேசு பொருளாக (ஏன் மையப்பொருளே அதுதான்) இருக்கும் வரை தயவுசெய்து யாராவது கோடம்பாக்க சினிமாவை - சினிமாக்காரர்களை - சினிமாக் கலை விழாக்களைப் புறக்கணியுங்கள் என்று போராட்டம் நடத்தாதீர்கள்.

எமது தமிழ் ஊடகங்கள் கோடம்பாக்க சினிமாத் தளைகளிலிருந்து விடுபடும் பட்சத்தில் கோடம்பாக்க சினிமாவிலிருந்து எமது மக்களே அந்நியப்பட்டுவிடுவார்கள்.
போராட்டம் எல்லாம் தேவையில்லை.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் எல்லாவற்றையும் ஒரு ஊடகத்துறை நண்பர் ஒருவரிடம் கூறினேன். அவர் சொன்னார். 'சினிமா இல்லாமல் எந்த ஊடகத்தையும் நடத்த முடியாது. நீ போகாத ஊருக்கு வழி சொல்லுகிறாய்". அதற்கு நான் 'மக்கள் தொலைக்காட்சி" வந்த பின்னும் இன்னும் பித்தம் தெளியவில்லையா என்றேன்.
அவர் சங்கடமாகத் தலையைக் குனிந்து கொண்டார்.

ஒரு இனத்திற்கான ஊடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை 'மக்கள் தொலைக்காட்சி" யைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். கடந்த முறை நான் தமிழ்நாட்டிற்கு சென்றிருந்தபோதுதான் 'மக்கள் தொலைக்காட்சி" யின் ஆரம்ப பணிகள் நடந்துகொண்டிருந்தன. மேற்குறிப்பிட்ட ஊடகத்துறை நண்பர் அடித்த "உழஅஅநவெ" ஐத்தான் நான் தமிழகத்தில் கூறிவிட்டு வந்திருந்தேன். அதற்காக இப்போது வெட்கித் தலைகுனிகிறேன்.

'மக்கள் தொலைக்காட்சி" அது ஒரு ஊடகம் இல்லை. எமது ஊடகக்காரர்களுக்கு அது ஒரு பாடம். தமிழகத்திலேயே இந்தச் சாதனையை அவர்கள் நிலை நாட்டியிருக்கும்போது இங்கு நம்மால் முடியாதா? கிட்டத்தட்ட தமிழகத்தில் 'மக்கள் தொலைக்காட்சி" யின் உதயம் என்பது சூரியனை மேற்கில் உதிக்க வைத்ததற்கு ஒப்பானது.

எமது தமிழ் ஊடகங்களிடம் உள்ள பிரச்சினையே மக்களினுடைய விருப்பாக - தேர்வாக தாமே சில விடயங்களைக் கற்பனை பண்ணிக்கொள்ளவதுதான். இன்று 'மக்கள் தொலைக்காட்சி" மக்களுக்கு எது பிடிக்கும் என்பதையும் கொடுக்கிற விதத்தில் கொடுத்தால் மக்கள் எதையும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் தமிழகத்தில் சாதித்துக் காட்டியிருக்கிறது.

போராடும் இனம் என்ற அடிப்படையில் எமக்குத் தேவையானதும் அவசரமானதும் ஒரு மக்கள் தொலைக்காட்சியே - ஒரு மக்கள் வானொலியே - ஒரு மக்கள் பத்திரிகையே.....
இப்போது இருக்கும் இரட்டைத் தன்மை நிலைப்பாட்டு ஊடகங்கள் எதுவும் வேண்டாம். இது உயிர்ப்பிரச்சினை. பலர் உயிரைக் கொடுத்துப் போராடிக்கொண்டிருக்கும் போது தயவு செய்து 'ஜனரஞ்சகம்" பேசாதீர்கள். உங்களுடைய 'ஜனரஞ்சகம்" எமது தேசியக் கருத்துருவாக்கத்தினைச் சிதைப்பதனால் தயவு செய்து அதிலிருந்து மீண்டு விடுங்கள்.
மேலே குறிப்பிட்டது போல் போல் எமது முதன்மைக் கருத்துருவாக்கம் 'தேசியம்". இதை மையப்படுத்தி பல கிளைகள் விரிகின்றன. போராட்டத்தையும் விடுதலையையும் ஊடறுத்து எமது மொழி, எமது பண்பாடு, எமது அடையாளம், எமது கலாச்சாரம், எமது வாழ்வு என்று கிளை விரிக்கிறது அது.

எமது ஊடகங்கள் வழி 'கோடம்பாக்க சினிமா" கடை விரிப்பது இவை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகச் சிதைக்கிறது. எமது விடுதiலையைப் பின்னடையச் செய்கிறது. இது சாதாரண ஒருவருக்குத் தெரியாமலிருக்கலாம் - ஆனால் தேசியத்தை வரித்துக் கொண்ட ஊடகங்களிற்குத் தெரியாமல் இருப்பது தமிழினத்தின் அவலமா? அறியாமையா?

இறுதியாக ஒரு விடயம். தமிழ்த் தேசியத்திற்கு எதிரான எந்த விடயத்தையும் எதிர்ப்பதென்றாலும் புறக்கணிப்பதென்றாலும் அதை நாம் எல்லோரும் சேர்ந்து செய்வோம். குறிப்பாக தமிழ்த் தேசியத்தைத் தாங்கும் ஊடகங்களின் பங்களிப்பு அவசியம் என்பதை நாம் மட்டுமல்ல அந்த ஊடகங்களும் உணர வேண்டும்.

தமிழ்த் தேசிய ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்காத இரட்டை நிலைப்பாடு எடுக்கும் எந்தப் போராட்டத்தையும் நடத்தாதீர்கள். அது இந்த உலகத்திற்கு எம்மையே இரண்டாகப் பிளவுபடுத்திக் காட்டக்கூடியது. இது எமது போராட்டம் சார்ந்த நல்ல அறிகுறி அல்ல.....

ஒரு கொசுறுச் செய்தி:

நான் நாளை 'சிவாஜி" திரைப்படம் பார்க்க திரையரங்கு செல்கிறேன். வீட்டுக்குள் மட்டுமல்ல நான் செல்லுமிடமெல்லாம் என்னைப் பின்தொடரும் தமிழ் ஊடகங்கள் என்னைத் தொடர்ச்சியாக 'சிவாஜி" திரையரங்கை நோக்கிக் துரத்திக்கொண்டேயிருக்கின்ற��
. நான் தமிழ்த் தேசியத்தை இறுகப்பற்றியவன். அதன்வழி நடப்பவன். தமிழ்த் தேசிய ஊடகங்களின் இந்த அழைப்பை தொடர்ச்சியாக நிராகரிப்பதனூடாக எனது தேசிய அடையாளத்தை இழந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன். அதனால்தான் எனது 'தேசிய" அடையாளத்தைக் காப்பாற்ற நான் நாளை 'சிவாஜி" திரைப்படம் பார்க்க திரையரங்கு செல்கிறேன்.
http://www.tamilnaatham.com/articles/2007/...ani20070706.htm

வெள்ளி, ஜூலை 06, 2007

சினிமா மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்-திலகவதி.

பழனி: சினிமா மோகத்தால், சீரழியும் இளைஞர்கள், கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வது, படம் பார்க்க கால் கடுக்க தியேட்டர்கள் முன்பு காத்துக் கிடப்பது ஆகியவற்றை விட்டு விட்டு அறிவுப்பூர்வமாக சிந்திப்பதில் நேரத்தை செலவிட வேண்டும் கூடுதல் டிஜிபி திலகவதி கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கலை இரவு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்டு திலகவதி பேசுகையில், சினிமாவும், டி.வி.யும் சேர்ந்து இன்றைய சமுதாயத்தை மிகவும் பாதிக்கின்றது. இதன் மூலம் எந்த ஆங்கில ஆதிக்கம் வேண்டாமென்று நாம் சொன்னோமோ அது மீண்டும் நமது நாட்டில் வந்து விட வாய்ப்புள்ளது.

பெரும்பாலான இளைஞர்கள், சினிமா மோகம் கொண்டு அலைகின்றனர். எந்த சினிமா ரிலீஸ் ஆனாலும், நடிகர்களின் கட்-அவுட்டுக்கு மாலை இடுவதும், பாலாபிஷேகம் செய்வதும், படத்தைக் காண டிக்கெட்டுக்காக கால் கடுக்க வரிசையில் நிற்பதுமாக சீரழிந்து வருகிறார்கள்.

திரைப்படங்கள் கவர்ச்சியைக் காட்டி பணம் சம்பாதிக்கின்றன. இதில் பெரும்பாலான இளைஞர்கள் நேரத்தை வீண் செய்வதை விட்டு விட்டு அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும்.

திரைப்படங்கள் மூலம் வன்முறை, கொலை, கொள்ளை தான் அதிகரிக்கின்றதே தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.

குடும்ப நல ஆணையத்தின் கணக்கெடுப்பின் படி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, அநியாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே, இளைஞர்கள் பகத்சிங், சேகுவாரா போன்ற தியாகிகளைப் போன்று, உண்மைக்காக போராட வேண்டும் என்றார் திலகவதி.
மூலம்: http://thatstamil.oneindia.in/news/2007/07...ilagavathy.html

வியாழன், ஜூலை 05, 2007

உலக அளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சினிமா கோட்பாடுகளை உடைத்தெறிந்த சிவாஜி!!!

ஒரு படத்தால் 3 மாதம் பீதி : "சிவாஜி' குறித்து நாசர்

தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தால் கடந்த 3 மாதங்களாக பீதி ஏற்பட்டது. இதனால் மற்ற படங்களைத் திரையிடுவதில் பாதிப்பு நீடிக்கிறது என "சிவாஜி' பற்றி நடிகர் நாசர் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நியூ டவுன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நாசர் பேசியதாவது: தமிழ் சினிமாவில் வன்முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 1,000 பக்கங்களுக்கு மேல் எழுதலாம்.

சுதந்திரப் போராட்டக் காலத்தைவிடவும் மிக முக்கியமான ஒரு நெருக்கடியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; அதிகமான பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன. ஆனால், இங்கு சினிமா என்பது வியாபாரம் மட்டுமே. பணத்தைப்போட்டு பணத்தை அள்ளுவதற்கான ஒரு கருவி.

ஒரு சினிமா முழுமையாக கலைஞனுடைய ஆளுமைக்குள் வரும்போதுதான் அவனால் சாதிக்க முடியும். சில பேர் சேர்ந்து இதற்காக முயற்சி செய்து வருகிறோம். நான் ஒட்டுமொத்த சினிமா உலகத்தைப் பிரதிபலிப்பவன் அல்லன். இதற்கு மாறாக ஏதேனும் செய்தால் என்னை சாதியைவிட்டு (சினிமா) விலக்கி வைத்து விடுவார்கள்.

ஆஸ்கர், கேன்ஸ் விருதுகள் நமக்கு கிடைக்கவில்லையே என்று பலர் கேட்கிறார்கள். ஆஸ்கர் விருது என்பது ஓர் அமெரிக்கக் குறியீடு; அது அமெரிக்கப் படங்களுக்கானது. நாம் எல்லாவற்றுக்கும் அமெரிக்காவை முன்மாதிரியாகக் கொள்ள முடியாது.

சிறந்த படங்கள் கேன்ஸ் விருது பெற வாய்ப்புள்ளது. விருதுக்காக படம் எடுக்க முடியாது. நல்ல படமாக இருந்தால் விருது கிடைக்கும். "அவதாரம்' நல்ல படம் என்று என்னால் தைரியமாக சொல்ல முடியும். ஆனால், அந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருதை "அருணாசலம்' படத்துக்கு கொடுத்தார்கள். சொந்த மண்ணிலேயே தரமான படம் மதிக்கப்படவில்லை. அதைப்பற்றி நாம் யாரும் பேசவில்லை. ஆனால், ஆஸ்கரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்.

கடந்த 3 மாதங்களாக ஒரு படம் வருகிறது என்று ஏற்படுத்தப்பட்ட பீதியால் மற்ற படங்களை வெளியிட முடியவில்லை. அந்தப் படம் வெளியான பின்னரும் இதுவரை எந்த படத்தையும் திரையிட முடியவில்லை.

தமிழ் சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டோம். பாதி நேரம் சண்டை, மீதி நேரம் பாட்டு... நடிப்பதற்கு ஏது நேரம்?

சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பற்கு உலகளாவிய கோட்பாடு இருகிறது. உலக அளவில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சினிமா கோட்பாடுகள் எல்லாம் பொய்த்து - தோற்றுப் போகக்கூடிய ஓர் இடம் தமிழ் சினிமாதான்.
- நன்றி: தினமணி
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us