திங்கள், மே 28, 2007

பெண்கள் தண்ணி அடிக்கலாமா?


http://sayanthan.blogspot.com/2007/05/blog-post_27.html

தண்ணி அடிப்பதை பற்றி இங்கே ஒரு விவாதம நடக்கிறது, இது நகைச்சுவையாக இருந்தாலும், யோசிக்கவேண்டியவிடயம். என்னை பொறுத்தவரையும் விரும்பியவர்கள் அடிக்கலாம், விரும்பாதவர்கள் அடிக்காமல் விடலாம், ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. என்னவெனில் ஆண்கள் அடித்தால் இந்த சமுதாயம் பெரிதாக கண்டு கொள்வதில்லை, ஆனால் அதைபெண் செய்தால் பெரிதாக தூக்கிபிடிக்கிறது, அதன் பின்னர் அந்த பெண்ணுக்கு முன்னர்கிடைத்த மரியாதை கிடைக்குமா? அதற்கு முன்னர், அந்த கணவர் முதலில் அதற்கு அனுமதி கொடுப்பாரா?

பொதுவாக இந்த தண்ணி எனப்படும் அல்கஹோல் உடலுக்கு கேடானது. மனித உடலுக்கு தீங்கானது, அதை ஆண் செய்யும் போது ஒரு கண்ணோட்டத்திலும் பெண்செய்யும் போது வேறு கண்ணோட்டத்திலும் பார்ப்பது ஏன்? ஆணைவிட பெண் அச்செயலை செய்யும் போது, அது குடும்பத்துக்கும் ,சமுதாயத்துக்கும் அதிக கேட்டை தரக்கூடியாதா? அதனால்தான் இந்த ஆண் ஆதிக்கவாதிகள் பெண்களுக்கு கார் லைசன்ஸை கட்டாயமாக பழக்கிறார்களா?

"அளவாக அடித்தால் அதுவே மருந்து"

"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு"
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us