சனி, டிசம்பர் 31, 2005

எனது புதுவருட உறுதிமொழி

நான் ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு உறுதிமொழிகளை எடுப்பேன். அது என்னவாகிலும் இருக்கலாம். அதன் படி நடக்கவேண்டும், அதனை நடத்திமுடிக்க வேண்டும் என்று, வருட ஆரம்பத்தில் நினைத்து உறுதிமொழி எடுப்பேன். ஆனால் வருட இறுதிக்குள் அது என்னை பாடாய்படுத்தி, முடிக்கவிடாமல் செய்து விடும். என்ன உறுதிமொழி எடுக்கிறேனோ அதை நடக்கவிடாமல் செய்வதுக்குரிய நிகழ்வுகள் அந்த ஆண்டுமுழுதும் நடக்கும்.

ஆதலால் இந்தமுறையும் ஒரு உறுதிமொழி எடுத்திருக்கிறேன். அது என்னவென்றால் ஹி.......ஹி...... "இனி உறுதிமொழி எடுப்பதில்லை" என்னும் உறுதிமொழியை எடுத்திருக்கிறேன்.

எங்கே வலைபதிபவர்களே உங்கள் உறுதிமொழிகளையும் கூறுங்கள் பார்ப்போம்.

அனவருக்கும் புதுவருடவாழ்த்துக்கள், உங்கள் உறுதிமொழிகளில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

சனி, டிசம்பர் 24, 2005

ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை

மீண்டும் பிறந்து வா

அண்ணா பரராஜ சிங்கமே
சிங்களப்படைகளின் கூலிகளால்
அனியாயமாக வீழ்ந்தாயே!
நியாயம் வாழவேண்டும் என
நீதியின் முன் எமக்காக
வாதாடிய எம் தங்கமே!
பாலன் பிறக்கும் நாளில்
பாதகர் காத்திருந்து
உம்மை சரித்தனரே!
அகிம்சை வழியில்
அழிவு வராதென
இறுமாந்து இருத்தாயா?
ஜயா இது ஜேசுவையே
காட்டிக் கொடுத்த
உலகம் ஜயா!
பாலனின் கோவிலில்
வைத்து உன் கதைமுடித்து
நாம் அவர்கள் எச்சமென காட்டியுள்ளனர்!
பாலன் பிறந்த நாளில்
இறந்தாயே மீண்டும் பிறந்துவா
ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்கவா.

வெள்ளி, டிசம்பர் 02, 2005

புலிவாழ் குகை


செருக்களம் சென்ற தன் வேங்கை
மார்பில் தைத்த கணைதாங்கி வீழ்ந்தான்
எனக்கேட்டு துடித்தாள் தாயொருத்தி,
மறு பிள்ளை இல்லையே
போர்க்கனுப்ப எனக்கென்று
தவித்தழுதாள் அன்று,
தன்பிள்ளை போர்க்களத்தில்
வீரமரணம் அடைந்தான்
என்ற செய்தி கேட்டு,
வீனே அழுது புலப்பாது
மறு பிள்ளை எனக்கில்லை இதோ
நான் இருக்கிறேன் என எழுந்த அன்னையே,
தருக்கர் பகை முடிக்க
செருக்களம் நோக்கி விரையும்
புலிவாழ் குகையே நிவிர் வாழி.

செவ்வாய், நவம்பர் 22, 2005

இயந்திர மனிதன்


குளிர்ந்த காலைவேளையில்
பனித்துளிகள் மூடி நிற்கும்!
பனித்துளியின் பாரம் தாங்காது
இளம்தளிர்கள் தலை சாய்த்திருக்கும்!
அவற்றுக்கு விடுதலை கொடுப்பதற்கு
புறப்பட்டான் இளம் சூரியன்!
அவன் கதிர்பட்டவுடன் உருக்கிய
வெள்ளி போன்று கரைந்தோடியது பனி!
கதிரவனின் வருகையினால்தான்
எத்தனை ஆர்ப்பாட்டம்!
அவனை வரவேற்க
ஒவ்வொரு உயிரினமும் கானம்பாடின!
குஞ்சுகள் கூட தமது
சின்னவாயால் வரவேற்பு கொடுத்தன!
மொட்டுக்கள் அவிழ்ந்தன
பூ மணம் பரப்பின!
விலங்கினங்கள் கூட
கண் விழித்தன!
மனிதன் மட்டும்
போர்வைக்குள் முடங்கிக்கிடந்தான்!
அவனை எழுப்ப வேண்டும்
கடிகார சத்தம்!
இன்ப ஓசையில் எழும்பாத அவன்
இயந்திர ஒலியில் இயந்திரமாய் எழுந்தான்.

செவ்வாய், அக்டோபர் 11, 2005

நாய்படும் பாடும், நாய்படா பாடும்


நம்மை பற்றி பேச நாலு சனம் இருக்கு, நாய பற்றி பேச யார் இருக்கிறார்கள். அதனால் நாயப்பற்றி நான் பேசுகிறேன். பின்னர் யாரும் வந்து நாயின் பெயரில் பேசக்கூடாது, யாரடா உணக்கு அதிகாரம் தந்தது எம்மை பற்றி பேச என்று, அதனால் முதலிலேயே இங்குகூறிவிட்டால் தப்பித்துக்கொள்ள ஏதுவாக அமையும் அல்லவா? இது ஒருவகை பாதுகாப்புதான்.

குளக்காட்டான் போட்ட ஒழுங்கை படத்துக்கு, பூராயம் ஒழுங்கை பற்றி எழுத, அது பற்றி தொடர்ந்து உறவுகள், துரத்தும் நாய்களைப்பற்றி பேச, எழுந்ததே இக்கட்டுரை.

நாய்களில் பலவிதம் உண்டு, பணக்கார நாய்கள் அதை விட்டு விடுவோம். நான் பேசஎடுத்தது சாதாரன நாய்கள். இவையின் பாடு பெரும் பாடுதான்.

ஒரு அலுவல் கனநாட்களாக முடிக்க முடியாது இழுத்துக்கொண்டு சென்றால் சொல்வார்கள், "நாய் படாத பாடு படுறன் அலுவல்தான் முடியுது இல்லை" என்று. நாயுக்கு உன்மையிலேயே அலுவல் இருக்குதா? அதை முடிக்க அது பாடு படுதா? அது சும்மா ஒரு இடத்தில் இருக்காது எந்தநேரமும் ஓட்டமும் நடையும்தான். அதையும் சொல்வார்கள், "நாயுக்கு நிக்க நேரமும் இல்லை செய்ய வேலையும் இல்லை" என்று.
உண்மயில் இங்கத்திய நாய்களை விட எங்கள் ஊர்நாய்கள் பாவம்தான். நாய்கள் அங்க வாழுறது என்பதே பெரும்பாடுதான். ஓரளவு வசதியான ஆக்கள் வளர்க்கும் நாய்கள் பாடு பறவாய் இல்லை. வசதி குறைந்த ஆட்களும், வசதி இல்லாவிட்டாலும் நாய் வளர்க்கும் ஆசையில் வளப்பவர்கள் நாய்களும், தெரு நாய்களும் படும் பாடு பெரும்பாடு.

அவைக்கு முதல் பிரச்சனை உணவு, உணவு காணாமையால் அல்லது இல்லாமையால் அவை முதல் செய்யிற வேலை களவு. களவு என்றால் பெரிய கள்ளக்கடத்தல் அல்ல, உணவின் உரிமையாளருக்கு தெரியாமல் உணவை எடுத்து வருதல், அல்லது அங்கேயே வைத்து உண்ணுதல். இதை சமுதாயம் களவு என்கிறது. அது அதுகளுக்கு தெரியுமா? அது தெரியாமல் அடி வாங்குகின்றன. அடிவாங்கியபின்னர் தப்பித்து ஓடுகின்றன. சிலதுக்கு அடிவிழும் சிலதுக்கு அடிவிழாது, அடி விழுந்தாலும் நொண்டி நொண்டி ஓடித்தப்பும்.

நானும் ஒரு நாய் வளர்த்தேன். நான் சாப்பிடுகிறேனோ இல்லையோ நாய்க்கு மட்டும் சாப்பாடு வைத்து விடுவேன். ஆனால் ஒவ்வரு நாளும் காலையில் கரிபூசியமுகத்தோட கானப்பட்டார். இரவில் நாய்களை அவிழ்த்து விடுவது வழமை. இரவுதானே அவையளின் காவல்கடமை. கரிபூசிய மூஞ்சையை பார்த்த உடனேயே எனக்கு விழங்கிட்டுது, அண்ணாத்தை இரவில் எங்கயோ போய் அலுவல் குடுத்திட்டு வாறார் என்று. எப்படி கண்டு பிடிக்கிறது, ஒரு நாள் அவராவே மாட்டுப்பட்டார் வரும்போது ஒரு அப்ப சட்டியோட வந்தார். நீங்கள் நினைக்கக்கூடாது நான் பழக்கின விளையாட்டு என்று. எங்கள் ஊரிலேயே ஒரேஒரு அப்பக்காற ஆச்சிதான் இருக்கிறா, சில நாட்களின் பின் அவர் வீட்டுபக்கம் வாறதே இல்லை. அப்பக்காற ஆச்சி வீட்டுக்கு போனால் அங்க இருப்பார். கூப்பிட்டாலும் வர மாட்டார் கட்டி இழுத்துக்கொண்டு வருவம், திரும்பவும் போயிடுவார். அங்க ரெண்டு பெடியள் இருக்கிறாங்கள் அவங்கள்தான் எங்கட நாயுக்கு அப்பத்தை குடுத்து மயக்கி போட்டாங்கள் என்று, நானும் தம்பியும் அவங்களோட சண்டையும் போட்டு இருக்கிறம். அவங்களோட சண்டை போட்டாலும் எங்கட நாய் கேட்டால்தானே, சொன்னாலும் நாயுக்கு விளங்கவாபோகுது. பாத்தம் நாயுக்கு அப்பம்தான் விருப்பம் என்றால் அதோட ஆசையை ஏன் கெடுப்பான். அவங்களிடமே நாயை குடுத்துவிட்டோம், நாங்கள் எங்க குடுத்தம் அதுவே ஓடிப்போயிட்டுது.

வளர்த்த நாய் ஓடிப்போனாலும் நாய் வளர்க்கும் ஆசை மட்டும் எங்களை விட்டு போகவில்லை. ஊரில நாய்க்கா பஞ்சம், திரும்பவும் ஒரு நாய் அதன் முடிவு சோகமானது. லிபரேஷன் ஒப்பிறேஷன் நேரம். பொம்மறும், நேவியும் அடித்த அடியில் ஓடிவிட்டோம் கட்டி இருந்த நாயை கவனியாது. ஏழு நாட்களின் பின் வந்து பார்த்தபோது, சங்கிலியில் முறுகி செத்துக்கிடந்தது. அந்த சோகம் இன்னும் உண்டு.

அதோடசரி நாய் வளர்க்கும் ஆசை, அதன் பின் புலம்பெயர்ந்து விட்டோம். அதுகள் எங்களுடன் வாழ்ந்தகாலத்தில் அவையளின் விளையாட்டு சொல்லி மாளாது. ஒழுங்கயால் ஒரு சனமும் போய்வர ஏலாது. பிச்சைக்காரர் வந்தால் அவை துலஞ்சினம், துண்டகாணல்ல துனியகானல்ல நிலைதான்.

ஜரோப்பாவுக்கு வந்தவுடன் அவைக்கு இருக்கிற மரியாதயை பாத்து பெரிய ஆச்சரியம்தான்.
அவையை கிழவிமார் தூக்கிக்கொண்டும் போவினம். குளிர்காலத்தில் அவைக்கு குளிருடுப்பும் போட்டு விடுவினம். படுப்பதுக்கு வீட்டிக்குள் குட்டி மெத்தை சாப்பிட சாப்பிட குறையாத சாப்பாட்டு தட்டு, நேற்று வேலைக்கு போகும் போது பார்த்தேன், குழந்தைகளை வைத்து தள்ளும் வண்டிலில் வைத்து ஒரு நாயை, கிழவி ஒண்று தள்ளிக்கொண்டு போகுது. அது குஜாலா இருந்து கொண்டு போற வாற ஆக்களை பாத்துக்கொண்டு போகுது. ராஜ வாழ்க்கைதான் போங்கள்.

எங்கள் நாய்கள் பாவம் இங்கத்திய நாய்கள் கொடுத்து வைத்தவை என்று சொல்வோம் என்று பார்த்தால், இங்கத்திய சில நாய்களும், நாய் படாப்பாடு படுகினம். இங்கையும் அவை போய் சேரும் இடத்தை பொறுத்தது. "பெனா" என அழைக்கப்படும் பிச்சைகாரர்களிடம், இவர்கள் உண்மையில் பிச்சைகாரர் இல்லை, ஏனெனில் இருக்க வீடும், உண்ண உணவும், உடுக்க உடையும் இருக்கும் இவர்கள் எப்படி? பிச்சைக்காரர்கள் ஆவர், இவர்களுடன் ஒப்பிடும்போது எங்கள் ஊர் பிச்சைகாரர்கள் பாவம். இதுவேறு ஒரு தலைப்பு அதை பிறகு பார்ப்போம். இவர்கள் வளர்க்கும் நாய்கள் பாவம்தான். இத்தனைக்கும் இவ் அரசு நாய்க்கும் சாப்பாட்டுக்கு காசு கொடுக்கிறது. இவர்கள் நாயை வளர்ப்பதே இதற்க்காகத்தான். அதோடகாசுக்கும் வாங்கி குடித்து விடுவார்கள். போனால் போகுது என்று ஒரு சொற்ப உணவை போடுவார்கள். பசிவெறியில் திருப்பி தம்மை கடித்து விடக்கூடாது என்பதற்க்காக. தெளிவாக இருந்தால் ஞாயம் கேட்கும் என்றோ என்னவோ அவைக்கும் கொஞ்சம் பியர் ஊத்தி விடுவினம், தண்ணி இல்லாட்டி அதுகளும் என்ன செய்யும் குடித்து விட்டு போதையில் படுத்து விடும். அதுகளும் பெரும்பாடுதான் படுகிறது.

இவ்வளவு மிருகங்கள் உலகத்தில் இருக்க, இந்தநாய்கள் வந்து எப்படி மனிதர்களுடன் இனைந்து கொண்டன? ஆதிகாலத்தில் நாயும் காட்டு விலங்குதான், ஏன் மனிதன் கூடத்தானே. நாயால் சிங்கம், புலி போல் வேட்டையாட முடியவில்லை, சிங்கம் புலிகூட கூட்டுவைக்க முடியுமா? கடிச்சு போடுங்கள். பாத்திச்சு நாய் மனிதனுக்கு கிட்டபோய் நின்றிச்சுது. சும்மா நின்றால் தப்பா நினைப்பான் என்று, வாலை வேறை ஆட்டிச்சுது. அவனும், தான் சாப்பிட்ட மிச்சமீதியையும், எலும்புகளையும் போட்டான். சும்மா இருந்த நாய்க்கு இது போதாதா? அப்படியே சேந்திச்சு, அடிச்சு துரத்தினாலும் அதுக்கு வேற ஏது போக்கிடம் திரும்பவும் வந்து வாலை ஆட்டிக்கொண்டு நிக்கும். மனிதனும் பார்த்தான் ஆஹா நன்றி உள்ள பிராணி நாய் என்றான். தான் போட்ட உணவை மறக்காது நன்றியோடு திரும்பவும் வந்திட்டுது என்று நினைத்தான். நாயோ அடுத்த வேளை சாப்பட்டுக்காக திரும்பவும் கூட்டு சேர்ந்து கொண்டது. இப்பொது அது வீட்டு நாய்.
இங்கு அதற்கு ராஜபோக வாழ்க்கை, பிழைக்கத்தெரிந்தநாய்.

ஞாயிறு, அக்டோபர் 09, 2005

இழப்பு


கடற்கரை ஓரத்தில்
கற்பாறையில் கடல் அடித்திருக்கும்!
நெஞ்சின் ஓரத்திலே
உன்நினைவுகளை இதயம் சுமந்திருக்கும்!
சில்லிடும் கடற்காற்றில்
நான் காத்திருந்தேன்!
நீ என்னை கடந்து செல்கையில்
என் கண்களைப் பார்த்திருந்தாய்!
என்னை கண்டவுடன்
மலரும் உன் முகமென்ன!
ஆனந்தத்தில் தாவி ஓடும்
உன் நடை என்ன!
உன்னிடத்தில் எனக்கோ மயக்கம்
ஆயினும் பேச தயக்கம்!
பேசாத என்னைக்கண்டு உனக்கு கோபம்
ஆயினும் என்னைக்கண்டு நாணம்!
காலம் என்னை உன்னிடத்தில்
இருந்து பிரித்துவிட்டது!
நீயோ உன் நெஞ்சில் இருந்து
என்னை தூக்கி எறிந்து விட்டாய்!
காதலை வெளிப்படுத்தத் தெரியாத எனக்கு
இப்பேரிடி தேவையான ஒன்றுதான்.

செவ்வாய், அக்டோபர் 04, 2005

இயற்கை

இறைவன் படைப்பில்
எத்தனை புதுமை!
அத்தனையிலும்
வைத்தான் இளமை!
நீலவானத்தில்
ஓடித்திரியும் நிலவு!
அதற்கு தோழியர்
எத்தனபேர் முகில்களாக!
வாணத்து தேவதைக்குக்கூட
நடக்குது வலைவீச்சு!
எத்தனை நட்சத்திர இளைஞர்
கண்சிமிட்டும் போட்டி!
அவள் உடுத்திக்கொள்ள
ஏழுவர்ணத்தில் சேலை!
அச்சேலைக்குக்கூட
எத்தனை அலங்கரிப்புவேலை!
பன்னீர் தூவும் பனித்துளிகள்
அவள் குளிப்பதற்கு மழைத்துளிகள்!
இளம்காலைப்பொழுதில்
வந்துவிட்டான் அவளது காதலன்!
அவன்வருகையை பறைசாற்ற
எத்தனை உயிர்களின் ஆர்பரிப்பு!
காதலனை கண்ட அவளோ
வெட்கத்தில் ஒளிந்து கொள்ள!
அவளைக்காணாத கோபத்தில்
அவனோ எம்மை சுட்டெரிக்கிறான்.

திங்கள், அக்டோபர் 03, 2005

காத்திருப்பு

உனக்காக நான் சந்தியில் காத்திருந்தேன்
நீ வரும் திசையை என்றும் பார்த்திருப்பேன்!
தூரத்தில் உனது உருவம் கண்டால்
என் உடல் குளிர்ந்திருக்கும்!
உன் தரிசனம் கிடைத்துவிட
தன்னந்தனியாக புலம்பி நிற்பேன்!
நீ அருகில் நெருங்க நெருங்க
எனது இதயம் நொருங்கும்படி அடித்திருக்கும்!
உன்னை அருகில் கண்டவுடன்
எனது இரத்தம் உறைந்துவிடும்!
உனது தலை எனது பக்கம் திரும்ப
எனது விழிகள் படபடத்து மூடும்!
உன் முகத்தை முழுவதும் கண்டுவிட்டால்
என் தொண்டைகுழி ஏறி இறங்கும்!
உன்னுடன் பேச நினைக்கையிலே
நா உலர்ந்து பேச மறுக்கும்!
உனது நடை வேகம் குறைய
எனது கைகள் பிசைந்திருக்கும்!
என்னை தாண்டி நீ செல்கையில்
மூக்கையே சுட்டெரிக்கும் பெருமூச்சு வெளிவரும்!
முன்னே சென்று நீ திரும்பிப் பார்த்தால்
எனது நெஞ்சு விம்மித் தவிக்கும்.

லிபரேஷன் ஒப்பிரேஷன்





வீதி எங்கும் சடலம்
எத்தனை போர் எடுப்பு படலம்!
உருண்டு செல்லும் தலைகள்
பிணங்களால் எத்தனை மலைகள்!
தனித்தனியாக எத்தனை கைகால்கள் தெரியும்
இது யார் யாருடையது என்று எங்குபுரியும்!
சிதறிய கண் துடிக்குது
அது யாரை எண்ணி ரத்தம் வடிக்குது!
எங்கும் ஈயக்குண்டின் ரீங்காரம்
எத்தனை உடல்களை துளையிட்டு செல்லும் சிங்காரம்!
திடீர் திடீரென பெரும் இடிகள்
இவைகள் நம்மை நோக்கிவரும் பீரங்கிவெடிகள்!
விமானங்கள் கூட போடுது குண்டு
எம் தலைகளை சரியாகக் கண்டு!
எதற்கு இந்த வெறி ஆட்டம்
பிணங்களின் மணமோ தாங்கவில்லை நாற்றம்!
எமது மண்ணை தனதாக்க
நடக்குது யுத்தம்!
இவர்களுக்கு மண்பறிப்புப் போராட்டம்
எமக்கு மரணப்போராட்டம்.

செவ்வாய், செப்டம்பர் 27, 2005

அம்மா



அம்மா என்காத உயிர் இல்லையே

அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே!

எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள்

எம்மை கண் இமைபோன்று காத்திருப்பாள்!

எம்மை காக்க அரும்பாடு பட்டாள்

எம்மை சான்றோனாக்க பெரும்பாடுபட்டாள்!

திட்டிப்பேசினாலும் வட்டிலில் சோறுவைப்பாள்

எமைக்காக்க இரவில் விழித்திருப்பாள்!

எமக்காகவே உழைத்திருப்பாள்

எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்!

தன்வயிறு தகித்திருந்து எம்வயிறு குளிர

தன்வயிறு பசித்திருந்து எம்வயிறு புசிக்க!

தன் உணவுசேர்த்து எம்வட்டிலில் போட்டு

நாம் உண்ணும் அழகு கண்டு மனம் களித்திருப்பாள்!

தன் உயிர் கொடுத்து எம் உயிர் வளர்த்தாள் அன்னை

அவள்தான் நான் கண்ட முதல் தெய்வம்.

வெளிநாடு

வெளி நாடு வந்து விட்டால்
பல நோடு உழைத்திடலாமென்பர்!
ஒரு நோடும் இங்கில்லாது
கடநோடு இங்கிருக்கிறோம் இன்று!
பலனேதும் இல்லாது பலமோடு
பார்த்திருப்போம் பல காலம்!
வருடம் ஒன்றாகியும் வேலை இல்லை
நிரந்திரமான விசாவுமில்லை!
இல்லை என்ற வார்த்தை
எம் வாழ்வில் இல்லை என்று!
இறுமாந்திருந்த எமக்கு
வாழ்வே இல்லை.

மது

பட்டையே உனக்கு பிடித்த சரக்கு
அது உன் கழுத்துக்கு சுருக்கு!
குடிப்பதால் உனக்கு மட்டும் இன்பம்
உன்கூட இருப்பவர்களுக்கு துன்பம்!
குடித்தபின் உனக்கு வெறி
அதற்க்கு தொட்டுக்கொள்ள வேண்டும் கறி!
குடியரக்கன் குறித்துவிட்டான் தேதி
உனக்கு தெரியுமா இச்சேதி!
குடிப்பவர்களே அதனை நிறுத்து
இல்லையெனில் கால்களை போடுவேன் முறித்து!
உனது அழகு எங்கோடிப்போனது
இன்னமும் வேண்டுமா உனக்கு அது!
நடுரோட்டில் நீ வீழ்ந்துகிடந்தால் அவமானம்
இதற்க்கு மேலும் உனக்கு இருக்குதோ மானம்!
வருங்கால குடிமகனே கேள்
உனது சந்ததி அழிவதைப் பார்!
போதும் உனக்கு கள்ளச்சாராயம்
செய்து அலுத்து விட்டேன் பிரச்சாரம்.

தம்

தம்மு அடித்துவிட்டால் வந்துவிடும் கிக்கு
அதனுடன் கொசுறாக கிடைத்துவிடும் பக்கு பக்கு!
சிகரட்பிடிப்பதை நாகரீகம் என்கிறாய்
இதற்காக பின்னால் தொங்குகிறாய்!
உள்ளிழுத்து வெளி விட்டாய் புகை
அதுவே உன் நுரையீரலுக்கு பகை!
பில்ரர் உள்ளது அடித்தால் பாதுகாப்பு என்பாய்
பின்னர் பில்ரரையே தம்மாக அடிப்பாய்!
வளையம் வளையமாக விடுவதில் நீ குரு
இதனால் மாறுவது உன் உரு!
ஆப்பிள் போன்ற உன் கன்னம்
பின்னர் ஆஸ்ரேயாகிப்போன கிண்ணம்!
உனக்கு பிடித்த சிகரட் பில்ரர் கோல்ட்
அது உன் வாழ்வுடன் விளையாடும் பிளேயர்!
உனக்கு செயின்சிமோக்கர் என்று பெருமை
அதுவே உன் மடமை!
சிகரட் பிடிப்பதை நீ நிறுத்தாட்டி
உன்னை பிடித்து விடும் நிக்கட்டின்!
நண்பர் மத்தியில் நீ புகை மன்னன்
உனது குடும்பமே இதனால் புகையுது கண்ணா!
புகை உனக்கு பகை
இதை கூறுபவர்கள் உங்களுக்கு என்றுமே பகை.

நுரை

கடல் தள்ளும் நுரை கூட
உன் கால் கண்டவுடன்
கரைந்து போனதென்ன.

குளிர்


குளிர்ந்த காற்று கூட
உனைக்கண்டதும் குளிர்ந்து
பனியாய் படர்வதென்ன.

செவ்வந்திப்பூ

செவ்வந்திப்பூ என்று நான் இருந்தேன்
சென்று தொட்டுப்பார்த்தபோதுதான்
தெரிந்தது அவள் பூவல்ல செந்தீ என்று.

வணக்கம்


பிருந்தனின் பக்கம்
உங்களை அன்புடன்
வரவேற்கிறது.

கவிதைகள்

புகைப்படங்கள்

ஓவியங்கள்

காவியங்கள்

துனுக்குகள்

நகைச்சுவை

கட்டுரை

கதைகள்

அறிவியல்

செய்திகள்

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us