
இறைவன் படைப்பில்
எத்தனை புதுமை!
அத்தனையிலும்
வைத்தான் இளமை!
நீலவானத்தில்
ஓடித்திரியும் நிலவு!
அதற்கு தோழியர்
எத்தனபேர் முகில்களாக!
வாணத்து தேவதைக்குக்கூட
நடக்குது வலைவீச்சு!
எத்தனை நட்சத்திர இளைஞர்
கண்சிமிட்டும் போட்டி!
அவள் உடுத்திக்கொள்ள
ஏழுவர்ணத்தில் சேலை!
அச்சேலைக்குக்கூட
எத்தனை அலங்கரிப்புவேலை!
பன்னீர் தூவும் பனித்துளிகள்
அவள் குளிப்பதற்கு மழைத்துளிகள்!
இளம்காலைப்பொழுதில்
வந்துவிட்டான் அவளது காதலன்!
அவன்வருகையை பறைசாற்ற
எத்தனை உயிர்களின் ஆர்பரிப்பு!
காதலனை கண்ட அவளோ
வெட்கத்தில் ஒளிந்து கொள்ள!
அவளைக்காணாத கோபத்தில்
அவனோ எம்மை சுட்டெரிக்கிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக