செவ்வாய், டிசம்பர் 25, 2007

கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்!!!

பாடலை பார்க்க வானொலியை நிறுத்திவிட்டு பார்க்கவும்.

ஒலிவடிவம்:

1. ஈ சினிப்ஸ்
2. ஐஜிக்

பாடல்வரிகள்: தமிழ் - Thusnavis ஆங்கிலம் - கலைஞன்
குரல்: கலைஞன் லாவண்யா அபிஷன்
இசை: டிசான்

புதிய வானமும் புதிய வையமும் புலரும் நேரமிது!
கன்னி மரியிடம் யேசு பாலகன் பிறந்த இரவும் இது!
புதிய வானமும் புதிய வையமும் புலரும் நேரமிது!
கன்னி மரியிடம் யேசு பாலகன் பிறந்த இரவும் இது!
எழுவோம்! நாங்கள் எழுவோம்! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!
மகிழ்வோம்! நாங்கள் மகிழ்வோம்!! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!

jESUS WE LOVE YOU! weLcome to the world!
ஆ... ஆ.... ஆ..... ஆ...

பா வங்கள் சூழ்ந்த உலகம் தூய்மை பெற
தா வீது மரபில் திருமகன் தோன்றினான்!
பா வங்கள் சூழ்ந்த உலகம் தூய்மை பெற
தா வீது மரபில் திருமகன் தோன்றினான்!
மண்ணில் கலந்திடும் மழைத்துளி போல்
எம் மன்னவன் யேசு வருகின்ற நேரம்..
மண்ணில் கலந்திடும் மழைத்துளி போல்
எம் மன்னவன் யேசு வருகின்ற நேரம்..

jESUS WE LOVE YOU! weLcome to the world!
ஆ... ஆ.... ஆ.....

கன்னிமரி பெற்று எடுத்த காவலனே!
கார் இருளை நீக்க வந்த கண்ணாளனே!
கன்னிமரி பெற்று எடுத்த காவலனே!
கார் இருளை நீக்க வந்த கண்ணாளனே!
கண்ணில் இமைகள் இணைந்திருப்பதுபோல்
எம்முடன் பாலகன் இணைகின்ற நேரம்..
கண்ணில் இமைகள் இணைந்திருப்பதுபோல்
எம்முடன் பாலகன் இணைகின்ற நேரம்..

jESUS WE LOVE YOU! weLcome to the world!
ஆ... ஆ.... ஆ.....

இறைவா இறைவா எம்மில் இணைந்திடவா!
இதயம் தன்னில் விரைவில் உறைந்திடவா!
இறைவா இறைவா எம்மில் இணைந்திடவா!
இதயம் தன்னில் விரைவில் உறைந்திடவா!
அன்பு அமைதி உலகில் பொங்கி
ஏற்றத்தாழ்வுகள் மறையும் நேரம்..
அன்பு அமைதி உலகில் பொங்கி
ஏற்றத்தாழ்வுகள் மறையும் நேரம்..

jESUS WE LOVE YOU! weLcome to the world!
ஆ... ஆ.... ஆ.....

எங்கள் சின்ன பாலகனே வா வா! சின்ன
சின்ன இதயங்களை நீ பார் பார்!
எங்கள் சின்ன பாலகனே வா வா! சின்ன
சின்ன இதயங்களை நீ பார் பார்!
உந்தன் வருகையில் துன்பங்கள் மறைந்து
உலகம் அருள் ஒளி பெற்றிடும் நேரம்..
உந்தன் வருகையில் துன்பங்கள் மறைந்து
உலகம் அருள் ஒளி பெற்றிடும் நேரம்..
எழுவோம்! நாங்கள் எழுவோம்! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!
மகிழ்வோம்! நாங்கள் மகிழ்வோம்!! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!
எழுவோம்! நாங்கள் எழுவோம்! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!
மகிழ்வோம்! நாங்கள் மகிழ்வோம்!! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்!


jESUS WE LOVE YOU! weLcome to the world!
ஆ... ஆ.... ஆ.....

There is a country Called Sri Lanka
Everyday Tamil people are suffering..
Noway people live in harmony
no money even no food to eat
arresting abducting killing harassing
Discrimination by the Govenment..
Jesus we need your present at this Time
Thisis the only way we could stop crime
There is a country Called Sri Lanka
Everyday Tamil people are suffering..
Noway people live in harmony
no money even no food to eat
arresting abducting killing harassing
Discrimination by the Govenment..
Jesus we need your present at this Time
This is the only way we could stop crime
arresting abducting killing harassing
Discrimination by the Govenment..
Jesus we need your present at this Time
This is the only way we could stop crime
arresting abducting killing harassing
Discrimination by the Govenment..
Jesus we need your present at this Time
This is the only way we could stop crime



அனிதா
Thusnavis
கலைஞன்
லாவண்யா
அபிஷன்
டிசான்
மோகனா
நாகேஸ்வரன்
இமானுவேல் ஒலிப்பதிவு கலையகம்
யூரியூப் இணையம்
யாழ் இணையம்
நன்றி:-யாழ்.காம்.

டேய் இன்னுமாடா திருந்தல நீங்க?


இல்ல நான் தெரியாமத்தான் கேக்கறேன் கல்யாண போஸ்டர்லயும் போன் பேசறிங்க,
காதுகுத்து போஸ்டர்லயும் போன் பேசறிங்க கட்சி போஸ்டர்லயும் பேசறிங்க.
எதுக்குடா இந்த விளம்பரம்? போன் பேசறமாதிரி இல்லன்னா இந்த போட்டோ
ஒழுங்கா வராதா? இல்ல அம்புட்டு பிசியா இருக்கிங்களா? கருமத்த கண்டுபுடிச்சி
பத்து வருசத்துக்கு மேல ஆகுது. ஆரம்பத்துலதான் அழிச்சாட்டியம் பண்ணிங்க
ஓகே மன்னிச்சிடலாம். இன்னும் ஏன் இந்த மாதிரி படம் விட்டுகிட்டு இருக்கிங்க?

போனவாரம் ஊர்லருந்து ஒரு கல்யாண டிவிடி வந்திருந்தது அதுல வீடியோ
அவங்க பக்கம் திரும்பும்போதெல்லாம் மொபைல எடுத்து சும்மனாச்சுக்கும்
காதுல வச்சு பேசறானுங்க. அட பந்தில கூட ஒருத்தன் பாக்கெட்ட கஸ்டபட்டு
துழாவி எடுத்து காதுல வைக்கிறான்.

போட்டோ எடுக்கறாங்கன்னு தெரிஞ்சா போதும் மொகத்துல அரை கிலோ
கோலமாவ அப்பிகிட்டு வந்து போன்ல பேசற மாதிரி போஸ் கொடுப்பிங்களே!
திருங்கய்யா மக்கா திருந்துங்க!
நன்றி:-தமிழ்நண்பர்கள்

ஞாயிறு, டிசம்பர் 23, 2007

இசையை மட்டும் நிறுத்தாதே

எழுதியவர்: க.வாசுதேவன்

1.

அமெலியா, போர்த்துக்கல் அழகியே,
நீ சற்று அதிகமாகவே குடித்துவிட்டாய்
இன்று இது எம் இறுதி இரவு
சாளரத்தினூடே பார்
இருள் அடர்த்தியாக இருக்கிறது
வானெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக் கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?

நீ விமானம் ஏறிப்புறப்பட்டுவிடுவாய்
நான் அதிவிரைவுத் தொடரூந்தொன்றில்
பயணித்து விடுவேன்.

பயணங்கள் எனும் பகற்கனவுகளிலிருந்து
விழிக்கும் வரையும்
மீளவும் ஒருபோதும் சந்திக்கவே முடியாத
இன்மைக்குள் நாம் காத்திருக்கவேண்டும்

இந்த இறுதியிரவை நிறைப்பதற்குக்
கதையொன்று சொல்
காத்திருப்பை இதமாக்குவதற்கு அந்த இசையின்
சத்தத்தைச் சற்று அதிகமாக்கிவிடு



2.

கடலோடிகளாகவும் கொள்ளையர்களாகவும்
கணவர்களும் மகன்களும் காதலர்களும்
புறப்பட்டுச் சென்றபின்
கண்களிலிருந்து கப்பல்கள் மறையும் கணம் வரையும்
விழிவிளிம்பில் முட்டிநின்ற கண்ணீர்த்துளிகளுடன்
போர்த்துக்கீசப் பெண்கள் கடல் விளிம்பை
விட்டகன்றுவீடு திரும்பினார்கள்.


சமுத்திரங்கள் எங்கும்
போர்த்துகல்கள் மிதந்த காலத்தில்
கணவர்களும் மகன்களும் காதலர்களும்
கடலோடிகளாகவும் கொள்ளைக்காரர்களாகவும்
கொலைகாரர்களாகவும் அலைபாய்ந்த காலத்தில்
போர்த்துககீசப் பெண்கள்
'ஃபதோ' இசை பாடிக்கொண்டிருந்தார்கள்.

காதலும் பாசமும் காமமும்
கரைந்து போகும் சோகம் பிறக்கும்
இசையிலேயே அவர்கள் உயிர்வாழ்ந்தார்கள்.

இதுதான் அவ்விசை.
லிஸ்பொண் நகரத்துக் கோடைகால
நள்ளிரவுகளில் நூற்றாண்டுகளைத்தாண்டி
ஒலித்துக்கொண்டேயிக்கும் 'ஃபதோ'.

மீண்டு வராத கப்பல்களில் புறப்பட்டுச் சென்ற
மீண்டுவராத மனிதர்களை மென்று விழுங்கின சமுத்திரங்கள்.
மீண்டு வராத கணவர்களினதும் காதலர்களினதும்
மகன்களினதும் நினைவுகளை மென்று விழுங்கிது காலம்.

ஒரு ஓலம் மட்டும் எப்போதுமே
எஞ்சியிருந்தது.
ஒரு ஓலம் மட்டும் எப்போதுமே
எஞ்சியிருக்கிறது.
காற்றசையா நடுநிசிகளில்
பட்டமரங்களின் கிளைகளில்
படுத்துறங்கிக்கொண்டிருக்கி
?து
அந்த ஓலம்.

சாளரத்தினூடே பார்
இருள் அடர்த்தியாக இருக்கிறது
வானெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக் கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?


3.

உங்களை விட்டுப் புறப்பட்டுச் சென்றவர்கள்
எங்களிடமும் வந்தார்கள்.
தாயையும் காதலியையும் மனைவியையும்
கதறவிட்டு வந்தவர்கள்
கைகளில் வாளுடனும் கண்களில் வெறியுடனும்
எம்மிடமும் வந்தார்கள்.

கொள்ளையிட வந்தார்கள்.
கொள்ளையிடும் நோக்கில் கொலை செய்ய வந்தார்கள்.
கிறிஸ்துவின் பெயரால் மனிதர்களைக் கீறியெறிந்தார்கள்.
உங்களவர் எம்மிடத்தில் கடந்து சென்ற
பாதையெங்கும் ஓலமொலிக்கச் சென்றார்கள்.

நம்கரைகளை நோக்கி வந்த கப்பல்களில்
பின்னரும் யார் யாரோ வந்தார்கள்
இருந்தவர்கள் போக வந்தவர்கள் அமர்ந்தார்கள்.
வெள்ளை அறிவும் வேரறுக்கும் கொடுமைகளும்
அவர்களுடன் கூடவே வந்தன
அடிமைத்தளைக்குள் நாம் அகப்பட்டுச்
சீர் குலைந்தோம்.

அமர்ந்தவர்கள் போனார்கள்
அவரெமக்கிட்ட அடிமை விலங்கையும்
அகற்றாதே போனார்கள்
அதிகாரம் பெற்ற புதியவர்கள் எஜமானர் ஆனார்கள்

பின்னர் நாம் அலைக்கப்பட்டோம்
பின்னர் நாம் கலைக்கப்பட்டோம
அல்லது தப்பியோடினோம்
எதனிடமிருந்து தப்பியோடியபோதும்
எம்மிடமிருந்து எப்போதும் தப்பியோடமுடியாது
அகப்பட்டுக்கொண்டோம்.

தாயைத் தந்தையை
தன்னவர்களையெலாம் கைவிட்டு
எமைக் கொல்லவும் கொடூரத்துள் தள்ளவும்
எம்தீவின் மனிதர்கள் புத்தரைத் துதித்து
இன்னமும் எம் எல்லைகளுக்குள்
வந்து கொண்டேயுள்ளார்கள்.
அவர்தம் உறவுகளின் ஓலங்களும் ஓயவில்லை.

எம்மவரின் ஓலஒலியுள் தம்மவரின் ஓலங்கள்
அமிழ்வதையும் உணராது
உயிர் கொடுத்தும் உயிர் குடிக்க
அவர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.
ஓலமெங்கும் நிறைகிறது.

ஓலம் மட்டும் எப்போதுமே எஞ்சியிருந்தது.
ஓலம் மட்டும் எப்போதுமே எஞ்சியிருக்கிறது.

சாளரத்தினூடே பார்
இருள் அடர்ந்தியாக இருக்கிறது
வானெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக் கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?

கணவர்களும் மகன்களும் காதலன்களும்
கடலோடிகளாகவும் கொள்ளைக்காரர்களாகவும்
கொலைகாரர்களாகவும் அலைபாய்ந்த காலத்தில்
அழுதிருந்த போர்த்துக்கீசப்பெண்களின்
ஓலத்தை நாமும் கடன் பெற்றுக்கொண்டோம்.

அமெலியா, போர்த்துக்கல் அழகியே,
காலம் சுமந்து வந்த சோகம் வழியும்
ஓலம்கலந்த உன் இசையின் சத்தத்தை
மேலும் அதிகமாக்கு

திருமணமாகிய மறுதினமே
கணவன் கடலோடியபின் கரையில் நின்ற
போர்த்துக்கீசப் பெண்ணின் மனம்போல்
கனதியாய் கிடக்கிறது இந்த இரவு.

சாளரத்தினூடே பார்
இருள் அடர்ந்தியாக இருக்கிறது
வானெங்கும் அளவிற்கதிகமாகவே
விரவிக் கிடந்தாலும்
நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்?


விடியும் வரையும்
அந்த இசையை மட்டும் நிறுத்தாதே.


07.12.2007.

ஃபதோ - Fado : போர்த்துக்கல் நாட்டின் இசைவடிவம்.

அந்த இசையை கேட்பதற்கு..
http://www.portugal-luso.eu/fr/md00002_services/00004_ecouter-du-fado-et-des-varietes.html

நன்றி: அப்பால் தமிழ்

சனி, டிசம்பர் 22, 2007

முரன்பாடு


தமிழகத்தில் தமிழர் ஆட்சி என்றார்கள்
தமிழன் என்றவகையில்
மிடுக்குற்றேன்,

ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசினால்
கலைத்து விடுவோம் என்றனர்
திடுக்குற்றேன்,

ஆளுதல் அன்றோ ஆட்சி!!
ஆளப்படுதல் இங்கே ஆட்சி ஆனதே!!!

24 டிசம்பர், 1987 அதிகாலை.... எம்.ஜி.ஆர். வீட்டில் நடந்தது என்ன?


'எம்.ஜி.ஆர்..!' -இந்த மூன்றெழுத்தில் தமிழகம் தன் மூச்சையே வைத்திருந்த காலம் உண்டு! மறைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அந்தத் தங்க மகனின் நினைவும் புகழும் தமிழகத்தில் துளியும் மங்கவில்லை! அவர் பேரைச் சொன்னால், 'மவராசன்' என்று கையெடுத்து வான் நோக்கிக் கும்பிடும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள்.

பூவாக, பொன்னாக அவரை நெஞ்சில் சுமப்பவர்கள், டிசம்பர் 24-ம் தேதியன்று அவரது 20-வது வருட நினைவு நாளுக்கு அரசாங்கமும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் என்ன மரியாதை செய்யப் போகிறார்கள் என்று காத்திருக்க...

''இத்தனை நாளும் இதயத்தில் பூட்டியிருந்த குமுறல்களை இனியும் உள்ளே

வைத்திருக்க முடியாது!'' என்றபடி நம்முடன் பேச வந்தார் எம்.சி.சுகுமார்.

எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகனான சுகுமார், சிறுவயது தொட்டே எம்.ஜி.ஆருக்குச் செல்லம்.

''கடைசிக் காலத்தில் என் சித்தப்பா நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் அவரை சுதந்திரமாக இயங்கவிடாமல் செய்தார்கள். மாநிலத்துக்கே முதல்வராக, மக்களுக்குத் தெய்வமாக இருந்த அதேசமயம் ராமாவரம் தோட்ட இல்லத்தினுள் அவர் ஒரு அடிமை போல நடத்தப்பட்டார்!'' என்று சொல்லி அதிரவைக்கிறார் எம்.சி.சுகுமார்.

எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களின் தொகுப்பை குறிப்புகளாகச் சேகரித்துக் கொண்டிருக்கும் இவர், விரைவில் அதனை வைத்து ஒரு புத்தகம் எழுதவும் தீர்மானித்திருக்கிறார். அந்தப் புத்தகத்தில் எம்.ஜி.ஆரின் கடைசிக் காலத்தை 'அது அவரின் இருண்ட காலம்' என்றே வர்ணிக்கத் தயாராகிறார்!

சென்னை அண்ணாநகரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் சுகுமாரைச் சந்தித்தோம்-

''1984-ம் ஆண்டு மே மாதம்... 4-ம் தேதி... சித்தப்பா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 'அவர் உடம்புக்கு என்ன?' என்கிற விஷயம், அவருடைய ரத்த சொந்தமான எனக்கோ என் சகோதர - சகோதரிகளுக்கோ ராமாவரம் தோட்டத் திலிருந்து தெரிவிக்கப்படவில்லை. 'அவருக்கு நரம்புத் தளர்ச்சி' என்று மட்டும் மேம்போக்காகச் சொன்னார்கள். அதன்பிறகு, சித்தப்பா நல்லபடியாக இல்லம் திரும்பினார்.

மீண்டும் செப்டம்பர் மாதத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகச் சொன்னார்கள். அம்மாதம் 20-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரையில் அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். பிரபலமான அரசியல் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு மருத்துவ சிகிச்சையளித்த டாக்டர் மணி என்பவர்தான் சித்தப்பாவை பரிசோதித்து விட்டு, அவருக்கு 'சிறுநீரகக் கோளாறு இருப்பதாக' முதலில் சொன்னார்.

செப்டம்பர் முப்பதாம் தேதியன்று அண்ணா பிறந்தநாள் நிகழ்ச்சி... சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்தது. முதல்வர் என்ற முறையில் அந்த அரசு விழாவில் கலந்துகொள்ள சித்தப்பா கிளம்பிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தனது அடையாளமான அந்தத் துள்ளல் மறைந்து, உடல் சோர்ந்து போயிருந்தார். தன் உடல்நிலை குறித்து எப்போதுமே பலவீனமான இமேஜ் வராதபடி கவனமாக இருக்கும் அவரே, என்னிடம் கவலையோடு பேசினார்.

நான் டாக்டரிடம் பேசினேன். அப்போ 'சித்தப்பாவுக்கு (எம்.ஜி.ஆருக்கு) சிறுநீரகத்தைக் கட்டாயம் மாற்றியாக வேண்டும்' என்று டாக்டர் என்னிடம் சொன்னார். அவருக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த எங்கள் குடும்பம், கடும் பிரார்த்தனையில் ஈடுபட்டது. அடிக்கடி சித்தப்பாவை நாங்கள் அவருடைய வீட்டுக்குப் போய்ப் பார்த்து, உடல்நலம் விசாரித்து வந்தோம். அப்போது எங்களுக்கு அங்கிருந்தவர் களால் ஏற்பட்ட கெடுபிடிகளும், அவமானங்களும் இன்றைக்கு நினைத்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது...'' என்று சொல்லி நிறுத்தியவர்... தன் சகோதரி லீலாவதி சித்தப்பாவுக்கு சிறுநீரகத் தானம் கொடுத்தபோது அனுபவித்த கஷ்டங்களை விவரித்தார்-

''சித்தப்பா உடல்நிலை ரொம்பவே பாதிக்கப்பட்டு, அமெரிக்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை கட்டாயம் செய்தாக வேண்டும்' என்று சொன்னார்கள்.

இங்கிருக்கும் மருத்துவர்கள் சிலர் அமெரிக்காவில் இருந்த மருத்துவர்களோடு பேசியதில், 'ரத்த சொந்தம் உள்ள ஒருவரிடமிருந்துதான் சிறுநீரகம் பெற வேண்டும். அப்போதுதான் அவரது உடம்பில் இணைந்து அது செயல்பட ஆரம்பிக்கும்' என்று சொன் னார்கள். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே, நாடே போற்ற வாழ்ந்து கொண்டிருந்த எங்கள் சித்தப்பாவுக்கு சிறுநீரகத் தானம் கொடுக்கத் தயாராக நின்றோம். பல்வேறு டெஸ்ட்களின் அடிப் படையில், 'சகோதரி லீலாவதியின் சிறுநீரகம் தான் சித்தப்பாவுக்குப் பொருந்தும்' என முடி வானது.

அதற்காக என் சகோதரி லீலாவதி எந்த நிமிடமும் அமெரிக்காவுக்குக் கிளம்பத் தயா ராக இருந்தார். ஆனால், அவரைப் பலமுறை அலைக்கழித்தே அமெரிக்காவுக்குக் கூட்டிச் சென்றார்கள்.

அங்கு சித்தப்பா அவ்வளவாக நினைவு இல்லாத நிலையில் இருந்தார். அந்தச் சூழ்நிலையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வெற்றிகரமாக அது இயங்கத் தொடங்கியது. சித்தப்பா படிப்படியாக முழு நினைவுக்குத் திரும்பினார். அந்தச் சூழ்நிலையில்கூட 'என் சகோதரிதான் அவருக்கு சிறுநீரகத் தானம் வழங்கினார்' என்பதை சித்தப்பாவிடம் சொல் லாமலேயே மறைத்துவிட்டார்கள்.

என் சகோதரியும் அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பிவிட்டார்.

உடல்நிலை நன்கு தேறி, சித்தப்பாவும் சென்னைக்கு வந்தார். சென்னையில் அவருக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள்கூடி, உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போதுகூட லீலாவதியைக் கிட்டே அனுமதிக்கவில்லை அவர்கள்.

பிற்பாடு, சித்தப்பாவை வாழ்த்தி அண்ணா பத்திரிகையில் 'வார்த்தை சித்தர்' வலம்புரிஜான் ஒரு கவிதை எழுதி இருந்தார். அதில், சகோதரி லீலாவதியின் பெருந்தன்மையையும் புகழ்ந்து குறிப்பிட்டிருந்தார். அதைப் பார்த்துத் திகைத்துப்போன என் சித்தப்பா எம்.ஜி.ஆர், தன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சீனியரான பண்ருட்டி ராமச்சந்திரனை அழைத்து விசாரித்திருக்கிறார். அவரும், 'ஆமாம், லீலாவதிதான் உங்களுக்கு சிறுநீரகம் தந்தார்' என்று சொல்லி, சித்தப்பா அமெரிக்காவில் இருந்தபோது தமிழகத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் விளக்கியிருக்கிறார். உடனே என் சகோதரியை அழைத்து, நெகிழ்ச்சியோடு தன் நன்றியைப் பகிர்ந்துகொண்டார் சித்தப்பா.

''அதற்கு முன்பு சித்தப்பா சென்னை மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு ரத்தம் தேவை என்றார்கள். நான் பதறியடித்துக்கொண்டு ரத்தம் கொடுக்க ஓடினேன். அப்போது என்னை ரத்தம் கொடுக்கும் இடத்துக்கு அழைத்துப்போன சித்தப்பாவின் மருத்துவர், தேவையே இல்லாமல் என்னை அந்த ஐந்து மாடி கட்டடத்துக்கு மேலும் கீழுமாகக் அலைக்கழித்தார். இறுதியில் ரத்தம் கொடுப்பதற்கு முன்பாக ரத்த அழுத்த சோதனை நடத்தி, 'உங்களுக்கு பிரஷர் இருக்கிறது' என்று சொல்லி, என்னைத் திருப்பி அனுப்பினார்கள். அதன்பிறகும் 'எனக்கு ரத்த அழுத்தம் இல்லை' என்று நிரூபித்து, ரத்தம் கொடுத்தேன். ஆனால், 'அந்த ரத்தம் மேட்ச் ஆகவில்லை' என்று சொல்லி, மூன்று தடவைகளுக்கு மேல் திரும்பத் திரும்ப என்னிடம் ரத்தம் வாங்கினார்கள். இதேபோலவே என் குடும்பத்தினரிடமும் ரத்தம் வாங்கினார்கள். அதாவது, 'சித்தப்பாவுக்கு ஆபத்தான காலகட்டத்தில் ரத்தம் கொடுத்தவர்கள் நாங்கள்தான்' என்று தெரியவந்தால், அவர் எங்கள் மீதான பாசத்தை அதிகப்படுத்திவிடக் கூடாது என்ற எண்ணத்திலேயே எங்களை அலைக்கழித்தார்கள் என்பது பிற்பாடுதான் எங்களுக்குத் தெரியவந்தது'' என்று வேதனையோடு நிறுத்திய எம்.சி.சுகுமார்,

''கடைசிக் காலத்தில் தன் தம்பிக்கு நேர்ந்த சோதனைகளை அறிந்த என் அப்பா சக்கரபாணி துடித்த துடிப்பு, இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. 'நான் நெருப்பு வளையத்துக்குள் இருக்கிறேன்...' என்று சித்தப்பா, என் அப்பாவிடம் சொல்லி வருந்தியிருக்கிறார்...'' என்று சொல்லும்போதே கண் கலங்குகிறார்.

''சித்தப்பாவுக்கு என் அப்பாதான் கவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் சுமைதாங்கியாக இருந்திருக்கிறார். என் அப்பாவை ஆலோசித்தே முக்கிய முடிவுகளை எடுத்தார். 'சொத்து விஷயத்திலும் அப்படி நடந்துவிடக் கூடாது' என்று என் சித்தி ஜானகி அம்மாளை வழிநடத்திய சிலர் நினைத்திருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் குடும்பத்தை சித்தப்பாவிடம் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

அப்போலோ மருத்துவமனையில் சித்தப்பா இருந்தபோது, உடல்நலம் விசாரிப்பதற்காக என் அப்பா அங்கே சென்றார். அப்போது அவரைக் கட்டிக்கொண்ட சித்தப்பா, தான் எப்படி ஒரு இக்கட்டான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை வருத்தமான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். 'என்னை சுற்றி நானே ஒரு வளையம் போட்டு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்த வளையத்துக்குள் யார் வரவேண்டும், வரக்கூடாது என்பதையெல்லாம்கூட வரையறுத்து வைத்திருந்தேன். ஆனால், அந்த வளையமே இன்றைக்கு என்னை நெருக்கி இழுக்கிறது' என்று சொல்லி இருக்கிறார்!

அப்படியென்றால், அதற்கு அர்த்தம் என்ன? 'யாரை நம்பி நான் வளையத்துக்குள் வாழ்ந்து வந்தேனோ, அவர்களே என்னை நிம்மதியாக வாழவிடவில்லை' என்பதுதானே'' என்றவர்,

''என் சித்தப்பாவின் மறைவு தினத்தன்று ராமாவரம் தோட்டத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி விதம்விதமான பேச்சுக்கள் இருக்கின்றன. அன்றைக்கு அங்கே நடந்த அந்தக் கொடுமையான விஷயங்களை நாடு இப்போதாவது தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்...'' என்று சொல்லி, பெருமூச்சோடு பேச ஆரம்பித்தார்-

''டிசம்பர் 24, 1987... அதிகாலை... 'சித்தப்பா இறந்துவிட்டார்' என்று எங்களுக்குத் தகவல் வந்தது. குடும்பத்தோடு நாங்களெல்லாம் உடனே புறப் பட்டு ராமாவரம் தோட்டத்துக்கு ஓடினோம். சித்தப்பாவின் படுக்கையறை இருந்த இரண்டாவது தளத்தில் அவருடைய உடல் இருப்பதாகத் தகவல் சொன்னார்கள். இரண்டாவது தளத்துக்குப் போக முயன்றோம். எங்களைத் தடுத்து, கீழ்த்தளத்திலேயே இருக்க வைத்துவிட்டார்கள். இறப்புச் செய்தி கேள்விப்பட்டு திமுதிமுவென கூட்டம் கூடிவிட்டது. கதறல் குரல்கள் ராமாவரம் தோட்டம் முழுவதும் நிரம்பியிருக்க, அதிகாலை மூன்று மணியளவில் அ.தி.மு.க-வின் தற்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா அங்கே வந்துவிட்டார். அடுத்த சிறிது நேரத்தில், தன் நாற்பதாண்டு கால உயிர்நண்பரின் முகத்தை கடைசியாக ஒருதடவை பார்க்கக் கலைஞரும் வந்து சேர்ந்தார். அவர்களையும் சித்தப்பாவின் உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. உடல் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக 'எம்பாம்' வேலைகள் நடப்பதாகச் சொல்லி, யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை!

நிலைமையை ரசாபாசம் ஆக்க வேண்டாம் என்று எண்ணி கலைஞர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால், ஜெயலலிதா விடாப்பிடியாகப் போராடிக் கொண்டிருந்தார். திரைமறைவு வேலை உள்ளே நடக்கிறது என்பதை மட்டும் எங்களாலும் ஜெயலலிதாவாலும் புரிந்துகொள்ள முடிந்தது. அதனால், தடுப்புகளையெல்லாம் மீறி இரண்டாவது தளத்துக்குச் செல்ல மாடிப்படி அருகே நின்றுகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அதிகாலை ஆரம்பித்த இந்தப் போராட்டம் பொழுது விடிந்த பிறகும் நடந்துகொண்டே இருக்க, தோட்டத்தின் பின்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வண்டியில் சித்தப்பாவின் உடலை ஏற்றி, அவசரஅவசரமாக ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுசென்று விட்டார்கள்.

தேசம் போற்ற வாழ்ந்த அந்த மாமனிதரின் உடலை ஏதோ 'கடத்தல் சரக்கு' போல அங்கிருந்தவர்கள் கையாண்டதற்கு இதோ இந்த போட் டோவே ஆதாரம் (அந்தப் படம்... அட்டையிலும்...).

ராமாவரம் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த லிஃப்ட் மூலம், இறந்துபோன சித்தப்பாவின் உடலை ஸ்ட்ரெச்சர் பலகையில் இறுக்க மாகக் கட்டி, நிற்கிற வாட்டில் வைத்து, அடித்துப் பிடித்துக் கீழே இறக்கி விட்டார்கள்! இதற்காக சித்தப்பாவின் உடலை மாடியில் வைத்து- அவரது கால், கைகளைக் கயிற்றால் கட்டி இருக்கிறார்கள். கோடிக்கணக்கான உள்ளங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து, என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் பொன்மனச் செம்மலின் உடலை சித்ரவதை செய்வதுபோல கட்டி, வெளியே அவசரஅவசரமாக எடுத்துச் செல்லவேண்டியதன் அவசியம் என்ன?

இத்தனைக்கும் சித்தப்பாவின் உடல் ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுசெல்லப்படும் வரையில், அவர் உடலைப் பொதுமக்கள் பார்வைக்காக அங்கே வைப்பதற்குரிய எந்த முன்னேற்பாடுகளையுமே செய்யவில்லை! காரணம், அங்கிருந்தவர்களின் கவனமெல்லாம் வேறு ஏதோ விஷயங்களில்தான் இருந்திருக்கிறது!

அதுமட்டுமல்ல, அவரது உடல் ராஜாஜி ஹாலுக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகு, 24-ம் தேதி முழுவதும் ஜானகியம்மாள், சித்தப்பாவின் உடல் அருகில் போகாமலேயே இருந்தார்.

25-ம் தேதி உடல் அடக்கம் செய்யப் பட்டபோதுதான் அவர், சித்தப்பாவின் உடல் அருகே வந்தார். அதுமட்டுமல்ல, அவசர மாக ராமாவரம் தோட்டத்தில் இருந்து சித்தப்பாவின் உடலை ராஜாஜி ஹாலுக்கு அனுப்பிவைத்த பிறகு, வீட்டில் இருந்த ஜானகி அம்மாள் 'வழக்கறிஞரும் அங்கே போய்விட்டாரா?' என்று திரும்பத்திரும்பக் கேட்டிருக்கிறார். இதை அருகில் இருந்த என் அம்மா மீனாட்சி கவனித்திருக்கிறார். அப்படியென்றால், சித்தப்பா இறந்ததும் வழக்கறிஞரை வைத்து ஜானகி அம்மாளின் ஆலோசகர்களாக இருந்த சிலர் அவசரமாக ஏதோ செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்று தோன்றுகிறதே..! அது என்ன?

சித்தி ஜானகி அம்மாளும் இன்று மறைந்து போய்விட்டார். அவருடைய புகழுக்குக் களங்கம் உண்டாவதுபோல் பேசுவது என் நோக்கமல்ல... அவரை இயக்கியவர்கள் மீதுதான் என் கோபமெல்லாம்!

'சித்தப்பா இறந்துபோவதற்கு முதல்நாள் அவரிடம், ஜானகி அம்மாள் மிகக் கடுமையாக வாக்குவாதம் செய்தார்' என்றும் என்னிடம் தகவல் இருக்கிறது.

சித்தப்பா இறந்தது மாரடைப்பால் என்று சொல்லப்பட்டது. அவருக்கு 69-வது வயது வரையில் இதயநோய் இல்லவே இல்லை. திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகச் சொல்வது எப்படி என்றுதான் எனக்குப் புரியவில்லை!'' என்று சொல்லிச் சற்று நிறுத்தியவர், சிறு யோசனைக்குப் பின், ''கடைசிக் காலகட்டங்களில் சித்தப்பா பல நேரங்கள் சிந்தனை தப்பி இருந்ததாகவும், சில ஏற்பாடுகளுக்கு அவர் ஒத்துழைக்க மறுத்த கோபத்தில் அப்போது அவரை எத்தகைய பாராமுகத்தோடு நடத்தினார்கள் என்பதையும் அவருக்குப் பாதுகாப்பாக இருந்த போலீஸார் சொல்லக் கேட்டுக் கண்ணீர் வடித்திருக்கிறேன்!'' என்று சோகமான

எம்.சி.சுகுமார், மேலும் பகிர்ந்து கொண்டவை...

- அடுத்த இதழில்...

http://www.vikatan.com/
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us