வெள்ளி, அக்டோபர் 31, 2008

தமிழர்களை கொல்பவர்களிடமே மருந்து, உணவுப் பொருட்களை கொடுப்பதைவிட கொடுமையான செயல் உண்டா?: "ஜனசக்தி" நாளேடு கேள்வி

தமிழ்நாட்டின் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ள இலங்கைத் தமிழர் நிவாரண நிதி திரட்டல் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வமான தமிழ் நாளிதழான "ஜனசக்தி" கேள்வி எழுப்பியுள்ளது.

"இக்கட்டான நேரத்தில் உதவிக்கரம நீட்டுவது நமது இன்றியமையாக கடமையாகும்"

"ஈழத்தில் வேதனையால் விழி நீர்பெருக்கி வாடிக் கொண்டிருக்கும் சகோர சகோதரிகளுக்கு தமிழக மக்கள் இயன்றதை வழங்கி உதவிடுவிர்"

"இலங்கைத் தமிழர் நிவாரணை நிதி முதல்வர் கலைஞர் பத்து இலட்சம் ரூபாய் வழங்கினார்"

29.10.08 முரசொலியின் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ள வரிச் செய்திகள்.
இது முதல்வரின் ஏடு. வேண்டுகோளும் முதல்வரால் வெளியிடப்பட்டள்ளது.
கருணை உள்ளம் கொண்டு, கண்ணீர் வடிப்போருக்கு உதவிட முற்படுவதைக் குறைகூறுவதே ஒரு பெருங்குற்றமாகும். ஆனால் இதற்குள் அரசியல் கேள்விகள் அடங்கியுள்ளன.

நாங்களும் - நீங்களும், சகோதர - சகோதரிகளுக்கு உதவி எனும்போது, புலிக்கு உதவி என்பதும் கேட்கிறதா?

தமிழ்நாட்டு மக்கள், இலங்கையில் பிறந்த ஒரே காரணத்தால், பல்லாண்டுகளாக வேட்டையாடப்பட்டு வரும், சகோரதர சகோதரிகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய எப்போதும் தயங்கியதே இல்லை.

விடுதலைப் புலிகள் மீது மட்டும் பாயும் குண்டும், சுடும் துப்பாக்கியும் உண்டா? மக்களைக் கவசமாக பயன்படுத்துவதாகக் கூறுவோர் வானூர்தி குண்டு வீச்சுக்கு கவசம் கண்டு பிடித்துள்ளனரா? அரசியல் நெறி என்ற பெயரால், கொலைகாரர்கட்குத் துணை போகலாமா? இலங்கைத் தமிழர்களான சகோதர - சகோதரிகளுக்கு ஏற்படும் இன்னல்களைத் தடுக்க இந்தியத் தமிழ் மக்கள் நேரில் சென்று உதவிட முடியாது. எனவேதான் தமிழ் மொழி பேசும் இந்தியக் குடிமக்கள் இந்திய அரசிடம் சில வேண்டுகோள்களை முன்வைத்தனர்.

1. சிறிலங்கா அரசிடம் பேசி வானூர்தி தரைப்படைத் தாக்குதலை நிறுத்தச் செய்யுங்கள்.

2. இந்திய அரசு, எங்கள் சகோதர - சகோதரிகளைச் சுட்டுக்கொல்ல, இந்திய அரசு ஆயுதங்களையும், இராணுவ வீரர்களையும் அனுப்புவதை நிறுத்த வேண்டும்.

3. அகதிகளாக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கட்கு இந்திய அரசு நிவாரணப் பொருட்கள் அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தரும் பொருளை அனுப்பி அனுமதி வேண்டும்.

மக்கள் இந்த வேண்டுகோள்களை வைப்பதற்கு முன்பே, மத்திய அரசுக்கு இலங்கையில் ஏற்பட்டுள்ள 'இக்கட்டான நேரம்' - அதற்குரிய காரணம் தெரியும்.
தெரிந்தும் எந்த முடிவையாவது நடிவடிக்கையாவது எடுத்ததா?

அனைத்து கட்சிக் கூட்டம், அதில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிவில நேரிடும் என்ற எச்சரிக்கைக்கு பின் வெளிவிவகார அமைச்சர், தமிழக முதல்வரைச் சந்தித்துள்ளார்.

போர் நிறுத்தப்படும் என்று கூறவில்லை. குண்டுகள் சுடுகிற வானோடிகளை அனுப்ப மாட்டோம் எனக் கூறவில்லை. மத்திய அரசுக்கு ஆபத்தில்லை என்றே கூறினார்.

எனவே, மத்திய அரசு தானாக மனிதாபிமானத்தால் உந்தப்பட்டு எதையும் செய்யவில்லை. எனவே தான் முதல்வரின் நம்பிக்கை மக்களுக்கு ஏற்படவில்லை.
இப்போது நன்கொடை வசூல், தானம் உதவி என்ற தமிழக முதல்வர் தொடங்கியிருக்கிறார். இவை எப்படி அங்கு போய்ச் சேரும்? யார் இதை அவதிப்பட்ட மக்களுக்கு வழங்குவது?

மத்திய அரசு, சிறிலங்காவுக்கு தொடர்ந்து இராணுவ உதவி செய்வதால், இலங்கைத் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கத துணை புரியும் டில்லியிடம் மன்றாட மக்கள் தயாராக இல்லை. அங்கிருந்து எந்த நற்காரியத்தையும் எதிர்பார்க்க இயலவில்லை.

ஆனால் தமிழக முதல்வரிடம் ஒரே ஒரு வேண்டுகோளுக்கு விடை கேட்கிறோம்.

1. குண்டுத்தாக்குதலை நிறுத்தாமல் இருக்கும்போது அங்கு உதவிப் பொருட்களை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்?

2. சில மாதங்கட்கு முன்னர் திரு.பழ. நெடுமாறன், மருத்துவப் பொருட்களை அனுப்பிட, வசூலித்து வைத்த பின்னர் கேட்டபோது மறுக்கப்ட்டதே. ஏன்? இப்போது எங்கிருந்து வழி பிறந்தது?

3. இலங்கைத் தமிழர்களை கொல்பவர்களிடமே மருந்து, உணவுப் பொருட்களை கொடுப்பதைவிட கொடுமையான செயல் உண்டா? அவர்கள் கையால் தமிழ் மக்கள் வாங்கிச் சாப்பிடுவார்களா?

சர்ச்சைக்கு உட்படாத சமூகத் தலைவர்கள் நேரில் சென்று உணவு உதவி வழங்கிட சிறிலங்கா அரசும் இந்திய அரசும் மறுப்பது ஏன்?

எல்லாவற்றிற்கும் மேலாக குண்டு போட்டுக் கொல்லப்படுவது நிறுத்தப்பட மாட்டாது எனத் திட்டவட்டமாக ராஐபக்ச பிரகடனம் செய்துவிட்ட பிறகு நீங்க்ள கருணையுடன் அனுப்பும் பாலும், பருப்பும், பாகும், சைவ - அசைவ விருந்தாக அமைந்தாலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே சாகத்தானே வேண்டும்.
பட்டினி கிடந்து குண்டடிப்பட்டுச் சாகாதே நன்கு சாப்பிட்டு விட்டு சா என்று கூறுவதாகத்தானே உங்களது அழைப்பு அமைந்துள்ளது.

முதலில் குண்டுப்போரை நிறுத்தச் சொல்லுங்கள். இல்லையேல் இதுவும் கொடை மடம் என்றே வருணிக்கப்ட நேரிடும். மத்திய அரசைக் காப்பதா? இலங்கைத் தமிழ் மக்களைக் காப்பதா? என்பதை முதல்வரின் முடிவுக்கே விட்டுவிடலாம்.
இது கட்சியின் கோரிக்கை அல்ல. மக்களின் புலம்பல் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

buthinam.com

சனி, அக்டோபர் 25, 2008

உலகத்தமிழரின் கொந்தழிப்பால் உண்ணாவிரதத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவித்துள்ளார் அஜித்!!!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜீன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.

நேற்று தமிழ்வின் இணையதளத்தில் ஈழத்தமிழருக்காக ஆதரவு வழங்க மறுத்த அஜித் கூறிய இச்செய்தி வெளியான சில மணிநேரங்களில் உலகத்தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த்திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

பிரான்ஸ், ஜேர்மன் உள்ளிட்ட நாடுகளில் இந்நடிகர்களுக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. "ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு வழங்க மறுத்த நடிகர் அஜீத் நடித்து வெளியாகும் ஏகன் திரைப்படத்தை திரையிட விடமாட்டோம்" என்று கொந்தளித்த ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் சிலவற்றிலும் இறங்கினர். சில இடங்களில் கல்வீச்சு, போஸ்டர் கிழிப்பு போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் திட்டமிட்டபடி அக்டோபர் 25 இல் பாரீஸ் நகரில் ஏகன் திரைப்படத்தை வெளியிடமுடியாத சூழல் உண்டாகியுள்ளது.

இவ்வாறு உலகத்தமிழர் ஏகன் திரைப்படத்தை புறக்கணித்ததும் ஏகனை வெற்றிகரமாக திரையிட விரும்பிய, ஈழத்தமிழருக்கு ஆதரவு கொடுக்கமாட்டேன் என முழங்கிய நடிகர் அஜித், ஏதும் செய்ய முடியாத நிலையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்து, “ நடிகர் சங்கம் எடுத்துள்ள உண்ணாவிரத போராட்ட முடிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனவே கட்டாயம் சென்னையில் நவம்பர் 1ம் தேதி நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் நானும் கலந்துகொள்வேன். ஈழத்தில் அப்பாவித்தமிழர்கள் தாக்கப்படுவதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிப்பேன்” என ஈழத்தமிழருக்கு எதிராக பேசிய நடிகர் அஜீத் நக்கீரனுக்கு உறுதி கூறினார்

தமது தல நடித்த ஏகன் வெற்றிகரமாக திரையிட விரும்பிய ரசிகர் மன்றத்தினர் "திரையுலகில் இருக்கும் ஒரு சில விஷமிகள்தான் இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பி உள்ளனர் " என்று கூறி வருகின்றனர்.

http://www.tamilwin.com/view.php?2eIWnp00b...d430QH3b02nLW3e

அர்ஜுனின் மறுப்பு அறிக்கை.
இலங்கைத்தமிழ் மக்களுக்கு என்றும் என்னுடைய ஆதரவு இருக்கும்: அர்ஜுன்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜுன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர் என செய்தி வெளிவந்திருந்தது.

எனினும் அந்த செய்தியடுத்து புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் கொந்தளிப்பையடுத்தே இன்று அஜித் உனடியாக சில செய்தியூடகங்களுக்கு தான் அந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொள்வேன் என்ற தகவலை வழங்கியிருந்தார்.

அதே நேரம் அர்ஜுன் தமிழ்வின் இணையத்தளத்தை நேரடியாக மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் கடந்த 23 வருடங்களாக வாழ்ந்து வருவதாகவும் தமிழை மிகவும் நேசிப்பதாகவும் இப்படிபட்ட கருத்தை தான் மனதில் கூட நினைந்தது கிடையாது என்றும் குறிப்பாக இலங்கை தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தன்னுடைய ஆதரவு என்றும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அத்தோடு உண்ணாவிரத போராட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ளுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் நேற்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியான செய்தில் வந்த கருத்தை முற்றாக மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி : தமிழ்வின்

புதன், அக்டோபர் 15, 2008

தி டேஞ்சர்ஸ் ஒஃப் தமிழ் சாவினிஸம்!!! தி ஹிண்டு கட்டுரை.

இந்து நாளிதழுக்கு கண்டனங்கள் !!! இன்றைய தி ஹிந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி எனும் ஊடகவிபசாரி, தமிழீழவிடுதலைப்போராட்டத்தையும் ,அதற்கு ஆதரவான தமிழக மக்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் எழுச்சியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார்...

தலைப்பு........ தி டேஞ்சர்ஸ் ஒஃப் தமிழ் சாவினிஸம் .

ஏழ்மை காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்ணே பல மடங்கு இத்தகைய ஊடக விபசாரிகளை விட மேலானவர்...
இந்து நாளிதழுக்கு கண்டங்கள் அனுப்புவோம் சகோதரர்களே
தமிழன் ஒற்றுமை ஓங்கட்டும் ...தமிழர்கள் ஓரணியில் திரள்வது கண்டு ஓனாய்க்கூட்டம் ஓடட்டும்!!!

மாதிரி வடிவம்
Copy of the latter sent ti Hindu

Dear Edito,
Even though I know your changing positions since 1984. Once you behind Prabaharan then Chandrika and now Mahinda. This is your freedom. Many Sinhalese including some of my friends consider you as anti Tamil. Thy said you support not only killing Sri Lankan Tamil but also Indian Tamil fishermen. Can you show me an article written against the continuous killing of Indian Tamil fishermen by your Sinhalese Friends? This also may be your freedom. But I never expect you to support possible and encourage genocide of my people. Please stop it.If you really respect press freedom please publish this latter.
with regards

youer name

கண்டங்கள் அனுப்ப .... theditor@thehindu.co.in

கட்டுரை இணைப்புhttp://www.hindu.com/2008/10/14/stories/2008101454490800.htm

தமிழீழ விடுதலைப்போராட்டத்தினையும் மாவீரர்களையும் தமிழ்நாட்டுத்தமிழர்களின் தமிழுணர்வையும் இழிவுபடுத்தி இன்று(அக்டோபர் 14) கட்டுரை வெளியிட்ட பாசிச "THE HINDU" பத்திரிக்கையினை கண்டித்து கோயம்பத்தூரில் ஆதித்தமிழர் பேரவையின் வழக்கறிஞர் தோழர் வெண்மணி தலைமையில் 15 க்கும் மேற்பட்ட தமிழின வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டு இந்து நாளிதழின் அலுவகம் முன்பு இன்று மதியம் இந்து நாளிதழை தீக்கிரையாக்கி இந்து நாளிதழின் தமிழர் விரோதப்போக்கை கண்டித்து முழக்கமிட்டு கைதானார்கள்.

இணைப்பு - 2

இந்து நாளிதழிழை எரித்த தமிழக தோழர்கள் மாலை 6 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்து நாளிதழிழை எரித்த தோழர்கள் மாலை 6 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டார்கள். மேலும் மதியம் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த அரசு சட்டக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் பெரியார் திராவிடர்கழக மாணவரணி பொறுப்பாளரும் ஆகிய தோழர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் 2 மணியளவில் மறுபடியும் இந்து அலுவலகம் முன்பாக இந்து நாளிதழின் தமிழின எதிர்ப்பு போக்கை கண்டித்து முழக்கமிட்டு அலுவலகம் முன்பாக நாளிதழை எரித்துக்கைதானார்கள். மாலை 6 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

-- http://www.tamilseythi.com/tamilnaadu/the-...2008-10-14.html

திங்கள், அக்டோபர் 13, 2008

சிறீலங்கா உணவுப்பொருட்களில் கொடிய விஷம், மக்களே கவனம்!!!

சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதியாகும் மன்சி பிஸ்கட் எட்னா சொக்லட்டில் விசப் பொருட்கள்.

சிவிஸ் அரசின் சுகாதரத் துறையால் சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மன்ச்சி பவ் என்னும் பிஸ்கட்டைப் பரிசோதித்த போது அதில் மெலமையின் என்னும் நச்சுப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்படுள்ளது.இந்த நச்சுப்பொருள் உள்ள பாலை உண்டதால் அண்மையில் சீனாவில் பல குழந்தைகள் இறந்துள்ளார்கள்.ஆகவே புலத் தமிழர்கள் சிறிலங்காவில் இருந்து வரும் பிஸ்கட்டுக்கள் சொக்கிளட்டுக்களை தவிர்க்கவும்.

Swiss find melamine in Thai, Sri Lankan biscuits



Last updated: Monday, October 13, 2008 6:45 AM EDT

GENEVA - Swiss authorities say they have found high concentrations of melamine in biscuits from Thailand and Sri Lanka and have called on other European countries to withdraw the products.

Authorities in the canton (state) of Geneva say tests have shown high melamine levels in the Thai biscuits Milk Cookies S&P and the Sri Lankan candies LemonPuff Munchee.

Melamine in milk has been blamed for the deaths of four infants and for sickening more than 54,000 others in mainland China.

The authorities said in a statement Monday that the European distribution channels for the two biscuits have been identified.

They say tests on a dozen baby milk products have shown no melamine contamination.

A service of the Associated Press(AP)
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us