செவ்வாய், ஜனவரி 30, 2007

முஸ்லிம் பள்ளிவாசல் முன் தீ மிதித்து இந்துக்கள் வழிபாடு!!!


திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையான நேற்று பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன் இந்துக்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

முதுவன் திடல் கிராமத்தினர் காவல் தெய்வமாக பாத்திமா நாச்சியாரை வழிபடுகின்றனர். இக்கிராம மக்கள் எந்த காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் பாத்திமா நாச்சியாருக்கு காணிக்கை செலுத்திவிட்டு துவக்குகின்றனர். பாத்திமா நாச்சியாரின் மகன்கள் அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு பாத்திமா தீக்குளித்து இறந்ததாகவும், அவரது நினைவாக தீ மிதிக்கும் திருவிழா நடப்பதாகவும் ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். அதன்படி அசேன் என்பவர் மூன்றுவிரல் கொண்ட உருவமாகவும், உசேன் என்பவருக்கு ஐந்துவிரல் கொண்ட உருவமாகவும் வடிவமைத்து சப்பரத்தில் வைத்து ஊரை வலம் வருகின்றனர்.

நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் இந்துக்கள் முறைப்படி காப்புக்கட்டி, விரதமிருந்து தீ மிதிக்கின்றனர். ஆண்கள் தீ மிதிப்பதும், பெண்கள் பூ மெழுகுதல் என தீக்கங்குகளை எடுத்து உடலில் கொட்டுவதுமாக விழா நடக்கிறது. இதனால் நோய் தாக்காது என நம்புகின்றனர்.

மொகரம் மாதத்தின் முதல் மூன்று நாள் தீ மிதிப்பதற்கு குழிகளை வெட்டுகின்றனர். ஐந்தாம் நாள் வரை குழிகளை காய வைக்கின்றனர். அடுத்த மூன்று நாள் குழிகளில் விறகுகளை காய வைத்து தீ மிதிப்பதற்கு தயார்படுத்துகின்றனர். ஒன்பதாம் நாள் நள்ளிரவு முடிந்து அதிகாலை 3 மணியளவில் தீ மிதி திருவிழா நடக்கிறது. 10ம் நாளான மொகரம் பண்டிகையில் தீமிதிக்கும் குழியை மூடி விழாவை நிறைவு செய்கின்றனர். பள்ளிவாசலை கோவிலாக வழிபடும் இந்துகளுக்கு பூசாரியாக முஸ்லிம் உள்ளார். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் இத் திருவிழாவைக்காண ஹாலந்து நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஜாங்க்பிரித், மனைவி ஹோடி வந்திருந்தனர்.
http://www.dinamalar.com/

வேகமாக நகரங்கள் கடலில் புதையும் ஆபத்து!!!

விஞ்ஞானிகள் ஆய்வு மாநாடு பிரான்சு தலைநகர் பாரிசில் நடந்தது. வெப்பநிலை அதிகரிப்பால் பனி மலை உருகி நகரங்கள் மூழ்கும் ஆபத்து.


உலகின் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மாநாடு பிரான்சு தலைநகர் பாரிசில் நடந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.


இந்த மாநாட்டில் உலகின் வெப்ப நிலை அதிகரித்து வருவது குறித்து விஞ்ஞானிகள் தங்கள் கவலையை வெளியிட்டனர். வெப்ப நிலை காரணமாக பனி மலைகள் உருகி கடல்நீர் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வும், இதற்கு முன் இருந்ததை விட இப்போது வேகமாக கடல் மட்டம் அதிகரித்து வருவதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் 55 அங்குலம் வரை கடல் மட்டம் அதிகரித்து விடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் சில நாடுகளில் நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். கிரீன்லாந்து, இந்தோனேஷியா உள்பட சில நாடுகளில் 2030-ம் ஆண்டுக்குள் கடற்கரை பகுதிகள் தண்ணீரில் மூழ்கிவிடும்.
நன்றி>லங்கசிறீ

ராமரின் பலம் பாலத்தில் இருக்கா?

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே ராமர் பாலத்தை உடைக்க முயன்று உடைந்து கடலுக்குள் மூழ்கி விட்ட கருவியை மீட்க வந்த கிரேனும் உடைந்தது. இதனால் சேது சமுத்திரத் திட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்ட கடலை ஆழப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பாக் ஜலசந்தியில் தற்போது ஆழப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலத்தை (தீவுத் திட்டுக்களால் ஆன நீண்ட பாறை) உடைக்கும் முயற்சிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

பாலத்தை உடைப்பதற்காக அதி நவீன சிஎஸ்டி அக்வாரிஸ் என்ற கப்பல் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கப்பலில் உள்ள தோண்டும் கருவி 50 டன் எடை கொண்டது. இதை வைத்துத்தான் ராமர் பாலத்தை உடைக்க முயன்றனர்.

ஆனால் முதல் இடிப்பிலேயே இக்கருவி உடைந்து கடலில் மூழ்கி விட்டது. இதனால் உடைப்புப் பணி நிறுத்தப்பட்டது. கடலில் விழுந்த கருவியை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சென்னையிலிருந்து 150 டன் எடையுள்ள பொருட்களைத் தூக்கும் சக்தி கொண்ட ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டது. இந்த கிரேன் கடலில் விழுந்த பகுதியை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால் இப்போது இந்த கிரேனும் உடைந்து விட்டது.

ஏற்கனவே விழுந்த கருவியோடு, தற்போது ராட்சத கிரேனும் கடலில் விழுந்து விட்டது. இதனால் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர். தற்போது விசாகப்பட்டனத்திலிருந்து 200 டன் எடையுள்ள பொருட்களைத் தூக்கும் இன்னொரு கிரேன் வரவழைக்கப்படவுள்ளது.

ஒரு வேளை கருவியை தோண்டி எடுத்து கப்பலில் பொருத்தி சரி செய்ய முடியாவிட்டால் அக்வாரிஸ் கப்பல், கொச்சி துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சரி செய்யப்படும்.

புராதண காலத்தில் ராமரால் போடப்பட்ட பாலம் என்பது ஐதீகம். இதனால் இந்த பாலத்தை உடைக்கக் கூடாது என பாஜக, இந்து முன்னணி, அதிமுக மற்றும் பல இந்து அமைப்புகள் ஆகியவை கோரிக்கை விடுத்து வருகின்றன.

அதேபோல சுப்பிரமணியம் சுவாமியும் ராமர் பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில் பாலத்தை இடிக்க முயன்ற கருவி உடைந்ததும், அதை மீட்க முயன்ற கிரேன் உடைந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
http://thatstamil.oneindia.in/news/2007/01/30/sethu.html
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us