செவ்வாய், ஜனவரி 30, 2007

வேகமாக நகரங்கள் கடலில் புதையும் ஆபத்து!!!

விஞ்ஞானிகள் ஆய்வு மாநாடு பிரான்சு தலைநகர் பாரிசில் நடந்தது. வெப்பநிலை அதிகரிப்பால் பனி மலை உருகி நகரங்கள் மூழ்கும் ஆபத்து.


உலகின் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மாநாடு பிரான்சு தலைநகர் பாரிசில் நடந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.


இந்த மாநாட்டில் உலகின் வெப்ப நிலை அதிகரித்து வருவது குறித்து விஞ்ஞானிகள் தங்கள் கவலையை வெளியிட்டனர். வெப்ப நிலை காரணமாக பனி மலைகள் உருகி கடல்நீர் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வும், இதற்கு முன் இருந்ததை விட இப்போது வேகமாக கடல் மட்டம் அதிகரித்து வருவதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் 55 அங்குலம் வரை கடல் மட்டம் அதிகரித்து விடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் சில நாடுகளில் நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். கிரீன்லாந்து, இந்தோனேஷியா உள்பட சில நாடுகளில் 2030-ம் ஆண்டுக்குள் கடற்கரை பகுதிகள் தண்ணீரில் மூழ்கிவிடும்.
நன்றி>லங்கசிறீ

கருத்துகள் இல்லை:

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us