சனி, அக்டோபர் 27, 2007

இசை வடிவில் திருக்குறள்!

அய்யன் வள்ளுவன் தந்த திருக்குறள் தேனாகப்பாய்கிறது, முதலாவதை கேட்கும்போது இரண்டாவதை நிறுத்தி விடவும்.
இசைவடிவில் திருக்குறளைகேட்க வானொலியை நிறுத்திவிட்டு கேட்கவும்.


FREE service provided by MusicWebTown.com


FREE service provided by MusicWebTown.com

புதன், அக்டோபர் 24, 2007

கமல்ஹாசனின் இறுதி எச்சரிக்கை!!!


எனது பெயரைப் பயன்படுத்தி இணையதளம் ஒன்றின் மூலம் நடந்து வரும் வியாபாரத்திற்கு, எனது ரசிகர்கள் ஒத்துழைப்பு தரக் கூடாது என்று கலைஞானி கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தனது பெயரில் இணையதளம் ஒன்றில் நடந்து வரும் வியாபாரத்தை அவர் கண்டித்துள்ளார். அதற்கும் தனக்கும், தனது நற்பணி மன்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் விளக்கியுள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த சில மாதங்களாக http://www.universalherokamal.com/ என்ற தலைப்புடன் இன்டர்நெட் மூலமாகவும், எஸ்.எம்.எஸ்கள் மூலமாகவும், எனது அனுமதி இல்லாமல், கமல்ஹாசன் ரசிகர்கள் என்ற போர்வையுடன் சில வியாபாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுடன், ஆர்குட் டாக்டர் கமல்ஹாசன் கம்யூனிட்டி என்ற அமைப்பும் சேர்ந்திருப்பது தெரியவருகிறது.

எனது ரசிகர்களை கட்டுப்பாட்டுடன் நற்பணிகளில் ஈடுபடுத்திவரும் முயற்சிகளுக்கு இவர்கள் செயல் ரீதியான விரோதிகளாகின்றனர்.

எனது வெளிவரவிருக்கும் படங்களையோ, எனது வெளிவராத, வந்த படங்களையோ விலை பட்டியலிட்டு விற்கும் (எனது படங்கள் அச்சிட்ட டி.சர்ட் உள்பட) உரிமையை நானோ அல்லது எனது தயாரிப்பாளரோ இவர்களுக்கு வழங்கவில்லை.

அரசியல் மற்றும் வியாபாரத்தை நற்பணி இயக்கத்தில் ஊடுருவ விடாமல், இதுவரை காத்து வருகிறேன். இனியும் இக்காவல் தொடரும்.

எனது அனுமதியின்றி செயல்படும் இவர்களுக்கு எந்த ஒத்துழைப்பையும், நமது நற்பணி இயக்கங்களும், எனது உண்மையான ரசிகர்களும் வழங்கத் தேவையில்லை.

இதுவரை இவர்கள் பெங்களூர், புதுச்சேரி போன்ற இடங்களில் என்னுடைய அனுமதியின்றி விற்பனையில் இறங்கிய செயலுக்கு நியாயமான, சட்டப்பூர்வமான நடவடிக்கைளுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தரப்பிடம் விசாரித்தபோது, இப்போதைக்கு இந்த அறிக்கையைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. நவம்பர் 7ம் தேதி தனது பிறந்த நாளின்போது செய்தியாளர்களை கமல் சந்திக்கவுள்ளார். அப்போது இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

- தட்ஸ்தமிழில் இருநு..........

திங்கள், அக்டோபர் 22, 2007

தமிழ் பேசும் ஜேர்மனியர்கள்.

தமிழ் பேசும் ஜேர்மனியர்களை பார்க்க வானொலியை நிறுத்திவிட்டு கேட்கவும்.


சனி, அக்டோபர் 20, 2007

நடிகை ராதிகாவுக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணி கண்டனம்!!!

தமிழ்நாட்டில் சிங்களத் திரைப்பட விழாவை தொடக்கி வைப்பதா?: நடிகை ராதிகாவுக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணி கண்டனம்!!!

தமிழ்நாட்டில் தமிழர்களை நம்பி வாழ்ந்து கொண்டு தமிழ்நாட்டிலேயே சிங்களத் திரைப்பட விழாவை தொடக்கி வைப்பதா? என்று நடிகை ராதிகாவுக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் வாரமிருமுறை இதழான நக்கீரனுக்கு (20.10.07) அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:

சிங்களத் திரைப்பட விழாவை ராதிகா தொடக்கி வைத்ததும் அங்கு அவர் பேசிய பேச்சுக்களும் தமிழகத்திற்கும் தமிழ் இனத்துக்கும் செய்கிற துரோகம்.

நடிகை ராதிகாவை வாழ வைத்ததும் வாழ வைத்துக் கொண்டிருப்பதும் தமிழ்நாட்டு தமிழர்களும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும்தான். ஆனால் இப்போது தனது சிங்கள அடையாளத்தைக் காட்ட முயற்சிக்கிறார்.

ஏனெனில், நடிகை ராதிகா பாதி சிங்களப் பெண். கலைச்சேவை என்கிற பெயரில் ஊடுருவி நிற்கும் ராதிகா, உண்மையில் கலைச்சேவை செய்யவில்லை. கலையை வர்த்தகமாக்கிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தனது வர்த்தகத்துக்காக தமிழர்களைச் சுரண்டும் ராதிகா, யாருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்? தமிழர்களுக்கும் தமிழ் இனத்துக்கும் அல்லவா தனது விசுவாசத்தையும் நன்றியையும் அவர் காட்ட வேண்டும். அதைத் தவிர்த்துவிட்டு தன்னை "சிங்களத்தி" என்று அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார் என்றால் அதனை எப்படி நாம் அனுமதிக்க முடியும்

ஈழத்தில் உள்ள செஞ்சோலை சிறார் இல்லத்தின் மீது சிங்கள இராணுவம் கண்மூடித்தனமாக சிங்கள இராணுவம் குண்டு வீசி 61 தமிழ்ச் சிறார்களை படுகொலை செய்தது. அந்த சின்னஞ் சிறார்களின் உடல்கள் பிய்த்தெறியப்பட்டது. அதைக் கண்டு தமிழகம் மட்டுமல்ல உலகமே கண்ணீர் சிந்தியது.

இது ஏதோ 83-85 களில் நடந்த துயரம் அல்ல. சமீபத்தில் நடந்த துயரம். இந்தத் துயரமெல்லாம் உங்கள் நெஞ்சத்தில் உள்ளதா? இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சிங்களத் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதும் சிங்களவர்களுக்காக திரைப்படம் எடுப்பேன் என்பதும் ஜீரணிக்க முடியவில்லை.

கலை என்பது மக்களுக்கானது. அந்த வகையில் நாம் சார்ந்து வாழ்கிற மக்களுக்காகத்தான் அந்தக் கலை பயன்பட வேண்டும் என்ற உணர்வு முதலில் ராதிகாவுக்கு வரவேண்டும் என்றார் பேராசிரியர் சரசுவதி.

புதினத்தில் இருந்து...............

ஞாயிறு, அக்டோபர் 07, 2007

அமெரிக்காவின் வாரு பாருடா.

அமெரிக்காவின் வாரை பார்க்க, வானொலியை நிறுத்திவிட்டு பார்க்கவும்......

சனி, அக்டோபர் 06, 2007

நிலாவில் சாய்பாபா - புட்டபர்த்தியில் பரபரப்பு!!!

நிலாவில் சாய்பாபா தோன்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டதால், புட்டபர்த்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்யசாய்பாபா ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில், சாய்பாபா, நிலாவில் தோன்றி அருளாசி வழங்குவார் என ஆசிரமத்திலிருந்து அறிவிக்கப்பட்டது.

மாலை 6.30 மணிக்கு சாய்பாபா, விஸ்வரூப விராத் தரிசனம் தருவார் என்று அந்த அறிவிப்பு கூறியது. இதையடுத்து பெரும் திரளான பக்தர்கள் அங்கு கூடத் தொடங்கினர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கூடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

புட்டபர்த்தி விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் இவர்கள் கூடி தரிசனத்தைக் காண காத்திருந்தனர். அந்த சமயத்தில் சாய்பாபாவும் அங்கு வந்தார். சாய்பாபா உள்பட அனைவரும் நிலவைப் பார்த்தபடி இருந்தனர். ஆனால் அறிவித்தபடி எந்த தரிசனமும் காணப்படவில்லை. குறிப்பாக நிலவே வரவில்லை.

இதையடுத்து அனைவரும் ஏமாந்து போனார்கள். அவர்களை ஆறுதல்படுத்துவது போல, இன்னொரு நாள் தரிசனம் தருவதாக கூறி விட்டு சாய்பாபா அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
http://thatstamil.oneindia.in/news/2007/10...ar-in-moon.html

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அதிக சக்தியுடன் பூமியை நோக்கிவரும் இராட்சத விண்கல்!!!

*ரஷ்ய வானியல் நிபுணர் அறிவிப்பு
பூமியை தாக்குவதற்காக வந்து கொண்டிருக்கும் இராட்சத விண்கல் ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததென ரஷ்ய வானியல் நிபுணரொருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரஷ்யாவிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிலையம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த இராட்சத விண்கல் 2029 ஆம் ஆண்டளவில் பூமியின் சுற்றுப் பாதையைக் கடக்கும்போது அப்பாதையிலிருந்து விலகி பூமியைத் தாக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கோள் மண்டலத் தொகுதியில் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றிவரும் கிரகங்களைப் போல சிறுசிறு உலோகக் கற்களும் சுற்றிவருகின்றன. இதில் அஸ்டிராயிட்ஸ் எனப்படும் ஏராளமான விண்கற்களில் அபோபிஸ் என்ற இந்த விண்கல்லும் ஒன்று.

அதிகூடிய வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இக்கல் அதே வேகத்திலேயே பூமியைத் தாக்கும் போது இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஏற்படுத்திய தாக்கத்திலும் பார்க்க ஆயிரம் மடங்கு அதிக சக்தி வெளிப்படுத்தப்படும்.

இத்தாக்கம் பூமியில் ஏற்படும்போது பூகம்பம் ஏற்படுவது போன்ற அதிர்வு ஏற்படுவதுடன் பேரழிவினையும் பூமி சந்திக்க நேரிடும்.

இருந்தாலும் அசுர வேகத்தில் பெருவளர்ச்சியினையும் வெற்றிகளையும் கண்டுள்ள விஞ்ஞானத்தின் நவீன தொழில்நுட்பத்தின் புதிய உத்திகளையும் செயற்கைக் கோள்களையும் பயன்படுத்தி இந்த இராட்சத விண்கலம் பாதையைத் திருப்பி பூமியை தாக்கத்திலிருந்து காப்பாற்றலாமென அவ்வூடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/news/2007/10/6/...s_page37806.htm

புதன், அக்டோபர் 03, 2007

முடிந்தால் காப்பாற்றுங்கள்!!!

உங்களால் முடிந்தால் இரட்டை கோபிரங்களை விமானத்தாக்குதலில் இருந்து காப்பாற்றுங்கள்.

காப்பாற்ற இங்கே அழுத்தவும்.
http://www.wahgames.com/play/game/1289/New-York-Defender.html
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us