வெள்ளி, ஜூன் 15, 2007

சவுதி அரேபியாவில் இரண்டு சிங்களவர்களுக்கு ஆயுள் தண்டனை!

சவுதி அரேபியா, ஜெத்தாவில் கடந்த ஏப்ரல் மாதம் அரேபியப் பெண்ணொருவரின் நகைகளைக் கொள்ளையிட முயன்ற இரண்டு சிங்களவர்களுக்கும், மற்றொரு இந்தியருக்கும் கொலை முயற்சிக் குற்றத்தின்கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேலும் ஐந்து சிங்களவர்களுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையும், 500 சாட்டை அடியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவிலுள்ள சிறீலங்கா தூதரகம், வெளிநாட்டு வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இந்தத் தகவலை அறிவித்துள்ளது.

பதிவில் இருந்து.....

கருத்துகள் இல்லை:

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us