வியாழன், ஜூன் 21, 2007

சிந்தியுங்கள் செயற்படுங்கள்! ! ! ! !

அநேக துர்க்காதமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி துர்க்காமாநிலத்தில் உள்ள வெண்திரைகளில் நம் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்காக எச்சந்தர்ப்பத்திலும் எந்தவொரு துன்பத்திலும் குரல் கொடுக்காத தென் இந்திய தமிழ் திரைப்பட நடிகர்களின் திரைப்படங்களை துர்க்காமாநிலத்தில் உள்ள வெண்திரைகளில் காண்பதை தவிர்க்கின்றோம்.


அன்பான தென் இந்திய தமிழ் திரைப்படநடிகர்களே
எம் மக்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் கண்டு எச்சந்தர்ப்பத்திலும் குரல் கொடுக்காத உங்களின் திரைப்படங்களை எக்காரணம் கொண்டும் வெண்திரைகளில் சென்று பணம் கொடுத்து பார்வையிடுவதை தவிர்க்கின்றோம். நாங்கள் உங்களை எங்கள் வீட்டில் ஒருவராக நினைக்கின்றோம் நீங்களோ எம் மக்கள் துன்பப்படுத்தப்படும் போது அவர்களுக்காக உங்களின் குரல்கள் ஒலித்ததுண்டா ?
உங்கள் திரைப்படங்களை இலட்ச்சங்களையும் கோடிகளையும் கொடுத்து வேண்டிப்பார்க்கின்றோம் எங்களின் இலட்சியங்களுக்கு எதிராக மக்களை அழிக்கின்றபோதும் அடித்து துரத்துகின்றபோதும் நீங்கள்; குரல் கொடுத்ததுண்டா?; எம்மக்களை கொல்வதற்காக உங்கள் அரசாங்கம் கொடுக்கும் ஆயுத தளபாடங்களையாவது நிறுத்தசொன்னதுண்டா?
சிந்தியுங்கள் செயற்படுங்கள்! ! ! ! !

இதன் அடிப்படையில் இனிவரும் காலங்களில் எம்மக்களுக்காக குரல் கொடுக்காத எந்த ஒரு நடிகர்களின் திரைப்படங்களையும் வெண்திரைகளில் காண்பதை துர்க்காமாநிலத்தில் தவிர்க்கின்றோம். இதனை அனைத்து புலம்பெயர்வாழ் தமிழ் மக்களிடமும் எடுத்துச்செல்கின்றோம்.


இங்ஙனம்
துர்க்கா வாழ் தமிழ் மக்கள் (swiss)


hits

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நல்லதொரு பணி தொடரட்டும் உங்கள் சேவை.

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us