புதன், ஜூன் 13, 2007

எதற்கு இனிமேலும் சண்டை, கிருஷ்ணா-கிறிஸ்து.


கிருஷ்ணா - கிறிஸ்து பெயர்களில் ஒற்றுமை மாத்திரமல்ல - கூறும் கதைகளை பாருங்கள்

1)இருவரும் இறைவனின் பிள்ளைகள் - தேவ சித்தத்தினால் தோன்றியவர்கள்
2)கிறிஸ்து நாசரேத்திலும், கிருஷ்ணர் துவாரகையிலும் அவதரிக்கப் போகிறார்கள் என்ற செய்தி முதலே தேவ வாக்காக சொல்லப்பட்டது.
3) இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்த நாட்டு அரசனுக்கு இந்த செய்தி விருப்பமில்லத ஒன்றாக இருக்கிறது
4) இருவரும் வித்தியாசமான சூழலில் கிறிஸ்து மாட்டுத்தொழுவத்திலும், கிருஷ்ணர் சிறையிலும் பிறந்தார்கள்
5) இருவரும் அவதரித்த காலத்தில் அவர்கள் நாட்டில் மிகுந்த பிரச்சினைக்காலமாக இருந்தது.
6) இருவரின் அவதார முடிவும் ஒரேமாதிரியானதாகவே இருந்தது. கிருஸ்துவை ஆணிகளால் அறைந்தார்கள். கிருஷ்ணரின் காலில் வேடனின் அம்பு பாய்வதோடு அவதாரம் முடிவு அடைகிறது.

Similarities in just the names of 'Christ' and 'Krishna' have enough fuel for the curious mind to prod into the proposition that they were indeed one and the same person. Although there is little historical evidence, it is hard to ignore a host of likenesses between Jesus Christ and Lord Krishna. Analyze this!

• Both are believed to be sons of God, since they were divinely conceived
• The birth of both Jesus of Nazareth and Krishna of Dwarka and their God-designed missions were foretold
• Both were born at unusual places — Christ in a lowly manger and Krishna in a prison cell
• Both were divinely saved from death pronouncements
• Evil forces pursued both Christ and Krishna in vain
• Christ is often depicted as a shepherd; Krishna was a cowherd
• Both appeared at a critical time when their respective countries were in a torpid state
• Both died of wounds caused by sharp weapons — Christ by nails and Krishna by an arrow
• The teachings of both are very similar — both emphasize love and peace
• Krishna was often shown as having a dark blue complexion — a color close to that of Christ Consciousness
யாழில் இருந்து........

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அரசர்களால் அந்தக் குழந்தை கொல்வதற்காக தேடப் பட்டார்கள். (கம்சன்-ஏரோது) அதற்காக அந்நாட்டில் அந்நேரம் பிறந்த ஆண்குழந்தைகள் கொல்லப் படுவதும் இரண்டிலும் நிகழ்கிறது.

பிறந்தவுடன் இடமாற்றம் இருவரின் வாழ்விலும் நிகழ்கிறது. உலகுக்கு இவர்களின் சக்தி வெளிப்படும் காலம் (பதின்ம வயதில்) ஒரே பருவத்தில் நிகழ்கிறது.

கிருஷ்ணன் பிறப்பது சிறையில். கிறிஸ்து பிறக்கும்போது சிறைப்பிடிக்க தேடப் படுகிறார்.

கிறிஸ்துவுக்கு 12 சீடர்கள். கிருஷ்ணனின் கதையில் 12 தோழர்கள் பற்றி கூறப்படுகிறது.

தண்ணீரில் நடத்தல் என்ற அற்புதம் இரு சரிதத்திலும் கூறப் படுகிறது.

ஒரே கடவுள் பற்றிய பிரதேசக் கதை மாற்றம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

பெயரில்லா சொன்னது…

ஆயர்பாடியில் மேய்ப்பனாக வளர்ந்தவர் கிருஷ்ணன். 'நானே நல்ல மேய்ப்பன்' கிறிஸ்துவின் புகழ்பெற்ற வாக்கியம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

கிருஸ்ணா- கிருஸ்து, மாரி-மேரி; பாத்திமா- பத்மா; லலிதா-லொலிதா இவை யாவும் அறிவு தெரிந்தகாலத்திலிருந்து ஒன்றாகத் தான் இருக்கவேண்டும்; எனும் எண்ணம் இருந்ததால் என்றும்
அடித்துக் கொள்ளும் மனநிலை வரவில்லை; அடிப்போரைப் பார்த்துப் பரிதாபமே வரும்.
தகவல் தொகுப்புக்கு நன்றி.
படம் அருமையாக இருக்கிறது.

SurveySan சொன்னது…

அப்ப, ஏசு கதையும், கிருஷ்ணர் கதையும் ஒரே ஆள் எழுதியிருக்காகங்கறீயளா?

நம்ம பதிவர்கள் மாதிரி, முதலில் கிருஷ்ணர் கதையெழுதி, மீள்-பதிவா கொஞ்சம் கரெக்ஷண்ஸ் பண்ணி, ஏசய்யா கதையாக்கியிருப்பாக.

சும்மா, டமாசு :)

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us