சனி, செப்டம்பர் 13, 2008

சிறீலங்கா அரசின் மின் அஞ்சல் பிரசாரம்.

இன்று சிங்கள மக்களிடையே தினமும் வந்து சேரும் இராணுவத்தினரின் சடலங்களால் அரசும் இராணுவமும் கிலி பிடித்துப் போய் இருக்கிறது. காயப்பட்ட இராணுவத்தால் நிரம்பி வழியும் வைத்திய சாலைகள்.

இறந்த இராணுவத்தினரின் உடல்களால் நிரம்பி வழியும் பிரேத கூடங்களும் இறுதிச் சடங்கு மலர்ச் சாலைகளும் புதிய பிரச்சினைகளைத் தோற்றுவித்து விடுமோ என அஞ்ச வேண்டி உள்ளது.

இந்த நிலை மேலும் அதிகரிக்கும் நிலை அல்லாது குறையும் சாத்தியம் இல்லாத நிலையே தெரிகிறது. இதுவரை புலிகளுக்கு எதிரான போரைச் சொல்லிச் சொல்லியே தேர்தல்களை நடத்தி வயிற்றை வளர்த்து வந்த அரசுக்கு ஆப்பு வைத்து விடுவது போன்று போரின் போக்கு அமைவது தெரிகிறது.

இதனால் அரசின் பாதுகாப்பு அமைச்சின் ஊடகத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவின் புளுகு மூட்டைகள் கள உண்மைகளால் கிழிந்து பஞ்சாகிக் காற்றில் பறக்கின்றன. அதிபர் மகிந்த, பிரமதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம, பசில் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல, லெப். ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோரின் வெறித்தனமான பேச்சுகளால் சிங்கள மக்களின் ஆதரவைத் தக்க வைக்க ஆடிய விளையாட்டு ஆபத்தான கட்டத்தை அடைவது தெரிகிறது. எந்த நேரத்தில் ஆட்டம், ஆட்டங்கண்டு கலையுமோ என நினைக்கத் தோன்றுகிறது.

நடந்து முடிந்த இரண்டு மாகாண சபைத் தேர்தலையும் வெட்டிப் பிரசாரத்தாலும், பேச்சுக்களாலும், ஆயுதக் குழுக்களின் மிரட்டலாலும் வென்றாகி விட்டது. புலிகளும் அரசின் போக்குக்கு விட்டுக் கொடுத்துப் பப்பாசி மரத்திலை ஏத்தி விட்டது போன்று அரசின் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடம் கொடுத்து மல்லாவியில் இராணுவம் புகுந்து படம் பிடித்துத் தனது பரப்புரையால் மாகாண சபையைத் தனதாக்கிக் கொள்ள இடம் கொடுத்து விட்டனர். ஜே.வீ.பீ. யின் நிலை இன்று அணிலை ஏறவிட்டுப் பார்த்து ஏங்கும் நாயின் நிலைக்கு வந்து விட்டது. மொத்தத்தில் கட்சிகளின் கூட்டுகள் இறுக்க நிலை குலைந்து காணப்படுகிறன. எனவே அரசு சிங்கள மக்களின் மனங்களை இறுக்கப் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

சிங்கள மக்களின் போர் வெறிக்குத் தீனி போடுவதற்காக மின் அஞசல்கள் மழைபோல் கணிணிகளை நிரப்புவதில் அரசின் பரப்புரைச் சாதனங்கள் முனைப்புக் காட்டி வருகின்றன. இந்த மின் அஞ்சல்கள் உண்மைக்குப் புறம்பாகவும் நம்பமுடியாத அளவுக்குக் கற்பனை நிறைந்ததாகவும் காணப் படுகின்றன. இவற்றில் ஒன்று அமெரிக்க மாநிலப் புலனாய்வுப் பிரிவு 'FBI சொல்கிறது’ என்ற தலைப்பில் உள்ளது. இலங்கைப் பிரச்சனைக்கும் அமெரிக்க 'FBI க்கும் என்ன தொடர்பு என்று கேட்டு விடாதீர்கள். 'FBI என்றால் கூட ஏதோ அமெரிக்க மத்திய அரசு மூக்கை நுழைக்கிறது என்று நினைக்கலாம். ஆனால் மாநில உளவுத் துறை என்றால் 52 மாநிலங்களில் எந்த மாநிலம் என்ற கேள்வி எழுமே. ஆனால், மண்டைக்குள் ஏதும் உள்ளவருக்குத்தான் அந்தக் கேள்வி எழும். இவை மூளை கழுவுப்பட்ட ஜன்மங்களுக்காக எழுதப் படுபவை. எனவே எமது மக்கள் இவை பற்றி அக்கறை கொள்ளாது இருப்பது அவசியம்.

எதற்கும் இந்த 'FBI இவர்களுக்கு என்ன சொல்லி விட்டார்கள் என்பதைச் மிக மிகச் சுருக்கமாக முதலில் தெரிந்து கொள்வோம். இலங்கை இந்து சமுத்திரத்திலே வாழத் துடிக்கும் ஒரு சொர்க்க பூமி. அங்கே அமைதியான, இரக்கம் மிகுந்த, நாகரீகம் மிகுந்த சிங்கள மக்கள் வாழ்கிறார்கள். இவர்கள் விருந்தாளியாகவோ வெற்றி கொள்பவராகவோ எவர் வந்தாலும் மிக அன்பாய்ப் பழகும் குணம் உள்ளவர்கள். அங்கே எழுதப் பட்ட 2400 வருட வரலாறு கொண்ட 17 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இப்போது எப்படி மின்னஞ்சல் சொல்கிறது என்பதைச் சிறிது பார்ப்போமா?
"There is a tiny Little Island Paradise in the Indian Ocean called SRI LANKA that is trying to survive. They are the home for about 17 million people called the Sinhalese. On this entire planet on 6.6 billion people there are only 17 million Sinhalese and Sri Lanka is their home. Sri Lanka even though a tiny island country has over 2400 years of recorded and written history. There are remains of buildings, structures, paintings that go back to 400 BC. Today the identity of Sri Lanka and its poetic history is in the verge of extinction. Sri Lanka is also a country where the original forms of Buddhism still exist. “

இவர்களுடன் சுமார் 1.5 மில்லியன் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். உங்களுக்கு மேலதிக தகவலாக, உலகில் 112 மில்லியன் தமிழர் ஆதியில் இந்தியாவில் உள்ள தமிழ் நாடு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். தமிழ் நாடு என்றால் தமிழர்களின் தேசம். அதன் நிலப் பரப்பு இலங்கையை விடவும் இரண்டரை மடங்கு பெரியது. இலங்கையின் வரலாற்றுப் படி தென் இந்தியாவில் தமிழ்நாட்டில் வரண்ட ஆனால் மிகப் பெரிய தரித்திரப் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழர் கள்ளக் குடியேற்றமாகவும், படை எடுத்தும் பின்னர் அண்மைக் காலத்தில் பிரித்தானியரால் மலிவுக் கூலிகளாய் தேயிலை, கோப்பி, இரப்பர் பெருந்தொட்டங்களில் வேலை செய்ய இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுக் குடியேறியவர்கள். தென்னிந்தியாவையும் அங்குள்ள வாழ்வையும் இப்படிக் கூறுகிறது-

“In addition to the Sinhalese in Sri Lanka, there are about 1.5 million Tamil in Sri Lanka. For your information, there are 112 million Tamil in this planet and they are originally from the Tamil Nadu State in India. Tamil Nadu means Land of the Tamils and the land area is about two and a half times the land area of Sri Lanka. The history of Sri Lanka shows that the Tamil who lived in almost desert-like conditions in Tamil Nadu, which is a dry miserable but very large piece of land in South India came to Sri Lanka as illegal immigrants, invaders and most recently were brought in large numbers as cheap labour by the British to plant tea, coffee and rubber in Sri Lanka.”

சிறி லங்காவும் தென்னிந்தியாவில் தமிழ் நாடும் இடையில் 35 மைல் அகலக் கடலால் பிரிக்கப் பட்டுள்ளது. இந்திய அரசும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் நாட்டைப் பிரிப்பதைக் கனவிலும் விரும்பாது. தமிழ் நாட்டோடு அது சோமாலியா போன்று மில்லியன் கணக்கில் பட்டினியாகவும், படிப்பின்றியும் வாழ்வதற்காக எங்கேயும் ஓடிப் போகும் மனம் படைத்தவர்களோடு ஒப்பிடும் போது இலங்கை ஒரு சிறிய சொர்க்கத் தீவு. பெரும்பாலானவர் சிங்களவர் பெரும் பகுதியினர் அகிம்சையிலும் விருந்தோம்பலிலும் நம்பிக்கை கொண்ட பௌத்தர்கள். வந்தவர்கள் விருந்தினரோ, வெற்றி கொண்டவரோ, கள்ளரோ கொள்ளையரோ அல்லது பிரித்தானியரால் கொண்டு வரப்பட்ட மலிவான கூலியோ அவர்களை வரவேற்றவர் நாம்.

ஆனால் இன்று சிலர் தம்மைப் புலிகள் எனக் கூறிக் கொண்டு முழு சிறி லங்காவையும் வசப்படுத்தத் தீர்மானித்து விட்டனர். அப்படி அவர்கள் தமிழீழம் என்ற பெயரில் உருவாக்கத் தீர்மானித்து விட்டார்கள். அவர்கள் போகும் வேகத்தில் அழிவுகளும் இன அழிப்பும் பார்த்து நாம் அமைதியாய் இருந்தால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். அவர்கள் சிங்களவர்கள் மீது 30 வருடங்களுக்கு முன்பே போர் தொடக்கி விட்டார்கள்.

“Compared to Tamil Nadu which is like Somalia where among the people, millions are starving, illiterate and would run away to anywhere to live - Sri Lanka is a little Island Paradise. Sri Lanka's majority population, the Sinhalese most of them Buddhist, believe in non-violence and hospitality welcomed the visitors when they came, whether they came as conquerors, bandits, pirates or as cheap labour for the British. But today some of these visitors calling themselves Tamil Tigers have decided to occupy the entire island of Sri Lanka and have decided to create a Tamil Homeland called TAMIL EELAM. At the rate they have been going and the carnage and genocide they have been carrying out, if all of us keep quiet they might succeed. They have declared war on the Sinhalese 30 years ago.“

இந்த 30 வருடத்தில் அவர்கள் 70,000 சிங்களவரைப் பலி எடுத்துவிட்டார்கள். தமிழ் நாட்டை எதிர்த்த ராஜீவ் காந்தி, பிரேமதாசா இன்னும் பல அரசியல் வாதிகளைக் கொன்று விட்டார்கள். இப்படிப் புலம்பித் தீர்க்கிறது இந்த மின் அஞ்சல். இதில் காணப்படும் எவையும் அமெரிக்கா சம்பந்தப் பட்ட விடயமே இல்லை. அப்படி இருக்க இது வெளிநாடுகளில் வாழும் சிங்களவரின் கொம்பு சீவும் வேலையாகத் தெரிகிறது. அதே நேரம் ஏனைய மக்களின் அனுதாபத்தைப் பெற்று எமது தமிழீழக் கோரிக்கைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதே இதன் நோக்கமாகத் தெரிகிறது.

இதே வேளையில் சிங்களத்தின் பார்வையில் தமிழ் நாடு சோமாலியா போலவும், தமிழ் மக்கள் பட்டினியால் வாடி வாழ வழிதேடி எங்கேயும் போகக் கூடியவர்கள் என்பதும் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பது உறுதியாகிறது.

இலங்கையில் உள்ள மக்கள் இனங்களில் சிங்களவர்களே மிகவும் சோம்பேறிக் குணம் கொண்டவர்களும் உழைப்பின்றக் கிடைக்கும் மரவள்ளிக் கிழங்கும், பலாக்காயும் உண்டு வாழும் குணம் படைத்தவர்கள் என்பதும் இலவச அரிசி வழங்கப்பட ஆரம்பித்த 1950 வரை மிக அரிதாகவே சோறு உண்டு வாழ்ந்தவர்கள் என்பதையும் இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க நியாயமில்லை. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் கடின உழைப்பாலும் உயர் கல்வியாலும் பணமும் பதவியும் பெற்று உயர்வடைந்த சமூகங்களான இந்திய மற்றும் இஸ்லாமிய வரத்தகர்களின் வளமான வாழ்வு கண்டு பொறாமைத் தீயால் நாட்டை அழித்த வரலாறு சிங்களவர்களுடையது.

தமிழ் மக்களின் கல்வி அறிவும் அரச பதவிகளும் கண்டு பொறாமை கொண்டு சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக்கி தமிழரின் தொழில் வாய்ப்பைப் பறித்ததும், தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவரின் உயர் கல்வியைப் பறித்து நாட்டைப் படு பாதாளத்துக்கு எடுத்துச் சென்றவரும் சிங்களவரே.

1956, 1958, 1967, 1961, 1970, 1977, 1983 எனத் தொடர்ச்சியாக காடையரைக் கொண்டும் அரச படைகளைக் கொண்டும் தமிழ் மக்களின் உயிர் உடமைகளைப் பறித்து உயிரோடு அப்பாவித் தமிழ்ப் பொது மக்களை குழந்தைகள் பெண்கள் முதல் வயதானவர் நோயாளிகள் எனப் பாகுபாடின்றி தர்க்கிய பெருமையும் இந்தப் பொறுமையும் பெருந்தன்மையும் கொண்டுள்ள சிங்கள இனத்தால் மேற்கொள்ளப் பட்டது என்பதையும் மறந்து விட்டவர்களாக இருக்கலாம். ஆனாலும் சிங்கள இனம் வன்முறைகளற்ற விருந்தோம்பல் குணம் கொண்டவர்கள் என்கிறார்கள். 1956 ஜூன் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தின் முன்னால் சத்தியாக்கிரகம் இருந்த தாமிழர்களை ஏன் அடித்துக் காயப்படுத்தி கடல் ஏரிக்குள் எறிந்தார்கள் என்ற கேள்விக்கு யார் பதில் தருவார்? 1961 இல் வடக்கு கிழக்கு அரச அதிபர்கள் அலுவலகம் முன்னால் சத்தியாக் கிரகமும் சட்ட மறுப்பும் செய்த ஆயுதம் தரிக்காத தமிழ் பொது மக்களை இராணுவம் ஏன் அடித்து விரட்டியது? நியாயமாகப் பார்க்கப் போனால் இவற்றை அரசு, காவல் துறை மற்றும் நீதி மன்றம் மூலமாக அல்லவோ அணுகி இருக்க வேண்டும்? இத்தகைய அராஜக ஆட்சிதான் இவர்களின் அரசியல் நாகரிகமா?

ஆய்வு: நிலவரம் பத்திரிகைக்காக எதிர்மறைசிங்கம்

இதோ அவர்களின் நாகரிக முகம் எப்படி இருக்கிறது எனப் பாருங்கள.; “உங்களிடையே தமிழர்கள் இருப்பீர்கள். பெரும் பாலானவர்கள் நல்லவர்கள். கெட்டவர்கள்தான் இலங்கையில் சிங்களவரைக் கொல்ல பணம் சேர்க்க முயல்வது அல்லது தர்ம ஒன்று கூடல்கள் மூலம் பணம் சேர்த்து உதவுவது. நீங்கள் ஒரு நாகரிக உலகில் வாழ விரும்புகிறீர்களா அல்லது கொலையாளிகளுக்குக் கொடுக்கப் போகிறீர்களா? சிறி லங்கா அரசு கடந்த 30 வருடங்களாக முக்கியமான ஆனால் அசிங்கமான போருக்கு இடம் கொடுத்து முடிவில் தமிழ்ப் புலிகளுடன் போராடுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் ஒரு முடிவைக் காணும் நிலையில் உள்ளனர். ஆனால் நாம் எல்லாரும் எதுவும் செய்யாது பார்த்துக் கொண்டிருந்தால் நாளைக்கு சிறி லங்கா எனப்படும் தீவே இருக்காது. சிங்கள இனம் முற்றாக அழிந்து விடும். இந்த அமைதியை விரும்பும் மக்களை நீடித்து இருக்க உதவுங்கள்.
“Among you there will be Tamil. Most of them are good. The bad ones are those who collect or try to collect money by organizing charities, rallies and such from you and these funds are to kill the Sinhalese in Sri Lanka. Do we want to live in a civilized world or do we want to give in to murderers? The Sri Lankan Government has tried after 30 years of giving in to the superior but dirty war of the Tamil Tigers to finally fight them. Over the past two years they have made some break through. But if all us sit and watch tomorrow there will not be a little Island called Sri Lanka. The Sinhalese will be extinct. Help these peace loving people to exist. “

இவற்றைப் படிக்கும் போது இந்தப் பூனையும் பால் குடிக்குமா எனக் கேட்கத் தோன்றுகிறதா? இதைத்தான் காரியத்தில் முந்துவது என்பது. களவு எடுத்தவனே களவு கொடுத்தவனோடு சேர்ந்து கள்ளனைத் தேடுவது என்பது. தமிழன் ஏமாளியாக இருந்தால் சிங்களவன் இதுவும் சொல்வான் செய்வான்! இன்னமும் சொல்வான் செய்வான்! அமைதிப் பேச்சுக் காலமோ அட்டகாசம். போர்க் காலமோ எங்கேயும் எப்போதும் கொல்பவன் சிங்களவனும் அவனுடைய நண்பர்களும். கொல்லப்படுவது தமிழனும் தமிழனின் நண்பர்களும்தான். இதிலும் ஒரு சிறு மாற்றமும் உள்ளது. தமிழனுக்கு உதவ வேண்டாம், மனித நேயம,; அரசியல் அமைதித் தீர்வு, அரசியல் நாகரிகம் பற்றி அமெரிக்கா கூடப் பேசமுடியாது. அப்படிப் பேசினால் அமெரிக்கனையும் தமிழ்ப் புலி எனச் சிங்களம் முத்திரை குத்திவிடும் நிலை எவரும் அறிந்ததே. அப்படியான கல்லிலா நார் உரிக்க முடியும்? போர் என்ற மொழி ஒன்றைத் தவிர வேறு எந்த மொழியும் சிங்களத்துக்குப் புரியாது. இப்படியான நிலையில் பூனையின் தோழனாக இருக்கிற இந்தியா தமிழன் என்ற பாலுக்குப் பாதுகாப்பான காவல் என சில புத்தி ஜீவிகள் பேசுவது வியப்பாய் உள்ளது.

இன்னொரு மின்னஞ்சல் தமிழ் மக்களை மிரட்டும் விதத்தில் இராணுவம் மன்னார், முகமாலை, ஜனகபுரத்தில் புலிகளை அழித்து விட்டதாகப் பல கோரமான படங்களைப் பிரசுரித்து ஸ்ரீலங்கா இராணுவத்துடன் மோதினால் இதுதான் முடிவு என எச்சரித்துப் பயமுறுத்தும் வகையில் உள்ளது. இப்படங்களில் பல அப்பாவி மக்கள் பலியாக்கப் பட்டள்ளது போன்று காணப் படுகிறது. இவற்றில் பல காணாமல் போனவர்கள் பயன் படுத்தப் பட்டிருக்கலாம் என நினைக்க வேண்டியும் உள்ளது. ஏனென்றால் இலங்கை அரசும் அதன் இராணுவமும் எத்தகைய கொடுமையையும் தமிழரை வைத்து நடத்தி முடிக்கும் பாரம்பரியம் கொண்டது. எனவேதான் ஆதாரம் இல்லாத போதும் இப்படி நினைக்கத் தோன்றுகிறது.

மேலும் பல சிறுவர்களைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிடித்தோம் எனக் காட்டப் பட்டடிருக்கிறது. ஆனால் சில படங்கள் அகதிகள் முகாம்களில் இருந்த சிறுவர்களை வைத்து எடுக்கப் பட்டவை போன்று படத்தின் பின்னணிகள் காட்டி விடுகின்றன. மேலும் ஏனைய கூலிக் குழுக்களின் சிறுவர் படையும் பயன்படுத்தப் பட்டிருக்கலாம்.
அதிலிருந்து இரண்டு படங்களை இங்கே உங்கள் பார்வைக்காகத் தரப் படுகிறது.

இப்படி எல்லாம் மசாலா பண்ணி வந்துள்ளது அடுத்த மின்னஞ்சல்.

மற்றும் ஒன்று 04.09.08 திகதியிட்டு “ கடந்த இரு வாரங்கள் - மன்னார் ஜனகபுர நாகர் கோயில் முகமாலை’’, என்ற தலைப்பில் வந்துள்ளது. இந்த இடங்களில் நடந்த போர் முனைகளில் இடம்பெற்ற மரணங்களைக் காட்டுவதாகக் கோரமான படங்கள் கொண்டு வந்துள்ளது. புலிகளின் கட்டுப் பாட்டிலுள்ள பகுதிகளை கட்டம் கட்டமாக artikel_email.jpgமீட்டுவிட்டதாக இறுதியில் ஒரு மிகச் சிறிய பகுதியே புலிகள் வசம் உள்ளதாகப் படங்கள் போட்டுக் கூறுகிறது. இலங்கை இராணுவம் அதி சிறந்தது. அந்தச் சிறந்ததுடன் மோதி மற்றவர் போல இறந்துவிடு என்று மிரட்டுகிறது. இந்த மின்னஞ்சல்கள் போன்று மேலும் உங்களுக்கும் வந்திருக்கும் இனியும் வரும். இவை வழக்கம் போல் அரசின் பொய்ப் பிரச்சாரங்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுவது அவசியம். இப்போது சில நாட்களாக இலங்கை இராணுவம் தொடர்ச்சியாக வாங்கும் அடிகளையும் அழிவுகள் இழப்புகளையும் பார்க்கும் போது அரசின் அவல நிலை தெரிகிறது.
அண்மைக் காலங்களில் இடம்பெறும் கள நிலைமைகள் சிங்களத்துக்கு இவை போன்ற பிரச்சாரம் அவசியம் என்பதையே காட்டுகிறது. எனவே அவற்றை நாம் கவனத்தில் எடுத்து அவை தரும் விடையங்கள் பற்றிக் கவலைப் படாமல் வன்னியில் இடம் பெயர்ந்து அல்லல் படும் எமது உறவுகளுக்கு அவசியமான உதவிகள் செய்ய வேண்டியது கட்டாய தேவை. இதனைக் கவனத்தில் எடுத்து உடனடியாக எமது அதிக பட்ச பொருள் உதவியை தமிழர் புனர் வாழ்வுக் கழகம், வெண்புறா இயக்கம், செடொட் நிறுவனங்கள் மூலமாக எமது உறவுகளின் உயிர்காக்க உதவுவோமாக.

நன்றி:-swissmurasam

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இந்தியாவும் விடுதலைபுலிகளும்

சென்ற வாரம் வழக்கம் போல விடுதலை புலிகளுக்கும் சிங்கள் ராணுவத்திற்க்கும் நடந்த சண்டையில் இரண்டு இந்தியர்கள் காயமாம் .

இலங்கை பிரச்சனை என்பது இடியாப்ப சிக்கல்களை விட மிக மிக சிக்கலானது. கூடவே அங்கு நடக்கும் போராட்டம் அல்லது வன்முறை யாருக்காக என்பதும் படு படு குழப்பமானது..


தமிழ் மக்களுக்காகவா??

அப்ப ஏன் இந்தியாவில் இருந்து பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து அழைத்து செல்லபட்ட கூலி தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து அந்நாட்டின் அந்நிய செலாவாணியை உயர்த்தினார்களே..அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா???

அப்போது எல்லாம் ஏன் சண்டை வரவில்லை??


அந்த தேயிலை தொழிளார்கள் நிலை அடிமைக்கு கீழான நிலை..அவர்களுக்கு எந்த வித உரிமையும் கிடையாது ..ஓட்டுரிமை உட்பட.

அவர்களை சில பேரை தந்திரமாக இந்தியாவிற்க்கு திரும்ப அனுப்ப இலங்கை அரசாங்கம் முடிவு செய்த போது அதற்க்கு ஒத்து ஓதியது இந்த யாழ்பாண தமிழர்களே ...அல்லது இவர்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்கள்..

இன்று கூட மலையக தமிழர்கள் என்று அழைக்க படும் அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று தெரியவில்லை..

தமிழ் ஈழம் உருவானால் யாழ்பாண தமிழர்களுக்கு நிகரான மக்கள் தொகையில் இருக்கும் இவர்கள் கதி என்ன??


இந்த தமிழ் விடுதலை இயக்கங்கள் தோன்றியத்ற்க்கு காரணம் என்வென்றால் இட ஒதுக்கீடு என்ற அரசின் நிலை...அதை நேரம் கிடைத்தாம் பின் பேசலாம்..

ராஜீவ் படுகொலை.. பத்மநாபா முதல் அமிர்ந்தலிங்கம் வரை கொன்ற மாவீரர்கள் இவர்கள்..

இந்திய படைகளை பின்னால் இருந்து தாக்கிய கோழை புலிகள்..

சரி உங்களை தினமும் எவனோ ஒருவன் யார் என்ற முகம் தெரியாமல் சொல்லி கொள்ளாமல் பின்னால் இருந்து உங்களின் நடு மண்டையில் கல் எரிந்தால் என்ன செய்வீர்கள்??

காக்க போன ரானுவத்தை எதிரிகளாக ஆக்கிய மிக பெருமை இந்த புலிகளுக்கு உண்டு. பின்னால் இருந்து தாக்குவது வீரமாம்.. அதுவும் தற்கொலை படை எல்லாம் வீர காவியவாம்

பிரபாகரன் மகன் அலல்து மகளை எல்லாம் இப்படி தற்கொலை படை ஆக விட வேண்டியது தானே.. ஏன் அவர்களுக்கு மட்டும் லண்டனில் சொகுசு வாழ்க்கை??


சரி அப்ப என்னதான் முடிவு??

விடுதலைபுலிகளை அழிக்க யாராலும் முடியாது....உலக தமிழ் அகதிகளின் எண்ணிக்கை பெருக பெருக அவர்கள் பலம் பெருக தான் செய்யும்.. கூடவே நார்வே ஒத்தாசை செய்த கதை நினைவுக்கு வருகிறது. ஒஸ்லோவில் சட்டம் ஒழுங்கு நிலை படு மோசம்

காரணம் யார் .. நம்ம இலங்கை தமிழ் காரர்கள் தான்..

சரி இந்த பிரச்சனை தீர்ந்தா அப்படியே எல்லா அகதி என்று சொல்லி வந்தவங்களை எல்லாம் அனுப்பி வைத்து விடலாம் என்ற தன் உள் நாட்டு குழப்பத்தில் தான் நார்வே உதவிக்கு வந்தது..

பணக்கார அகதிங்க எல்லாம் ஐரோப்பாவுக்கு தான் போறாங்க..ஏழை அகதிங்க இந்தியாவிற்க்கு வராங்க..

ஏங்க சார் ..ஏன் சார் அகதி என்பது உயிர் பிழைக்க தஞ்சம் கேட்பது.. ஏன் உங்க ஆளுங்க எல்லாம் பணக்கார நாடுகளுக்கே உயிரி பிட்சை கேட்க்கறீங்க??? இணையங்களில் சம்ம டக்கரா தமிழ் புலின்னு கலக்கிறீங்க..

ஏங்க அகதின்னு ஓடுறீங்க உங்களூக்கு ஏன் பணக்கார நாட்டுக்கு ஓடுறீங்க,,சோமாலியா எத்தியோப்பியாவிக்கு எல்லாம் அகதியா போக வேண்டியது தானே??



இந்த போரை காட்டி புலம் பெயறந்தவர்கள்.. அதாவது வேலை தேடி வெளிநாட்ட்க்கு குறுக்கு வழியில் சென்றவர்கள் இருக்கும் வரை இந்த போர் ஒயாது..

இந்தியாவின் நிலை என்ன?


தமிழ் நாட்டின் தென் பகுதியில்

கல்பாக்கம், கூடங்குளம் தொடங்கி திருவனந்தபுரம் வரை பல நாட்டின் முக்கியதுவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. இந்த இடங்களை எல்லாம் அன்னிய நாட்டு அரசுகள் வேவு பார்க்க அனுமதிக்க கூடாது. கூடவும் இந்த இடங்களில் அந்நிய நாடுகளின் பார்வையும் பட கூடாது..

விடுதலைபுலிகளும் சிங்கள் ரானுவமும் இரு தரப்பும் நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை..

சிங்கள் தரப்பு தொடர்பாக நமக்கு ஏற்கனவே தெரியும்

விடுதலைபுலிகள் தரப்பும் அப்படியே

அவர்களின் தமிழ் துரோக கொலைகள் எல்லாம் நமக்கு தொடர்பில்லாது விட்டு விடுவோம்..

நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் இந்தியர்கள் வந்தேறிகள் என்று சொன்ன அந்த ஆண்டன் பாலசிங்கதின் வார்தைகளை மறக்க முடியுமா?

மலையக தமிழர்கள் எல்லாரும் யாழ்பாணத்திரின் அடிமைகள் என்று இன்று வரை சொல்லும் யாழ்பாண வாசி தமிழர்களின் நடப்பை திருத்த முடிய்மா?

வடக்கியத்தானை நம்பாதே ( வடக்கித்தியான் - > தமிழ்நாடு ) என்று இன்று வரை சொல்லும் இந்த முதுகில் குத்தும் இலங்கை தமிழர்களை இன்னம் ஒரு முறை நம்பி மோசம் போகலாமா?


சரி அப்ப ராடார்?

ராடார் என்பது ஆள் கொள்ளும் இயந்த்ரம் இல்லை.. வானில் பறக்கும் விமானங்களை கண்காணிக்கும் ஒரு கருவி..

அப்ப அந்த இரண்டு இந்தியர்??

அந்த ராடர்களை அங்கு இருக்கு ஆட்களுக்கு கற்று தர சென்றவர்கள்..

சரி ராடாரை இந்தியா கொடுக்காமல் இருந்தால்?

சீனா கொடுத்துஇருக்கும்.. கூடவே நம் சென்னை வரை எல்லா ஏரியாவையும் அந்த ராடார் வழியாக சொல்லி கொள்ளாமல் கண்காணிப்பார்கள்?

அப்ப என்ன தான் சொல்ல வர?

என்னை பொருத்தவரை நான் முதலில் இந்தியன்..

அதுக்கு அப்புறம் தான் இந்த அல்லைகைகள்..

இவனுங்க கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சா ....


இலங்கை பிரச்சனை என்பது எந்த தீர்வும் அற்றது. கண்டுக்காம போ.. அவங்க இரண்டு தரப்பும் சண்டையை ஒரு நாளைக்கும் நிறுத்தாது.. இதில் தமிழ் தமிழர்ன்னு உன்னை நீயே குழப்பிகிட்டா அதற்க்கு யாரும் பொறுப்பில்லை..

பெயரில்லா சொன்னது…

இது ஒரு தமிழ்நாட்டு தமிழன் எழுதிய கருத்தாக இருக்க முடியாது, சிறிலங்காவிற்கு குண்டி கழுவும், சொந்த இனத்தை காட்டிகொடுப்பவர்கள், இந்தியன் என்ற பெயரில் எழுதி இருக்கவேண்டும், அல்லது தமிழ்நாட்டில் இருப்பேன் தமிழன் என கூறமாட்டேன் இந்தியன் என்றே கூறுவேன், தமிழன் என கூறினால் எனது இருப்புக்கு ஆபத்து வந்து விடும் என கருதும் பார்ப்பனின் கருத்தாக இருக்கும்.

தமிழ்நாட்டு கடலில் தமிழ்நாட்டு மீணவன் சுடப்படுகிறான் ஏன் என்று கேட்காத இந்தியா, சுட்டுகொல்லும் சிங்கள அரசுக்கு வவனியாவில் குண்டி கழுவுகிறது. தமிழக மீணவர்களை இந்தியனாக மதிக்கவேண்டாம் அவனை மனிதனாகவாது மதிக்கலாம் அல்லவா?

சோழகாலத்தில் வாய்பொத்தி அடங்கியிருந்த கேரளம் தண்ணி தரமாட்டேன் என்று அணையை உயர்தி கட்டுகிறது, தெலுங்கன் கிருஸ்னா நதியை அனுப்ப மறுக்கிறான், கன்னடன் காவிரியை திறந்து விட மறுத்து, உச்சநீதிமண்ற தீர்ப்பு என் மயிருக்கு சமன் என்கிறான், சொந்தநாட்டிலேயே இன்னொரு பகுதி மக்களுக்கு தண்ணீர் பெற்று கொடுக்க லாயக்கில்லாத இந்திய ஒருமைப்பாடு எங்கே செல்கிறது.

ஆயுதம் தூக்கு என்று இளஞர்களை தூண்டிவிட்டு சிங்களம் போட்ட எதிர்கட்சி தலைவர் பதவிக்காக அந்த இளஞர்களையே காட்டிகொடுத்த அமிர்தலிங்கம் வீரன், கூட போராடவந்த பெண்போராளிகளையே இந்திராணுவத்துக்கு கூட்டிக்கொடுத்த பத்மநாபா வீரன், இந்திரா இறந்தபோது ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டதற்க்கு விளக்கம் கேட்டபோது, ஒரு பெரிய ஆலமரம் விழும்போது சில ஆயிரம் செடி கொடிகள் மடியத்தான் நேரிடும் என நாடளமண்றத்திலேயே கூலாக பதில் சொன்ன ரசீவ் காந்தி வீரன்.

தமிழன் என்றால் பார்ப்பனின் இருப்புக்கு ஆபத்து என்று எண்ணும் பார்ப்பனின் பசப்பு வார்த்தைகள் இவை, தன் இருப்புக்கு ஆபத்து வந்தால் கொலையும் செய்யதுணிவான் பார்ப்பன்.

பெயரில்லா சொன்னது…

இக்கட்டுரை சுட்டிக்காட்டிய விடயம் உண்மையாக யாரையோ சுட்டு இருக்கிறது அல்லாது விடில் இவ்வளவு நீண்ட பின்னூட்டம் வந்திராது யோசிக்க வேண்டிய விடயம்தான்

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us