வியாழன், ஆகஸ்ட் 23, 2007

தண்ணீர் கேட்கும் 'பாட்டியும், பேத்தியும்': கொடுக்க மறுத்தால் ரத்தவாந்தி!!!




திருநெல்வேலி: ஒரு பாட்டி தனது பேத்தியுடன் தண்ணீர் கேட்டு வருவார். அவருக்கு தண்ணீர் கொடுக்க மறுத்தால் அந்த வீடு தீப்பிடித்து எறியும், வீட்டில் இருப்பவர்கள் ரத்த வாந்தி எடுத்துப் பலியாவார்கள் என்று கிளம்பியுள்ள பீதியால் நெல்லை மாவட்டம் கழுகுமலைப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

பீதியில் ஆழ்ந்துள்ள அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் முன்பகுதியில் வேப்பிலைகளை கட்டி வைத்துள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:

அனைத்து வீடுகளுக்கும் ஒரு பாட்டி தனது பேத்தியை அழைத்து வந்து தண்ணீர் கேட்பார். கொடுக்க மறுப்பவர்கள் வீடு தீப்பற்றி எரியும். கொடுப்பவர்களுக்கு ரத்தவாந்தி ஏற்படும் என்றும் புரளி கிளம்பியது.

சாத்தூர் பகுதியில் கிளம்பிய இந்த புரளி தீடீரென கழுகுமலை பகுதிக்கும் பரவியது. இதைத் தொடர்ந்து பீதியடைந்த மக்கள் எங்கே தங்கள் வீட்டுக்கு அந்த பாட்டி வந்து விடுவாரோ என்று அச்சம் அடைந்த நிலையில் ஒன்று கூடி ஆலோசித்தனர்.

பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள் ஆலோசனையின் படி ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளின் முன்பகுதியில் வேப்பிலையை கட்டி வைத்துள்ளனர். அவ்வாறு வேப்பிலை கட்டி வைத்திருக்கும் வீடுகளுக்கு அந்த பாட்டி வரமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது.

-தட்ஸ் தமிழ் இருந்து.......

3 கருத்துகள்:

இலவசக்கொத்தனார் சொன்னது…

//சாத்தூர் பகுதியில் கிளம்பிய இந்த புரளி தீடீரென கழுகுமலை பகுதிக்கும் பரவியது. இதைத் தொடர்ந்து பீதியடைந்த மக்கள் எங்கே தங்கள் வீட்டுக்கு அந்த பாட்டி வந்து விடுவாரோ என்று அச்சம் அடைந்த நிலையில் ஒன்று கூடி ஆலோசித்தனர்.//

ஒரு வாய் தண்ணீர் குடுத்தாத்தான் என்ன? இதுக்கு ஏன் இம்புட்டு பயம்?

பெயரில்லா சொன்னது…

////இலவசக்கொத்தனார் said...
//சாத்தூர் பகுதியில் கிளம்பிய இந்த புரளி தீடீரென கழுகுமலை பகுதிக்கும் பரவியது. இதைத் தொடர்ந்து பீதியடைந்த மக்கள் எங்கே தங்கள் வீட்டுக்கு அந்த பாட்டி வந்து விடுவாரோ என்று அச்சம் அடைந்த நிலையில் ஒன்று கூடி ஆலோசித்தனர்.//

ஒரு வாய் தண்ணீர் குடுத்தாத்தான் என்ன? இதுக்கு ஏன் இம்புட்டு பயம்?////

கொடுப்பவர்களுக்கு ரத்தவாந்தி ஏற்படும் என்றும் புரளி கிளம்பியது.

இப்படி சொன்னா எப்படி கொடுப்பாக.

கருப்பு சொன்னது…

அந்த ஏரியாவில் உள்ள எல்லா பாட்டிகளையும் அடிச்சே கொன்னாலும் கொன்னுப்புடுவானுங்க.

மூட நம்பிக்கை இன்னும் பத்து மில்லியன் பெரியார் வந்தாலும் அகலாது!

Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us