திங்கள், ஏப்ரல் 14, 2008

பலமுக ராஜபக்சா!

பலமுக ராஜபக்சா!

திங்கள், ஏப்ரல் 07, 2008

பறக்கும் மனிதன்!

கானொளியில் பறக்கும் மனிதன்.

வியாழன், மார்ச் 27, 2008

பிரபாகரன் படம்-சென்னையில் சிங்கள இயக்குநருக்கு சரமாரியாக அடி உதை!!!


சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து படம் எடுத்துள்ள சிங்கள இயக்குநரைக் கண்டித்து சென்னையில் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இயக்குநருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது.

இலங்கையைச் சேர்ந்த துஷாரா பெரீஸ் என்பவர் பிரபாகரன் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்துப் படம் எடுத்துள்ளார். இப்படத்தை சிங்களத்தில் எடுத்துள்ள அவர், படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் மற்றும் பிரிண்ட் போடுவதற்காக சென்னைக்கு வந்துள்ளார்.

கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் லேபில் பிரிண்ட் போடும் பணி நடந்து வருகிறது. இந்தத் தகவல் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிய வந்தது. இதையடுதது திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்டோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஜெமினி லேபுக்கு விரைந்தனர்.

லேபுக்கு முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரபாகரன் பட பிரிண்ட் போடும் பணியை நிறுத்த வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதையடுத்து இயக்குநர் பெரீஸ், தமிழர் அமைப்பினரை சமாதானப்படுத்துவதற்காக வெளியே வந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் பெரீஸ் மீது பாய்ந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் பெரீஸ் அதி்ர்ச்சி அடைந்தார். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். தமிழர் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வருகிற 27ம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்குப் படத்தைப் போட்டுக் காட்டுவது, அவர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் பிரிண்ட் போட்டுக் கொடுத்து இலங்கைக்கு அனுப்புவது என்ற முடிவுக்கு அனைவரும் வந்தனர்.

இதையடுத்து வருகிற 27ம் தேதி பிரபாகரன் படத்தை ராமதாஸும், திருமாவளவனும் பார்க்கவுள்ளனர். தமிழ் சப்-டைட்டிலுடன் படம் காட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பிரபாகரன், தமிழர்களின் போராட்டம் குறித்து தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கருத்து பரவியுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2008/03...-sinhalese.html


குமுதம்.காம் முச்சந்தி.:

சிங்கள சினிமா பட டைரக்டருக்கு தமிழ்நாட்டில் விழுந்த அடி-_உதை


''இலங்கையில இருக்குற சிங்களத்து சினிமா டைரக்டரு ஒருத்தர் 'பிரபாகரன்'னு படம் எடுத்திருக்காரு. முழுக்க முழுக்க தமிழ் போராளிகள் இயக்கத்த அதாவது புலிகளை சர்வதேச அளவில் கொச்சை படுத்துறவிதமான படமாம் அது. சிங்கள அரசே அந்த டைரக்டருக்கு பக்கபலமா இருந்து உதவிபன்னறாம். அப்படிப்பட்ட சினிமா படத்தை எடுத்துகிட்டு தமிழ்நாட்டுக்கு வந்தாரு அந்த டைரக்டர். கே.கே. நகர்ல இருக்குற ஜெமினி கலர் லேபில் வச்சு 'தமிழ் டப்பிங்' வேலைய செய்யுறதோட அறுபதுக்கும் மேற்பட்ட படக்காப்பி (ப்ரிண்ட்) போடுற திட்டத்திலேயும் இறங்கியிருந்தாரு.

ரகசியமா நடந்துகிட்டிருக்கிற இந்த படவேலை பத்தின தகவல் எப்படியோ, விடுதலை சிறுத்தைகள் அமைப்போட ஊடக பிரிவு பொருப்பாளரான வன்னி அரசுக்கு தெரிஞ்சிருக்கு. புலிகளுக்கு ஆயுதம் கடத்த உதவி பன்னாற்று கைதாகி ஜாமீன்ல வந்தாரே அதே 'வன்னி'தான் உடனே சுப. வீரபாண்டியன். சினிமா இயக்குனர் சீமான். உள்ளிட்ட பலருக்கும் தகவல் பரவிடுச்சு. அப்புறம் என்னது. திபுதிபுன்னு ஒரு ஆயிரம் தமிழ் பற்றாளர்களோட சுபவீ. சீமான், வன்னியரசு உட்பட பெரிய டீமே 'ஜெமினி' கலர் லேடிபுக்கு போயிருக்கு.

அந்த சிங்கள டைரக்டர்கிட்ட 'எங்க இனத்துக்கு எதிரா படம் எடுத்துட்டு, எங்க மண்ணுலேயே வந்து இந்த வேலைய செய்ய எப்படி துணிச்சல் வந்துச்சுன்னு ஓட ஓட விரட்டி தர்ம அடியா போட்டு தாக்கிட்டாங்க. சிங்கள டைரக்டரோட சட்டதுணி எல்லாம் கிழிஞ்சுடுச்சு. அவரு உயிர் பயத்துல 'அய்யோ, அய்யோ'ங்கிறத மட்டுமே தமிழ்ல கத்தினப் பாத்து, போனாப் போகுதுன்னு 'அடி'ய விட்டுட்டு அவரை தூக்கிட்டு வந்து ஒரு சேர்ல குந்தவச்சு முகத்துல தண்ணியடிச்சு கழுவிட்டு 'இந்த மாதிரி இனிமே செய்வியாடான்னு' திரும்பவும் ரெண்டு தட்டு தட்டியிருக்காங்க. அய்யோ சாமிங்கள சிலோன்லதான் 'புலிகள்' இருக்கான்னு நினைச்சேன் இங்கேயும் இருப்பீங்கன்னு தெரியாது நான் உங்க கேப்டன் பிரபாகரனுக்கு எதிராவோ, தமிழர்களுக்கு எதிராவோ படம் எடுக்கவே போராளி குழுவுல ஒரு சின்ன பையனா வர்றவருக்குதான் 'பிரபாகரன்'னு பேரு அதையே படத்துக்கு பேரா வச்சுட்டேன். மத்தபடி ஒரு தப்பும் செய்யலேன்னு கதறி அழுதிருக்காரு.

இதுக்குள்ள நிறைய போலீஸ் உள்ள வந்துருச்சு. அவரை மீட்டு பாதுகாப்பா ஒரு அறைக்கு கொண்டு போய் வச்சாங்க. நம்ப 'டீம்' விடவில்லை. பதில் சொல்லுடான்னு அங்கேயும் போய் வம்படிச்சாங்க. பிறவு போலீஸ் மத்தியில வச்சுகிட்டு சுப.வீ. அந்த சிங்கள டைரக்டர்கிட்ட பேச்சுவார்த்தை நடத்தினாரு.

இறுதியா தமிழ் தலைவர்களான பழ. நெடுமாறன், டாக்டர்.ராமதாஸ், திருமாவளவன், இயக்குனர் சீமான் உள்ளிட்ட பலரை கூட்டி வச்சு அந்த 'பிரபாகரன்' படத்தை 27_ந் தேதி காலையில பதினோரு மணிக்கு போட்டு காட்டணும். போராளிகளுக்கோ தமிழர்களுக்கு படம் எதிரா இருந்தா தமிழ் டப்பிங், பிரிண்ட் போடுற எந்த வேலையும் செய்யக் கூடாது (அப்படி செய்தா படச்சுருளையே கொலுத்திடுவோம்னு வேற சொன்னாங்க). அப்படியே அந்த பெட்டிய தூக்கிட்டு அடிபடாம சிங்களத்துக்கு ஓடிப்போயிடனும். அனுமதி கிடையாது. நல்லபடியா இருந்துச்சுன்னா நீ செய்யுற வேலைய தாராளமா செய்துக்கிடலாம்னு'' அந்த டைரக்டர் கைப்பட எழுதி வாங்கிட்டு, அந்த 'பிரபாகரன்' சிங்களபடத்தை ஒரு வெட்டுக்குள்ள போட்டு மூடி சில வச்சுட்டுத்தான் வெளிய வந்தாங்க.''

அடடே அப்புறம் என்னாச்சு _ அன்வர்பாய்.

''அதான் முதலிலேயே உதைச்சுட்டுங்களே. பிறவு ஏதும் நடக்கலை. சமாதானமா வெளியேறிட்டாங்க. ஆனா அதுக்கு முன்னாடி ஒரு விஷயம். அந்த சிங்கள டைரக்டர் சட்டை துணி எல்லாம் கிழிஞ்சி கிடந்தாரில்ல. அத பாத்துட்டு தமிழ் உணர்வாளர்கள் பாவப்பட்டு, உடனே பக்கத்துல இருந்த துணிக் கடைக்கு ஓடி டைரக்டரோட சைஸுக்கு ஒரு டி.சர்ட் வாங்கி வந்து போட்டுக்க வச்சிருக்காங்க. ஏன் தெரியுமா, போலீஸ், பத்திரிக்கைக்காரங்கன்னு வந்து பார்க்குறப்போ, சட்டைகிழிந்து பரிதாபமா இருந்தா நல்லாருக்காது இல்ல அதான்'' என்றார் சிரித்தபடியே.

சபை களைகட்டும்.
ஒட்டுக் கேட்டவர் :
பா. ஏகலைவன்

குமுதம்.காம்

வியாழன், மார்ச் 13, 2008

2009 ல் உலகம் அழியும் : செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!

போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். தான் செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.

எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக
கிறது.

பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?

பிறந்து ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !

இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.

திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.

தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோர் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.

தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை என்பதே பல சுவாரஸ்யமான கற்பனனகளுக்கு வழி வகுத்திருக்கிறது.

இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில் இறங்கி பாவத்தைக் குறித்து எல்லோரையும் எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என அறிவிக்கவும் செய்யவும் துவங்கினானாம்.

செவ்வாயில் உள்ள தரைகீழ் வீடுகளில் இன்னும் மக்கள் வசிப்பதாகவும், ஒரு மாபெரும் அழிவை செவ்வாய் கிரகம் சந்தித்ததாகவும், இதனால் மக்கள் தரையின் கீழ் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும். அந்தப் போரில் தானும் தனது நண்பனும் கால வாகனத்தில் பயணித்ததாகவும் அவன் விளக்குகிறான்.

செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.

லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதை அறிவியல் புனை கதை கேட்பது போல எல்லோரும் ரசிக்கிறார்களாம்.

லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.

உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர்.

இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.

மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.

செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக இவன் விளக்கும் போது தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர் விஞ்ஞானிகள்.

விஞ்ஞானிகளிடம் பேசும்போது விஞ்ஞான மொழியில் வேறு பேசி அதிர்ச்சியளிக்கிறானாம்.

ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு “ மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான். யாரேனும் உன்னை காயப்படுத்தினால் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் மன்னிப்புக் கேட்கவேண்டும் “

என்கிறான் இவன். இவன் சொல்வது உண்மையா பொய்யா என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் விஞ்ஞானிகள் குழப்பத்தின் குழந்தையாய் திரிகின்றனர்.

Source: http://english.pravda.ru/science/mysteries/104375-0/

ஞாயிறு, மார்ச் 09, 2008

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க முடியாது; நிபுணர் குழு அறிக்கையில் தகவல்!!!

சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராகவும் சேது சமுத்திர திட்ட பணியில் ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதை தொடர்ந்து ராமர் பாலம் அமைந்துள்ள பகுதிகளில் திட்டப் பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் ராமர் பாலம் பற்றி தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து மத்திய அரசு அந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு புதிய மனுவை தயாரித்தது.

சேது சமுத்திர கால்வாய் திட்ட பணி குறித்து ஆராய மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்திருந்தது. இந்த நிபுணர் குழு ஆய்வு நடத்தி தனது அறிக்கையை மத்திய அரசுக்கு தாக்கல் செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த அறிக்கையின் நகல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ராமர் பாலம் மனிதனால் உரு வாக்கப்பட்டது அல்ல, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் இந்தியாவின் பொருளா தாரம் வளர்ச்சி அடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறி விக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையும் இந்த நிபுணர் குழு அறிக்கையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ராமர் பாலம் பற்றி விஞ்ஞான பூர்வ ஆதாரங்கள் ஏதும் இல்லை. அதை பாது காக்கப்பட்ட புராதன சின்னங் கள் பட்டியலில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ராமச்சந்திரன் தலை மையிலான நிபுணர் குழு அறிவித்துள்ளது.

ராமர் பாலம் அமைந்துள்ள பகுதியில் பணிகளை மேற் கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை நடத்துகிறது.
நன்றி:-லங்கசிறீ

ஞாயிறு, பிப்ரவரி 24, 2008

திருக்கடையூர் ஆலயத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் மாலை மாற்றிக் கொண்டனர்!!!


தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா நாகை மாவட்டத்தில் உள்ள பிரபல ஆலயம் ஒன்றில் தனது தோழி சசிகலாவுடன் மாலை மாற்றிக்கொண்டுள்ளார்.

இன்றுதான் ஜெயலலிதா அறுபதாவது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். அதை முன்னிட்டே நேற்றைய வழிபாடுகள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயத்தில்தான் அறுபதை வயதை அடையும் தம்பதியர் அத்தகைய ஆராதனைகளை நடத்துவர் என்பதாலும், பெண்கள் இருவர் மாலை மாற்றிக்கொண்டதாலும், இது குறித்து தமிழக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

புதன், பிப்ரவரி 20, 2008

வைரமுத்துவிடம் 52 கேள்விகள்.

தமிழில் உங்களுக்கு மிகவும் பிடித்த வார்த்தை?

தமிழ்

இப்போது 50kg. தாஜ்மகால் யார்?

சானியா மிர்சா

காதல் என்பது?

காமனின் அம்பு அல்லது ஹார்மோன்களின் வம்பு.

பிடித்த நிறம்?

வெள்ளை



பச்சையப்பன் கல்லூரி?

மாணவனாய்ச் சேர்த்துக் கொண்டு, மாப்பிள்ளையாய் அனுப்பியது.

கண்ணதாசன் _ வாலி ஒப்பிடுக?

பாடலை ஷனரஞ்சகமாக்கியவர் கண்ணதாசன்;

ஷனரஞ்சகத்தைப் பாடலாக்கியவர் வாலி
உங்கள் இளமையின் ரகசியம் என்ன?

மனசு நரைக்காமல் பார்த்துக்கொள்வது

இளையராஜா _ பாரதிராஜா?

மேற்குத் தொடர்ச்சி மலையை இமயமலைக்கு அறிமுகம் செய்தவர்கள்.

வேட்டி பிடிக்காதா?

காலைப் பிடிக்கும்.

தம்பி...?

உடையான் படைக்கு அஞ்சான்

ரஜினி?

நடிகர்களில் ஓர் அறிவாளி

கமல்?

அறிவாளிகளில் ஒரு நடிகர்

பொன்மணி?

மனைவியாய் வந்த கடவுள்

பெரியார்?

செயற்கரிய செய்தார்.

அண்ணா?

கவிஞர்களை உருவாக்கிய உரைநடையாளர்

சின்ன வயதில் கடவுள் பக்தி உண்டா?

கோயிலுக்குப் போனதுண்டு. பக்தி மட்டும் வந்ததில்லை.

ஜெயலலிதாவிடம் பிடித்தது?

துணிச்சல்

முதல் பாடல்?

பொன்மாலைப் பொழுது

நீங்கள் எழுதாததில் உங்களுக்குப் பிடித்த பாடல்?

காதல் சிறகைக் காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா!

தமிழர்களின் முக்கியக் குறைபாடு என்ன?

நேரம் குறித்த பிரக்ஞை இன்மை.

உங்கள் மனம் கவர்ந்த பெண்மணி யார்? (மனைவியைத் தவிர)

பி. சுசீலா

காதலில் தோல்வியடைந்தால் என்ன செய்வது?

கல்யாணம் செய்து காதலைத் தோற்கடிப்பது

தன்னம்பிக்கை வரிகள் ப்ளீஸ்?

சுடப்பட்டிருக்க மாட்டாய் நீ தங்கமாக இல்லாவிட்டால் சூடுதாங்கு; நகையாவாய்

நாகேஸ்வரராவ் பூங்கா என்றதும் நினைவுக்கு வருவது?

‘‘இலை’’ என்ற கவிதைக்குக் கருப்பொருள் தந்தது.

ஷங்கர் _ மணிரத்னத்துக்கு மட்டும் கலக்குகிறீர்களே?

இல்லை; அவர்களே கலக்குகிறார்கள்

தென்றல், மலர், நிலவு, பனித்துளி, பெண், ஆண் _ உடனே கவிதை எழுதத் தூண்டுவது?

பனித்துளியும் _ பெண்ணும்

சென்னையில் பிடித்த இடம்?

சென்ட்ரல் ரயில் நிலையம்

கலைஞரிடம் வியப்பது _ ரசிப்பது..?

வியப்பது உழைப்பை

ரசிப்பது நகைச்சுவையை

வைகோ?

அரசியலில் இலக்கியம் கலப்பவர்

இலக்கியத்தில் அரசியல் கலக்காதவர்

விஜயகாந்த் அரசியலில் ஜெயிப்பாரா?

நண்பர் யார் என்று தீர்மானித்துக் கொள்வது _ திரைப்பட வெற்றி

எதிரி யார் என்று தீர்மானித்துக்கொள்வது _ அரசியல் வெற்றி.

அவர் தீர்மானித்து வெற்றி பெற வேண்டும்.

கபிலன் இன்னொரு வைரமுத்து ஆவாரா?

ஒரு வைரமுத்துவையே சிலபேர் ஜீரணிக்க முடியாதபோது, கபிலன் கபிலனாகவே இருக்கட்டும்.

ராஜா _ ரகுமான் ஒப்பிடுங்கள்?

அவர் ஆர்மோனிய அரசர்;

இவர் ‘‘கீ போர்டு கிங்’’

திரைப்பாட்டு _ கவிதை எழுதுவதில் எது பிடிக்கும்?

திரைப்பாட்டில் கவிதை எழுதப்பிடிக்கும்

உங்கள் மனதில் பதிந்த கவிதை வரி?

தீதும் நன்றும் பிறர்தர வாரா

திருவள்ளுவரைப் பற்றி?

தமிழர்களின் ஞான அடையாளம்

கம்பர்?

தமிழ்ப்படைப்பிலக்கியத்தின் உச்சம்

இளங்கோவடிகளைப் பற்றி?

தமிழைத் துறக்காத துறவி

கண்ணதாசன் உயிரோடு வந்தால் என்ன கேட்பீர்கள்..?

வனவாசத்தில் விட்டுப்போன பகுதிகளை,

கவிஞர்களில் கூட ஆண் ஆதிக்கம் தானே அதிகம் இருக்கிறது?

பெண்ணாதிக்கம் உள்ளவர்களும் கவிஞர்களாக இருக்கிறார்களே!

அடிக்கடி வாசிக்கும் தமிழ் இலக்கியம்?

முத்தொள்ளாயிரம்

புதிய இயக்குநர்களில் நம்பிக்கை தருகிறவர்கள்..?

பாலா _ சரண் _ செல்வராகவன் _ தரணி _ அமீர்.

தமிழ் நாட்டில் பிடித்த ஊர்

கொடைக்கானல்

பா. விஜய்க்கு விருது கிடைத்தது பற்றி....

தமிழின் பெருமை தொடர்கிறது

பெண் குழந்தை இல்லை என்ற ஆதங்கம் உண்டா?

ஷெமினியின் கடைசிப் படுக்கையருகே என்னை அழைத்துச் சென்ற டாக்டர் கமலா செல்வராஜ், கண்கலங்கி அழுதபோது ஆதங்கப்பட்டிருக்கிறேன்.

இதிகாசங்களில் உங்களுக்குப் பிடித்த பாத்திரம் எது?

பேயத்தேவர்.

ரசிக்கும் சிற்பம்..?

கண்கள் மூடிய புத்தர் சிலை

வித்யாசாகர் விருது பெற்றது பற்றி...

தன் தாய்மொழியான தெலுங்குப் படத்திற்கு தேசிய விருது பெற்றவர்,

தந்தை மொழியான தமிழிலும் விருது பெறுவார்.

இந்த வாரம் எழுதியதில் பிடித்த பாடல்...

ஆண் : மீசை முத்தம் வேண்டுமா;

மீசை இல்லாத முத்தமா?

மீசை முத்தம் என்பது பெண்ணே

நான் உனக்குத் தருவது

மீசையில்லாத முத்தம் என்றால்

நீ எனக்குத் தருவது (கலைஞரின் பாசக்கிளிகள்)

நீங்கள் உட்பட இன்றைய கவிஞர்கள் ஏதாவது ஓர் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறார்களே ஏன்?

எனக்குத் தொடர்பு அரசியல் கட்சிகளோடல்ல _ தலைவர்களோடுதான்.

சரோஜாதேவி, தேவிகா, பத்மினி, குஷ்பு, சிநேகா, த்ரிஷா _ ஒவ்வொரு வார்த்தை ப்ளீஸ்...?

சரோஷா தேவி : கட்டழகு

தேவிகா : கண்ணழகு

பத்மினி : பெண்ணழகு

குஷ்பு : முகத்தழகு

சிநேகா : சிரிப்பழகு

த்ரிஜா : முழுஅழகு

இன்றைய தலைமுறைக்குத் தகுந்தாற்போல் எப்படி உங்களை மாற்றிக் கொள்ள முடிகிறது?

திறந்தவெளியில் அதிகம் இருக்கிறேன்.

உங்களை உற்சாகப்படுத்தும் பொன்மொழி?

தண்ணீரைக்கூடச் சல்லடையில் அள்ளலாம்

அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால்.

குமுதம்-

வெள்ளி, பிப்ரவரி 15, 2008

தசாவதாரம்!!!



நடிகர் கமல்ஹாசன் 10 வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் தசாவதாரம். தீபாவளிக்கு வரும், பொங்கலுக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்துள்ள நிலையில் படத்தில் இறுதிகட்ட சூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. தற்போது கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இதனால் உலகம் முழுவதிலும் தசாவதாரத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி முதல் தசாவதாரம் திரையில் மின்னும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. கமல்ஹாசன் அதிக அளவில் ரிஸ்க் எடுத்து நடித்துள்ள இப்படத்தைப் பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட் வருமாறு :

# தசாவதாரம் படத்தை இயக்குபவர் இஈயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
# தசாவதாரம் சமூகத்தின் மீது அக்கறைகொண்ட பொறுப்பான ஒரு மனிதனின் கதை.
# படத்தின் கதையை கிரேசிமோகன், சுஜாதா இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். கமலின் பங்கும் இதில் இருக்கிறது.
# புதுமையான இசையை புகுத்தியிருப்பவர் ஹிமேஷ் ரேஷ்மாச்சார்யா.
# கமல் 10 வேடங்களில் நடிப்பதால் அதிக அளவு கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
# பெரும்பாலான கிராபிக்ஸ் காட்சிகள் வெளிநாட்டு நிறுவனங்களால் செய்யப்படுகிறது.
# வெளிநாட்டு ரசிகர்களை கவர தசாவதாரத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியிட உள்ளனர்.
# படத்தில் பாரதி, வாசு, ஆ.சுந்தர்ராஜன், சவுந்தர், ரமேஷ்கண்ணா, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற இயக்குனர்களும் நடித்துள்ளனர்.
# நடிகை அசின் தன் சொந்தக்குரலில் பேசி நடித்துள்ளார். இந்த படத்தில் அம்மணி அக்ரஹாரத்து பெண்ணாக வருகிறார்.
# தசாவதாரம் படத்தில் 2 கமல்கள் சண்டையிடும் காட்சி மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. இந்த காட்சிக்காக அமெரிக்காவில் இருந்து நவீன தொழில்நுட்ப கருவிகள் வரவழைக்கப்பட்டிருந்தன.
# சென்னை, மலேசியா, அமெரிக்கா, மற்றும் சிதம்பரத்தில் இப்படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன.
# படத்தில் 2 பாடல்கள் ரூ.3 கோடி செலவில் சென்னையில் படம்பிடிக்கப்பட்டது.
# கமலுக்கு ஜோடியாக அசின், மல்லிகா ஷெராவத், ஜெஈயப்பிரதா, கே.ஆர்.விஜயா, ரேகா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். நாகேஷ், நெப்போலியனும் முக்கிய கேரக்டர்களாக நடிக்கிறார்கள்.
# கமல்ஹாசனின் 10 வேட்களில் ஒன்று ஜார்ஜ் புஷ் வேடம்.
# ஜார்ர் புஷ் வேடம் பற்றி கமலிடம் கேட்டபோது, நான் நடித்த அந்த கேரக்டர் பற்றி இப்போதே சொல்வது நல்லதல்ல என்று கூறி மழுப்பி விட்டார்.
# புஷ் வேடம் தவிர ஆன்மீகவாதி, நீக்ரோ, வயதான தாத்தா, இளைஞர், பின்லேடன் உள்ளிட்ட வேடங்களிலும் கமல் கலக்கியிருக்கிறார்.
# ஆன்மீக கமலுடன் பத்தாயிரம் பக்தர்கள் பங்குபெறும் பிரம்மாண்டமான காட்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் படமாக்கப் பட்டுள்ளது
# வாலி மற்றும் வைரமுத்துவின் பாடல்கள் எழுதியுள்ளனர்.
# படம் திரைக்கு வரும்போது இந்தியாவில் மட்டுமல்லாது, அமெரிக்கா, கனடா ஆகிஈய நாடுகளிலும் விடுமுறை காலமாகும். எனவே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
# இந்த படம் நகைச்சுவை கலந்த கலகலப்பான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
# தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிப்பதாகும். (மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர், வாமணர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆகியவையே விஷ்ணுவின் 10 அவதாரங்கள்).

ஆதாரம் தினமலர்

செவ்வாய், பிப்ரவரி 05, 2008

கோவில் இடிப்பு: மன்னிப்பு கேட்கும் மலேசியா!

மலேசியாவின் கிளாங் நகரில் உள்ள இந்துக் கோவிலை இடித்தது தவறு. அதற்காக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்பதாக மலேசிய துணைப் பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக் கூறியுள்ளார்.

மலேசியாவில், ஆளுங்கூட்டணி மீது தமிழர்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். இந்த அதிருப்தியின் விளைவு, வருகிற பொதுத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என்ற பயத்தில் ஆளுங்கூட்டணி உள்ளது. இதனால் தமிழர்களை சமாதானப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இதில் ஒரு பகுதியாக கிளாங்கில் உள்ள பழம்பெரும் இந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு மலேசிய துணைப் பிரதமர் ரஸ்ஸாக் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கிளாங்கில் உள்ள கோவில் இடிக்கப்பட்டது, அதிலும் தீபாவளிக்கு முன்பு இடிக்கப்பட்டது தவறு என்பதை உணர்ந்துள்ளோம். அதற்காக மன்னிப்பு கோருகிறோம். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காது என்றார் அவர்.

மலேசியாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இடங்களில் சுமார் 24 ஆயிரம் இந்து கோயில்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தக் கோவில்கள் கட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
paraparappu.com

திங்கள், ஜனவரி 14, 2008

உங்களது கருத்துக்களை இங்கு மறக்காமல் பதியுங்கள்...

உலக தொலைக்காட்ச்சிகளில் ஒண்றான அல்ஜசீரா உங்களின் கருத்துக்களை கேட்க்கிறது முடிந்தால் அங்கு போய் பதியுங்கள்...!

http://www.youtube.com/watch?v=ilu5OSkubqE&eurl=http://birund.blogspot.com/2008/01/blog-post.html
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us