ஞாயிறு, ஜூன் 10, 2007

அமெரிக்காவில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரிக்கும் பிரசுரங்கள!




நியூயோர்க்,
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரித்ததாக கட்டுரை வெளியாகி இருந்தது அந்த நாட்டில் வசிக்கும் இந்துக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஸ்டப் என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரைக்காக வரையப்பட்ட சித்திரத்தில் இந்து மத கடவுளான பிள்ளையார் ஒரு மதுபான போத்தலை ஒவ்வொரு கையிலும் வைத்து இருப்பதுபோல வரையப்பட்டு இருந்தது. இன்னொரு படத்தில் அனுமானை ஆபாசமாக வரைந்து இருந்தனர். இந்தப் படங்களை அந்த பத்திரிகைக்காக ஜோன்சன் ஜோன்சஸ்டன் என்ற ஓவியர் என்பவர் வரைந்திருந்தார்.

இதை பார்த்ததும் அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் விசனமடைந்துள்ளனர். அவர்களில் நானு மகேந்துரு என்பவர் தன் எதிர்ப்பை அந்த பத்திரிகையின் ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

இந்து மத தெய்வங்களை இழிவுபடுத்துவது எங்கள் மனதை புண்படுத்துவதாகவும், இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதற்கு பத்திரிகை ஆசிரியர் பத்திரிகை முழுவதும் அடித்து வெளியாகிவிட்டது என்று கூறியதோடு முடித்துக் கொண்டார். அவர் வருத்தம் தெரிவிப்பதற்கு கூட முன்வரவில்லை. இது எங்கள் படைப்பு. இதற்காக நீங்கள் ஏன் வருந்துகிறீர்கள் என்பது போல அவரது பேச்சின் தோரணை இருந்ததாக நானு மகேந்துரு கூறியுள்ளார்.

இதற்கிடையில் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் டொன் போவாவுக்கு ஸ்நேகல் அவிச்சல் எழுதி உள்ள கடிதத்தில் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்துக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றார்கள்.


தினக்குரல் இல் இருந்து....

வியாழன், ஜூன் 07, 2007

விமானம் லேட்: தட்டிக் கேட்ட நாகை பயணிக்கு அடி உதை!

திருச்சி: கொழும்புக்கு சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை கொழும்பு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

நாகை மாவட்டம் இருக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (41). இவர் உள்பட 130 பயணிகள் கொழும்பிலிருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பயணித்தனர்.

விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கிளம்புவது தாமதமானது. அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் கிளம்பியது.

ஆனால் கிளம்பிய சில விநாடிகளிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பயணிகளை தரை இறக்கிய ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமான நிலையத்திலேயே காத்திருக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் 11 மணிக்கு பயணிகளை விமானத்தில் ஏறுமாறு கூறினர். இன்னும் அரை மணி நேரத்தில் விமானம் கிளம்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்த பின்னர் மீண்டும் அனைவரையும் கீழே இறங்கி விமான நிலையத்தில் அமருமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பயணிகள் என்ன பிரச்சினை என்று ஆவேசமாக கேட்டனர்.

அப்போது ஜாகிர் உசேன், சற்று கோபமாக, வேறு ஏதாவது ஏற்பாடு செய்யக் கூடாதா என்று கேட்டுள்ளார்.ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள், பயணிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்கியுள்ளனர்.

ஆனால் ஜாகிர் உசேனை மட்டும் இறங்க விடாமல் தடுத்த பாதுகாவலர்கள் அவரை விமானத்திலேயே அமர வைத்தனர். பின்னர் கைவிலங்கிட்டு புகைப்படம் எடுத்தனர். பிறகு சரமாரியாக அடித்து உதைக்க ஆரம்பித்தனர்.

வலி தாங்க முடியாமல் ஜாகிர் உசேன் போட்ட கூச்சலால், கீழே இறங்கிக் கொண்டிருந்த பயணிகள் வேகமாக விமானத்திற்குள் வந்தனர். அனைவரும் பாதுகாவலர்களைத் தடுத்து நிறுத்தி ஜாகிர் உசேனைக் காப்பாற்றி கீழே அழைத்துச் சென்றனர்.

இப்படியாக அலைக்கழிக்கப்பட்ட பயணிகள் ஒரு வழியாக திருச்சி வந்து சேர்ந்தனர்.
http://thatstamil.oneindia.in/news/2007/06/07/passenger.html

இராமர் பாலமும் இந்துத்துவா சதித்திட்டமும்.

கி.பி. 1528ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த இராமர் கோயிலை முகலாய மன்னனான பாபரின் ஆணைப்படி இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக அப்பட்டமான பொய்யை திரும்பத் திரும்பக் கூறி மதவெறியை வளர்த்த கும்பல் இறுதியாக 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதியன்று பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது.

அயோத்தியில் இராமர் கோயில் இருந்ததற்கும் அது இடிக்கப்பட்டதற்கும் அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதற்கும் வரலாற்று ரீதியான எத்தகைய ஆதாரமும் இல்லை. புகழ்பெற்ற இந்திய வரலாற்று ஆசிரியர்கள் பலரும் இத்தகைய கருத்தை ஆதாரப்பூர்வமாக உறுதிசெய்துள்ளனர். ஆனாலும் இல்லாத இராமர் கோயிலை இருந்ததாகக் கூறி இன்றுவரையிலும் மதவெறியை வளர்த்து வரும் இந்துத்துவா கும்பல் வடஇந்திய மாநிலங்களில் மதரீதியான கலவரங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இப்போது இந்துத்துவா கும்பலின் கவனம் தெற்கே திரும்பியுள்ளது. தென்னிந்தியாவிலும் இராமர் பெயரால் ஏதேனும் கலவரத்திற்கு வித்திடவேண்டும் என்பதற்காக திடீரென இராமர் பாலம் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.

சேதுக் கால்வாய்த் திட்டம் என்பது நூறாண்டு காலத்திற்கு மேலாக தமிழர்கள் வலியுறுத்திவரும் திட்டமாகும். பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றபோது பிரதமர் வாஜ்பாய் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை அளித்தார். ஆனாலும் திட்டப்பணிகள் தொடங்கப்படவில்லை. பா.ஜ.க. ஆட்சி மாறி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்டவுடன் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது. இத்திட்டத்தின் தொடக்கவிழா மதுரையில் நடைபெற்றபோது பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி போன்றவர்கள் பங்கேற்றனர். அனைத்துக்கட்சித் தலைவர்களும் இவ்விழாவில் பேசினார்கள். பா.ஜ.க.வின் பிரதிநிதியும் இவ்விழாவில் பங்கேற்றார். அப்போது இராமர் பாலப் பிரச்சினையை அவரோ வேறு யாருமோ கிளப்பவில்லை. திட்டம் தொடங்கி 2 ஆண்டு காலம் கடந்த பிறகு திடீரென இராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்ற முழக்கத்தை இந்துத்துவாக் கும்பல் எழுப்பியுள்ளது.

இல்லாத இராமர் கோயில் பிரச்சினையை உருவாக்கி வட இந்திய மாநிலங்களில் மதக் கலவரங்களுக்குக் காரணமாகி அதையே அடிப்படையாகக் கொண்டு தேர்தல் வேளையில் வாக்குகளை அறுவடை செய்தவர்கள் இப்போது இல்லாத இராமர் பால பிரச்சினையை எழுப்பி தென்மாநிலங்களில் மதரீதியாக வாக்குகளை அறுவடை செய்ய முயலுகிறார்கள்.

இலங்கையில் இராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையை மீட்பதற்கு வானரப்படையுடன் கடலைக் கடக்கத் திட்டமிட்ட இராமன் இராமர் பாலத்தை கட்டியதாக இராமாயணம் கூறுகிறது. திருமா
லின் அவதாரமான இராமன் நினைத்திருந்தால் பாலம் கட்டாமலேயே தன் படையுடன் கடலைக் கடந்து சென்றிருக்க முடியும். இராமதூதனான அனுமான் மகேந்திர மலையில் ஏறி ஒரே தாவாகத் தாவிக் கடலைக் கடந்து இலங்கை சென்றதாக அதே இராமாயணம் கூறுகிறது.

இராமதூதனுக்கு இருந்த வலிமை இராமபிரானுக்கு இல்லாமல் போனதால் பாலம் கட்ட நேர்ந்ததோ என்னவோ?
அதுபோகட்டும். இராமபிரானால் கட்டப்பட்ட பாலம் ஆழ்கடலுக்குள் அமிழ்ந்துபோனது ஏன்?
இந்தியாவும் இலங்கையும் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரே நிலப்பரப்பாக இருந்தது எனவும் பின்னால் காலப்போக்கில் கடற்கோளின் விளைவாக கடல்நீர் உள்புகுந்து இருநாடுகளாகப் பிரிந்தன எனவும் நிலவியல் அறிஞர்கள் ஆதாரப்பூர்வமாக நிறுவியுள்ளனர். அவ்வாறு கடலுக்குள் மூழ்கிய மணல் திட்டுப் பகுதியைத்தான் இராமர் பாலம் என இந்துத்துவவாதிகள் கதை திரிக்கின்றனர். தங்கள் கதைக்கு உலகப் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான நாசா நிறுவனத்தை துணைக்கு அழைத்துள்ளனர். இராமர் பாலம் என்பது உண்மையில் இருப்பதாக நாசா நிறுவனம் கூறி அதற்கு ஆதாரமாக விண்வெளியில் இருந்து எடுத்த படத்தையும் வெளியிட்டிருப்பதாக பொய்யான செய்திகளை திட்டமிட்டுப் பரப்பிவருகின்றனர்.

நாசா வலைத்தளத்தில் பொய்யான கருத்துக்களை இவர்களே நுழைத்து அதை ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆனால் நாசா நிறுவனம் இவர்களின் கூற்றை அடியோடு மறுத்துவிட்டது.

ஊடகங்களின் மூலமாக இவர்கள் பரப்பி வரும் பொய்களுக்கு அளவே கிடையாது. எடுத்துக்காட்டாக சமஸ்கிருதம்தான் கணினித் துறைக்கு ஏற்றமொழி என நாசாவின் ஆராய்ச்சியாளரான ரிக்பிரிக்ஸ் என்பவர் கூறியிருப்பதாக ஒரு செய்தியை வலைத்தளத்தின் மூலம் இந்துத்துவா வாதிகள் பரப்பினார்கள். அத்தகைய பெயருடன் யாரும் நாசா ஆராய்ச்சி நிறுவனத்தில் இல்லை என்பது விரைவில் அம்பலமாயிற்று.

1999ஆம் ஆண்டு என்.எஸ். இராசாராம், டாக்டர் நட்வர்ஜா ஆகியோர் பின்வரும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்கள். "சிந்து சமவெளி முத்திரைகளை தாங்கள் கண்டறிந்துவிட்டதாக இவர்கள் தெரிவித்தார்கள். சிந்து சமவெளி நாகரிகத்துடன் ரிக்வேதத்தை இணைத்துக்காட்டுவது இவர்களின் நோக்கமாகும். பிற்காலத்தில் இந்தியாவிற்கு படையெடுத்து வந்தவர்கள் ஆரியர் என்பதை மறைத்து சிந்துசமவெளி நாகரிகத்துடன் ஆரியர்களை இணைத்துக்காட்டுவதற்காக இவர்கள் ஆதாரம் இல்லாத கற்பனைகளை வெளியிட்டனர்.

சிந்துசமவெளி நாகரிக காலத்தில் குதிரைகள் கிடையாது. ஆரியர் வருகைக்குப் பிறகே குதிரைகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. வரலாற்றுப்பூர்வமான இந்த உண்மையை மறைக்க சிந்து சமவெளி முத்திரைகளில் குதிரைகளைக் குறிக்கும் முத்திரை ஒன்று இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். அரப்பா மக்கள் பேசிய மொழி சமஸ்கிருதமே என்றும் இவர்கள் கூறினர். உண்மையில் சமஸ்கிருத மொழி தோன்றுவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது அரப்பா நாகரிகம் ஆகும்.

இவர்கள் எழுதிய நூலை முழுவதுமாகப் படித்த இந்தியவியலாளர்கள் மிகப்பெரிய மோசடியாக இதை வர்ணித்தனர். ஹார்வர்டு பல்கலைக் கழக சமஸ்கிருதப் பேராசிரியரான மைக்கேல் விட்சல் மற்றும் சில ஆய்வாளர்களும் இவர்களின் மோசடியை அம்பலப்படுத்தினார்கள்.

ஆனால் இந்துத்துவா வாதிகள் இராசாராம், ஜா ஆகியோரின் ஆய்வுளை ஊடகங்களின் வாயிலாக உலகெங்கும் பரப்ப இடைவிடாது முயற்சி செய்தனர். அதைப்போலவே இப்போதும் இராமர் பால பிரச்சினையில் பொய்யான செய்திகளைப் பரப்பி தங்கள் கருத்தை நிலைநாட்ட முயன்று வருகின்றனர்.
சேதுக் கால்வாய் திட்டம் என்ற தமிழன் கால்வாய் திட்டம் நீண்ட நெடுங்காலமாகத் தென் தமிழக மக்கள் கனவு கண்ட திட்டம் ஆகும். 100 ஆண்டுகாலத்திற்குப் பிறகு அது செயல்வடிவம் பெறத் தொடங்கியிருக்கிறது. இராமர் பாலத்தை இடிக்காதீர் என்ற பொய்யான கூக்குரலைக் கிளப்புவதன் மூலம் தமிழன் கால்வாய் திட்டத்திற்கு உலை வைக்க இந்துத்துவா வாதிகள் முயற்சி செய்கிறார்கள். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் பொருளாதார ரீதியில் பெரும் வளர்ச்சிபெறும். தூத்துக்குடி, குளச்சல் போன்ற துறைமுகங்கள் சர்வதேசத் துறைமுகங்களாக மாறும். இன்னும் பலவகையிலும் இந்த மாவட்டங்கள் வளம்பெறும். இதையெல்லாம் தடுக்கவே இந்துத்துவா வாதிகள் இல்லாத இராமர் பாலப் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.

-தென்செய்தி

புதன், ஜூன் 06, 2007

ஆதாம் ஒரு முஸ்லீமா?

இலங்கை முஸ்லிம்களுக்கு சொந்தமான நாடு உலமாக்களின் முஸ்லிம் கட்சி உரிமை கோருகிறது!

இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான மண் என்று சிங்களப் பேரினவாதிகள் கூறி வருவது அப்பட்டமான பொய். அது மிகவும் கண்டிக்கத்தக்க கூற்றாகும். முதல் மனிதன் தோன்றிய வரலாற்றை நோக்குகின்றபோது இந்த மண் முஸ்லிம்களுக்கே சொந்தமானதாகுமென உலமாக்களின் முஸ்லிம் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய `முஸ்லிம் பூர்வீகம்' நூலின் நான்காவது அறிமுக விழா அண்மையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்துரை வழங்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

`எழுவான்' வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் அதன் தவிசாளர் ஆசுகவி அன்புடீன் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அங்கு முபாறக் அப்துல் மஜீத் மேலும் பேசுகையில் கூறியதாவது;

"விண்ணுலகில் இறைவனால் படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்கள் முதலில் இலங்கைக்கே அனுப்பப்பட்டார்கள். அந்த முதல் மனிதன் இலங்கையில்தான் தோன்றினார் என்பதை வரலாறும் ஏற்றுக் கொள்கிறது.

ஆனால், அந்த முதல் மனிதன் முஸ்லிம் என்பதால் எமது பூர்வீகம் இலங்கையில்தான் ஆரம்பிக்கிறது. இந்த தேசத்தில் தோன்றிய முதல் மனிதன் ஆதம் - முஸ்லிம் என்பதால் இந்த மண் முஸ்லிம் சமூகத்திற்கே சொந்தமானதாகும். இதனை எவரும் மறுக்க முடியாது.

ஆனால் நாம் அப்படி உரிமை கொண்டாடவில்லை. சகல இனத்தவரையும் சகோதரர்களாகவே பார்க்கிறோம். எவரையும் குரோத மனப்பாங்குடன் நோக்கவில்லை. ஆனால் சிங்களப் பேரினவாதிகளின் விஷமப் பிரசாரத்தை முறியடிப்பது அவசியமாகும்.

அதற்கு எமது வரலாறு பற்றிய தெளிவு எம்மிடம் இருக்க வேண்டும். நாம் இந்த நாட்டின் வந்தேறு குடிகளா அல்லது எமது பாரம்பரிய பூர்வீகத் தாயகமா? இங்கு எமக்கிருக்கும் உரிமைகள் என்ன என்பது தொடர்பில் தர்க்கரீதியாக வாதிடும் ஆற்றல் எம்மிடையே உருவாக வேண்டும்.

முஸ்லிம் சமூகம் வாசிப்புத்துறையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால்தான் இவை பற்றிய போதிய அறிவு எமது மக்கள் மத்தியில் இல்லாமல் இருக்கிறது. இதனால் எம்மை மாற்று சமூகத்தினர் அடிமைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

அறிவுபூர்வமான எழுத்துகளை வாசிப்பதற்கு சமூகம் தயாரில்லை வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தமது வாசிப்பை மட்டுப்படுத்திக் கொள்கின்றனர். இது மிகவும் கவலை தரும் விடயமாகும், இவ்வாறான சமூகத்தினர் மத்தியில் தனி ஊடகம் ஒன்றை செயற்படுத்துவதற்கான ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே.

முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பில் ஒரு தெளிவான பார்வையை சகோதரர் நூநுல்ஹக் செலுத்தியிருக்கிறார். நுனிப்புல் மேய்வது போல அல்லாமல் ஆய்வு ரீதியாக எழுதும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது. அவருடைய எழுத்துகள் ஆழமான கருத்துகளைக் கொண்டவை என்பது மாத்திரமல்ல ஆதாரபூர்வமானவையாகவும் அமைந்துள்ளன.

முஸ்லிம் சமூகத்தின் வரலாறு பற்றிச் சொல்லக் கூடிய நூல்கள் மிகவும் குறைவாக உள்ள நிலையில் நூறுல்ஹக் `முஸ்லிம் பூர்வீகம்' நூலை வெளியிட்டிருப்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டியதொரு விடயமாகும். முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கி வருகின்ற பல்வேறு பிரச்சினைகளை அவர் மிகத் தெளிவாக தைரியத்துடன் விவரித்துள்ளார்" என்றார்.

இவ்வைபவத்தில் தெ.கி.பல்கலைக்கழக பீடாதிபதி கலாநிதி கே.எம்.எச்.காவிதீன், மாவட்டநீதிபதி கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர், காதி நீதிவான் சம்சுதீன் மௌலானா, முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர் பீர்முஹம்மட் தம்பி, பிரதேச செயலாளர் யூ.எவ்.நியாஸ், உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, அமைச்சர் அதாவுல்லாவின் பொதுஜனத் தொடர்பு அதிகாரி ஏ.பி.தாவூத், விரிவுரையாளர் எஸ்.எம்.அய்யூப், கலையன்பன் எஸ்.எம்.ஏ.அஸீஸ், தேசிய முஸ்லிம் கவுன்ஸில் உபதலைவர் எம்.ஐ.எம்.இஸ்திகார் உட்பட மற்றும் பல பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
தினக்குரல் இல் இருந்து.....

செவ்வாய், ஜூன் 05, 2007

கழிப்பறையில் பாரதி படம்:


திம்பூர் (கர்நாடகா): கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையில் மகாகவி பாரதியாரின் படத்தைப் போட்டு அவரை அவமரியாதை செய்துள்ளனர்.

சுதந்திர வேட்கையைத் தூண்டும் எண்ணற்றப் பாடல்களைப் புனைந்தவர் மகாகவி பாரதி. தமிழகத்தில் அவரது பாடல்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

வெள்ளையர் கண்களில் விரலை விட்டு ஆட்டியவை மகாகவியின் தேச பக்திப் பாடல்கள். தேச ஒற்றுமைக்காக அவர் எழுதிய பாடல்கள் இன்றளவும் நாட்டுக்கு உபயோகரமாக உள்ளன.

அவரை கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல்காரர்கள் அவமானப்படுத்தியுள்ளனர். திம்பூர் அருகே உள்ள கிப்னஹள்ளி கிராஸ் என்ற இடத்தில் மயூரா என்ற ஹோட்டல் உள்ளது.

இந்த ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையின் முகப்பில் மகாகவி பாரதியாரின் கம்பீரப் படத்தைப் போட்டு அவரைக் கேவலப்படுத்தியுள்ளனர். மகாகவியை அறிந்தவர்கள் இதைப் பார்த்து மனம் கொதித்துப் போயுள்ளனர்.

இதுகுறித்து ஹோட்டலின் கழிப்பறையை காண்டிராக்டுக்கு எடுத்திருப்பவர்களிடம் கேட்டால், இவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆண்கள் கழிப்பறை என்பதை குறிப்பிடும் வகையில் இந்தப் படத்தை இங்கே வைத்துள்ளோம் என்கின்றனர் படு கூலாக.

பாரதியாருக்கு நேர்ந்துள்ள இந்த அவமரியாதையை அந்த ஹோட்டலுக்கு வந்த அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தட்டிக் கேட்காதது ஏன், தடுத்து நிறுத்தாது ஏன் என்று புரியவில்லை.

தமிழர்களுக்கு மட்டும் இது அவமானமல்ல, ஒரு மாபெரும் கவியை கேவப்படுத்தியதன் மூலம் இந்தத் தேசத்தையும் அவமானப்படுத்தியுள்ளனர் அந்த ஹோட்டல்காரர்கள்.

உரியவர்கள் கவனித்து மகாகவிக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
http://thatstamil.oneindia.in/news/2007/06...harathiyar.html

சேது சமுத்திர திட்டத்தால் புலிகளுக்குதான் இலாபமாம், கைதி காஞ்சி காம கோடி!!!

``சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்குக் ரூ.2,427 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. திட்டம் முழுமையடைய குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் ஆகும். திட்டம் நிறைவேறும்போது, இன்றைய பண வீக்க நிலவரப்படியும் மற்றும் குறைந்தபட்ச வட்டிக் கணக்கின்படியும், இதன் மதிப்பை மிகவும் குறைத்துச் சொன்னால்கூட, ரூ.4000 கோடியைத் தாண்டி விடும்.

அதை ஈடு செய்ய மத்திய அரசு செயலில் இறங்கி, கட்டணம் வசூலித்து, கப்பல்களை கால்வாய் மூலம் செல்ல அனுமதித்தால், மேற்படி ரூ.4000 கோடியை வசூலிக்க சுமார் 30,300 முறை கப்பல்கள் கால்வாயைக் கடக்கவேண்டும். கப்பல் ஒன்றுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.13 லட்சம் என்றால் கூட இந்த இலக்கை எட்ட இன்னும் 20 வருடங்களுக்கு மேலாகும்.
இன்று இலங்கையைச் சுற்றி வருவதால் பெரிய கப்பல்களுக்கு ஒருமுறை ஆகும் செலவு (மாலுமிகள் சம்பளம், எரிபொருள், கப்பல் தேய்மானம் போன்றவை உள்பட) ரூ.3,50,000 தான்.

இன்று இந்தியத் துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிற்கும் மொத்தக் கப்பல்களின் எண்ணிக்கை, வருடம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட (அதிகபட்சம்) 20,000. இவற்றில் 16,000 கப்பல்கள் நமது நாட்டின் தென்பகுதியைக் கடப்பதில்லை.
சேது சமுத்திரம் கால்வாய் அகலப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட்ட பிறகும் 25,000 டன் எடைக்கு (னுறுகூ) மேலுள்ள கப்பல்களால் கால் வாயை கடக்க முடியாது. காரணம், அவற்றுக்கு தேவைப்படும் அளவுக்கு கால்வாயை ஆழப்படுத்த முடியாது. கால்வாய் முடிக்கப்படும் தருவாயில் உலகிலுள்ள பெரும்பாலான கப்பல்களின் எடை 30,000 டன்னைத் தாண்டிவிடும். இதற்கு எரிபொருளின் விலை உயர்வும் முக்கிய காரணமாகும்.

25,000 டன் எடையுள்ள கப்பல்கள் மட்டுமே பத்து வருடம் கழித்தும் புழக்கத்தில் இருந்தாலும், அவை சேது சமுத்திரம் கால்வாய் வழியாகவே செல்லவேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை. அதற்குப் பதிலாக இலங்கையைச் சுற்றிச் சென்றால் லாபம்தான். கொழும்பு துறைமுகத்தில் சலுகைகள் அதிகம். இந்தக் கால்வாய்த் திட்டத்தினால், மணலை அள்ளி எடுக்கும் காண்ட்ராக்டர்களைத் தவிர லாபம் அடையக் கூடிய ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள்தான். ஏற்கெனவே அந்த இயக்கம் ரகசியமாக இரண்டு விமானங்களை வாங்கியுள்ளது. இனி சிறிய கப்பல்களையும் வாங்கக் கூடிய சாத்தியக் கூறுகளும் உள்ளன என்று இந்தியக் கடற்படை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த ஒரு இயக்கத்தைத் தவிர வேறு யாருக்கும் எந்தப் பயனும் இத்திட்டத்தினால் இல்லை.’’

காஞ்சி காமகோடி மடத்தின் `காமகோடி இதழாகும் (ஜூன் 2007).

சனி, ஜூன் 02, 2007

இந்திய சினிமா வர்த்தகத்தில் முக்கியமான திருப்பம்.

டைட்டானிக்கை முந்திய ஸ்பைடர்மேன்-3. இந்திய சினிமா வர்த்தகத்தில் முக்கியமான திருப்பத்தை உருவாக்கியுள்ளது


ஹாலிவுட்டின் ஸ்பைடர்மேன்-3 திரைப்படம். இந்த திருப்பம் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியையும், இந்திய சினிமா தயாரிப்பாளர்களுக்கு அச்சத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பைடர்மேன்-3 படத்துக்கு எந்த வெளிநாட்டு படத்துக்கும் இல்லாத அளவுக்கு 588 பிரிண்டுகள் இந்தியாவில் போடப்பட்டன. இதில் ஆங்கிலம் 162, இந்தி 261, தெலுங்கு மற்றும் போஜ்புரி மொழிகளில் தலா 6 பிரிண்டுகள். பிராந்திய மொழியில் இந்திக்கு அடுத்தப்படியாக தமிழில் அதிக பிரிண்டுகள் (81) போடப்பட்டன. இது சராசரி தமிழ் படத்துக்கு போடப்படும் பிரிண்டுகளைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்பைடர்மேன்-3 இதுவரை இந்தியாவில் 57 கோடிகள் வசூலித்துள்ளது. இது டைட்டானிக் திரைப்படத்தின் இந்திய வசூலை (55.5 கோடிகள்) விட அதிகம். இன்னும் இப்படம் சில கோடிகளை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மெகா வசூல் காரணமாக ஹாலிவுட் சினிமாவின் டாப்-10 மார்க்கெட் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. ஹாலிவுட் சினிமாவின் ஆக்டபஸ் கரங்கள் இந்திய சினிமா வர்த்தகத்தை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டதற்கான அறிகுறியே ஸ்பைடர்மேன்-3யின் இந்த வெற்றி.

கோக், பெப்ஸியின் வருகை உள்ளூர் காளிமார்க், கடாமார்க்களை விழுங்கியதுபோல் சினிமாவிலும் நிகழுமா? அவசரமாக அலசப்பட வேண்டிய பிரச்சனை இது!
cinesouth.com

வியாழன், மே 31, 2007

சிவாஜி பிட்டு!!!

சிவாஜி பிட்டு காட்சியை பார்க்க, இங்கே சொட்டவும்.
வானொலியை நிறுத்திவிட்டு பார்பது மேலும் சிறப்பு.

திங்கள், மே 28, 2007

பெண்கள் தண்ணி அடிக்கலாமா?


http://sayanthan.blogspot.com/2007/05/blog-post_27.html

தண்ணி அடிப்பதை பற்றி இங்கே ஒரு விவாதம நடக்கிறது, இது நகைச்சுவையாக இருந்தாலும், யோசிக்கவேண்டியவிடயம். என்னை பொறுத்தவரையும் விரும்பியவர்கள் அடிக்கலாம், விரும்பாதவர்கள் அடிக்காமல் விடலாம், ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. என்னவெனில் ஆண்கள் அடித்தால் இந்த சமுதாயம் பெரிதாக கண்டு கொள்வதில்லை, ஆனால் அதைபெண் செய்தால் பெரிதாக தூக்கிபிடிக்கிறது, அதன் பின்னர் அந்த பெண்ணுக்கு முன்னர்கிடைத்த மரியாதை கிடைக்குமா? அதற்கு முன்னர், அந்த கணவர் முதலில் அதற்கு அனுமதி கொடுப்பாரா?

பொதுவாக இந்த தண்ணி எனப்படும் அல்கஹோல் உடலுக்கு கேடானது. மனித உடலுக்கு தீங்கானது, அதை ஆண் செய்யும் போது ஒரு கண்ணோட்டத்திலும் பெண்செய்யும் போது வேறு கண்ணோட்டத்திலும் பார்ப்பது ஏன்? ஆணைவிட பெண் அச்செயலை செய்யும் போது, அது குடும்பத்துக்கும் ,சமுதாயத்துக்கும் அதிக கேட்டை தரக்கூடியாதா? அதனால்தான் இந்த ஆண் ஆதிக்கவாதிகள் பெண்களுக்கு கார் லைசன்ஸை கட்டாயமாக பழக்கிறார்களா?

"அளவாக அடித்தால் அதுவே மருந்து"

"அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு"

சனி, மே 26, 2007

திமுக அரசின் செல்வாக்கு சரிவு: கருணாநிதியை விட ஜெ. பெட்டர் - கருத்துக் கணிப்பு!!!

சென்னை: திமுக அரசின் செல்வாக்கு கடும் சரிவைக் கண்டுள்ளாக லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியை விட ஜெயலலிதா பல வகையிலும் சிறந்தவராக விளங்குவதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை லயோலா கல்லூரி அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிடும். பொதுவாக திமுகவுக்கு சாதமாகவே இக்கல்லூரியின் கருத்துக் கணிப்பு அமையும். இந்த நிலையில் கடந்த ஒரு வருட திமுக ஆட்சி குறித்து நடத்திய கருத்துக் கணிப்பில் திமுகவுக்கு பாதகமான முடிவுகளை இக்கல்லூரி வெளியிட்டுள்ளது.

இக்கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான குழு இன்று வெளியிட்டது. இதில் திமுக அரசுக்கு மக்கள் செல்வாக்கு மிகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 3ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பின் முடிவுகள் விவரம் வருமாறு,

கடந்த ஒரு ஆண்டு திமுக அரசு மீது மக்களுக்கு கடும் அதிருப்தி எழுந்துள்ளது. 39.9 சதவீதம் பேர் ஆட்சியின் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். நடு நிலை வாக்காளர்கள் மத்தியில் திமுக மீது கடும் அதிருப்தி எழுந்துள்ளது. 25.7 சதவீத நடுநிலை வாக்காளர்கள் திமுக மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதேசமயம், திமுகவின் சொந்த செல்வாக்கு சரியவில்லை. அது 31.8 சதவீதமாக உள்ளது.

இப்போது யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு திமுகவுக்கு என 31.8 சதவீதம் பேரும், அதிமுகவுக்கு என்று 27.6 சதவீதம் பேரும், தேமுதிகவுக்கு என்று 15.2 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

இக்கல்லூரி கடந்த முறை நடத்திய கருத்துக் கணிப்பை விட இந்த முறை திமுக மற்றும் தேமுதிகவின் செல்வாக்கு சரிந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த முறை திமுகவுக்கு 34 சதவீதம் பேரும், தேமுதிகவுக்கு 17 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

திமுக ஆட்சி சிறப்பாக இருப்பதாக 58.9 சதவீதம் பேரும், குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை என்று 26.4 சதவீதம் பேரும், மோசம் என 14.7 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

எதிர்க்கட்சியாக அதிமுகவின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக 46.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மோசம் என்று 17.7 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சி மற்றும் இப்போதைய திமுக ஆட்சியில் எது பெஸ்ட் என்ற கேள்விக்கு ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிக்கே மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

தாமதிக்காமல் முடிவு எடுப்பதில் சிறந்தவர் ஜெயலலிதா என 53.3 சதவீதம் பேரும், கருணாநிதி என 45.6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவர், கட்சிக்குள் குடும்ப ஆதிக்கத்தை அனுமதிக்காதவர், உட்கட்சி ஜனநாயகத்தை காப்பவர் உள்ளிட்டவற்றில் சிறந்தவர் ஜெயலலிதா என்றும் கருத்துக் கணிப்பில் தெரிந்துள்ளது. இவற்றில் ஜெயலலிதாவை விட கருணாநிதிக்கு குறைந்த ஆதரவே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா கொண்டு கேபிள் டிவியை அரசுடமையாக்கும் திட்டத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு காணப்படுகிறது. 62.6 சதவீதம் பேர் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தேவையில்லை என 14.3 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சரத்குமார் கட்சி ஆரம்பிப்பார் என 35.6 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நாடார் சமுதாய அமைப்புகளுடன் சேர்ந்து ஆரம்பிப்பார் என 19.2 சதவீதம் பேரும், ரசிகர்களின் துணையுடன் ஆரம்பிப்பார் என 16.4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர் கட்சி தொடங்குவது சந்தேகம் என 30 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
Uploaded with ImageShack.us

காங்கிரஸை தோற்கடிப்போம்

Uploaded with ImageShack.us