ஞாயிறு, பிப்ரவரி 11, 2007
சனி, பிப்ரவரி 10, 2007
கன்னிமரியாள் இரத்தக் கண்ணீர் சிந்துவதாக, யாழ் குடாநாட்டில் பரபரப்பு!!!

கன்னி மரியாளின் திருச் சொரூபத்தின் இரு கண்களில் இருந்து இரத்தம் வடிவதாக வெளியான தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை யாழ் நகரில் பரபரப்பு காணப்பட்டது. .
யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இந்தச் சொரூபத்தின் கண்களில் இருந்து சிவப்பு நிறமான திரவம் வருவதை வீட்டில் இருந்தவர்கள் கண்டுள்ளனர்.
இது பின்னர் அயலவர்களுக்கு தெரிய வந்து யாழ் நகரம் எங்கும் பரவத் தொடங்கியது. இதனால் அதனைக் காண்பதற்காக மக்கள் அந்த வீட்டை நோக்கித் திரண்டனர்.
இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள புனித யுவானியார் ஆலயத்துக்கு அந்த சொரூபத்தை கொண்டு சென்று வைத்தனர்.
இதன் பின்னர் அந்த ஆலயத்துக்கும் மக்கள் திரண்டு வந்த வண்ணமிருந்தனர்.
மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆலய நிர்வாகத்தினர் திண்டாடினார்கள். பின்னர் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றன.
இந்த மாதா சொரூபத்தில் இரு கண்களிலிருந்தும் இரத்தம் போன்று சிவப்பு நிறத்திலான திரவம் ஒன்று வடிந்து உறைந்த நிலையில் இருப்பதைக் காணக் கூடியதாக இருந்தது.
நன்றி>தமிழ்வின்.
வியாழன், பிப்ரவரி 08, 2007
இது ஓசி....தொலைபேசி...உலகம்முழுதும் பேசு.
இது ஓசி....... தொலைபேசி.... உலகம்முழுதும் பத்து நிமிடம் ஓசியாக பேசு.
https://www.gizmocall.com
தினமும் 10 நிமிடங்கள் வரை இலவசமாக விரும்பிய
எந்த நாட்டுக்கும் கதைக்கலாம் இந்தியாவில் உள்ள எனது நண்பனுக்கு சற்று
முன்னர்தான் கதைத்தேன் அவன் கையடக்கதொலை பேசி வைத்திருக்கிறான் எனது
இணைப்பு டயலப் ஆன படியால் சற்று தெளிவற்று காணப்பட்டது.
கொசுறு:- இதற்கு எந்த மென்பொருளே பதிவறக்க தேவையில்லை நேரடியாக
தளத்திலுருந்தே டயல் செய்யலாம்.
நன்றி>யாழ்.காம்
https://www.gizmocall.com
தினமும் 10 நிமிடங்கள் வரை இலவசமாக விரும்பிய
எந்த நாட்டுக்கும் கதைக்கலாம் இந்தியாவில் உள்ள எனது நண்பனுக்கு சற்று
முன்னர்தான் கதைத்தேன் அவன் கையடக்கதொலை பேசி வைத்திருக்கிறான் எனது
இணைப்பு டயலப் ஆன படியால் சற்று தெளிவற்று காணப்பட்டது.
கொசுறு:- இதற்கு எந்த மென்பொருளே பதிவறக்க தேவையில்லை நேரடியாக
தளத்திலுருந்தே டயல் செய்யலாம்.
நன்றி>யாழ்.காம்
செவ்வாய், பிப்ரவரி 06, 2007
கர்நாடகத்தில் தமிழர்கள் விரட்டப்படுகின்றனர்.

மேட்டூர்: காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, நிலவும் பதட்டம் மற்றும் அச்சம் காரணமாக கர்நாடகா வாழ் தமிழர்கள் தற்போது தமிழகத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் கிடைக்கும் நீரில் ஆண்டுதோறும் 270 டி.எம்.சி., நீரை பயன்படுத்த வேண்டும். தமிழகத்துக்கு 419 டி.எம்.சி., நீரை விடுவிக்க வேண்டும் என காவிரி நடுவர் நீதிமன்றம் நேற்று இறுதித்தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு சாதகமாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியதால், கர்நாடகாவில் கடும் பதட்டம் நிலவுகிறது. கர்நாடகா மாநிலத்தின் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியில் பாதுகாப்புக்காக வெளிமாநில போலீஸார் குவிக்கப்பட்டும், கடும் பதட்டமும், அச்சமும் நீடிக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து 28 கி.மீ., துõரத்தில் தமிழக கர்நாடகா எல்லையில் உள்ள பாலாறு செக் போஸ்ட்டின் ஒரு பகுதியில் கர்நாடகா போலீஸாரும், மறு பகுதியில் தமிழக போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் நுழையும் தமிழக வாகனங்கள் மீது கன்னடர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், கர்நாடகாவுக்குள் பஸ்களை இயக்க வேண்டாம் என கர்நாடகா போலீஸார் தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால்,நேற்று மேட்டூரில் இருந்து பெங்களூரூ, மைசூரூ, கொள்ளேகால், மாதேஸ்வரன் மலை செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்ன. மேலும், தமிழகத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை மற்றும் மைசூரூக்கு சென்ற தமிழக சுற்றுலா பயணிகளின் பஸ்களை கர்நாடகா போலீஸ் எல்லையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதுபோல், தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல முயன்ற லாரி, வேன், ஜீப், இரு சக்கர வாகனங்கள் என அனைத்தும், கர்நாடகா போலீஸாரால் திருப்பி அனுப்பபட்டன.
அதுபோல், கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலையில் இருந்து தமிழகத்தில் உள்ள கோவிந்தபாடி கிராமத்துக்கு இயக்கப்படும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பஸ்ஸை தமிழகத்தின் எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு குடும்பத்துடன் வந்த தமிழர்கள் அனைவரும், எல்லையில் இருந்து ஆறு கி.மீ., துõரத்தில் உள்ள கோவிந்தபாடிக்கு நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை தொடர்ந்து, பாலாறு முதல் மேட்டூர் அணை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேட்டூர் அணை மற்றும் பூங்காவுக்குள் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. சேலம் மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் மேட்டூரில் தங்கி இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். மேலும், கர்நாடகா எல்லைப்பகுதி மற்றும் மேட்டூர் அணை ஆகிய இடங்களுக்கு சென்று பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ""காவிரி தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள பதட்டம் தணியும் வரை பாதுகாப்பு நீடிக்கும்,'' என மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன் தெரிவித்தார். இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு காரணமாக, கர்நாடகாவில் பாதுகாப்பற்ற இடங்களில் வசிக்கும் தமிழர்கள், குடும்பத்துடன் தமிழத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். தமிழர்களை ஏற்றி வரும் கர்நாடகா பஸ்கள், தமிழக எல்லையிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால், தமிழக எல்லைக்குள் நுழையும் தமிழ் குடும்பங்கள் அங்கிருந்து ஆறு கி.மீ., துõரத்தில் உள்ள கோவிந்தபாடி கிராமத்துக்கு நடந்து வந்து பஸ் பிடித்து மேட்டூர் வழியாக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால், தமிழகத்தின் எல்லையான பாலாறு வரை தமிழக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என கர்நாடகா தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.dinamalar.com/
திங்கள், பிப்ரவரி 05, 2007
ஞாயிறு, பிப்ரவரி 04, 2007
கின்னஸ் சாதனையில் இலங்கை அமைச்சரவை!!!
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவினால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய அமைச்சவை உலக சாதனைகளை பதியும் கின்னஸ் புத்தகத்தில் இந்த வாரம் பதியப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்தவினால் கடந்தவாரம் 54 அமைச்சர்கள், 20 பிரதி அமைச்சர்கள், 34 அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டிருந்தது. உலக நாடுகளில் உள்ள அமைச்சரவையில் தற்போது சிறீலங்காவில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையே மிகப்பெரியதாகும்.
1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் 24 அமைச்சர்களும், ஒரு பில்லியனைவிட அதிகளவு சனத்தொகையை கொண்ட இந்தியாவில் 30 இற்கும் குறைவான அமைச்சர்களுமே உள்ளனர்.
இந்த வாரம் உலக கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு சிறீலங்காவில் உள்ள உலகில் மிகப்பெரிய அமைச்சரவை தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதப்போவதுடன் அது கின்னஸ் சாதனையில் இடம்பெற பரிந்துரை செய்யப்போவதாகவும் ஐ.தே.காவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார்.
நன்றி:-புதினம்.
மகிந்தவினால் கடந்தவாரம் 54 அமைச்சர்கள், 20 பிரதி அமைச்சர்கள், 34 அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டிருந்தது. உலக நாடுகளில் உள்ள அமைச்சரவையில் தற்போது சிறீலங்காவில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையே மிகப்பெரியதாகும்.
1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் 24 அமைச்சர்களும், ஒரு பில்லியனைவிட அதிகளவு சனத்தொகையை கொண்ட இந்தியாவில் 30 இற்கும் குறைவான அமைச்சர்களுமே உள்ளனர்.
இந்த வாரம் உலக கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு சிறீலங்காவில் உள்ள உலகில் மிகப்பெரிய அமைச்சரவை தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதப்போவதுடன் அது கின்னஸ் சாதனையில் இடம்பெற பரிந்துரை செய்யப்போவதாகவும் ஐ.தே.காவின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா தெரிவித்துள்ளார்.
நன்றி:-புதினம்.
சனி, பிப்ரவரி 03, 2007
தண்ணியில் மூழ்கும் உலகம்!!!


பாரிஸ் நகரில் நடக்கும், காலநிலை மாற்றங்கள் குறித்த அரசுகளுக்கு இடையிலான குழுவின் கூட்ட அறிக்கையும் இதனையே வலியுறுத்துகிறது.
புவி வெப்பமடைவதால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரலாம் என்றும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
புவி வெப்பமடைவதால், கடல் மட்டம் அதிகரித்தல், துருவப் பனி உருகுதல், அதிக வெப்பநிலையால் சூறாவளிகளின் தாக்கம் அதிகரித்தல் போன்ற விளைவுகள் ஏற்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
இன்றுள்ள நிலையில், இந்த அறிக்கை வந்ததன் பின்னர் புவி வெப்பமடைவதற்கான காரணம் என்ன என்பதற்கான விவாதங்களில் கவனத்தைச் செலுத்தாமல், அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இது குறித்து தமிழோசையிடம் கருத்து தெரிவித்த சுற்றுப்புற சுழல் நிபுணரான மகேஷ் ரங்கராஜன், விஞ்ஞானிகளின் இந்தக் கருத்து அனைவருக்கும் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை மணியாக கருத வேண்டும் எனக் கூறினார். மேலும் புவியின் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு தேசத்திற்கும் ஒவ்வொரு விதமான நடைமுறையை, திட்டமுறையை அமல்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
நன்றி:- bbc.com
செவ்வாய், ஜனவரி 30, 2007
முஸ்லிம் பள்ளிவாசல் முன் தீ மிதித்து இந்துக்கள் வழிபாடு!!!

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையான நேற்று பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன் இந்துக்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதுவன் திடல் கிராமத்தினர் காவல் தெய்வமாக பாத்திமா நாச்சியாரை வழிபடுகின்றனர். இக்கிராம மக்கள் எந்த காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் பாத்திமா நாச்சியாருக்கு காணிக்கை செலுத்திவிட்டு துவக்குகின்றனர். பாத்திமா நாச்சியாரின் மகன்கள் அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு பாத்திமா தீக்குளித்து இறந்ததாகவும், அவரது நினைவாக தீ மிதிக்கும் திருவிழா நடப்பதாகவும் ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். அதன்படி அசேன் என்பவர் மூன்றுவிரல் கொண்ட உருவமாகவும், உசேன் என்பவருக்கு ஐந்துவிரல் கொண்ட உருவமாகவும் வடிவமைத்து சப்பரத்தில் வைத்து ஊரை வலம் வருகின்றனர்.
நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் இந்துக்கள் முறைப்படி காப்புக்கட்டி, விரதமிருந்து தீ மிதிக்கின்றனர். ஆண்கள் தீ மிதிப்பதும், பெண்கள் பூ மெழுகுதல் என தீக்கங்குகளை எடுத்து உடலில் கொட்டுவதுமாக விழா நடக்கிறது. இதனால் நோய் தாக்காது என நம்புகின்றனர்.
மொகரம் மாதத்தின் முதல் மூன்று நாள் தீ மிதிப்பதற்கு குழிகளை வெட்டுகின்றனர். ஐந்தாம் நாள் வரை குழிகளை காய வைக்கின்றனர். அடுத்த மூன்று நாள் குழிகளில் விறகுகளை காய வைத்து தீ மிதிப்பதற்கு தயார்படுத்துகின்றனர். ஒன்பதாம் நாள் நள்ளிரவு முடிந்து அதிகாலை 3 மணியளவில் தீ மிதி திருவிழா நடக்கிறது. 10ம் நாளான மொகரம் பண்டிகையில் தீமிதிக்கும் குழியை மூடி விழாவை நிறைவு செய்கின்றனர். பள்ளிவாசலை கோவிலாக வழிபடும் இந்துகளுக்கு பூசாரியாக முஸ்லிம் உள்ளார். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் இத் திருவிழாவைக்காண ஹாலந்து நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஜாங்க்பிரித், மனைவி ஹோடி வந்திருந்தனர்.
http://www.dinamalar.com/
வேகமாக நகரங்கள் கடலில் புதையும் ஆபத்து!!!
விஞ்ஞானிகள் ஆய்வு மாநாடு பிரான்சு தலைநகர் பாரிசில் நடந்தது. வெப்பநிலை அதிகரிப்பால் பனி மலை உருகி நகரங்கள் மூழ்கும் ஆபத்து.
உலகின் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மாநாடு பிரான்சு தலைநகர் பாரிசில் நடந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.
இந்த மாநாட்டில் உலகின் வெப்ப நிலை அதிகரித்து வருவது குறித்து விஞ்ஞானிகள் தங்கள் கவலையை வெளியிட்டனர். வெப்ப நிலை காரணமாக பனி மலைகள் உருகி கடல்நீர் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வும், இதற்கு முன் இருந்ததை விட இப்போது வேகமாக கடல் மட்டம் அதிகரித்து வருவதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் 55 அங்குலம் வரை கடல் மட்டம் அதிகரித்து விடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் சில நாடுகளில் நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். கிரீன்லாந்து, இந்தோனேஷியா உள்பட சில நாடுகளில் 2030-ம் ஆண்டுக்குள் கடற்கரை பகுதிகள் தண்ணீரில் மூழ்கிவிடும்.
நன்றி>லங்கசிறீ
உலகின் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மாநாடு பிரான்சு தலைநகர் பாரிசில் நடந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.
இந்த மாநாட்டில் உலகின் வெப்ப நிலை அதிகரித்து வருவது குறித்து விஞ்ஞானிகள் தங்கள் கவலையை வெளியிட்டனர். வெப்ப நிலை காரணமாக பனி மலைகள் உருகி கடல்நீர் மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வும், இதற்கு முன் இருந்ததை விட இப்போது வேகமாக கடல் மட்டம் அதிகரித்து வருவதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் 55 அங்குலம் வரை கடல் மட்டம் அதிகரித்து விடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் சில நாடுகளில் நகரங்களை ஒட்டியுள்ள பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். கிரீன்லாந்து, இந்தோனேஷியா உள்பட சில நாடுகளில் 2030-ம் ஆண்டுக்குள் கடற்கரை பகுதிகள் தண்ணீரில் மூழ்கிவிடும்.
நன்றி>லங்கசிறீ
ராமரின் பலம் பாலத்தில் இருக்கா?
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே ராமர் பாலத்தை உடைக்க முயன்று உடைந்து கடலுக்குள் மூழ்கி விட்ட கருவியை மீட்க வந்த கிரேனும் உடைந்தது. இதனால் சேது சமுத்திரத் திட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்ட கடலை ஆழப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பாக் ஜலசந்தியில் தற்போது ஆழப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலத்தை (தீவுத் திட்டுக்களால் ஆன நீண்ட பாறை) உடைக்கும் முயற்சிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
பாலத்தை உடைப்பதற்காக அதி நவீன சிஎஸ்டி அக்வாரிஸ் என்ற கப்பல் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கப்பலில் உள்ள தோண்டும் கருவி 50 டன் எடை கொண்டது. இதை வைத்துத்தான் ராமர் பாலத்தை உடைக்க முயன்றனர்.
ஆனால் முதல் இடிப்பிலேயே இக்கருவி உடைந்து கடலில் மூழ்கி விட்டது. இதனால் உடைப்புப் பணி நிறுத்தப்பட்டது. கடலில் விழுந்த கருவியை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சென்னையிலிருந்து 150 டன் எடையுள்ள பொருட்களைத் தூக்கும் சக்தி கொண்ட ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டது. இந்த கிரேன் கடலில் விழுந்த பகுதியை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால் இப்போது இந்த கிரேனும் உடைந்து விட்டது.
ஏற்கனவே விழுந்த கருவியோடு, தற்போது ராட்சத கிரேனும் கடலில் விழுந்து விட்டது. இதனால் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர். தற்போது விசாகப்பட்டனத்திலிருந்து 200 டன் எடையுள்ள பொருட்களைத் தூக்கும் இன்னொரு கிரேன் வரவழைக்கப்படவுள்ளது.
ஒரு வேளை கருவியை தோண்டி எடுத்து கப்பலில் பொருத்தி சரி செய்ய முடியாவிட்டால் அக்வாரிஸ் கப்பல், கொச்சி துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சரி செய்யப்படும்.
புராதண காலத்தில் ராமரால் போடப்பட்ட பாலம் என்பது ஐதீகம். இதனால் இந்த பாலத்தை உடைக்கக் கூடாது என பாஜக, இந்து முன்னணி, அதிமுக மற்றும் பல இந்து அமைப்புகள் ஆகியவை கோரிக்கை விடுத்து வருகின்றன.
அதேபோல சுப்பிரமணியம் சுவாமியும் ராமர் பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில் பாலத்தை இடிக்க முயன்ற கருவி உடைந்ததும், அதை மீட்க முயன்ற கிரேன் உடைந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
http://thatstamil.oneindia.in/news/2007/01/30/sethu.html
சேது சமுத்திரத் திட்ட கடலை ஆழப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பாக் ஜலசந்தியில் தற்போது ஆழப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலத்தை (தீவுத் திட்டுக்களால் ஆன நீண்ட பாறை) உடைக்கும் முயற்சிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
பாலத்தை உடைப்பதற்காக அதி நவீன சிஎஸ்டி அக்வாரிஸ் என்ற கப்பல் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கப்பலில் உள்ள தோண்டும் கருவி 50 டன் எடை கொண்டது. இதை வைத்துத்தான் ராமர் பாலத்தை உடைக்க முயன்றனர்.
ஆனால் முதல் இடிப்பிலேயே இக்கருவி உடைந்து கடலில் மூழ்கி விட்டது. இதனால் உடைப்புப் பணி நிறுத்தப்பட்டது. கடலில் விழுந்த கருவியை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சென்னையிலிருந்து 150 டன் எடையுள்ள பொருட்களைத் தூக்கும் சக்தி கொண்ட ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டது. இந்த கிரேன் கடலில் விழுந்த பகுதியை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால் இப்போது இந்த கிரேனும் உடைந்து விட்டது.
ஏற்கனவே விழுந்த கருவியோடு, தற்போது ராட்சத கிரேனும் கடலில் விழுந்து விட்டது. இதனால் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர். தற்போது விசாகப்பட்டனத்திலிருந்து 200 டன் எடையுள்ள பொருட்களைத் தூக்கும் இன்னொரு கிரேன் வரவழைக்கப்படவுள்ளது.
ஒரு வேளை கருவியை தோண்டி எடுத்து கப்பலில் பொருத்தி சரி செய்ய முடியாவிட்டால் அக்வாரிஸ் கப்பல், கொச்சி துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சரி செய்யப்படும்.
புராதண காலத்தில் ராமரால் போடப்பட்ட பாலம் என்பது ஐதீகம். இதனால் இந்த பாலத்தை உடைக்கக் கூடாது என பாஜக, இந்து முன்னணி, அதிமுக மற்றும் பல இந்து அமைப்புகள் ஆகியவை கோரிக்கை விடுத்து வருகின்றன.
அதேபோல சுப்பிரமணியம் சுவாமியும் ராமர் பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில் பாலத்தை இடிக்க முயன்ற கருவி உடைந்ததும், அதை மீட்க முயன்ற கிரேன் உடைந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
http://thatstamil.oneindia.in/news/2007/01/30/sethu.html
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us
