அடிப்படை பண்பில்லா நகரம் என்றால் அது மும்பை தானாம். ஆம், உலக நாடுகளில் 35 நகரங்களின் வரிசையில் இதற்காக "முதல் பரிசை' பெற்றுள்ளது.
சாலையில் போகும் போது கண் தெரியாத ஒருவர் போகிறார், நமக்கென்ன என்று போகாமல், அவரை சாலையின் குறுக்கே கடக்க உதவுவது, ஒருவர் காயம் பட்டால், குறைந்த பட்சம் பைக்கை அப்புறப்படுத்துவது, இதெல்லாம் தான் பண்பு. மனிதாபிமானம், கருணை, இரக்கம் எல்லாம் சேர்ந்தது தானே பண்பு. அடிப்படை பண்புகள் என்று சில உண்டு. அந்த பண்புகள் இருந்தால் தான் மனிதன். அப்படிப்பட்ட பண்பு மிக்க மனிதர்கள் அதிகம் இல்லாத நகரங்கள் என்று 35 நகரங்களை தொகுத்துள்ளது ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ். மிக மோசமான விஷயங்களுக்காக தரப்படும் "ராஸ்ப்பெரி விருது' இப்போது, பண்பில்லா நகரங்களுக்கு தந்துள்ளது இந்த இதழ்.
இதற்காக பல நாடுகளில் உள்ள 35 நகரங்கள், சர்வேக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
ஆபீஸ், ஓட்டல், மருத்துவமனை போன்ற இடங்களில் தன் பின்னால் ஒருவர் வருகிறார் என்றவுடன், கதவை பிடித்துக்கொண்டு வழிவிடுவது, பேப்பர் கட்டு, பைல்கள் விழுந்துவிட்டால், அவற்றை சேகரிக்க உதவுவது, எந்த பொருள் வாங்கினாலும், பில் பணம் செலுத்தியவுடன் நன்றி சொல்வது என்று மூன்று முக்கிய பண்புகளை வைத்து சர்வே செய்யப்பட்டது.
மும்பையில் அப்படிப்பட்ட மூன்று பண்புகளிலும் பல இடங்களிலும் பல தரப்பினரும் மிக குறைவாகவே மதிப்பெண் வாங்கியுள்ளனர். எங்கும் இப்படிப்பட்ட அடிப்படை பண்பு காணப்படவில்லை என்கிறார்கள் இந்த சர்வே எடுத்தவர்கள்.
ஆனாலும், ஐரோப்பிய கூட்டமைப்பில் சேர்ந்து ஏழு மாதங்களே ஆன ருமேனியா நாட்டின் தலைநகர் புகாரெஸ்ட் நகரை விட, மிக மோசமாக இல்லை என்பது தான் மும்பைக்கு கிடைத்த ஆறுதல்.
மும்பையை போலவே, லண்டன், பாரீஸ் மக்களுக்கும் பண் பில்லை என்பதையும் சர்வே எடுத்தவர்கள் கண்டுபிடித்து விமர்சித் துள்ளனர். பதினெட்டு ஐரோப்பிய நகரங்களில் எடுக்கப்பட்ட சர்வேயில், இரண்டு நகரங்களுமே பத்தாவது இடத்தை பகிர்ந்து கொண் டுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரம், மிகுந்த பெருமிதத்தை அடைந்துள்ள நகரம். ஆம், அங்கு பண்பு, கருணை என்பது 80 சதவீதம் மக்களிடம் நிறைந்துள்ளது என்று சர்வே கூறுகிறது. கடந்த 2001ம் ஆண்டு நடந்த பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னர், மக்களிடம் அக்கறை, பரிவு, கருணை எல்லாம் அதிகரித்து விட்டது என்கின்றனர் சர்வே நிபுணர்கள்.
இதையடுத்து, சுவிட்சர்லாந்தின் ஜூரிச், கனடாவின் டொரன்டோ, பிரேசிலின் சுவா பாலோ, ஜெர்மனியின் பெர்லின் ஆகிய நகரங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thanks:Dinamalar..
திங்கள், ஜூலை 03, 2006
வியாழன், ஜூன் 08, 2006
சொந்தம் ஆகிவிட்ட காதல்.

உன் பார்வை எனக்கு கிடைத்துவிட
என் பாதையை நான் மறந்து விட்டேன்!
அவ்வழி நீபோவது கண்டால்
இவ்வழி நான் ஏங்குவது உண்டு!
சேர்ந்து நீ உன் அன்னனுடன் போகையில்
சோர்ந்து இருப்பேன் அன்று முழுதும்!
கடைக்கண் பார்வை கிடைத்திடவே
கடை வீதியில் காத்திருப்பேன்!
தூரத்தில் நீ வருதல் கண்டால்
ஓரத்தில் நான் பார்த்திருப்பேன்!
பார்வைதன்னும் கிடைத்து விட்டால்
பாரயே வெண்றவன் போலாவேன்!
இன்று கிடைத்தது உன் பார்வை
அன்று பெற்றேன் நான் ஜனித்த பலனை!
பார்த்திருந்தேன் நாளை விடியலுக்காக
போர்த்திருந்தேன் இரவுமுழுதும் போர்வைக்குள்ளே!
கடிதமொண்று தந்து விட்டாய்
படி எல்லாம் தடுமாறி நிலைமாறுதே!
படித்து விட்டேன் உன் கடிதத்தை
முடித்து விட்டாய் என் வாழ்கையை!
கொடுத்து விட்டேன் நீ அண்ணுக்கு எழுதியகடிதத்தை
கொழுந்து விட்டு எரியுதே என் நெஞ்சக்கணல்!
பொறுத்து விட்டேன் நீ
என் அண்ணி என்பதால்.
திங்கள், மார்ச் 27, 2006
வியாழன், மார்ச் 23, 2006
கால நதி

காதலெனும் தீவினிலே
நான் ஓடமாய் காத்திருந்தேன்!
ஓடம் நான் ஓட்டிடவே
கடல் தன்னை கானவில்லை!
தண்ணீர் இல்லா ஓடமெதற்கு
காதல் இல்லா வாழ்வெதற்கு!
காத்திருந்தேன் தீவினிலே
உணை நான் பாத்திருந்தேன்!
காத்திருந்தும் நீ வரவில்லை
கடல் மட்டும் வந்து சேர்ந்தது!
வந்த கடல் கதை கூறி சென்றது
அது உன் கண்ணீரென்று சொன்னது!
கடல் அளவு கண்ணீர் வடித்திடவே
உனக்கு என்ன துன்பம் நேர்ந்துவிட்டது!
ஓடத்திலே ஓடிவந்தேன் உனைதேடி
ஓடி வந்த ஓடம் தன்னும் நிண்றுவிட்டது!
ஓடிய ஓடம் நின்றதேன்
உன் கண்ணீரும் உறைந்ததேன்!
உப்புப் பாறையில் நான்
துக்கப் பார்வையில் நீ!
தூள் தூளாகாதோ இப்பாறை
திறந்திடாதோ உன் சிறை.
வியாழன், மார்ச் 02, 2006
திங்கள், பிப்ரவரி 20, 2006
கவிதைக் காதல்

காதல் என்பது இயற்கையானது
அது எல்லோருக்கும் சொந்தமானது!
எனது காதல் மாறுபட்டது
மனிதக்காதலில் இருந்து வேறுபட்டது!
என் காதலியின் இளமை மறைவதில்லை
எனக்கு அவளிடத்தில் அன்பு குறைவதில்லை!
எனது காதல் இலக்கணத்துக்கு அப்பாற்பட்டது
அவளோ இலக்கணத்துக்கு உட்பட்டவள்!
அன்று பலர் அவளுடன் காதல் புரிந்தனர்
இன்றும் பலர் அவளுடன் காதல் புரிகின்றனர்!
அவள் தேவர்குல தாசியுமல்ல
பூவுலக மாதவியுமல்ல!
அவளின் காதலில் முதன்மையானவன் கம்பன்
அவன் சரியான வம்பன்!
கண்ணதாசன் கூட காதலித்ததுண்டு
கம்பதாசன் கூட போட்டி போட்டதுண்டு!
பாரதி அவளுக்கொரு தாசன்
பாரதிதாசன் அவளுக்கொரு நேசன்!
வாலி போடுவார் அவளுக்கு வேலி
முத்துக்கள் பல கொடுத்தார், வைரமுத்து!
அவளே என்றும்
எனது பெரிய சொத்து!
அவளை வரையும்போது
சிலிர்க்குது எனது சித்து!
அவளே கவிதை நாயகி
எனது காதல் நாயகி.
ஞாயிறு, ஜனவரி 15, 2006
பொங்கல் வாழ்த்துக்கள்
முன்பு என்றால் எவ்வளவு பொங்கல் உண்பம்!
இன்று பொங்கல் வருவதும் போவது தெரியாது
புலம்பெயர் வாழ்வில் இது ஒரு துனபம்!
இருப்பினும் பொங்குகின்றோம மின்சார அடுப்பிலே
வாழ்த்துகிறோம் தொலைபேசி தொடுப்பிலே!
பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
நானும் கூறுகிறேன் கணணி திரையிலே!
விரைவில் மீழும் தாயகம்
தயங்காமல் பொங்குவோம் தைலைவாசலிலே.
ஞாயிறு, ஜனவரி 01, 2006
புத்தம் புதிய ஆண்டே! புத்தாண்டே!
புதிதாய் இன்று பிறந்தாய்!
பூமியில் வாழும் மனிதர் நமக்கு
புதிதாய் என்ன கொண்டு வந்தாய்!
புழுதியில் வாழும் எமக்கு
புனிதம் கொண்டு வருவாயோ!
துன்பம் நித்தம் சுமந்த எமக்கு
இன்பம் கொண்டு வருவாயோ!
அடிமை வாழ்வை உடைத்து
விடுதலை கொண்டு வருவாயோ!
நித்தம் நித்தம் செத்து மடிந்தவர் வாழ்வில்
நிம்மதி கொண்டுவா! நிம்மதி கொண்டு வா.
சனி, டிசம்பர் 31, 2005
எனது புதுவருட உறுதிமொழி
நான் ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு உறுதிமொழிகளை எடுப்பேன். அது என்னவாகிலும் இருக்கலாம். அதன் படி நடக்கவேண்டும், அதனை நடத்திமுடிக்க வேண்டும் என்று, வருட ஆரம்பத்தில் நினைத்து உறுதிமொழி எடுப்பேன். ஆனால் வருட இறுதிக்குள் அது என்னை பாடாய்படுத்தி, முடிக்கவிடாமல் செய்து விடும். என்ன உறுதிமொழி எடுக்கிறேனோ அதை நடக்கவிடாமல் செய்வதுக்குரிய நிகழ்வுகள் அந்த ஆண்டுமுழுதும் நடக்கும்.
ஆதலால் இந்தமுறையும் ஒரு உறுதிமொழி எடுத்திருக்கிறேன். அது என்னவென்றால் ஹி.......ஹி...... "இனி உறுதிமொழி எடுப்பதில்லை" என்னும் உறுதிமொழியை எடுத்திருக்கிறேன்.
எங்கே வலைபதிபவர்களே உங்கள் உறுதிமொழிகளையும் கூறுங்கள் பார்ப்போம்.
அனவருக்கும் புதுவருடவாழ்த்துக்கள், உங்கள் உறுதிமொழிகளில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
ஆதலால் இந்தமுறையும் ஒரு உறுதிமொழி எடுத்திருக்கிறேன். அது என்னவென்றால் ஹி.......ஹி...... "இனி உறுதிமொழி எடுப்பதில்லை" என்னும் உறுதிமொழியை எடுத்திருக்கிறேன்.
எங்கே வலைபதிபவர்களே உங்கள் உறுதிமொழிகளையும் கூறுங்கள் பார்ப்போம்.
அனவருக்கும் புதுவருடவாழ்த்துக்கள், உங்கள் உறுதிமொழிகளில் நீங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
சனி, டிசம்பர் 24, 2005
ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை
மீண்டும் பிறந்து வா

அண்ணா பரராஜ சிங்கமே
சிங்களப்படைகளின் கூலிகளால்
அனியாயமாக வீழ்ந்தாயே!
நியாயம் வாழவேண்டும் என
நீதியின் முன் எமக்காக
வாதாடிய எம் தங்கமே!
பாலன் பிறக்கும் நாளில்
பாதகர் காத்திருந்து
உம்மை சரித்தனரே!
அகிம்சை வழியில்
அழிவு வராதென
இறுமாந்து இருத்தாயா?
ஜயா இது ஜேசுவையே
காட்டிக் கொடுத்த
உலகம் ஜயா!
பாலனின் கோவிலில்
வைத்து உன் கதைமுடித்து
நாம் அவர்கள் எச்சமென காட்டியுள்ளனர்!
பாலன் பிறந்த நாளில்
இறந்தாயே மீண்டும் பிறந்துவா
ஈழத்தமிழர் கண்ணீர் துடைக்கவா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Uploaded with ImageShack.us
Uploaded with ImageShack.us




